இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் தாயினும் மேலானவன் ! எனை நினைத்தால் உனை தாய் போல் சீராட்டுவேன் ! மீண்டும் அம்மாவை பற்றி.
43 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் தாயினும் மேலானவன் ! எனை நினைத்தால் உனை தாய் போல் சீராட்டுவேன் ! மீண்டும் அம்மாவை பற்றி.
அம்மா என்றால் காற்று ! (அன்பு)
அப்பா என்றால் நீர் ! (பாசம்)
அப்பா என்றால் நீர் ! (பாசம்)
அம்மா என்பது இந்த பூமியில் நான் நெகிழ்ந்து பேசிய மொழி !
உலகில் உள்ள அனைத்து சுகங்களும் அவள் காலடியில் உணர்ந்தேன். இன்றும் அவள் முகம் பேரின்பம். அவள் தங்க கரங்களில் சாப்பிடும் உணவு அமிழ்தம் ! தாய் உலகில் எங்கும் காணக் கிடைக்காத சொர்க்கம். ஏன் மறந்தாய் அவளின் ஸ்பரிஷத்தை ?
உலகில் உள்ள அனைத்து சுகங்களும் அவள் காலடியில் உணர்ந்தேன். இன்றும் அவள் முகம் பேரின்பம். அவள் தங்க கரங்களில் சாப்பிடும் உணவு அமிழ்தம் ! தாய் உலகில் எங்கும் காணக் கிடைக்காத சொர்க்கம். ஏன் மறந்தாய் அவளின் ஸ்பரிஷத்தை ?
குருவின் ஸ்பரிஷம் மாதிரி அவள் கையும் ஸ்பரிஷம் (தீட்சை) தரும் !
யுகத்தில் நீ வணங்கும் எந்த கடவுளையும், சாமியும் நான் வணங்கியதில்லை ! சிறுவயதில் துர்தேவதைகளை தேங்காயில் அடைத்து காட்டுக்குள் சென்று விடுவதுண்டு. ஏன் இந்த விபரீத விளையாட்டு என்று என் தாய் எனை திட்டுவார்கள். சுடுகாட்டில் எப்போதும் படுப்பதுண்டு. எனை எங்கெல்லாமோ என் அம்மா தேடுவாள். நான் அமரும் இடம் எப்போதும் கல்லரையில் தான். என் தாய்க்கு நான் நிறைய கஷ்டத்தை கொடுத்தாலும் என் கடமையையும் நான் யுகத்தில் செய்ய வேண்டும். இருந்தாலும் தாயின் மனம் படும் கஷ்டத்தை நினைவு கூர்வேன்.
அம்மா என்றால் எனக்கு தெய்வம் !
தாய் தந்தை காலை தொட்டு கும்பிடாமல் எந்த காரியமும் செய்ய மாட்டேன். என் கடமைக்காக வெளியில் சில நாள் தங்க நேர்ந்தாலும் அவள் அன்பு முகம் என் மனதிரையில் எப்போதும் நிழலாகும். எத்தனை துன்பம் அவளுக்கு இருந்தாலும் நம் வாடிய முகத்தை பார்த்தால் அவள் துடிப்பாள். இதயத்தின் துடிப்பு அவளிடம் !
யுகத்தில் அவள் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. கடவுளின் அன்பும் தாயின் அன்பும் ஒன்றே ! கடவுள் பூமியில் எப்போதும் வர முடியாது என்பதாலேயே தாயை படைத்தான் பூமியில். அம்மா உயிரும், மெய்யும் இணைந்தது. அந்த தொப்புள் கொடி உறவு ஏழு ஜென்மமும் தொடரும். தினமும் அவள் பாதம் வணங்கு ! அவள் பாதம் சொர்க்கம் ! முதலில் அவளை வணங்கு ! நான் உன் பக்கத்தில் ஓடோடி வருவேன் ! உனக்கு வழிகாட்ட. மீண்டும் அம்மாவை பற்றி எழுத காரணம் மீண்டும் மீண்டும் எழுத தூண்டும் நெகிழ்ச்சியான பந்தம் அது. அவளை நினைத்தாலே பேரின்பம். அதனாலேயே மீண்டும் எழுதினேன்.
தன் வயிறு நிரம்பாமல் மிச்சம் வைத்து உனை எதிர்பார்த்து உனக்கு ஊட்டும் தாயை எப்படி மறந்தாய் ? அந்த அன்பின் சுகத்தை ஏன் மறந்தாய் ? முதியோர் இல்லத்தில் ஏன் மூர்ச்சையாக்க வைத்தாய் ? தாயையும், தந்தையையும் தவிக்கவிட்டால் மோட்சம் என்பதில்லை. அவர்களை கடைசி வரை வாடாமல் பார்த்துக் கொள்.
தன் வயிறு நிரம்பாமல் மிச்சம் வைத்து உனை எதிர்பார்த்து உனக்கு ஊட்டும் தாயை எப்படி மறந்தாய் ? அந்த அன்பின் சுகத்தை ஏன் மறந்தாய் ? முதியோர் இல்லத்தில் ஏன் மூர்ச்சையாக்க வைத்தாய் ? தாயையும், தந்தையையும் தவிக்கவிட்டால் மோட்சம் என்பதில்லை. அவர்களை கடைசி வரை வாடாமல் பார்த்துக் கொள்.
எந்த உறவு வந்தால் என்னடா ? இந்த உறவு காணக்கிடைக்காதடா ! அவள் வரம், ஆணந்தம், நிம்மதி ! தாய்க்கு பின் தாரம் என்பார்கள். தாயின் அன்பை தாரத்திடம் எதிர்பார்க்கலாம். அதனாலேயே தாய் இல்லாத குறையை தாரத்திடம் வைத்தேன். ஆனால் உன் சிற்றறிவால் உன்னால் வாழ முடியவில்லை. நீ உன் தாரத்தை புரிய முயற்சிக்கவில்லை. அவளுக்கு மன மகிழ்ச்சி கொடுத்தால் உன் வீட்டில் சண்டை சச்சரவு வராது.
பெண் என்பவள் வரம், நிம்மதி ! நீ தான் நிம்மதி இல்லை என்று பிரம்மச்சரியம் சிறந்தது என்று உளர்கின்றாய் !
தாயும் தந்தையும் இல்லை என்றால் தான் அதன் உறவின் ஆழம் தெரியும். சிறு வயதில் தாயின் அன்பில் இருக்கும் போது நீ கவலை இல்லாமல் சகலத்தையும் மறந்து இருந்தாயே. ஏன் இப்போது மறந்தாய் ? சொர்க்கம், நிம்மதி என்று வெளியில் தேடுகிறாய்.
தாயும் தந்தையும் இல்லை என்றால் தான் அதன் உறவின் ஆழம் தெரியும். சிறு வயதில் தாயின் அன்பில் இருக்கும் போது நீ கவலை இல்லாமல் சகலத்தையும் மறந்து இருந்தாயே. ஏன் இப்போது மறந்தாய் ? சொர்க்கம், நிம்மதி என்று வெளியில் தேடுகிறாய்.
அவள் மடியில் தலை வைத்து நித்திரை செய்து பார். அட போடா. இதை விட சொர்க்கம் பூமியில் நான் பார்த்ததில்லை. என் தொண்ணூறு வயது தாயும் தந்தையும் இன்றும் என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. உலகத்திற்கு சூட்சுமமாக இருந்தாலும் ஒரு தாயின் மகன் தானே. கடமைக்காக பட்டணத்திற்கு வந்தாலும் என் கடமையை செய்ய அடிக்கடி கிராமம் செல்வேன் !
ஆயிரம் உறவு இருந்தாலும் தாயின், தந்தையும் உறவு உலகில் எதற்கும் ஈடில்லா பெருங்கருணை. கடவுளும், கருணையும், தாயும் ஒன்றே ! சிறுவயது முதல் என் தாய் தந்தை புகைப்படத்தை தவிர பூஜை அறையில் நீ வணங்கும் வேறு எந்த கடவுள், சாமியின் புகைப்படமும் இருக்காது. தினமும் பூக்கள் வைத்து வணங்குவேன். உயிரோடு இருக்கும் போதே புகைப்படம் வைத்து பூக்கள் வைத்து வணங்குகிறான் என்று எல்லோரும் எனை பரிகசிப்பார்கள் ! உயிரோடு இருக்கும் போது தான் வணங்க வேண்டும். தன்னால் இயன்ற கடமையை செய்ய வேண்டும். இறந்த பிறகு வான வேடிக்கை, பூம்பல்லக்கு, திதி கொடுக்க தேவை இல்லை. அவளின் கடனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னால் அடைக்க முடியாது. அவள் உதிரத்தை பாலாக்கி தந்த அந்த அமிர்தத்தின் கடனை நீ எப்போதும் அடைக்க முடியாது.
உன் தாய் நீ சிரித்தால் சிரிப்பாள். நீ அழுதால் உருகி அழுவாள். உன்னையே எப்போதும் நினைப்பாள். அவள் கடவுளைப் போல ! அவள் உனக்கு கடவுள் தான். அந்த பேரன்பு தரும் தாயின் காலடியை மறந்து விடாதே !
தாயும் தந்தைக்கும் செய்யும் சேவை. வழிபாடை தவிர உலகில் வேறு எந்த வழிபாடும் பெரிதாக தெரியவில்லை. இறைவனும் (தந்தை) கடவுளும் (தாய்) உன் இல்லத்தில் இருக்க எங்கெங்கோ தேடி அலைகின்றாய். நான் தாயினும் மேலானவன். உனை எப்போதும் அரவனைப்பேன் ! உனக்கு தாய் இல்லை என்று இனி கவலை கொள்ளாதே ! நான் இருக்கின்றேன்.
மீண்டும் சொல்கிறேன். தாயை மறவாதே ! தந்தையை மறவாதே ! தாய் பூமியை மறவாதே ! உன்னை நம்பி வந்த தாரத்தையும் மறவாதே. நான் உன்னை மறக்க மாட்டேன். எப்போதும் உனக்கு தாயைப் போல தாலாட்டி சுகம் தருவேன். உணர்ந்து பார் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment