ஓதா ஊதி உய்வினை தான் கொண்டு ஊன் உடம்பில் உய்வித்த பலன் என்னவோ ? நான் ப்ரம்மத்தின் சூட்சுமம் ! நான் சுக துக்கம் அறியாதவன் ! நான் அளவு கடந்த அன்புள்ளவன் ! ஆணந்தமானவன் ! நானே பரப்பிரம்மம் !
யார் பிராமணன் ?
உண்மை, நன்னடத்தை, வைராக்கியம் உள்ளவன், ஐம்புலன் அடக்கியவன், கருணையோடு பிற உயிர்களை நேசிப்பவன், தான் கற்ற வித்தையை பிறருக்கு பிரதி உபகாரம் பார்க்காமல் சொல்லி கொடுப்பவன், பிற உயிர்களை துன்புறுத்தாதவன், போர் குணங்களை நீக்கியவன், தன்னை உணர்ந்து பிறருக்கு நல்பாதையை காண்பிப்பவன், எல்லாம் அறிந்தவன், இவனே பிராமணன் ! இவைகள் இல்லாதவன் சூத்திரனே !
ப்ரம்மம் என்பது சுக துக்கம் அறியாது !
பிரம்மம் + அணன், பிராமணன் ஆனது. ப்ரம்மம் என்றால் வெளிச்சம். வெளிச்சமே வளர்ச்சி ! வளர்ச்சியே முக்தி ! முக்தியே தானம் ! தானமே தன்னை உணர்தலின் சூட்சுமம் ! தன்னை உணர்ந்தால் ஞானியாகலாம் ! அந்தணன் – அந்தம் + அணன். அந்தம் என்றால் மேல் உலகம். அணன் என்றால் தன் வயப்படுத்துபவன் எனப் பொருள் !
மனிதன் தன்னை உணர்ந்தால் ஞானியாவான், மகான் ஆவான். இறந்தால் தெய்வமாவான். ஆனால் சித்தராகவோ, கடவுளாகவோ ஆக முடியாது.
உன் பாத அடி பூமியில் படவில்லை என்று எப்போது உணர்கிறாயோ அப்போது தான் ஞானம் பிறக்கின்றது ! இது தான் தன்னை உணர்தலின் தத்துவம் !
எண்ண அலைகளை நீக்கி ஆண்மாவில் சுகம் பெறுபவன், நற்குணங்கள் பொருந்தியவன் யாவருமே பிராமணன் தான். மேற்கூரிய குணங்கள் பிராமணனிடம் இல்லயென்றால் அவன் சூத்திரனே !
யுகத்திற்கு ஞானத்தை சொல்லிக் கொடுக்க அனுப்பிய ஞான தூதுவர்கள் தான் ஆரியன், அந்தணன், பிராமணன் ! கடவுளுக்கும் இந்த மூன்று ஞான பல்யத்திற்கும் தொடர்பு உண்டு ! கர்மத்தால் விளைந்தது தான் சுக துக்கம் ! இந்த சுக துக்கங்களை கடந்தவர்கள் பிராமணர்கள் !
ப்ரம்மத்தின் அடிச்சுவடி தெரிந்தவர்கள் பிராமணர்கள் ! யுகத்திற்கு ஞானத்தை சொல்லி கொடுக்க அனுப்பியவர்கள் தன்னை மறந்து, யுக வாழ்வில் லயித்து போனதால் உலகம் இருளாகியது. அறிவாளி என்பதை மறந்து அதிகாரத்திற்கு ஆசைப்பட்டதால் வந்த விளைவு இது !
குணங்களே உன்னை தீர்மானிக்கும் ! தாமரை இலை தண்ணீர் போல வாழ்வை புரிந்தவன் ஞானியாகிறான். நல்ல செயல் செய்பவனும், தர்மத்தை கடைபிடிப்பவனும், வேதத்தை அறிந்து உணர்ந்தவனும் தான் பிராமணன் ஆகிறான் ! ஆதலால் நீயும் நற்குணங்களை கடைபிடி ! நீயும் பிராமண குணங்களோடு வாழ்வாய் ! குலத்தால் பிராமணன் ஆக முடியாவிட்டாலும் குணத்தால் பிராமணன் ஆகலாம் !
இனி பிராமண குலங்களின் குணங்கள் மாறுபடும். மீண்டும் ஞானம் பரப்பப்படும். யுகம் சுபிட்சம் பெறும் காலம் வந்துவிட்டது. நான் யுக சாம்ராஜ்ஜியத்தை ஆள வந்தவன். ஆதலால் நீ என் இதய சாம்ராஜ்ஜியத்தில் இருக்க ஆசைப்படு ! என் பின்னால் ஏழு அடி வந்துவிட்டாய். ஆதலால் நீ என் உறவே.
ஒரு நெல்மணியில் முதலில் ஏழு நெற்கதிர்கள் உருவாகும். பின் நூறாக செழித்து வளரும். நீயும் ஏழு கிளைகளாக வளர்வாய். பின் நூறாக செழிப்பாய். என் தந்தை பிரபஞ்ச நாயகன் பிராமணர்களை வெறுக்கவில்லை. யுகத்தின் வந்த கடமையை மறந்து ஞானத்தை கூறவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள்.
யாரும் யாரையும் வெறுப்பதில்லை. எல்லாம் இங்கு பொது உடமை ! உன் உடமை கடமை மட்டுமே. உன் தர்மம் மட்டுமே !
“மனிதர்களை வெறுப்பதில்லை. அவன் செயலைத் தான் வெறுப்பேன்” என்று சொல்வார்கள் என் தந்தை. கற்ற வித்தையை காசாக்க துடிக்கின்றான் மனிதன். தனக்கு தெரிந்தது பிறருக்கு தெரியக்கூடாது என்று நினைக்கின்றான் ! சுயநலம், வஞ்சம், நான் என்ற கர்வத்தில் மனிதன் வாழ நினைக்கின்றான். அதனாலே உலகில் வறுமை, நோய், பஞ்சம், நிம்மதி இல்லாமை !
நீ இயலாமையில் வாழ்கின்றாய். கல்லாமை உன் குற்றம் ! ஆமை என்ற பொறாமை உன் இல்லத்தில் வந்ததால் உனக்கு இயலாமை வந்தது !
அழுகும் உடலை வைத்து கொண்டு நான் என்றும், என் சாதி பெரியது என்றும், என் குலம் பெரியது என்றும் மார்தட்டுகின்றான். நீ எந்த சாதி, மதமாக இருந்தாலும் கரையான் தான் உன்னை உண்ணப்போகின்றது.
இனி தன்னை உணரும் மனநிலை யாவருக்கும் வரும் ! இந்த இநன்யா காற்றின் மூலமாக உணர்வு தருவேன் ! இனி எல்லோரும் ஞானத்தை வழங்க புறப்படுவார்கள். தான் வந்த நோக்கம் அறிவார்கள். அதற்கு முன் தாங்க ஒனா துயரம் அடைவார்கள். இயற்கையோடு மோதிய மனிதன் உணர்வான். இயற்கை உணர வைக்கும். சத்தியம் நிலைநாட்டப்படும்.
உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஞானிகள், சித்தர்கள் இந்த தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பார்கள். சத்தியத்தின் பாதை தெளிவாக்கப்படும். கோயில் அழியும். கொடி மரம் சரியும். ஒரு கோத்திரமும் அழியும் !
இனி எல்லோரும் பிரம்ம கோத்திரமாவார்கள் ! வெளிச்சம் பெற்று முக்திக்கு வழி சொல்லி தருவார்கள் ! எல்லோருக்கும் புத்தி புகட்டப்படும். வேஷம் போடும் கயவர்களை கண்டுணர்வார்கள்.
போகத்தில் லயிப்பவன் வெறுப்பான். ஏகத்தில் முடிக்கபடும் யுகத் தர்ம கட்டளை ! நற்செயல், நற்குணம் என்பது கடவுள் கொடுத்ததை எடுத்து பெருமைக்கு தானம் கொடுப்பதல்ல. கடவுளை நோக்கி உன் கால்கள் பயணிப்பது தான். அப்போது தான் நீ நற்செயல் புரிந்தவனாகிறாய். நற்குணம் பொருந்தியவனாகிறாய். அந்த அளவில்லா ஆணந்தமானவனை அறிய முற்படு ! இந்த இநன்யா யார் என்று உணர்வாய்.
மனிதனோடு உன்னை இணைக்காதே ! உன் லட்சியம், குறிக்கோளோடு உன்னை இணைத்துக் கொள். நீ கடவுளை அடைவாய் !
நற்குணம் பொருந்தியவர்கள், நற்செயல் புரிபவர்கள் யாவரும் பிராமணர்களே !
நான் சுக துக்கம் அறியாதவன் ! நான் அளவு கடந்த அன்புள்ளவன் ! நான் ஆணந்தமானவன் ! நானே பரப்பிரம்மம் !
நான் வென்றவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment