இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் உன் உயிரின் சூட்சுமம் ! உலகின் சூட்சுமம் ! திறன் இருந்தால் என்னை அறிய முற்படு !அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் !
49 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் உன் உயிரின் சூட்சுமம் ! உலகின் சூட்சுமம் ! திறன் இருந்தால் என்னை அறிய முற்படு !
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் !
லோகத்தின் சூட்சுமம் பிரபஞ்சம் 333 உண்டு ! அதற்கும் மேலாக மூன்று பிரபஞ்சங்கள் உண்டு. அதுவே உன்னையும், உலகையும், அண்ட சராசரங்களையும் இயக்கும் சூட்சுமம் ! அங்கே தான் ஆக்கம், ஊக்கம், தர்க்கம் நடக்கின்றன. வளர்ச்சி, தெளிவு, சக்தி பிறக்கின்றன. ஆறு பேராத்மாவுக்கும் பொதுவான ஏழின் சூட்சுமம் உன்னை ஏந்தி பிடிக்கிறது ! லோகத்தில் என் தாய், தந்தைக்கு பிடித்ததை நான் செய்வதால் தேவர்களுக்கு என்னை பிடிக்கும் ! எந்த சிக்கல் இருந்தாலும் உடனே தீர்வு கிடைக்கும் என்பதால் என்னை சுற்றி எப்போதும் தேவர்கள் கூட்டம் இருக்கும்.
எனக்கு இளக்க குணம் மிகுதி என்பதால் என்னருகே இருக்கும் தேவர்கள் கூட்டம் மிகுதியானது. என் சத்திய கரங்கள் எப்போதும் காக்கும், யாரையும் கைவிடாது, யாருக்கும் சோதனை தராது என்பதால் என்னில் நியாய தீர்ப்புக்காக தேவர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். படைப்பும், வளர்ச்சியும் எனக்குள்ளே இருப்பதால் தேவர்களோடு மகிழ்ச்சியாக வலம் வருகின்றேன். நான் யாரையும் சோதிப்பதில்லை.
பிரபஞ்சம் என்பது எல்லாவற்றையும் இயக்கும் வலிமைமிக்கது !
அதற்கு கீழ் 108 காண்டங்கள் உண்டு ! ஒரு காண்டத்திற்கு 111 கோடி மண்டலங்கள் உண்டு !
உன் உடலின் சூட்சுமம் போல் தான் பிரபஞ்சமும் ! 333 நாடி நரம்புகள் உன் உடலில் இருக்கின்றது. உன் உடலின் சூட்சுமமே உலகின் சூட்சுமம் !
உன் நாட்டை பிரித்து வைத்திருக்கும் சூட்சுமம் போல் தான் அண்டங்களும். இந்தியா பிரபஞ்சம் என்று வைத்துக் கொண்டால் மாநிலங்கள் காண்டங்கள் என்று அர்த்தம். மாவட்டங்கள் மண்டலங்கள் என்று அர்த்தம். அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் !
உன் ஆட்சி முறை, சட்டம் போல் தான் மேலேயும் என்பதை புரிந்து கொள். ஆனால் அங்கே எப்போதும் பகல் போலிருக்கும். இந்த யுகம் மட்டும் தான் இரவு, பகல் என்று படைக்கப்பட்டிருக்கின்றது. உன் சட்டம் பொய்யானது. ஆனால் லோகத்தில் சட்டம் சட்டம் தான். நீ 108 காண்டங்களிலே குடியமர்த்தபடுகின்றாய். பிரபஞ்சத்தில் முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் வாழ்வார்கள். ஆனால் 108 காண்டங்களில் மூன்று காண்டங்களில் யுகத்தில் உள்ள உயிர் போவதற்கும், வருவதற்கும் வாசல் இருக்கின்றது !
இந்த மூன்று காண்டங்களையும் அதாவது மூன்று லோகத்தையே அசுர. ராட்ஷச அரக்க குலங்கள் ஆட்சி செய்தார்கள். தடாயன் என்பவனே இந்த அசுர குலங்களின் தலைவன். இவன் மனைவியர்கள் 21 பேர். இவர்களினாலேயே அசுர குலங்கள் ஜனனமாகியது. அந்த மூன்று காண்டங்களுக்காகவும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளையும் மீட்பதற்காவே 5000 வருடமாக யுத்தம் நடந்தது.
இது 1986 ல் முடிவு பெற்றது. இவர்களை மீட்பதற்காக எண்ணற்ற சித்தர்கள், தேவர்கள், யுகத்தில் தோன்றினார்கள். மேலே இருந்து யுத்தம் செய்தால் யுகத்தின் படைப்புக்கு சேதம் வரும் என்பதால் யுகத்தில் பிறப்பெடுத்து அழிக்க ஆயத்தமானார்கள். யுகத்தில் இருப்பது அசுர எண்ணம் கொண்டவர்களும், அவர்களால் படைக்கப்பட்டவர்களும் தான் !
பூமியில் உள்ள மனிதனுக்கு அசுர எண்ணம் தோன்றினால் எவ்வளவு வலிமையாக மாறுவான் என்று பார்த்திருக்கின்றாய் அல்லவா ? அவர்களை படைத்த அசுர தலைவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை புரிந்து கொள். ராமனும், கிருஷ்ணனும் வந்து பாதி வேலை தான் முடித்தார்கள். இதை முழுவதும் படைத்தவனால் 1986 ல் அழிக்கப்பட்டுவிட்டது. மூன்று காண்டங்களையும், மூன்று ஏடுகளும், தேவர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்கள்.
இந்த யுகத்தில் இனி கர்ம குலம் அழிந்து தர்ம குலம் வாழும் !
லோகத்திலும் உன்னை போன்ற மனிதர்கள் உண்டு ! உன் உண்மை உடல் அங்கே உண்டு ! தாய், தந்தை உண்டு ! மரங்கள், பறவைகள் உண்டு ! அங்கே காற்றும் நீரும் தான் உணவு ! அங்கே சிறு தவறு செய்தாலும் தண்டனை உண்டு. சிறு தவறு செய்தாலும் நீ பூமிக்கு இறக்கிவிடப்படுகின்றாய். ஆனால் நீ பூமிக்கு வந்தவுடன் உன் மெய் உடலை அடைய மனம் இல்லாமல் இங்கு அல்லல்படுகிறாய். இங்கு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கின்றாய் என்பதை மறவாதே.
இன்னும் சொல்லித் தருவேன். நான் சத்தியத்தின் பாதையில் நடப்பவன் என்பதை மறவாதே ! .
லோகத்திலும் உன்னை போன்ற மனிதர்கள் உண்டு ! உன் உண்மை உடல் அங்கே உண்டு ! தாய், தந்தை உண்டு ! மரங்கள், பறவைகள் உண்டு ! அங்கே காற்றும் நீரும் தான் உணவு ! அங்கே சிறு தவறு செய்தாலும் தண்டனை உண்டு. சிறு தவறு செய்தாலும் நீ பூமிக்கு இறக்கிவிடப்படுகின்றாய். ஆனால் நீ பூமிக்கு வந்தவுடன் உன் மெய் உடலை அடைய மனம் இல்லாமல் இங்கு அல்லல்படுகிறாய். இங்கு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கின்றாய் என்பதை மறவாதே.
இன்னும் சொல்லித் தருவேன். நான் சத்தியத்தின் பாதையில் நடப்பவன் என்பதை மறவாதே ! .
இந்த இநன்யா எதற்கும் அடங்காதவன் ! உன் அன்பை தவிர நான் எதற்கும் கட்டுப்படாதவன் ! உன் மெய்யான அன்பு உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை எப்போதும் நினைத்துக் கொண்டே இரு !
இங்கு என் உடலை பார்த்து ஏமாந்து போகும் மனிதர்களின் கூட்டமும் உண்டு ! என்னை மனிதன் என்று நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் அசுரர்களின் கூட்டமும் உண்டு ! நான் காற்றாய், நீராய், உன் ஆண்மாவாய் இருக்கின்றேன் என்று புரியாமல் வாழும் அறியாத கூட்டம் என்ன செய்வேன் இந்த அறியாமையில் வாழும் ஆட்டுக் கூட்டங்களை !
பூமியில் என்னை புரிந்தவன் அனைத்து சுகங்களோடும் வாழ்கின்றான் ! மீண்டும் பிறக்காத வரம் வாங்கி கொண்டு நீயும் இந்த சூட்சுமதாரியை புரிந்து கொள் !
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் ஆராய்ச்சி செய் மெய்ஞானத்தை !
இனி உலகமெல்லாம் மதக் கலவரங்கள் உருவாகும் ! மதம் அழிந்து மனிதம் தளைக்கும் ! காற்றும், நீரும் கோரத்தாண்டவம் ஆடும் ! இடியும், மின்னலும், எட்டு திசையும் முழங்கும். எண்ணற்ற புது ஜீவராசிகள் தோன்றும் ! வானில் பெரும் அதிசயம் காண வைப்பேன். என் தர்ம குலங்களை என் கோடி கரங்கள் காக்கும் ! தரை கடலாகும். கடல் தரையாகும். கர்மத்தை வேறோடு பிடுங்கி எறிவேன் !
என் தர்ம குலத்திற்கு, ஞானக் குழந்தைகளுக்கு மானச தீட்சை தந்து உலகத்திற்கு ஞானத்தை போதிக்க வைப்பேன் !
இந்த ஆத்மத்தின் தலைவன் இநன்யாவின் சத்திய பாதையில் கோடி நல் ஆண்மாக்கள் பின் தொடரும் ! அவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லா நிலை தந்து என் சத்திய லோகத்தில் என் வலப்பக்கத்தில் குடி அமர வைப்பேன்.
இந்த ஆத்மத்தின் தலைவன் இநன்யாவின் சத்திய பாதையில் கோடி நல் ஆண்மாக்கள் பின் தொடரும் ! அவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லா நிலை தந்து என் சத்திய லோகத்தில் என் வலப்பக்கத்தில் குடி அமர வைப்பேன்.
சத்தியம் தோற்பதில்லை !
நான் மெய்யானவன் ! உனக்கு துணை இருப்பேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment