to INANYA MAHA MUNIVAR
முன்னூற்றி முப்பத்து மூன்று பிரபஞ்சத்திலும், நூற்றி எட்டு காண்டங்களில் இல்லாத அன்பு, பாசம் இந்த பூமிபந்தில் மட்டுமே உண்டு ! உறவால் பிண்ணிபினையும் தத்துவம் ! ஆண், பெண் சேரும் தத்துவம், இந்த பந்தத்திலே உண்டு !
26-10-2017·
வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா !
பூமி பந்து
அஷ்டதாதுக்கள் நிரம்பி நீரும், மரமும், நீயும், ஜீவராசிகளும் தொங்கி கொண்டிருக்கும் இந்த பூமி பந்து உருண்டை இல்லை ! தட்டை என்பதை அறிந்து உணர் ! இங்கே பூமி பந்து என்பதில் “பந்து” என்றால் உருண்டை அல்ல. பந்து என்றால் தொடர்பு, பாசம் என்று அர்த்தம் !
முன்னூற்றி முப்பத்து மூன்று பிரபஞ்சத்திலும், நூற்றி எட்டு காண்டங்களில் இல்லாத அன்பு, பாசம் இந்த பூமிபந்தில் மட்டுமே உண்டு ! உறவால் பிண்ணிபினையும் தத்துவம் ! ஆண், பெண் சேரும் தத்துவம், இந்த பந்தத்திலே உண்டு !
பூமி பந்து என்று சித்தர்கள் சொல்லிப் போனதை உருண்டை என்று எழுதி திருத்தினான். எல்லா சித்தர்களும் தட்டை என்று தான் சொன்னார்கள். இங்கே சூரியன் உதிக்கவில்லை. மறையவில்லை. பூமி சுற்றவில்லை. பூமி உருண்டை இல்லை !
இடையில் வந்த விஞ்ஞானம் சொல்வதெல்லாம் பொய் தான். காந்த புலனை அறியாமல் காலத்தை விரயமாக்கி ஆராய்ச்சி செய்கின்றான்.
மெய்ஞானம் மிரட்சிதானடா ! அறிந்தவன் எல்லாம் (ஞானிகள்) அடக்கமாய் இருந்தான். இந்த பூமிபந்தின் தொடர்பு பிரபஞ்சம் வரை !
பிரபஞ்சமும் அஷ்டதாதுக்களால் நிரம்பியதே ! அந்த மெல்லிய படலம் மாயை உரு கொண்டு பூமியை உயிர் பெற்று வைக்கிறது. இரவு, பகல் என்பவை இங்கே மட்டும் தான். மேலே இல்லை. மேலே எல்லாம் தெரிந்து வாழ்கின்றாய் ஆயிரத்து பதினொன்று வயது வரை ! உணர் !
இங்கே தெரியாமல் அறியாமல் உணராமல் வாழ்கின்றாய். ஆகையால் நூற்றி பதினொன்று வயது இங்கே ! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை உணரும் வரை பிறப்பு தான் என்பதை அறிந்து கொள் !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
“உன் பூமி தட்டையடா ! உன் பாதம் தட்டை ! உன் முதுகு தட்டை ! தட்டை மேல் படுத்துறங்கும் தட்டையாகி போனவனே எப்போது அறிவாயடா ?” என்று விளம்பினார்கள்.
“உன் பூமி தட்டையடா ! உன் பாதம் தட்டை ! உன் முதுகு தட்டை ! தட்டை மேல் படுத்துறங்கும் தட்டையாகி போனவனே எப்போது அறிவாயடா ?” என்று விளம்பினார்கள்.
நீ ஏது அறிந்தாய் ? எவையறிந்தாய் ? உன் உணர ஏது கற்றாய் ? என் தந்தையின் சொல் வேதம் ! படைத்தவன் சொல்லி போனதை பாவி மனிதன் ஆராயவில்லை. இங்கே இன்பத்தை தேடுவார் யாருமில்லை. ஜடப்பொருளில் இன்பம் இல்லை என்று எப்போது உணர்கிறானோ, அப்போது தான் கடவுளை நோக்கி பயணிக்கின்றான் என அர்த்தம் !
செயல் நான்கும் இருபத்து மூன்று கண்களும் படைத்தான் ! இதை ஆராய்ச்சி செய்தாலே கடவுளை அறியலாம். தினமும் உனக்கு நடக்கும் அனுபவத்தை அசை போடு. ஆழ்ந்து போ ! ஆளுமை அறிவாய் !
இந்த பூமி அன்னை தினமும் கடவுளிடம் வந்து முறையிடுகிறாள், இந்த பாவி மனிதன் என்னை பாடாய்படுத்துகிறான் என்று ! அதற்கு என் தந்தை “எல்லாம் உன்னில் இருந்து தின்றான், கழித்தான். ஆடும் ஆட்டமெல்லாம் பின் கல்லறையில் தானே ! முடிவில் நீ தானே சாப்பிட போகிறாய் !” என்று சொல்வார்கள்.
உன்னை தாங்கி பிடிக்கும் பூமியை உணர் ! என் தந்தை நாயகன் தினமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் வழங்கல். இந்த ஐந்தும் செய்து அதற்கு மேலாக அன்பால் அரவணைக்கின்றான் ஆறாவதாக ! எனக்கும் சொல்லி தந்தான் இன்முகமாக பூமி பந்திலே ஆனந்தமாக வாழ !
நீயும் வாழ ஆனந்தம் அளவிலா உன் வாழ்வில் கிடைக்கும். இந்த பூமி உன்னை புணிதனாக்கும் !
பந்தம் நான் ! பாசம் நான் !
நான் இநன்யா !