to INANYA MAHA MUNIVAR
31-05-2018
பாதாள வஞ்சனம் என் கண்ணில் ! நீ அழறில் உழன்று ஆகாசமனம் அறியாது வாழ்கின்றாய். உணரடா !
சத்திய விரதம் ,,,
நீ என்ன செய்தாலும், எங்கிருந்தாலும் உலகிலும் உன்னிலும் என்ன மாற்றம் வந்தாலும் உன் சத்திய பாதையில் இருந்து விலகிவிடாதே ! எத்தனை விரதம், உபவாசம் இருந்தாலும் சத்தியம் இல்லை என்றால் எதுவும் உனக்கு நன்மையாய் இருப்பதில்லை !
உலகில் வலிமையானது சத்தியம் ! நீ கடைபிடிக்கும் சத்திய விரதமே உன்னை மனிதனாக்கி ஞானியாக்கும் ! பிறக்கும் போது சத்தியத்தோடு பிறந்தாய். பின் தேய்ந்து களவு, பொய், சூது, பொறாமை, கோபம், காமம், மோகம், என்ற கேடுகெட்ட விஷயங்களை உன்னுள் புதைத்து சிதைந்து போகின்றாய். இது உன்னை மீண்டும் பிறக்க வைக்கும். இந்த கெட்ட சூத்திரத்தில் திகைத்து போகின்றாய். இதுவே அசுரகுணம் !
திருமணத்தில் ஏழு அடி எடுத்து வைக்கின்றாய். ஒழுக்கத்தில் நிறைவு பெற்று வாழ்வதற்காக ! ஆனால் ஒழுக்கம் தவறி மூடனாகி போனாய். ஏழு அடி எடுத்து வைப்பது சத்திய விரதத்தை கடைபிடித்து ஒழுக்க நெறியாய் வாழ வேண்டும் என்ற தத்துவம் தான். நான் சத்தியம் ! இந்த சத்திய நாயகன் எப்போதும் உன்னை கைவிடுவதில்லை.
நான் சத்திய விரதன். இயற்கையின் இயக்க விதியை நான் அறிந்தவன். வென்றவன். ஆதலால் என் பின்னால் வருவபவனும் நிச்சயம் வெல்வான் !
பூமி அசைந்தாலும், வானம் இடிந்தாலும், கடல் நீர் உயர்ந்தாலும் மலை வெடித்து மண்ணில் விழுந்தாலும் நான் உனை தாங்கி பிடிப்பேன். நஞ்சை மறந்து உண்டாலும் நாயகன் உன் நஞ்சை அமிழ்தமாக மாற்றுவேன்.
நீயாக சாக நினைக்காதே ! உனக்கு உரிமையில்லை ! இருக்கும் வரை பிறப்பறுக்கும் வித்தையை கற்று கொள்ள ஆசைப்படு ! வாடா என் சத்திய பாதையில் வானத்தை வசப்படுத்த கற்றுத் தருகிறேன். மரங்கள், பறவைகள் சத்தியத்தோடு அதனதன் கடமையை செய்கின்றது. நீ தான் நாகரிகம் என்ற பெயரால் சத்தியம் தவறுகின்றாய்.
செய்த தவறை மறைத்து கஷ்டம் வந்தால் கடவுளை குற்றம் சொல்கின்றாய். சத்தியத்தை நோக்கி உன் பயணம் இருக்கட்டும். துன்பத்தை விலை கொடுத்து வாங்காதே ! கேளிக்கை, உல்லாசம், பிரயானம் என்று உன் செல்வத்தை தொலைத்து நிம்மதியை இழக்காதே ! உனக்குள் உன்னை தேடு !
உண்மை (சத்தியம்) எதுவென்று புரியும் !
நான் சத்யம் ! என் சொல் சத்யம் !
என் நாமம் சத்யமடா !
நான் இநன்யா !