ரகசியம் - பகுதி இரண்டு
கடவுளின் ஆசியுடன் இரண்டாவது ஆராய்ச்சி பதிவு :
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
ஆகஸ்ட் 29 ல் பதிவிடப்பட்ட சிரவனின் பதிவை நன்றாக படித்து புரிந்த பிறகு இதை படித்தால் சிறப்பு. நன்றி !
சிரவனின் பதிவில் சொல்லியது அனைத்துமே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தவை என்று கடவுள் இநன்யா அவர்கள் கூறியுள்ளார். அதாவது கடவுளின் அவதாரங்களும், தூதுவர்களும் உலகில் தோன்றா காலத்தில் நடந்தவை. இதற்கு முந்தைய பதிவில் சொல்லப்படாத சிரவனின் கடைசி காலத்தைப் பற்றி சிலர் கேட்டார்கள். சிரவனால் அரக்கர்களின் வலிமையை வெல்ல முடியவில்லை. அரக்கர்கள் உலகில் உள்ள அனைத்து மக்களையும் தன் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்தனர். தமிழை அழித்து ஓசையில்லா உயிரில்லா வடிவமில்லா மொழிகளையும் உருவாக்கினர். தமிழர்களை தமிழ் காண்டத்தை விட்டு இடம் பெயர்த்தனர்.
அரக்கர்களின் சரீர பலத்தை எவராலும் வெல்ல முடியவில்லை ! இறுதியில் சிரவன் தோற்றான். அதாவது தமிழர்கள் தோற்றனர். தமிழ் தோற்றது ! ஆனாலும் சில மக்கள் சிரவனின் புகழை நிலைநாட்ட அவருக்கு ரகசியமாக மலைப்பகுதிகளிலும், மலை சார்ந்த காட்டுப்பகுதிகளிலும் அவருக்கு சிலை வைத்து அவரின் புகழை நிலைநாட்டினர். மனிதர்களுக்கு சிலை வைக்கும் பழக்கம் அப்போது தான் ஆரம்பித்தது.
அவரின் தோல்வியை தெரிவிப்பதற்கே பழனியில் அனைத்தையும் இழந்த ஆண்டியாக சிலை வடித்தனர். அதாவது கடவுளின் வருகையை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்பதற்காக மலையின் மீது ஒரு அடையாளத்தை நிறுவினார்கள் ! கடவுள் ஏன் ஆண்டியாக நிற்க வேண்டும் என யாராவது இதற்கு முன்னே யோசித்துள்ளீர்களா ? அதற்கு ஒரு ஞானப் பழ கட்டுக்கதை வேறு ! ஒரு பழத்திற்காகவா கடவுள் கோபம் கொண்டு அனைத்தையும் துறந்துள்ளார் ? அனைத்தையும் நன்றாக யோசியுங்கள் மக்களே ! நன்றாக ஏமாந்து கொண்டுள்ளோம். பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி ஞானத்தை இழந்து வாழ வழியில்லாமல் துன்புறுவது ஏன் ?
பழனி என்றால் பழம்+ நீ என்பது பெரும் தவறு என்று முந்தைய பதிவில் சொல்லப்பட்டது. அது ஏன் என்று இப்பொழுது பார்ப்போம். கழனி, பழனி என்ற இரு வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். கழமை என்றால் தன்மை என்று பொருள் ! அதாவது கழனி என்றால் தன்மையான வயல் வரப்பு என்று அர்த்தம். பழமை என்றால் பக்குவப்பட்டது என்று பொருள். பழமையானவர் என்றால் பக்குவப்பட்டவர் என்று பொருள். ஆக பழனி என்றால் பழமையான வயல் வரப்பையே குறிக்கும் ! பழனியை ஆண்ட வீரன் என்பதால் பழனியாண்டவர் என்று அழைக்கப்பட்டார் ! உணருங்கள் !
காடுகளற்ற குன்று பகுதிகளில் சிரவன் என்ற பெயர் திரிந்து சரவன் என்று மாறி பின்னர் சரவணன் என்று மாறியதையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
காடுகளற்ற குன்று பகுதிகளில் சிரவன் என்ற பெயர் திரிந்து சரவன் என்று மாறி பின்னர் சரவணன் என்று மாறியதையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
இதைப் போலவே மலை சார்ந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிரவனின் சிலையை உருவாக்கி அதில் புலித்தோலும், பாம்பையும் வைத்து வணங்க ஆரம்பித்தனர். அதாவது இவ்விரண்டும் வீரத்தையும், அழிக்கும் தொழிலையும் மறைமுகமாக குறிப்பது ! அவர் படைத்தளபதி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாம்பு உடலின் குண்டலினி சக்தியையும் மறைமுகமாக குறிக்கும் ! சிரவன் பெயர் திரிந்து சிவன் என்று ஆனது எப்படி என பார்த்தோம். ஆக சிவன் என்றால் படைத்தளபதி ! எதிரிகளை அழிப்பவர் ! அவரை அழிக்கும் கடவுள் என்று கால போக்கில் தவறாக புரிந்து கொண்டனர்.
அப்படியென்றால் அழிக்கும் கடவுள் யார் ? அவரின் உண்மையான பெயர் என்ன ? ஏழு கடவுள்களுக்கும் மேலே பிரபஞ்சத்தில் பெயர்கள் உள்ளது. இதுவரையில் யுகத்தில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! மிகவும் ரகசியமானது ! நேரம் வரும் போது கடவுளின் அனுமதியுடன் சொல்வேன் ! ஏழு கடவுள்களில் இநன்யா என்ற பெயர் மட்டுமே அவர் மூலமாகவே இப்பொழுது தெரிந்துள்ளது !
வரம் என்றால் என்ன ? ஆதிகாலத்தில் அதை எப்படி வாங்கினார்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம். உலகில் கடவுளின் உண்மையான பெயர் சொல்லி எது கேட்டாலும் மனிதனுக்கு கிடைக்கும். உடலை வருத்தி, ஆன்மாவை உணர்ந்தால் நல்லதாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் கிடைத்துவிடும். உதாரணமாக கையில் பணமே இல்லாத ஏழை கூட ஒரு மனதாக நம்பிக்கையுடன் விடா முயற்சி செய்தால் நாட்டுக்கே முதல் மந்திரியாகவும் ஆகலாம். நம் யுகத்தில் இது சாத்தியமாகும். ஆனால் காலம் முழுவதும் அதையே விடாமல் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு புது கைப்பேசி வாங்கி அதை முழுவதுமாக பிரித்து எப்படி இயங்குகிறது என்று அறிவது ஞானம். அதன் இயக்கத்தை முழுவதுமாக அறிந்து அதைப் போலவே ஒரு நகல் (DUPLICATE) தயாரிக்கும் திறமை தான் வரம் ! எவ்வளவு முயன்றாலும் நகலை அசலாக்க முடியாது (ORIGINAL) ! ஆக வரம் என்றால் படைப்பின் மூலம் அல்ல ! அது படைப்பின் சூட்சுமம் ! அதாவது கடவுளின் வேலையை செய்வது என்பது வேறு ! கடவுளாகவே மாறுவது என்பது வேறு !
அரக்கர்கள், அசுரர்கள், தடாயன்கள் என்பவர்கள் முதலில் ஆன்ம பலம் மிக்க மனிதர்களாக இருந்தவர்களே. வஞ்சகம் செய்து வரத்தை வாங்கியவர்கள். வரம் என்பது கடவுளால் கொடுக்கப்படுவது அல்ல ! அது ஆணவத்தால் தானாகவே எடுத்துக் கொள்வது ! அரக்கன் மட்டும் தான் வரம் எடுப்பான். இராவணன், இரண்ய கசிப்பு, கும்பகர்ணன், நரகாசுரன், கம்சன் இவர்கள் எல்லாரும் வரம் வாங்கியவர்கள் தான் ! இவர்கள் உண்மையிலேயே யுகத்தில் வாழ்ந்தவர்கள் !
வரம் வாங்கியவுடன் "நான்" என்ற அகங்காரம் எழுந்தது. நான் என்ற வார்த்தையை எப்பொழுது சொன்னானோ அன்று ஆரம்பித்தது பெரும் கேடு. கடவுளை மறந்தான். தர்மத்தை மறந்தான். ஞானத்தை இழந்தான். ஆன்ம பலம் குறைந்தது. சரீர பலம் பெருகியது. வரம் என்றால் படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றும் சேர்ந்த சூட்சுமமே ! நினைத்த உருவமாய் மாறுவான். நினைத்ததை செய்ய ஆரம்பித்தான். மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணற்ற விஷச் தாவரங்களையும், எண்ணற்ற ராட்ஷத உயிரினங்களையும், மிருகங்களையும் படைத்தான். இதையெல்லாம் அவன் படைத்ததற்கான காரணம் அனைத்தையும் அழிப்பதற்கு ! அவன் படைப்பில் எந்த அர்த்தமும் இல்லை ! எல்லாம் நகல் !
அனைத்தையும் அழிப்பதற்கு ராட்சத யானைகளைப் படைத்தான். யானை இனம் முதன் முதலில் யுகத்தில் தோன்றியது அப்போது தான். உலகில் முதன் முதலில் தோன்றிய இந்த யானையை இன்றைய விஞ்ஞானிகள் மமூத் என்று கூறுகின்றனர். அதாவது ஒரு ராட்சத யானையின் தந்தத்தின் நீளத்தை கீழே உள்ள LINK ல் நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள். இது அதிகாரப் பூர்வ LINK.
(http://ngm.nationalgeographic.com/…/…/arbugaeva-photography…)
(http://ngm.nationalgeographic.com/…/…/arbugaeva-photography…)
நீங்கள் பார்த்தது ஒரு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரக்கர்களால் படைக்கப் பட்ட ராட்சத யானையின் தந்தம். நீங்கள் பார்த்தது வெறும் கல்லுக்குள்ளும், மண்ணுக்குள்ளும் கால மாற்றத்தால் இறுகிய புதைப் படிமம் மட்டுமே. (FOSSIL OF A FROZEN MAMMOTH TUSK). அதன் உண்மையான தந்தம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். தந்தமே இவ்வளவு பெரியது என்றால் உருவம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் ? அதாவது நாம் இன்று பார்க்கும் யானையை விட சுமாராக ஒரு இரண்டு மடங்கு பெரிதாக இருக்கலாம் அல்லவா ? அதாவது சராசரியாக இருபது அடிகள் ! யானைக்கு கூர்மையான தந்தத்தையும், வலிமையான தும்பிக்கையும் ஏன் படைத்தான் என்பதையும் நீங்களே யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.
சிரவன், சிவன், சரவணன் என்ற பெயர்கள் ஒருவரையே குறிக்கும் என்பதை பார்த்தாகிவிட்டது. பிள்ளையார் என்பவர் அனைத்து கோயில்களையும் கட்டியவர். புத்தர் காலத்தில் வந்தவர். அவரின் பெயர் விநயன். அனைத்து கோயில்களையும் பூதங்களை வைத்து கற்களை தூக்கி கட்டியதால் தான் இவரை கோயில்களில் முதலாவதாக வைத்தனர். வீட்டில் எலி வந்தால் கட்டையால் அடித்து கொள்கிறார்கள். கோயிலில் விநாயகருக்கு அருகில் எலியின் சிலையை வடிவமைத்து வணங்குகின்றார்கள். எதற்காக ?
எல்லா கோயிலுக்குள்ளும் யானையை வளர்க்கிறார்களே ஏன் ? அனைத்து மிருகங்களையும் சீண்டினால் தான் மதம் பிடிக்கும். யானையை சீண்டாமலேயே மதம் பிடிக்கும் ! மனிதனுடன் அன்பாக பழகி பின் மதம் பிடித்து அவனையே கொள்வதை எதற்காக கோயிலுக்குள் வைத்துள்ளார்கள் ?
இதோடு அவன் நிற்கவில்லை. இது போதாது என்று நினைத்து இதற்கு மேல் பெரிதாக ஒன்றை படைத்தான். அது தான் ராட்சத யாளி. மிகவும் பெரியது. மிகவும் கொடியது. அதாவது ஒரு ஆண் ராட்சத யானையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது எனலாம். அதாவது சராசரியாக எண்பது அடிகள் ! இதைத் தான் உலகம் முழுவதும் மண்ணையும், மழைகளையும் தோண்டி இதன் புதைப் படிமங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு “DINOSAURS” என்ற பெயரையும் சூட்டினார்கள். நாம் அவர்களைப் போல் மண்ணையும் மலைகளையும் தோண்ட வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள படத்தை பார்த்தால் போதும் (முதல் கமெண்டை பார்க்கவும்)
மனிதர்களுக்கு துன்பம் தரக் கூடிய சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, பன்றி, நரி, விஷப் பூச்சிகள், பாம்புகள் முதலிய அனைத்து காட்டு விலங்குகளையும் படைத்தான். மண்ணின் வளத்தைக் கெடுக்கும் பல விஷச் செடிகளையும் படைத்தான்.
சீமை கருவேலம் என்ற மரம் தமிழகம் முழுவதும் எப்படி பரவியது ? யார் பரப்பியது ? இதன் வேர்கள் 150 அடி ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுவதுடன், காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சுகின்றன. இதன் விஷத் தன்மை, வெப்பத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பிற மரம், செடிகள், கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது ! இந்த மரங்களை வேருடன் முற்றிலுமாக அழிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கழிவு நீரை மாற்றி இனிக்கும் தேனீரை கொடுக்கும் தென்னையை படைத்த கடவுளா இதைப் போன்று ஒரு விஷ செடியை படைத்திருப்பார் ?
சிரவனின் காலத்திற்கு பிறகு ஆயிரம் வருடங்கள் கழித்து ராமர் தோன்றினார். அவர் கடவுளின் முதல் அவதாரம் ! தசாவதாரம் என்பது தவறு ! ராமர் வாழ்ந்தது உண்மை ! தமிழகத்தில் அரக்கர்கள் சூழ்ந்திருக்க வேறு இடத்தில் பிறந்தார் அவர் ! அரக்கர்களுக்கு தான் ராமர் யார் என்று தெரியுமே ? பல சூழ்ச்சிகள் செய்து குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கி அரசனையே காட்டிற்கு செல்ல வைத்தவர்கள் அரக்கர்கள். அரக்கனான ராவணன் சீதையை மிக எளிதாக கடத்திவிட்டான். ராமன் தமிழகம் வந்தது உண்மை ! மனிதர்களை நம்பாமல் குரங்குகளை நம்பியது உண்மை ! ராமர் பாலம் கட்டியது உண்மை ! ஆனால் அவரால் ராவணனை வெல்ல முடியவில்லை ! அவர் அன்றே ராவணனை அழித்திருந்தால் இன்று நம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் ! அரக்கன் தமிழ் இனத்தை மட்டும் தானே அழிப்பான் ! ராவணனின் அரக்க வம்சம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது அங்கு ! அனைத்து பக்கத்திலும் இருந்து தமிழ்நாட்டை ஏன் சீரழிக்கிறான் என இப்பொழுது புரிகிறதா ? தமிழ் நாட்டில் கடவுள் இநன்யா அவதரிப்பது எதற்கு என்று இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள். விரைவில் தமிழர்களை எதிர்ப்பவர்களுக்கு சர்வ நாசம் உறுதி !
ஆக ராமன் தோற்றார் ! அவரின் குடும்பத்தையே அவரால் காப்பாற்ற முடியவில்லை ! மக்களுக்கு ஞானத்தை எப்படி வழங்குவது ? வந்த நோக்கம் நிறைவேறவில்லை ! தற்கொலையும் செய்து கொண்டார்.
ராமருக்கு பின் ஆயிரம் வருடங்கள் கழித்து கிருஷ்ணர் தோன்றினார். எல்லாம் பிரபஞ்சத்தின் காலக் கணக்கு. கிருஷ்ணரும் வாழ்ந்தது உண்மை பல அரக்கர்களையும் கொன்றார். அரக்கர்கள் படைத்த பல கொடிய விலங்குகளையும் அழித்தார். கிருஷ்ணர் தமிழகம் வந்தது உண்மை ! தாமிரபரணியில் வந்து நீராடியதும் உண்மை !
கடவுளின் அவரதாரங்களும், தூதுவர்களும் கண்டிப்பாக ஒரு முறையாவது தமிழகம் வந்திருக்க வேண்டும் ! கடவுளைடைய அவதாரங்களாக இருந்தாலும் வந்த நோக்கத்தை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்று கடவுள் இநன்யா சொல்வார். ஏன் கிருஷ்ணனால் மகாபாரத போரையே நடக்காமல் தடுத்து கோடிக் கணக்கான உயிர்களையும் காப்பாற்ற முடியாமல் போனது. கடைசியில் ஒரு வேடனால் கொலை செய்யபட்டார் ! எல்லாம் அரக்கர்களின் சூழ்ச்சி.
ராமன் என்ற பெயரும், கிருஷ்ணன் என்ற பெயரும் யுகத்தில் அவர்கள் பெற்றோர்கள் வைத்த பெயர் ! அவர்களுக்கு மேலே பிரபஞ்சத்தில் உண்மையான பெயர்கள் உள்ளது ! அதை ஏன் அவர்கள் சொல்லாமல் மறைத்தார்கள் என்று யோசியுங்கள் ? உணருங்கள் !
அரக்கர்கள் மிகுந்த வலிமையுடையவர்கள். ஆயிரம் யானைகளின் பலம் உடையவர்கள். அரக்கர்களின் சராசரி உயரம் இருபது அடி ! ஒரு எண்பது அடி உயர ராட்ஷத யாளியின் மேல் ஏறி அதை எளிதாக அவனால் கட்டுப்படுத்த முடியும் ! கிருஷ்ணனின் உயரம் பதினைந்து அடி ! பீமன் கிருஷ்ணனின் தோளிற்கு இருப்பான். ராமனின் உயரம் பன்னிரண்டு அடி !
ஆதிகாலத்தில் அனைத்துமே உயரம். ஒரு நெற்கதிரின் உயரம் பன்னிரன்டு அடி ! கோயில் கோபுரத்தை மிக எளிதாக கட்டினான் அரக்கன். கோயில்களின் வாசல் உயரமானது ! கோயில் சிலைகள் உயரமானது ! அனைத்து கோயில்களிலும், கோபுரங்களிலும் யாளி சிலை, யானை சிலை உள்ளதல்லவா ? ஏன் என்று இப்பொழுதாவது யோசியுங்கள் ! கோயில் கட்டியது யார் என்று புரியும் !
சரித்திரத்தை மறந்தீர்கள் ! சாஸ்திரத்தில் மயங்கினீர்கள் ! ஏன் ?
மீண்டும் சொல்கிறேன் ! இப்பொழுது யுகத்திற்கு கடவுள் வந்துள்ளார் ! இநன்யா என்ற நாமத்தை மட்டும் தான் உலகமே இனி உச்சரிக்கும் ! உலகமெங்கும் தமிழனின் புகழ் பரவும் ! தமிழர்கள் உலகத்தை மீண்டும் ஆளப்போகிறார்கள் விரைவில் ! எல்லாம் மாறப் போகிறது ! உணருங்கள் துன்பமில்லை !
No comments:
Post a Comment