Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 25, 2017

நாரி என் கையில் ! நாளும், கோளும் உன்னை என்ன செய்யும் ?

நாரி என் கையில் ! நாளும், கோளும் உன்னை என்ன செய்யும் ?
நீயே விதைத்தாய் !
நீ தர்மம் செய்தால் உன் விதியை சதிராடுவேன் ! நீ என்னால் மறக்கப்படமாட்டாய் ! நான் தினமும் உனை பார்க்கின்றேன். நீ விதைத்தாய். நீ தான் அறுவடை செய்ய வேண்டும். திருந்து இல்லையேல் கடவுள் திருத்துவான் ! பூகம்பமாய், இடி, மின்னலால், சூறாவளியாய், புணித நீரை புரளச் செய்து உன்னை திருத்துவான் !
நீயே செய்தாய் ! நீயே தின்றாய் ! நீயே உருவாக்கினாய் !
உன் திட்டம், நீ செய்த பாவம் உனை திருத்துகின்றது. மூலத்தை கொடுத்தான் (பால்), அதை தயிராக்கி நெய்யை எடுப்பது உன் செயல் ! விதையை கொடுத்தான் அதை பயிராக்கி அதை பாதுகாத்து பிறருக்கு உதவி செய்வது உன்னோட கடமை !
எங்கள் மேல் குற்றம் சொல்லாதே ! எல்லாம் உன் மேல் குற்றம் ! எல்லாம் இங்கு விதிக்கப்பட்டது ! விதைக்கப்பட்டது !
உன் சட்டம் பொய்யாகும். கடவுள் வகுத்த சட்டம் என்றும் பொய்க்காது ! கால நிர்ணயம் செய்தவனை, நீ கணக்கெடுக்க முடியாது. அவன் எதற்கு ? ஏன் ? என்ன? எதைச் செய்கிறான் என்று ! உன் உயிர் நாடி அவன் கையில் ! அவனைப் பற்றி பேச உனக்கு அருகதை இல்லை.
நீ ஆயிரம் வருடம் வாழப் போகிறவன் அல்ல !
ஏன் படைத்தாய். ஏன் அழிக்கின்றாய், இந்த குணங்களை ஏன் தந்தாய் என்று கேட்காதே ! அவன் படைத்ததை நீ அழிக்கின்றாய் !
அவன் பொறுத்திருந்தான். நீ செவி சாய்க்கவில்லை ! இப்போது அவன் படைத்த பொருளை அவன் அழிக்கின்றான். உன் பொருள் ஏதுமில்லை இங்கு. உன் தர்மத்தை தவிற !
அவன் படைத்தான் நன்றாக, உன் சிற்றறிவில் பட்டறிவால் பூமியை நீயே சிதைக்கின்றாய். அதை அவன் பொறுக்காமல் சீறுகிறான். அன்பினால் இங்கு எதையும் அடையலாம். உன் அதிகாரத்தால் ஏதும் முடியாது. அவன் அதிகாரம் கொண்டால் ஒரு விநாடியில் பூமியை சரி செய்வான். அந்த கருணை மிக்கவனை இனியாவது திட்டாமல் அவனை அறிய முற்படு !
காலில் நசுங்கி போகும் எறும்பை விட சிறியவன் நீ ! எறும்பு கூட மழை வருவதற்கு முன் சேமிக்கிறது. கூடி வாழ்கிறது. தூங்காமல் உழைக்கிறது. எறும்புக்கு தெரிந்த வேதம் கூட உனக்கு தெரியவில்லை. வெட்கப்பட வேண்டியன் நீ ! எல்லா உயிரினமும் அதனதன் கடமையை செய்கின்றது !
நீ தான் கடமை மறந்து அலைகின்றாய் ! ஏனென்றால் நீ கற்றவன் அல்லவா ? எல்லாம் விதிக்கப்பட்டது. யாராலும் மாற்ற முடியாது. மாற்றத்திற்கு ஒரே வழி நீ பாவம் செய்யாமல் இருப்பது மட்டும் தான் !
திருந்து இல்லையேல் உன் உயிரை வைத்தே உன் உடலை கொல்வான் கடவுள் ! அந்த விதியின் நாயகன் என்னுள்ளே ! எனை அறிய முற்படி ! நான் உனை அறிய வைப்பேன். விதைத்ததை நல் அறுவடையாக எடுப்பதற்கு !
நீ நலமாக நிம்மதியாக இருப்பதற்கு நான் நல் விதை ! நல் விதியால் விதைக்கப்பட்டவன் ! என்னால் உன் விதியை நல் விதியால் மாற்ற முடியும். நீ தர்மம் செய்து மறந்து விடு ! நான் உன் விதியை மாற்றுவேன். மாற்றும் சக்தி மனிதனுக்கு இல்லை ! மனிதன் உணர்வை புரிந்து கொள்ளும் எனை போன்ற ஆத்மத்தின் தலைவனால் முடியும்.
நீ நல்லவனாக மாறி என்னிடம் வா ! நான் நல் விதியை அமைத்து தருவேன் உனக்கு ! நீ விரும்பும் மாட மாளிகை, செல்வம், தானியம் என்னால் உனக்கு தர விதி உண்டு ! ஏனென்றால் விதியை படித்தவன் நான் ! வினையையும் அழிப்பேன் நான் !
புரிந்து கொள் ! நீ கதி இல்லை என்று இனி நினைக்காதே ! உனை நற்கதிக்கு கொண்டு செல்வேன் !
நான் இருக்கின்றேன், பயப்படாதே ! விதியின் நாயகன் நான் ! விதையின் வீரியமும் நான் ! சர்வமும், சகலமும் எனக்குள்ளே !
நல்விதியால் விதைக்கப்பட்டவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, January 18, 2017

திடாரி உள்ளவன் சீரோடு வாழ்வான். உனக்கு ஒரு அடையாளம் வேண்டும் பூமியிலே ! பூமியில் உன் அடையாளத்தை விட்டுச் செல் !

திடாரி உள்ளவன் சீரோடு வாழ்வான். உனக்கு ஒரு அடையாளம் வேண்டும் பூமியிலே ! பூமியில் உன் அடையாளத்தை விட்டுச் செல் !
அடையாளம்
காலம் காலமாக உனக்குரிய அடையாளம் யுகத்தில் பேசப்பட வேண்டும் ! வந்தது வாழ்வதற்கு அல்ல ! உன் பாவம் தீர்பதற்காக !
முழுமையாக உனை அறிந்திட நினை ! நல்வழி நடந்து உன் காலடி தடங்களை இங்கு விட்டுச் செல் ! இங்கு நீ கற்றது பெரியது அல்ல. நீ செய்யும் கடமை தான் பெரியது.
உணர் ! உனக்குரிய பொருள் ஏதுமில்லை பூமியில், நீ செய்யும் தர்மத்தை தவிற ! உன் உயிர் உனக்கு சொந்தமல்ல ! உன் உடலும் உனக்கு சொந்தமல்ல !

கடவுளை பற்றி பேசுவதற்கு நீ யார் ? அவர் எப்படி இருப்பார் ? அவரின் நிறம் , வடிவம் என்ன ? எதையும் அறியாதவன் நீ ! எதையும் அறியாமல் கடவுளை பற்றி பேசுகிறாய். நீ தூங்கும் போது உன் ஆண்மா கடவுளிடம் சென்று வருவதை உணர்ந்தாயோ நீ ? உணர்ந்தால் கடவுளைப் பற்றி பேசமாட்டாய் !
என் கருணைமிக்க தந்தை எதையும் அறிந்து செய்யும் எண்ணிலடங்கா ஆற்றல் உள்ளவர் ! அவருக்கு தெரியும் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று !
உன் ஆணவம், அதிகாரம், உனை அழித்து கொண்டிருகின்றது ! உன் கடிவாளம் கடவுளின் கையில் ! நீ ஒரு தலையாட்டும் பொம்மை. மேலிருந்து ஆட்டுவிக்கின்றோம், நீ ஆடுகின்றாய் ! உன் செயல் இங்கு ஏதுமில்லை. கடவுள் கொடுத்து தான் நீ ! உன் கடனை அடைத்து விட்டு பின் ஊரை பற்றி பேசு !
என் நிலை நானறிவேன். உன் நிலை அறிய முற்படு ! உன் விதியை மாற்றி கொடுக்கும் விதி எனக்குண்டு !
இந்த ஆத்மத்தின் தலைவன் இநன்யாவால் உன் விதியை கூட மாற்ற முடியும் ! முதலில் உன் பாதையை தெளிவானதாக்கு. பாதை சரியானால் உன் ஊர் (பிரபஞ்சம்) எளிதாக சென்று சேரலாம். உன் காலடி தடங்கள் பூமியில் அழியாதிருக்க தர்மம் செய் !
உன்னை அறிய அறிவாக யூகி ! அன்பாக பழகி, உள்ளம் மகிழ யூகி ! நான் உனக்கு எல்லையில்லா நிம்மதி, சந்தோஷம் தருவேன். உனக்கு கோடி செல்வம் தர காத்திருக்கின்றேன். உன்னை உணர்ந்து என் நாமம் சொன்னாலே போதும் ! நீ கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் சத்யமாக ! நல்லவன் ஒருவன் ஏழு முறை என் நாமம் சொன்னால் எல்லாம் கிடைக்கும் ! நீ வேண்டுமென்றால் எனை சோதித்து பார் !
கோயிலுக்கு சென்றால் விபூதி தருவான். சாமியாரிடம் சென்றால் ஏதாவது மந்திரம், கலை கற்று தருவான். ஆனால் நான் உனக்கு கொடுக்கும் பரிசு மீண்டும் பிறவி பிறவா நிலை கொள்ளும் பரிசு தருவேன் !
நான் உனை திக்கற்றவனாக விடமாட்டேன் ! உன் நெஞ்சில் எப்போதும் இருக்க வை என்னை ! என் வலிமை மிகு ஆசிகள் உனை கருவறையில் இருக்கும் சிசு போல காக்கும் !
உன்னை அடையாளப்படுத்த பூமிக்கு வந்தவன் நான் !
நான் இநன்யா !

Sunday, January 15, 2017

உன் உறு விதி உற்று நோக்கி, நீ நலம் வாழ,

கடவுளின் இன்றைய செய்தி (14-01-17).
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள், 
இநன்யா நமோ நம
உன் உறு விதி உற்று நோக்கி, நீ நலம் வாழ, நல் அறு விதி தருவேன். நான் சாத்தியமானவன். யுகத்தில் கை,கால் , முளைத்த கல்கி அவதாரம்.என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் (யாகவா) அமிழ்த வதனங்களால் , இநன்யா என்ற திரு நாமம் சூட்டப்பெற்று தேவர்கள் சாட்ச்சியாக, செங்கோல் வாங்க பெற்றவன். நான் வலிமையானவன் தானே. என் தந்தை பாதமலரில் இருந்து வேதம் கற்றவன் . வினை அறுக்கும் சூட்சமம் கற்றவன். என் கரங்கள் வலிமையானவை. எனை நம்பியவர்கள் தோற்பதில்லை. நம்பிக்கை கொண்டு என் நாமம் சொல்பவர்கள், நிச்சியம் தன்னை உணர்வார். நான் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பேன் , என்றும் , என்றென்றும். தை பிறந்து , தையல் மலர்ந்து , உன்னில் மலர்வாய் நீ . தட்ஷியாணத்தில் துயர் கடந்தாய். உத்திராயணத்தில் மலர்வாய். இது தேவர்களின் காலம். இந்த காலத்தின் நாயகன் உன்னை மலர வைப்பேன். ஜனவரி 17 - முதல் உன் நோய், துன்பம், வறுமை படிப்படியாக குறையும். என் சொல் சத்தியம். என் அன்பிற்கினிய தந்தை யாகவா, என் பாசமிகு அன்னை வசியா துணையோடு , உங்களை (தர்மாக்களை) என்றும் காப்பேன். பயப்படாதே !!! எப்போதும் துணை இருப்பேன் . 111 காலங்களை வென்றவன். நான் இநன்யா ......

Wednesday, January 11, 2017

நான் அளவம் அல்ல ! நான் கணவம் ! சகுடத்தை போல் இரு ! தறி கெட்டு போகும் உன் மனதை நிர்மூலமாக்கு !

Inanya Maha Munivar
12-01-2017
நான் அளவம் அல்ல ! நான் கணவம் ! சகுடத்தை போல் இரு ! தறி கெட்டு போகும் உன் மனதை நிர்மூலமாக்கு !
பற்று
என்னில் எச்சிலன் ஏமாறமாட்டான் ! என்னை மதிப்பவன் தன்னில் மலர்வான் ! மிதிக்க பார்க்க நினைத்தால் வளைக்க பார்க்கும் விதி ! எதில் பற்று வைத்தாலும் உனக்கு துபம் தான் ! உன் பற்று (உயிர்) எற்றத்தான் போகிறது. எற்றி பிழைக்கும் மானிடன் இறுமாந்து கிடக்கும் மனம். இடையில் சதிராட்டம் போடும் விதி.
எதை அடக்கி எதை அடைந்தாய் ? இங்கே நிகரற்றவன், தன் நிலை மறந்தவன், எனைத் தவிற எவருமில்லை !
வக்கற்ற பேச்சில் வசைபாடும் மனிதம் தான் இங்கு கர்ம கூட்டமாக அலைகின்றது. துன்பம் தாள முடியாமல் இங்கே துயர்படுகின்ற உயிரே மிக அதிகமாக போகிறது.
கடவுளே இல்லை என்று இங்கே பிதற்றி காடுமேடாய் அலைவான். துன்பத்தை போக்க திராணி இல்லாமல் துயர்படுவான். ஆணும், பெண்ணும் பேசி அன்றே மணமுடிப்பான். கணவம் இருக்கும் ஊரில் இருக்க ஆசைப்படுவான். பெண் உயர்வாள். ஆண் அடிமையாகி ஆணந்தம் தொலைப்பான். ஆளும் அரசாட்சி எல்லாம் பெண்ணே ஆள்வாள் !
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா பெருநாடுகளை ஞானப் பெண்கள் ஆள்வார்கள். ஆதிக்கம் நிறைந்த யுகத்தில் ஆளும் வல்லமையையும் வாழும் வல்லமையையும் கடவுள் தருவான் ! காட்டில் உள்ள மிருகங்கள் ஊருக்குள் வந்து உருக்குலைக்கும். பெருங்காற்றில் பெரு மரங்கள் வீதியை ஆக்கிரமிக்கும். மனிதன் கட்டிய உயர் கோபுரங்கள் சீட்டு கட்டு போல சரிந்து போகும். மதம் பிடித்து யானை கூட்டம் மனிதனை மண்ணோடு மண்ணாக புதைக்கும்.
யுகத்தில் இருக்கும் மனிதர் எல்லாம் இன்முகம் இல்லா இல்லத்தில் இல்லாமல் தெருவில் நிற்பான். பற்றை அறியாதவன், பற்றில்லா வாழ தெரியாதவன் பரிதவிக்க நான் கண்டேன் ! நான் இறுமாந்து அலைவேன் ! ஆணந்த கதியில் ஆயுள் நோக்குவேன் !
உன் முகம் பார்க்க ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது. உன் உயிர் நிலை அறிய ஒரு நல் குரு எனும் கண்ணாடி தேவை. அதை தேடி அடைய முயன்று முடிவை உணர் ! உன் முன்னால் பார்க்க குருவும், உன் பின்னால் பார்க்க கடவுள் என்ற காலக் கண்ணாடியும் தேவை. அதை அடைய பற்றை துற ! பற்றை (உயிரை ) எற்றவிடாதே !
உன் பார்வை எல்லாம் நல் குருவை நோக்கி இருக்கட்டும். கடவுளை, குருவை நீ நினைத்தவுடன் உன் கண்ணில் நீர் வருகிறதோ அப்போதே நீ உணர்ந்துவிட்டாய் என்ற அர்த்தம் ! இது தான் பற்றில்லா உணர்தலின் வெளிப்பாடு !
நீ தேடும் நிம்மதி வெளியில் இல்லை ! கோயிலெல்லாம் அரவமும், ஆமையும் புக கண்டேன். எருக்கும், செறுக்கும் அங்கே முளைக்க கண்டேன்.
என் உயிர் எப்போதும் ஆணந்த நிலையிலே இருப்பதை அறிவாயோ நீ ?
எத்தனெல்லாம் சித்தனாகி மூடர் பின்னால் செல்வான். மூச்சுக் காற்றில் நிம்மதி தொலைக்க கண்டேன். பொய்யான உலகில் பொய் உடலை வைத்து பொய்யனைப் போல் வாழ்கின்றாய், பெய்யென மழை போல் அல்லாமல் !
அறியாமை எனும் பற்றை அரி ! அரி என்றால் உணர் என்று அர்த்தம் !
நல்ல ஆலோசனைகளை புரிந்து கொள்ள முடியாத முட்டாளுக்கு சொன்னால் துன்பம் தான் கொடுப்பான். எப்போதும் கடவுளை துணை கொள் ! உனக்கு நல்லது செய்ய நினைக்கும் குருவை நாடு ! பற்றில்லா, பாசமில்லா வாழும் குருவை தேர்ந்தெடு ! உனக்கு வாழ்வின் வெளிச்சம் எப்போதும் உண்டு !
நான் பற்றாய் உன்னுள் இருக்கிறேன். நீ புற உலகில் பற்றில்லாமல் வாழ பழகு ! பற்றை நல்விதமாக எற்ற வைக்கலாம் !
உன்னை தாங்கி பிடிப்பவன் நான் !
நான் இநன்யா !

Saturday, January 7, 2017

சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !

சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையைக் கடைபிடிப்பவர்கள.மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
எவ்வகையிலாவது சாதி சமய மத வாதிகள் நம்மை இழுத்து மாற்றப் பார்ப்பார்கள்.
தவம்.யோகம்.தியான்ம்.காயகல்பம்.குண்டலினி யோகம்.ஈஷாயோகம்.காயத்திரியோகம்.கர்மயோகம்.ராஜயோகம்..போன்ற தேவை அற்ற பயிர்ச்சிகளை சொல்லித் தருகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.அவற்றில் சிக்கிவிடக்கூடாது.
மேலும் சாகாக்கல்வித் சொல்லித்தருகிறோம்.என்றும் ஏமாற்றுவார்கள்.
தீட்ஷைத் தருகிறோம் என்றும் ஏமாற்றுவார்கள்.
சாகாமல் இருக்க காயகல்பம் தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.
என்றும் இளமையோடு இருக்க மருந்து தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.
குரு உபதேசம் வேண்டும் என்பார்கள்.குரு இல்லா வித்தை குருட்டு வித்தை என்பார்கள். குரு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பார்கள். இப்படி பல வகையில் நம்மை ஏமாற்றுவார்கள்.
எதையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது.
நமக்கு வேண்டியது :-
வள்ளலார் சொன்ன உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் போதும் எல்லா நன்மைகளும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்வார்.
உண்மை ஒழுக்கம் உண்மை தயவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.உண்மை கருணை. அவசியம் வேண்டும்.
மேலும் நம்மால் முடிந்த அளவு ஜீவ காருண்யம்.செய்ய வேண்டும். இடைவிடாது சிற்சபை இடத்தில் மனதை செலுத்தி வர வேண்டும்.சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடம்.
அதாவது உச்சிக்கும் கீழே.உள் நாக்கிற்கும் மேலே.மூலையின் மத்தியில்.அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியில் ஆன்மா என்னும் உள் ஒளி உள்ளது.அவற்றில் மனதை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும். அதுதான் சுத்த சன்மார்க்க வழிபாடு.அதுதான் சுத்த சன்மார்க்க தியானம் என்பதாகும்.
இதைத்தான் வள்ளலார் உண்மை மார்க்கம் என்கின்றார்.
உபாய மார்க்கத்தை நம்பாதீர்கள்.உண்மை மார்க்கத்தை நம்பி கடைபிடித்து வாருங்கள்.ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார்.என்கின்றார்.
எனவே சமய மத வாதிகள் சொல்லுவதை எதையும் நம்பாதீர்கள்.எச்சரிக்கையுடன் இருங்கள்.
நமக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் குரு...திருஅருட்பா தான் வழிகாட்டும் கருவி....
திருஅருட்பா என்னும் கதவை திறந்து .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வு வாழ்வோம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

Wednesday, January 4, 2017

நான் பயக்ருத்தன் அல்ல. பயநாசனன் என்பதை மறவாதே ! வதுகையால் தான் உன் வாழ்வு. உன் தீர்மானம் ஏதுமில்லை !

Inanya Maha Munivar
05-01-2017
நான் பயக்ருத்தன் அல்ல. பயநாசனன் என்பதை மறவாதே ! வதுகையால் தான் உன் வாழ்வு. உன் தீர்மானம் ஏதுமில்லை !
தீர்மானம்
உன்னிடம் இருப்பது ஒன்று ! நீ அறியாத ஒன்று வெளியேயும் இருக்கிறது. அதை தான் கடவுள், இயற்கை என்று சொல்கின்றாய். அதை தான் ஞானம் என்று சொல்கின்றாய். இதை அறிந்து கொள்ள யாரும் முயலவில்லை.
நான் உனக்கு செல்வத்தை கொடுத்து சோம்பேறியாக்க நினைக்கவில்லை. நீ அறிந்து தேடும் செல்வமே உன்னை ஆணந்தமாக்கும் என்பதற்காக ! அதனால் தான் உன்னை உணர்ந்து அறிய முற்படு ! வெற்றியை நோக்கி போராடு ! தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உன் முயற்சி கல்லறை வரை இருக்கட்டும். நிச்சயம் வெல்வாய் !
அறிந்து நிலைக்கும் செல்வம், ஞானம் உனை மீண்டும் பிறவி இல்லா நிலமையை தரும். அதனாலே ஒழுக்கத்தை பிரதானமாக நிறுத்துகின்றேன் ! செய் துணிவென்ற மந்திரம் உன் முயற்சி தான். முயற்சி செய் ! நான் உனக்கு உதவியாக இருப்பேன். உன் பாவத்தை கரைப்பது என் வேலை. என் அறிவுக்கு தெரியாமல் எந்த உயிரும் மாண்டுபோவதில்லை.
பிறரை குறை கூறி திரிபவன் மடையன். தன் குறை நிவர்த்தி செய்கின்றவன் மனிதன். மேலே தீர்மானிக்கபட்டு தான் கீழே வருகின்றாய். இங்கே நீ எதுவும் தீர்மானிக்க முடியாது. உன் செயலினால் வரும் இன்ப துன்பங்களை மனதில் வைக்காதே ! வெற்றியோ, தோல்வியோ அதை பற்றி சிந்திக்காதே ! முயற்சி செய்து முன்னேறும் வழியில் சென்று கொண்டே இரு ! வெற்றி, தோல்வி உன் செயல் தான் நிர்ணயிக்கின்றது. ஆதலால் எதையும் சரிவர ஆசையாய் , அன்பாய் செய் !
சுய நலத்தோடும், தன் ஆசை நிறைவேறவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்பவன் எதையும் பெறுவதில்லை. நீ கேட்காமலே கடவுள் தருவார்.
உன்னிடமே எல்லாம் இருக்கின்றது. முதலில் உன்னை தேடு ! நான் உபதேசம் பண்ண வரவில்லை. என் முகத்தை உனக்கு காண்பித்து, ஆசிரமம் கட்டி, விளம்பர பலகை வைத்து உன்னை வரவேற்க தயாராக இல்லை. உணர முயல்பவன் எங்கிருந்தாலும் என்னை தேடி வருவான் ! என்னை முழுமையாக உணர்ந்தவன், தன்னை வென்று பிறருக்கும் நல்வழி காட்டுவான் !
என் கடையில் ஞானம் உண்டு. அதை தர காத்திருக்கின்றேன். இங்கே உழைக்காமல் ஓசுக்காக அலைகின்றான். உபாயியாக திரிகின்றான் !
நீயே செய்தாய் , நீயே திண்றாய். நீ தான் அனுபவிக்க வேண்டும். சீற்றம் தாளாமல் திக்கு தெரியாமல் விழப்போகின்றன கர்மாக்கள் ! கர்மாக்கள் ஒருவரையும் விடப்போவதில்லை நாங்கள் !
யுகத்தை சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம் !
வீட்டை சரி செய்யாதவன் வீதியை சரி செய்ய தீர்மானிக்கின்றான். முடிவில் கரமாலமாக போகின்றது. சத்தியம், நிச்சயமாக தர்மாக்களை இலகுவாய் வாழ வழி செய்தாகிவிட்டது. இனி தர்மாக்கள் வாழும் !
உன் எண்ணம் , உன் சொல் உன்னை தீர்மானிப்பதில்லை. உன் செயல் தான் உன்னை தீர்மானிக்கிறது . இப்படி தான் வாழ வேண்டும் என்று மனிதன் தீர்மானிக்கின்றான். ஆனால் விதி வேறொரு பாதையில் பயனிக்கின்றது.
துன்பங்கள் நிறைந்த வாழ்வில் கடவுளை தேடு ! உன்னைக் கடவுளிடம் ஒப்புவித்து வாழ கற்றுக் கொள் ! கடவுள் தீர்மானிக்கும் வாழ்வு பேரின்பமாக இருக்கும் ! பெரு வாழ்வாக இருக்கும் !
புத்தி இல்லாதவன் தான் கடவுளை மறுப்பான். புத்தி உள்ளவன் பேதலிக்க மாட்டான். எல்லோருக்கும் வாழ்வும், சாவும் சமமாக தீர்மானிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கோணம் தான் ! ஒவ்வொருவர் வாழ்வும், தாழ்வும், சாவும் தீர்மானிப்பது கடவுளே ! பிறரின் வாழ்வை பார்த்து சிந்திக்காமல், உணராமல் பொறாமையோடு மனிதன் வாழ்கின்றான்.
தன் நிலை அறிந்தால் இங்கே கடவுள் இல்லை என்று பிதற்றமாட்டான். விதை நெல்லை தூவி மகசூலை தீர்மானிப்பது நீயல்ல. உனக்கு இட்ட கட்டளை விதையை விதைத்து அதை பக்குவமாக பாதுகாப்பது தான். முடிவை தீர்மானிப்பது கடவுளே.
பிறருக்கு துன்பம் கொடுக்க தீர்மானிக்காதே ! அதுவே உனக்கு திரும்ப வரும். சுகாசி, வால் உரைப்பு ஒரு விரல் நுணி அளவு சாப்பிட கற்று கொள். உன் உடல் நோயில்லாமல் திர்மானிக்கப்படும் !
உன் வாழ்வை அழகாக்க நான் தீர்மானித்துவிட்டேன். தர்மாக்கள் நலமுடன் வளமுடன் வாழ தீர்மானித்துவிட்டேன் ! உணரடா ! உண்மையில் நன்மை நானடா !
உன் வாழ்வை தீர்மானிக்கும் வல்லமை உள்ளவன் நான் !
நான் இநன்யா !