இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; உன்னை சுமந்த தாய் மேலானவள் ! உன்னை சுமக்கின்ற தாய் பூமி மேலானது !
46 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
உன்னை சுமந்த தாய் மேலானவள் ! உன்னை சுமக்கின்ற தாய் பூமி மேலானது ! உன்னை நான் சுமப்பதால் நான் மகா மேரு மலையிலும் மேலானவன் ! உணர் !
சுமை
எல்லா மனிதனும் சுமக்கின்றான் பாவம் என்ற மூட்டையை !
உன் தாயின் சுமை உன்னை இனிதாக பூமியில் பிறக்க வைக்கின்றது ! தாய் பூமியின் சுமை உனக்கு தானியங்களை மூட்டை கட்டி தருகின்றது ! ஆனால் நீ பாவம் செய்து பாவத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு சுமக்கின்றாய் ! அதை உன் சந்ததியையும் சுமக்க வைக்கின்றாய். நீ பாவம் செய்தால் உனக்கு தான் தண்டனை கிடைக்கும். மற்றவரின் விதி உனக்கு நல்லதும் செய்யாது கெட்டதும் செய்யாது என்பதை புரிந்து கொள். யுகத்தில் அவரவர் பாவம் அவரவர் தான் அனுபவிக்க வேண்டும் !
எப்போது உன் சுமையை கீழ் இறக்க நினைப்பாயடா ? உன் சுமையை எப்போது கீழ் இறக்க நினைக்கின்றாயோ அப்போது நான் உன்னை சுமக்க தயாராக உன் முன்னே நிற்பேன் ! பாவ மூட்டைகளை பல பிறவிகளில் சுமக்கின்றாய். பூமியில் மனம் அழுந்தி, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் துடிக்கிறாய். உன் துடிப்பு மேல் உலகம் வரை கேட்குமடா ! நீ திருந்தும் வரை உன்னை எல்லாம் பின் தொடரும் !
மரங்கள் கிளைகளையும், இலைகளையும் சுமந்து உனக்கு நிழல் தருகிறது. காய், கனிகளை சுமந்து உனக்கு நல்லது செய்கின்றது. பசு பால் சுமந்து உனக்கு பருக தருகின்றது. நீ மட்டும் எதற்கும் உதவாமல் பாவத்தை தூக்கி சுமக்கின்றாய். மரத்திற்கு உண்டான வீரியம் கூட உன்னிடம் இல்லை. நீ தலை முடியை சுமக்கின்றாய். ருத்ராட்சத்தை போட்டுக் கொண்டு தாடியும், குடுமியையும் சுமக்கின்றாய் ! வேடிக்கை வாழ்க்கையடா !
மரங்கள் கிளைகளையும், இலைகளையும் சுமந்து உனக்கு நிழல் தருகிறது. காய், கனிகளை சுமந்து உனக்கு நல்லது செய்கின்றது. பசு பால் சுமந்து உனக்கு பருக தருகின்றது. நீ மட்டும் எதற்கும் உதவாமல் பாவத்தை தூக்கி சுமக்கின்றாய். மரத்திற்கு உண்டான வீரியம் கூட உன்னிடம் இல்லை. நீ தலை முடியை சுமக்கின்றாய். ருத்ராட்சத்தை போட்டுக் கொண்டு தாடியும், குடுமியையும் சுமக்கின்றாய் ! வேடிக்கை வாழ்க்கையடா !
மிருகங்கள் குட்டி போட்டவுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தன் வாயால் கவ்விக் கொண்டு செல்லும். அதன் கூறிய பற்கள் ஒன்றும் செய்யாது. ஆனால் உன் வாய் எதற்கும் உதவாது. உன் கூரிய பற்களும், வாயும் அடுத்தவரை வசைபாடவும், கேலி, கிண்டல் செய்து உபயோகமில்லாமல் இருக்க கண்டேன்.
என் தர்ம குலமே, எப்போது உணரப் போகிறாய் ?
பூமியில் உன் வரலாறு என்ன ? இங்கு எதற்கு வந்தாய் ? இந்த பொம்மலாட்ட வாழ்க்கை ஏன் எதற்கு என்று நினைத்துப் பார்த்தாயா ? எப்போது உணரப் போகின்றாய் என் செல்லக் குழந்தையே ?
பூமியில் உன் வரலாறு என்ன ? இங்கு எதற்கு வந்தாய் ? இந்த பொம்மலாட்ட வாழ்க்கை ஏன் எதற்கு என்று நினைத்துப் பார்த்தாயா ? எப்போது உணரப் போகின்றாய் என் செல்லக் குழந்தையே ?
நதிக்கரையில் உட்கார்ந்து யோசி ! யுகத்தில் மரத்தை வெட்டி அழிக்கின்றாய். காகிதத்தால் வந்தது தானடா உலகிற்கு பேரழிவு ! காற்றை மாசுபடுத்தி கயவனாக திரிகிறாய். நீரை மாசுபடுத்தி நீசனாக அலைகின்றாய். உன் ஆட்டத்தை நாங்கள் பார்த்து கொண்டு இருப்போம் என்று நினைத்துவிடாதே ! அதனால் தான் பூகம்பம், இடி, மின்னல், சூறாவளி, புயலாய், சுனாமியாக தாண்டவமாடுகின்றோம். நீ ஆடினாய் ! இப்போது நாங்கள் ஆடுவதை பொறுத்திருந்து பார் ! இனி இயற்கை சீற்றங்கள் மிகுதியாக இருக்கும். உன் விஞ்ஞானத்தை வைத்து ஏதோ கண்டுபிடித்தேன் என்று உளர்கின்றாயே ? ஓடி பிடிக்கும் உயிர் ஒன்று உனக்குள் வைத்தேன். கண்டுபிடித்தாயோ நீ ?
தேனியின் சுமை உனக்கு தித்திப்பை தருகிறது ! உலகில் கெட்டுப் போகாத பொருளை உனக்கு தந்தேன். நீ விஞ்ஞானத்தில் செய்த பொருள் எல்லாம் கெட்டு போகும். மின்சாரம் கண்டுபிடித்து எல்லா ஜடப் பொருளையும் இயக்குகிறாய். நான் உனை எந்த மின்சாரமும் இல்லாமல் இயக்குகிறேன். என்றாவது உணர்ந்தாயா ?
தேனியின் சுமை உனக்கு தித்திப்பை தருகிறது ! உலகில் கெட்டுப் போகாத பொருளை உனக்கு தந்தேன். நீ விஞ்ஞானத்தில் செய்த பொருள் எல்லாம் கெட்டு போகும். மின்சாரம் கண்டுபிடித்து எல்லா ஜடப் பொருளையும் இயக்குகிறாய். நான் உனை எந்த மின்சாரமும் இல்லாமல் இயக்குகிறேன். என்றாவது உணர்ந்தாயா ?
தேனி எடுத்து வரும் மகரந்தத்தில் அணுகுண்டையும் செய்யலாம். தங்கம், வைரம், வைடூரியத்தையும் செய்யலாம். முடிந்தால் இதை கண்டுபிடி ! நீ தேனை மட்டும் சாப்பிட்டு திசை தெரியாமல் அலைகின்றாய். ஒரு சொட்டு தேன் உருவாக 333 தடவை பூவில் வாய் வைக்கின்றன தேனீக்கள் ! ஆராய்ந்து பார்த்தாயா ? தேனுக்கும் உன் 333 நாடி நரம்பிற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த மாய உலகத்தை அறிய முயற்சி செய் ! நீ கடவுளையும், கடவுளின் கருணையும் உணரலாம் !
நான் காற்றாய், நீராய் இருக்கின்றேன் ! என்னை உணர்ந்து பார் ! எல்லாம் புரிவாய் ! உன்னை அறிவாய் ! சுமையை சுமக்க கழுதையிடம் கற்றுக் கொள் ! எவ்வளவு சுமையை ஏற்றினாலும் தன் எஜமானர்க்கு நன்றியோடு இருக்கும். அது வருத்தப்படுவது கிடையாது. கழுதை தேவர்களின் வாகனம். ஏன் என்று கண்டுபிடி ! கழுதை படுத்து புரண்ட இடத்தில் மண்ணை ஆராய்ந்து பார். அதில் உட்கார்ந்து பார். அந்த மன்ணை உடலில் பூசிப்பார். நீ அறிவாய். தெளிவாய் !
கிராமத்தில் கழுதையின் காய்ந்த சானத்தை சிறு குழந்தைக்கு தனலில் போட்டு புகைபிடிப்பார்கள். ஏன் என்று கண்டுபிடி ! குழந்தை சாப்பிட ஆரம்பித்தவுடன் சலவை தொழிலாளியிடம் சாதம் கொஞ்சம் வாங்கி ஊட்டிப் பார். உன் குழந்தை ஞான குழந்தையாக மாறும். உழவன், மீனவன், சலவை தொழிலாளி, முடி திருத்துபவர், இடுகாட்டை காப்பவர், ஹரி ஜணங்கள் எல்லோரும் ஞானவான்கள். நீ ஜாதியின் பெயரால் கீழானவர்கள் என்று ஒதுக்கி வைக்கின்றாய் அவர்களை ! இனி இவர்களே உலகை நல்வழிப்படுத்துவார்கள். இவர்களை இனி உலகம் போற்றும். சாதி ஒழிந்து மனித நேயம் மலரும் ! இவர்கள் இல்லை என்றால் மனிதன் நிலை என்ன ?
உன் மாய மயக்கத்தை நான் தெளிவாக்குவேன் ! ஞானத்தை சொல்லி கொடுக்க பூமிக்கு அனுப்பிய ஞானவான்கள் எல்லாம் செயல் மறந்து நாட்டை ஆள ஆசைப் பட கண்டேன். அதனால் உலகம் சுமையானது பாவத்தால் ! உன் தாய் உன்னை சுகமான சுமையாக சுமந்தாள். உன்னை பாரமாக நினைக்கவில்லை ! உன் தாய் பூமி நீ எவ்வளவு பாவம் செய்தாலும் உன்னை சுமக்கின்றது ! ஆனால் நீ தான் உன் தாயையும், தந்தையையும், மனைவியையும் சுமையாக நினைக்கின்றாய். இந்த சுமையை சுமக்கத் தான் பூமிக்கு அனுப்பினேன் உன்னை ! ஆனால் இதை நீ இறக்கி வைத்து விட்டு பாவங்களை தேடிச் சென்று அதை செய்து சுமையாக சுமக்கின்றாய் ! உனக்கு நான் சுமையை அளவுக்கு மீறி தருவதில்லை. உன்னால் சுமக்க முடிந்த அளவு மட்டும் தான் சுமையை தருகிறேன். மீதி சுமையை நானே சுமக்கின்றேன் ! எல்லா சுமையும் பூமியில் சுமந்தால் பிறந்தவுடன் பூமியில் புதைந்து விடுவாய் !
சுமையை சுகமாக சுமக்க கற்றுக் கொள். உன்னால் முடியவில்லை என்றால் உன் பாரத்தை என் தோளின் மேல் இறக்கி வை. நான் சுமக்கின்றேன். மீண்டும் தவறு செய்யாதே ! உணரடா ! நான் உனக்குள் இருப்பதால் எதுவும் சுமை இல்லை ! என் வலிமையான கரங்கள் உனை அரவணைக்க காத்திருக்கின்றது. உன் பாரத்தை என் தோள் சுமக்க காத்திருக்கின்றது. உணர் ஞானமிருந்தால் !
சுமையை சுகமாக்கி தருபவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment