Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 30, 2016

பதும பீடத்தில் பாணவன் நான் பவ்யமாக பரிசிக்கின்றேன். நீ பாண்டலாக போனாயடா ?

Inanya Maha Munivar
01-12-2016
பதும பீடத்தில் பாணவன் நான் பவ்யமாக பரிசிக்கின்றேன். நீ பாண்டலாக போனாயடா ? என்னுள் கரைந்தால் எல்லா நாளும் பிடி நாள் தான் இங்கே ! ஏன் உணராமல் அலைகின்றாய் ?
மனம்
உன் மனம் தான் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிக்கின்றது. ஒன்றுமில்லாததை உருவகப்படுத்துகிறது. சொல்லவொனா துயரம் இருப்பதாக மாயமாலம் செய்கிறது.
மனம் என்று ஏதுமில்லை ! அது நீ செய்யும் கர்மாவும் பாவமும் தான் என்பதை புரிந்து கொள். அது பந்து போல சுருண்டு உனை ரணப்படுத்துகிறது. பயம் தான், பக்தி தான் உனை முக்தி பெற முடியாமல் தடுக்கின்றது.
உள்ளே ஆழ்ந்து உறங்கும் சத்தியத்தின் (ஆண்மா) சொல் கேள் ! உன் இலக்கு நிச்சயம் அடைவாய் ! நம்பிக்கை இல்லா மனிதரிடம் முயற்சி இருக்காது. முயற்சி இல்லையேல் இங்கே இகழ்ச்சியாக துயரப்படுவாய். வீண் சந்தேகம் உனை வீணாய் அலைய வைக்கின்றது.
எதையும் ஒரு முறை நம்பினால் (குருவோ, கடவுளோ) நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே ! உன்னை எந்த சந்தர்ப்பத்திலும் சந்தேக பிராணியாக வைக்காதே ! மேறுவைப் போல ஒன்றை பற்று ! குரோட்டத்தின் தந்திரம் இங்கே பலிக்காது. ஓஷதியில் உண்மை வைத்தேன் ! உணராது அலைகின்றான். ஔசதம் என்பதும் உண்மை சொரூபம் தான் ! வளர் கொம்பில் பெண் உண்டு. அதில் உயிர் குருத்து உள்ளே வைத்தேன்.
அறிந்து உன் ஆளுமை நிரம்பி ஞான தெளிவு பெறுவாய். புஷ்கரியில், பெண் கிழங்கில் பெருமை மிகு சூத்திரம் உண்டு ! உணரடா ! உண்மை இங்கிருக்க நீ எங்கெங்கோ தேடுகிறாய்.
எப்போதும் சொல்வேன். உன் எண்ண ஓட்டத்தை என் காலடியில் கட்டு ! வீண் சந்தேகப்படாதே ! அசைவற்று இரு ! தேரையை போல ! எந்த துன்பம் வந்தாலும் சிரித்து சீர்படு. சிக்கல் இல்லா வாழ்வு வாழ்வாய் ! எண்ணம் போல் வாழ்வு அமைய ஒழுக்கமாக இரு !
இங்கே மிண்ணுவதெல்லாம் பொன் அல்ல. பெண் தான் மின்னும் பொன் ! அவளை அறிந்தால் தான் நிறைவு வரும் ! சுகம் வரும் ! தோல்வி இல்லா வாழ்வு வரும் ! இப்போது மாறாச்செவி கொண்டு மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய். செவியை இயற்கையிடம் கொடு. அதன் சப்தத்தை கேட்க ஆயத்தமாகு !
வேதம் கரை புரண்டு வருகிறது. ஆண்மத்தின் வேதம் ஐந்தும், ஞானம் நூற்றி பதினொன்றும், நிதான தத்துவம் நூற்றி பதினொன்றும் இருக்கின்றது. இது தெரியாமல் யோகா, தியானம் என்று முச்சை இழுத்து மூடனாக போகாதே ! கண் மூடி தியானிக்காதே ! எதற்கும் கட்டுப்பாட்டை விதி ! இந்த விதியின் நாயகன் உன் விதியை சரி செய்வேன். உன் மனம் போல எங்கும் போகாதே, எதையும் செய்யாதே !
உனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்க வைப்பேன். பெண்ணோ, மண்ணோ, பொன்னோ எல்லாம் ¼ நாழிகை இன்பம் தான். ஆனால் கடவுளின் அன்பில் திளைத்தால் ஆயுள் முழுவதும் இன்பமோ இன்பமடா !
இங்கே கடவுளின் அன்பு கிடைக்க யாரும் போராடவில்லை. எட்ட நின்று பயம், பக்தியோடு நிற்கின்றான். அன்பினால் கட்டிபோட யாருக்கும் தெரியவில்லை. ஆயுள் முழுவதும் ஆணந்தமாக வாழ யாருக்கும் தெளிவான அறிவில்லை. அறிவீலி நாடகம் நடத்தும் சாமியார்களை பின் தொடர்கிறான் மனிதன் !
படைத்த பொருளில் எதற்கும் மதமில்லை ! மதம் என்ற சாயம் வெளுக்க கண்டேன். கூடுகின்ற கூட்டத்தில் இனி கடவுள் இடியாய் இறங்குவான். பிணம் தாண்டி போக கண்டேன். மதகலவரங்கள் உருவாகக் கண்டேன்.
தன் மதத்தில் உள்ளவர்கள் தான் நல்லவர்கள், அவர்கள் தான் சொர்க்கத்திற்கு, பரலோகத்திற்கு செல்வார்கள் என்று புலம்புகின்றான், இங்கே மதம் என்று ஏதுமில்லை. கடவுள் எந்த மதமும் அல்ல. உப்பிற்கு மதமில்லை. இங்கே யார் தர்மம் செய்தாலும் சொர்க்கம் தான் பூமியிலே ! தர்மம் செய்து சத்ய வழியில் நடப்பவன், அந்த சாயலை உணர்வான் !
சமய சின்னங்களும், கோட்பாடுகளும், கொடிகளும், கொள்கைகளும் கடவுளை நெருங்குவதில்லை ! இங்கே ஒழுக்கம், உழைப்பு, அன்பு, தர்மம், பிறருக்கு சேவை செய்வதானாலே மட்டும் தான் கடவுளை நெருங்க முடியும் ! அவன் அன்பிற்கு பாத்திரமாக முடியும் !
பாவம் செய்து அழுது ஆர்பரித்தால் பாவ மன்னிப்பு கிடையாது. பாவத்திற்கு தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் !
இனி இந்த உலகில் ஓர் மதம் உருவாகும் ! ஆதியில் இருந்த மதம் உருவாகும் ! மதம் என்றால் தெளிவான பாதையை காட்டுதல் என்று பொருள் ! முற்று பெருதல் என்று பொருள் !
தன்னகரில்லா கருணைமிக்கவன் கடவுள் ! கடவுளின் பாதத்தில் அமர் ! அவன் அன்பை உணர பார் !
நான் எப்போதும் ஆணந்தமாக வாழ்கின்றேன். உனக்கும் ஆணந்த வாழ்வு தருவேன் ! மண்னிலிருந்து வந்தாய். மண் கூட மழை நீர் பட்டால் மணக்கிறது. நீ மணமில்லாது போனாய். மலரின் மணம் போல வாசம் வீசு ! மாயவன் நான் உன்னை மணக்க வைப்பேன். உன் மனதை மணமாக வை ! மண்ணில் நல்லவண்ணம் வாழ மகேசன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
என்னுள் மன்னுதல் ஆக யோசி ! மகேஷ்வர நிலை அடைவாய் ! மானத்தின் பெரிதாய் ஞாலத்தில் உனை வாழ வைப்பேன், ஞான குழந்தையாக !
மன்னர் மன்னன் நான் !
நான் இநன்யா !

Wednesday, November 23, 2016

முன்னால் வழியெல்லாம் வழியம்பலம் நிரம்ப கண்டேன். இந்நாள் வழியெல்லாம் மதுக்கடைகளை நான் கண்டேன். இது தானடா உன் விஞ்ஞான வளர்ச்சி !

Inanya Maha Munivar
24-11-2016
முன்னால் வழியெல்லாம் வழியம்பலம் நிரம்ப கண்டேன். இந்நாள் வழியெல்லாம் மதுக்கடைகளை நான் கண்டேன். இது தானடா உன் விஞ்ஞான வளர்ச்சி !
எது வளர்ச்சி ?
அறிவை தொலைத்து ஆர்பரிப்பது உன் வளர்ச்சியா ?
பயிர் நிலத்தை அழித்து வான் நோக்கி கோபுரம் கட்டுவதா உன் வளர்ச்சி ?
வீட்டின் முன்னால் உள்ள திண்ணையை அழித்து பிறருக்கு தீங்கு விளைவிப்பதா உன் வளர்ச்சி ?
கட்டிய மனைவி இருக்க எங்கேயோ தேடி அலைந்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறுவது வளர்ச்சி அல்ல.
முறுக்கை தின்று மூடனாகிப் போனான் மனிதன். எழுச்சி இல்லா வாழ்வில் சூரிய வெளிச்சமில்லா வாழ்வை கொண்டு வாழ்கின்றான். விஞ்ஞானத்தில் அணுகுண்டை தயாரித்து பிறரை அழிப்பது தான் வளர்ச்சி என்று பிதற்றுகின்றான்.
முன்னால் வீட்டிற்கு கதவுகள் இல்லாமல் வாழ்ந்தான். இப்போது காவல் வைத்து, கவலையில் ஆழ்ந்து, கண் உறக்கம் இல்லாது வாழ்கின்றான். முன்னால் உயிர் போகும் வழி தெரிந்து வாழ்ந்தான். மரணத்தை கணித்து வாழ்ந்தான். எல்லாம் அறிந்து வாழ்ந்தான். இப்போது அறிவை தொலைத்து ஆணந்தமில்லாது வாழ்கின்றான்.
கை, கால் மடக்கி யோகா, தியானம் என்று சோம்பி உழைப்பை மறந்து உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் நூறு கடமைகள் இருக்க, இவன் கடவுளை தேடி, நாடு விட்டு, கண்டம் விட்டு, மலை ஏறி, மகத்துவம் இல்லாது வாழ்கின்றான். இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்க எங்கெங்கோ தேடி அலைகின்றான்.
முதலில் தன்னம்பிக்கை கொள் ! பின் உன் உள்ளிருக்கும் ஆண்மாவை சந்தோஷப்படுத்து ! கடவுள் உன்னை தேடி வருவான் ! தன் கடமையை செய்யாமல் கடவுளை தேடிக் கொண்டிருக்கின்றான். இந்த அற்ப மனிதனின் அறியாமையை என்ன சொல்வேன் ?
உன் அறிவியலும் ஆன்மீகம் தான் என்பதை மறவாதே ! ஆதிகாலத்தில் இருந்த அறிவியல் கோடான கோடி மடங்கு பெரியது ! முன்னால் ஆக்கத்திற்கு பயன்படுத்தினான். இப்போது நான் என்ற கர்வத்தில் அழிவிற்கு பயன்படுத்துகின்றான்.
சகதண்டமாருதம் உக உண்டமாருதம் உண்று தின்று உணராதிருப்பது ஏனோ ? சகத்தை சகதண்டம் என்று புலம்புகின்றாயே, உன் முதுகும், பாதமும் தட்டை வடிவாய் கொண்டாயே ? ஏனடா உணரவில்லை ?
வளர்ச்சி முதிர்ச்சியாகி மூச்சற்று கல்லறையில் அடங்கினாய். எது வளர்ச்சி என்று புரியாமல் இறக்கின்றாய். ஊன் வளர்த்தாய், உடல் வளர்த்தாய், உன் உயிர் வளர்த்தாயா ? ஊன் உடம்பை தேய வைத்தேன். திகைப்பார் யாருமில்லை. மதியை தேய்த்து வளர வைத்தேன். மதிகெட்ட மனிதன் மட்டும் மலராமல் இருந்தான். நொடிக்கு நொடி உடல் தேய்கிறது. இந்த அற்ப மனிதன் பிறந்த நாள் கொண்டாடுகிறான் ! உணரடா !
மரம் வளர்ச்சி ! மலர்ச்சி ! நீ உடல் வளர்த்தாய். பின் தேய்ச்சி, காய்ச்சி பஷ்பமாக கண்டேன். நகமும், நீள் முடியும் உருந்து முளைத்ததடா ! உன் ஊன் உடம்பு ஏன் முளைக்காமல் போனதடா ! ஆடும் ஆட்டமெல்லாம் ஆறடி குழிக்குள் அடக்கமாவதை மறந்து போனாயே ?
மரம் வளர்ந்து பிறருக்கு உதவ கண்டேன். நீ வளர்ந்து எதற்கடா உதவினாய் ? நீ வளர் ! உதவி செய்து உண்மை பேசி ஒழுக்கத்தில் நிறைவு பெறு ! நான் உன்னை உன் வாழ்வை வளர்ச்சியாக்கி மலர்ச்சியாக்குகிறேன். மரணம் இல்லா பெறு வாழ்வை கொடுத்து பேரழகாக்குகிறேன். சத்தியமாக !
நான் வளர்ந்தேன் ! மலர்ச்சியானேன் ! என் வளர்ச்சி சத்திய தர்மமடா ! நான் வளர்ச்சியாகி அகண்டமாய் விரிந்து கொண்டிருக்கின்றேன். ஆர்பரிக்கும் வெள்ளம் போல முதலில் ஓடி வருகிறாய். என் கையில் இருக்கும் தேன் (பொக்கிஷம்) கிடைக்கவில்லை என்று உடனே ஓடிவிடுகிறாய். தேனை லாவகமாக எடுத்தாலும் தேனீ கொட்டத்தான் செய்யும். எதுவும் இங்கு எளிதாக கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொள் !
எனக்குள் காத்திருப்பவன், தனது இலக்கையும், செல்வத்தையும் அடையாமல் இருக்க மாட்டான். பொறுமையோடு இருந்தால் பொக்கிஷம் கிடைக்கும் என்பது புரிந்தவனுக்கு தெரியும் ! என்னுள் கரைந்து, உன் கர்மம் பாவம் தொலைத்து, உணர்ந்து கிடைத்தால் சுகமோ சுகமானதடா !
2017 ஆம் ஆண்டு முதல் பகற் கொள்ளை பெருகும். பெண்கள் மானபங்கப்படுவர். மழைக்கு பருவகாலம் இருக்காது. பஞ்ச காலம் தலைவிரித்தாடும். என்ன செய்யப் போகின்றாய் ? வல்லரசு நாடுகள் எல்லாம் சொல்ல வொனா துயரத்தில் தவிக்கும் ! தென்னாடு வளர்ச்சியாகும் ! வட நாடுகள் வீழ்ச்சியாகும் ! எல்லா நாடுகளிலும் கடல் நீர் உட்புகுந்து தத்தளிக்கும். இனி வரும் காலங்களில் உலக மக்கள் தன் மதத்தை மறந்து, கடவுளை தேடி கதறி அழக் கண்டேன். தர்மாக்கள் என் வலது பரிஷத்தில் ஆணந்தமாக திளைக்க கண்டேன். சொலியில் கூட சுகம் ஒன்று கண்டேன். ஆனால் உன் தோளில் புழு மொய்க்க கண்டேன். உணரடா !
வளர்ச்சி தெரியா வாழ்வில், நீ எழுச்சி பெறுவது எப்போதடா ?
வளர்மதியில் எழுச்சி நானடா !
நான் இநன்யா !

Tuesday, November 22, 2016

ஆன்மா வேறா ? உயிர் வேறா ? எனபதே அந்த விணா !


ஆன்மா வேறா ? உயிர் வேறா ? எனபதே அந்த விணா !
ஆன்மா� என்பது ஒளித்தன்மை� உடையது அதுதான் அருட்பெருஞ்ஜோதி தன்மை� உடையது .
அது இருந்த இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கிக் கொண்டு உள்ள அருட்பெருவெளி� என்னும் இடமாகும்�� .
அந்த அருட்பெருவெளி� என்னும் சமூகத்தில ஆன்மா ் உள்ளதால ஆண்டவரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது . ஆன்மாவுக்கும் ஒரு தேகம்� உள்ளது , அதற்கு ஆன்ம தேகம்� என்று பெயர் . ஒளி தேகம் என்றும் பெயர் .
அந்த ஆன்மா . . இந்த பஞ்ச பூத உலகிற்கு இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறது ,
இந்த உலகத்தில் ஆன்மா தனித்து ஒளித்தேகத்துடன் வாழ்வதற்கு வசதிகள் கிடையாது . இந்த மாயை உலகத்தின் சட்டப்படி ஆன்மா வாழ்வதற்கு ,உயிரும் உடம்பும் கொடுக்கப் படுகிறது .
அதனால் தான் நம்முடைய தேகத்திற்கு ஜீவ தேகம் என்று பெயர் . ஜீவன் என்றால் உயிர் என்பதாகும் .
ஆன்மா இல்லை என்றால் உயிருக்கும் ,உடம்பிற்கும் வேலை இல்லை ,
ஆன்மா ் இந்த உலகத்தில் வாழ்வதற்கு கொடுத்த உயிரையும் உடம்பையும் பழுது இல்லாமல் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே பழைய ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம் கிடைக்கும் .
ஆன்மா இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுத்த காரணத்தால் .துன்பங்கள் அனைத்தும் திரைகளாக ,ஆன்மாவை மறைத்து கொண்டு உள்ளது .அதற்குப் பெயர் தான் மாயா திரைகள் என்பதாகும் .
அந்த திரைகள் நீக்குவதற்கு சமய மதங்கள் பல தவறான வழிகளை காட்டி உள்ளது .அதுதான் கலை உரைத்த கற்பனைக் கதைகள் என்கிறார் வள்ளலார் .
வள்ளலார் வந்து தான் உண்மையான வழியைக் காட்டி உள்ளார் . அதற்காக ஜீவ காருண்யம்� என்றும் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின� திறவு கோல்� என்றும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்
ஆன்மா வேறு உயிர் வேறு .அதே நேரத்தில் ஆன்மா இல்லை என்றால் உயிரும் உடம்பும் இயங்காது .
உயிர் இருக்கும் வரை ஆன்மா� பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கும் .எனவே தான் ஒளி தேகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார் .ஒளிதேகம் பெற்றுக் கொள்வதுதான் மரணம் இல்லாப்� பெருவாழ்வு என்பதாகும் .
உயிருள் யாம்� எம்முள்� உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவு என்று உரைத்த மெய்ச் சிவமே !
என்றும்
உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !
எனத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .
உயிர் எல்லாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒரு திருப் திருப்பொது என அறிந்தேன் .
செயிரெலாம் தவிர்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன்
மயிரெலாம் புளகி உளமெலாம் கனிந்தே மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிர் எலாம் தழைக்கப்� பதி எலாம் களிக்கப் பாடுகின்றேன் பொதுப் பாட்டே !
எனவே அன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உண்மையை உணர்ந்து உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்யப் பணியில் அக்கரைக் கொண்டு பூர்த்தி அடைந்து .பின் இறைவன இடம் ் தொடர்பு கொண்டு அருள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் ,
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அலைய வேண்டாம் .மனிதன் சொல்லியதை விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியதை பின் பற்றுங்கள் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Saturday, November 19, 2016

*ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்*.

247) *ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்*.
*ஒரு நாள், இரு நாள் அல்ல*.
*தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்*.

*இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது*.
*அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்*.
*இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்*.
*அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்*.
*சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்*.
*அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்*.
*இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்*.
*“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை*.
*ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை*.
*அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்*.
*ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்*.
*அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்*.
*அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்*.
*கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*.
*கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு*.
*தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்*.
*மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்*.
*“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது*.
*“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல*.
*அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்*.
*அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது*.
*“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்*.
*ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்*.
*இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை*.
*“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்*.
நன்றி 

Wednesday, November 16, 2016

பெறுக்கல் எண்ணிக்கையை பெருக்கி உன் விதியாக்கி வேதன் உனை படைத்தான். விதி தெறியா விளம்புகின்றாய். நான் ஏழாய் நின்றவன் ! உன் விதியை சதிராடுபவன் !


Inanya Maha Munivar
246) 17-11-2016
பெறுக்கல் எண்ணிக்கையை பெருக்கி உன் விதியாக்கி வேதன் உனை படைத்தான். விதி தெறியா விளம்புகின்றாய். நான் ஏழாய் நின்றவன் ! உன் விதியை சதிராடுபவன் ! உன் வினையை வேறருக்க வந்தவன் ! நானே விதி !
விதி
எது விதி ? இங்கே தானியம், ஜீவராசிகள், மரம், எல்லாம் விதிக்கப்பட்டது ! நீயும் விதிக்கப்பட்டவன். உன் கர்மாவால் விதைக்கப்பட்டவன். நீ உனக்கென்று வேரொரு விதியை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் நீ மேலிருந்து பூமிக்கு விதிக்கப்பட்டு தான் வருகிறாய். இங்கே எதையும் உன்னால் மாற்றிவிட முடியாது, இந்த விதியின் நாயகனை தவிற !
ஒன்று மட்டும் யோசி. எல்லாம் கண்டுபிடித்தேன் என்கின்றாயே ? அதுவும் உனக்குள் விதிக்கப்பட்டது தான் ? விதிக்கபட்ட்தை வீதியில் தேடாதே ! அது உனக்குள் தான். நீ என்று ஏதுமில்லை இங்கு. நீ கடவுள் இயக்கும் தலையாட்டி பொம்மை ! உன் கடிவாளம் கடவுளின் கையில். எல்லாம் கடவுளின் பொருள்.
நீ எதை செய்தாலும் படைத்தவனிடம் படைத்து விடு. எல்லாம் இன்பமயமே ! பாதிரி, பாரி ஜாதம், புஷ்கரி தேவ மலர்கள் ! அவைகள் பூமியில் ஏன் படைக்கப்பட்டது என யோசித்துப் பார் ! அவரோகி பாலில் ஆளுமையை செய்யும் விதி உண்டு ! நீ உணராதிருப்பது ஏனோ ?
உன் பிறப்பும், இருப்பும், இறப்பும் விதிக்கபட்டது. எல்லாம் விதிக்கப்பட்டது. நீ யுகத்தில் இருந்து என்ன பலன் கண்டாய் ? சலிப்புற்று, வெறுப்புற்றே வாழ்கின்றாய். நீ நினைத்து ஏது முடியும் ? நாளையே இறக்க முடியுமா ? ஒன்றும் முடியாது. பின் ஏன் நான் என்று மார்தட்டுகிறாய் ? என்னால் முடியும் என்று ஏன் பிதற்றுகிறாய் ?
பூமியில் குரங்குக்கும், வெற்றிலைக்கும் கூட கை ரேகைகள் இருக்கின்றன. அது மனிதனிடம் சென்று எதிர்காலத்தை கேட்பதில்லை. கைரேகை பார்த்து என்ன பலன் கண்டாய் ? உன் தலை ரேகையை யாராலும் கணித்து சொல்ல முடிந்ததா ? இந்த ஆத்மத்தின் தலைவன் உன் தலை ரேகையை கணிப்பேன். வெற்றிலையில் ஆண், பெண், அலி என்ற பாகுபாட்டை படைத்த கருணைமிக்க பிரபஞ்ச நாயகன் என் தந்தை உயர்ந்தவன் ! அவன் அளவில்லாத ஆணந்தமானவன்.
நீ விதியோடு பூமியில் பிறந்தாய். ஆனால் நான் என் விதியை பூமியில் வந்து தான் நிர்ணயித்தேன். நான் நாளை செய்யும் கடமையை நேற்றே எழுதி வைத்தேன். நான் நினைத்தபடி வாழ்கிறேன். நான் எங்கேயும் (லோகம்) செல்வேன், வருவேன், நினைத்தால் எதையும் செய்வேன்.
நீ மனிதனை தேடி சென்று உன் விதியை கேட்கின்றாய். கடவுளின் பாதம் பற்று ! அவன் உன் விதியை மாற்றுவான் ! கருணைமிக்கவன் உன் கண்ணீரை துடைப்பான்.
மனிதன் தூங்கும் நேரத்தில் விதி மாறுகிறது. ஆதலால் தினமும் நல்லதே நினை ! நல்லதே செய் ! மனிதனை நம்பாதே ! கடவுளை நம்பு ! நீ உண்ணும் உணவில் ஒரு நாளைக்கு எத்தனை அரிசி என்று எழுதி வைத்தவனை மறக்காதே !
எல்லாம் விதிக்கப்பட்டது ஒரு துளி நீரில். ஒன்றிலிருந்து தான் ஒன்றை பெறுகிறாய். நீ தனியாக எதையும் விதிக்க முடியாது. புதிதாக ஒரு விதையை உன்னால் உருவாக்க முடியுமா ? ஒரு மரத்தில் பூ, பிஞ்சு, காய், கனி என எல்லாம் விதிக்கப்பட்டது. உன் பிறப்பு, இறப்பு, ஆயுள், கீர்த்தி, துன்பம் எல்லாம் விதிக்கப்பட்டது. நீ அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் உன் விதியை நீ செய்யும் தர்மத்தால் மாற்ற முடியும். ஒரு நல் குருவால் முடியும். மீண்டும் பிறவி இல்லாமல் இருப்பதற்கு முடியும். நீ நினைத்தால் பாவம் இல்லாது வாழ முடியும்.
பாவம் தொலை ! பரம் பொருள் புரியும் ! இப்படித் தான் வாழ வேண்டும் என்று உன் மனதை விதி கொண்டு விதை ! உன் வாழ்வு குறுகியது.
எறும்புக்கும் விதி வைத்தான். மரம், செடி, கொடி, புல், பூண்டு, பனித்துளிக்கும் விதி வைத்தான் !
விதியின் நாயகன் என்னுள் ! நான் விஷமக்காரன் அல்ல !
விதிக்கு முன்னால் சாக வேண்டும் என்று நினைக்காதே ! ஆர்பரித்து உன் உயிர் பூமியிலே அல்லபடும். அதனால் துன்பத்தை இன்பமாக நினை. என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல். சோதனை வந்தால் துவண்டு போகாதே !
கடவுள் உன் விதியை மாற்றுவான். என் நாமத்தை உன் நெஞ்சில் விதை ! உன் விதி மாறும் ! என் நாமத்தை விதைத்தவன் வீதியிலே புலம்பமாட்டான் ! அவனுக்கு போக போக சத்திய வழி தெரிந்துவிடும். உணர்ந்து பார். உண்மை புரியும் !
மனதில் விஷம் கலந்திருக்கின்றாய். எல்லா உயிரினமும் விஷம் சாப்பிட்டால் இறந்து விடும். ஆனால் பசு போற்றுதலுக்குரியது.
என் நாமம் சொல்ல சொல்ல உன் விஷம் கரைந்தோடும் ! நீ இங்கு வந்தது வாழ்வதற்கு அல்ல. பாவம் தொலைப்பதற்கு ! அதனாலே இந்த விதியின் நாயகனிடம் உன் விதியை கொடு. நான் நல்விதியாக மாற்றி உனக்கு மேதகு பட்டயம் எழுதி தருகிறேன். உன் தலை எழுத்தை மாற்றுவேன் !
ஏனென்றால் விதியை மாற்றும் வேதத்தின் நாயகனின் பாச புதல்வன் நான் ! உன் விதியின் சூட்சும வான் மகன் நான் ! விதியை மாற்றும் வேத வித்தகன்- சக்ககன், சத்தியன் நான் !
நான் பிரமாயுதத்தின் நாயகன் !
நான் இநன்யா !

11-11-2016 பொன்னாளான இன்று தான் (11 நவம்பர்) , பிரபஞ்சத்தின் இளவரசர், ராஜராஜன் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு பிரபஞ்சத்தில் செங்கோல் வழங்கப்பட்டது.

245) 11-11-2016 பொன்னாளான இன்று தான் (11 நவம்பர்) , பிரபஞ்சத்தின் இளவரசர், ராஜராஜன் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு பிரபஞ்சத்தில் செங்கோல் வழங்கப்பட்டது.செங்கோல் வழங்கப்பட்ட நாள் 11-11-93 !111 கோடி முனிவர்கள், 111 கோடி ஒற்றர்களை இநன்யா அவர்களுக்கு துணையாக யுகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதில் ஒரு முனிவரால் 111 கோடி முனிவர்களாக உருவெடுக்க முடியும். உலக உருமாறப் போகின்ற இந்த காலத்தில் வானில் பல அதிசயங்கள் நடக்கும் என்று கடவுள் சொல்லியுள்ளார். ஒற்றர்கள் பல கோள்களில் வந்து வேவு பார்ப்பார்கள்பல நட்சத்திரங்களும், கோள்களும் நகர்ந்து செல்லும்.11.11.93 இல் யாகவா அவர்களின் தலைமையில் இநன்யா மஹா முனிவருக்கு பிரபஞ்சத்தில் மணிமகுடம் சூட்டப்பட்டது.இனி யுக காலத்தை 48000 கோடி ஆண்டுகள் இநன்யா மஹா முனிவர் ஆள்வார்.காலம் பதில் சொல்லும் விரைவில் சத்யமாக ! காத்திருப்போம் ! அனைத்து ரகசியங்களும் விரைவில் வெளிவரும்.(யாகவா அவர்கள் எழுதிய ஒரு நூலில் இருந்து எடுத்து இணைக்கப்பட்ட புகைப்படம்)கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் !இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; 
14-11-2016 அனைவருக்கும் வணக்கம்,ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி." துர்த பௌர்ணமிவழக்கத்திற்கு மாறாக காணப்படும் இயற்கை மாற்றங்கள் இயற்கையின் எச்சரிக்கை. இன்று பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரன் ஒரு மிகப் பெரிய இயற்கை பேரழிவிற்கான அறிகுறி. வரும் காலங்களில் நீரால் மிகப் பெரிய அழிவுகள் காத்திருக்கின்றன. வரும் காலங்களில் தானியத் தேடல் மிகுதியாக இருக்கும். இனி உலக நாடுகள் அனைத்தும் தானியப் பற்றாகுறையால் தத்தளிக்கும். உலக மக்கள் அனைவரும் கடவுளை தேடும் காலம் வந்துவிட்டது. தர்மாக்களை காக்கவே நான் யுகம் வந்தேன் ! காலம் பதில் சொல்லும் வரையில் காத்திரு ! """""கடவுளின் நாமத்தையும், வேதத்தையும் சொல்லி, இன்று இரவு பால் பாயாசம் செய்து அதில் உலர் திராட்சை கலந்து, பணங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தனிப்பட்ட குடும்ப சிக்கல்கள் தீரும். மனக் குழப்பங்கள் நீங்கும்.கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.இநன்யா நமோ நம
 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
16-11-2016 உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்,நாளை (17-11-16), எழுபத்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும் அபூர்வமான நாள். பாவங்களை கரைக்கும் புணித நாள் ! ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்கள் உரைத்த வழிமுறைகளை பின்பற்றுவோம். இனி பாவங்கள் செய்யாமல், உணர்ந்து துன்பங்களின்றி வாழ்வோம்.கடவுளின் செய்தி:’’’’விதியும், மதியும், வேத வித்தகன் நானடா ! சதிபதி வாழ்வில் விதி வழி போகின்றவன் நீயடா ! உன் தொப்புள் கொடி பாவம் கரைய, வரும் வியாழக்கிழமை உன் பெற்றோரை தாம்பூலத்தில் கால்களை வைத்து நீரால் கழுவு. நீ செய்த பாவம் கரையும். ஒரு வேளை மட்டும் உணவருந்து ! பச்சை அரிசி சாதம் மட்டும் சாப்பிட வேண்டும்.என் நாமம் சொல்லி இந்த வேத வார்த்தையை 27 தடவை சொல் ! ”பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா !” பின் அமிழ்த சமித்து (நாயுறுவி சமித்து) கிடைத்தால் அதை நீரில் ஊற வைத்து (ஏழு விதை) சாப்பிடு ! கிடைக்காதவர்கள் பாதாம் கொட்டை (ஏழு விதை) ஊற வைத்து சாப்பிடு. உனக்கு தானியம் தனவாய் கிடைக்கும் சத்தியமாக ! தாய் தந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களுடன் இல்லாதவர்கள், அவர்களை நினைத்து, மேலே கடவுள் கூறிய வழிமுறைகளை பின்பற்றவும். வியாழக்கிழமை காலை முதல், இரவு 11 மணி வரையும் இதை செய்யலாம்.வேத வரிகளுக்கான விளக்கம்: பல்ய - பல நோக்கு பாவங்கள், நாசினி - பாவங்களை அகற்றி, மீண்டும் பாவம் செய்யாத மனநிலை, உகந்த - ஆண்மா சம்பந்தப்பட்ட, சாந்தினிஅமைதி, சுகந்தம் - விவரிக்க முடியாத ஆத்ம சுகம், துதி துதியந்தம் துதியந்தஹா - பாவம் முழுவதுமாக கரைந்தால் தேவர்கள் நம்மை போற்றி வணங்குவார்கள். கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் !

இநன்யா நமோ நம................

Monday, November 14, 2016

இநன்யா கடவுளின் பதிவுகள் , தொடங்க பட்ட 07-03-2015 அன்று முதல் அனைத்தும் , ஒலி , ஒளி பதிவாக ;;;;

* ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞானத் தேடல் - இநன்யா மஹா முனிவர்;;; இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015  

இநன்யா கடவுளின் பதிவுகள் , தொடங்க பட்ட 07-03-2015  அன்று முதல் அனைத்தும் , 
ஒலி , ஒளி பதிவாக உங்களுக்கு சமர்ப்பதில் , மிக மிக , சிரம் தாழ்த்தி வணங்கி பெருமை அடைகிறேன் ;;; இவன் ;;; M .K .JUPITER  PRABHAKARAN ...

இநன்யா மஹா முனிவர் - பாகம் -1 

இநன்யா மஹா முனிவர் - பாகம் -2

இநன்யா மஹா முனிவர் - பாகம் -3


ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞானத் தேடல் - இநன்யா மஹா முனிவர்;;; இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07 - 03 - 2015

244 * ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞானத் தேடல் - இநன்யா மஹா முனிவர்;;; இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015  

* ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் : ஏழாம் கடவுள் , ஏழாம்  கடவுள் என சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் மற்ற  ஆறு  கடவுள்கள் யார், யார் மற்றும் வேறு கடவுள் இல்லையா என்று கேட்ப்பீர்கள் ,

* முதல் இரு கடவுள்…"தன முனிவர் யாகவா" மற்றும் "வசியா" ,"தன முனிவரே" படைக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரை தான் நம் புராணங்களில் "பிரம்மா" என்று அழைத்தனர்."வசியா" இவர் தன முனிவரின் மனைவி. இவர் தான் மஹாலட்சுமி ஆவார். அனைத்தையும் உருவாக்குவதற்கு தான் செல்வமானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.

* மூன்றாம் மற்றும் நான்காம் கடவுள்."தவ முனிவர்" மற்றும் "நுணுவா" , "தவ முனிவர்" இவரை அனைவரையும் காப்பவர் ஆவார். இவரையே "ஆண்டவன்" என்பர். இவரையே நம் புராணங்களில் "விஷ்னு, பெருமாள்" என பல பெயர்களில்குறிப்பிடுவர்."நுணுவா" இவர் தான் தவ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சரஸ்வதி" என்று கூறுகின்றனர். காக்கும் தொழிலுக்கு தான் அறிவானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.

* ஐந்து மற்றும் ஆறாம் கடவுள்."தர்ஹ முனிவர்" மற்றும் "யன்யா" ,"தர்ஹ முனிவர்" இவரே அழிக்கும் தொழில் செய்பவராவார். இவரை தான் நம் புராணங்களில் "சிவன்" என்று வணங்கினர். "யன்யா" - இவரே தர்ஹ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சக்தி" மற்றும் பல பெயர்களில் அழைத்தனர். அழிக்கும் தொழிலுக்கு சக்தி தான் தேவை.ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.

* ஏழாம்  கடவுள் -"இநன்யா“,,,"இநன்யா" - இவர் தவ முனிவர் மற்றும் வசியா அன்னையின் ஒரே மகன். இவரையே தான் நம் புராணங்களில் "நாரதர்" என்று அழைத்தனர். நம் புராணங்கள் மற்றும் சினிமாவில் குறிப்பிட்டுள்ள நாரதர் இல்லை , இந்த கடவுள் "இநன்யா". இவர் மேற் சொன்ன ஆறு கடவுளின் ஒட்டு மொத்த சக்தியாவார். 

* ஆறு கடவுளின் சக்தியாவார் இந்த ஏழாம் ஆனவர் , அவரே "இநன்யா" , எங்கும் "இநன்யா" ,  எல்லாம் "இநன்யா" , அனைத்திலும் "இநன்யா" மட்டுமே , இநன்யா நமோ நம ,  சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம .

* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் !  ( உயர்வு )’யா’ என்றால்  மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …'''' இநன்யா நமோ நம '''

* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை , “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி)பார்த்து விட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. 

* நீரை கைகளினால் தொடவும் கூடாது!இதை தொடர்ந்துசெய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம்.ஆன்மா சிரிக்கும்! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும்! இது தான் உணர்தல்!இது ஆன்மத் தொடர்பு! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம். 

*தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை!கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள்!நீர் வைத்து இநன்யா நாமம் சொல்லுங்கள்.. 

* சொல்லி முடித்து வானம் பார்த்து உங்கள் நோக்கத்தை நினைத்தவாறு அந்த நீரை ப்பருகுங்கள்.தொடர்ந்து செய்யுங்கள். ஒன்று உங்கள் பிரச்சனையை அவர் தீர்ப்பார், இல்லையேல் பிரச்சனையை தீர்க்கும் வல்ல மை தருவார்.. மொத்தத்தில் உங்கள் பிரச்ச னை இல்லாததாகும். இநன்யா நமோ நம.

*இநன்யா நமோ நம. 

*சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.  

*ப்ரண ப்ரணண ப்ரணஹா. 

*ஷாதுத்வனஹாய ஷாதுணா.  
    
*வசி வசியந்த ஹாய வசி,நம் நமஹாய வசி, சுபிட்சத் வணஹாயவசி.   

* சுப நவ யவ சுபிட்சம். 

*உஹந்தம் உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்.

*சுஹா சுஹானுவாய சுஹா யாகப் ப்ரவத்வனஹாய சுஹா யாகவசி இநன்யா சுபிட்ஷத்வனஹாய சுஹா.

*சப்த சாந்தி,சப்தஹாய சாந்தி,சப்தத்வனஹாய சாந்தி, நாதப்ப்ரவத்வனஹாய சாந்தி,நம் நமஹாய சாந்தி,சாந்தி,சாந்தி.

*அரி அரியந்தம் அந்தம் யந்தம் யாக யந்தம் அரிதுணாய யந்தம்.

*நுணுவா மனோ வசி சுபிட்சம்.

*உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான்,நான் இநன்யா !

இநன்யா நமோ நம .........

Wednesday, November 9, 2016

என்னுள் மன்னுதல் ஆக யோசி ! உன் உயிர் ஆணந்த கூச்சலாடும் ! மேகவாயில் அள்ளி மறைந்திருக்க கடவுள் இல்லை என்று பிதற்றலாகுமோ ?


Inanya Maha Munivar
10-11-2016
243 என்னுள் மன்னுதல் ஆக யோசி ! உன் உயிர் ஆணந்த கூச்சலாடும் ! மேகவாயில் அள்ளி மறைந்திருக்க கடவுள் இல்லை என்று பிதற்றலாகுமோ ? தன்னை வெறுப்பவன் கடவுளை வெறுப்பான். உணர்ந்தால் துன்பமில்லை ! நீ உணராதிருப்பது ஏனோ ?
எல்லாம் ஒன்றில் ஒன்றியது
மூலம் ஒன்று தான் !
மூன்றாம் பிரிதலின் தத்துவம் கருநீர், புன்னீர், பிண்டம் மூன்றும் ஒன்றாய் நிலை பெறும் தத்துவம் தான்.
தன்னை வெறுப்பவன் கடவுளை வெறுப்பான். தான் கேட்டது உடனே கிடைக்கவில்லையே என்பவன் தான் கடவுள் இல்லை என்று பிதற்றுவான். ஒரு துளி காற்று தானே உன்னை இயக்குகின்றது ? இது ஒன்று போதுமே நீ உணர !
உடல் வேறு, பணி வேறு, வேலை வேறு, மும் மூன்றும் மூன்றாய் இருந்தாலும் உள்ளே ஸ்வேதம் ஒன்று தான் ! ஒன்று தான் அனைத்தையும் இயக்குகிறது ! ஆறாய் பிரிந்து ஏழில் நின்றதும் அது தான் ! உன் தலையில் இருக்கும் ஒன்று தான் ஆறாய் பிரிந்து ஏழாவதாக இருக்கும் இருதயத்தை இயக்குகின்றது !
சிரவன் என்ற முருகன் ஆறு தலையோடு பிறந்தான் என்கின்றான். நீ யுகத்தில் பத்து தலை, ஆறு தலையோடு எங்காவது குழந்தை பிறந்ததை பார்த்தாயா ? எல்லாம் அறியாமை இங்கு ! தலையில் உள்ள ஆறு சூட்சும நரம்பை அறிந்ததால் முருகன் கடவுள் என்று போற்றப்பட்டான். ஆறு நரம்பை இராவணன் இசைத்தான். தன்னை கடவுளுக்கு மேலாய் கருதினான்.
நீயும் ஆறு நரம்பை இசைக்க கற்றுக் கொள். ஆண்மாவை அறிவாய் ! உன் உயிர் ஆள்வதற்கு கற்றுக் கொள்ளும் !
ஒன்று மூன்றாய், மூன்றுக்குள் மூன்று ஆறாய், ஏழாய் நின்றது. ஆணந்த தூறல் ஆர்பரிக்கும் வெள்ளமாய் மாறி ஒன்று சேர்ந்து எல்லா நீரும் பூமியை நனைத்து கடலில் சென்று கலக்கும் தத்துவம் தான் இது ! முடிவில் ஒன்று தான் !
மழை நீர் கடலில் கலக்க பதினாறு நாள் கரையில் காத்திருக்கின்றது. இந்த மனிதன் தான் கடவுளை கலந்து, அறிய காத்திருப்பதில்லை !
எத்தனையோ யுக யுகமாய் ஞானிகளும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் அவன் பாத கமலத்தை பார்க்க காத்திருக்கின்றார்கள். ஆனால் இந்த மனிதன் தான் ஒரே நாளில் விதை போட்டு ஒரே நாளில் கனியை எதிர்பார்க்கின்றான்.
சத்தியமடா ! என் நாமம் உனக்கு எல்லாம் தரும் ! ஆனால் நீ கண்டதை வணங்காமல் கண்டதையும் வணங்கி இன்பம் தொலைக்கின்றாய். எதுவும் வேண்டாம் என்று நினைத்தால் ஞான தெளிவு வரும். ஆனால் நீ எதுவும் வேண்டாம் என்று நினைப்பது மரணத்தின் வாசலில் நிற்கும் போது தான். நீ வேண்டாம் என்று நினைப்பதற்குள் மரணம் வந்து விடுகிறது. பின் எப்படி உணர்வாய் ?
அசைவற்று இரு !
ஆழ்ந்து நினை ! ஆர்பரிக்கும் மனதை நான் அடக்கி உனை அறிய வைப்பேன் ! தெளிந்த நீரில் அலை இல்லாத இடத்திலே ஆழம் அதிகம் உண்டு. உள்ளே ஆளுமையும் நிறைய உண்டு. நீயும் அசைவற்று இரு ! உன்னில் ஆழமாய் புதைந்திருக்கும் ஞானம் வந்தடையும். இந்த இநன்யா நீ உண்ணும் வரை விடப்போவதில்லை !
நான் உன்னை உணர வைப்பேன் ! நீ உணரும் வரை உணர்ச்சியூட்டி கொண்டே இருப்பேன் !
பிறந்து மறைவது வாழ்க்கை அல்ல. மீண்டும் பிறவாதிருப்பதே பிறப்பின் நோக்கம். ஆழ் கடலில் (ஆண்மா) உனக்கு முத்தெடுக்க சொல்லி தருகிறேன். அந்த பேராணந்தத்தை பருக சொல்லி தருகிறேன். நான் போகும் வழி சத்திய வழி !
உன்னை நல்வழிப்படுத்தும் என் நாமம் இந்த சம்சார பந்தத்திலிருந்து உன்னை விடுவிக்கும் ! ஆணந்த நிலையை அள்ளி தரும் !
கூர்மமும், மச்சமும் கோயிலில் ஆக்கிரமிக்க வைத்தான். ஏன் என்று யோசி !
எண்ணத்தாலே தன் முட்டையை பொரிக்கும் தத்துவம். உள்ளார்ந்து யோசி. கடவுள் நிலை வந்து விடும் ! கடவுள் நிலை என்றால் பேராத்மாவை உணர்வது ! படைத்ததை ஆராய்ச்சி செய்கின்றாய். என்னை ஆராய்ச்சி செய்து பார் ! இகலோக பதவி தருவேன். சத்தியம் நானடா, சசிகரம் சத்திகமும் நானடா !
ஐங்கரன் எனை மறந்து நீ கைங்கரனாக போனாயே ? என் நாமம் சொல் ! நீ என்னுள் மன்னுதல் ஆவாய் !
கூவிளம் அறிந்தாய். குறை போக்கும் அருமருந்து என்று பிதற்றினாய். உண்பது போல் உணர்ந்தாயோ நீ ? மாய மலர்களில் ஐந்து இதழ்கள் மட்டுமே இருக்கும். அதற்கும் உன் ஐவிரலுக்கும் சூட்சுமம் இருக்கின்றது. உன் ஐவிரல்களால் அந்த மலரை தொடும் போது ஐந்து இதழ்களும் தங்கமாய் மாறும ! ஏனடா உணரவில்லை நீ ?
கையாளத் தெரியாதவன் கண் மூடி தியானிக்கின்றான். நாறும் உடலை ஆரணங்கு, பேரணங்கு என்றான். ஆத்மாவின் நித்ய போகம் ஆரணங்கு என்பதை மறந்தான். யாக பிரஸ்தத்தின் உபராசன் இந்த இநன்யா என்பதை மறந்தான்.
ஆறும் உள்ளடக்கி ஒன்றாய் இருக்கின்றேன். எல்லாம் எனக்குள் ஒன்றியது தான். எட்டும் வெட்டனெ மற. உனக்கு எட்டா தத்துவம் அறிய வைப்பேன். எல்லாம் ஒன்றாய் ஒன்றியது ! ஓர்மையின் உவமை உச்சத்தில் நின்றது. உணரடா !
உண்மையில் நன்மை நானடா !
உன்னில் ஒன்றானவன் நான் !
நான் இநன்யா !

Thursday, November 3, 2016

ஏகாரவல்லியில் ஸ்வேத சாயல் உண்டு ! முக்கனி என்றாய் மூலத்தை மறந்து தளுகனாக திரிகின்றாய், தயாநிதியின் பாச படைப்பை மறந்து. ஏனடா ?


Inanya Maha Munivar
03-11-2016
242 ஏகாரவல்லியில் ஸ்வேத சாயல் உண்டு ! முக்கனி என்றாய் மூலத்தை மறந்து தளுகனாக திரிகின்றாய், தயாநிதியின் பாச படைப்பை மறந்து. ஏனடா ?
நான் நல்லதே செய்வேன் !
நீ எதற்கும் தலைவன் அல்ல. உன் உயிர் தான் உனக்கு தலைவன் ! இறந்தால் பிணம் என்று சொல்லக் கண்டேன்.
புண்ணீர் அறியாது, செந்நீர் உணராது திரை மறை காயாக வாழ்கின்றாய். என் பாதை பரியவம் என்பதை புரிந்து கொள் !
என்னை அறிந்தவன் வாழ்வான் ! நோயில்லா பெரு வாழ்வு கொண்டு ஆணந்த நிலையில் பூமியில் ஆள்வான் ! மரணத்தை வெல்வான் ! ஏனென்றால் இநன்யா உன் விதி. வினை அறுக்கும் சூட்சுமம். மேழி கிருட்டிகன் இனி மேன்மையடைவான். பொச்சரிப்பில் புன்னகை மறந்தாய். பூவாய் உன்னுள் மலர்ந்திருக்கும் ஸ்வேதமும் தான் மறந்தாய். எல்லாம் மறந்து எங்கே போகின்றோம் என்று தெரியாமல் பயணித்து கொண்டிருக்கின்றாய்.
என் பலம் சொல்லிமாளாது. ஆனால் எனக்கு பலவீனம் என்று ஒன்று உள்ளது. அது தான் என் அன்பு. என் பேரன்பை எல்லோருக்கும் கொடுப்பதால் நான் மதிக்கபடுகின்றேன். நீயும் அன்பாய் இரு ! தேவர்களால் மதிக்கப்படுவாய் ! இந்த ராஜராஜன் இநன்யா உன்னை எப்போதும் காப்பேன் !
நான் எப்போதும் பூமித் தாயின் மடியிலே நித்திரை கொள்கின்றேன் ! நீ பூமித்தாயின் தொடர்பை விட்டாய். எப்போதும் மிதியடி அணிந்து துன்பத்தில் மூர்ச்சையாகி போனாய் ! வாரம் ஒரு நாளாவது மிதியடி இல்லாமல் நடக்க பழகு. உன் பித்தம் தெளிவாகும் ! பதற்றம், பயம் போகும் ! உன் உள்ளொலி உனை உற்று நோக்கும் !
மரத்தை நோக்கி நீ கல் எறிந்தால் உனக்கு கனி தரும். அதே போல கடவுளை நீ நிந்தித்தாலும் உனக்கு நல்லதே செய்வார் ! கடவுள் கருணைமிக்கவன் என்பதை உணர். துன்பங்கள் யார் கொடுத்தாலும் நன்மை செய்ய நினை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் !
இனி புது புது வியாதிகள் தோன்றும் ! மருத்துவ உலகம் ஸ்தம்பிக்கும். என்ன செய்ய போகிறாய் நீ ? கர்மா , பாவம் பெருகியதே காரணம் ! உன் சரீரம் பக்குவப்பட்டால் நற்குணம், நற்பண்பு, நல் அன்பு உருவாகும் ! வெந்தபானை தான் இங்கே நிறைவு தரும் !
நான்காம் துண்டமதியில் எக்காரியமும் செய்யக் கூடாது என்பார்கள் சித்தர்கள். ஆனால் ஞான பெண்களுக்கு மாத மாதம் வரும் கருவு புன்னீர் வந்து நான்காம் நாள் கண்டிப்பாக சேர வேண்டிய சூசகம் சொன்னான் சித்தர்கள் ! நீ உணராது இருப்பது ஏனோ ?
இன்பமும், நிறைவும் இருவருக்கும் உண்டு என்ற சூட்சுமத்தை நீ உணராது இருப்பது ஏனோ ? நீ படும் பாட்டுக்கும், துன்பத்திற்கும் நான் காரணம் அல்ல ! உன் வினை தான் ! உன் பாவம் தான் ! ஆனால் நீ விதியின் மேல் பாரத்தை போட்டு தப்பிக்க நினைக்கின்றாய்.
கடவுள் சோதிப்பதில்லை. அவன் எப்போது சோதிப்பான் ? நீ தீமையை செய்ய நினைக்கும் போது, உன் முன்னால் வந்து உனக்கு சுட்டி காட்டுவதற்கு சோதனை தருவான். கடவுள் அன்பானவன், கருணைமிக்கவன் !
எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கு ! மனதில் குப்பையை கொண்டு கொட்டாதே ! ஊருக்கு உபதேசம் செய்து நீ தீமையை செய்யாதே ! உன் ஒரு விரல் பிறரை நோக்கினால் மற்ற நான்கு விரல்கள் உன்னை நோக்குகின்றன. இங்கு மிக கடினமான காரியம் என்று எதுவுமில்லை. நீ நினைத்தால் எதுவும் நடக்கும் ! நீ வேண்டுமென்றால் வர வைப்பதும், வேண்டாமென்றால் ஒதுக்கி வைப்பதும் உன்னால் மட்டும் தான் !
நீ நல்ல செயல் செய்தால் கடவுள் உன்னை பார்த்து சிரிக்கின்றான். தீமையை செய்தால் வெறுக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிறருக்கான உரிமையை தட்டி பறிப்பதில்லை. பாதையை அடைப்பதில்லை. அவைகள் நல்லதே செய்கின்றன.
நன்மை, தீமை எல்லாம் உனக்கு தெரியும். பிறரின் மேல் பழி போடாதே ! நீ செய்யும் செயலை லோக காண்ட முனிவர்கள் கண்கானிக்கின்றார்கள் என்பதனை மறந்துவிடாதே ! யுகத்தில் எல்லா இடத்திலும் கண்கள் உண்டு ! தீமையை செய்து யாரும் தப்பிக்க முடியாது. தண்டனை அனுபவத்தே ஆக வேண்டும். ஆதலால் நன்மையை நினை !
நல்லதே நினை ! நல்லதே நடக்கும் ! நான் உனக்கு நல்லதே செய்வேன் எப்போதும் ! நன்மையை நாளெல்லாம் தரும் என் நாமம் !
நாயகன் என் ஒளி எப்போதும் உன்னை சுற்றி !
புன்னகையாய் இரு ! இந்த புனிதன் அருள் உண்டு !
நன்மையில் வெண்மை நான் !
நான் இநன்யா !