Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் நான் ! உனக்கு ஞானமிருந்தால் உணர்ந்து பார் ! INANYA NAMOO NAMA ;;;


இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் நான் ! உனக்கு ஞானமிருந்தால் உணர்ந்து பார் !
36 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
Inanya Maha Munivar

உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் நான் ! உனக்கு ஞானமிருந்தால் உணர்ந்து பார் !
என்னை நினை ! உனக்கு ஞானம் வரும் !
சங்கு சக்கரம் தத்துவம் என்ன ?
செத்தவனுக்கு செத்த சங்கு எடுத்து ஊதும் உன் அறியாமையை என்னவென்று சொல்வேன் ? கோயிலிலும் சங்கு ஊதுகிறாய். இறந்தவனுக்கும் சங்கு ஊதுகிறாய். சங்கின் தத்துவம் அறியாத மானிடன் நீயல்லவா ? உன் கழுத்தை சங்கு என்று ஏன் சொன்னார்கள் என்று யோசித்தாயா ?
வீட்டின் முன்னால் செத்த சங்கை பதித்து திசை தெரியாமல் அலையக் கண்டேன். உன் கழுத்து பகுதியை சங்கு என்று சொன்னான். அதிலுருந்து தான் குரல் வருகிறது. வீட்டுக்குள் வந்தவுடன் உன் தொண்டையிலிருந்து வரும் குரல் உதவி செய்யும் நோக்கத்தோடும், உண்மையை உரைக்கும் செயலோடும், நல்ல வார்த்தையை பேச வேண்டும். வெளியில் உள்ள செயலை, பேச்சை வாசலோடு விட்டு வா என்று அர்த்தம். கிருஷ்ணன் போர்களத்தில் மட்டுமே செத்த சங்கை எடுத்து ஊதினான். அது மரணத்தை பறைசாற்றுவதற்காக ! போர்களத்தில் மட்டும் தான் சங்கை உபயோகப் படுத்தினான் ! இடையில் புல்லாங்குழல் தத்துவம் ! உணர் ! உண்மை புரியும்
செத்த சிப்பி சுண்ணாம்பு தர கண்டேன். செத்த சங்கு உனக்கு எதை தந்ததடா ?
சிவன் விஷம் குடித்ததாக கதை சொல்கிறாய் ! அது ஏன் கழுத்தில் (சங்கு) நின்றது. உணர். கழுத்து பகுதியை சங்கு என்று ஏன் கூறினான் ? சங்கு கழுத்து பெண்களுக்கு என்று ஏன் சொன்னான் ? எதுவும் புரியாமல், தெரியாமல் விஷ்ணு கையில் செத்த சங்கை கொடுத்து அழகு பார்த்தான் !
சக்கரம் என்பது உன் மூலாதாரம். நீ அதை உணர்ந்தால் கடவுள் அருகில் இருக்கலாம் என்று பொருள் ! இது தெரியாமல் கடவுளிடம் சூலாயுதம், வேலாயுதம், சங்கு, சக்கரம், புலி, சிங்கம், யானை, எலி, இன்னும் எதை எதையோ வைக்கின்றான் !
அட மானிடா, ஏன் உணராமல் அலைகின்றாய் ?
விஷ்ணு ஏழு நிலைகளை கையில் வைத்திருப்பதன் தத்துவம் தான் சக்கரம் ! கடவுளை கோபமாக, உக்ரமாக காட்டி பயத்தில் வணங்கும் உன் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வேன் ? திருந்து, இல்லையேல் உனக்கு ஞானம் ஊட்டி திருத்துவேன் ! நீ நன்மை செய்து பாவம் செய்யாமல் இருந்தால் உன் மூலாதாரம் கடவுளிடம் கூட்டிச் செல்லும். பாவம் செய்தால் உன் மூலதாரமே உனை அழிக்கும். உன் மனதை ரணமாக்கி பாரமாக்கும். உணர் !
வேம்புக்கு சேலை கட்டினாய் ! அது வெகு தூரம் நடப்பதுண்டா ?
புற்றுக்கு பால் ஊற்றி புத்தி கெட்டு போகின்றாய். பாம்பு எப்போது பால் குடித்தது ? கூடு கட்ட தெரியாத குயிலை நேசிக்கின்றாய் ! தனக்கு வலை அமைக்கத் தெரியாத பாம்பை வணங்குகிறாய் !
மழை நேரத்தில் கரையான் புற்று அருகில் வளரும் காளான் உனக்கு கோடி ரகசியம் சொல்லும். முதலில் அதை உணரப் பார் ! செந்நிற எறும்பு புற்றின் மண்ணை எடுத்து உடலில் பூசிப்பார். உண்மை புரியும். கற்றாழையும், எலுமிச்சையும் வீட்டின் முன்னால் கட்டி சோதனைக்கு ஆளாகதே ! உன் வீட்டில் திருஷ்டி போக வேண்டிமென்றால் ஒரு மிளகாய் செடியை வை ! துளசி தூய்மையானது தான் ! அதை வை !
மனிதர்கள் கண் பொல்லாதது தான் ! பில்லி, சூண்யம் அழித்துவிட்டேன் ! ஏனென்றால் மனிதர்கள் இருக்கும் வரை திருஷ்டி காலம் காலமாக இருக்கும் ! வீட்டிற்கு ஒரு மரம் வை ! மாமரம் புணிதம் ! நெல்லி, தென்னை, மனம் வீசும் மலர்களை வை ! முருங்கை, பப்பாளி, புளி, வேம்பு, எலுமிச்சை, முள் உள்ள மரங்களை வீட்டில் வைக்காதே. திருஷ்டி என்று அரக்கன் பொம்மையை வாசலில் மாட்டாதே ! பறவைகள், அணில்கள் வந்து கூட்டை அமைத்து கூடுகட்டி வாழ வீட்டில் மரங்களை வை !
இயற்கையை நேசி ! இன்பமாக வாழ்வாய். வீடு தான் கோவில் ! அந்த கோயிலை சுத்தமாகவும், தூய்மையாகவும் வை. படுத்தால் நித்திரை வரும். பசுவுக்கு ஒரு வாய் புல் கொடு. புணிதம் நிரம்பி வரும் ! நாய்க்கு சாப்பாடு போடு ! நன்றி உன் வீட்டில் மலரும் ! வாழ்வது உன் கையில் தான். குரு மூலமாக எல்லாம் அறிந்து வாழக் கற்றுக் கொள். எல்லா துன்பமும் பறந்தோடும் ! நல் வழி பூமியில் நிறைய உண்டு.
படைத்தவனை வணங்கு ! படைத்ததை வணங்காதே !
படைத்தவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் ! பாவம் செய்யாதே ! நான் உன் முன்னால் நிற்கின்றேன் ! என்னை புரிந்து கொள் ! உன் சுட்டு விரலை பிடித்து உலகை சுற்றி காண்பிப்பேன். அந்த பிரபஞ்ச அழகை காட்டி உன்னை புன்னகையாய் வாழ வைப்பேன். உணரக் கற்றுக் கொள். நிம்மதி உனக்குள் தான் !
கடவுளை துதிபாடி அழுது ஆர்ப்பரிக்கின்றான். பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கின்றான். மக்களை கூட்டி பசப்பு வார்த்தை பேசி சம்பாதிக்கின்றான். ஏ மானிடா, எப்போது உணர்வாயடா நீ ?
உழைப்பதை விட்டுவிட்டு கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் மூடர் கூட்டத்தை இங்கே கண்டேன். அவர்களுக்கு போதாத காலம் ஆரம்பித்துவிட்டது. பொய் வேஷங்கள் இனி அழிந்து போகும். கூட்டம் கூடும் இடம் எல்லாம் கடவுள் இனி இடியாய் இறங்குவான் !
கண்ணை மூடி அழுது ஆர்ப்பரிக்கிறாய். உன் நடிப்புக்கு கடவுள் பெருந்துன்பம் தருவான். கூட்டம் கூடி கோமாளி ஆகாதே. கடவுள் உனை தேடி வருவான். உன் கடமையை மட்டும் செய் ! குரு, கடவுள், செல்வம் முதலிய அனைத்தும் உன்னை தேடி வரும் சத்யமாக !
ஏதோ புத்தகத்தை படித்து உளறும் மானிட பாவிகளை நம்பாதே. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது. நான் மதத்தை பற்றி பேசவில்லை. மதம் பிடித்த மனித பாவிகளை பற்றி தான் பேசுகிறேன்.
வெறுப்பவனையும், மறுப்பவனையும், விதண்டாவாதம் செய்யும் அற்ப மனிதனையும் அடித்து திருத்தி கரை சேர்ப்பேன். பெருந்துன்பம் கொடுத்து என்னை வணங்கச் சொல்லவில்லை ! உணர் என்று தான் கூறுகிறேன். விதி வழியை காட்டும் என்று மூலையில் உட்காராதே ! நல் குருவையும், நல் வழியையும் தேடு ! தேடினால் தான் கிடைக்கும் !
கடவுள் இருப்பதை கணப் பொழுதும் மறவாதே. அந்த ஆனந்தமானவன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதை மறவாதே. நான் தினமும் அவன் பாத அமிழ்தத்தை உண்டு உனக்கு உதவியாய் இருக்கின்றேன். நீயும் உணர். நீ தித்திக்கும் வரை உனக்கு அமிழ்தம் தருவேன் ! உணர்.
நான் உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment