Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; உள்ளக்கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் !உன் விதி மாறும் ! என் நாமம் பேரின்பமே !இரண்டில் ஒன்றின் சூட்சுமம் INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; உள்ளக்கிழியில் உரு எழுது இநன்யா என்று ! 
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் !உன் விதி மாறும் !
என் நாமம் பேரின்பமே !இரண்டில் ஒன்றின் சூட்சுமம்
41 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
உள்ளக்கிழியில் உரு எழுது இநன்யா என்று !
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் !
உன் விதி மாறும் !
என் நாமம் பேரின்பமே !
இரண்டில் ஒன்றின் சூட்சுமம்
பல கற்றும், பல படித்தும், பல கேட்டும் பயனுள்ளது எது என்று புரியாமல் உணராமல் அலையும் மானிடனே ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ? படைத்தவன் எனக்கு சொன்னதை பார்த்தவன் உனக்கு உரைக்கின்றேன்.
ஆறு பேராத்மா எனக்குள்ளே ! அதனாலே நான் படைப்பின் சூட்சுமம் தெரிந்தவன் !
ஆண் என்றும் பெண் என்றும் இரண்டாய் படைத்தேன். ஏன் என்று உணர்ந்தாயோ ? கண் இரண்டு, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, செவி இரண்டு, நாசி இரண்டு. இதையெல்லாம் இரண்டாய் ஏன் படைத்தேன் என்று உணர்ந்தாயா ? ஆனால் வாய், இதயம், பிறப்புறுப்பு முதலியவைகளை ஏன் ஒன்றாக படைத்தேன் என்று யோசித்தாயா ? உணர்ந்தாயா ?
இரண்டாய் படைத்தேன். நீ ஒன்றில் நிலை பெற மறந்தது ஏனோ ?
இங்கே பிரம்மச்சரியம் தேவை இல்லை. பிரம்மச்சரியம் என்றால் எல்லாம் இருந்தும் எல்லாம் விலக்கி ப்ரம்ம நிலையை அடைவது ! இது தெரியாமல் மனைவியைவிட்டு விலகி கடமையை மறந்து ப்ரம்மச்சரியம் என்று பினம் போல வாழ நினைக்கின்றான் மனிதன். நான் முன்னரே சொன்னேன். இல்லறம் இல்லாத வாழ்வு கல்லறையில் வாழும் வாழ்வு என்று. என் அப்பா (கடவுளின் மூலம்) அடிக்கடி கூறுவார். சூழ்நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கலாம். தவறில்லை. ஆனால் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து இருப்பது ப்ரம்மச்சரியம் என்று உளரக் கண்டேன். ப்ரம்மச்சரியத்திற்கு அன்பு, பாசம் தெரியாது. இல்லறம் இல்லாத சாமியார்களிடம் சென்று இல்லறத்தான் தன் கஷ்டத்தையும், கவலையையும் போக்க, கையேந்த நான் கண்டேன். இல்லறத்தின் கஷ்டம் பற்றி இல்லறமற்றவனுக்கு எப்படி தெரியும் ? அனுபவித்து பார்த்தால் தான் எல்லாம் புரியும்.
ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒன்றாய் நிலை பெறுவது தான் இங்கு பேரின்பம் ! கடவுளை காணலாம். உன்னை உணரலாம். நீ எதை கற்றும் உன்னை உணர முடியாது.
உன்னில் வைத்தேன் சூட்சுமத்தை ! உன் முகத்தை, உன் முதுகை எப்போது உன்னால் பார்க்க முடிகிறதோ அப்போது தான் நீ உணர்ந்தவன் ஆகின்றாய். பின் எல்லாம் உனக்கு கைகூடும்.
உன் உயிர் எப்போது மேலே வரலாம் என்று துடிதுடிக்கிறது. நீ தூங்கும் போது மட்டும் தான் உன் ஆண்மா நிம்மதி கொள்கிறது. உன் அறிவற்ற செயலை பார்த்து ஆர்பரிக்காமல் ஆழ்ந்து கிடக்கிறது. உன் செவியை எப்போதும் திறந்து வை. நீ உருவாக்கிய கண்டதையும் கேட்க செவி இல்லையடா ! நல்லதை கேட்பதற்கே செவியை வைத்தேன். மேலிருந்து வரும் வேத சப்தத்தை கேட்பதற்கே உனக்கு செவியை வைத்தேன். யுகத்தில் நெற்றி இல்லாமல் எவரேனும் பிறந்துள்ளார்களா ? ஏன் என்று ஆராய்ச்சி செய். கை இல்லாமல், கால் இல்லாமல், குருடாகவும், செவிடாகவும், ஊனமாகவும் படைத்தேன். ஆனால் நெற்றி, வயிறு, இதயம் இல்லாமல் படைக்கவில்லை. ஏன் என்று உணர் !
விதி இல்லா நெற்றி இல்லை. விதியும் நானே. விடையும் நானே !
மனிதன், மரங்கள், ஜீவராசிகள் முதலிய எல்லாவற்றிலும் ஆண் பெண் இரண்டாக சரிக்கு சமமாக படைத்தேன். இங்கே நீ எல்லாவற்றையும் அடிமைபடுத்தி ஆளப் பார்க்கின்றாய். ஆக்கும் சக்தி (பெண்) இல்லையென்றால் உனக்கு ஆளும் சக்தி இருப்பதில்லை ! உணர் !
பெண்ணை ஞானத்திற்காகவும், உன்னை உணர்வதற்காகவும் படைத்தேன். அவள் போக பொருள் அல்ல ! உன்னை புணிதனாக்கவும், உன்னை பைத்தியமாக்கவும் பெண்ணால் முடியும். உன்னால் எதுவும் முடியாது. உணர் ! பெண்ணை மதிக்கும் வீட்டில் பெருஞ்செல்வம் சேரும். பெண் அழுகின்ற வீடு பெரு வாழ்வு இழக்கும். இப்போது ஆணும், பெண்ணும் மாறி போனார்கள். நான் அடித்து திருத்தவே இந்த யுகம் வந்தேன். சத்தியத்தின் பாதை ஒன்று தான். வந்த வழி ஒன்று தான். செல்லும் வழியும் ஒன்று தான்.
இனி உழவன் வீட்டிலும், மீனவன் வீட்டிலும் ஞானக் குழந்தைகள் அதிகமாக பிறப்பார்கள். கடவுள் யாரென்று உணர்த்துவார்கள் ! பிறக்கும் குழந்தை ஞான மொழி பேசும் ! கருவில் இருக்கும் குழந்தை கவிபாடும் ! பொறுத்திருந்து பார் !
உன் தாயின் கருவறையில் இரு உயிராக இருக்கின்றாய். உனக்கு உணவு, நிம்மதி எல்லாம் கிடைக்கின்றது. பின் உன் மாயத் திரையை விலக்குகிறேன். பூமியில் ஜணிக்கிறாய். ஜணித்தவுடன் தாயை உணர்கின்றாய். நான் உனக்குள் இருப்பதை மறந்து உணராமல் இங்கு துன்பப்படுகின்றாய். பின் எங்கேயோ தேடுகின்றாய் ! நீ தனி மனிதன் என்று திகைக்கின்றாய்.
நீ வளரும் இந்த பூமி ஒரு பெண் ! பூமி ஒரு கர்ப்பம் !
நீ இங்கே மீண்டும் உன்னை உணர்ந்தால் மீண்டும் புதிதாக இங்கே பிறப்பாய். பின் என்னை உணரலாம் ! என்னை உணர்ந்தால் மரணமில்லா பெருவாழ்வு உனக்கு நிச்சயம் ! நீ பூமியில் மீண்டும் உணர்ந்து பிறக்க ஆசைப்படு ! உணர்ந்தால் லோகம் தெரியும் ! உன்னை தெரியும் ! நீ பார்க்கின்ற உலகம் அழகாகவும், சந்தோஷமாகவும் தோன்றும் !
மழைக் காலத்தில் உருவாகும் ஈசல் உனக்கு கோடி ரகசியம் சொல்லுமடா. ஒரு நாள் உருவாகி ஒரு நாள் மடியும் அதில் கோடி ரகசியம் உண்டு. அதை ஆராய்ச்சி செய். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் அதுவே உயர்ந்தது ! ஆதிகாலத்தில் ஈசலை உண்பார்கள். ஞானத்துடன் வாழ்ந்தார்கள். இப்பொழுது ஆடு, மாடு, கோழியை வெட்டி சாப்பிட்டு நோயுடன் வாழ்கின்றாய் ! உன் நாக்கு, பாதம் தேயாமல் வைத்தேன். ஏன் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடி !
இரண்டு ஒன்றானது ! ஒன்று ஏழில் அடங்கியது. பின் ஒன்பதில் முற்று பெற்றது. நீ முற்று பெறாமல் முத்தி கெட்டாய். முதிர்ந்து பெண் கெட்டாள். என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
இரண்டின் சூட்சுமம் உணர். ஒன்றை மனதில் வை ! நான் ஒய்யாரமாக உன் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்வேன். சிந்தாந்தம், வேதாந்தம் வேண்டும் உனக்கு ! இந்த இரண்டும் இருந்தால் ஏகாந்தம் கிடைக்கும்.
என்னை நினை ! எல்லாம் கை கூடும் !
உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று !
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் !
ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment