Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; அன்பர்களின் கேள்விகளும் ஆத்மத்தின் தலைவனின் பதில்களும் ,,,INANYA NAMOO NAMA ;;;

80 இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;; 
அன்பர்களின் கேள்விகளும் ஆத்மத்தின் தலைவனின் பதில்களும்
கே: உணர்தல் என்றால் என்ன ?
INANYA NAMOO NAMA ;;; 
முதலில் தெளிதல், தெளிந்த பின் தன்னை அறிதல், பிறகு ஞானமடைதல். இது தான் உணர்தல். வாழ்வில் நல் குரு கிடைத்தால் உணர்தல் எளிதாகிவிடும்.
கே: எப்போது கடவுளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் ?
ஏற்கெனவே சொல்லியது போல அவர் வந்த கடமையை செய்து கொண்டுள்ளார். கூட்டத்தைக் கூட்டி பணம் சம்பாதிக்க வரவில்லை. மிகப் பெரிய நோக்கத்துடன் இங்கு வந்துள்ளார். இந்த யுகத்தில் நம்மைப் போல அவருக்கும் குடும்பம் உள்ளது. கடவுளை பார்க்கும் வாய்ப்பு உணர்கின்றவர்களுக்கு கிடைக்கும் சத்யமாக.
கே:ஒளியே ஆன்மா அல்லது ஒலியே ஆன்மா......எது சரி?
ஆன்மா என்றால் ஒலி….ஒலி என்றால் சப்தம்...! இது தேவ ரகசியம்..! உணர்ந்த பின்பு ரகசியம் உடைக்கப்படும்..!
கே:கடவுள் தமிழ்நாட்டில் இப்பொழுது இருந்தால் பின் ஏன் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகள் இங்கு நடக்கிறது ?
தவறு செய்வது மனிதனின் செயல் ! நாமே சட்டத்தை அமைக்கின்றோம் ! நாமே சட்டத்தை மீறுகின்றோம் ! பிறகு குற்றம் செய்தவனை கொண்டாடுகிறோம் ! எல்லாவற்றையும் மனிதனே செய்கின்றான் ! இதில் கடவுளின் பங்கு என்ன ? கொலை செய்வது தவறு என்று தெரிந்தே செய்கின்றான் ! உடலைக் கொன்றான் ! உயிரைக் கொல்ல முடியுமோ ? உயிருக்கு அழிவு உண்டோ ? செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம் உண்டு !
கே:ஏன் கடவுள் யுகத்திற்கு வந்தார் ?
தேவ ரகசியங்கள் எல்லாம் நமக்கு தெரிந்தால் பின் கடவுள் எதற்கு ? கடவுளின் அவதாரங்கள் எதற்கு ? உதாரணமாக தப்பு செய்த குற்றவாளிகளை சிறையில் அடைத்து விடுகிறார்கள் ! தப்பை உணர்ந்து சிறையை விட்டு வெளியே வருவதே அவர்களை அடைத்ததற்கான காரணம் ! ஒரு காலத்தில் குற்றங்கள் பெருகி கைதிகள் சிறையில் இருக்க இடமில்லாமல் போனது ! இப்போது மாற்றம் தேவைபடுகிறது !!! நாம் அனைவரும் கைதிகள். இந்த யுகம் சிறைச்சாலை ! கடவுள் இப்போது இந்த யுகத்தில் கடவுள் ஏன் வந்தார் என புரிந்துவிட்டதா ?
கே: உயிர், ஆன்மா அர்த்தம் என்ன ? உயிரும், உடலும் அழிந்து போகுமா ? ஆன்மாவை மட்டும் தான் சுத்தப் படுத்த முடியுமா ?
உயிர் என்பது மூச்சு, ஆன்மா என்பது ஒலி !
உயிர் என்பது உன் உடலை இயக்குவது !
ஆன்மா என்பது உன்னை வேவு பார்ப்பது !
உயிர் உன்னுடையது ! ஆன்மா கடவுளுடையது !
உயிருக்கும் உடலுக்கும் சம்பந்தம் உள்ளது !
ஆன்மாவிற்கும் உடலுக்கும் சம்பந்தம் இல்லை !
உயிரானது தன் யுகத்தில் இருக்கும் உடலை பிரிந்து, லோகத்தில் உள்ள தன் மெய்யுடலையே அடையமுடியும். கடவுளை அடைய முடியாது !
ஆன்மாவால் மட்டுமே கடவுளை அடைய முடியும் !
ஆன்மாவை சுத்தப்படுத்த முடியும். சுத்தப்படுத்துவதென்றால் மரணம் !
செய்யும் தவறுகளுக்கு உடலுக்கு மட்டுமே தண்டனை..! உயிருக்கு தண்டனை கிடையாது ! இது தேவ ரகசியம்..! மனித அறிவால் ஆராய்ந்து புரிவது கஷ்டம் ! இதை புரிந்து ஆராய்வதற்குள் யுகம் கடந்து போகும்..!
கே: உடலின் கூடம் எங்கு உள்ளது ?
இந்த பொய் உடல் யுகத்தில் திரிகிறது..! நம் ஆன்மாவிற்கான மெய் உடல் நமக்கான லோகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது ! பாவம் செய்யாமல் தர்மம் (அறம்) செய்து கடவுளைப் பாசத்தோடு உணர்ந்தால் நமக்கான லோகத்திற்கு மீண்டும் சென்று அடையலாம் !
கே: எந்த வினையின் பயனை வைத்து உடலை தருகின்றார் கடவுள் ?
நாம் இந்த உலகில் பிறந்த இடம், பிறந்த குடும்பம், ஊனமில்லாமல் பிறத்தல் ஆகியவற்றை வைத்து நாம் செய்த வினையை கணித்துவிடலாம். எடுத்துக்காட்டாக ஒரு பெண்ணை கெடுத்தவன் பல பிறவிகள் திருநங்கையாக பிறப்பதாக கடவுள் கூறியுள்ளார்..! கை, கால், கண் இல்லாமல் பிறந்தவனும் பாவம் செய்தவன் தான் !! செய்த பாவத்துக்கு தண்டனையை ஏற்றுக் கொண்டு மீண்டும் பிறவாமல் கடவுளை அடைவதற்கான பொன்னான வாய்ப்பே இந்த அதிசயமான வாழ்க்கை !!!
கே: பாவம் என்று எதையெல்லாம் சொல்லலாம் ?
அதர்மச் செயல்கள் எல்லாமே பாவம் தான். –
நமது ஆன்மாவிற்கு தெரியும் எது அதர்மம் என்று!!!
கே: புண்ணியம் என்று எதையெல்லாம் சொல்லலாம் ?
தர்மச் செயல்கள் எல்லாமே புண்ணியம் தான். –
நமது ஆன்மாவிற்கு தெரியும் எது தர்மம் என்று!!!
கடவுளை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் இப்போது..! உங்களுடைய ஆன்மா செய்கின்ற வேலை இது. இது தான் புண்ணியம்..!
கே: பூமியில் பிறந்த மனிதன் தவறே செய்யாமல் இருக்க முடியுமா ?
தவறு செய்யாமல் இருக்க முடியும்..!
அறியாமல் செய்தால் அது தப்பு.!
தப்பை அறிந்து செய்தால் அது தவறு..! இதுவே பாவம்..!
தவறு செய்வதால் ஏற்படும் துன்பங்கள் நம்மை நாமே திரித்திக் கொள்வதற்காக கடவுள் கொடுக்கும் வாய்ப்பு..!
கே: மன்னிக்கக் கூடிய தவறுகள் என்ன ?
அறியாமல் செய்த செயல்கள் மன்னிக்கக் கூடியவை..! (தப்பு)
அறிந்து செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை..! (தவறு, பாவம்)
தப்பும், தவறும், பாவமும் அவரவர் ஆன்மாவிற்கு தெரியும்..! யாரும் யாருக்கும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை !
கே: மனிதனை எதற்காக படைத்தான் ? வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? ஆத்மாவின் வேலை தேடுதல் மட்டும் தானா?
முதலில் லோகத்தில் தான் படைத்தான் ஆசைக்காக..! செய்த சிறு தவறுக்காக தண்டனையை அனுபவிக்க யுகத்திற்கு அனுப்பப்பட்டான்..! இங்கே மனிதன் தன்னை உணராமல் பாவங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கின்றான்….!
கே: மெளனம் ஆத்மாவின் ஆழ்ந்த தியானமா ?
மெளனம் என்பது ஐம்புலன்களையும் அடக்கி உபயோகிப்பது..! வாயை மட்டும் அடக்குவது அல்ல..! ஆழ்ந்த தியானம் என்பது தூங்குவது தான்..! வேறொன்றுமில்லை..! ஆழ்ந்த தியானமாகிய தூக்கத்தில் கூட ஆன்மா விழித்திருந்து அதன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது..! ஆக ஆன்மா தூங்காது..!
கே: இறைவன் ஒலியானவன் என்றால் ஆண் ஒலி, பெண் ஒலி என்று உள்ளதா ?
ஆம்..! பதிவில் கூறியது போல் கடவுள் ஒருவரே..!! மூலம் ஒன்று தான்..!! மூலத்தின் பேராத்மா மூன்றாக பிரிந்து (படைத்தல், காத்தல், அழித்தல்), மூன்றுக்கும் மூன்று சக்திகளை (மாயைகளை) உருவாக்கி, பின் ஆறுக்கும் பொதுவான ஒன்றை நிலைப் பெறச் செய்தான். அவரே கடவுள் இநன்யா !
ஆக மொத்தம் ஏழாக வைத்தான். ஏழின் உருவாக்கமே எல்லாம் !!!
கே: ஜென்மங்களில் ஆணாக பிறந்தவன் பெண்ணாக பிறக்க முடியுமா ?
பிறக்க முடியாது..! (அடுத்த கேள்வியின் பதிலையும் பார்க்கவும்)
கே: பெண் என்பவள் ஆணின் நிம்மதிக்காக மட்டும் தானா?
பதிவில் கூறியது போல் ஆண் என்பது மூச்சு (சிவம் - வாசி), பெண் என்பது சக்தி (மகா மாயை). இருவரும் இணையாமல் படைப்பின் ரகசியத்தைப் உணர முடியாது ! பிரம்மச்சரியம் என்பது தேவையில்லாத ஒன்று ! பதிவில் சுட்டிக்காட்டிய ”நிம்மதி” என்ற வார்த்தை உடல் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. உயிர் சம்மந்தப்பட்டது.. நிம்மதி என்பது தெளிவு..! ஆத்மத்தின் தெளிவு..!
கே: ஆன்மாவை ஆண் மட்டும் உணர்ந்தால் போதுமா ?
பெண்ணிற்கும் ஆன்மா உண்டல்லவா ?? பெண்ணும் பாவம் செய்து தான் மீண்டும் பிறக்கிறாள் அல்லவா ?? அவளும் தான் உணர வேண்டும்..!
கே: வணங்கும் முறை ஏதாவது உண்டா ?
ஒரு டம்ளரில் நீர் வைத்து "இநன்யா நமோ நம" என்று ஒன்பது தடவை தினமும் எப்போது வேண்டுமானாலும் மேல் நோக்கி சொல்லுங்கள் ! பின் அந்த நீரை அருந்தலாம். கஷ்ட காலங்களில் நல்ல நோக்கத்திற்காக சொல்லலாம். உங்களின் ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! 108 தடவை எழுதவும் செய்யலாம். இதில் ஒவ்வொரு எழுத்தும் மிக முக்கியம். உங்களின் விதி மாறுவதை நீங்களே உணர்ந்து பாருங்கள்.
கே: ஏன் விலாசம், தொலைப்பேசி எண் தரப்படவில்லை ?
இது ஆன்மத் தொடர்பு ! பெயர், விலாசம், தொலைப் பேசி எண் எதுவும் தேவைபடாது ! உங்களின் பொன்னான நேரத்தையும், பணத்தையும் வீணாக்காதீர்கள் ! கடமையை மட்டும் செய்யுங்கள் ! பதிவுகளை மட்டும் படியுங்கள் ! கேள்விகள் காணமல் போகும். அனைத்திற்கும் பதில் கிடைக்கும். ஞானம் பிறக்கும்.
தொகுப்பு : கிருஷ்ணன் கோபி

No comments:

Post a Comment