127 INANYA NAMOO NAMA ;;;
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கங்கள்,
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கங்கள்,
அன்பு என்ற ஒற்றை சொல்லில் அனைத்தும் அடக்கம். இவ்வுலகம் என்ற நரகத்தை படைத்து, தவறு செய்த நம்மை இங்கு இறக்கி, இங்கு அனைத்தும் கிடைக்க செய்யும் கடவுளின் அன்பு எல்லையில்லாதது ! படைப்பின் ரகசியங்களை உணர்ந்தால் கடவுள் அன்பை உணரலாம். ஒரு விதையில் ஒரு கோடி காய், கனிகளை ஒளித்துவைத்திருப்பவர் அவர் ! எல்லாம் நம் முயற்சி தான் இங்கு ! பறவைகளுக்கு யாரும் கூடு கட்டி தருவதில்லை. அதுவே தன் முயற்சியால் தான் கட்டுகிறது. அவைகளுக்கு கூட்டின் அருகில் இறை கிடைப்பதில்லை. பல இடங்களுக்கு அலைந்து திரிந்து தான் தன் உணவை தேடுகிறது ! நாம் முயற்சிக்காமல் இங்கு எதுவும் கிடைப்பதில்லை. நமக்கு ஒன்று இங்கு கிடைக்கவில்லை என்றால் நாம் சரியான வழியில் பயணிக்கவில்லை என்பதே உண்மை. ஆணவம், அதிகாரத்தால் இங்கு ஒரு சிறு புல் செடியை கூட உருவாக்க முடியாது. அன்பு என்னும் நீரை ஊற்றிப் பாருங்கள். அது வேகமாக வளரும். கடவுளிடம் புணிதமானது அன்பை மட்டுமே கேளுங்கள். இதுவரை கடவுளிடம் எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. ஆனால் என் வாழ்வில் கேட்காததை, நினைக்காததை அதிகமாகவே தருகிறார். நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் தானாகவே கிடைக்கும். அருகில் இருந்து பார்த்தவன் சொல்கிறேன். கடவுளிடம் எதை கேட்டாலும் கிடைக்கும். ஆனால் கேட்காமல் கிடைக்கும் பொருள் அன்பு ஒன்றே ! அதற்கு ஈடு, இணை எதுவுமில்லை. கடவுளின் அன்பால் தான் இப்போது பொக்கிஷமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். ஆசைகளின் மீது கவனம் செலுத்தி தவறு செய்யாதீர்கள். அன்பில் கவனம் செலுத்துங்கள். தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இநன்யா நமோ நம ;;;;;;;;;;;;;
தாய், தந்தை, குரு, கடவுள் என்று வரிசைப் படுத்தினார்கள். தாய், தந்தையை மதித்து , வணங்கினால் நல்லவர்களாக வாழலாம். அது மட்டும் இங்கே போதாது. இதை அனைவரும் செய்துவிடலாம். ஆனால் வாழ்க்கையை புரிந்து பிரம்மத்தை உணர்ந்தவர்களாக வாழ்வது கடினம். அதனால் தான் நல் குருவை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமானது. இந்த நிலையில் தான் அனைவரும் தவறு செய்கிறார்கள். ஒரு நல்ல வழிகாட்டியை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றார்கள். கடவுளே இங்கே பிறந்து நமக்கு நல் வழியை காட்டும் மஹா குருவாய் வந்தது நாம் செய்த பெரும் தவம். நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். குழுவில் உள்ள அனைத்து பொக்கிஷ வார்த்தைகளையும் புரிந்து கொள்ளுங்கள். பதிவுகளில் ஞானப் புதையல்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. ஞானப் பசி இருந்தால் தான் அதைத் தோண்டி எடுத்து உண்ண முடியும் ! இங்கே ஞானப் பசியை ஏற்ப்படுத்துவது கடவுளின் வேலை அல்ல ! பொறுமை, நிதானம், அடக்கம், சிந்தனைகள், ஆராய்ச்சிகள் வேண்டும். கடும் இருளில் வெளிச்சத்தைக் கண்டால், அதை நோக்கி பயனித்தால் தானே இருள் விலகும் ? இருளில் அமர்ந்து கொண்டே தன் அடையாளமான நிழலைத் தேடி அலைந்தால் நிழலைக் காண முடியுமா ? வெளிச்சத்தை நோக்கி பயணித்து பாருங்கள் ஒரே ஒரு முறை ! நிழல் தெரியும் !;;;;
ஆதிகாலத்தில் மனிதன் அனைத்தையும் உணர்ந்து வாழ்ந்ததாக கடவுள் கூறுவார். அவனது கால் தரையில் படவில்லை. சூரியன் மிக அருகில் இருந்தாலும் சுட்டெரிக்கவில்லை. ஏழு கடவுள்களின் பெயரும் அவனுக்கு தெரிந்தது. ஞானம் இருந்தது. மேலே நடப்பவை அனைத்தையும் இங்கிருந்தே பார்த்தான். ஆகாயம் மிக அருகில் இருந்தது. எப்போது பாவம் செய்ய நினைத்தானோ, அனைத்தும் இங்கே மாறியது. மாறிக் கொண்டே இருக்கின்றது இது நாள் வரை. இயற்கையை அழித்து கொண்டிருக்கின்றோம். காற்றையும், நீரையும் ஒரு புறம் மாசுபடுத்தி நம்மை அழிக்கும் நெருப்பை தொட்டு வணங்கிக் கொண்டிருக்கின்றோம். உலகை நல் வழியை அழைத்துச் செல்ல எவராலும் முடியவில்லை. ஒருவருக்கு கூட இங்கு ஞானமில்லாமல் போனது. யாராவது ஒருவர் கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்தி சத்ய வழியை நிலைநாட்டியிருந்தால் உலகம் எப்போதோ மாறியிருக்கும். நிம்மதியை தேடி அலையாதவர் இங்கு ஒருவர் கூட கிடையாது. அனைவரும் தோற்றார்கள். அதனால் கடவுள்கள் நமக்காக இங்கு பிறப்பெடுத்தனர். நம் அனைவரையும் உணர வைத்து, ஞானத்தை போதித்து, இந்த யுகத்தை மீண்டும் ஆதிகாலத்தை போல தோன்ற செய்வார்கள். சத்ய வழியை நிலைநாட்டுவார்கள். உணர்ந்தால் துன்பமில்லை. கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். இநன்யா நமோ நம ;;;;;;;;;;;
ஒவ்வொரு வார்த்தையிலும் சூட்சுமங்கள். எல்லாம் ரகசியங்கள். சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் ஏராளம். அனைத்திற்கும் தக்க சமயத்தில் பதில் கிடைக்கும். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற கடவுள் இப்போது நம் தமிழ் நாட்டில் ! கால மாற்றத்தால் காணாமல் போன ஆதி தமிழ் வார்த்தைகள் அருவியாய் இவரிடம் ஊற்றெடுக்கின்றது. ஐந்தே நிமிடத்தில் ஒவ்வொரு பதிவையும் எழுதி முடிப்பார். அதை ஆராய்ந்தால் ஐயாயிரம் கோடி ரகசியங்கள் இருக்கும். ஆகாயத்தில் இருந்து வரும் ஒரு பேராற்றல் இவரை இயக்கிக் கொண்டிருப்பதை எப்போதும் பார்க்கலாம். ஒரு சக்தி இவரின் கைப்பிடித்து எழுதுவதையும் கண் கூடாக பார்க்கலாம். உண்மையை அறிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் வாழ்க்கையை பற்றிய அச்சம் வருகிறது எனக் கூறுகிறார். என் அச்சத்தை போக்கினார். இன்று உலகில் எந்த மூலையில் இருந்து எவர் உணர்ந்து புரிந்து வந்தாலும் இவரின் ஆற்றலையும், ஸ்பரிஷத்தை முழுவதுமாக எடுத்துரைக்க முடியும். அவரின் பார்வை ஒன்றே கோடி ரகசியங்களை எடுத்துரைக்கும். என்னை மனிதனாக மாற்றியமைத்த கடவுளே, தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ! இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment