Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

ரகசியம் 3 - தேடுதல், புரிதல், உணர்தல் (08-11-2015) INANYA NAMOO NAMA ;;;



74 ரகசியம் 3 - தேடுதல், புரிதல், உணர்தல் (08-11-2015)

இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 

ரகசியம் – பகுதி மூன்று.
INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா நமோ நம. அனைவருக்கும் வணக்கம். கடவுள் நம் யுகத்திற்கு வந்துள்ளார். “INANYA MAHA MUNIVAR” என்ற முகநூல் குழுவில் பதியப்பட்டுள்ள அவர் எழுதிய பதிவுகள் அனைத்தையும் படித்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆன்மீக தேடுதலில் ஈடுபடுபவர்கள் கடவுளின் வார்த்தைகளை நம் குழுவில் படித்து உண்மையை புரிந்து உணர்ந்து விட்டனர். இங்கே தேடுதலில் இல்லாதவர்களை முதலில் தேட வைக்க வேண்டும். அதுவும் நம் கடமை தான் ! இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடவுளை பற்றிய கல்வி இல்லாமல் போனது வருத்தம் தான். ஞானம் இல்லாமல், தேடுதல் இல்லாமல், கடவுளின் சிந்தனைகள் இல்லாமல், சிலர் தீய வழியிலும் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த பதிவு மாணவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தேடுதல் இல்லாதவர்களுக்கும் ஒரு அடிப்படை தேடுதலை ஏற்படுத்தி கடவுளைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வைக்கப் போகும் பதிவாக இருக்க கடவுளிடம் வேண்டுகின்றேன். கடவுள் இநன்யா அவர்களின் உதவியுடனும், ஆசிர்வாதத்தாலும் இந்த பதிவை எழுதியுள்ளேன்.
காலையில் எழுந்ததும் நம் பெற்றோரின் முகங்களை பார்த்து வணங்காத நாம் செய்தித்தாளை நம்பி படித்ததால் வந்த விளைவை அனுபவித்துக் கொண்டுள்ளோம் ! நிலவிற்கு சென்றேன் என்றான். யோசிக்காமல் நம்பினோம். உலகில் ஒரு மாயமான விமானத்தை கண்டுபிடித்து உயிர்களைக் காப்பாற்ற இயலவில்லை. செவ்வாய் கிரகத்தில் நீரை கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறான். நாளை சூரியனுக்கும் செல்லலாம் என்பான். அதையும் நம்புவோம். அறிவால் வந்த வினையை இதுவரையில் அனுபவித்தது போதாதா ? இங்கே நோய்களும், கஷ்டங்களும், துன்பங்களும் அறிவியல் செய்த சதி ! இது தான் இன்றைய விஞ்ஞானம் ! நாம் ஞானம் அடைவது எப்போது ? எவ்வளவு நாள் ஞானமில்லாமல் வாழப் போகின்றோம் ?
நாம் உணர்ந்திருந்தால் கடவுளின் வருகையே தேவைபட்டிருக்காது. இந்த முகநூல் குழுவும் தேவைபட்டிருக்காது. முகநூல் என்ற விஞ்ஞானத்தில் முகம் காட்டாமல் கடவுளின் வருகையையும், அவரின் வார்த்தைகளையும் பற்றி பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ! விஞ்ஞானத்தாலேயே விஞ்ஞானத்தை அழித்து மெய்ஞானத்தை வழங்க வேண்டிய சூழ்நிலை ! இங்கு விவசாயிகளும், விவசாயமும் தான் தேவை ! விஞ்ஞானிகளும் விஞ்ஞானமும் தேவையில்லை ! உழைத்து விதையை பயிராக்கும் ஞானம் தான் தேவை ! உட்கார்ந்து விதையை ஆராய்ச்சி செய்யும் அறிவு தேவையில்லை !
உலகில் ரகசியங்களுக்கு பஞ்சமில்லை. இன்று வரை விடை கண்டுபிடிக்க முடியாத கேள்விகள் பல உள்ளது. இந்த உலகில் மனிதனால் எல்லாவற்றிலும் ஒரு பாதியைத் தான் பார்த்து புரிந்து கொள்ள முடியும். மறுபாதி கடவுளால் மறைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து புரிந்து கொள்ள இயலாது. உணர்ந்தால் தான் முழுவதுமாக புரிந்து கொள்ள இயலும் ! உலகில் எந்த ஒரு மனிதனாலும் தன் முதுகுப் பகுதியை பார்க்க இயலாது. நம் உடலிலேயே ஒரு பாதி மறைக்கப்பட்டுள்ளது ! நம் உடலிலேயே நம் பார்வைக்கு எல்லை வைத்தவன் யார் என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். படைப்பின் ரகசியம் புரியும்.
நமக்கு தெரியாமலேயே நம் தாயின் வயிற்றில் நம்மை பாதுகாத்து நீரும், காற்றும், உணவும் கொடுத்தவன் யார் ?
நாம் தூங்கிய பின் நம் முச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவன் யார் ?
நாம் அருந்தும் நீர் அனைத்தையும் கடல் நீரைப் போல் உப்பாக இல்லாமல் உலகமெங்கும் கிடைக்கச் செய்பவன் யார் ?
ஒரு விதையில் ஒரு மரத்தையே ஒளித்து வைத்து விளையாடுபவன் யார் ?
ஒரு மரத்தில் ஓராயிரம் கனிகளை கிடைக்கச் செய்பவன் யார் ? ஒரு மரம் ஒரு கனி கொடுத்தால் என்ன செய்ய முடியும் நம்மால் ?
பறவைகளுக்கு கூடு கட்டி வாழ சொல்லிக் கொடுத்தவன் யார் ? நாய்க்கு நன்றியை சொல்லிக் கொடுத்தவன் யார் ?
மனிதன் உருவாக்கிய காலணிகள் தேய்ந்துவிடும் ! நமக்கு கால் பாதங்களை கொடுத்து அதை நம் உயிருள்ளவரை தேயாமல் பாதுகாப்பவன் யார் ?
விஷமுள்ள பாம்பை அழிக்க நம் பிள்ளையாக கீரிப்பிள்ளையை படைத்தான் ! ஒளிந்து வாழும் எலிகளுக்கு நடுவே பழங்களை பறித்து தரும் அணில்பிள்ளையை படைத்தான் ! பிள்ளைகள் என்று பெயரை மட்டும் வைத்துவிட்டு அவைகளை வணங்காமல் மக்களுக்கு கேடு விளைவிக்கும் பாம்பையும், நம் பொருள்களை திருடி உண்ணும் எலியையும் ஏன் கோயிலில் செதுக்கி வணங்குகின்றார்கள் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். கடவுள் யாரென்று புரியும் சத்யமாக !
காலங்காலமாக நாம் ஒரு கேள்வியை அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கோழியில் இருந்து முட்டை வந்ததா ? முட்டையில் இருந்து கோழி வந்ததா ? யாரேனும் பதிலை சொன்னார்களா ? கேள்வியே தவறாக இருந்தால் பதில் எப்படி கூற முடியும் ? கோழியையும், முட்டையையும் பற்றி கேட்டவர்கள் சேவலைப் பற்றி கேட்க மறந்தது ஏன் ?
சேவலின் துணை இல்லாமலும் ஒரு கோழியால் முட்டை வைக்க முடியும். ஆனால் அது கருவற்ற முட்டை. அந்த முட்டையில் இருந்து ஒரு கோழியையோ, சேவலையோ உருவாக்க முடியாது ! நாம் உணவில் சேர்க்கும் முட்டை இவ்வாறு தான் தயாரிக்கப்படுகிறது. முட்டையில் கரு உருவாக வேண்டுமென்றால் கோழியும் சேவலும் இணைந்தாக வேண்டும். அந்த முட்டையை கோழி அடை காக்க வேண்டும். அப்போது தான் அது பொறிக்கும். ஆக உலகில் முதலில் தோன்றியது நிச்சயமாக முட்டை அல்ல ! ஏனென்றால் ஒரு கருவுள்ள முட்டை உருவாகுவதற்கு கோழியும் சேவலும் தேவை. கடவுள் கோழியையும், சேவலையும் நேரடியாக படைக்கவில்லை. அனைத்து ஜீவராசிகளிலும் தனித்தனியே ஆண் கரு, பெண் கரு என்று தான் முதலில் படைத்தார். பின் அதில் சூட்சுமத்தை வைத்தார். மரங்களில் கூட ஆண் பெண் உள்ளது. ஏன் ? உணருங்கள். எல்லாம் புரியும் !
உலகில் முதல் மனிதனை படைத்தது யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை கண்டுபிடிக்க முடிந்திருந்தால் என்றோ கண்டுபிடித்திருப்பார்கள் நம் விஞ்ஞானிகள். ஆனால் சாத்தியமில்லை. கடவுள் தான் படைத்தார் என்று தெரியும். ஆனால் அறிவியலால் வந்த வினையால் அறிவை இழந்து இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றான்.
பரினாம வளர்ச்சியின் படி (EVOLUTION) குரங்கு பல வருடங்கள் கழித்து மனிதனாய் மாறியது என்கின்றார் ஒரு விஞ்ஞானி. இப்போது உலகில் குரங்கும் உள்ளது, மனிதனும் உள்ளான். பரினாம வளர்ச்சி எங்கே ? எந்த குரங்காவது மனிதனாய் மாறிய அதிசயத்தை எவரேனும் பார்த்ததுண்டா ? எல்லா வகை குரங்குகளும் இன்னும் குரங்குகளாகவே தான் உள்ளன. ஏன் ? மனிதன் தான் இப்பொழுது ஞானமிழந்து குரங்கை விட கீழ்த்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
மற்றொரு விஞ்ஞானி மனித உயிரானது உயிரற்ற ஒரு பொருளில் இருந்து வந்ததாக கூறுகிறார் (A-BIO-GENESIS). இது பலரால் இன்று வரையில் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று ! அதாவது ஒன்றுக்கும் உதவாத உயிரில்லா குப்பையில் இருந்து ஆண் சிசு தனியாக பெண் சிசு தனியாக தற்செயலாக வந்தார்கள் என்று சொல்கிறார்கள். பின் அந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து கருவை உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். குப்பையில் இருந்து புழு மட்டும் தான் உருவாகும். பின்னர் அது வளர்ந்து பட்டாம் பூச்சியாக மட்டுமே மாறும். மனிதன் எப்படி உருவாக முடியும் ?
மனிதனை படைத்தது கடவுள் ! கடல் மணலில் ஒரு குழந்தை விளையாட்டாக உருவங்களை செய்வதைப் போல கடவுள் மனிதனை தன் ஆசைக்காக படைத்தார். கடவுள் முதலில் ஆதாமையும், ஏவாலையும் படைத்தார் என்று உலகம் முழுவதும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் அவர்களை படைக்கும் போது அவர்களுக்கு வயது என்னவென்று யாரேனும் கேட்டீர்களா ? அவர்களுக்கு யார் முதலில் பெயர் வைத்தது ? முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள் என்றால் அவர்களின் பிள்ளைகள் யாரை திருமணம் செய்தார்கள் ? பின் எப்படி மனிதர்களின் இனம் பெருகியது ?
அனைத்திலுமே குழப்பம் ! தெளிவடைவது எப்போது என யோசியுங்கள்.
கடவுள் முதலில் உயிர் படைத்தார். பின் விதை படைத்தார். தரை படைத்தார். தண்ணீர் படைத்தார். காற்றை படைத்தார். பிறகு விதைக்குள் கருவை படைத்தார். உயிர் ஒன்று படச் செய்தார். இனம் இரண்டு படச் செய்தார். முகம் மாறுபடச் செய்தார். இதற்கு யுகத்தில் ஏழு நாட்கள் ஆகியது ! கடவுளின் எண்ணிக்கை ஏழு ! அதனால் தான் அனைத்துமே இங்கே ஏழாக உள்ளது ! ஆக கடவுளின் கூற்று படி அவர் எந்த மனிதனையும் நேரடியாக படைக்கவில்லை ! உலகில் முதலில் உருவானது கரு ! ஆண் கரு , பெண் கரு என்று தனித்தனியே படைத்தார். கருவில் உயிரையும், ஆண்மாவையும், உடலின் சூட்சுமத்தையும் வைத்தார். கரு விதையில் இருந்து வெளியே வந்து பின் வளர்ச்சியடைந்து உடல் வந்தது. இது தான் கடவுள் இநன்யா அவர்கள் சொல்லிய படைப்பின் ரகசியம் ! யோசியுங்கள். உண்மை புரியும் !
கருவில் இருந்து முதலில் கண் உருவானது. கடவுள் படைத்த அதிசயங்களை பார்ப்பதற்காக தான் கண் படைக்கப் பட்டது ! மனிதனின் கண்களில் கோடி ரகசியங்கள் உண்டு என்று கடவுள் இநன்யா சொல்வார் !. கண்களுக்கும், புளிப்பு சுவைக்கும் சம்பந்தம் உண்டு. புளிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் கண்கள் கூசுவது அதனால் தான். கர்ப்பினி பெண்கள் ஆரம்ப காலத்தில் கண் உருவாகும் போது புளிப்பு சுவையை ஆசையுடன் உண்பதும் அதனால் தான். ஆக கண்கள் முதலில் உருவாகியதால் அதற்கும் ஆண்மாவிற்கும் நேரடி தொடர்பு உண்டு.
உணர்ந்தால் ஆண்மா விழிப்படையும் ! உணர்ந்தால் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஊற்றெடுக்கும் ! இதுவே உணர்தலுக்கான அடையாளம் !
பகலில் ஆகாயத்தை பார்க்கும் போது கண்கள் கூசுவது எதற்காக ? நம் ஆண்மாவின் உண்மையான இருப்பிடம் மேலே ஆகயத்தில் (லோகத்தில்) உள்ளது. அதனால் தான் ஆகாயத்தை பார்க்கும் போது நம் கண்கள் கூசுகிறது. ஆண்மாவின் பிரதிபலிப்பு நம் கண்கள் மூலமாக தெரிகின்றது ! இரவில் ஒரே நட்சத்திரத்தை சில நிமிடங்கள் கண் இமைக்காமல் பாருங்கள். அந்த நட்சத்திரம் மீனைப் போல தவழும் ! அது கண்களில் சிக்காது ! அதானால் தான் நட்சத்திரங்களை விண்மீன்கள் என்று அழைக்கின்றோம். இதுவும் ஆண்மாவின் பிரதிபலிப்பு ! ஆக நம் உண்மையான இருப்பிடம் மேலே உள்ளது ! இதை உணரவே கண்களை கொடுத்தார் கடவுள்.
இவ்வளவு ரகசியங்கள் இருக்கின்ற கண்களை எதுவும் தெரியாமல் மூடி தியானம் செய்வது எதற்காக ? கண்களை திறந்து கடவுளின் அதிசயங்களை பார்த்தும் உணர முடியாத மனிதன், எதையும் பார்க்காமல் கண்களை மூடி எப்படி உணரப் போகின்றான் ? எதையுமே பார்க்க இயலாத பார்வையற்றோர் சாதித்தது எதை ? கண்களைப் பற்றி யோசியுங்கள். ஞானம் உண்டு !
இங்கே வாசமில்லாத மலர்கள் என்று எதுவும் கிடையாது ! சுவையில்லாத காய், கனிகள் என்று எதுவும் கிடையாது ! நிழல் தராத மரங்கள் என்று எதுவும் கிடையாது ! பால் கொடுக்காத பசுக்கள் என்று எதுவும் இல்லை ! வரிசையை விட்டு விலகிச் செல்லும் எறும்புகள் இங்கே இல்லை ! தான் பெற்ற குழந்தைகளை கவனிக்காமல் குப்பையில் வீசிச் செல்லும் பறவைகளும், விலங்குகளும் உலகில் கிடையாது ! எதுவுமே இங்கே மாறவில்லை ! அனைத்துமே சத்யத்திற்கு கட்டுப்பட்டுள்ளது ! மரங்கள் கூட சத்யத்திற்கு கட்டுப்பட்டது ! அதனால் தான் மலைகளில் இருக்கும் கடும் பாறைகள் கூட உருகி, விலகி அதன் வேர்களுக்கு நீரை தேட வழி வகுக்கின்றது ! இங்கே மனிதன் மட்டும் தான் மாறிவிட்டான் ! கடவுளை மறந்து நிம்மதியில்லாமல் வாழ்கின்றான் !
புற்களின் மீது சத்யத்திற்கு கட்டுப்பட்ட ஜீவராசிகளும், விலங்குகளும், பறவைகளும் எத்தனை தடவை நின்றாலும் புல் வாடாது. புல்லுக்கு வலிக்காது ! அது நிமிர்ந்து வளரும் ! ஆனால் மனிதனின் பாதம் ஒரு முறைபட்டால் அது வாடிவிடும். அது மீண்டும் வளராது. மனிதனின் கால் படாமல் ஒதுங்கி பாதையை அமைத்து விடுகிறது ! ஆதிகாலத்தில் மனிதனின் பாதம் தரையில் படவில்லை. காற்றில் பறந்தான். தவழ்ந்தான் என்று கடவுள் இநன்யா சொல்வார்கள்.
உலகில் மனிதனை தவிர எந்த ஜீவராசிகளும் குருடாக, செவிடாக, ஊனமாக பிறப்பதில்லை. இங்கே மறுபிறவி என்பது மனிதனுக்கு மட்டுமே உண்டு ! ஜீவராசிகளுக்கு இல்லை ! மனிதன் எப்போதும் மனிதனாக மட்டும் தான் பிறப்பான். உணரும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே தான் இருப்பான் ! புண்ணியம் செய்தவன் தமிழ் நாட்டில் பிறப்பான். தவம் செய்தவன் தமிழ் நாட்டில் வாழ்வான்.
உலகில் அனைவரின் முகமும் ஒன்றாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? இதை ஆழ்மனதில் சற்று சிந்தித்து பாருங்கள். கடவுளின் பாதங்கள் கண்களுக்கு தெரியும். இதையும் மனிதன் யோசிக்க மாட்டான் என்று தான் ஏழு பேரை ஒரே முகத்துடன் படைத்தார் கடவுள் ! இந்த யுகத்தில் நாம் தலை கீழாக வருகை புரியும் சூட்சுமத்தை எவரேனும் உணர்ந்தீர்களா ? தலை கீழாக ஏன் வருகிறோம் என்று தெரியுமா ? யாரேனும் சொன்னார்களா ? கடவுள் இநன்யா முதல் முதலில் சொன்னார் ! உணர்ந்தால் நாம் நேரில் ஒரு நாள் பார்க்கும் வாய்ப்பு நிச்சயமாக வரும். இதற்கு விடையை அப்போது சொல்கிறேன்.
நாம் சாப்பிடும் உணவில் ஒரு தலை முடி விழுந்தாலே குமட்டல், வாந்தி வருகிறது. கோபப்படுகிறோம். பாதுகாப்பாக பத்து மாதம் நம்முடைய தாயின் வயிற்றில் தலை முடியுடன் நாம் வளர்ந்துள்ளோம். நம்முடைய தாயை என்றாவது புரிந்து கொண்டுள்ளோமா அவர் தெய்வம் என்று ? மனிதர்கள் தங்களின் தாயை பார்த்தும் பரவசப்படவில்லை ! இந்த அதிசயத்தை செய்யும் கடவுளையும் புரிந்து கொள்ளவில்லை ! இவை எதையும் செய்யாமல் உயிரில்லா, தலை முடியில்லா சிலைகளை பார்த்து பரவசப்படுகிறார்கள் ! உணராமல் எல்லா தவறுகளையும் நாம் செய்து கொண்டு கடவுளை குற்றம் சொல்கின்றோம். எப்போது திருந்தப் போகின்றோம் ?
மனிதனுக்கு கடவுளை உணரும் வாய்ப்பு மிக மிக அதிகம். மனிதனால் யுகத்தில் எதையுமே சாதிக்க முடியும். கழுகை விட கூர்மையாக தொலைவில் உள்ளதைப் பார்க்க முடியும். சிறுத்தையை விட வேகமாக ஓட முடியும். மீன்களைப் போல நீருக்குள்ளே நீந்தவும் முடியும் ! முதலையைப் போல நீரில் மிதக்கவும் முடியும். பசுக்களைப் போல பல தாவரங்களையும், மூலிகைகளையும் ஞானத்தால் அறியவும் முடியும் ! எறும்பு தன் ஞானத்தால் மழையை முன் கூட்டியே அறிவது போல மனிதன் தன் ஞானத் திறமையால் எதிர்காலத்தையும் கணிக்க முடியும் ! மனிதனால் பறவையைப் போல் காற்றில் பறக்கவும் முடியும். பறவைக்கும், மனிதனுக்கும் இரண்டு கால் கொடுத்தார். ஏன் என்று யோசியுங்கள். பறவைகளுக்கு இரண்டு பக்கமும் இறக்கை உண்டு ! மனிதனுக்கு இரண்டு பக்கமும் கைகள் உள்ளது ! கைவிரல்களில் ஆயிரம் கோடி ரகசியங்கள் உண்டு. இதை கண்டுபிடித்தால் ஒரு பறவையை போல மனிதனால் பறக்கவும் முடியும் !
மனித உடலில் அனைத்துமே இரண்டாக படைத்தார் கடவுள் ! கண் இரண்டு ! காது இரண்டு ! கைகள் இரண்டு ! கால்கள் இரண்டு ! மூளை இரண்டு ! குடல் இரண்டு ! நுரையீரல் இரண்டு ! சிறுநீரகம் இரண்டு ! இரண்டாக அல்லாமல் தனியே இருக்கும் உறுப்புகளில் இரண்டு மடங்கு சூட்சுமம் உள்ளது ! இதை உணர்ந்தால் ஞானம் உறுதி !
இந்த உலகில் வயது ஆக ஆக இன்பமும், துன்பமும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஆசை, கோபம், வஞ்சம், தீய எண்ணங்கள் மனதைவிட்டு அகல்கின்றன. முதியோர்களுக்கு வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அன்று மனம் வெள்ளையாகிறது. இதனால் தான் அவர்களுக்கு தலை முடி வெண்மையாக மாறுகின்றது.
உலகில் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் இறுதியில் நம் உடலை பூச்சிகளும், கரையானும், எறும்பும், நெருப்பும் உண்ணப் போவது உறுதி !
மதம் எதற்கென்று யோசியுங்கள். மரணம் எதற்கென்று யோசியுங்கள். அனைத்து மதத்தினருக்கும் மரணம் என்ற ஒன்றை நிர்ணயித்தவன் யாரென்று யோசிங்கள் ! உண்மை புரியும். ஞானம் பிறக்கும் ! மரணம் ஒன்று இருப்பதை மறந்து மதத்தை பரப்புகின்றார்கள். கடவுள் யாரென்று புரிவது எப்போது ?
மக்கள் காலம் முழுவதும் பணத்தை தேடுகிறார்கள். சிலர் புகழை தேடுகிறார்கள். சிலர் பெண்ணை தேடுகிறார்கள். சிலர் பொருளை தேடுகிறார்கள். சிலர் சமுத்திரத்தையே தன் பெயரில் வாங்க நினைக்கின்றார்கள். சிலர் அமானுஸ்யங்களை தேடுகிறார்கள். சிலர் எதையுமே தேடமால் இருக்கின்றார்கள். அதுவும் தவறு தான் ! கடவுளை தேடுவது எப்போது ? அவரை உணர்வது எப்போது ? மறுபிறவியை தடுப்பது எப்போது ?
இந்த யுகத்தில் கடவுள் வருவது மிகவும் அரிது ! உலகை சரி செய்ய பெரும் படையுடன் இப்போது வந்துள்ளவர் ஏழாம் கடவுள் இநன்யா ! ஆறு சக்திகளையும் உடையவர் ! நமக்காக வந்துள்ளார் ! நம்மை காப்பாற்ற வந்துள்ளார் ! விரைவில் நம் உலகம் பல மாற்றங்களை சந்திக்கப் போகின்றது. மிக முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் சகோதர சகோதரிகளுக்கு கடவுளின் வருகையை தெரியப்படுத்த வேண்டும் !
நம் முகநூல் குழுவில் உள்ள அனைத்து பதிவுகளை நீங்களும் படித்து, பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். கூட்டம் சேர்ப்பதற்காக இங்கு வரவில்லை. உண்மையை புரிந்தால் கடவுளிடம் அழைத்துச் செல்கின்றேன். “இநன்யா நமோ நம” என்று அவரின் நாமத்தை 108 முறை தினமும் சொல்லிப் பாருங்கள். இந்த குழுவில் உள்ள பதினைந்து பேரை கடவுளிடம் அழைத்துச் சென்றுள்ளேன். கடவுளைப் பார்த்தவர்களின் அனுபவங்கள் விரைவில் இங்கே பகிரப்படும். குழுவில் இணைந்திருங்கள். நன்றி !
கடவுள் இநன்யா அவர்களின் நல்லாசியுடன் ரகசியம்- பகுதி நான்கு விரைவில் !
நன்றி.
இநன்யா நமோ நம

No comments:

Post a Comment