Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 10, 2016

இநன்யா ;;; நானே ராமன் ! நானே கிருஷ்ணன் ! நானே சிவன் ! நானே சக்தி !INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நானே ராமன் ! நானே கிருஷ்ணன் ! நானே சிவன் ! நானே சக்தி !
26 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நானே ராமன் ! நானே கிருஷ்ணன் ! நானே சிவன் ! நானே சக்தி !
உனக்கு கடவுள் உழவன் !
நான் உழவனின் நண்பன் ! உண்மைக்கும் நண்பன் !
கரடு முரடான நிலத்தை பக்குவபடுத்தி, செம்மைபடுத்தி தினம் தினம் அதற்கு மெருகூட்டி ஒரு மூட்டை தானியத்தை கழனியிலே கொட்டி தாலாட்டி, சீராட்டி, இரவு பகல் கண் விழித்து, அதற்கு நீர் பாய்ச்சி, நீ பக்குவமாக உண்பதற்கு நூறு மூட்டை கரை சேர்க்கின்றான் உழவன் !
தனக்கு பயன் தராத நெல் மணிகளை உனக்கு தருகின்றான் ! அவன் கடவுளின் பக்கத்தில் இருப்பவன் ! அவனை வணங்கு ! காலமெல்லாம் நோயில்லாமல் வாழ்வாய் சத்யமாக ! தானம் செய்வதில் அவன் வள்ளல் என்பதை என்றாவது யோசித்துப் பார்த்துள்ளாயா ?
அவன் மகிழ்ச்சியாக வேலை செய்கின்றான் கழனியிலே ! அவன் கடவுளிடம் வரம் வாங்கி வந்தவன் ! அவனை பின்பற்றி நட ! மன மகிழ்ச்சியாய் கொடுப்பதிலும், கடமையைச் செய்வதிலும் உழவனுக்கு நிகர் எவருமில்லை ! காற்றிலும், மழையிலும், கடும் வெயிலிலும் நின்று நீ உட்கார்ந்து சாப்பிடுவதற்காக தன் வயிறைப் பட்டினி போட்டு உழைக்கின்றான் உழவன் ! பாவி நீ தான் நன்றி சொல்லாமல் திரிகிறாய் ! உழவன் பயிர் வளர்த்தான் ! அதை உண்டு தின்றவன் குளு குளு அறையில் உட்கார்ந்து அதில் ஏ, பி, சி, டி சத்து இருப்பதாக எண்ணி அதை ஆராய்ச்சி செய்கின்றான் ! அவன் கொடுத்ததை உண்டு தின்ற பாவிகள் அவனை உணராமல் அலையக் கண்டேன் ! உனக்கு தான் சக்தியும் இல்லை ! சத்தும் இல்லை !
என் இளமை பருவத்தில் நான் கழனியிலே உட்கார்ந்து கொண்டு எப்போதும் கதிரோடும் (நெல்) கதிரோடும் (சூரியன்) பேசிக் கொண்டிருப்பேன். நந்தவனத்தில் உட்கார்ந்து நடு இரவில் வானத்தின் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு சித்தர்களுடன் விளம்பிக் கொண்டிருப்பேன். மிக மகிழ்ச்சியான தருணம் அது ! இப்போது படித்தவனோடு பாசமில்லாமல் வாழ்கின்றேன் ! என் கடமைக்காக இங்கு வந்தேன் !
உழவன் வெயிலில் நின்று உழைத்து உன்னை நிழலில் உட்கார்ந்து சாப்பிட வைத்தான். என்றாவது அவனுக்கு நன்றி சொன்னாயா ? உழைப்பில்லாத, ஒன்றுக்கும் உதவாத வேலைக்கெல்லாம் கோடி ருபாய் நிர்ணயிக்கின்றாய் ! நல் தானியம் தரும் என் நண்பனுக்கு தினமும் ஒரு பரிசு கொடு ! இந்த தாய் பூமி உன்னை வாழ்த்தும் !
உழவனின் காலை பிடித்து கெஞ்சும் நாள் நெருங்கிவிட்டது ! அவனின் சின்னம் (ஏர்) உலகமெல்லாம் கொடிகட்டி பறக்கப் போகிறது ! உழைக்கும் வித்தையையும், மனித நேயத்தையும் அவனிடமிருந்து கற்றுக் கொள் ! அரிதாரத்துக்கே இங்கே மதிப்பு ! அவதாரம் என்று சொல்லும் சாமியார்க்கே இங்கே மதிப்பு ! நீ அண்ணாந்து பார்த்து காசை இழக்கிறாய் !
யாருக்கு கிரீடம் சூட்ட வேண்டும் என்று தெரியாதவன் நீ !
யாருக்கெல்லாமோ டாக்டர் பட்டம் கொடுத்து பொற்கிளி கொடுக்கிறாய் ! உழவனுக்கும் கொடு ! காலம் உனை வணங்கும் ! உலகத்தில் பசியை தவிர எதுவும் அடங்காதது ! அந்த பசிக்கு அன்னமாகும் தானியம் தரும் என் நண்பனை கொஞ்சம் நேசி ! அவன் மனதையும், வயிரையும் நிரப்பும் முயற்சியை செய் ! உலகம் வெளிச்சமாகும் ! இந்த ஞான பூமி இந்தியா தானிய குவியலாக குவியப் போகிறது !
உழவுத் தொழிலை, தானியத்தை வைத்து தான் உலகில் இந்தியா முதல் வல்லரசு என பெயர் வாங்கப் போகிறது !
இந்தியாவும், சீனாவும் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் ! உழவனை கஷ்டப்படுத்தும் எந்த நாடும் எந்த அரசாங்கமும் நிம்மதியாக இருந்ததில்லை ! உனக்கு கொடுத்து அவனுக்கு எதுவும் மிஞ்சவில்லை ! ஆனால் அவனை மிஞ்சிய எதுவும் பெரிதாக எனக்கு தெரியவில்லை ! உழவனை கெஞ்சும் காலம் வந்துவிட்டது ! விரைவில் அவனை எதிர்பார்த்து காத்திருக்கப் போகிறாய் ! உணர் !
உழவனை மறாவாதே ! ஒரு விதையில் ஒராயிரம் தானியம் தரும் கடவுளையும் மறவாதே ! ஒரு விதையில் ஒரு தானியமும், ஒரு மரத்தில் ஒரு கனியும் வந்தால் உன் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பார். படைத்தவன் எவ்வளவு கருணைமிக்கவன் என்று பார்த்தாயா ? ஆனால் உன் சிற்றறிவால் கடவுள் இல்லை என்று சொல்கிறாய் !
உணர்ந்து பார் ! அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல உன் வீட்டில் தானியக் குவியலை குவிப்பேன் ! உன்னை மாதிரி உழவனும் தியானம், யோகா என்று மூச்சை இழுத்து மூலையில் அமர்ந்தால் உலகின் நிலைமை என்னவாகும் என சிந்தி ! உன் படிப்பையும், செல்வத்தையும் வைத்து தானியம் விளைவிக்க முடியாது !
இனி உலகமெல்லாம் தங்கம் திருடும் காலம் மாறும் ! தானியம் திருடும் காலம் நெருங்கிவிட்டது ! உலக நாடுகள் பல பஞ்சத்தில் தடுமாறும் ! தானியத்திற்காக அண்டை நாடுகளுடன் சண்டை போடுவார்கள் ! ஆனால் உலகப் போர் நிச்சயம் வராது !
உழவனுக்கு பொற்காலம் அமைத்து கொடுக்க கடவுள் முடிவு பண்ணிவிட்டார் !
படித்தவர்கள் எல்லாம் இனி உழவுத் தொழில் செய்வார்கள் ! இனி இது தான் கௌரவம் என்று சொல்லப்படும் ! விவசாயத்தில் இந்தியா பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போகிறது ! உழவனை மதி ! உட்கார்ந்து சுகம் காணும் நீ பசிக்கு உணவு கொடு ! பதுக்கி வைக்காதே ! படைத்தவன் உன்னை பார்த்து கொண்டிருக்கிறான் என்பதனை மறவாதே !
உணர் !
நான் உழவனின் நண்பன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment