நாரி என் கையில் ! நாளும், கோளும் உன்னை என்ன செய்யும் ?
நீயே விதைத்தாய் !
நீ தர்மம் செய்தால் உன் விதியை சதிராடுவேன் ! நீ என்னால் மறக்கப்படமாட்டாய் ! நான் தினமும் உனை பார்க்கின்றேன். நீ விதைத்தாய். நீ தான் அறுவடை செய்ய வேண்டும். திருந்து இல்லையேல் கடவுள் திருத்துவான் ! பூகம்பமாய், இடி, மின்னலால், சூறாவளியாய், புணித நீரை புரளச் செய்து உன்னை திருத்துவான் !
நீயே செய்தாய் ! நீயே தின்றாய் ! நீயே உருவாக்கினாய் !
உன் திட்டம், நீ செய்த பாவம் உனை திருத்துகின்றது. மூலத்தை கொடுத்தான் (பால்), அதை தயிராக்கி நெய்யை எடுப்பது உன் செயல் ! விதையை கொடுத்தான் அதை பயிராக்கி அதை பாதுகாத்து பிறருக்கு உதவி செய்வது உன்னோட கடமை !
எங்கள் மேல் குற்றம் சொல்லாதே ! எல்லாம் உன் மேல் குற்றம் ! எல்லாம் இங்கு விதிக்கப்பட்டது ! விதைக்கப்பட்டது !
உன் சட்டம் பொய்யாகும். கடவுள் வகுத்த சட்டம் என்றும் பொய்க்காது ! கால நிர்ணயம் செய்தவனை, நீ கணக்கெடுக்க முடியாது. அவன் எதற்கு ? ஏன் ? என்ன? எதைச் செய்கிறான் என்று ! உன் உயிர் நாடி அவன் கையில் ! அவனைப் பற்றி பேச உனக்கு அருகதை இல்லை.
நீ ஆயிரம் வருடம் வாழப் போகிறவன் அல்ல !
ஏன் படைத்தாய். ஏன் அழிக்கின்றாய், இந்த குணங்களை ஏன் தந்தாய் என்று கேட்காதே ! அவன் படைத்ததை நீ அழிக்கின்றாய் !
அவன் பொறுத்திருந்தான். நீ செவி சாய்க்கவில்லை ! இப்போது அவன் படைத்த பொருளை அவன் அழிக்கின்றான். உன் பொருள் ஏதுமில்லை இங்கு. உன் தர்மத்தை தவிற !
அவன் படைத்தான் நன்றாக, உன் சிற்றறிவில் பட்டறிவால் பூமியை நீயே சிதைக்கின்றாய். அதை அவன் பொறுக்காமல் சீறுகிறான். அன்பினால் இங்கு எதையும் அடையலாம். உன் அதிகாரத்தால் ஏதும் முடியாது. அவன் அதிகாரம் கொண்டால் ஒரு விநாடியில் பூமியை சரி செய்வான். அந்த கருணை மிக்கவனை இனியாவது திட்டாமல் அவனை அறிய முற்படு !
காலில் நசுங்கி போகும் எறும்பை விட சிறியவன் நீ ! எறும்பு கூட மழை வருவதற்கு முன் சேமிக்கிறது. கூடி வாழ்கிறது. தூங்காமல் உழைக்கிறது. எறும்புக்கு தெரிந்த வேதம் கூட உனக்கு தெரியவில்லை. வெட்கப்பட வேண்டியன் நீ ! எல்லா உயிரினமும் அதனதன் கடமையை செய்கின்றது !
நீ தான் கடமை மறந்து அலைகின்றாய் ! ஏனென்றால் நீ கற்றவன் அல்லவா ? எல்லாம் விதிக்கப்பட்டது. யாராலும் மாற்ற முடியாது. மாற்றத்திற்கு ஒரே வழி நீ பாவம் செய்யாமல் இருப்பது மட்டும் தான் !
திருந்து இல்லையேல் உன் உயிரை வைத்தே உன் உடலை கொல்வான் கடவுள் ! அந்த விதியின் நாயகன் என்னுள்ளே ! எனை அறிய முற்படி ! நான் உனை அறிய வைப்பேன். விதைத்ததை நல் அறுவடையாக எடுப்பதற்கு !
நீ நலமாக நிம்மதியாக இருப்பதற்கு நான் நல் விதை ! நல் விதியால் விதைக்கப்பட்டவன் ! என்னால் உன் விதியை நல் விதியால் மாற்ற முடியும். நீ தர்மம் செய்து மறந்து விடு ! நான் உன் விதியை மாற்றுவேன். மாற்றும் சக்தி மனிதனுக்கு இல்லை ! மனிதன் உணர்வை புரிந்து கொள்ளும் எனை போன்ற ஆத்மத்தின் தலைவனால் முடியும்.
நீ நல்லவனாக மாறி என்னிடம் வா ! நான் நல் விதியை அமைத்து தருவேன் உனக்கு ! நீ விரும்பும் மாட மாளிகை, செல்வம், தானியம் என்னால் உனக்கு தர விதி உண்டு ! ஏனென்றால் விதியை படித்தவன் நான் ! வினையையும் அழிப்பேன் நான் !
புரிந்து கொள் ! நீ கதி இல்லை என்று இனி நினைக்காதே ! உனை நற்கதிக்கு கொண்டு செல்வேன் !
நான் இருக்கின்றேன், பயப்படாதே ! விதியின் நாயகன் நான் ! விதையின் வீரியமும் நான் ! சர்வமும், சகலமும் எனக்குள்ளே !
நல்விதியால் விதைக்கப்பட்டவன் நான் !
நான் இநன்யா !