to INANYA MAHA MUNIVAR
30-08-2018
நான் நம்பி ! எனக்கு நோனார் இங்கில்லை ! உணர் ஞானமிருந்தால் !
உலகில் ஆனந்தமானவன் யார் ?
எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டு வாழ பழகியவன் தான் உலகில் ஆனந்தமானவன் ! துன்பம் உனக்கு இன்பம் தரவே வருகிறது ! துன்பத்தை இன்பமாக நினை ! எது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல் !
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று நினை ! உனக்கு ராஜகிரீடம் சூட்டி அழைத்து செல்வார் கடவுள் ! இன்பம் என்று ஏதுமில்லை இங்கே ! கடவுளின் அன்பு தான் இங்கே இன்பம் ! அது தான் ஆனந்த நிறைவு. அவன் ஸ்பரிஷம் எல்லையில்லா பேரின்பம் !
சத்திய சோதனையை தாண்டி செல்பவன், எவ்வளவு சோதனை வந்தாலும் கடவுளை நிந்திக்காதவன் ஆனந்தமானவன் தானே ! என் தந்தை யாகவா சொல்வார்கள் ! துன்பத்தை இன்பமாக நினை என்று ! உன் இன்பம் எனக்கு வேண்டாம் ! என் துன்பம் உனக்கு வேண்டாம் என்று சொல்வார்கள் !
நான் துன்பத்தில் இன்பம் கண்டவன், வறுமை, நோய், வேதனை, சோதனை எல்லாவற்றையும் கடந்தவன். நான் ராஜபரம்பரையில் பிறந்தவனல்ல ! உழவன் வீட்டில் பிறந்தவன் ! உழைத்து முன்னேறி என் இலக்கை நிர்ணயித்து வெற்றி கண்டவன் ! வா நானும் உனக்கு வெற்றி பெற வலிமை தருவேன் ! முன்னேறும் ரகசியம் சொல்லித் தருவேன்.
எப்போதும் ஆனந்தம் வர ஞானம் வர முயற்சி செய் !
ஞானமுள்ளவன் எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பான் ! ஆனால் யாரும் ஆனந்தமாக இருக்க நான் காணவில்லை ! நான் அவதாரம், கடவுளை தெரியும் என்று பலர் இங்கு புலம்ப கண்டேன். ஞானமுள்ளவன் சோர்வடையமாட்டான் ! பசி தெரியாது ! அவன் வழி தவறமாட்டான் !
நான் எப்போதும் ஆனந்த நிலையில் ! எனக்குள் கிடக்கும் ஞானம் அளவிலா ! பிரபஞ்சம் வரை வியாபித்து நிற்கிறது !
அன்பினால் எனை கட்டிப் போடு !
ஞானம் வரும். நல் அறிவு வரும் !
பணம் வரும் ! பவிசு வரும் !
நேர்த்தியாக வாழ தெளிவு வரும் !
ஞானம் வரும். நல் அறிவு வரும் !
பணம் வரும் ! பவிசு வரும் !
நேர்த்தியாக வாழ தெளிவு வரும் !
சினத்தை தூக்கி எறி ! ஞானம் பெறுவாய் ! எப்போதும் சிரித்த முகமாக இருக்க ஆசைப்படு ! உன் உள்ளத்தை அழவிடாதே ! தஹிக்கும் மனம் அடங்க போராடு ! சதுராட்டம் அடங்குவதற்குள் உன்னை அறிய பழகு !
ஆனந்தம் எனக்குள் !
உலகில் நான் ஆனந்தமானவன் !
நான் இநன்யா !