Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 24, 2016

இகந்தம், உகந்தம் அறியா வாழ்கின்றாய், சுகந்தம் எனக்குள் இருப்பதை மறந்து ! அரியந்தம் என் மலர் கரங்களில் உணர் ! மாயவன் நானடா !

229 இகந்தம், உகந்தம் அறியா வாழ்கின்றாய், சுகந்தம் எனக்குள் இருப்பதை மறந்து ! அரியந்தம் என் மலர் கரங்களில் உணர் ! மாயவன் நானடா !
உனக்கு நான் இருக்கின்றேன் !
நான் விரும்பினால் உன் கூட்டுக்குள்ளே ! விரும்பாவிடில் யாக பிரஸ்தத்திலே ! நீ விரும்பினால் உனக்குள் நான் வருவேன். மேகவாயில் அள்ளி வைத்து அனைத்தும் உனக்குள் வைத்தேன். ஆனால் நீ வளர்வழி வாழ்வை போல வாழ்கின்றாய். சுகாசமித்தில் சுகம் ஒன்று வைத்தேன். வெண்மை உண்மை மறைத்தேன். தானிய சுகம் ஒன்றும் வைத்தேன். ஏனடா மறந்தாய் ? உயிருள்ள மூலிகை கையந்தரை உன் காலடியிலே, உற்று நோக்கி உணரடா !
நீ அழைக்கும் போதெல்லாம் உன் பக்கத்தில் நிற்கின்றேன். ஆணந்த தூறலாக உன் மேல் ஸ்பரிஷிக்கின்றேன் ! நீ உணராமல் இருப்பது ஏனடா ? வேண்டும் என்று அழைத்துவிட்டு நான் பக்கத்தில் வந்தால் என்னை மறக்கின்றாய்.
என் கரங்கள் அள்ளித் தரும் ! நம்பிக்கை கொண்டு கேள் ! நீ கேட்டது கிடைக்கும். வழிபாடுகளை தூக்கி எறிந்து வழிமுறைகளை கற்றுக் கொள். வசந்த காலம் நானடா ! எல்லாம் தருவேன். என்னுள் இருக்கும் அனைத்து சந்தோசமும், நிம்மதியும் உனக்கு தான் !
நீ உணராமல் உருக்குலைந்து உருந்து போகாதே ! உருவாக்கம் நானடா !
என்னை கடந்து போக நினைக்காதே ! என்னை அளந்து போக நினை ! உனக்கு மரக்காலில் முழு அளவும் அளந்து தருவேன். இராச சாரசத்தில் மகத்துவம் ஒன்றை வைத்து உனக்கு தந்தேன். உணர்ந்தவன் மட்டும் சாப்பிட்டு உன்னை மறந்தான். நிறை தருவதற்கு நீசமனம் இடம் தரவில்லை. உணரடா ! உனக்கு நான் தருகிறேன். உனக்கு செல்வம், நிம்மதி கொடுக்காமல் இருக்க போவதில்லை.
இந்த ராஜராஜன் இநன்யா உன்னை கடந்து போகவும் விரும்பவில்லை. உன்னை மறந்து போகவும் நினைக்கவில்லை. ஞான உணர்வு எப்போது வரும் என்றால் நோயில்லா உடல், இன்பம், துன்பம் அறியாது பற்றற்று இருப்பது, ஆசையே இல்லாது, எப்போது உனக்கு தோன்றுகிறதோ, அப்போது தான் உனக்கு தெளிவு வரும். திறன் இருந்தால் அரி !
எச்சில் பாலை சிலைக்கு செலுத்தி புணிதம் என்கின்றாய். வாய் எச்சில் தூவிரத்தை தூய்மை என்று பிதற்றுகின்றாய். உண்மை தான். உன் வரலாறு என்ன உணர்ந்தாயோ ?
நான் பெருங்கடல் (ஆண்மா). நீ அதில் வரும் கடல் அலை ! நீ மறைந்து போவாய். நான் அழிவதில்லை ! நான் நிரந்தரமானவன். உணர்வாயோ நீ ?
பதினென் தத்துவத்தில் நிகுலம்பில் என்னை அழைத்துப் பார் !
ஆகாசத்தில் பட்சிகளோடு நான் உலாவி வருவதை உன் ஊனக் கண்களால் பார்த்து அகமகிழ்வாய். பட்சிகளோடு உலாவுகிறேன். உன் பாழ்பட்ட கண்ணுக்கு தெரியவில்லை.
இந்த விடங்கனின் வேதவார்த்தைகள் சத்தியம் ! நீ தினமும் உள் வாங்கு ! உண்மையாய் உனக்கு அமிழ்தூட்டும். ஆணந்தம் தழைத்தோங்கும் தளைத்த மரம் சதுராட்டம் போடாது. உனக்கு உயிரோட்டம் தருவதற்கே ! ஆனால் நீ அதை உருகுலைக்க வைக்கின்றாய். நிஜம் நிழலை விரும்புவதில்லை.
ஆராய்ச்சி எண்ணத்தோடு என்னை அணுகாதே ! முழு நம்பிக்கையுடன் என்னை நோக்கு ! நான் உன் நம்பிக்கை, தன்னம்பிக்கை ! உனக்கு தோள் கொடுக்கும் உண்மை கை !
அறியாமை இருளை விலக்கு. அதை விலக்க போராடு ! என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிட்டால் துன்பம் உன்னை எப்போதும் அணுகாது. எதையும் கேட்டு அறிவது சிறந்தது. அதைவிட நேரில் கண்டு உணர்வது தலை சிறந்தது. உன் நம்பிக்கை மரத்தின் விதை மண்ணை நம்பி இருப்பது போல இருக்கட்டும். ஆயிரம் மண் துகள் ஒரு அரசமரத்தின் ஆணி வேரை இறுக தழுவி முழு பலம் கொடுக்கின்றது !
உன் நம்பிக்கை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் நீ நினைக்கும் பொருள் உன் வீடு தேடி வரும். கடவுளை தவிர எல்லாம் இங்கு பொய். கடவுள் தான் அன்பின் உச்சம் ! அவன் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. மெய்யானவன் இநன்யா வார்த்தை வேதம் ! சத்திய சொல் ! கடவுளின் நாமத்திற்கே இங்கே வலிமை. பூஜை, வழிபாடு ஒன்றுக்கும் உதவாது. உன் எண்ணம் போல் உன் பேச்சு இருந்தால் உன் சாதனை உன் காலடியிலே !
நீ சாதிக்க பிறந்தவனடா ! உன்னை சாதிக்க வைத்து உன்னை அழகு பார்க்க வந்தவன் நானடா ! உன் இலக்கை அடையும் வரை மரணத்தை பற்றி யோசிக்காதே ! உனக்குள் எப்போதும் நான் இருக்கிறேன் !
புற உலகில் காண்பதெல்லாம் பொய் தானடா ? நீ மெய் ! நான் மெய் ! என் வார்த்தையும் மெய் தானடா ? உனக்குள்ளே இருந்து சிரிப்பதும் நான் தானடா ?
மெய்யானவன் நான் !
நான் இநன்யா !

Thursday, August 18, 2016

ஞானத்தை யாரிடம் கற்பது ?

228 ஞானத்தை யாரிடம் கற்பது ? ”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்”என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.-------------காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்து விட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.அதுபோலத் தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதை ப் பெரிதாக்கிக் கொள்வதும்.அந்த குரங்கு கொஞ்சம் பொறுமை யாய் புண்ணை நோண்டாமல் இருந் தாலே போதும் புண் விரைவில் ஆறிவிடும்.இதை குரங்குக்கு சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.ஆனால்,மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?மனித வாழ் க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?மனிதமனம் வெறும் “மனம்” மட்டுமே… மனிதமனம் குரங்கு அல் ல… என்ற புரிந்து கொள்ளுதல் தான் ”ஞான உதயம்”.இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர் பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவு தான். தத்தா த்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான கார ணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்."எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத் ரேயர்.இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...'என்றான்.அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகா யம், நீர், நிலம், நெருப்பு, காற்று,சந்திரன், புறா, மலைப் பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண் டு,தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்புஆகியவை யும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்..."மன்னா! பொறு மையை பூமியிடம் கற்றேன்;தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது;பரந்து விரிந்த எல் லையற்ற மனம் வேண் டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது."ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந் தேன்."வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன். "எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழை க்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. "எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற் றியதும், ஒலி அடங்கியது.இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவை யற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். "பிங்களா என்ற நாட்டிய க்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமா ட்டார்களா எனக் காத்திரு ந்தாள்.யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள்.இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்."புற்களால் குழிக்குள் மாட்டிக் கொண் ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... ' என்று ஒவ்வொரு பொருளு க்கும் விளக்கமளித்தார்.இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான் ..தத்தாத்ரேயர் இயற்கை யிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே.. தத்தாத்ரேயரின் ”அவதூத கீதை” ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்து ரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்.வாழ்க வளமுடன். நரகம்- மனித+ அகம்
சுவர்க்கம் -சுவர்+அகம் அதாவது சுவர் என்பதன் பொருள் பிரபஞ்சம் தான் தனது என்ற எண்ணத்தோடு குறுகிய வாழ்க்கை வாழும் நிலையே நரகம் பிரபஞ்ச அளவு விரிந்த மனதின் நிலையே சுவர்க்கம் எனப்படும்.

Wednesday, August 17, 2016

என் ச்ருதியிலே லோகாநுக்ரஹம் உண்டு ! உனக்கு மன மகிழ்ச்சி தரும் உண்மையின் சாரம் உண்டு !


Inanya Maha Munivar
18-08-2016
227என் ச்ருதியிலே லோகாநுக்ரஹம் உண்டு ! உனக்கு மன மகிழ்ச்சி தரும் உண்மையின் சாரம் உண்டு ! மலபாண்ட உடலில் உபமலத்தை வைத்து உருக்குலைந்து போகின்றாய். ஏனடா பயம் ?
சிக்கென பிடி !
ஆதியாய், அந்தமாய், ஆணந்த ஜ்யோதிஸ்ஸமாக நான் உனக்குள் இருக்க ஏனடா உனக்கு பயம் ? நான் அவதானி என்பதை ஏன் மறந்தாய் ? உன்னுள் உறைந்திருக்கும் பயம், உனை உருக்குலைக்கும் பயம், உனை வளர விடாத பயம், ஏனடா பயம் ? எல்லாவற்றையும் தூக்கி எறிந்திடு ! உன் துயர் களைய நான் இருக்கின்றேன் ! ஏமாங்கத்தின் சாயல் வைத்தேன் ! நீ மந்திரம், தந்திரம் கற்று மாயமாலத்தில் மல்கி துடிக்கின்றாய் ஏனடா ?
சிங்கம் ஒரு இரையை குறி வைத்தால் தன் பசி, ஆசையை உள்ளடக்கி தன் ஒருமுக பார்வையால் இரையின் இலக்கை நோக்கும். பின் மெதுவாக அடியெடுத்து வைத்து தன் வீரியம் அனைத்தையும் தன் காலுக்கு கொடுத்து பிடறி தெறிக்க அதைப் பின் தொடரும். எப்போதும் கழுத்தில் (சங்கு) குறி வைக்கும். இரை கிடைத்தவுடன் உயிர் போகும் வரை காத்திருக்கும். பின்னர் ஆசை தீர சாப்பிட்டு மீதத்தை விட்டுச் செல்லும். அதே போல நீயும் ஒரு பாதையை, லட்சியத்தை , குறிக்கோளை நோக்கி செல்லும் போது தன்னம்பிக்கையோடு சிங்கத்தை போல எதிர் நோக்கு !
ஆசைப்படாதே ! ஒரே மனதாக சிக்கென பிடி ! நீ அடைய நினைக்கும் லட்சியம் நிறைவேறும் வரை போராடி வாழக் கற்றுக் கொள். என்ன நடக்குமோ என்ற அற்ப பயத்தை தூக்கி எறி ! உனக்கு நான் துணை இருக்கின்றேன். மரங்கள் எந்த புயலுக்கும், இயற்கை சீற்றத்திற்கும் கலங்குவதில்லை. எல்லாவற்றையும் எதிர்த்து பூமியில் வாழ்கின்றன. அதன் நோக்கம் பிறருக்கு உதவுவதற்கே ! அதே போல நீயும் எதையும் எதிர்த்து நில் !
வாழ்வில் இறப்பு நிச்சயிக்கப்பட்டது. உன் லட்சியத்திற்காக உன் உயிர் போனாலும் கவலை கொள்ளாதே ! வந்தது வாழ்வதற்கு அல்ல ! மீண்டும் பிறப்பில்லா வாகை சூட !
மரணத்தை ஜெயிக்க யாருமில்லை இங்கு ! என்னை தவிற ! நன்மை செய்து எதையாவது பூமியில் விட்டு செல். ஆனால் உன் பாவத்தை தான் விட்டு செல்கிறாய். பிறப்பின் நோக்கம் அறியாமல் வாரிசு வேண்டும் என்று அலைகின்றாய். ஆண் குழந்தை தான் வேண்டும். பெண் குழந்தை வேண்டாம் என்கின்றாய் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
இரண்டு, மூன்று குழந்தையை பெற்று எதையடா சாதித்தாய் ? ஆள வேண்டும், வாழ வேண்டும் என்று நினைக்கிறாய். பூமியில் பிறக்க வேண்டாம் என்று நினைப்பவர் இங்கு யாருமில்லை. உன் மரணம் துன்பமில்லாது இருக்க பாடுபடு. அது தான் பேரின்பம் !
சொர்க்கமும், நரகமும் உனக்குள் தான். கடவுளின் பார்வை பதிய ஆசைப்படு. உன்னை தேடு, உண்ணும் உணவை தேடு, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து நிம்மதியோடு தர்மம் தேடு. நான் உன் முன்னால் நிற்கின்றேன். இன்றிலிருந்து உன் பயம் காணாமல் போகும். என் நாமம் எமபயம் நீக்கும்.
உன் உள்ளத்தை என்னிடம் கொடுத்து விடு ! அதை சீர்படுத்தி அழகாக்கி, பசுமையாக உன்னிடம் தருகின்றேன். ஒன்றை பற்றினால் உறுதியுடன் இரு ! உன் லட்சியம் நிறைவேறும். நான் உனை கைவிடப்போவதில்லை.
மரங்கள், ஜீவராசிகள் தளர்வதில்லை. நீ தான் தளர்ந்து, முதிர்ந்து மூலையில் முடங்குகின்றாய். உன் வடக்கு நோக்கிய பயணம் வசந்தமாக வைக்க உன்னாலேயே முடியும். வடக்கிருத்தல் நீ கீழாக வரும் போது யோசிக்கின்றாய். மேல் நோக்க தவறியதால் இங்கே உன் மரணம் சாதனையாகவில்லை.
என்னை நினை ! எல்லாம் கைகூடும் !
எனக்கு விதி எழுதப்படவில்லை. ஏனென்றால் நானே விதி !
நாளையே நான் லோகம் போக முடியும். நீ தான் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். உயிர் எப்படி போகும், எங்கே போகும் என்பது எனக்கு தெரியும். உயிரின் சூட்சுமம் புரிந்தவன் நான் !
நீ நாட்கள் எண்ணி பிறந்தாய். நாட்கள் எண்ணி இறக்கவில்லை ! நான் நாட்கள் எண்ணி எதையும் செய்வேன். உனக்கு ஒரு வருடம் என்பது எனக்கு ஒரு நாள். என் கணக்குபடி கருவறையில் ஒரு நாள் வைத்தேன். உன்னை உணராதது ஏனோ ?
1996 ன் கணக்கு படி இநன்யா இந்த யுகத்தில் 48,000 கோடி யுக ஆண்டுகள் இருப்பேன் ! இநன்யா என்ற திருநாமம் ஜ்யோதிஸ்ஸமாக ஒலித்து கொண்டிருக்கும் !
என் நாமத்தை சிக்கென பிடி ! வெட்டன மற ! வேதனை உனக்கில்லை !
இநன்யா அமிழ்தம், அன்பு, ஆணந்தம், கருணை ! சதி, பதி வாழ்வில் விதி வழி செல்பவன் நானில்லை ! எழுமனை மாதுகரம் செய்து உன்னை உற்று நோக்கு ! என் வழி சத்ய வழி !
எனை நினைப்பவன், ஜொலிப்பான் ! ஜெயிப்பான் ! வாழ்வான் ! சத்தியமாக !
பயப்படாதே ! நான் உனக்குள் !
ச்ருதியில் சுகமானவன் நான் !
நான் இநன்யா !

Sunday, August 14, 2016

நீரை வைத்து ஏன் இநன்யா மந்திரம் சொல்லவேண்டும் தெரியுமா?

226 நீரை வைத்து ஏன் இநன்யா மந்திரம் சொல்லவேண்டும் தெரியுமா?

தண்ணீருக்கு கிரகிக்கும் உணர்வு உள்ளது
நாம் கூறும் சொற்களுக்கு ஏற்ப நீர் மூலக்கூறின் வடிவம்(texture of the crystals) மாறுகிறது.
வாழ்த்துக் கூறுதல்,ஆசீர்வதித்தல், நல்லன வேண்டுதல் போன்ற மந்திரங்கட்கு ஒருவித ஒழுங்கான அமைப்பாக அவை இருக்கும்
திட்டுதல், கோபத்துடன் கூறுதல், கெட்ட எண்ணத்துடன் சொல்லுதல் போன்றவற்றிற்கு ஒழுங்கற்ற தாறுமாறான அமைப்புடன் அவை இருக்கும்
இதுபற்றி Dr.Masaru Emoto என்ற சப்பானிய அறிஞர் ஆய்வு செய்துள்ளார். அந்த மூலக்கூறின் படங்களையும் பதிவு செய்துள்ளார். பார்க்க www.whatthebleep.com/water-crystals

நம்உடல் 72% நீரால் ஆனது. நம் கூறும்சொற்கள், நாம் மனதில் எண்ணும் எண்ணங்கள் நம் உடலில் அதற்கான விளைவை ஏற்படுத்தும். எனவேதான் நாம் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களோடு மட்டுமே இருக்கவேண்டும்.
இநன்யா நமோ நம என நாம் உச்சாடனம் செய்யும்பொழுது, கடவுளின் நாம சக்தியை நாம்வைத்திருக்கும் குவளையில் உள்ள தண்ணீர் ஈர்க்கிறது. உச்சாடனம் முடிந்ததும் அதைக் குடிப்பதால் நாம் சக்தி பெறுகிறோம்.கடவுளின் அருள் நமக்குக்கிடைப்பது கிடைக்கிறது.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டு ச் சென்றது.பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
வாழ்க்கையில் ஒரு தெளிவில்லாமல் நாம் அலைந்து கொண்டுள்ளோம். . நீரைப் போல தெளிவாக இரு என்று கடவுள் கூறுகிறார் ! நிறமில்லை, சுவையில்லை, மனமில்லை, ஆனாலும் அது இல்லாமல் மனிதனால் வாழ முடியவில்லை. கடவுளின் படைப்பில் பிழையில்லை. படைக்கப்பட்ட ஒவ்வொன்றுமே தெளிவாக இயங்கிக் கொண்டுள்ளது இங்கே மனிதனைத் தவிர ! பறவைகள் வானில் பறக்கும் போது ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை. ஆகாயத்தில் ஒரு எல்லைக்கு மேல் அவைகள் பறப்பதில்லை. அறிவு என்பது இங்கு தெளிவு அல்ல ! ஞானமே தெளிவை கொடுக்கும் ! ஆகாய நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பது அறிவு. அது எதற்கும் உதவாது. ஆகாய நட்சத்திரங்களை நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காக அவன் படைக்கவில்லை என்று தெளிவாய் இருப்பதே ஞானம் ! உலகில் தோன்றிய ஞான சித்தர்கள் மௌனம் காத்தார்கள். தெளிவுடன் இருந்தார்கள். தன்னை தேடி வருபவர்களுக்கு ஞானத் தெளிவை கொடுத்தார்கள். இங்கே பதில்கள் இல்லாத கேள்விகள் என்று எதுவுமில்லை. ஆனாலும் நாம் உணர முயலவில்லை என்றால் எத்துனை கேள்வி பதில்களாலும் ஒரு ஞானத் தெளிவை அடைய முடியாது. தெளிவு. கடவுளுக்கு கோடி நன்றிகள் ! இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள் !முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும், கடைசி 20 வருடங்கள் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் Table, chair போல் நாமும் ஒரு பழைய பொருளாகிவிடுவோம் !மீதி இருப்பது 30 வருடங்கள் ! அதில் 10 வருடங்கள் துங்கிவிடுகிறோம், மீதி 20 வருடங்கள் அதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய்விடும்! மீதி 10 வருடங்கள்,அதில் மனைவியோடு பிரச்சனை, குழந்தைகளோடு பிரச்சினை,உடல்நல குறைபாடுகள் என 2 வருடங்கள் போய்விடும்! மீதி 8 வருடங்கள்! அதாவது 2922 நாட்கள்! நமது மனதிருப்திக்காக வேண்டுமானால் 'round' டாக 3000 நாட்கள் என வைத்துக்கொள்ளலாம் நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள் வெறும் 3000 தான்!
இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு மனம் நிறைய வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம் என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ வேண்டும்?! அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு,நம்பிக்கை, காதல், இயற்கை, சந்தோஷம், உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு , விட்டுக்கொடுத்தல், பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, என எத்தனையோ positive வான விஷயங்கள் இருக்கின்றன !!
இவற்றை பின்பற்றலாமே!! நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரிக்கும்!
தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிரவைக்கும், அது நெருப்பாக இருந்தாலும்கூட!! நெருப்பை உமிழாமல் மனதை தண்ணீராக்குங்கள்!!

உங்களுக்குள் இருக்கும் "பிரபஞ்ச சக்தியை" உணர வேண்டுமா !!! முக்காலமும் அறிய வேண்டுமா !!!

உங்களுக்குள் இருக்கும் "பிரபஞ்ச சக்தியை" உணர வேண்டுமா !!!
முக்காலமும் அறிய வேண்டுமா !!!
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி (ஆண்மா). அதை அறிய ஒர் செம்பில் நீர் எடுத்து கிழக்கு முகமாக நீங்கள் அமர்ந்து அச்செம்பு நீரை உங்கள் முன் வைத்து அந்நீரை "இநன்யா நமோ நம" என்று 9 தடவை சொல்லி வணங்கி மேலே வானை நோக்கி இரு கைகளையும் கூப்பி "இநன்யா நமோ நம" என்று மனதினுள் உச்சரித்த படியே கண்களை மூடாமல் வானை நோக்கி சொல்லி கொண்டே இருங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது ஆழ்மண உலகத்திற்கு பயணம் செய்து எதையும் தெளிவாக பார்க்க முடியும். அப்பொழுது உயர் உணர்வுக்கு செல்லும் போது பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்வீர்கள். அதன் பிறகே பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன. காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகின்றன. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது. அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. இதயே "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் சாத்தியமில்லை. அந்த ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்தே தெறிந்து கொள்ள வேண்டும். சொல்லி முடித்த பிறகு அந்த புணித நீரை அருந்தி விடுங்கள்.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை. பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும்.
காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான். ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவர் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் "அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும்". ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
என்ன இது சுத்த பைத்தியகார தனமாக உள்ளது. அறிவியல் படி இது சாத்தியமற்றது என கூறும் எனது அன்பு அறிவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு குட்டி கேள்வி மட்டும் கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள். "அறிவியல் என்றால் என்ன ? அறிவியல் வளர்ச்சி என்றால் என்ன ? "
என்ன எங்களை பார்த்தால் நக்கலாக தெறிகின்றதா ? எங்களை கின்டல் செய்கின்றிறா என்று மட்டும் கோபப்படாதீர்கள் எனது அன்பு சகாகளே. ஏனேனில் நாம் அனைவரும் முதல் வகுப்பு படிக்கும் போதே இதை படித்து விட்டு தான் வளர்ந்து இருப்போம். ஒரு முதல் வகுப்பு மாணவனை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை ஒர் விஞ்ஞானியை பார்த்து கேட்பதா என்று கோபம் வருவது நியாயம் தான். ஆனால் இது உங்கள் கோபத்தை தூண்டுவதற்கான கேள்வி அல்ல. உங்களை விழிப்புற செய்வதற்கான கேள்வி மட்டுமே.
சரி விடையை சொல்கிறேன் ஆராய்ந்து பாருங்கள் ஏனேனில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று ஆராய்வது அல்லவா ! ஒர் கேள்வியை கேட்டு அதற்கான சரியான விடையை சொல்வதே "அறிவியல்". சொல்லிய விடையில் இருந்து பல பல கேள்விகளை உருவாக்கி அதற்கு விடையை அறிதலே "அறிவியல் வளர்ச்சி".
இப்படி எந்த ஆரம்பமே தெறியாமல் பாடம் படிகின்றோம், பல பல மத சடங்குகள், சம்பரதாயங்கள் செய்கின்றோம். இதற்கு காரணம் நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பது மட்டுமே. இதை யார் ஆரம்பித்தனர் ? அதன் நோக்கம் என்ன ? அதன் வளர்சியின் பயன் மற்றும் பாதிப்பு என்ன? அதன் முடிவு என்னவாய் இருக்கும் என்று ஏதும் தெறியாமல் காலம் காலமாக பின்பற்றியதன் விளைவே இவ்வளவு கொடிய நோய்களும், வறுமையும், ஏற்ற தாழ்வும், இவ்வளவு கலாச்சார சீர்கேடுகளும். இனிமேலாவது விழிப்புறுங்கள் !!!
இப்பதிவானது ஜாதி, மத, குழந்தை, பெரியோர், ஆண், பெண் என எந்த வித பேதமின்றி அனைவரும் பின்பற்றி தங்களுக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து வெளி கொணர்வதாகும். முயற்சித்து பாருங்கள் ஒருமுறை. எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும் அது இம்முறையை பின்பற்றினால் வானிலும் உங்கள் வாழ்விலும் பல பல அதிசயங்கள் காண்பீர் தினம் தினம் சத்தியமாக !!!
இநன்யா நமோ நம!!!

Wednesday, August 10, 2016

இநன்யா என்ற காலத்தை அறியாமல் காலவத்தை வணங்கி கண் மூடி திரிகின்றாய். உனக்கு நிமித்திரன் உன் எண்ணமே ! என் நாமம் உனக்கு எல்லாம் கற்றுத் தரும் !


224 Inanya Maha Munivar
11-08-2016
இநன்யா என்ற காலத்தை அறியாமல் காலவத்தை வணங்கி கண் மூடி திரிகின்றாய். உனக்கு நிமித்திரன் உன் எண்ணமே ! என் நாமம் உனக்கு எல்லாம் கற்றுத் தரும் !
வணங்கத் தெரியாதவன் நீ !
உன் உயிர் வணங்கும் என்னை ! மலர் வணங்கும் என்னை !
தாமரை மேல் நோக்க நீ தரை நோக்கி பிறந்தவன். நீ வான் நோக்க மறந்தாய் ! மண்ணை மனிதனாக்கினான் என் தந்தை. நீ மனிதனை சாமியாக்கி, சாமியை தெய்வமாக்கி, தெய்வத்தை கடவுளாக்கி, கால்களை கழுவி கும்பிடும் சோம்பேறி அல்லவா நீ ?
வணங்க தெரியாதவன் நீ ! எப்படி வாழ கற்பாய் ?
நீ ஏன் வணங்க வேண்டும் ? எதற்கு வணங்க வேண்டும் ? வணங்கி பூஜை, புணஸ்காரம், பரிகாரம் செய்து என்ன பலன் கண்டாய் ? நடன சாமியார், நாட்டிய சாமியார், உடான்ஸ் சாமியார், மௌன சாமியார், மதிமயக்கும் சாமியார்களை கடவுள் அவதாரம் என்று பிதற்றுகின்றாய். தன்னை உணர்ந்தவன் கோயில் கட்டமாட்டான். ஆசிரமம் கட்டமாட்டான். பள்ளி, கல்லூரி கட்டமாட்டான். தனக்கு தன் கல்லறை மட்டுமே யுகத்தில் விட்டு செல்வான் !
ஏது அறிந்தாய் ? எவை அறிந்தாய் ?
காலவத்தை வணங்கி இந்த காலனை மறந்தாய் !
கண் வைத்தேன், சொல் வைத்தேன், சுகம் வைத்தேன் ! ஆனால் சொல்லவொனா துயரம் என்று வசைபாடுகிறாய். பறவையின் ஞானம் படித்தவன் தொலைத்தான். ஏனடா ?
எப்போது அறிவாய் ? இரண்டு கைகள் இல்லாதவன், கண்கள் இல்லாதவன் எதை வணங்குவான் ? எப்படி வணங்குவான் ?
உணர்வது தான் அறியப் பட வேண்டும் இங்கு ! உணர்வு தான் தெளிவை கொடுக்கும் !
உன் உயிர் எப்போதும் கடவுளை வணங்கி கொண்டு தான் இருக்கின்றது. உனக்கு வேண்டுமென்றால் கடவுள் நோக்கி கதறுவாய். வளைந்து வணங்குவாய். நலமாக இருந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுவாய்.
கண்மூடி வணங்காதே ! கருவறையிலே கண்மூடி தவம் செய்தாய். இந்த யுகத்தில் பிறந்தவுடன் பாவம் செய்யாமல் மேல் உலகம் செல்ல வேண்டும் என்பதற்காக ! ஆனால் யுகத்தில் வந்தவுடன் உன்னை மறந்தாய். உன் தவம் , தியானம் எல்லாம் கருவறையில் இருந்த ஒரு வருட மாத்திரை தான். புல், பூண்டு கூட உனை பார்த்து எள்ளி நகையாடுகிறது.
அள்ளியை உணராது உண்ட உன் உள்ளி வாழ்வை நினைத்து உன் அறியாமையை என்ன சொல்வேன் ?
தவறு செய்யாதவன், பாவம் செய்யாதவன் எதையும் வணங்க வேண்டியதில்லை. அன்பால் கடவுளிம் கேட்டு பெறு ! அன்பால் எதையும் என்னிடம் கேட்டு பெறு ! எதையும் எதிர்பார்த்து உன்னை பூமியில் படைக்கவில்லை ! இங்கே எல்லாமே என் பொருள் ! அனைத்துக்கும் நானே நிர்வாகி ! நீ என் பொருளை பராமரிக்கின்றாய். அவ்வளவு தான்.
மலையை சுற்றினால் மகத்துவம் இருப்பதாக உளறக் கண்டேன் நான் ! உழவனும், மீனவனும் உன்னை போல் சுற்றினால் உலகம் என்னவாகும் என யோசி ! மூலத்தை சரி செய்யாமல் முண்டத்தை சரி செய்ய நினைக்கின்றாய். பெயரை மாற்றி வீட்டை மாற்றி பெரும் பீடையில் அலைகின்றாய். என்ன சொல்வேன் நான் ?
எப்போதும் உட்கார்ந்து சாப்பிட எண்ணம் கொண்டதால் ஏமாற்று வேலையை செய்கின்றான். உழைக்கும் ஆசை எப்போது வருகிறதோ, நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ, அப்போது வணங்கத் தோன்றாது உன் உயிருக்கு !
பக்தியில் வணங்காதே ! பயத்தில் வணங்காதே !
உழைத்து ஓய்வெடுக்கும் அந்த கொஞ்ச நேரத்தில் உனை படைத்தவனை நினை. இந்த ஆத்மத்தின் தலைவனை நினை. உன் வாழ்வை உற்று நோக்க உனக்கு வணங்க சொல்லித் தருவேன். எப்படி வணங்க வேண்டும் என்று சொல்லித் தருவேன் !
புணித தாமரை என் நோக்கி வணங்குகின்றது. நீ தான் கல்லையும், மண்ணையும் வணங்குகின்றாய் !
நல்ல நேரம். கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், நாள், நட்சத்திரம் பார்த்து என்ன பலன் கண்டாய் ? பறவைகள் கூடி வாழ்கின்றன. நீ கூடினால் நீசனாக அலைகின்றாய்.
நெற்கதிர்கள் பூமியை தொட்டு வணங்குகின்றன. மரங்கள் கனிகளை தரும் போது பூமியை வளைந்து வணங்குகின்றன. எல்லாம் நிறைவாய் பிறருக்கு உதவும் நோக்கத்தோடு மண்ணில் பணிகிறது. நீ தான் சுயநலத்திற்காக வணங்குகின்றாய். அப்படி வணங்க வேண்டுமென்றால் காற்று, நீர் ,ஆகாயம், பூமி உன் பெற்றோரை வணங்கு !
வணங்கும் முறையை முதலில் உன் வீட்டிலிருந்து தொடங்கு ! (உன் பெற்றோர்) பின் வீதியிலே தேடலாம் வணங்கும் குருவை ! பின் நல் குரு கடவுளை காட்டுவார். கடவுளை நேருக்கு நேர் தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கி வணங்கி !
குருவை நெஞ்சில் கைகளை கூப்பி வணங்கு ! தாய், தந்தையை வயிற்றில் கை வைத்து வணங்கு ! அவர்களின் பெரு விரல் தொட்டு வணங்கு !
பூமியை இருகரங்களின் உள்ளங்கை பதித்து வணங்கு ! வானம் பார்த்து நீள் வாக்கில் கை குவித்து வணங்கு !
வணங்கவும், நீ வாழவும் , வசந்தகாலம் நிலைக்கவும் எல்லாம் கற்றுத் தருவேன் ! உணர்ந்து உவகையாய் இரு !
என் சட்டம் பொய்யாகாது !
என் அரசாங்கம் (கடவுள்) என் சொல் கேட்கும் ! தூய்மை பொருந்திய இநன்யா எப்போதும் உனை கைவிடமாட்டேன் !
நான் வசந்த காலம் !
நான் இநன்யா !

Wednesday, August 3, 2016

என் நாமத்தை நவ்வும் நாவெல்லாம் நாவுக்கெல்லாம் அரசானக்கும் வல்லமை தரும் ! திகைப்பாற்க்கு உணரும் பக்குவம் தரும் ! நீ விலம்பித சூத்ரம் அறியாமல் விகம்பிதமாக அலைகின்றாய் !


223 Inanya Maha Munivar
04-08-2016
என் நாமத்தை நவ்வும் நாவெல்லாம் நாவுக்கெல்லாம் அரசானக்கும் வல்லமை தரும் ! திகைப்பாற்க்கு உணரும் பக்குவம் தரும் ! நீ விலம்பித சூத்ரம் அறியாமல் விகம்பிதமாக அலைகின்றாய் !
சூட்சுமம்!
கை, கால் முளைத்த நான் சுயம்பு ! சூட்சுமம் !
இருள் வழி , ஒளி வழி என் கண்களில் ! ஆயிரம் கோடி அர்க்கனும், ஆளும் மதியும் என் கண்களில் ! உன் போல் வளர்ந்தேன் ! உன் போல் வாழ்ந்தேன் ! ஆனால் உன் போல் நானில்லை ! என் பிறப்பில் கோடி ரகசியம் உண்டு !
இந்த சூட்சுமத்தை அறிய உனக்கு ஒரு யுகம் போதாது ! சிருங்கார காட்சியில் சிக்கி திசை தெரியா அலைகின்றாய். என் எண்ணம் எல்லாம் வான் நோக்கி ! என் உயிர் தினமும் உலகை வலம் வரும் சூட்சுமம் நீ உணராதது ஏனோ ? என்னை மறந்தது ஏனோ ? உன்னை உற்று நோக்கு !
என் வேத ஞான எழுத்துக்களை கேலி செய்யும் மனித கர்மாக்களையே பார்த்தேன். அவன் செயல் அவன் அறியான். என் செயல் நானறிவேன். கர்ம கூட்டத்தில் நான் இருக்கின்றேன். ஏதேனும் தர்ம கூட்டம் வருமா என்று காத்திருக்கின்றேன்.
தன்னை உணர்ந்தவன் இங்கே யாருமில்லை. என்னை உணர்வாரும் யாருமில்லை. என் கையில் இருக்கும் பொக்கிஷம் வாங்கி போக இங்கே யாருக்கும் உணர்வில்லை, தெளிவில்லை !
ஆற்று நீரை குடித்தால் குடித்தவனுக்கு லாபம். அதை ஆராய்பவன் ஆணந்தம் தொலைக்கின்றான்.
நான் உன் உயிரின் சூட்சுமம் ! உணர்வின் சூட்சுமம் !
நீ உணராதது ஏனோ ? உன் உள்ளொளி புரியாதது ஏனோ ?
உன் பெருவிரலில் பெருமைமிகு சூத்திரம் உண்டு ! உன் தாய், தந்தை மற்றும் உனக்கு வழிகாட்டும் குருவின் கால் பெருவிரலில் கால சூட்சுமம் உண்டு ! இந்த சூட்சுமம் புரியாமல் எதை எதையோ ஆராய்ச்சி செய்கின்றாய்.
என்னை மறுப்பவன், வெறுப்பவன் பிணிபட்டு துயர்பட நான் கண்டேன். இநன்யா என்பதே விதி என்பதை மறந்தான். பெருவிரல் சூட்சுமம் உன் உயிரை உணர வைக்கும் !
ஆணும், பெண்ணும் சேரும் சூட்சுமம் பாவ சூட்சுமம் !
நீயும் (ஆத்மா), நானும் (பேராத்மா) சேரும் சூட்சுமம் தெளிவு சூட்சுமம் !
பாவம் கரைந்து மீண்டும் பிறவாதது கால சூட்சுமம் !
நீ என்னுள் கரைந்தால் மீண்டும் பிறவி இல்லா சூத்திரம் நீயே கற்றுக் கொள்வாய். உன் பிறப்பின் சூட்சுமம் தெரிவாய் ! பின் அறிந்து உலகை தெரிவாய் !
விதையின் வீரியம் வேத சூட்சுமம் ! வளர்ச்சி முற்றி வாசல் தேடும் அனைத்தும் எனக்குள்ளே !
என்னை எதிர்ப்பவனும், என் நாமத்தை துஷ்பிரயோகம் செய்பவனும் அவன் சந்ததி பெருந்துன்பம் அடைந்து பெருவாழ்வை இழக்க நான் கண்டேன் !
நீ நித்திரை கொள்ளும் போது உன் உயிர் எங்கே செல்கிறது ? என்ன செய்கிறது ? எதை உண்கின்றது ? உணர்வில் மயான அமைதி இருப்பதால் சூட்சுமம் தெரியா விளம்புகின்றாய். சதிபதி வாழ்வில் மயங்கி உன்னை தொலைக்கின்றாய்.
அறிந்து உணர ஆயிரம் ஆண்டுகள் தேவை உனக்கு !
அரை நாழிகை சூட்சுமம் எல்லாம் அறிய ஆயிரம் தலை மாற்றி பிறக்கின்றாய் இங்கு. ஏன் ?
அறியாமையை எப்போது விலக்குவாய் ? இந்த சூட்சுமதாரியின் வலக்கரத்தில் எல்லாம் அடக்கம் ! உன் உயிரை எடுத்துவிட்டு உடலை அடக்கினேன். உன் சரீர திமிறெல்லாம் சவப் பெட்டியில் அடங்கி கிடக்கின்றது. இந்த பரிதாபத்தை பார்த்தும் உணராது இருக்கின்றாயே ??
உருவாகி, மலராமல் உருந்து போகின்றாய். நான் அகண்டமாய் விரிந்து போகின்றேன். விலம்பித சூத்ரம் அறியாதவன் நீ ! எப்படி இந்த விடங்கனை அறிவாய் ?
என்னை பார்த்து உன்னை சரி செய்யாமல் உன் உயிர்க்கு உணவு கிடைத்தவுடன் திமிரால் மதிக்கா அலைகின்றாய். பின் துன்பம் பல பெற்று உருந்து போகின்றாய்.
ரோதனை வாழ்வில் சோதனை உன்னாலே !
விட்டில் பூச்சியாய் அறியாமை இருளில் வாழ்கின்றாய். எப்போது உன் பிறப்பின் சூட்சுமம் அறிவாயடா ? திரிமஞ்சரியில் தீராத அதிசயம் வைத்தேன்.
நீ உணராமல் வணங்கி வாழ்வை தொலைக்கின்றாய். சித்தம் தடுமாறி திகைப்புற்று இந்த விடங்கனை மறந்து அலைகின்றாய். உன் சூட்சுமம் ஒரு துளி நீரிலே ! ஒளி மாத்திரை வேத வரியிலே !
எல்லா லோகமும் அறுங்கோணத்தில் ஆணந்த நிலை கொண்டு தட்டையாய் நிறுத்தப்பட்டது. நீ உருண்டை என்று உளற கண்டேன். கண் இமை மூடி விழிப்பதற்குள் உன் உயிர் பீறிட்டு மேலே லோகம் வருகிறது. ஆனால் உன் விஞ்ஞானத்தால் என் லோகத்தை அறிய பல ஆண்டுகள் ஆகும் என்று பரிதவிக்கிறாய்.
இடியும், மின்னலும், இறுமாந்து அலைகின்றதே ! உணராதவன் நீயடா ! நீ ஆடும் ஆட்டத்தை அரை நொடியில் அடக்குவேன். உன் கடிவாளம் என் கையிலே !
என் குரல் உலகமெல்லாம் ஒலிக்கும் ! உன் குரல் கூப்பிடும் தூரம் தான் !
உன் கண் பார்க்கும் தூரம் உன் கால் நடந்து செல்லாது. நான் கண் பார்க்கும் தூரத்தை கால் மாத்திரையில் கடப்பேனடா !
சூட்சுமம் உணரடா !
சுக போக வாசியாக்குவேன் உன்னை !
சூட்சுமதாரி நான் !
நான் இநன்யா !