என் பசைவு உண்மைதானடா ! பெருவாரி போல் தானடா ! சத்தியம் நான் தானடா ! தரணியில் எதை தேடுகின்றாயடா ?
சத்தியம் ;;;
புஷ்கரி என்றால் தாமரை. புஷ்கரம் என்பதும் ப்ரணம் என்பதும் நீர் ! இந்த புஷ்கரிக்கும் புஷ்கரம் என்ற ப்ரணத்திற்கும் தொடர்பு உண்டு ! இரண்டும் ஆன்மா, உயிர் சம்பந்தப்பட்டது ! என் அன்பினிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா திருக்கரத்திலே ஐந்து கோடி ப்ரணம் உண்டு ! கையில் இருக்கும் புஷ்கரிணி என்ற அட்சயத்திலே ஆள கருத்து உண்டு ! ஆள்பவன் படைத்தவன் கையிலே நீருண்டு ! புணித ஸாதுனா என்ற பெருங்காற்றும் உண்டு !
வலிமையானவன் படைத்தவன் தானே ? பின் பாழ்பட்டதை வணங்கி பாசமில்லாது அலைகின்றாயே ஏன் ? உன் உயிருக்கு நிம்மதி தரும் சூட்சுமம் நீரில் தான் உண்டு. நீர் தான் உனக்கு மென்மை, ஆளுமை கற்றுத் தரும் !
நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! என் செயல் சத்யம் ! காமமும், மோகமும், கோபமும் உள்ளவனால் நல்வாக்கு தரமுடியாது. சத்யம் என்பது ஆன்மா ! சத்தியமே நிலையானது ! உண்மையானது ! நீ சத்தியத்தை பேசி பழகு ! நீ சத்தியனாவாய் ! உன் சொல் வெல்லும். பின் தீமையானது உன்னை நெருங்காது. எல்லா நேரத்திலும் சத்தியத்தை கடைபிடி ! அதுவே தர்மம் ! ஆனால் தர்மத்திற்காக போராடும் பொழுதும், சண்டையிடும் பொழுதும் சத்யம் தேவை இல்லை.
தர்மத்திற்காக உயிர்களை கொல்வது தவறில்லை. கடவுள் தர்மத்திற்காக தான் இப்போது பூகம்பம், இடி, மின்னல், சூறாவளி, பெரும் வெள்ளம் என்று அசுர கூட்டங்களை அழித்து கொண்டிருக்கின்றான். தர்மத்திற்காக உயிரை கொல்வது தவறில்லை ! பாவமில்லை ! தர்மத்திற்காக மட்டுமே உன் சத்யம் கையில் யுத்தத்தை எடுக்கட்டும். நான் சத்தியத்தின் சாயல். என் ஒளி உன் மேல் விழும் போது நீயும் சத்தியனாகிவிடுவாய் !
சத்தியம் பேசும் தன்னிகரில்லா பெரும் மரங்களைப் பார்த்து உணர் ! தனக்கு தானே சமைத்து உண்ணும் உயிர் மரங்களை உணர் ! பிறருக்கு உதவியாய் இருக்கும் மரங்கள் பேசும். ஆனால் அதன் அழுகுரல் கேட்காமல் மனிதன் வெட்டி சாய்க்கின்றான். மனித நேயம் தொலைத்து மழை வளம் இல்லாது மாய்கின்றான். மரங்கள் யுகத்தில் கடவுளை மட்டுமே நம்பும். தனக்கு தானே சமைத்து உண்ணும் மரங்கள் சத்தியத்தின் சாயல் தானே ?
சத்திய வார்த்தைகளை பறவைகளும் பேசும் ! இங்கே சத்தியத்தை தொலைத்தது மனிதன் மட்டும் தான் ! மனிதன் சத்திய பாதையை மறந்தான். தன் சந்ததிக்கு சத்தியம் சொல்ல மறந்தான் ! கோபம், ஆசை, விரக்தியை தான் மனிதன் கற்று கொடுக்கின்றான். தீவினைக்குள் மூழ்கி திசை தெரியாமல் அலைகின்றான் !
மண்ணையும், மரங்களையும் எப்போது மனிதன் மறந்தானோ அப்போதே மனித நேயம் தொலைத்தான். முன்னால் வீதியெல்லாம் மரங்களை நட்டான். இப்போது வீதியில் நிற்கின்ற மரங்களை வெட்டி காகிதம் செய்கின்றான். காகிதத்தால் வந்த வினை தானடா கர்மம் நிறைய !
கடவுள் சத்தியமடா ! நிச்சயம் திருத்தி கரை சேர்ப்பான். நான் கடை விரிக்க வரவில்லை. நீ உண்டு தின்பதை பார்த்து உண்மை அறிய வந்தேன் ! சத்யம் சத்யம் என்று மதங்களை வைத்து கூவி நிற்கின்றான். எப்போதும் சத்யம், எதற்கெடுத்தாலும் சத்தியத்தை பேசி சந்ததியை பிரிந்து அலைகின்றான். சத்யம் தவறி உழைப்பில்லாமல் கடவுள் பெயரை சொல்லி உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
உலகில் பஞ்சம், வறுமை, நோய் இயற்கையின் சீற்றத்தை கடவுள் கொடுக்கின்றான். ஆண்மாவின் ஆளுமை தெரியாமல் வாழ்கின்றான் மனிதன் ! உணர் !
சத்தியத்தோடு இரு !
சத்தியத்தோடு பழகு !
சத்யமாய் உனக்கு சத்திய வாசல் தெரியும் !
சத்தியத்தோடு பழகு !
சத்யமாய் உனக்கு சத்திய வாசல் தெரியும் !
உண்மை பசைவு நானடா !
சத்தியமானவன் நானடா !
நான் இநன்யா !