உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் நான் ! உனக்கு ஞானமிருந்தால் உணர்ந்து பார் !
என்னை நினை ! உனக்கு ஞானம் வரும் !
சங்கு சக்கரம் தத்துவம் என்ன ?
செத்தவனுக்கு செத்த சங்கு எடுத்து ஊதும் உன் அறியாமையை என்னவென்று சொல்வேன் ? கோயிலிலும் சங்கு ஊதுகிறாய். இறந்தவனுக்கும் சங்கு ஊதுகிறாய். சங்கின் தத்துவம் அறியாத மானிடன் நீயல்லவா ? உன் கழுத்தை சங்கு என்று ஏன் சொன்னார்கள் என்று யோசித்தாயா ?
வீட்டின் முன்னால் செத்த சங்கை பதித்து திசை தெரியாமல் அலையக் கண்டேன். உன் கழுத்து பகுதியை சங்கு என்று சொன்னான். அதிலுருந்து தான் குரல் வருகிறது. வீட்டுக்குள் வந்தவுடன் உன் தொண்டையிலிருந்து வரும் குரல் உதவி செய்யும் நோக்கத்தோடும், உண்மையை உரைக்கும் செயலோடும், நல்ல வார்த்தையை பேச வேண்டும். வெளியில் உள்ள செயலை, பேச்சை வாசலோடு விட்டு வா என்று அர்த்தம். கிருஷ்ணன் போர்களத்தில் மட்டுமே செத்த சங்கை எடுத்து ஊதினான். அது மரணத்தை பறைசாற்றுவதற்காக ! போர்களத்தில் மட்டும் தான் சங்கை உபயோகப் படுத்தினான் ! இடையில் புல்லாங்குழல் தத்துவம் ! உணர் ! உண்மை புரியும்
செத்த சிப்பி சுண்ணாம்பு தர கண்டேன். செத்த சங்கு உனக்கு எதை தந்ததடா ?
செத்த சிப்பி சுண்ணாம்பு தர கண்டேன். செத்த சங்கு உனக்கு எதை தந்ததடா ?
சிவன் விஷம் குடித்ததாக கதை சொல்கிறாய் ! அது ஏன் கழுத்தில் (சங்கு) நின்றது. உணர். கழுத்து பகுதியை சங்கு என்று ஏன் கூறினான் ? சங்கு கழுத்து பெண்களுக்கு என்று ஏன் சொன்னான் ? எதுவும் புரியாமல், தெரியாமல் விஷ்ணு கையில் செத்த சங்கை கொடுத்து அழகு பார்த்தான் !
சக்கரம் என்பது உன் மூலாதாரம். நீ அதை உணர்ந்தால் கடவுள் அருகில் இருக்கலாம் என்று பொருள் ! இது தெரியாமல் கடவுளிடம் சூலாயுதம், வேலாயுதம், சங்கு, சக்கரம், புலி, சிங்கம், யானை, எலி, இன்னும் எதை எதையோ வைக்கின்றான் !
அட மானிடா, ஏன் உணராமல் அலைகின்றாய் ?
விஷ்ணு ஏழு நிலைகளை கையில் வைத்திருப்பதன் தத்துவம் தான் சக்கரம் ! கடவுளை கோபமாக, உக்ரமாக காட்டி பயத்தில் வணங்கும் உன் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வேன் ? திருந்து, இல்லையேல் உனக்கு ஞானம் ஊட்டி திருத்துவேன் ! நீ நன்மை செய்து பாவம் செய்யாமல் இருந்தால் உன் மூலாதாரம் கடவுளிடம் கூட்டிச் செல்லும். பாவம் செய்தால் உன் மூலதாரமே உனை அழிக்கும். உன் மனதை ரணமாக்கி பாரமாக்கும். உணர் !
விஷ்ணு ஏழு நிலைகளை கையில் வைத்திருப்பதன் தத்துவம் தான் சக்கரம் ! கடவுளை கோபமாக, உக்ரமாக காட்டி பயத்தில் வணங்கும் உன் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வேன் ? திருந்து, இல்லையேல் உனக்கு ஞானம் ஊட்டி திருத்துவேன் ! நீ நன்மை செய்து பாவம் செய்யாமல் இருந்தால் உன் மூலாதாரம் கடவுளிடம் கூட்டிச் செல்லும். பாவம் செய்தால் உன் மூலதாரமே உனை அழிக்கும். உன் மனதை ரணமாக்கி பாரமாக்கும். உணர் !
வேம்புக்கு சேலை கட்டினாய் ! அது வெகு தூரம் நடப்பதுண்டா ?
புற்றுக்கு பால் ஊற்றி புத்தி கெட்டு போகின்றாய். பாம்பு எப்போது பால் குடித்தது ? கூடு கட்ட தெரியாத குயிலை நேசிக்கின்றாய் ! தனக்கு வலை அமைக்கத் தெரியாத பாம்பை வணங்குகிறாய் !
மழை நேரத்தில் கரையான் புற்று அருகில் வளரும் காளான் உனக்கு கோடி ரகசியம் சொல்லும். முதலில் அதை உணரப் பார் ! செந்நிற எறும்பு புற்றின் மண்ணை எடுத்து உடலில் பூசிப்பார். உண்மை புரியும். கற்றாழையும், எலுமிச்சையும் வீட்டின் முன்னால் கட்டி சோதனைக்கு ஆளாகதே ! உன் வீட்டில் திருஷ்டி போக வேண்டிமென்றால் ஒரு மிளகாய் செடியை வை ! துளசி தூய்மையானது தான் ! அதை வை !
புற்றுக்கு பால் ஊற்றி புத்தி கெட்டு போகின்றாய். பாம்பு எப்போது பால் குடித்தது ? கூடு கட்ட தெரியாத குயிலை நேசிக்கின்றாய் ! தனக்கு வலை அமைக்கத் தெரியாத பாம்பை வணங்குகிறாய் !
மழை நேரத்தில் கரையான் புற்று அருகில் வளரும் காளான் உனக்கு கோடி ரகசியம் சொல்லும். முதலில் அதை உணரப் பார் ! செந்நிற எறும்பு புற்றின் மண்ணை எடுத்து உடலில் பூசிப்பார். உண்மை புரியும். கற்றாழையும், எலுமிச்சையும் வீட்டின் முன்னால் கட்டி சோதனைக்கு ஆளாகதே ! உன் வீட்டில் திருஷ்டி போக வேண்டிமென்றால் ஒரு மிளகாய் செடியை வை ! துளசி தூய்மையானது தான் ! அதை வை !
மனிதர்கள் கண் பொல்லாதது தான் ! பில்லி, சூண்யம் அழித்துவிட்டேன் ! ஏனென்றால் மனிதர்கள் இருக்கும் வரை திருஷ்டி காலம் காலமாக இருக்கும் ! வீட்டிற்கு ஒரு மரம் வை ! மாமரம் புணிதம் ! நெல்லி, தென்னை, மனம் வீசும் மலர்களை வை ! முருங்கை, பப்பாளி, புளி, வேம்பு, எலுமிச்சை, முள் உள்ள மரங்களை வீட்டில் வைக்காதே. திருஷ்டி என்று அரக்கன் பொம்மையை வாசலில் மாட்டாதே ! பறவைகள், அணில்கள் வந்து கூட்டை அமைத்து கூடுகட்டி வாழ வீட்டில் மரங்களை வை !
இயற்கையை நேசி ! இன்பமாக வாழ்வாய். வீடு தான் கோவில் ! அந்த கோயிலை சுத்தமாகவும், தூய்மையாகவும் வை. படுத்தால் நித்திரை வரும். பசுவுக்கு ஒரு வாய் புல் கொடு. புணிதம் நிரம்பி வரும் ! நாய்க்கு சாப்பாடு போடு ! நன்றி உன் வீட்டில் மலரும் ! வாழ்வது உன் கையில் தான். குரு மூலமாக எல்லாம் அறிந்து வாழக் கற்றுக் கொள். எல்லா துன்பமும் பறந்தோடும் ! நல் வழி பூமியில் நிறைய உண்டு.
படைத்தவனை வணங்கு ! படைத்ததை வணங்காதே !
படைத்தவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் ! பாவம் செய்யாதே ! நான் உன் முன்னால் நிற்கின்றேன் ! என்னை புரிந்து கொள் ! உன் சுட்டு விரலை பிடித்து உலகை சுற்றி காண்பிப்பேன். அந்த பிரபஞ்ச அழகை காட்டி உன்னை புன்னகையாய் வாழ வைப்பேன். உணரக் கற்றுக் கொள். நிம்மதி உனக்குள் தான் !
படைத்தவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் ! பாவம் செய்யாதே ! நான் உன் முன்னால் நிற்கின்றேன் ! என்னை புரிந்து கொள் ! உன் சுட்டு விரலை பிடித்து உலகை சுற்றி காண்பிப்பேன். அந்த பிரபஞ்ச அழகை காட்டி உன்னை புன்னகையாய் வாழ வைப்பேன். உணரக் கற்றுக் கொள். நிம்மதி உனக்குள் தான் !
கடவுளை துதிபாடி அழுது ஆர்ப்பரிக்கின்றான். பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கின்றான். மக்களை கூட்டி பசப்பு வார்த்தை பேசி சம்பாதிக்கின்றான். ஏ மானிடா, எப்போது உணர்வாயடா நீ ?
உழைப்பதை விட்டுவிட்டு கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் மூடர் கூட்டத்தை இங்கே கண்டேன். அவர்களுக்கு போதாத காலம் ஆரம்பித்துவிட்டது. பொய் வேஷங்கள் இனி அழிந்து போகும். கூட்டம் கூடும் இடம் எல்லாம் கடவுள் இனி இடியாய் இறங்குவான் !
கண்ணை மூடி அழுது ஆர்ப்பரிக்கிறாய். உன் நடிப்புக்கு கடவுள் பெருந்துன்பம் தருவான். கூட்டம் கூடி கோமாளி ஆகாதே. கடவுள் உனை தேடி வருவான். உன் கடமையை மட்டும் செய் ! குரு, கடவுள், செல்வம் முதலிய அனைத்தும் உன்னை தேடி வரும் சத்யமாக !
ஏதோ புத்தகத்தை படித்து உளறும் மானிட பாவிகளை நம்பாதே. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது. நான் மதத்தை பற்றி பேசவில்லை. மதம் பிடித்த மனித பாவிகளை பற்றி தான் பேசுகிறேன்.
வெறுப்பவனையும், மறுப்பவனையும், விதண்டாவாதம் செய்யும் அற்ப மனிதனையும் அடித்து திருத்தி கரை சேர்ப்பேன். பெருந்துன்பம் கொடுத்து என்னை வணங்கச் சொல்லவில்லை ! உணர் என்று தான் கூறுகிறேன். விதி வழியை காட்டும் என்று மூலையில் உட்காராதே ! நல் குருவையும், நல் வழியையும் தேடு ! தேடினால் தான் கிடைக்கும் !
கடவுள் இருப்பதை கணப் பொழுதும் மறவாதே. அந்த ஆனந்தமானவன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதை மறவாதே. நான் தினமும் அவன் பாத அமிழ்தத்தை உண்டு உனக்கு உதவியாய் இருக்கின்றேன். நீயும் உணர். நீ தித்திக்கும் வரை உனக்கு அமிழ்தம் தருவேன் ! உணர்.
நான் உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment