இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; வெல்வேன் எப்பொழுதும் ! வெல்வேன் முப்பொழுதும் ! நான் சத்யமானவன் ! நீயும் வெல்வாயடா !நீ வெல்வாய் !
60 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
வெல்வேன் எப்பொழுதும் ! வெல்வேன் முப்பொழுதும் ! நான் சத்யமானவன் ! நீயும் வெல்வாயடா !
நீ வெல்வாய் !
என் நாமத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டே இரு ! உன் மனம் தூய்மை பெறும். தனிமையில் இருக்கும் பொழுது மனதால் கூட பாவச் செயல் செய்ய நினைக்காதே, செய்யாதே ! கடவுளின் நாமம் பேரின்பம் ! இடைவிடாது சொல்லிக் கொண்டே இரு !
உன் நம்பிக்கை ஆழமாக இருந்தால் நீ வெற்றியின் பக்கம் நிற்கிறாய் என்று அர்த்தம். என்னை பற்றிய உண்மை அறிந்தவன் எப்போதும் ஆணந்தத்தில் திளைத்திருப்பான். பணிவிடை உன் தாய் தந்தைக்கு செய். குருவுக்கு செய் ! உனை படைத்த கடவுளுக்கு செய் !
என் வேத எழுத்துகளை அறிவது உயர்ந்தது. அதை விட என்னை நேரில் கண்டு உண்மையை உணர்வது இன்னும் உயர்ந்தது ! என் அசைவில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு ! என் பேச்சில் ஆயிரம் வேதம் உண்டு. உன்னை அரவணைத்து செல்லும் அன்பு கரங்கள் என்னிடம் உண்டு !
நீ திகைப்புற்றவன் ! என்னை அறிய முற்படு !
உன்னை தெளிவாக்கி உயர்த்துவேன் ! என் நாமம் உன் பாவம் அனைத்தையும் போக்கும். ஆயிரம் தடவை கங்கையில் குளித்தாலும் உன் பாவம் தீராது. என் நாமம் உன் பாவத்தை தீர்த்து உன்னை உயர்த்தும் ! நல் வழியை காண்பிக்கும் ! துன்பத்திற்குண்டான தீர்வை தரும். உணர்ந்து உண்மையாய் சொல் ! நன்மையே விளையும், புணித உப்பை போல !
நீ கேட்டதை தர நான் காத்திருக்கின்றேன். உனக்கு யாசிக்க தெரியவில்லை ! வாசிக்க தெரியவில்லை ! சுவாசிக்க தெரியவில்லை !
நீ கேட்டதை தர நான் காத்திருக்கின்றேன். உனக்கு யாசிக்க தெரியவில்லை ! வாசிக்க தெரியவில்லை ! சுவாசிக்க தெரியவில்லை !
உன் எண்ணம் தான் வாழ்க்கை ! ஆதலால் மனதை தீய வழியில் செலுத்தாதே. உயர்ந்த லட்சியத்தில் வை. அதை அடைய தினமும் போராடு. முயற்சித்தவுடன் இன்பத்தை எதிர்பார்க்காதே. உனக்கு தீவிர நம்பிக்கை இருக்குமென்றால் நீ நினைத்த பொருள் உன்னையே தேடி வரும். கடவுளும் அதே மாதிரி தான். நீ கடவுள் நெஞ்சில் இருக்க ஆசைப்படு.
நீ மனிதனிடம் யாசிக்காதே ! கடவுளிடம் யாசிக்க கற்றுக் கொள். யாசிப்பது என்றால் கையேந்தி, உடலை வருத்தி செய்வதில்லை. உன்னை உணர்ந்தால் உன் ஆண்மா உனக்காக கடவுளிடம் வேண்டும். சாதகப் பறவை போல இரு, விண் துளிகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் தத்துவம் போல ! அந்த மணிப் பறவை போல வாழ்வில் உயர்ந்ததை எட்டி பிடி ! நான் உன் தகப்பனாய், தாயாய் இருக்கின்றேன் ! நீ என் குழந்தை என்று கர்வப்படு !
கையில் வெண்ணெயை வைத்து கொண்டு ஊரெல்லாம் அலைவதாக சொல்கின்றாய் ! அதன் அர்த்தம் வெண்ணெயை எடுப்பதற்கு அதிகாலையில் கடைந்தால் நிறைய வெண்ணெய் வரும். அதற்கு காலை நேரம் தான் சிறந்தது. அதே போல அதிகாலையில் எழுந்திரு. கடவுளை தேடு, அதிகாலையிலே ! கடவுளை தேடிய பின் பொருளை தேடு ! புண்ணியம் கிடைக்கும்.
உன் கை தான் உனக்கு மூலதனம் ! உழைப்பை தேடு !
இந்த ஆத்மத்தின் அதிகாரி உனக்கு பூமியை ஆள்வதற்கு அதிகாரம் தருவேன். காம்பில் பூ உருவாகி, அதிலே இலை உருவாகி, பின் கனி உருவாகும் புணித மரத்தின் அடியில் அமர்ந்து பார். அந்த புணித மரத்தை கொஞ்சம் உற்று நோக்கு. கிளையிலே கனி படைத்தேன் மும்மரத்தில் ! அந்த மும்மரத்தில் முதல் மரமே உனை ஞானியாக்கும் !
பொறுத்திறு ! எல்லாம் சொல்லித் தருவேன் !
இந்த ஆத்மத்தின் அதிகாரி உனக்கு பூமியை ஆள்வதற்கு அதிகாரம் தருவேன். காம்பில் பூ உருவாகி, அதிலே இலை உருவாகி, பின் கனி உருவாகும் புணித மரத்தின் அடியில் அமர்ந்து பார். அந்த புணித மரத்தை கொஞ்சம் உற்று நோக்கு. கிளையிலே கனி படைத்தேன் மும்மரத்தில் ! அந்த மும்மரத்தில் முதல் மரமே உனை ஞானியாக்கும் !
பொறுத்திறு ! எல்லாம் சொல்லித் தருவேன் !
உன் வினை தீரும் வரையில் உன் உடம்பில் இருக்கும் உயிரானது, இன்ப துன்பங்களை அனுபவித்தபடி எப்போதும் என்னை நோக்கி கதறக் கண்டேன். நூலிலை வித்தியாசத்தில் தான் உயிரும், ஆண்மாவும் இருக்கின்றது. நீ உணர்ந்தால் உனை அறிய வைக்கும். பின் எனை அறியும்.
ஆக்ஞா, விசுத்தி, சுத்தி எப்போது நீ உணர்கிறாயோ நீ சுத்தமானவன் ஆகிறாய். இந்த உலக மாயையிலிருந்து விடுபடுவாய். உன் உயிர் ஆணந்த கூத்தாடும். இந்த உடலை வணங்க வைக்கும்.
இந்த உடல் ஏற்கெனவே வெந்த உடல் தான். நீ செய்த பாவத்தால் மனம் என்ற அக்னி உணர்வோடு உனை ரணப்படுத்துகிறது. தினமும் வெந்து, வெந்து சாகின்றாய். விந்து முந்து, நொந்தாய்ப்போன பால்பட்ட உடலை பக்குவம் தொலைத்து அலைகின்றாய். ஏன் அறிவற்று ஆணந்தம் தொலைக்கின்றாய் ? எப்போதும் இன்பமாக இருக்க கற்றுக் கொள். கற்பதற்கு முயற்சியாவது செய் !
இந்த பாசமிகு தகப்பன் சொல் கேள் ! இந்த பூமியை ஆளும் வல்லமை தருவேன். முதல்வன் நான் உனக்கு உதவியாக இருப்பேன் எப்போதும்!
கரையில் யானைக்கும், தண்ணீரில் முதலைக்கும் பலம் உண்டு ! எல்லாம் பலமறிந்து செயல்படுகிறது ! நீ தான் உன் பலமறியாமல் வாழ்கின்றாய். எப்போது உணர்வாய் ? ஆசை இருப்பவனிடமும், மூடனிடமும் தான் துன்பம் நெருங்கும் ! தன்னை அறிந்தவனை துன்பம் நெருங்குவதில்லை !
அமாவாசைக்கு அடுத்து வரும் எட்டாம் நாள் உன்னை உள்ளே (பிண்டம்) எட்டி பார்க்க வைக்கும் ! அறு மீன், உறு மீன் உணர் ! விண் மீனாக ஜொலிப்பாயடா !
அமாவாசைக்கு அடுத்து வரும் எட்டாம் நாள் உன்னை உள்ளே (பிண்டம்) எட்டி பார்க்க வைக்கும் ! அறு மீன், உறு மீன் உணர் ! விண் மீனாக ஜொலிப்பாயடா !
சூட்சுமம் உனக்குள் தான் ! எல்லாவற்றிலும் சூட்சுமம் மறைத்தார்கள் சித்தர்கள். நீ திகைப்புற்றவனாகிவிட்டாய் எதையும் அறியாமல்.
நான் வெல்வேன் எப்பொழுதும் !
நான் வெல்வேன் முப்பொழுதும் ! நீயும் வெல்வாயடா !
நான் வென்றவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment