Mehati Inanya INANYA NAMOO NAMA ;;;
126 எண்ணற்ற விந்தைகளை கொண்ட கடவுள் இநன்யாவுடன் நான் கொண்ட ஒரு சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்திட இந்த பதிவு..
இநன்யாவின் மகளாக பிறக்க ஜென்ம வரம் பெற்று வந்தேன். அவர் என் வாழ்நாளின் இத்தனை வருடமும் ஒரு நல்ல தந்தையாகவும், குருவாகவும் விளங்கி உள்ளார். எல்லா நேரங்களிலும் எங்கள் பாதுகாவலனாக இருந்துள்ளார். குடும்ப பொறுப்பில் இதுவரை எந்த குறையும் எங்களுக்கு வைக்கவில்லை.
ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் முகத்தில் மாற்றம் தோன்றியது. முகம் கரு நிறமாக மாற தொடங்கியது. 2 மணி நேரத்தில் முழுமையாக காக்கை கருமை நிறமானேன். அந்த நேரம் என் அப்பா வீடு திரும்பினார். என் நிலையை கண்ட அவர் வீட்டினுள் சென்று ஒரு பாத்திரத்தில் தெளிந்த நீரை கொண்டுவந்து என் முன் வைத்தார். என் பக்கம் அமர்ந்து என் நெற்றியில் கை வைத்தார். 5 நிமிடத்தில் என் முன் இருந்த அந்த தெளிந்த நீர் கருநிறமாக மாறியது. என் முகம் தெளிந்த நிலை அடைந்தது. என் கண்களில் நீர் வழிந்தபடி அவர் காலில் விழுந்து வணங்கினேன். இந்த அமானுஷ்ய சக்தியை கண்டு அதிர்ந்து போனேன். இன்னும் பல அற்புதங்களை அவர் என் வாழ்வில் நிகழ்த்தினார்.
கடவுள் என்ற தேடலுடன் பயணிக்கும்போதே நம் ஆன்ம குரலை நம்மால் கேட்க முடியும்.
விந்தை மிகுந்த மனிதராய், நமக்குள் ஒருவராய் தோன்றும் இநன்யாவை அறிய முற்பட்டேன். அவர் யாருடனும் அதிகம் பேச மாட்டார். அவரிடம் முடியாது, நடக்காது என்ற வார்த்தை கிடையாது. அவர் கூறும் வார்த்தையை செயலாக்கும் வல்லவர். விந்தை மிகுந்தவர். விதியை மாற்றும் வல்லமை நிறைந்தவர் இநன்யா. அவர் பேசுவதை கேட்கும் சில நிமிடங்களில் என்னை அறியாமல் காற்றுடன் கலந்த ஒரு உணர்வை பலமுறை அனுபவித்து இருக்கிறேன். கண்களை மூடி கடவுளை தேடாதே, கண்களை திற அவர் உன் அருகில் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.
இதுவரை என்வாழ்வில் மருத்துவமனை செல்லும் வாய்ப்பு ஏற்படவில்லை. அவரை நாடி வந்த அன்பர்கள் வீழ்ந்தது இல்லை. சிறகுகள் கொடுத்து அன்புடன் அரவணைத்து காப்பார். எல்லா சூழ்நிலையிலும் அவர் என்னுடன் இருப்பதால் மிகுந்த பாக்கியம் அடைந்தவளாக கருதுகிறேன்.
அன்பர்கள் வேண்டுவதை குறை இன்றி தருபவர் நம் இநன்யா. தண்ணீரை கேட்டால் அமிர்தம் தருபவரே நம் இநன்யா..!!
அவருடன் நான் கொண்ட அனுபவங்களும் அமானுஷ்யங்களும் பல. பழத்தின் சுவையும், பூவின் வாசமும் உணர்ந்தால்தான் அறிய முடியும். உள்ளத்தில் இநன்யா என்று எழுதுங்கள், இநன்யா உங்கள் அருகில் இருப்பதை உணருங்கள், உங்கள் விதி மாறும்.
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.. !!
கல்வியில் சிறக்க இநன்யா அப்பா எனக்கு கூறிய அறிவுரையை அனைவருடனும் பகிர்ந்திட நினைக்கிறன்.
தாமரை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி 'நுன்வா' என எழுதவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
இநன்யாவின் ஆசியோடு அனைவருக்கும் ஞானம் தெளிவு கிடைக்கும்.
(Note:- தாமரை இலை இல்லை என்றால் வாழை இலையிலும் வைத்து வணங்கலாம்)
இநன்யா நமோ நம..!!
No comments:
Post a Comment