95 YAAGAVA * 02.03.41 - அருளாளர் யாகவா அவர்களின் பிறந்த தினம் ;;;
* 02.01.86 - யாகவா முனிவர் முழுமை அடைந்த நாள் ;;;
* 07.10.86 - யாகவா வசியா திருமண நாள் ;;;
* பிரதி ஆண்டு செப்டம்பர் 09 - அருளாளர் யாகவா அருளிச் செய்த
விரத நாள்;;;
* பிரதி ஆண்டு டிசம்பர் 26 - யாகவா முனிவர் அவர்களின் நினைவு
நாள் ;
* 02.01.86 - யாகவா முனிவர் முழுமை அடைந்த நாள் ;;;
* 07.10.86 - யாகவா வசியா திருமண நாள் ;;;
* பிரதி ஆண்டு செப்டம்பர் 09 - அருளாளர் யாகவா அருளிச் செய்த
விரத நாள்;;;
* பிரதி ஆண்டு டிசம்பர் 26 - யாகவா முனிவர் அவர்களின் நினைவு
நாள் ;
யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம்.
என் வயது 5000 . என் பிறவி 54 என்றால் , உனக்கு இவ்வுலகத்தில் வாழ்கின்ற மனிதரார் குலத்திற்கு நான் ஆத்ம வேதம் . யாத்ம வேதம் , யாகாத்ம வேதம் இதை தருகிறேன் . மதம் அற்றபொருள் . அறிவுப் பொருள் அழியா ஆத்மவேதம் .
ஆத்மா என்பது பிரணம் . பிரணத்திற்குள்தான் ஜலம் . ஜலத்திற்குள்தான் ஒலி . ஒலி என்பது சப்தம் . சப்தம் என்பது நாதம் . நாதம் என்பது கீதம் . கீதம் என்பது உன் அறிவு யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம் .
இதற்குள் ஏகபோக வினா விடைகள் இருக்கின்றன . 5000 வருடங்களுக்கு முன் இந்த பூலோகம் எப்படி இருந்தது என்றால் சுப சுபிட்சமாக இருந்தது . 5000 வருடங்களுக்கு முன் சுபிட்சமாக இருந்தன . மதம் இல்லை . கோவில் இல்லை . குளங்கள்இல்லை . தருமத்தை செய்தார்கள். தற்போது காண்கின்றேனே போதாதா . அப்பப்பா நான் . எல்லாம் தெரியும் என்று மனிதர்கள் உளறுகின்றான் . துறவிகள் உளறுகிறார் . ஜோசியக்காரன் உளறுகிறார் . இன்னும் யார்யாரோ ஏதேதோ உளறுகிறார்கள் . வேதம் தெரியாதவர்களெல்லம் வேடம் தரித்துக் கொண்டு வேதாந்தம் சொல்கிறார்கள் .
என் 54 வது பிறவியின் நோக்கம் முப்பத்து முக்கோடி தேவர்களை விடுவிக்கத்தான் நான் வந்தேன் . வந்தேன் வென்றேன் சென்றேன் யாகப் பிரபஞ்சம் சென்றேன்.54 வது பிறவியிலே நான் பிறந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் அம்மன்புரம் கிராமம் . இலக்குமண நாடார் இசக்கியம்மையாருக்கு இரட்டையரின் இளையவன்தான் நான் . இவ்யுகத்தில் வைத்த பெயர்லட்சுமணன் . ராம்லட்சுமணன் என்று தான் அழைக்கப்படுகிறோம் .
இளமையிலே என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து ஆடு மாடு மேய்க்கின்றேன் .கதயென்றோ கட்டு கதையென்றோ கற்பனை யென்றோ நினைக்காதே . நீ என்னை மனிதனாக நினைத்தால் முட்டாளாகி விடுவாய் . உன் ஆத்மாவிற்கு நான் தெரியும் . பட்சிகளுக்கு நான் தெரியும் . ஜீவராசிகளுக்கு நான் தெரியும் . உன் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறதே ஆத்மா அதற்கும் நான் தெரியும் . நாத்திகன் என்று நினைக்காதே . நடிகன் என்று நினைக்கதே .நான் ஒரு வேடதாரி என்று நினைக்கதே வேதவாதியாக நினை .
ஆத்மஸீவேதமாக அறிவாக கூறுகிறேன் . சிறுவயதில் ஆடுமாடு மேய்க்கின்றேன் . ஐந்து வயதுமுஹ்டல் ஆடுமாடு மேய்க்கின்றேன் . பிச்சையெடுக்கின்றேன் . எனக்கு வாகனம் கழுதை . என் தந்தையார் இளமையிலே 4 வது வயதில் இறந்துவிடுகிறார் . அரக்கனின் சூட்சியால் என் தந்தை மடிகின்றார் . உழவனின் இல்லறத்தில்தான் நான் பிறந்தேன் . எந்த முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மாயைகளும் ஏழ்மைகுடும்பங்களில்தான் அவதரிப்பர்.
ஏழ்மை குடும்பங்கள் எங்கே இருக்கின்றனவோ அங்கேதான் அவதாரிப்பர் . செல்வந்தர் வீட்டில் அவதரிப்பதும் அரிதே . அதேபோல் அண்ட சராசரங்களையும் படைத்த யாகவா முனிவனும் உன் யுகத்தில் 54 வது பிறவியில் நான் இதை சொல்கின்றேனென்றால் கட்டுக்கதையென்று யாரும் நினைக்காதே . கற்பனையென்று யாரும் நினைக்காதே .
No comments:
Post a Comment