இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; இதோ வந்துவிட்டேன் உன் அருகாமையில், என் சிங்கக் குட்டியே , வீரியமிக்க ஞான குழந்தையே , எழுந்திரு !
நீ ஆயிரம் வலிமைமிக்க அரிமா !
52 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
இதோ வந்துவிட்டேன் உன் அருகாமையில், என் சிங்கக் குட்டியே , வீரியமிக்க ஞான குழந்தையே , எழுந்திரு !
நீ ஆயிரம் வலிமைமிக்க அரிமா !
ஏறு (சிங்கம்) போல வெகுண்டெழு ! ஏர் போல கர்மத்தை கிழித்தெடு !
ஞானமுள்ள பிள்ளை நீ ! பலமிக்க சிங்கம் நீ ! எழுந்திரு மகனே ! உன் தகப்பன் உனக்கு பாயும் வித்தையை சொல்லி தருகிறேன் ! குருவாய் இருந்து நான் கற்றுத் தருகிறேன். நீ கர்ஜித்து எழு ! காலம் குறைவாக உள்ளது.
என் சிங்கமே, எழுந்திரு ! என் கரங்கள் காத்திருக்கிறது ! உனக்கு வேட்டையாடும் வித்தையை சொல்லி தருவதற்கு ! ஏன் உறக்கமடா ?
உன்னை தட்டி எழுப்பவே இந்த யுகம் வந்தேன். இந்த இநன்யாவின் பின்னால் ஒரு ஞான கூட்டமும் , யானை பலமுள்ள கூட்டமும், சிங்க கூட்டமும் உருவாகும். என் இறுதி பிறவியான இந்த பிறவியில் அது உலகமெல்லாம் கர்ஜித்து பாயும் ஒரு ஞான வழித்தோன்றல் மூலமாக ! அது உலகமெல்லாம் ஞான விதையை தூவும் ! நீயும் அதில் ஒருவனாக இரு ! இனி எதற்கும் அஞ்சாதே ! எதற்கும் பயப்படாதே ! உனக்கு உலகை புரட்டி போடும் வலிமையை சொல்லி தருகிறேன். வேதம் உனக்குள் உருவாகும் !
வரும் மார்ச் மாதத்தில் வானில் ஒரு நீண்ட வால் நட்சத்திரம் உருவாகும் ! அது உலகத்தை உற்று நோக்க வைக்கும் ! நான் மார்ச் மாதத்திலிருந்து ஞான தீட்சை தருவேன். அது மானச தீட்சையாகும். உலகமெல்லாம் நன்மக்களை தேர்ந்தெடுத்து ஞான வித்தையை சொல்லிக் கொடுப்பேன். அந்த ஞான குலங்கள் சிங்கத்தை போல பாயும், அசுரர்களை கர்ஜித்து குதறி தள்ளும் ! இது வேடிக்கை பேச்சல்ல ! நான் சொல்வது சொப்பன கருத்துமல்ல. கற்பனை கருத்துமல்ல. சத்ய கருத்து !
இந்த யுகம் இனி மாறும் ! அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பிக்கும். இயற்கை மாற்றங்களும், பேரிடர்களும், சொல்ல வொனா வேதனைகளும், இதன் தாக்கம் உலகத்தையே புரட்டி போடும். அமெரிக்கா இந்தியாவின் ஸ்பரிஷத்தை எதிர்பார்க்கும். தமிழ்நாட்டிலிருந்தே ஞான கூட்டங்களும், சிங்க கூட்டங்களும் எழுந்து உலகத்திற்கு ஞான பாதையை அமைத்து கொடுக்கும். சீனா, ஜப்பான் இன்னும் பிற நாடுகளிலிருந்து சித்தர்கள், ஞானிகள் இந்த தமிழ் மண்ணில் குடியேறி ஞான குலங்களுக்கு வழிகாட்டுவார்கள் !
பெண் என்ற சிம்மம் இனி புயலாக சீறும் ! அந்த ஞான மலர்கள் உலகத்தை புரட்டி போடுவார்கள். மூர்க்கமான ஞான தெளிவை தருவார்கள். எதற்கும் யாருக்கும் அஞ்சமாட்டார்கள்.
இந்த இநன்யா அனைவருக்கும் ஆயிரம் ஆயிரம் யானைகள் பலமும் வலிமை மிக்க சிங்கங்களின் பலமும் தருவேன். தமிழன் உலகை வழி நடத்தி செல்லும் நல் பாதையை உருவாக்கிவிட்டேன் ! இனி எதற்கும், யாருக்கும் அஞ்சமாட்டார்கள் என் ஞான குழந்தைகள் ! என்னை உணர்ந்தவரகளை மரணம் கண்டு அஞ்சும் இனி !அசுரவர்க்கங்களை களை எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.
இந்த இநன்யா அனைவருக்கும் ஆயிரம் ஆயிரம் யானைகள் பலமும் வலிமை மிக்க சிங்கங்களின் பலமும் தருவேன். தமிழன் உலகை வழி நடத்தி செல்லும் நல் பாதையை உருவாக்கிவிட்டேன் ! இனி எதற்கும், யாருக்கும் அஞ்சமாட்டார்கள் என் ஞான குழந்தைகள் ! என்னை உணர்ந்தவரகளை மரணம் கண்டு அஞ்சும் இனி !அசுரவர்க்கங்களை களை எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.
என் சிங்கங்களே, என்னோடு வாருங்கள் !
உருவாக்குவோம் நல் பாதையை ! பலமுள்ள சேனையே வா ! என் வழியில் வருபவன் இனி எதற்கும் பயப்படமாட்டான். எதற்கும் அஞ்சமாட்டான். மரணத்தை துச்சமாக மதிப்பான். ஞான செறுக்குடன் வலம் வருவான். உறங்கி கொண்டிருக்கும் சிங்கங்களே, நீங்களும் எழுந்திருங்கள். இந்த ஞான கூட்டத்தில் சேர்ந்து உலகை நல் வழிப்படுத்துங்கள் !
உருவாக்குவோம் நல் பாதையை ! பலமுள்ள சேனையே வா ! என் வழியில் வருபவன் இனி எதற்கும் பயப்படமாட்டான். எதற்கும் அஞ்சமாட்டான். மரணத்தை துச்சமாக மதிப்பான். ஞான செறுக்குடன் வலம் வருவான். உறங்கி கொண்டிருக்கும் சிங்கங்களே, நீங்களும் எழுந்திருங்கள். இந்த ஞான கூட்டத்தில் சேர்ந்து உலகை நல் வழிப்படுத்துங்கள் !
இந்த இநன்யா உனக்கு எப்போதும் துணை இருப்பேன் என்பதை மறவாதே !
இனி மறைந்திருந்து தாக்குவார்கள் என் சிங்கங்கள் ! பிடறி தெறிக்க அசுரவர்க்கங்களை ஓட ஓட துரத்துவார்கள். இனி தர்ம குலங்கள் ஜெயிக்குமடா ! இந்த இநன்யா வந்த காரணம் எல்லாம் சரி செய்தாகிவிட்டது.
வீரியமிக்க என் அன்பு மகனே, எழுந்திரு !
என் பாதை சத்ய பாதை ! இதில் வருபவன் என்றும், எப்போதும் என் அடைகாப்புக்குள் இயங்குவான். என் வழியில் வருபவன் யாரும் தோற்பதில்லை. இனி உலகை சதிராடுவான். என் வேதத்தையும் என் வார்த்தையையும் உள்வாங்கியவன் எல்லாம் உலகத்திற்கு ஞான தீட்சை கொடுப்பான். சத்திய பாதை எதுவென்று உலகத்திற்கு சொல்வான் !
என் இளம் சிங்கங்கள் கடல் அலைகளாய் ஆர்பரித்து சுனாமி பேரலை போல உலகை புரட்டி போடுவார்கள் !
“திருந்திவிடுங்கள் ! இல்லை திருத்தாமல் விட மாட்டேன் !” என்ற ஞான கோஷத்தை பறைசாற்றுவார்கள். நோய், பிணி, துன்பம் இனி என்னை பின் தொடர்பவர்களிடம் இருக்காது ! என்னை புரிந்தவன் மரணத்தையே எதிர்ப்பான். இந்த உலகின் கர்மங்களை துவஷம் செய்வான். இந்த தகப்பன் கைதட்டி ஆரவாரம் செய்வேன். என் ஞான குழந்தையை ஜெயிக்க வைத்து நான் ஆனந்த கூத்தாடுவேன்.
என் ஞானக் குழந்தைக்கு இலக்கு எதுவென்று புரிய வைப்பேன் ! பாய்ந்திருந்து தாக்கும் பலமுள்ள சிங்கங்களாக இனி மாறுவான். என் சத்திய வழியில் நடப்பவன், எதிரிகளை துவஷம் செய்வான். இந்த ஆத்மத்தின் தலைவன் முழு பொறுப்பையும் ஒப்படைப்பேன் !
என் தர்ம குலமே, ஞான குலமே எழுந்திரு ! உறங்கிவிடாதே ! நின்று கொண்டே தூங்கினாலும் புரவியை போல எப்போதும், எதற்கும் ஓட தயாராக இரு !
உன் பாதத்தில் சொர்க்கம் காத்திருக்கிறதடா !
பாயும் வித்தையையும், பதுங்கி அழிக்கும் தன்மையையும் சொல்லி தருவேன் உனக்கு ! உன்னையும் வெல்ல வைப்பேன் ! வா என் செல்ல மகனே ! இமயத்தை அசைக்கும் வித்தையையும் உனக்கு சொல்லி தருவேன் !
என் சத்தியமிக்க வார்த்தைகள் இனி ஜெயிக்குமடா !
நான் 111 கோடி தடாய முனிவர்களுடன் இந்த யுகத்தை சரி செய்யவே வந்தேன் !
நான் 111 கோடி தடாய முனிவர்களுடன் இந்த யுகத்தை சரி செய்யவே வந்தேன் !
இனி எல்லாம் மாறும் ! மாற்றுவேன் !
நான் வென்றேன் ! நான் இநன்யா !
No comments:
Post a Comment