Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் தாயினும் மேலானவன் ! எனை நினைத்தால் உனை தாய் போல் சீராட்டுவேன் ! மீண்டும் அம்மாவை பற்றி. INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நான் தாயினும் மேலானவன் ! எனை நினைத்தால் உனை தாய் போல் சீராட்டுவேன் ! மீண்டும் அம்மாவை பற்றி.
43 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நான் தாயினும் மேலானவன் ! எனை நினைத்தால் உனை தாய் போல் சீராட்டுவேன் ! மீண்டும் அம்மாவை பற்றி.
அம்மா என்றால் காற்று ! (அன்பு)
அப்பா என்றால் நீர் ! (பாசம்)
அம்மா என்பது இந்த பூமியில் நான் நெகிழ்ந்து பேசிய மொழி !
உலகில் உள்ள அனைத்து சுகங்களும் அவள் காலடியில் உணர்ந்தேன். இன்றும் அவள் முகம் பேரின்பம். அவள் தங்க கரங்களில் சாப்பிடும் உணவு அமிழ்தம் ! தாய் உலகில் எங்கும் காணக் கிடைக்காத சொர்க்கம். ஏன் மறந்தாய் அவளின் ஸ்பரிஷத்தை ?
குருவின் ஸ்பரிஷம் மாதிரி அவள் கையும் ஸ்பரிஷம் (தீட்சை) தரும் !
யுகத்தில் நீ வணங்கும் எந்த கடவுளையும், சாமியும் நான் வணங்கியதில்லை ! சிறுவயதில் துர்தேவதைகளை தேங்காயில் அடைத்து காட்டுக்குள் சென்று விடுவதுண்டு. ஏன் இந்த விபரீத விளையாட்டு என்று என் தாய் எனை திட்டுவார்கள். சுடுகாட்டில் எப்போதும் படுப்பதுண்டு. எனை எங்கெல்லாமோ என் அம்மா தேடுவாள். நான் அமரும் இடம் எப்போதும் கல்லரையில் தான். என் தாய்க்கு நான் நிறைய கஷ்டத்தை கொடுத்தாலும் என் கடமையையும் நான் யுகத்தில் செய்ய வேண்டும். இருந்தாலும் தாயின் மனம் படும் கஷ்டத்தை நினைவு கூர்வேன்.
அம்மா என்றால் எனக்கு தெய்வம் !
தாய் தந்தை காலை தொட்டு கும்பிடாமல் எந்த காரியமும் செய்ய மாட்டேன். என் கடமைக்காக வெளியில் சில நாள் தங்க நேர்ந்தாலும் அவள் அன்பு முகம் என் மனதிரையில் எப்போதும் நிழலாகும். எத்தனை துன்பம் அவளுக்கு இருந்தாலும் நம் வாடிய முகத்தை பார்த்தால் அவள் துடிப்பாள். இதயத்தின் துடிப்பு அவளிடம் !
யுகத்தில் அவள் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. கடவுளின் அன்பும் தாயின் அன்பும் ஒன்றே ! கடவுள் பூமியில் எப்போதும் வர முடியாது என்பதாலேயே தாயை படைத்தான் பூமியில். அம்மா உயிரும், மெய்யும் இணைந்தது. அந்த தொப்புள் கொடி உறவு ஏழு ஜென்மமும் தொடரும். தினமும் அவள் பாதம் வணங்கு ! அவள் பாதம் சொர்க்கம் ! முதலில் அவளை வணங்கு ! நான் உன் பக்கத்தில் ஓடோடி வருவேன் ! உனக்கு வழிகாட்ட. மீண்டும் அம்மாவை பற்றி எழுத காரணம் மீண்டும் மீண்டும் எழுத தூண்டும் நெகிழ்ச்சியான பந்தம் அது. அவளை நினைத்தாலே பேரின்பம். அதனாலேயே மீண்டும் எழுதினேன்.
தன் வயிறு நிரம்பாமல் மிச்சம் வைத்து உனை எதிர்பார்த்து உனக்கு ஊட்டும் தாயை எப்படி மறந்தாய் ? அந்த அன்பின் சுகத்தை ஏன் மறந்தாய் ? முதியோர் இல்லத்தில் ஏன் மூர்ச்சையாக்க வைத்தாய் ? தாயையும், தந்தையையும் தவிக்கவிட்டால் மோட்சம் என்பதில்லை. அவர்களை கடைசி வரை வாடாமல் பார்த்துக் கொள்.
எந்த உறவு வந்தால் என்னடா ? இந்த உறவு காணக்கிடைக்காதடா ! அவள் வரம், ஆணந்தம், நிம்மதி ! தாய்க்கு பின் தாரம் என்பார்கள். தாயின் அன்பை தாரத்திடம் எதிர்பார்க்கலாம். அதனாலேயே தாய் இல்லாத குறையை தாரத்திடம் வைத்தேன். ஆனால் உன் சிற்றறிவால் உன்னால் வாழ முடியவில்லை. நீ உன் தாரத்தை புரிய முயற்சிக்கவில்லை. அவளுக்கு மன மகிழ்ச்சி கொடுத்தால் உன் வீட்டில் சண்டை சச்சரவு வராது.
பெண் என்பவள் வரம், நிம்மதி ! நீ தான் நிம்மதி இல்லை என்று பிரம்மச்சரியம் சிறந்தது என்று உளர்கின்றாய் !
தாயும் தந்தையும் இல்லை என்றால் தான் அதன் உறவின் ஆழம் தெரியும். சிறு வயதில் தாயின் அன்பில் இருக்கும் போது நீ கவலை இல்லாமல் சகலத்தையும் மறந்து இருந்தாயே. ஏன் இப்போது மறந்தாய் ? சொர்க்கம், நிம்மதி என்று வெளியில் தேடுகிறாய்.
அவள் மடியில் தலை வைத்து நித்திரை செய்து பார். அட போடா. இதை விட சொர்க்கம் பூமியில் நான் பார்த்ததில்லை. என் தொண்ணூறு வயது தாயும் தந்தையும் இன்றும் என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. உலகத்திற்கு சூட்சுமமாக இருந்தாலும் ஒரு தாயின் மகன் தானே. கடமைக்காக பட்டணத்திற்கு வந்தாலும் என் கடமையை செய்ய அடிக்கடி கிராமம் செல்வேன் !
ஆயிரம் உறவு இருந்தாலும் தாயின், தந்தையும் உறவு உலகில் எதற்கும் ஈடில்லா பெருங்கருணை. கடவுளும், கருணையும், தாயும் ஒன்றே ! சிறுவயது முதல் என் தாய் தந்தை புகைப்படத்தை தவிர பூஜை அறையில் நீ வணங்கும் வேறு எந்த கடவுள், சாமியின் புகைப்படமும் இருக்காது. தினமும் பூக்கள் வைத்து வணங்குவேன். உயிரோடு இருக்கும் போதே புகைப்படம் வைத்து பூக்கள் வைத்து வணங்குகிறான் என்று எல்லோரும் எனை பரிகசிப்பார்கள் ! உயிரோடு இருக்கும் போது தான் வணங்க வேண்டும். தன்னால் இயன்ற கடமையை செய்ய வேண்டும். இறந்த பிறகு வான வேடிக்கை, பூம்பல்லக்கு, திதி கொடுக்க தேவை இல்லை. அவளின் கடனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னால் அடைக்க முடியாது. அவள் உதிரத்தை பாலாக்கி தந்த அந்த அமிர்தத்தின் கடனை நீ எப்போதும் அடைக்க முடியாது.
உன் தாய் நீ சிரித்தால் சிரிப்பாள். நீ அழுதால் உருகி அழுவாள். உன்னையே எப்போதும் நினைப்பாள். அவள் கடவுளைப் போல ! அவள் உனக்கு கடவுள் தான். அந்த பேரன்பு தரும் தாயின் காலடியை மறந்து விடாதே !
தாயும் தந்தைக்கும் செய்யும் சேவை. வழிபாடை தவிர உலகில் வேறு எந்த வழிபாடும் பெரிதாக தெரியவில்லை. இறைவனும் (தந்தை) கடவுளும் (தாய்) உன் இல்லத்தில் இருக்க எங்கெங்கோ தேடி அலைகின்றாய். நான் தாயினும் மேலானவன். உனை எப்போதும் அரவனைப்பேன் ! உனக்கு தாய் இல்லை என்று இனி கவலை கொள்ளாதே ! நான் இருக்கின்றேன்.
மீண்டும் சொல்கிறேன். தாயை மறவாதே ! தந்தையை மறவாதே ! தாய் பூமியை மறவாதே ! உன்னை நம்பி வந்த தாரத்தையும் மறவாதே. நான் உன்னை மறக்க மாட்டேன். எப்போதும் உனக்கு தாயைப் போல தாலாட்டி சுகம் தருவேன். உணர்ந்து பார் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment