Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, December 23, 2022

ஆதிசங்கரர் அருளிய சௌந்தரிய லஹரி 01 To 100,

ஆதிசங்கரர் அருளிய சௌந்தரிய லஹரி 01 To 100,

 

1. எல்லா நன்மைகளும் பெற

பீஜம் க்லீம்.                                                             

 

ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி

அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

 

பொருள்: அன்னையே! பராசக்தியான உன்னுடன் பரமசிவன் சேர்ந்திருந்தால்தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (ஆக்கல், காத்தல்,அழித்தல்) என்னும்  முத்தொழில்களையும் செய்ய முடியும். அவ்வாறில்லையேல் அவரால் அசையவும் இயலாது. எனவே ஹரி, ஹரன், பிரம்மன் ஆகியோர் அனைவரும் போற்றித் துதிக்கும்  பெருமை பெற்றவளான உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவனால் எப்படி முடியும்?

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்தால், தடைகளெல்லாம் நீங்கி, எடுத்த காரியம்  அனைத்தும் நிறைவேறும். எல்லா நன்மைகளையும் பெறலாம்.

 

2. ஜடப்பொருள்களால் தடை நீங்க ஸர்வ லோக வச்யம்

ஸகல கதரிய ஸித்தி - பீஜம் ஹ்ரீம்

 

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்

விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா-நவிகலம்

வஹத்யேநம் ஸெளரி: கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்                                         

ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம்

 

பொருள்: தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலக ங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது  தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் ஞானம், செல்வம், புத்ர ஸந்ததி, பதவி, புகழ் முத லிய ஸகல நன்மைகளும் உண்டாகும். ஜடப்பொருள்களால் ஏற்படும் தடைகள் நீங்கும்

 

3. வேதம் சாஸ்த்ரம், ஸகல வித்யைகளும் கைகூட

பீஜம் ஸ்ரீம்

 

அவித்யாநா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ

ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ

தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜந்மஜலதௌ

நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி

 

பொருள்: அம்பிகையே! உன் திருவடித் துகள் அஞ்ஞானிகளின் உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கும் கதிரவனின் உதயத் தீவைப் போலும், விவேகமற்ற மூடர்களுக்கு  ஞானம் என்னும் கற்பக விருட்சத்திலிருக்கும் பூங்கொத்தின் மகரந்தத்தைப் போலும், ஏழையருக்கு நினைத்ததைத் தரக்கூடிய சிந்தாமணியைப் போலும், பிறவிக்கடலில்  மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு, வராகமாய்த் தோன்றிப் பூமியைத் தாங்கிய விஷ்ணுவின் கோரைப் பல்லைப் போன்றும் விளங்குகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் வேதங்களிலும், சகல கலைகளிலும்  வல்லமை உண்டாகும். செல்வம் உண்டாகும்.

 

4. வியாதிகள் நீங்க, ராஜபோகத்தில் இருக்க - பீஜம் தும்

 

த்வதந்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:

த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா ஸமதிகம்

ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ

 

பொருள்: அம்பிகையே! உன்னைத் தவிர, மற்ற தேவர்களெல்லாம் அபயம், வரதம் என்னும் ஹஸ்த முத்திரைகளைக் காட்டுகிறார்கள். நீ ஒருவள் தான் அந்த அபிநய ங்களைச் செய்வதில்லை. ஏனென்றால், உன்னுடைய திருவடிகளே பயத்திலிருந்து காக்கின்றன. அவைகளே, அவரவர் விரும்பியதற்கு அதிகமாகவே வரம் அளித்து  விடுகின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் எல்லா விதமான நோய்களும், மற்ற பய ங்களும் நீங்கும். பட்டம், பதவிகள் கிடைக்கும்.

 

5. பகை நீங்கி நட்பு வளர, ஜர்வஜன வச்யம் - பீஜம் டம்

 

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜந-ஸெளபாக்ய-ஜநநீம்

புரா நாரீ பூத்வா புரரிபுமபிஷோப-மநயத்

ஸ்மரோசபி த்வாம் நத்வா ரதி-நயந-லேஹ்யேந வபுஷா

முநீநா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

 

பொருள்: சகல சௌபாக்கியங்களையும் வணங்குவோருக்கு அருளும் தேவி! உன்னை முன்னொரு சமயத்தில் பூஜை செய்து தான், விஷ்ணு பெண் உருவம் கொண்டு, மு ப்புரங்களை எரித்த சிவனையும் மோகமுறச் செய்தார். மன்மதனும் உன்னை வணங்கித்தான், ரதி தேவியே கண்டு மயங்கும் அளவிலான எழில் பொங்கும் வடிவத்தைப்  பெற்று, மகான்களையும், முனிவர்களையும் தனிமையில் மதிமயக்கம் கொள்ள வைக்கும் அளவில் சக்தியைப் பெறுகிறான் என்பது உறுதி.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் ஆண், பெண்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து  வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்

 

6. கணவன் மனைவி பிரச்சனை தீர. ஸந்தான பாக்கியம்

பீஜம் க்லீம் க்லீம் க்லீம் ஸாத்யம் ஸ்ரீம் க்லீம் க்லீம் க்லீம்

 

தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா;

வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதந-ரத;

ததாப்யேக; ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்

அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மநங்கோ விஜயதே

 

பொருள்: பனிமலையான கயிலையங்கிரியை ஆள்பவனின் மகளே! மன்மதனின் வில், மலர்களாலானது. நாண் தேனீக்களால் ஆனது. ஐந்து பாணங்களும், மலர்கள்,  மந்திரி வஸந்தருது, நீ போர் செய்யப் பூட்டிவரும் தேர், தென்றல் காற்று. அப்படியிருந்தும் உடலில்லாத மன்மதன் தனியாகவே, உன் கடைக்கண் பார்வையால் உன் பூ ரணமான

கிருபையைப் பெற்று உலகனைத்தையும் வெற்றி பெறுகிறான்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தம்பதிகளிடையே ஒற்றுமை  உண்டாகும். ஆண்மையற்றவனுக்கும் ஆண்மையுண்டாகி, புத்திர சந்ததியும் ஏற்படும்.

 

7. எதிரிகளை வெற்றி கொள்ள,

பீஜம் ஓம் ஐம் க்லீம்

 

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தந-நதா

பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதநா

தநுர்-பாணாந் பாஸம் ஸ்ருணி-மபி ததாநா கரதலை:

புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புருஷிகா

 

பொருள்: அம்பிகை, சலங்கைகள் ஒலிக்கும் தங்க ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் கொண்டு சற்று வணங்கிய  வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்; சரத் காலத்தில் தோன்றும் பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவள். கைகளில் கரும்பு வில், மலர் பாணம், பாசம்,  அங்குசம் ஆகியவற்றை ஏந்தியிருப்பவள். முப்புரங்களையும் எரித்த ஆச்சர்யமான சிவனுடைய அகம்பாவ வடிவினளுமாவாள். இத்தகைய பராசக்தி எங்களுக்கு முன் னே எழுந்தருளிக் காட்சியளிக்கட்டும்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபம் செய்தால் அரசாங்க காரியங்கள் அனைத்தும் நிறை வேறும். பகைவரை வெல்லலாம்.

 

8. ஸம்ஸார பந்தம் நீங்க.காராக்ரஹ தோஷ நிவ்ருத்த - பீஜம் ஓம் ரம் ரீம் ரூம்

 

ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே

மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே

ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ-பர்யங்க-நிலயாம்

பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த-லஹரீம்

 

பொருள்: அமுதக் கடலின் மத்தியில் கற்பக விருட்சங்கள் அடர்ந்த தோப்புகள் நிறைந்த ரத்தினத் தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த வனத்தினிடையே அமைந்துள்ள சிந் தாமணிகள் நிறைந்த அழகிய மாளிகையில், மங்கள வடிவமுள்ள சிம்மாசனத்தின் மீது பரமசிவனின் மடியில் அமர்ந்துள்ள ஞானானந்தக் கடலின் அலை போன்ற  உன்னை, புண்ணியவான்களான சிலரே வழிபட்டு வருகிறார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் சம்ஸார பந்தங்கள் நீங்கும்;  சிறைவாச பயம் நீங்கும்; எண்ணியவை நிறைவேறும்.

 

9. வியாதிகள் நீங்கி உடல் நலம் பெற, பிரிந்தவர்கள் ஒன்று

சேர, பிரிந்து வேறு தேநம் சென்றவர்கள் திரும்பிவர.

பீஜம் ஓம் யம் இம் யம் ஊம் யம் ஸாத்யம் ஆம் க்லீம்

 

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்

ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத-மாகாஸ-முபரி

மநோசபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்

ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

 

பொருள்: அம்பிகையே! மூலாதாரத்தில் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்தில் நீர் தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னி தத்துவத்தையும், இருதயம் என்னும்  அனாஹதத்தில் வாயு தத்துவத்தையும், புருவங்களிடையே ஆக்ஞாவில் உள்ள மனஸ் தத்துவத்தையும், இவ்வாறாக ஸுஷும்னா மார்க்கத்திலுள்ள எல்லாச் சக்கர ங்களையும் ஊடுருவிப் பிளந்து சென்று மேலே ஸஹஸ்ராரமாம் ஆயிரம் இதழ்களைக் கொண்ட ரகசியமான இடத்தில் உன் கணவனான பரமசிவனுடன் நீ களிப்புற்றிரு க்கிறாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்தால், விட்டுப்பிரிந்த பந்துக்கள் வந்து சேருவர். அவர்கள் சென்ற திக்கை நோக்கி  ஜபம் செய்ய வேண்டும். பஞ்ச பூதங்களும் சுவாதீனமாகும்.

 

10. தியானம் வெற்றி பெற. வீர்ய விருத்தி, தேஜஸ் நல்ல முறையில் அடைய - பீஜம் ஓம் ஐம் க்லீம் ஹ்ம் க்லீம்

 

ஸுதாதாராஸாரைஸ்-சரணயுகலாந்தர்-விகலிதை:

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹாஸ:

அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்

ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

 

பொருள்: தேவியே, உன் திருவடிகளிடையே பெருகும் அமிர்த தாரையின் வெள்ளத்தால் (பாய்ச்சலால்) ஐம்பூதங்களான உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை  நனைக்கிறாய். பிறகு அமிர்த கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான மூலாதாரத்தை அடைந்து, பாம்பைப் போல வட்ட வடிவாக உன்  உடலைச் சுருக்கிக் கொண்டு தாமரைக் கிழங்கு போன்ற பகுதியில் சிறு துவாரமுள்ள மூலாதார குண்டத்தில் யோக நித்திரை புரிகிறாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் சரீர சுத்தியுண்டாகும். ஆண்மையற்றவருக்கு  ஆண்மையும், மாதவிடாய் சரியாக இல்லாதவர்களுக்குச் சரியாதலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்தலும் ஏற்படும்.

 

11. சந்தான(குழந்தை) பாக்கியம் பெற

ஞானம் உண்டாக- பீஜம்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி

ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:

சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-

த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:

 

பொருள்: நான்கு சிவசக்கரங்களாலும், சிவசக்கரங்களிலிருந்து வேறுபட்ட சக்தி சக்கரங்கள் ஐந்தினாலும் ஒன்பதாய் உள்ளதும், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவ ங்களுடன் கூடியதுமான உன் இருப்பிடமான ஸ்ரீ சக்கரத்தின் கோணங்கள் எட்டுத் தளம், பதினாறு தளம், மூன்று மேகலை வட்டங்கள், மூன்று பிரகாரக் கோடுகள் ஆகிய வற்றுடன் கூடி நாற்பத்து நான்கு கோணங்களாக அமைந்துள்ளன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் புத்திர சந்ததி இல்லாதவர்களுக்கு ஸத்புத்ர  லாபம் உண்டாகும்.

 

12. கவிதை உண்டாக, ஊமைத்தனம் நீங்கி நல்ல  கல்வி, அறிவு உண்டாக பீஜம் ஓம் ஓம் ஐம் ஐம் ஸௌ: ஸௌ:

 

த்வதீயம் ஸெளந்தர்யம் துஹிநகிரிகந்யே துலயிதும்

கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய:

யதாலோகௌத்ஸுக்யா-தமரலலநா யாந்தி மநஸா

தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிஸ-ஸாயுஜ்யபதவீம்

 

பொருள்: பனிமலையரசனின் புதல்வியே! உன் உடலழகை வர்ணிப்பதற்கு கவிதையில் வல்லவர்களாலும், பிரம்மா போன்றவர்களாலும் கூட இயலாது. அழகுக்கு சரியான உவமை கூற எப்படியெல்லாமோ முயன்று பார்த்தும் அவர்களால் முடியவில்லை. அழகில் சிறந்த தேவர் உலக மகளிரும் பரமசிவனின் கண்களை கொண்டுதான்  அதைப் பார்க்க முடியும் என்று நினைத்து அடைதற்கரிதான பரமசிவ ஸாயுஞ்ய பதவியை மானசீகமாய் அடைகிறார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து, பின் அந்த ஜலத்தை அருந்தச் செய்தால் ஊமையும் பேசுவான். படித்தவன் பேச்சில் வல்லவனாவான். கவிதையும் புனைவான்.

 

13. நல்ல மனைவி அமைய, ஸ்த்ரீ வச்யம்.

பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் ஸாத்யம் க்லீம் க்லீம் க்லீம்

 

நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்

தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி ஸதஸ:

கலத்வேணீபந்தா: குசகலஸ-விஸ்ரஸ்த-ஸிசயா

ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:

 

பொருள்: அம்பிகையே! உன் கடைக்கண் பார்வையில் விழுந்த ஒருவனை, அவன் முதியவனாகவோ, குரூபியாகவோ, சிற்றின்பக் கேளிக்கைகளில் விருப்பமற்றவனாக வோ இருப்பினும், நூற்றுக்கணக்கான அழகிய இளம் மகளிர் வெட்கத்தை விட்டு ஆசையோடு அவனைப் பின் தொடர்ந்து ஓடிவருவார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் தார்மீக முறையில் தாம் விரும்பும் பெண்ணை  அடைவதற்கு ஏற்பட்ட தடைகள் நீங்கி அந்த ஸ்த்ரீ லாபம் ஏற்படும். (அதர்ம வழியில் முயற்சித்தால் விபரீத பலன்தான் கிடைக்கும்)

 

14. பில்லி, சூனியம் விலக, பசி, பிணி நீங்க தேஹ  ஆரோக்யம் பெற - பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் சௌ க்லீம் ஐம்

 

க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே

ஹுத்ஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே

திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந்-மநஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே

மயூகாஸ்-தேஷா-மப்யுபுரி தவ பாதாம்புஜ-யுகம்

 

பொருள்: தேவியே! பூமி தத்துவமாகிய மூலாதாரத்தில் 56, ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52, அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62, வாயு தத்துவமாகிய  அநாஹதத்தில் 54, ஆகாச தத்துவமாகிய விசுக்தியில் 72, மனஸ்தத்துவமாகிய ஆக்ஞையில் 64 என கிரணங்கள் உள்ளன. இந்த கிரணங்களுக்கும் மேலாக உள்ள  ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் நாட்டிலோ, வீட்டிலோ ஏற்பட்டிருக்கும்  பற்றாக்குறைகளும், கலவரங்களும் நீங்கி சுபிக்ஷமும் அமைதியும் ஏற்படும்

 

15. கவிதைகள் சொந்தமாக இயற்ற

பீஜம் ஓம் ஐம் ஸம் ஸம் ஸம் ஸம் ஸம் ஸம் ஸீம்

 

ஸரஜ்-ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம் ஸஸியுத-ஜடாஜூட-மகுடாம்

வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக கடிகா-புஸ்தக-கராம்

ஸக்ருந் நத்வா ந த்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே

மது-க்ஷீர-த்ராக்ஷா -மதுரிம-துரீணா: பணிதய:

 

பொருள்: அம்பிகையே! சரத்கால நிலவைப் போன்ற நிர்மலமான வடிவுடையவளும், சந்திரனுடன் சடைமுடியும் கிரீடமும் உடையவளும், வரத அபய முத்திரை, ஸ்படிக  மாலை, புத்தகம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியுள்ளவளுமான உன்னை ஒருமுறை வணங்கும் பக்தர்களுக்கு தேன், பால், திராட்சை ஆகியவை கலந்தாற் போன்ற  இனிய சொற்கள் ஏன் என் வசமாகி வந்து சேராது

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்தால் நல்ல கவிதைகள் இயற்றும் வல்லமையும், பரீட்சையில் வெற்றியும் ஏற்படும்  (ஜப முடிவில் ஜலத்தை  அருந்தவும்)

 

16. கல்வி, ஞானம் பெற.வேத சாஸ்ர அறிவு வளர, ஊமைதனம் நீங்கி வாக்கு ஸித்தி பெற - பீஜம் ஓம் வம் வம் வம்

 

கவீந்த்ராணாம் சேத: கமலவந பாலாதப-ருசிம்

பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா-மேவ பவதீம்

விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஸ்ருங்காரலஹரீ                                  

கபீராபிர்-வாக்பிர்-விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ

 

பொருள்: அம்பிகையே! கவிஞர்களின் உள்ளம் என்னும் தாமரை வனத்திற்கு சிவந்த கிரணங்களைப் பெய்யும் உதயசூரியனைப் போல் பிரகாசிப்பவளும், அதன்  காரணமாக அருணா எனப் பெயர் பூண்டவளுமாகிய உன்னைப் பணிந்து தொழும் சான்றோர்க்கு பிரம்மாவின் புத்திரியும், வாக்குக்குத் தெய்வமுமான சரஸ்வதி  தேவியின் அருளுடன் சிருங்கார ரசத்தின் வெள்ளத்தைப் போன்ற கம்பீரமான வாக்குவன்மை உண்டாகி சாதுக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் வேத வேதாங்க சாஸ்திர ஞானம் ஏற்பட்டு  சபைகளில் முதன்மையாக விளங்குவார்கள். பேய், பிசாசு பிடித்தவர்களுக்காக ஜபித்தால் அவை அகன்று ஓடி விடும்

 

17. ஸகல கலைகளிலும் வல்லமையுண்டாக

சாஸ்த்ர ஞானம்  பெற - பீஜம் ஓம் ஐம் ஐம் ஐம்

 

ஸவித்ரீபிர்-வாசாம் ஸஸிமணி-ஸிலா-பங்க-ருசிபிர்-

வஸிந்யா த்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்

வசோபிர்-வாக்தேவீ-வதந-கமலாமோத-மதுரை:

 

பொருள்: தாயே! நீ வசினி முதலிய எண்வகைச் சக்திகளுடன் கூடியிருப்பவள். அந்த சக்தி தேவியர் சந்திர காந்தக் கல்லைப் பிளந்தது போல் வெண்மைநிறப் பொலிவை  பெற்றவர்கள். இத்தகைய வாக் தேவதைகளுடன் கூடிய உன்னைச் சிந்தித்துத் தொழுபவர் யாராக இருப்பினும், அவர் சரசுவதி தேவியின் தாமரை மலர் போன்ற முகத்தின்  நறுமணம் மிக்கதும், பெருங் கவிஞர்களின் காவியப் படைப்புகளைப் போன்றதுமான சொற்சுவை நிரம்பிய காவியங்களைப் படைக்கும் வல்லமை பெற்றவர் ஆவார்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் சகல கலைகளிலும் வல்லமையும்,  வாக்குச்சாதுர்யமும், சபைகளில் பெருமதிப்பும் உண்டாகும்

 

18. ஸர்வ ஜன ஸ்த்ரீ வசியம், எழுத்து கலை வளர

பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் நமஹ

 

தநுச்சாயாபிஸ்-தே தருண-தரணி-ஸ்ரீ ஸரணிபிர்-

திவம் ஸர்வா-முர்வீ-மருணிம-நிமக்நாம் ஸ்மரதி ய:

பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வந ஹரிண-ஸாலீந-நயநா:

ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந கீர்வாண-கணிகா:

 

பொருள்: அம்பிகையே! இளஞ்சூரியனின் அழகினைப் போன்ற உன் உயிர் ஒளியால் பரவும் கிரணங்களால் தேவருலகத்தையும், பூவுலகத்தையும் இளஞ்சிவப்பு  வண்ணத்தில் மூழ்கியிருப்பதாய் எண்ணி யார் உன்னைத் தியானம் செய்கிறானோ அவனுக்கு, மருண்ட விழிகளுடன் மிரண்டோடும் மானின் விழிகளைப் பெற்ற ஊர்வசி  உள்ளிட்ட தேவமாதர் பலரும் வசமாவர்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் விரும்பிய பெண் வசியமாவாள். சித்திரக்  கலைஞன் ஜபிக்க, வல்லவனெனப் புகழ் பெறுவான், செல்வாக்கு உண்டாகும் என்பது நம்பிக்கை.

 

19. மூவுலகையும் வெல்லும் ஆற்றல். ஸகல ஜனவச்யம் அடைய பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்

 

முகம் பிந்தும் க்ருத்வவா குசயுக-மதஸ் தஸ்ய தததோ

ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மந்மதகலாம்

ஸ ஸத்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு

த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து- ஸ்தநயுகாம்

 

பொருள்: பரமசிவ பத்தினியே! பிந்துவை உன் முகமாக தியானம் செய்து கொண்டு அதன் கீழே இரு தனங்களையும், அதன் கீழே சிவனின் பாதி வடிவான உன் அருள்  சக்தி சொரூபத்தையும் கண்டு உன் க்லீம் என்ற பீஜ மந்திரத்தை எவன் அந்த அங்கங்களில் தியானம் செய்கிறானோ, அவன் உடனே காம சக்திகளை வசமாக்கிக்  கொள்ளுதல் எளிதாகும். சூரிய சந்திரர்களையே தனங்களாகக் கொண்ட மூவுலகின் வடிவான மடந்தையையும் மயக்கி விடுவான். இவ்வாறு தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே மாறி காம எண்ணங்களை வெல்வான்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தர்மமுறையில் விரும்பிய பெண் வசமாவாள்.  பேய் அகலும். மிருகங்கள் பணியும். அரசாங்கத்தில் செல்வாக்கு ஏற்படும்

 

20. விஷ பயம் நீங்க, பாம்பு ஜந்துக்கள் வசியமாக த்ருஷ்டி முதலான பொறாமைத்தனம் இல்லாமல் இருக்க - பீஜம் ஓம் க்ஷிப ஸ்வாஹா

 

கிரந்தீ-மங்கேப்ப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர-ஸிலா-மூர்த்திமிவ ய:

ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ

ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா

 

பொருள்: தாயே! உன் திருமேனியிலிருந்து கிரண வடிவில் அமிருத ரஸம் வெளிப்படுகிறது. இத்தகைய உன் திருக்கோலத்தை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி தியானம்  செய்கிறானோ அவன், பறவைகளின் அரசனான கருடனைப் போல், பாம்புகளின் கர்வத்தை அடக்குவான். அமிர்த நாடியோடு கூடியுள்ள தன் பார்வையாலேயே  ஜுரத்தால் வருந்துபவர்களைக் குணப்படுத்துவான். இம்மந்திரப் பாடல் சகலவிதமான விஷங்களையும் போக்குவதால் இதைப் பதினாறு முறைக்குக் குறையாமல்  சொல்லி தீர்த்தத்தையோ, விபூதியையோ அளித்து நோயை நீக்கலாம்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் தீராதென முடிவுசெய்த விஷ சுரம் நீங்கும். பூ ரான், செய்யான் முதலிய விஷ ஜந்துக்கள் தீண்டியதால் ஏற்பட்ட வியாதிகள் மற்றும் திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் தீங்குகளும் நீங்கும்

 

21. பகைமை நீங்கி வெற்றி உண்டாக,

வீரம் உண்டாக பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்

 

தடில்லேகா-தந்வீம் தபந-ஸஸி-வைஸ்வாநர-மயீம்

நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலாநாம் தவ கலாம்

மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேந மநஸா

மஹாந்த: பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

 

பொருள்: அன்னையே! ஆறு கமலங்களுக்கு மேலுள்ள ஸஹஸ்ரார கமலத்தில் அமர்ந்ததும், சூரியன், சந்திரன், அக்னி என்னும் உருவில் உள்ளதும், மின்னற்கொடி போன்றதுமான உன் கலையை, காமம் முதலிய அழுக்குகளும், அவித்யை முதலிய மயக்கங்களும் நீங்கப்பெற்ற தூய்மையான மனத்தினால் கண்டு தியானம் செய்யும்  மகான்கள், அலையலையாகப் பொங்கியெழும் பேரானந்தத்தை அடைவார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் எல்லோரும் மரியாதை செலுத்துவர்.  மற்றவர்கள் காரணமில்லாமல் தன் மீது பகைமை பாராட்டுதல் நீங்கும். எந்த விஷயத்திலும் தைரியமும் வெற்றியும் உண்டாகும்

 

22. இஹலோக ஸுகம் பெற ஸாம்ராஜ்யம் ப்ராத்தம்                                          

பீஜம் ஐம் க்லீத் சௌ : சௌ க்லீம் ஐம்

 

பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய:

ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்

முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மகுட-நீராஜித-பதாம்

 

பொருள்: பவானி என்ற பெயருடையவளும் பரமசிவனின் பத்தினியுமான தேவியே! உன் அடிமையாகிய என்னை கருணையுடன் கூடிய உன் கடைக்கண்ணால் பார்ப் பாயாக  என்று கேட்க நினைக்கும் ஒருவன், பவானி! நீ என்று சொல்லத் தொடங்கி, முடிக்கும் முன்பே, அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீட ங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது மேலான ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் அரச பதவி, மந்திரி பதவி போன்ற உயர்  பதவிகள் ஏற்படும். தேர்வுகளில் வெற்றியுண்டாகும். கோயில் அல்லது நதிக்கரையில் ஜபிக்க வேண்டும். இம்மைப் பயன்களெல்லாம் சித்திக்கும்

 

23. வியாதி, கடன் தொல்லை நீங்க (ருண, ரோகம் நீங்க)

பீஜம் ஓம் ஸ்ரம் ஸ்ரீம்

 

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேந மநஸா

ஸரீரார்த்தம் ஸம்போ-ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்

யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயநம்

குசாப்யா-மாநம்ரம் குடில-ஸஸி-சூடால-மகுடம்

 

பொருள்: அம்பிகையே! என் இதயத்தில் குடிகொண்டு பிரகாசிக்கும் உன் வடிவம் முழுவதும் சிவந்த ஒளியுடனும், முக்கண்களுடனும், இரு தனங்களால் சற்று வளைந்தும்  பிறைச்சந்திரனைச் சூடிய திருமுடியுடனும் விளங்குவதால், நீ பரமசிவனின் இடது பாகத்தை அபகரித்துக் கொண்டு, மனம் திருப்தியடையாமல் அவருடைய மற்றொரு  பாதியையும் அபகரித்துக் கொண்டாயோ என்று சந்தேகம் கொள்கிறேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் தீராத வியாதிகள், கடன் தொல்லைகள் நீங்கும்.  பல வழிகளில் பணம், பொருள் வந்து சேரும்

 

24. பேய், பூதம் முதலியவை நீங்க, செய்வினை தோஷம் நீங்கி வழா. பீஜம் சிவ அஷ்டமாசித்தி மந்த்ரம் ஜெபிக்கவும்

 

ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே

திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபு-ரீஸஸ்-திரயதி

ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்

தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிக-யோ:

 

பொருள்: பராசக்தி அன்னையே! பிரம்மா இவ்வுலகைப் படைக்கிறார். விஷ்ணு காக்கிறார். ருத்ரன் உரிய காலத்தில் அழிக்கிறார். இவர்களுக்கு மேற்பட்ட மகேசுவரன்  இம்மூவரையுமே தம் சொரூபத்தில் மறையுமாறு செய்து தம் உடலையும் மறைத்துக் கொள்கிறார். ஸதா என்ற அடைமொழியை முன்னால் கொண்ட ஸதாசிவன், கொடி  போன்ற புருவங்களை நீ சற்று அசைத்தால், அதை ஆதாரமான கட்டளையாய் ஏற்று கொண்டு மறுபடியும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன் என்னும் நான்கு  தத்துவங்களையும் படைக்கிறான்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் பேய், பிசாசு முதலியவைகள் ஓடிவிடும்.  அடிக்கடி வரும் சிறிய நோய்கள் நிவர்த்தியாகும்

 

25. உயர் பதவி கிடைக்க  கௌரவம் ஜகல ஸம்பத்து.

பீஜம் ஓம் ஐம் க்லீம் சௌ:

 

த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண-ஜநிதாநாம் தவ ஸிவே

பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா

ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே

ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

 

பொருள்: சிவனின் பத்தினியான அன்னையே! உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் உன் முக்குணங்களால் தோன்றிய பிரம்மா,  விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் செய்யும் பூஜையாகும். ஏனென்றால் உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன பீடத்தின் அருகில் கிரீடங்களின் மீது  கைகளைக்கூப்பிக் கொண்டே நின்று கொண்டிருப்பதால், உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையெல்லாம் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய உயர்பதவி கிடைக்கும். அரசியல் செல்வாக்கு உண்டாகும்

 

26. பகைமை நீங்க. சத்ரு பாதா நிவ்ருத்தி ஸர்வத் ரஜயம்

பீஜம் ஓம் க்லீம் க்ரீம்

 

த்ரவிரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம்

விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருஸா

மஹா-ஸம்ஹாரேசஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி-ரஸெள

 

பொருள்: பதிவிரதையான தாயே! மகாப் பிரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணு, யமன், குபேரன், இந்திரர்கள் 14 பேர் ஆகிய எல்லோருமே அழிவை அடைகிறார்கள்.  ஆனால் உனது நாயகனான சதாசிவன் மட்டுமே உன் பதிவிரதா தன்மையால் அந்தப் பிரளய காலத்திலும் அழியாமல் உன்னுடன் இருந்து விளையாடுகிறார். (பிரளய  காலத்திலும் கூட சிவனும் சக்தியும் அழிவற்று நிலைத்து நிற்பார்கள்.)

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் தம் மீது பகைமை பாராட்டுபவர்கள் பகைமை நீங்கி வசமாவார்கள்

 

27. ஸகல மந்த்ர தந்த்ர ஸித்தி, ஆத்ம ஞானம் உண்டாக.

பீஜம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா

கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மஸநாத்யாஹுதி-விதி:

ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருஸா

ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

 

பொருள்: அம்பிகையே! எல்லாமே உனக்கு அர்ப்பணம் என்று ஆத்ம சமர்ப்பண பாவனையுடன் நான் பேசும் வெற்றுப் பேச்சு ஜபமாகவும், என் உடல் அசைவுகள் உன்  முத்திரைகளின் விளக்கமாகவும், நடையெல்லாம் உனக்குச் செய்யும் பிரதட்சிணமாகவும், நான் புசிப்பதெல்லாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான் படுப்பது  உனக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இம்மாதிரி என் சுகத்திற்காக நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக நிறைவேறட்டும்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் தன்னிலை அறிதலாகிய ஆத்ம ஞானம்  உண்டாகிப் பேரின்ப வழி திறக்கும்

 

28. மரண பயம் நீங்க.அபம்ருத்யு தோஷம் நீங்க, தீர்காயுள் வளர ஸகல வித விஷ உபாத்தைகள் வீங்கி சிறப்புடன் வாழ. பீஜம் ஓம் டம் டம் டம் டஹ டஹ டஹ

 

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்

விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா

ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

 

பொருள்: தாயே! பயங்கரமான மூப்பு, மரணம் ஆகியவற்றை போக்கக்கூடிய அமிர்தத்தைப் பருகியும் பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் பிரளய காலத்தில்  அழிந்து விடுகிறார்கள். ஆனால் மிகக் கொடிய நஞ்சைப் பருகியும் சிவன் அழியாதிருக்கிறார். அவருக்கு மட்டும் காலத்தின் முடிவு இல்லையென்றாலும் அதற்குக்  காரணம் உன் செவிகளில் அணிந்திருக்கும் தாடங்கம் என்னும் காதணியின் மகிமைதான்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் தாம் தொடங்கிய எல்லாக் காரியங்களிலும்  வெற்றியுண்டாகும். விஷ வ்யாதி பயங்கள் அகலும்

 

29. முரட்டுத்தனம் நீங்க. ஸுகப்ரஸவம் ஸத் ஸந்தான லாபம் துஷ்டஜம் வச்யம் உண்டாக. பீஜம் ஓம் க்லீம் க்ரீம் க்ரீம் கூம் கூம் பட்

 

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:

கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்

ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம்

பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே

 

பொருள்: தாயே! உன்னை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோர் நாள்தோறும் வணங்க வரும்போது எதிரிலுள்ள பிரம்மாவின் கிரீடத்தை விட்டு விலகி வாருங்கள்.  விஷ்ணுவின் கிரீடத்தில் தவறிப் போய் இடறிக் கொள்ளாதீர்கள். இந்திரனின் கிரீடத்தை ஒதுக்கிவிட்டு வாருங்கள் என்றெல்லாம் உன்னுடைய பணிப்பெண்கள் சொல்லிக்  கொண்டிருக்கும் பொழுதே, உன் மாளிகைக்கு பரமசிவன் வருவதையறிந்து நீ எழுந்து சென்று எதிர்கொண்டு வரவேற்பது சிறப்பாயுள்ளது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் வீட்டில் பிள்ளை, பெண் முதலியவர்களின்  முரட்டுத்தனம் நீங்கும். வீட்டில் பிரசவம் ஆக வேண்டியவர்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும்

 

30. பரகாயப்ரவேச வித்தை அணிமா   முதலண அஷ்ட சித்தி பெற  பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம்

 

ஸ்வதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய:

கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந-ஸம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்

 

பொருள்: ஆதியும் அந்தமும் இல்லாத நிலையான பரம்பொருளான தாயே! உன் உடலிலிருந்து தோன்றிய அணிமா முதலிய எண்வகைச் சித்திகளாகிய தேவதைகளால்  சூழப்பெற்றவளே! எவன், உன்னைத் தன் ஆத்மா என்றெண்ணி எப்போதும் சிந்திக்கிறானோ அவனுக்கு சிவசாயுஜ்யமெனும் செல்வத்தைக் கூடப் பெரிதாகக் கருதாத  அவனுக்கு, பிரளய காலத்தில் எழும் ஊழித் தீ கூட, மங்கள ஆரத்தி செய்யும் என்பதில் என்ன வியப்பு?

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் அணிமாதி அஷ்ட சித்திகள் உண்டாகும். எந் தக் காரியத்தைத் தொடங்குவதிலும் அதைரியம் நீங்கி தைரியம் உண்டாகும். கூடுவிட்டுக் கூடுபாய்தலென்னும் பரகாய ப்ரவேச சக்தியும் சித்திக்கும்

 

31. தேவியின் உபாசனை பெற. ஸாம்ராஜ்ய ப்ரதம், அணிமாதி அஷ்டமா ஸித்திகள் பெற - பீஜம் ஐம் க்லீம்சௌ : ஓம் சௌ : க்லீம் ஐம்

 

சது:ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல-மதி ஸந்தாய புவநம்

ஸ்தி தஸ்-தத்தத் ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி:

புநஸ்-த்வந்நிர் பந்தா-தகில-புருஷார்த்தைக-கடநா-

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம்

 

பொருள்: பராசக்தி தாயே! பரமசிவன் இவ்வுலகில் அவரவர் விரும்பும் சித்திகளை மட்டும் அளிக்கும் 64 சாஸ்திரங்களால் திருப்தியடையச் செய்துவிட்டு பேசாதிருந் துவிட்டார். ஆனால் பின்னர் உன்னுடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த 64 சாஸ்திரங்களின் வாயிலாகவும் அடையக்கூடிய பிறவிப் பயன்களையெல்லாம் ஒருங்கே  கிடைக்கச் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த முக்கியமான பஞ்சதசீ என்னும் உன்னுடைய உபாசனா முறையே இப்பூவுலகில் வெளியிட்டார்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் ராஜ வசியமும், பொன், பொருள், மனைவி,  மக்கள், வீடு, வாகனம் போன்ற சகல விதமான செல்வமும் உண்டாகும்

 

32. சுவர்ணாபரணங்கள் பெற, வியாபார அபிவ்ருத்தி.

பீஜம் ஓம் யம் ஓம்

 

ஸிவ: ஸக்தி: காம: க்ஷித-ரத ரவி: ஸீதகிரண:

ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா-மார ஹரய:

அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸாநேஷு கடிதா

பஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம்

 

பொருள்: அம்பிகையே! சிவ பீஜாக்ஷரமான க; சக்தி பீஜாக்ஷரமான ஏ; காம பீஜாக்ஷரமான ஈ; பிருதிவி பீஜாக்ஷரமான ல ; சூரிய பீஜாக்ஷரமான ஹ; சந்திர  பீஜாக்ஷரமான ஸ; மன்மத பீஜாக்ஷரமான க; ஆகாச பீஜாக்ஷரமான ஹ; இந்திரனின் பீஜாக்ஷரமான ல; பரா பீஜமாகிய ஸ; மன்மத பீஜமாகிய க ; ஹரி பீஜமாகிய  ஸ ஆகிய இந்த உன்னுடைய அட்சரங்கள் புவனேசுவரி பீஜமான ஹ்ரீங்காரங்கள் மூன்றுடன் சேர்ந்து 15 அட்சரங்களும் மகாமந்திரத்தின் பகுதிகள் ஆகின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும்.  மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக லாபம் உண்டாகும்

 

33. செல்வம் செழிக்க - பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித-மாதௌ தவ மநோ:

நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:

பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-நிபத்தாக்ஷ-வலயா:

ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத-தாராஹுதி-ஸதை:

 

பொருள்: ஹே தேவியே! உன் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலில் காம பீஜமான க்லீம், புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம், லக்ஷ்மி பீஜமான ஸ்ரீம் ஆகிய மூன்று அக்ஷர ங்களையும் சேர்த்து இடைவிடாமல் ஜபித்து அதன் மகிமையை உணர்ந்த சிலர், தொடர்ந்து ஜபம் செய்து, சக்தி முக்கோணத்திலுள்ள அக்னியில் (சிவாக்னி) காமதேனு  தந்த நெய்யைப் போன்ற மனமகிழ்ச்சியைக் கொண்டு எண்ணற்ற அர்ப்பணங்களைச் செய்து ஆராதித்து வருகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செல்வம் மேன்மேலும் வளரும். மற்றும் இந்த  சுலோகத்தைப் பாராயணம் செய்யும் போது, தம் கையில் மூடி வைத்துக் கொள்ளும் பணத்தைப் போல் பத்துமடங்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்

 

34. சந்தேகம் நீங்க. நீர் ஸம்பந்தமான ஸகல வியாதிகளும் நீங்க சரீர ஆரோக்யம் உண்டாக -  பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி-மிஹிர-வஷோருஹ-யுகம்

தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாந-மநகம்

அத: ஸேஷ: ஸேஷீத்யய-முபய-ஸாதாரணதயா

ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பராநந்த-பரயோ:

 

பொருள்: பராசக்தி! சூரிய, சந்திரர்களைத் தனங்களாக உடைய நீ பரமசிவனுக்கு உடல் என்றும், காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் ஆகிய  ஒன்பது வியூகங்களின் சொரூபியான சிவனை உன்னுடைய உடல் என்றும் மனக்கண்ணால் என்னால் காண முடிகிறது. ஆகையால் உடைமை, உடையவர் என்னும் இந்த  உறவு சமரசப்பட்ட ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்ற உங்களில் இருவருக்கும் சமமாகவே தோன்றுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எல்லாவிதமான சந்தேகங்களும் நீங்கும்.  மற்றும் ஜலோதரம், தீராச்சளி, சீதள ஜ்வரம் போன்ற சகல ஜலரோகங்களும் நீங்கும்

 

35. இதயநோய் நீங்க. க்ஷயரோகம் முதலிய வியாதியில் இருந்து விடுபட,  பீஜம் ஓம் ஸ்ரீம்  க்ஷைம் க்ஷும் க்ஷும்

 

ஸ்மமநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி

த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்

த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா

சிதாநந்தாகாரம் ஸிவயுவதி-பாவேந பிப்ருஷே

 

பொருள்: அம்பிகையே! நீயே ஆக்ஞா சக்கரத்தில் மனமாக விளங்குகிறாய். விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாக விளங்குகிறாய். அநாஹதத்தில் வாயுவாக இருக்கிறாய்.  ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய். ஜல தத்துவமும் பிருதிவி தத்துவமும் ஆன நீயே பிரபஞ்சமாகவும் வடிவெடுக்கும் போது உன்னைத் தவிர வேறுபொருள்  இல்லை. இவ்வாறாக நீ வடிவெடுப்பதற்காக சிவபிரானின் பத்தினி என்ற நிலையை ஏற்றுக் கொள்கிறாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் மார்பு நோய் நீங்கும். கடுக்காயில் ஜபம் செய்து, அதை நீரில் உறைத்துச் சாப்பிடச் செய்யவும்

 

36. சகல நோய்களும் நீங்க. சரீர ஆரோக்ய அபிவிருத்தி -

பீஜம் ஓம் தும் ட தும் ஷ தும் சைம்

 

தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸஸி-கோடி த்யுதிதரம்

பரம் ஸம்பும் வந்தே பரிமிலித-பார்ஸ்வம் பரசிதா

யமாராத்த்யந் பக்த்யா ரவி-ஸஸி-ஸுசீநா-மவிஷயே

நிராலோகேசலோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

 

பொருள்: அம்பிகை தாயே! உன் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவரும், கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசத்தை கொண்டவரும், ஸகுண, நிர்க்குண சக்திகளை இரு பக்கமும்  அணைக்கப் பெற்றவருமான பரமசிவனை வணங்குகிறேன். அப்படி பரமசிவனை பக்தியுடன் வணங்கும் ஒருவன் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவரின் ஒளியும்  பரவாத பரஞ்சோதி வடிவமான உன்னுடைய ஸாயுஜ்ய பதவியைப் பெற்று மகிழ்வான்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் சாதாரண நோய்களும், தீராத நோய்களும் தீ ரும். பிரம்மராக்ஷஸ் பிடித்தவர்களை அது விட்டு ஓடி விடும் என்பது நம்பிக்கை. சுலோகத்தை ஜலத்தில் எழுதச் செய்து ஸ்நானம் செய்விக்கவும்.

 

37. பிசாசு பீடை நீங்க.  சரீர ஆரோக்யம் அபிவ்ருத்தி - பீஜம் ஓம் ரம் ஹ்ரீம்

விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக-விஸதம் வ்யோம-ஜநகம்

ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந-வ்யவஸிதாம்

யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண-ஸாரூப்ய-ஸரணே:

விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ

 

பொருள்: தாயே! உன்னுடைய விசுத்தி சக்கரத்தில் தெளிவான பளிங்கைப் போன்ற வடிவினரும், ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவருமான சிவனையும் அதே போன்ற  நிலையினளான உன்னையும் வணங்குகிறேன். சந்திரனின் சந்திரகிரணத்தைப் போல வெளிவரும் உங்கள் இருவரின் ஒளியினால் உலகம் முழுவதும் அஞ்ஞானமென்னும்  அகவிருள் நீக்கப் பெற்று, நிலவில் களிக்கும் சகோரப்பக்ஷி போல் விளங்குகிறது. (இருள் நீங்கினால் சகோரங்கள் கண் தெரிந்து ஒன்றோடொன்று சேருமென்பது  கவிமரபு.)

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் பேய், பிசாசு, பூதம், பிரும்ம ராக்ஷஸ்  போன்றவை நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

 

38. பாலாரிஷ்டம், குழந்தைகள் நோய் நீங்க. பீஜம் ஓம் கம் க்ஸௌம்

 

ஸமுந்மீலத்-ஸம்வித்-கமல-மகரந்தைக-ரஸிகம்

பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்

யதாலாபா-தஷ்டாதஸ-குணித வித்யாபரிணதி;

யதாதத்தே தோஷாத் குணமகில-மத்ப்ய: பய இவ

 

பொருள்: பராசக்தியே! நான் இரண்டு அன்னப்பறவைகளை வணங்குகிறேன். அவை நன்றாக மலர்ந்த ஞானம் என்னும் தாமரையிலிருந்து ஆனந்தம் என்னும் இனிய ÷ தனைப் பருகுபவை. மகான்களின் மனம் என்னும் தடாகத்தில் நீந்துபவை. அவை பேசிக் கொள்ளும் இன்பப் பேச்சிலிருந்தே பதினெட்டுக் கலைகளும் தோன்றுகின்றன.  அன்னங்கள் நீரையும் பாலையும் பிரித்து விடுவதைப் போல, இவை குற்றங்களையும் குணங்களையும் பிரிக்கின்றன. (இங்கு சிவனும் சக்தியுமே அன்னப்பறவைகள்  எனக் குறிப்பிடப்படுவன.)

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம்  என்பது நீங்கி சுகமாகும் என்பது நம்பிக்கை.

 

39. கெட்ட கனவுகள் வராமல் இருக்க.

பீஜம் ஓம் டம் பம் ப ஷம் ஸம் மம்

 

தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம்

தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம்

யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே

தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி

 

பொருள்: அம்பிகையே! உன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்னி தத்துவத்தைச் சிந்தித்து அதில் எப்பொழுதும் ஒளிர்கின்ற பிரளய கால அக்னி வடிவினரான ருத்ரனையும்,  மஹத் என்னும் மகிமை வாய்ந்தவளான பராசக்தியையும் போற்றித் துதிக்கின்றேன். அந்தப் பரமசிவனின் பார்வையாகிய அக்னி உலகங்களையெல்லாம் எரிக்கும்போது  குளிர்ச்சி மிகுந்த கருணை பொழியும் உன் திருவிழிப் பார்வைதானே குளிர்வித்துக் காக்கிறது!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் பயத்தை உண்டாக்கும் கெட்ட  கனவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

40. வருங்காலம் உணர. தாபத்ரயங்கள். நீங்கி லட்சும் கடாஷம் உண்டாக - பீஜம் ஓம் டம ஸ்ரீம்

 

தடித்வந்தம் ஸக்த்யா திமிர-பரிபந்த்தி-ஸ்புரணயா

ஸ்புரந்-நாநாரத்நாபரண-பரிணத்தேந்த்ர-தனுஷம்

தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக-ஸரணம்

நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவநம்

 

பொருள்: ஹே பகவதி, நீலமேக ரூபமான உனது ஸதாசிவ தத்வத்தை நான் வணங்குகிறேன். அந்த மேகம் மணிபூரகமென்னும் சக்கரத்தையே இருப்பிடமாகக் கொண்டது;  அங்குள்ள இருளையகற்றும் சக்தியாகிய மின்னல்களை உடையது; பல்வேறு வர்ணமுள்ள ரத்தின ஆபரணங்களின் ஒளியாகிய வானவில்லுடன் கூடியதும்; கறுத்ததும்  காலாக்னி ருத்ரனால் பிரளய காலத்தில் எரிக்கப்பட்ட மூவுலகையும் அமிர்தமாகிய மழையைப் பொழிந்து குளிரச் செய்வதுமாகிய உன் சதாசிவ தத்துவத்தை வணங்குகி றேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், வருங்காலத்தை அறியலாம்.  தாம் விரும்பிய பொருளை அடையும் வகையைக் கனவில் காணலாம் என்பது நம்பிக்கை.

 

41. வயிற்று வலி நீங்க. - பீஜம் ஓம் யம் ஹ்ரீம்

 

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா

நவாத்மாநம் மந்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்

உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திஸ்ய தயயா

ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

 

பொருள்: தாயே! உன்னுடைய மூலாதாரமென்னும் சக்கரத்தில் நர்த்தனம் புரிபவளான ஸமயா தேவியோடு சிருங்காரம் முதலிய 9 ரஸங்கள் பொருந்திய  தாண்டவமென்னும் நடனம் புரிகின்ற மஹாபைரவமென்னும் உன் ரூபத்தைத் தியானம் செய்கிறேன். பிரளயத்திற்குப் பின் மறுபடியும் தோன்றுகிற இந்த உலகத்திற்கு,  மஹாபைரவர், மஹாபைரவி என்னும் நீங்கள் இருவரும் கருணையால் ஒன்றுகூடி இந்த உலக ஜீவர்களுக்குத் தாயும் தந்தையுமாகிறீர்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், வயிற்று வலி நீங்கும்.  குல்மம் என்னும் வயிற்றுக் கட்டியும் நீங்கி சௌக்கியம் உண்டாகும்

 

42. வயிற்றில் ஏற்படும் நோய்கள் நீங்க. ஸர்வ ஜன வச்யம்                                  

பீஜம் ஓம் ரம் ரம் ரீம் ரீம்

 

கதைர்-மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர-கடிதம்

கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:

ஸ நீடேயச்சாயா-ச்சுரண-ஸபலம் சந்த்ர ஸகலம்

தநு: ஸெளநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம்

 

பொருள்: மலையரசனின் மகளே! உனக்குச் சேவை செய்யும் பொருட்டு மாணிக்கங்களாக உருவெடுத்துள்ள பன்னிரண்டு சூரியர்களால் நன்கு இழைக்கப்பட்ட உன்  பொற்கிரீடத்தை வர்ணிக்க எவன் மனம் விரும்புகிறதோ அவன், கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள நவரத்தினங்களின் ஒளியால் விந்தையான வர்ணம் உள்ளது போலத் ÷ தாற்றமளிக்கும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்று நினைத்துக் கொள்ள மாட்டானா

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், மஹோதரம் என்னும் நோய்  விலகும். மற்றும் பசு, பக்ஷி, மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் சக்தியும் ஏற்படும்

 

43. ஜயம், புகழ் பெறவும், வியாதி நீங்கவும்

பீஜம் ஓம் ஸ்ரீம் ஹரீம்

 

துநோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வநம்

கந-ஸ்நிக்த-ஸ்லக்ஷ்ணம் சிகுர-நிகுரும்பம் தவ ஸிவே

யதீயம் ஸெளரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸநமநஸோ

வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந-வாடீ-விடபிநாம்

 

பொருள்: அம்பிகையே! உன் கருங்கூந்தல் மலர்ந்த கருநெய்தல் காடு போல அடர்ந்து, வழவழப்பாயும், மிருதுவாயும் உள்ளது. அது எங்கள் அகஇருளை அகற்றட்டும்.  அதிலுள்ள இயற்கையான நறுமணத்தை அடைய விரும்பியே இந்திரனின் நந்தவனத்திலுள்ள கற்பக மலர்களெல்லாம் அந்தக் கேசத்தில் வாசம் செய்கின்றன என  எண்ணுகிறேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் எடுத்த காரியங்கள்  எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும். நோய்களெல்லாம் நீங்கும்

 

44. ஜனங்களின் மனதைக் கவர.                                                                          

ஆயுள் ஆரோக்கியம் பீஜம் ஓம் ஐம் க்லீம் சௌ

 

தநோது க்ஷேமம் நஸ் தவ வதந-ஸெளந்தர்யலஹரீ

பரீவாஹ-ஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்த-ஸரணி:

வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல-கபரீ-பார-திமிர-

த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீ-க்ருதமிவ நவீநார்க்க-கிரணம்

 

பொருள்: பராசக்தியே! உன் திருமுகத்தின் அழகு வெள்ளம் பெருகிப் பொழிவது வழிந்தோடும் வாய்க்காலைப் போலுள்ளது. அது உன் கரிய கற்றைக் கூந்தல் என்னும்  பலம்மிக்க பகைவர்களால் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்ட இளஞ்சூரியனின் கிரண ஒளியைப் போன்று தெரிகிறது. குங்குமம் அப்பியதுமான அந்த வகிடு எ ங்களுக்கு ÷க்ஷமத்தை அளிக்கட்டும்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எல்லோரையும் வசீகரிக்கும்  சக்தி உண்டாகும்

 

45. முக்காலத்தையும் உணர வாக்ஸித்தி

பீஜம் ஓம் ஸம் ஸம் ஸம்

 

அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸஸ்ரீபி-ரலகை:

பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ-ருசிம்

தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி கிஞ்ஜல்க-ருசிரே

ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர-தஹந-சக்ஷúர்-மதுலிஹ:

 

பொருள்: அம்பிகையே! புன்னகையால் சிறிது மலர்ந்தாற் போலவும், அழகிய பல்வரிசைகளுடன் பிரகாசிப்பதும், தாமரை மலரின் நறுமணம் கூடியதுமான, உன்  முகமாகிய தாமரை மலரில், மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் தேன் வண்டுகள் மயங்குகின்றன. அத்தகைய உன் முகம் இயல்பாகவே சுருள் சுருளாகவும், சிறு  வண்டுகள் மொய்த்திருப்பன போன்ற அழகைக் கொண்டதாகவும் உள்ள முன்நெற்றி மயிர்கள் பரவியுள்ளதால் உன் முகம் தாமரை மலரைப் பரிகாசம் செய்வது போல்  இருக்கிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் வருங்காலத்தை உணரும்  சக்தியுண்டாகி சொன்னதெல்லாம் பலிக்கும்

 

46. புத்ர பாக்கியம் பெற. தாம்பத்தியம் நிலை பெற                                               

பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி தவ யத்

த்விதீயம் தந்மந்யே மகுட-கடிதம் சந்த்ரஸகலம்

விபர்யாஸ-ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேப-ஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:

 

பொருள்: ஹே பகவதி! உன்னுடைய நெற்றியானது உன் கிரீடத்தில் கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட மற்றொரு சந்திரகலை போல் காட்சி தருகிறது. ஏற்கனவே மேல் நோக்கிக் கிரீடத்திலுள்ள சந்திரகலையையும் உன் நெற்றியாகிய சந்திர கலையையும் மாற்றி வைத்தால் இரண்டும் சேர்ந்து பூர்ணசந்திரனாகக் காட்சி தரும். (தேவியின்  நெற்றி, மனத்தின் அதிஷ்டான தேவதை என்பதால், அதைச் சந்திர கலையாகத் தியானம் செய்தால் மனஜயம் உண்டாகும்.) இவ்வாறு மனத்தில் எண்ணி அமாவாசையன்று  வானில் முழுநிலவைக் கொணர்ந்து காட்டிய அபிராம பட்டரின் சாதனை வியக்கத்தக்கது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் பிள்ளையில்லாதவருக்குக்  குணமுள்ள பிள்ளை உண்டாகும். தவிர, கோரிய பலன்களெல்லாம் வெற்றியடையும்

 

47. இறை அருள் பெற. ஸர்வ வேத்தா வச்யம்

பீஜம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

ப்ருவெள புக்நே கிஞ்சித்புவந-பய-பங்க வ்யஸநிநி

த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருத-குணம்

தநுர்-மந்யே ஸவ்யேதர கர-க்ருஹீதம் ரதிபதே:

ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே:

 

பொருள்: தாயே! உலக மக்கள் அனைவரின் அச்சத்தை அகற்றுவதிலேயே மிகுந்த அக்கறை கொண்டவளே! சற்று வளைந்து காணப்படும் உன் புருவங்கள், வண்டுகள்  போன்ற நாண் பூட்டப்பட்டும், இடக்கையில் பிடிக்கப்பட்டு, முழங்கையாலும் மணிக்கட்டாலும் மறைக்கப்பட்டு அதன் நடுப்பாகத் தோற்றம் தெரியாமலும் உள்ளதால்,  அது மன்மதனின் வில் என்றே எண்ணுகிறேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், சகல தேவதைகளும் வசிய மாவார்கள். அதன் மூலம் விரும்பிய காரியங்களிலெல்லாம் வெற்றி உண்டாகும்

 

48. சகல நவக்கிரஹ தோஷங்களும் விலக

பீஜம் மாத்ருக்கா ந்யாசம்

 

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந-மர்க்காத்மகதயா

த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ-நாயகதயா

த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித-ஹேமாம்புஜ-ருசி:

ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ-நிஸயோ-ரந்தரசரீம்

 

பொருள்: தாயே! உன் வலது கண் சூரியனாக இருப்பதால் அது பகலையும், உன் இடது கண் சந்திரனாக இருப்பதால் இரவையும் தோற்றுவிக்கிறது. உன்னுடைய மூ ன்றாவது கண் சற்று மலர்ந்த தங்கத் தாமரை மலர் போலிருப்பதால், இரவுக்கும் பகலுக்கும் இடையேயுள்ள காலை மாலைச் சந்தியா காலங்களை அமைக்கிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், நவக்ரஹங்களால் உண்டாகும்  தோஷங்களும், சிரமங்களும் நீங்கி சுகம், சம்பத்து உண்டாகும்

 

49. வியாபாரம் விருத்தியாக புதையல் நிதி தர்சனம் -

பீஜம் ஓம் ஸ்ரீம் மஹா

 

விஸாலா கல்யாணீ ஸ்புடருசி-ரயோத்யா குவலயை:

க்ருபாதாரா தாரா கிமபி மதுரா போக-வதிகா

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர-விஸ்தார-விஜயா

த்ருவம் தத்தந்-நாம-வ்யவஹரண-யோக்யா விஜயதே

 

பொருள்: அம்பிகையே! உன் கண்ணோட்டம் பரந்து விரிந்ததாகும். அது மங்களகரமாகவும், மலர்ந்து ஒளி வீசுவதாகவும், கருநெய்தல் மலர்களையும் மிஞ்சும் அழகு  வாய்ந்ததாகவும், கருணைப் பெருக்கிற்கு ஆதாரமாகவும், வர்ணிக்க முடியாத அழகுமிக்கதாகவும், ஆழங்காண முடியாத அளவுக்கு நீண்டதாகவும், அடியவர்களைக்  காப்பதாகவும், பல நகரங்களிலும் பார்வையின் பிரவாகம் வெளியாகியுள்ளதாக இருப்பதால் அந்தந்த நகரங்களில் குறிப்பிடத்தக்கதாகவும் அனைத்தையுமே  வெல்லக்கூடியதாகும்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், புதையல் உள்ள இடத்தைக்  காணலாம். இதற்குரிய யந்திரத்தை மஞ்சளில் எழுதி, அந்த மஞ்சளைச் சுட்டு, நல்லெண்ணெயில் உறைத்து மையாக்கி, பூனைக் கண்ணுள்ள பெண் கையால் மை தீட்டிக்  கொண்டால் புதையல் உள்ள இடம் காணப்படும்

 

50. அம்மை நோய் நீங்க - பீஜம் ஓம் கம் க்ளொம்

 

யாகவீநாம் ஸந்தர்ப-ஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்

கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமர-கலபௌ-கர்ணயுகலம்

அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ

அஸூயா-ஸம்ஸர்கா-தலிக-நயநம்-சிஞ்சிதருணம்

 

பொருள்: தாயே! உன்னுடைய இரண்ட காதுகளும் கவிகளின் காவியப் படைப்பாகிய புஷ்பக் கொத்திலுள்ள தேனைப் பருகும் ஆவலுடன் கூடியவை. அந்தக் காதுகளைச்  சற்றும் பிரியாமல் உள்ள உன் கண்கள் இரண்டும் குட்டி வண்டுகளைப் போலத் துள்ளித் திரிந்து கவிதைகளிலுள்ள நவரசங்களையும் அனுபவித்து மகிழும் ஆவல்  கொண்டவை. எனவே, உன் இரண்டு கண்களையும் பார்த்துப் பொறாமையினால் தான் உன்னுடைய நெற்றிக்கண் சற்றே சிவந்து காணப்படுகிறது என்பது நம்பிக்கை.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் வைசூரியனால் உடலெரிச்சல்,  கை கால்கள் முடமாதல், கண்பார்வை இழத்தல் போன்ற சிரமங்களெல்லாம் நீங்கிச் சுகம் உண்டாகும்

 

51. புகழ் பெற, ஸர்வஜன வச்யம் ஸர்வ காமபலப்ரதம்

பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் ஸ்ரீம்

 

ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா

ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ

ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-ஸௌபாக்யஜநநீ

ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா

 

பொருள்: தாயே! உன்னுடைய பார்வையில் எண்வகை ரஸங்களும் பொதிந்துள்ளன. அதாவது, சிவபிரானிடம் மட்டும் உன் பார்வை சிருங்கார ரஸத்தைப் பிரதிபலிப் பதாகவும், அவரைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதாகவும், கங்கா தேவியிடம் கோபமுடையதாகவும், சிவனின் திருவிளையாடல்களில் வியப்புடைய தாகவும், சிவன் அணிந்துள்ள பாம்புகளிடம் பயமுடையதாகவும், தாமரை மலரை விடச் சிவந்தும், வீர ரஸம் ததும்புவதாகவும், தோழிகளிடம் இனிய நகைச்சுவை  உடையதாகவும் என்னிடம் கருணை நிரம்பியதாகவும் விளங்குகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், நல்ல புகழ் உண்டாகும். (சந் தனத்தின் மீது நீண்ட சதுரம் எழுதி, அதன் நடுவில் க்லீம் என்ற மூன்று முறை எழுதி, பொட்டு இட்டுக் கொண்டு உடலில் பூசிக் கொள்ளவும்.) சர்வஜன வசியம்  உண்டாகும்

 

52. கண் நோய், காது நோய் நீங்க பீஜம் ஓம் ரம் ஸ்ரீம்

 

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ

புராம் பேத்துஸ்-சித்தப்ரஸம-ரஸ-வித்ராவண-பலே

இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே

தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரஸர-விலாஸம் கலயத:

 

பொருள்: அம்பிகையே! மலையரசனின் குலவிளக்கே! உன் திருவிழிகள் இரண்டும் காதுகள் வரை நீண்டிருப்பதாலும், பாணங்களின் இருபுறமும் கட்டப்படும்  இறகுகளைப் போன்ற இமை உரோமங்களைக் கொண்டிருப்பதாலும், முப்புரங்களையும் எரித்த சிவபிரானின் மனத்தில் சாந்தியை விலக்கி, சிருங்கார நினைவைத் ÷ தாற்றுவிப்பதை நோக்கமாய்க் கொண்டு காது வரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தையும் நினைவுபடுத்துபவை போல உள்ளன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், கண்களின் பார்வை ம ங்குதல், எரிச்சல், காதுகளில் சீழ் வடிதல், குத்துதல் போன்ற நோய்களெல்லாம் நீங்கும்

 

53. சகல காரியங்களும் வெற்றி பெற. தீபம் ஏற்றி நல்லது கெட்டது தெரிய ப்லகாச மாக தீபம் எரிந்தால் நல்லது இல்லாவிடில் விபரீதம் மாக நடக்கும் என்று அறிக. - பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜந-தயா

விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீஸாந-தயிதே

புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந்

ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரய்மிவ

 

பொருள்: பரமேசுவரனின் அன்புக்குரியவளே, நீ விளையாட்டிற்காகக் கண்களில் மையைத் தீட்டியிருக்கிறாய். எனவே, உன்னுடைய மூன்று கண்களும் சிவப்பு, வெளு ப்பு, கருப்பு என்னும் மூன்றும் வர்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தால், பிரளய காலத்தில் உன்னில் அடங்குகிற பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் ÷ தவர்களை மறுபடியும் படைப்பதற்காக முறையே ரஜோகுணம், ஸத்வகுணம், தமோகுணம் என்பவைகளை உன் கண்கள் தாங்குகின்றனவா என்று எண்ணத் ÷ தான்றுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தேவியின் அருள்  கிடைக்கும். குத்து விளக்கேற்றி அதனடியில் ஜபம் செய்ய வேண்டும். சகல காரியங்களும் அனுகூலமாகும்

 

54. துஷ்ட ரோகங்கள் நீங்க. யோனி ரோகம் நிவாரணம் பெற

( மர்ம ஸ்தான வியாதி நிவர்த்தியாக.) பீஜம் ஓம் ஸாம் ஸாம் ஸ்ரீம்

 

பவித்ரீ-கர்த்தும் ந: பஸுபதி-பராதீந-ஹ்ருதயே

தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ஸ்யாம ருசிபி:

நத: ஸோணோ கங்கா தபந-தநயேதி த்ருவமமும்

த்ரயாணாம் தீர்த்தாநா-முபநயஸி ஸம்பேத-மநகம்

 

பொருள்: பரமசிவனிடம் உள்ளத்தை அர்ப்பணித்த தாயே! உன்னுடைய கண்களில் சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்னும் மூன்றுவிதமான ரேகைகள் வெவ்வேறு வழியாகச்  செல்கின்றன. அவைகள் மேற்கு நோக்கிச் செல்லும் சிவப்பு வர்ணமுள்ள சோணா நதி, கிழக்கு நோக்கிச் செல்லும் வெளுப்பான கங்கை, கிழக்கு நோக்கிச் செல்லும் கருப்பு  வர்ணமுள்ள யமுனை இவைகளின் சங்கமத்தை எங்களைப் புனிதம் செய்வதற்காக அமைத்திருக்கிறாய் என்றே எண்ணுகிறேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் சூதக  நோய் முதலிய கொடிய நோய்களெல்லாம் நீங்கும்

 

55. எதிரிகளின் பயம் நீங்க, சத்ரு மரணமடைய, அண்டரோக நிவாரணம் பெற  பீஜம் ஓம் ப்ளும் ப்ளும்

நிமேஷோந் மேஷாப்யாம் ப்ரலய-முதயம் யாதி ஜகதீ

தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர-ராஜந்ய-தநயே

த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மஸேஷம் ப்ரலயத:

பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருஸ:

 

பொருள்: மலையரசனின் மகளே! உன் கண்ணின் இமைகளை மூடுவதாலும், திறப்பதாலும் உலகம் அழிவதும், மீண்டும் தோன்றுவதும் நிகழ்வதாகச் சான்றோர்  கூறுகிறார்கள். உன் கண்கள் திறப்பதால் தோன்றும் இந்த உலகம் முழுவதையும், அழியாமல் காப்பதற்காகவே உன் கண்கள் இரண்டும் இமைக்காமலே இருக்கின்றனவா  என நான் எண்ணுகிறேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், நம்மை அழிக்க நினைக்கும்  பகைவன் அழிவான். விரைவாதம் முதலான அண்ட நோய்களும் நீங்கும்

 

56. நல்ல நண்பர்கள் கிடைக்க. காராக்ரஹவாஸம் சுலபமாக நீங்க விலங்குகள் விலக கதவு சங்கிலி தானே தெரிக்கவும். பீஜம் ஓம் யம் யம் யம் இம்

 

தவாபர்ணே கர்ணே-ஜப-நயந-பைஸுந்ய-சகிதா

நிலீயந்தே தோயே நியத-மநிமேஷா: ஸபரிகா:

இயஞ் ச ஸ்ரீர்-பத்தச்சத-புட-கவாடம் குவலயம்

ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி

 

பொருள்: அபருணா எனப் பெயர் பெற்ற தாயே! உன் கண்கள் உன் காதுகளின் அருகில் சென்று கோள் செய்கின்றனவோ என்ற பயத்தால் உன்னைப் போல்  இமைக்கொட்டாத மீன்கள் தண்ணீரில் மறைந்து விடுகின்றன. இந்த உன் கண்களிலுள்ள ஒளியாகிய லக்ஷ்மி விடியற்காலையில் இதழ்களாகிய கதவுகளால் மூடப்பெறும்  கருநெய்தல் புஷ்பத்தை விட்டு அகல்வதைப் போலவும், மறுபடியும் இரவில் அந்த இதழ்களைத் திறந்து கொண்டு உள்ளே புகுவதைப் போலவும் தோன்றுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தடைகள் விலகும். பந்த  விமோசனம் உண்டாகும்

 

57. ஸகல சுபிட்சம் ஏற்பட  பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

 

த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித-நீலோத்பல-ருசா

தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே

அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி-ரியதா

வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர:

 

பொருள்: சகல மங்களங்களையும் அளிப்பவளே! உன் கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த கருநெய்தல் புஷ்பம் போல் விளங்குகின்றது. காது வரை நீண்டுள்ளது.  உன்னை நெருங்காமல் உள்ள இந்த ஏழையை அந்தப் பார்வையால் தயவு செய்து ஸ்நானம் செய்துவை. அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன். இதனால்  உனக்கு எந்தக் குறையும் இல்லை. சந்திரன்; காட்டிலும், அரண்மனையிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாகத்தானே காய்கின்றான்

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், ஒவ்வொருவருக்கும் வீடு,  வாகனம், மனை, மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாகும். நாட்டில் சுபிட்சம் ஏற்படும்

 

58. புகழ் பெறவும், நோய் நீங்கவும்  பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம்

 

அராலம் தே பாலீயுகல-மகராஜந்யதநயே

ந கேஷா-மாதத்தே குஸுமஸர-கோதண்ட-குதுகம்

திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத-முல்லங்க்ய விலஸந்

அபாங்க-வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந-திஷணாம்

 

பொருள்: பர்வதராஜனின் புத்திரியே! வளைந்த கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட இரு பகுதிகளையும் பார்த்தால், மலர்ப் பாணங்களையுடைய மன்மதனின் வில் போன்ற தோற்றத்தை யாருக்குத்தான் ஏற்படுத்தாது உண்மையில் குறுக்காகச் செல்லும் உன் கடைக்கண் பார்வை, காதுகளின் வழியே ஊடுருவிப் பாய்வது, மன்மதன்  பாணங்களைப் பயன்படுத்துவதைப் போன்றுதானே உள்ளது  (அம்பிகையின் கடைக்கண் பார்வை சகல நலன்களையும் நல்கக்கூடியது.)

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எங்கும் செல்வாக்கும்,  புகழும் உண்டாகும். சகல நோய்களும் நீங்கும்

 

59. மனைவியின் அன்பைப் பெற. ஸர்வஜன , ஸ்த்ரீ புருஷர்கள் வச்யம் பீஜம் ஐம் க்லீம் சௌ:

 

ஸ்புரத்கண்டாபோக-ப்ரதிபலித-தாடங்க-யுகளம்

சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத்-யவநிரத-மர்கேந்து-சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே

 

பொருள்: ஹே தேவி! உன்னுடைய தாடகங்கள் என்னும் ஸ்ரீசக்ர ரூபமான வைரத் தோடுகள் உன் கன்னங்களில் பிரதிபலிக்கின்றன. அவைகளுடன் கூடிய உன் தி ருமுகத்தை நான்கு சக்கரங்களுடன் கூடிய மன்மதனின் ரதமெனக் கருதுகிறேன். இந்த ரதத்தில் ஏறிக் கொண்டுதான் மன்மதன் சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாகக்  கொண்ட பூமியாகிய ரதத்தில் ஏறி, திரிபுரங்களை அழித்த பரமசிவனை எதிர்த்துப் போரிடுகிறானோ

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், மனைவியின் அன்பைப்  பெறலாம், சிறந்த பதவியும் கிடைக்கும்

 

60. வாக்ஸித்தி ஸகல கல்வி அறிவு பெற - பீஜம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

ஸரஸ்வத்யா: ஸூக்தீ-ரம்ருத-லஹரீ-கௌஸலஹரீ:

பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண-சுலுகாப்யா-மவிரலம்

சமத்கார-ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ

ஜணத்காரைஸ்-தாரை: ப்ரதிவசந-மாசஷ்ட இவ தே

 

பொருள்: பரமேஸ்வரனின் பத்தினியே! அமுதப் பெருக்கின் இனிமையையும் வெல்லும் வல்லமை மிக்கது உன் இனிய சொல்லமுதம். அதை இடைவிடாது தன்  காதுகளாகிய பாத்திரங்களால் பருகிக் கொண்டிருப்பவரும், அதைப் பாராட்டும் வகையில் அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருப் பவருமான சரசுவதி தேவி, தன்  காதணிகளாகிய குண்டலங்களை அசைத்து ஜணத்ஜணத் என்ற உயர்ந்த ஒலி கேட்பது, உன் சொல்லினிமையை ஆம் ஆம் என்று பாராட்டுவதைப் போல் தெரிகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், ஸகலகலா ஞானமும்,  சென்றவிடமெல்லாம் செல்வாக்கும் உண்டாகும்

 

61. கல்வி அறிவு பெற காரியஸித்தி பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

அஸௌ நாஸாவம்ஸஸ்-துஹிநகிரிவம்ஸ-த்வஜபடி

த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம்

வஹத்யந்தர்-முக்தா: ஸிஸிரகர-நிஸ்வாஸ-கலிதம்

ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

 

பொருள்: பனிமலையரசனின் குலக்கொடியே! மூங்கில் தண்டைப் போன்ற உன் அழகிய மூக்கின் உள்ளே பளபளக்கின்ற அழகிய முத்துக்கள் நிறைய இருக்கின்றன போ லும்! அதனால் தான் உன் இட நாசித் துவாரத்தின் வழியே வெளியாகும் சந்திர நாடி என்னும் மூச்சுக்காற்று, முத்துக்களை வெளியேயும் கொண்டு வருகிறதென எண்ணுகி றேன். அத்தகைய அழகிய நாசி, எங்களுக்குத் தேவையானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான நன்மைகளை அளித்துக் காக்கட்டும்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எடுத்த காரியம்  எல்லாவற்றிலும் தடையின்றி வெற்றியுண்டாகும்

 

62. சுகமான தூக்கம், ஸகல கார்ய ஜயம்  பெற.

பீஜம் ஓம் மம் மம் மம்

 

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே:

ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது பலம் வித்ருமலதா

ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலந-ராகா-தருணிதம்

துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா

 

பொருள்: அழகிய பற்கள் அமைந்த தேவி, இயல்பிலேயே சிவந்திருக்கும் உன்னுடைய உதடுகளின் வர்ணம் இயற்கையாகவே சிவப்பு. இதற்கு உவமை கூற முற்படுகிறேன். பவழக்கொடிக்குப் பழம் கிடையாது. அது பழத்தைத் தோற்றுவித்தால் அதை உவமையாகக் கூறலாம். கோவைப் பழமும் இயற்கையாகச் சிவந்ததல்ல; உன் உதட்டின்  சிவப்பு அதில் பிரதிபலித்திருப்பதால் தான் அதுவும் சிவப்பாக இருக்கிறது. ஆகவே, கோவைப்பழம் பதினாறில் ஒரு பங்கு கூட உன் உதட்டுச் சிவப்புடன் ஒப்பிட முடியா மையால் வெட்கமுற்றிருக்கிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தூக்கம் இல்லாமல் வருந் துபவர்களுக்கு நல்ல தூக்கம் உண்டாகும் என்பது நம்பிக்கை. (ஒரு தங்கத் தகட்டில் சதுரமாகக் கோடு அடித்து, அதன் மத்தியில், மம், மம், மம் என்று எழுதி வைத்து  ஜபம் செய்தபின் தலைகாணிக்கு அடியில் வைத்துப் படுக்கவும்.)

 

63. உயர்ந்த பதவி, அதிகாரம் பெற - பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

ஸ்மித ஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந-சந்த்ரஸ்ய பிபதாம்

சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா

அதஸ்தே ஸீதாம்ஸோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:

பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா

 

பொருள்: அம்பிகையே! உன்னுடைய முகமாகிய சந்திரன் பொழியும் புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற நிலவொளியை அளவின்றிப் பருகும் சகோர பக்ஷிகள், அதன்  மிகையான தித்திப்பால் தங்கள் அலகுகள் உணர்விழந்தனவாக ஆகிவிட்டன எனக் கருதி, மாற்று ரஸமாகப் புளிப்பை விரும்பி சந்திரனின் கிரணங்களான அமுதப் பெரு க்கை, புளித்த கஞ்சியாக எண்ணி வேண்டியவரை ஒவ்வோர் இரவிலும் அதைத் திருப்தியாகப் பருகி மகிழ்கின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், உயர்ந்த பதவியையும்,  அதிகாரத்தையும் பெறலாம். இவ்வுலகில் எல்லோரையும் மோகிக்கச் செய்யும் சக்தியும் உண்டாகும்

 

64. ஸ்த்ரீகளின் வியாதி நீங்க. மகவச்யத்துவம்

கார்யஜயமடைய  பீஜம் ஓம் ஸ்ரீம் க்லீம்

 

அவிஸ்ராந்தம் பத்யுர்-குணகண-கதாம்ரேடநஜபா

ஜபாபுஷ்பச் சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா

யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷத்-தச்சச்சவி-மயீ

ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா

 

பொருள்: தாயே! உன்னுடைய நாவானது உன் பதியாகிய பரமசிவனின் மங்களகரமான கதைகளை இடைவிடாமல் எந்நேரமும் திரும்பத் திரும்ப மந்த்ர ஜபத்தைப் ÷ பாலச் சொல்லி வருவதால் செம்பருத்திப் பூவைப் போலச் சிவந்து காணப்படுகிறது. அந்த நாக்கின் நுனியில் சரஸ்வதி தேவி வசிக்கின்ற காரணத்தால் தான், தெளிவான  ஸ்படிகம் போன்று வெண்மையாய்க் காணப்படும் சரஸ்வதியின் திருமேனிகூட, மாணிக்கத்தைப் போல் சிவந்து மாறிக் காணப்படுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும்  எல்லா நோய்களும் நீங்கும். நினைத்த காரியமும் நிறைவேறும்

 

65. சகலத்திலும் வெற்றி பெற ரஜ்ஜிய வசியம் அடைய.

பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

 

ரணே ஜித்வா தைத்யா-நபஹ்ருத-ஸிரஸ்த்ரை: கவசிபி:

நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:

விஸாகேந்த்ரோபேந்த்ரை: ஸஸிவிஸத-கர்ப்பூரஸகலா

விலீயந்தே மாதஸ்தவ வதந-தாம்பூல-கபலா:

 

பொருள்: தாயே! தேவசேனாதிபதியான சுப்ரமண்யர், தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகியோரெல்லாம் அசுரர்களை வென்று திரும்பி உன் அருகில் வரும்பொழுது, மரிய õதைக்காகத் தலைப்பாகையை எடுத்துத் தம் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சண்டிகேசுவரரின் பாகமாகிய பரமசிவனின் நிர்மால்யத்தைப் பொருட்படுத்தாமல், வெண்மையான பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலந்ததும், நீ வாயில் மென்று கொடுத்ததுமான தாம்பூலக் கவளங்களைப் பெற்று நன்கு மென்று தின்கிறார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எதுவாக இ ருந்தாலும் தோல்வியென்பதே இல்லாமல் வெற்றி உண்டாகும். வாக்கு வசியம் உண்டாகும்

 

66.  வீணை முதலிய ஸங்கீத வாதய வித்தை வளர,                                  

சர்வ ரோக நிவாரணம் பீஜம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

விபஞ்ச்யா காயந்தீ விவித-பதாநம் பஸுபதே:

த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா ஸாதுவசநே

ததீயைர்-மாதுர்யை ரபலபித-தந்த்ரீ-கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்

 

பொருள்: தாயே! சரஸ்வதிதேவி பரமசிவனுடைய பலவிதமான அருள்விளையாட்டு லீலைகளை தனது வீணையில் பாடுகிறாள். நீ அதைக்கேட்டு மகிழ்ச்சியோடு  தலையை அசைத்து, ஆஹோ என்று சொல்ல ஆரம்பித்தாய். அந்த உன் பேச்சின் இனிமை, தன் வீணைத் தந்தியின் ஒலியைப் பரிகாசம் செய்வது போலிருப்பதால்  ஓசைப்படாமல் சரஸ்வதி தேவி உறைத்துணியால் தன் வீணையை மறைத்து விடுகிறாள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எல்லாவித நோய்களும் நீ ங்கும். வீணை, பிடில், மிருதங்கம் முதலிய வாத்தியங்களை கற்றுக் கொள்பவர்கள் இதைப் பாராயணம் செய்தால் அவைகளில் மிக்க வல்லவர்களாகி விடுவார்கள்

 

67. பதவி உயர, அம்பாளின் பரிபூர்ண அனுக்ரஹம் பெற ராஜ்ய வச்யம் காரிய ஜயமடைய பிஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம்

 

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா

கிரீஸேநோதஸ்தம் முஹுரதர-பாநாகுலதயா

கரக்ராஹ்யம் ஸம்போர்-முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே

கதங்காரம் ப்ரூமஸ்-தவ-சுபுக-மௌபம்ய-ரஹிதம்

 

பொருள்: மலையரசனின் புதல்வியாகிய தாயே! உன் மோவாய் உன் தந்தையான இமவானால் அன்புப் பெருக்கால் அடிக்கடி தன் நுனிக்கையால் தொடப்பட்டது.  அதரபானம் செய்யும் ஆவலுடன் பரமசிவனின் திருக்கரத்தால் அடிக்கடி உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பரமசிவனின் திருக்கரத்தால் அவ்வாறு தொடுதற்குரியதும்,  முகமாகிய கண்ணாடிக்குப் பிடி போன்றதுமான அந்த மோவாயை நான் எப்படி வர்ணிப்பேன்?

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால் நினைத்த காரியம்  அனைத்தும் நிறைவேறும். அரசாங்க அலுவல்களில் அனுகூலம் உண்டாகும்

 

68. ராஜபதவிகள் கிடைக்க ஆதிசக்தியின் அருள், லோக வச்யம் பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

புஜாஸ்லேஷாந்நித்யம் புரதமயிது: கண்டகவதீ

தவ க்ரீவா தத்தே முக-கமலநால-ஸ்ரியமியம்

ஸ்வத: ஸ்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலிநா

ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா

 

பொருள்: பராசக்தி தாயே! பரமசிவனின் கைகள் தோள்களைத் தழுவுவதால் ரோமாஞ்சலி ஏற்பட்டு தாமரை மலரின் முள்ளுடன் கூடிய தண்டைப் போல் உன் கழுத்து  காட்சி தருகிறது. அது உன் முகமாகிய தாமரைக்குக் காம்பைப் போல் விளங்குகிறது. அதற்கும் கீழ் நீ கழுத்தில் அணிந்துள்ள முத்துமாலை இயல்பாக வெண்மை  நிறத்தினதாயினும், கறுப்பான அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பால் பூசப்பட்டு சேற்றில் அழுக்கடைந்த தாமரைக் கொடி போல் காணப்படுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தேவியின் அருளால் அரசா ங்கத்தில் நன்மை ஏற்படும்

 

69. எடுத்த காரியம் நிறைவேற  சங்கீத சாஸ்த்ரத்தில் உயர

பீஜம் ஓம் க்ஷம் மூம் க்ஷிம் ஸூம்

 

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே

விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா-ப்ரதிபுவா:

விராஜந்தே நாநாவித-மதுர-ராகாகர-புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-நியம-ஸீமாந இவ தே

 

பொருள்: கதி, கமகம், கீதம் என்னும் மூவகையான சங்கீதத்தில் ஒப்புயர்வற்ற திறமை பெற்ற அம்பிகையே! உன் கழுத்தில் காணப்படும் மூன்று கோடுகள், உன் திருமண  காலத்தில் பரமசிவன் உன் கழுத்தில் கட்டிய மாங்கல்யச் சாட்டின் மூன்று நூல்களைக் குறிப்பிடும் பாக்கிய ரேகைகளா மேலும் இசையில் உள்ள பலவிதமான இனிய  இராகங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஷட்ஜமம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவன போலவும்  அவை விளங்குகின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், சகல காரியங்களிலும் சி த்தியுண்டாகும்

 

70. எடுத்த காரியம் நன்கு நிறைவேற

பீஜம் ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

ம்ருணாலீ-ம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸெளந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம-மதநா-தந்தகரிபோ:

சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா

 

பொருள்: தாயே! உன்னுடைய நான்கு அழகிய கைகளும் தாமரைக் கொடிகளைப் போல் மிருதுவானவை. ஒரு சமயம் பிரம்மாவின் இந்த ஐந்தாவது தலையைப் பரமசி வன் நகத்தால் கிள்ளி எறிந்து விட்டார். அதற்குப் பயந்து பிரமன் மீதமுள்ள தன் தலைகளுக்கு ஒரே காலத்தில் அபயமளிக்க வேண்டுமென்று உன் நான்கு கைகளின்  அழகைத் தன் நான்கு வாய்களாலும் துதி செய்கிறார்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் அனைத்தும்  நிறைவேறும். வியாபாரத்தில் வெற்றியும், அதிக லாபமும் உண்டாகும். பயம் நீங்கும்

 

71. தேவதைகள் (யக்ஷிணீ) வசியமாக

பீஜம் ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம்

 

நகாநா-முத்யோதைர் நவநலிந-ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்

யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம்

 

பொருள்: பார்வதி தாயே! சிறந்த ஒளி சிந்தும் உன் கை நகங்களில் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பையும் மிஞ்சும் பிரகாசம் மின்னுகிறது. அத்தகைய அழகிய உன் கர ங்களை நான் எப்படி வர்ணிப்பேன்  சொல். செந்தாமரை மலரில் உறைகின்ற மஹாலக்ஷ்மியின் உள்ளங்காலில் பூசப்பட்ட மருதோன்றியினாலல்லவா அவ்வளவு ஒளி  வந்துள்ளது. அந்தச் செயற்கையொளியும் பதினாறில் ஒரு பங்குதான் உன் கை நகங்களின் அழகுக்கு ஈடாக முடியும் எனத் தோன்றுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஜபித்து வந் தால், யக்ஷிணி முதலிய தேவதைகள் வசியமாவார்கள்

 

72. யாத்திரையில் பயம் நீங்க பீஜம் ஓம் ஸமம் தேவி க்லீம் ஹ்ரீம்

 

ஸமம் தேவி ஸ்கந்த-த்விபவதந-பீதம் ஸ்தநயுகம்

தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத-முகம்

யதாலோக்யாஸங்காகுலித-ஹ்ருதயோ ஹாஸஜநக:

ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி ஹஸ்தேந ஜடிதி

 

பொருள்: அம்பிகையே! பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதும்; கணபதி, சுப்ரமணியன் ஆகிய உன் இரு குழந்தைகளாலும் ஒரே நேரத்தில் பால் பருகக்கூடியனவும் ஆன  உன் தனங்கள் இரண்டு எங்கள் துன்பங்களையெல்லாம் அகற்றட்டும்! யானைத் தலையரான கணபதி, உன் தனங்களைப் பார்த்துவிட்டு, சந்தேகப்பட்டு, கலங்கிய  உள்ளத்துடன் தன் தலையிலுள்ள இரு குடங்களும் இருக்கின்றனவா என்று தடவிப் பார்த்துக் கொள்கிறார். (யானையின் தலையில் இருபகுதியாக, மேடான அமைப்பில்  காணப்படுவது கும்பஸ்தலம் எனப்படும்.)

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், யாத்திரையில் பேய், பிசாசு,  சத்ரு, சிறைவாசம் போன்ற எல்லாவிதமான பயங்களும் நீங்கும்

 

73. பால் பெருக, க்ஷீரஸம்ருத்தி- பீஜம்  ஓம் ஹாம் ஹரீம்

 

அமூ தே வஷோஜா-வம்ருதரஸ-மாணிக்ய-குதுபௌ

ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி-பதாகே மநஸி ந:

பிபந்தௌ தௌ யஸ்மா-தவதித-வதூஸங்க ரஸிகௌ

குமாராவத்யாபி த்விரதவதந-க்ரௌஞ்ச-தலநௌ

 

பொருள்: மலையரசனின் மகளான குலக்கொடியே! உன்னுடைய இரு தனங்களும் அமிருதம் நிரம்பிய மாணிக்கக்குடங்கள் என்பதில் எங்கள் மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவற்றிலிருந்து பாலைப்பருகும் காரணத்தால் தான் யானை முகத்தோனான கணபதியும், அசுரனை வதைத்த சுப்ரமண்யனும் பெண்களின்  சங்கமம் என்பதையே இன்னும் அறியாத குழந்தைகளாகவே இருக்கிறார்கள் போலும்!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து, ஜலத்தில் ஒரு வட்டம் வரைந்து, அதன்  நடுவே காம் என்று எழுதி அந்த ஜலத்தை அருந்தினால், தாய்ப்பாலில்லாதவருக்குப் பாலுண்டாகும், பசுக்களுக்கும் பால் அபிவிருத்தியாகும்

 

74. புகழ் உண்டாக பீஜம் ஓம் ஐம் க்லீம் சௌ :

 

வஹத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ-கும்பப்ரக்ருதிபி:

ஸமாரப்தாம் முக்தாமணிபி-ரமலாம் ஹாரலதிகாம்

குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்த: ஸபலிதாம்

ப்ரதாப-வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்தி மிவதே

 

பொருள்: தாயே! உன்னுடைய மார்பகத்தின் மத்தியப் பகுதி கஜாசுரனின் கும்பஸ்தலத்திலிருந்து தோன்றிய சிறந்த முத்துக்களால் கோர்க்கப்பட்ட முத்து மாலையைத் தா ங்கி நிற்கிறது. நிர்மலமான அந்த முத்து மாலையானது கோவைப்பழத்தைப் போல சிவந்த உன் உதட்டின் ஒளியால், உட்புறம் விந்தையான வண்ணங்களை உடைய தாயும், முப்புரத்தை எரித்த சிவபிரானின் பராக்கிரமத்தோடு கலந்து இந்த மாலையாக வந்ததோ என எண்ணும்படியும் அழகுடன் தோற்றமளிக்கின்றது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை தெய்வ சந்நிதியில் ஜபித்து வந்தால், நல்ல புகழ்  உண்டாகும்

 

75. கவிதா சக்தி உண்டாக, ஞாபக சக்கி  வளர

பீஜம் ஓம் (ஸம்) ஐம் க்லீம் சௌ : சௌ க்லீம் ஐம்

 

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:

பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ

தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு-ராஸ்வாத்ய தவ யத்

கவீநாம் ப்ரௌடாநா-மஜநி கமநீய: கவயிதா

 

பொருள்: மலையரசனான இமவானின் புதல்வியே! உன் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால், இதயத்தில் தோன்றிய பாற்கடல் போலவும், வாக்குத் தேவதையான  சரஸ்வதியின் அருளுருவமே பொங்கி வந்தாற் போலவும் எனக்குத் தோன்றுகிறது. உன் பாலை அருந்தித் திராவிட நாட்டில் பிறந்த (சங்கரன்) என்னும் இந்தச் சிசு பெரிய  வித்வான்களுக்கிடையே எல்லோரையும் கவரக்கூடிய கவியாக ஆகிவிட்டானல்லவா!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், கவிதைகள் இயற்றும்  அபாரசக்தி உண்டாகும்

 

76. சர்வ வல்லமை பெற, காரிய ஸித்தி- பீஜம் ஓம் ஐம் க்லீம்

 

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேந வபுஷா

கபீரே தே நாபீ-ஸரஸி க்ருதஸங்கோ மநஸிஜ:

ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதநயே தூமலதிகா

ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி:

 

பொருள்: மலையரசனின் புதல்வியே! பரமசிவனின் கோபத்தால் தோன்றிய அக்கினி ஜ்வாலையால் சூழப்பெற்ற மன்மதன், அந்தத் தாபம் தாங்க இயலாதவனாய்,  உன்னுடைய தொப்புளாகிய தடாகத்தில் குதித்து மூழ்கி விட்டான். அவன் நெருப்புடன் நீரில் புகுந்ததால் மெல்லிய புகை மேலே கிளம்புகிறது. கொடி போன்று மெல்லிய தான அந்தப் புகைக் கோடு தான் உன் நாபியைச் சுற்றிலுமுள்ள ரோமங்களென மக்கள் நினைக்கிறார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எதுவாக இ ருந்தாலும் வெற்றி ஏற்படும்

 

77. ஸர்வ ஜன ராஜ்ய வச்யம் வெற்றி பெற பீஜம் ஓம் ஐம் க்லீம்

 

யதேதத் காலிந்தீ-தநுதர-தரங்காக்ருதி ஸிவே

க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்

விமர்தா-தந்யோந்யம் குசகலஸயோ-ரந்தரகதம்

தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம்

 

பொருள்: அம்பிகையே! மிகவும் குறுகியதான உன் இடுப்பின்மேல், கருப்பு வர்ணமுள்ள, யமனா நதியின் சிறிய அலை போன்ற ஒரு ரோம வரிசை சாமுத்ரிக  லட்சணமறிந்த வித்வான்களுக்கு மட்டுமே காணப்படுகிறது. இது ஸ்தனங்களுக்கிடையே உள்ள குறுகிய ஆகாசந்தானோ? அந்தக் குறுகிய ஆகாசம், ஸ்தனங்களின்  உரைசலால், தான் அழிந்து விடுவோமென்று பயந்து கீழே நாபி கூபத்தில் ஒளிந்து கொள்ளச் செல்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், ஸகல காரிய ஜெயம்  உண்டாகும் (செந்தாமரைப் பூவைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பசு நெய்யில் குழைத்து, அதில் கீழ்நோக்கிய ஒரு முக்கோணத்தை எழுதி அதன் நடுவே க்லீம் என்று எழுதி ஜபம் செய்தபின் அதை நெற்றியில் தரிக்கவும்.)

 

78. ராஜாங்க பதவியில் ஜயம் உண்டாக பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம்

 

ஸ்திரோ-கங்காவர்த்த: ஸ்தந-முகுல-ரோமாவலி-லதா

கலாவாலம் குண்டம் குஸுமஸர-தேஜோ-ஹுதபுஜ:

ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே

பிலத்வாரம் ஸித்தேர்-கிரிஸ-நயநாநாம் விஜயதே

 

பொருள்: பர்வதராஜனின் புதல்வியாகிய தாயே! உன்னுடைய நாபி, அசைவில்லாத கங்கையின் சுழல் போலவும், ஸ்தனங்களாகிய தாமரை மொட்டுக்களைத் தாங்கும் ரோமாவளியாகிய தாமரைத் தண்டுகளுக்குத் தண்ணீர் பாயும் பாத்தியாகவும், மன்மதனின் ஒளியாகிய அக்னிக்கு ஹோம குண்டமாகவும், அவன் பத்தினியான ரதிதேவியின் விளையாட்டு அறையாகவும், பரமசிவனின் கண்களின் தவப்பயனுக்குக் குகையின் துவாரமாகவும் விளங்குகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தடைப்பட்டுள்ள அரசாங்க  அலுவல்களில் ஜயமுண்டாகும் (வாசனைச் சந்தனத்தில் முக்கோணம் எழுதி நடுவில் ஹ்ரீம் என்று எழுதி, ஜபம் ஆனபின் நெற்றியில் தரிக்கவும்).

 

79. மந்திரங்கள் சித்தி  ஸர்வஜனவச்சிய சித்தி ஜாலவித்யா பாரங்கத்துவம் பெற  பீஜம் ஓம் க்லீம் ஸர்வஜன மோஹனம்

 

நிஸர்க-க்ஷ்ணஸ்ய ஸ்தந-தட-பரேண க்லமஜுஷோ

நமந்மூர்த்தேர்-நாரீதிலக ஸநகைஸ் த்ருட்யத இவ

சிரம் தே மத்யஸ்ய த்ருடித-தடிநீ-தீர-தருணா

ஸமாவஸ்தா-ஸ்தேம்நோ பவது குஸலம் ஸைலதநயே

 

பொருள்: பெண் குலத்தின் திலகமாகிய மலையரசனின் புதல்வியே! உன் இடை இயல்பிலேயே மெல்லிய தோற்றமுடையது. ஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க முடியாமல்  வருந்தி வளைந்த வடிவத்தைப் பெற்றுள்ளது. எனவே ஒடிந்து போவதைப் போல இருக்கும் இடையானது, வெள்ளப் பெருக்கால் உடைந்துபோன நதியின் கரையில் இ ருக்கும் மரத்துக்கு இணையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. உன் அத்தகைய இடைக்குப் பல்லாண்டு காலத்துக்கு ஷேமம் உண்டாகட்டும்!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், இந்திர ஜால வித்தையில்  வல்லமையும், ஸகல ஜன மோஹனமும் உண்டாகும்

 

80. ஜால வித்தையில் வல்லமை பெற

பீஜம் ஓம் ஸம் லம்-ரம் ஸ்ரீம்-ஹ்ரீம் -க்லீம் யம்-ஐம் சௌ:

 

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸ-பிதுரௌ

கஷந்தௌ தோர்-மூலே கநக-கலஸாபௌ கலயதா

தவ த்ராதும் பங்காதலமிதி வலக்நம் தநுபுவா

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ

 

பொருள்: தேவியாகிய தாயே! சகல உலகங்களுக்கும் இறைவனாகிய ஈசனை நினைத்து, அந்தப் பூரிப்பின் காரணமாக, தங்கக் குடங்களைப் போன்ற உன் தனங்கள்,  ரவிக்கையைக் கிழித்துக் கொண்டு அக்குள்களில் உராய்கின்ற அளவில் வியர்த்து விளங்குகின்றதைக் கண்ட மன்மதன், தன்னால் மேலும் தூண்டப்பட்டு தனபாரங்களால்  இடைஒடிந்து விடாதிருக்கும் பொருட்டு த்ரிவளி என்னும் மும்மடிப்புக் கொண்ட வள்ளிக் கொடிகளால் இடுப்பை மூன்று சுற்றாகக் கட்டியிருக்கிறானோ என எண்ணத் ÷ தான்றுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், மஹேந்த்ர ஜாலம் என்னும்  ஜால வித்தையில் வல்லவனாவான்

 

81. நெருப்பு சுடாமலிருக்கும் சக்தி பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம்

 

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி:  பார்வதி நிஜாத்

நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே!

அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய-மஸேஷாம் வஸுமதீம்

நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச

 

பொருள்: அன்னை பார்வதி தேவியே! மலையரசனான உன் தந்தை கனமானதும் விசாலமானதுமான மலை அடிவாரத்தின் தன்மையை எடுத்து உனக்கு சீதனமாகக்  கொடுத்து விட்டார் போலும். அதன் காரணமாகத்தான் பருத்தும் விசாலமாகவும் காணப்படும் உன் பின்பக்கப் பகுதி இப்பூவுலகனைத்தையும் மறைக்கும் வகையில்  தோன்றுகிறது. அதை லகுவாகவும் ஆக்கி விடுகிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், அக்னி ஸ்தம்பன சக்தி (நெருப்பு சுடாமலிரு க்கும் சக்தி) உண்டாகும்

 

82. ஜலத்தில் நடக்கும் சக்தி பெற பீஜம் ஓம் ஹ்ரீம் ஹம் ஸ்ரீம்

 

கரீந்த்ராணாம் ஸுண்டாந் கநககதலீ-காண்டபடலீம்

உபாப்யா-மூருப்யா-முபயமபி நிர்ஜித்ய பவதீ

ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி-கடிநாப்யாம் கிரிஸுதே

விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி

 

பொருள்: பார்வதித் தாயே! பகவதி என்ற திருநாமம் கொண்டவளே! வலிமைமிக்க சிறந்த யானைகளின் துதிக்கைகளையும், பொன் வாழை மரங்களையும் உன் இரு  தொடைகளால் வெற்றி கொண்டவளாய், பரமசிவனை அடிக்கடி பணிந்து வணங்கும் வழக்கத்தால், கடினமாகவும் நன்கு உருண்டு திரண்டும் உள்ள முழங்கால்  முட்டிகளால் இந்திரனின் யானையான ஐராவதத்தின் தலையிலுள்ள இரு கும்பங்களையும் வென்றிருக்கிறாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், ஜலஸ்தம்பனம் (நீர் மேல்  சுலபமாக நடத்தல்) செய்வதற்கான சக்தியுண்டாகும்

 

83. பஜ துர ஸைன்ய சேனையை அசையாமல் நிறுத்த

பீஜம் ஓம் ஸூம் ஓம்

 

பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே

நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட-மக்ருத

யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர-பலா: பாதயுகலீ-

நகாக்ரச்சத்மாந: ஸுர-மகுட-ஸாணைக-நிஸிதா:

 

பொருள்: அம்பிகையே! பரமேசுவரனை வெல்வதற்கு பஞ்சபாணன் எனப்படும் மன்மதன் அவை போதாதலால், உன் முழங்காலுக்குக் கீழேயுள்ள பாகங்களாகிய இரு  அம்பறாத் தூணிகளில் பத்து பாணங்களை நிரப்பி வைத்திருக்கிறான். அந்தப் பாணங்கள் எவையெனில் உன் திருவடிகளிலுள்ள பத்து விரல்களேயாகும். அந்த  விரல்களின் நகங்கள் பாணத்தின் இரும்பு முனைகளைப் போல உள்ளன. மேலும் அவை உன்னை வணங்கும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக்கற்களால் நன்கு  தீட்டப்பெற்றவையாயும் காணப்படுகின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், யானைப்படை, குதிரைப் படை முதலியவைகளுடன் கூடிய பெரிய சேனையை அசையாமல் நிறுத்தும் ஸ்தம்பன வித்யை சித்திக்கும்

 

84. கூடுவிட்டு கூடுபாயும் சக்திபெற பீஜம் ஓம் ஹ்ரீம் க்லீம் பீஜம் 2 ஸம் ஜீம் வம் நிம் ஹும் பட்  ஸ்வாஹா

ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா

மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ

யயோ: பாத்யம் பாத: பஸுபதி-ஜடாஜூட-தடிநீ

யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி:

 

பொருள்: தாயே! உன் திருவடிகளை வேதங்களின் தலைபோன்ற உபநிஷத்துக்கள் தம் தலைகளில் அணிகளாக அணிந்து கொள்கின்றன. அந்தத் திருவடிகளை எளியே னாகிய எனது தலையிலும் வைத்தருள்வாயாக! ஏனெனில் அந்தத் திருவடிகள் சிவபிரானின் ஜடாமகுடத்திலுள்ள கங்கை நீரால் கழுவப்படுகின்றனவன்றோ அந்தத் தி ருவடிகளில் பூசப்பட்டுள்ள மருதோன்றியின் சிவந்த ஒளி, விஷ்ணுவின் தலையை அலங்கரிக்கும் மாணிக்கமோ என எண்ணும்படி இருக்கிறது.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், கூடுவிட்டுக் கூடுபாய் தலென்னும் பரகாயப் பிரவேச வித்தை சித்தியாகும்

 

85. பூத, ப்ரேத, பிசாசங்களை அகற்ற தற்காப்பு 

பீஜம் ஓம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம்

 

நமோவாகம்-ப்ரூமோ நயந-ரமணீயாய பதயோ:

தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே

அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே

பஸூநா-மீஸாந: ப்ரமதவந-கங்கேலி-தரவே

 

பொருள்: தாயே! கண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவையாயும், பிரகாசம் பொருந்தியவையாயும், ஈரமரு தோன்றியால் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் சிவந்த ஒளி  மின்னுவதாயும் உள்ள உன் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்கிறோம். இத்தகைய சிறப்பு மிகுந்த உன் திருவடிகளினால் உதைக்கப்பட வேண்டுமென நந்தவனத்தில்  உள்ள அசோக மரங்கள் காத்துக் கிடப்பதையறிந்து பசுபதியான பரமசிவன் பொறாமைப்படுகிறார். உயர் ஜாதிப் பெண்கள் தம் கால்களால் அசோக மரத்தை உதைத்தால்  அது புஷ்பிக்கும் என்பது மரபு.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், பூதம், ப்ரேதம், பிசாசு முதலி யவைகளை ஓட்டவும் மாரணம் செய்யவும் சக்தியுண்டாகும்

 

86. பிசாசுகளை ஓட்ட பீஜம் ஓம் யம் யம் யம் ஸ்ரீம்

 

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந-மத வைலக்ஷ்யநமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே

சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத-முந்மூலிதவதா

துலாகோடிக்வாணை; கிலிகிலித-மீஸாந-ரிபுணா

 

பொருள்: பார்வதித் தாயே! உன் திருவடிகளால் உதைபட வேண்டுமென்ற ஆசையால் பரமசிவன், தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பது போல் நடித்து, அவள் பெய ரால் உன்னை அழைத்து, பிறகு உன்னிடம் பயந்தவர்போல் உன்னை வணங்குகிறார். நீ கோபத்தால் அவர் நெற்றிக்கண்ணில் உதைத்தாய். இதைக் கண்ணுற்ற மன்மதன்,  நெற்றிக் கண்ணால் தன்னை எரித்த வெகுநாளைய கோபத்தை விட்டு, உன் கால் தண்டையின் கிலி கிலி ஒலியால், ஜெயித்தேன், ஜெயித்தேன் என்று வெற்றியொலி  எழுப்புகிறான் போலும்!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எந்தவிதமான பிசாசாக இ ருந்தாலும் ஓட்டி விடலாம் என்பது நம்பிக்கை. கும்ப ஜலத்தில் ஜபித்து முழுக்காட்டவும்.

 

87. பாம்பு முதலான பயம் நீங்க. மனமத ஜயம் குபேர அனுக்ரஹம் பெற பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸர்ப ஸார்ப மம்

 

ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ

நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ

வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய-மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்

ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ்-சித்ரமிஹ கிம்

 

பொருள்: அம்பிகையே! தாமரை மலர்கள் பனியில் கருகிவிடக் கூடியவை. ஆனால் உன் திருவடிகளாகிய தாமரை மலர்களோ பனிமலையான இமாசலத்திலேயே  காலையிலும் மாலையிலும் சற்றும் சுருங்காமல் மலர்ச்சியுடன் காணப்படுபவை. தாமரை இரவு நேரங்களில் உறங்குபவை போல இதழ்களை மூடக் கொள்பவை. உன்  திருவடிகள் இரவிலும், இரவு முடிந்த பின்னரும் கூட எப்போதும் மலர்ந்து காணப்படுகின்றன. தாமரை திருமகளான லக்ஷ்மி வாசம் செய்யும் இருப்பிடம். ஆனால் உன்  திருவடிகளாகிய தாமரைகளோ வழிபடும் அடியவர்கட்கெல்லாம் அளவற்ற செல்வத்தை (லக்ஷ்மியையே) அள்ளித் தருபவை. எனவே உன் பாத கமலங்கள் தாமரை  மலர்களை வென்று விட்டன என்பதில் என்ன அதிசயம்?

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், பாம்புகளால் ஏற்படும் பயம்  நீங்கும்

 

88.  மிருகங்களை ஆகர்ஷிக்க பீஜம்  ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்

 

பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்

கதம் நீதம் ஸத்பி: கடிந-கமடீ-கர்ப்பர-துலாம்

கதம் வா பாஹுப்யா-முபயமநகாலே புரபிதா

யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா

 

பொருள்: தேவியே! உன் திருவடிகளின் நுனி அடியவர்களைக் காப்பதெனும் புகழுக்கு உறைவிடமாயுள்ளது. அடியவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குச் சிறிதும்  இடமளிக்காமல் காப்பவை. கருணையின் பிறப்பிடமான மென்மையான இத்தகை உன் திருவடிகளை கவிகள் சிலர் எப்படித்தான் ஆமையின் கடினமான முது÷ காட்டிற்குச் சமமானவை என வர்ணித்தார்களோஅவை சிவபிரான் உன்னைத் திருமணம் புரிந்த நேரத்தில் தன் இனிய கரங்களால் மெதுவாக எடுத்து அம்மிக்கல்லின்  மீது வைத்த மெத்தென்ற மெல்லிய பாதங்கள் ஆயிற்றே.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், சிம்மம், புலி போன்ற  கொடிய மிருகங்களையும் வசமாக்கி அடக்கியாளலாம்

 

89. தீராத வியாதிகள் நீங்க பீஜம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஸஸிபி:

தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ

பலாநி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய-கராக்ரேண தததாம்

தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ-மஹ்நாய தததௌ

 

பொருள்: சண்டிகா தேவி என்னும் பெயர் கொண்ட தாயே! தேவலோகத்திலுள்ள கற்பக மரங்கள், தம் தளிர்க்கரங்களால், சொர்க்கவாசிகளான தேவர்களுக்கு அவர்கள்  விரும்பும் பலன்களை அளிப்பவை. ஆனால் உன் திருவடிகளோ, ஏழை எளியவர்களுக்கும் கூட, அவர்கள் கோரிய கணத்தில் நிறைந்த செல்வத்தை வாரி வழங்குபவை.  உன் கால்களின் நகங்கள் தேவ கன்னிகைகளின் கைகளாகிய தாமரை மலர்களையே மூடிக்கொள்ள செய்யும் சந்திரர்களைப் போன்றவை. எனவே கற்பகத் தருக்கள் தம்  கைகளால் கொடுப்பனவற்றை நீ உன் திருவடிகளின் நகங்களாலேயே அளிக்கிறாயே!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தீராத வியாதிகளெல்லாம் நீ ங்கிச் சுகமுண்டாகும்

 

90. பில்லி, சூன்யம், ஏவல் நீங்க. ஸர்வவித க்ஷுத்ர ப்ரயோக நிவ்ருத்தி ஸர்வகார்ய ஜயமடைய பீஜம் ஓம் க்ஷாம் க்ஷாம் க்ஷீய க்ஷீய ஹ்ரீம் க்ஷும் ஓம்

 

ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ-மாஸாநுஸத்ருஸீம்

அமந்தம் ஸெளந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி

தவாஸ்மிந் மந்தார-ஸ்தப-ஸுபகே யாது சரணே

நிமஜ்ஜந்-மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

 

பொருள்: தேவி! உன் பாதக்கமலங்கள் எப்போதும் ஏழை, எளியவர்க்கெல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அளவற்ற செல்வத்தைத் தந்தருள்பவை. அதிகமான  அழகிய மகரந்தத் தேனைப் பெருகியோடச் செய்பவை. கற்பகத் தருவின் பூங்கொத்துப் போலுள்ளவை. இத்தகைய உன் பாதக்கமலங்களில், ஐம்புலன்கள், மனம் ஆகிய  ஆறு கால்களுடன் புகுந்து உறையும் வண்டின் தன்மையை என் ஜீவன் அடைவதாக!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், பில்லி, சூன்யம், ஏவல் முத லியவைகள் எல்லாம் நீங்கி விடும்

 

91. தனலாபம், பூமிலாபம் பெற பீஜம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்- ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் -ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மநஸ:

ஸ்கலந்தஸ்-தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி

அதஸ்தேஷாம் ஸிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித-

ச்சலா-தாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே

 

பொருள்: புண்ணியம் மிகுந்த சரித்திரத்தை உடைய தாயே! உன் புனிதமிக்க அரண்மனைத் தடாகத்திலுள்ள அன்னப் பறவைகள் தத்தித் தத்தி நடந்து உனது நடையழகைப்  பயிலும் நோக்கத்துடன் தொடர்ந்து துள்ளிக் குதித்து உன் அழகு நடையைத் தொடர்ந்து பயில்கின்றன. அதற்கேற்ப உன் திருவடிகளில் அணிந்துள்ள ரத்தினக் கற்களால்  இழைக்கப் பெற்ற சலங்கைகளின் ஒலியின் மூலமாக அப்பறவைகளுக்கு நடைப் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போலவே உன் திருவடிக் கமலங்கள் திகழ்கின்றன.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எதிர்பாராத வகையில்  தனலாபமும், பூமி பாலமும் ஏற்படும்

 

92. உயர்ந்த பதவிகள் பெற. ராஜபோகப்ராப்தி ஸகல ஸௌபாக்யம் ஸர்வசத்ருவ்ருத்தி 

பீஜம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்   

 

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேஸ்வர-ப்ருத:

ஸிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட:

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந-ராகாருணதயா

ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம்

 

பொருள்: தாயே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் வேதத்தின் வடிவமாகிய உன் கட்டிலில் நான்கு கால்களாக நின்று உன்னைச் சேவிக்கிறார்கள்.  உன் கணவரான சதாசிவனோ, தூய வெண்மையான அங்கவஸ்திரத்தைத் தரித்த கோலத்துடன் உன் மேனியின் சிவந்த ஒளிவெள்ளம் பிரதிபலிப்பதால் தாமும் சிவப் பாகத் தோற்றமளிப்பதைக் கண்டுவிட்டு சிருங்கார ரஸமே உருவெடுத்தவரைப் போல் கண்களுக்கு மகிழ்ச்சி தந்தருள்கிறார்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், அலுவலகங்களில் உயர்ந்த  பதவி, மந்திரி பதவி போன்ற உயர்ந்த பதவி, மந்திரி பதவி போன்ற உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்கும்

 

93. எண்ணிய எண்ணங்கள் நிறைவேற பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்

 

அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே

ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே

ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே

ஜகத் த்ராதும் ஸம்போர்-ஜயதி கருணா காசிதருணா

 

பொருள்: தாயே! மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாததும், சிவப்பு வர்ணமுள்ளதுமான பரமசிவனின் கருணாசக்தியே நீ. அந்த சக்தியே சுருட்டை மயிரும், இயற்கையான  புன்முறுவலும், காட்டு வாகைப் பூப்போல் மெத்தென்ற மனமும், கல்லுக்குள்ளே இருக்கும் மணிக்கல்லின் காந்தியுள்ள ஸ்தனப்ரதேசமும், மிகவும் இளைத்த இடுப்பும்,  பருமனான ஸ்தனங்களும், பின்தட்டுகளும் தாங்கிய உருவத்துடன் உலகத்தை ரட்சிக்கின்றாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், எண்ணிய எண்ண ங்களெல்லாம் நிறைவேறும்

 

94. பிறரால் போற்றப்பட .இஷ்டகாம்யார்த்த ஸித்திப்ரதம் பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்

 

கலங்க: கஸ்தூரீ-ரஜநிகர-பிம்பம் ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம் நிபிடிதம்

அதஸ்-த்வத்போகேந ப்ரதிதிந-மிதம் ரிக்தகுஹரம்

விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூதம் தவ க்ருதே

 

பொருள்: தாயே! மரகத ரத்தினத்தால் செய்யப்பட்ட பாத்திரம் போலுள்ள சந்திர மண்டலத்தில் நீ நீராடுகிறாய். அந்த பாத்திரத்தில் சந்திரனின் மத்தியில் காணப்படும் கள ங்கமே கஸ்தூரியாகவும், சந்திரனே நிர்மலமான ஜலமாகவும், அவன் கிரணங்களே பச்சைக் கற்பூரப் பொடிகளாகவும் உள்ளன. தினந்தோறும் நீ ஸ்நானம் செய்த பின்  காலியாக உள்ள அந்த பாத்திரத்தை மெல்ல மெல்ல பிரம்மதேவன் நிரப்புகிறான்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், மற்றவர்களால் நன்கு புகழப்  பெறுவார்கள்

 

95. தீராத ரணங்கள், புண்கள் ஆற  வ்யாதி நிவர்த்தி பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

 

புராராதே-ரந்த:புரமஸி ததஸ-த்வச்சரணயோ:

ஸபர்யா-மர்யாதா தரலகரணாநா-மஸுலபா

ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம்

தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமரா:

 

பொருள்: திரிபுரங்களை எரித்த பரமசிவனின் பட்டத்தரசியாய் விளங்கும் பகவதித் தாயே! உன்னுடைய திருவடிக் கமலங்களை நெருங்கி அவற்றுக்கு பூஜை செய்யும்  தகுதி, புலன்களை வெல்ல இயலாதவர்களால் அடையக்கூடியதன்று. இதன் காரணமாகத்தான் இந்திரன் முதலான தேவர்கள் கூட அந்தப் பாக்கியம் தமக்குக் கிட்டாததால்  உன் வாயிற் படியில் அணிமா முதலிய துவாரபாலகிகளை மட்டுமே வணங்கி அணிமா முதலிய எண்வகைச் சித்திகளை மட்டுமே பெற்றுத் திரும்பி விட்டார்கள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், தீராத ரணங்கள், புண்கள்  ஆறிவிடும். இதற்கான யந்த்ரத்தைத் தகட்டில் எழுதி, எண்ணெயில் வைத்து ஜபித்து, அந்த எண்ணெயைப் பூசினால் விரைவில் குணமாகும்

 

96. நல்ல அறிவு பெற கல்வி தத்துவம் ஏற்பட பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் ஐம் சௌ

 

கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:

ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா-மசரமே

குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப:

 

பொருள்: பதிவிரதா சிரோன்மணியாகிய பார்வதித் தாயே! பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி தேவியைத் தொழுது அவளுடைய அருளை எத்தனையோ கவிஞர்கள்  பெறவில்லையா அதைப்போல ஏதோ ஒரு வகையான செல்வத்தைப் பெற்றுவிட்டு ஒருவன் லட்சுமிபதி என்ற பெயருக்குரியவனாக விளங்கவில்லையா உன்னுடைய  தனங்களின் சேர்க்கையானது, மகாதேவனை மட்டுமேயன்றி உன் அருகிலிருக்கும் மருதோன்றி மரத்திற்குக் கூடக் கிடைப்பதில்லையே! நீயல்லவோ சிறந்த பதிவிரதை!

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், நல்ல அறிவைப் பெறலாம்.  மற்றும் சித்திரங்கள் தீட்டும் கலைஞர்கள் ஜபித்தால், அக்கலையில் வல்லமையும் புகழும் பெறுவார்கள்

 

97. வாக்கு சித்தி, உடல் நலம் பெற.தாது வ்ருத்தி சரீர புஷ்டி பெற பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஐம் சௌ

 

கிராமாஹுர்-தேவீம் த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா

மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி

 

பொருள்: பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள், உன்னை நீயே பிரம்மனின் பத்தினியாகிய சரஸ்வதி என்றும், நீயே  விஷ்ணுவின் பத்தினியாகிய லக்ஷ்மி என்றும், நீயே சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள். நீயோ மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட  மகிமையுள்ள நான்காவது தத்துவம். அளவில்லாமல் சிரமப்பட்டும் அடைய முடியாத மஹாத்மியமுள்ள மஹாமாயையாக நீ இருந்து கொண்டு இவ்வுலகை ஆட்டி  வைத்து, பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறாய்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், சொன்ன வார்த்தை பலி த்தலாகிய வாக்கு சித்தியுண்டாகும். உடல் நலம் பெருகும்

 

98. கர்ப்பம் நிலைத்து குழந்தை செல்வம் பெற பீஜம் ஓம் ஓம் ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம்

 

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜந-ஜலம்

ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா-காரணதயா

கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-ரஸதாம்

செம்பஞ்சுக் குழம்பு-வாக்கு சித்தி

 

பொருள்: தாயே! மருதோன்றிக் குழம்பின் பூச்சுடன் கலந்து வருவதும் உன் திருவடிகளை அலம்பி வருவதுமான தீர்த்தத்தை, வித்தைகள் பலவற்றிலும் சிறந்து விளங்க  விரும்பும் நான், எப்பொழுது பருகப் போகிறேன் கூறியருள்வாயாக. இயல்பாகவே ஊமைகளுக்கும் கூட, கவிதை இயற்றும் ஆற்றலைத் தரவல்லது அந்தத் தீர்த்தம்  என்பதால், சரஸ்வதி தேவியின் திருவாயால் மெல்லப்பட்ட தாம்பூலச் சாற்றினையொத்த அந்தத் தீர்த்தத்தை நான் என் வாயில் எப்பொழுது அடையப்போகிறேன்

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், கர்ப்பம் தரிக்காத பெண்கள்  கர்ப்பம் தரிப்பார்கள். ஸ்த்ரீ சுகம் பெறமுடியாத ஆண்களுக்கு அச்சுகம் கிடைக்கும்

 

99. வீரத்வம் சூரத்வம் ஆரோக்யமும், சகல சுகமும் பெற பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

 

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பஸுபாஸ-வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவாந்

 

பொருள்: தாயே! உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூடப் பொறாமைப்படக்கூடிய அளவில் நிறைந்த ஞானத்துடனும், செல்வத்துடனும் எல்லையில்லா  இன்பத்தை அடைகிறான். மன்மதனைப் போன்ற மேனி எழிலைப் பெற்று ரதிதேவியின் பதிவிரதைத் தன்மையைமும் கலங்கச் செய்கிறான். சம்சார பந்தம் எனும்  இகவாழ்வின் கட்டுகளெல்லாம் நீங்கியவனாக பிரசித்தமான பேரானந்தம் எனும் இன்ப ரசத்தைப் பெற்று சிரஞ்சீவியாக வாழ்கிறாள்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை ஜபித்து வந்தால், உடல் வலியும், சகல சுகமும்  உண்டாகும்

 

100. சகல காரிய சித்தி பெற  பீஜம் பீஜம் ஓம் ஓம் ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்

 

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜந விதி:

ஸுதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசநா

ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-ஸெளஹித்ய கரணம்

த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்

 

பொருள்: வாக்கிற்கதிபதியான தேவியே! தீவட்டியின் ஜ்வாலையைக் கொண்டே சூரியனுக்கு ஆரத்தி செய்வதைப் போலவும், சந்திரகாந்தக் கல்லிலிருந்து  பெருகும்  அமுத கிரணங்களாகிய நீரைக் கொண்டே சந்திரனுக்கு அர்க்யம் தருவது போலவும், சமுத்திர ஜலத்தைக் கொண்டே சமுத்திரத்தை திருப்தி செய்வது போலவும்,  உன்னுடைய அருளால் உருவான வாக்குகளைக் கொண்டே இந்த ஸ்தோத்திரம் அமைந்துள்ளது. இதை உனக்கு மகிழ்வுடன் அர்ப்பணம் செய்கிறேன்.

 

ஜபமுறையும் பலனும்

ஸ்லோகத்தை 1000  ஜபித்து வந்தால், சகல காரியங்களிலும் சித்தி  உண்டாகும்

சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.