இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நானே ராமன் ! நானே கிருஷ்ணன் ! நானே சிவன் ! நானே சக்தி !
26 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நானே ராமன் ! நானே கிருஷ்ணன் ! நானே சிவன் ! நானே சக்தி !
உனக்கு கடவுள் உழவன் !
நான் உழவனின் நண்பன் ! உண்மைக்கும் நண்பன் !
கரடு முரடான நிலத்தை பக்குவபடுத்தி, செம்மைபடுத்தி தினம் தினம் அதற்கு மெருகூட்டி ஒரு மூட்டை தானியத்தை கழனியிலே கொட்டி தாலாட்டி, சீராட்டி, இரவு பகல் கண் விழித்து, அதற்கு நீர் பாய்ச்சி, நீ பக்குவமாக உண்பதற்கு நூறு மூட்டை கரை சேர்க்கின்றான் உழவன் !
தனக்கு பயன் தராத நெல் மணிகளை உனக்கு தருகின்றான் ! அவன் கடவுளின் பக்கத்தில் இருப்பவன் ! அவனை வணங்கு ! காலமெல்லாம் நோயில்லாமல் வாழ்வாய் சத்யமாக ! தானம் செய்வதில் அவன் வள்ளல் என்பதை என்றாவது யோசித்துப் பார்த்துள்ளாயா ?
அவன் மகிழ்ச்சியாக வேலை செய்கின்றான் கழனியிலே ! அவன் கடவுளிடம் வரம் வாங்கி வந்தவன் ! அவனை பின்பற்றி நட ! மன மகிழ்ச்சியாய் கொடுப்பதிலும், கடமையைச் செய்வதிலும் உழவனுக்கு நிகர் எவருமில்லை ! காற்றிலும், மழையிலும், கடும் வெயிலிலும் நின்று நீ உட்கார்ந்து சாப்பிடுவதற்காக தன் வயிறைப் பட்டினி போட்டு உழைக்கின்றான் உழவன் ! பாவி நீ தான் நன்றி சொல்லாமல் திரிகிறாய் ! உழவன் பயிர் வளர்த்தான் ! அதை உண்டு தின்றவன் குளு குளு அறையில் உட்கார்ந்து அதில் ஏ, பி, சி, டி சத்து இருப்பதாக எண்ணி அதை ஆராய்ச்சி செய்கின்றான் ! அவன் கொடுத்ததை உண்டு தின்ற பாவிகள் அவனை உணராமல் அலையக் கண்டேன் ! உனக்கு தான் சக்தியும் இல்லை ! சத்தும் இல்லை !
என் இளமை பருவத்தில் நான் கழனியிலே உட்கார்ந்து கொண்டு எப்போதும் கதிரோடும் (நெல்) கதிரோடும் (சூரியன்) பேசிக் கொண்டிருப்பேன். நந்தவனத்தில் உட்கார்ந்து நடு இரவில் வானத்தின் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு சித்தர்களுடன் விளம்பிக் கொண்டிருப்பேன். மிக மகிழ்ச்சியான தருணம் அது ! இப்போது படித்தவனோடு பாசமில்லாமல் வாழ்கின்றேன் ! என் கடமைக்காக இங்கு வந்தேன் !
உழவன் வெயிலில் நின்று உழைத்து உன்னை நிழலில் உட்கார்ந்து சாப்பிட வைத்தான். என்றாவது அவனுக்கு நன்றி சொன்னாயா ? உழைப்பில்லாத, ஒன்றுக்கும் உதவாத வேலைக்கெல்லாம் கோடி ருபாய் நிர்ணயிக்கின்றாய் ! நல் தானியம் தரும் என் நண்பனுக்கு தினமும் ஒரு பரிசு கொடு ! இந்த தாய் பூமி உன்னை வாழ்த்தும் !
உழவனின் காலை பிடித்து கெஞ்சும் நாள் நெருங்கிவிட்டது ! அவனின் சின்னம் (ஏர்) உலகமெல்லாம் கொடிகட்டி பறக்கப் போகிறது ! உழைக்கும் வித்தையையும், மனித நேயத்தையும் அவனிடமிருந்து கற்றுக் கொள் ! அரிதாரத்துக்கே இங்கே மதிப்பு ! அவதாரம் என்று சொல்லும் சாமியார்க்கே இங்கே மதிப்பு ! நீ அண்ணாந்து பார்த்து காசை இழக்கிறாய் !
யாருக்கு கிரீடம் சூட்ட வேண்டும் என்று தெரியாதவன் நீ !
யாருக்கெல்லாமோ டாக்டர் பட்டம் கொடுத்து பொற்கிளி கொடுக்கிறாய் ! உழவனுக்கும் கொடு ! காலம் உனை வணங்கும் ! உலகத்தில் பசியை தவிர எதுவும் அடங்காதது ! அந்த பசிக்கு அன்னமாகும் தானியம் தரும் என் நண்பனை கொஞ்சம் நேசி ! அவன் மனதையும், வயிரையும் நிரப்பும் முயற்சியை செய் ! உலகம் வெளிச்சமாகும் ! இந்த ஞான பூமி இந்தியா தானிய குவியலாக குவியப் போகிறது !
யாருக்கெல்லாமோ டாக்டர் பட்டம் கொடுத்து பொற்கிளி கொடுக்கிறாய் ! உழவனுக்கும் கொடு ! காலம் உனை வணங்கும் ! உலகத்தில் பசியை தவிர எதுவும் அடங்காதது ! அந்த பசிக்கு அன்னமாகும் தானியம் தரும் என் நண்பனை கொஞ்சம் நேசி ! அவன் மனதையும், வயிரையும் நிரப்பும் முயற்சியை செய் ! உலகம் வெளிச்சமாகும் ! இந்த ஞான பூமி இந்தியா தானிய குவியலாக குவியப் போகிறது !
உழவுத் தொழிலை, தானியத்தை வைத்து தான் உலகில் இந்தியா முதல் வல்லரசு என பெயர் வாங்கப் போகிறது !
இந்தியாவும், சீனாவும் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் ! உழவனை கஷ்டப்படுத்தும் எந்த நாடும் எந்த அரசாங்கமும் நிம்மதியாக இருந்ததில்லை ! உனக்கு கொடுத்து அவனுக்கு எதுவும் மிஞ்சவில்லை ! ஆனால் அவனை மிஞ்சிய எதுவும் பெரிதாக எனக்கு தெரியவில்லை ! உழவனை கெஞ்சும் காலம் வந்துவிட்டது ! விரைவில் அவனை எதிர்பார்த்து காத்திருக்கப் போகிறாய் ! உணர் !
இந்தியாவும், சீனாவும் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் ! உழவனை கஷ்டப்படுத்தும் எந்த நாடும் எந்த அரசாங்கமும் நிம்மதியாக இருந்ததில்லை ! உனக்கு கொடுத்து அவனுக்கு எதுவும் மிஞ்சவில்லை ! ஆனால் அவனை மிஞ்சிய எதுவும் பெரிதாக எனக்கு தெரியவில்லை ! உழவனை கெஞ்சும் காலம் வந்துவிட்டது ! விரைவில் அவனை எதிர்பார்த்து காத்திருக்கப் போகிறாய் ! உணர் !
உழவனை மறாவாதே ! ஒரு விதையில் ஒராயிரம் தானியம் தரும் கடவுளையும் மறவாதே ! ஒரு விதையில் ஒரு தானியமும், ஒரு மரத்தில் ஒரு கனியும் வந்தால் உன் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பார். படைத்தவன் எவ்வளவு கருணைமிக்கவன் என்று பார்த்தாயா ? ஆனால் உன் சிற்றறிவால் கடவுள் இல்லை என்று சொல்கிறாய் !
உணர்ந்து பார் ! அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல உன் வீட்டில் தானியக் குவியலை குவிப்பேன் ! உன்னை மாதிரி உழவனும் தியானம், யோகா என்று மூச்சை இழுத்து மூலையில் அமர்ந்தால் உலகின் நிலைமை என்னவாகும் என சிந்தி ! உன் படிப்பையும், செல்வத்தையும் வைத்து தானியம் விளைவிக்க முடியாது !
இனி உலகமெல்லாம் தங்கம் திருடும் காலம் மாறும் ! தானியம் திருடும் காலம் நெருங்கிவிட்டது ! உலக நாடுகள் பல பஞ்சத்தில் தடுமாறும் ! தானியத்திற்காக அண்டை நாடுகளுடன் சண்டை போடுவார்கள் ! ஆனால் உலகப் போர் நிச்சயம் வராது !
உழவனுக்கு பொற்காலம் அமைத்து கொடுக்க கடவுள் முடிவு பண்ணிவிட்டார் !
உழவனுக்கு பொற்காலம் அமைத்து கொடுக்க கடவுள் முடிவு பண்ணிவிட்டார் !
படித்தவர்கள் எல்லாம் இனி உழவுத் தொழில் செய்வார்கள் ! இனி இது தான் கௌரவம் என்று சொல்லப்படும் ! விவசாயத்தில் இந்தியா பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போகிறது ! உழவனை மதி ! உட்கார்ந்து சுகம் காணும் நீ பசிக்கு உணவு கொடு ! பதுக்கி வைக்காதே ! படைத்தவன் உன்னை பார்த்து கொண்டிருக்கிறான் என்பதனை மறவாதே !
உணர் !
நான் உழவனின் நண்பன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment