சௌந்தர்ய லஹரி தமிழில் 76--------------100
76. "மன்மதன் மூழ்கிய மடுப்போன்ற னாபியின் அழகு" [பரம வைராக்யம்; காமஜயம்]
ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி ii 76
ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி ii 76
அன்னையே ! பரமசிவனுடைய கோபத்தினால் அவரதுநெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் , அந்த நெருப்பின் வெப்பம் தாளமுடியாமல் , அதிலிருந்து விடுபடுவதற்காக , குளுமையானதடாகம் போன்ற , ஆழமான உன்னுடைய தொப்புள் குழியில் குதித்தான் .தடாகத்தில் , நெருப்புடன் குதித்ததால் உண்டான புகையை , உன்நாபியைச் சுற்றிய ரோமங்களாக நினைக்கின்றனர்.
77. "யமுனையின் சிறு அலை நாபியாகிய மடுவில் பொகுவது போன்ற ரோமவரிசை" [ஸர்வஜன வச்யம்; ஸூக்ஷ்ம தர்சனம்]
யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் i
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம்
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் ii 77
யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் i
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம்
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் ii 77
அம்மா ! தியானிகளுக்கு மட்டுமே புலப்படக்கூடிய உன் சிறு இடுப்பில் ,யமுனை நதியின் கறுமையான மெல்லிய அலை போன்ற ,உன்னுடைய ரோமவரிசை , தொப்புள் குழியில் முடிவடைகிறது .அதைப் பார்த்தால் நீல வானமானது உன் பருத்த கலசங்கள் போன்றஇரு ஸ்தனங்களுக்கு இடையே அகப்பட்டு அதனுடையஅழுத்தத்தினால் , எங்கே தான் அழிந்து விடுவோமோ என்று பயந்து ,மெல்லியதாக ஆகி ,தொப்புள் குழியினுள் செல்வது போல்தோன்றுகிறது .
78. "நகில்களாகிய தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி" {ஸர்வலோக வச்யம்}
ஸ்திரோ-கங்காவர்த: ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா-
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ-ஹுதபுஜ: I
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே ii 78
தாயே ! உன் தொப்புள் இருக்கும் இடமானது , அமைதியான கங்கைநதியின் சுழல் போன்றது. உன் ஸ்தனமாகிய தாமரை மொட்டுக்களைச்சுமக்கின்ற உனது ரோமங்களாகிய கொடியின் வேர்களுக்கு , பாத்திபோன்றது . மன்மதனின் ஒளியான நெருப்பிற்கு ஹோமகுண்டம்போன்றது . மன்மதனின் மனைவியான ரதிக்கு விளையாடும்இடமானது. பரமசிவனின் தவ உயர்விற்கு சித்தி அடையும் குகை வழிபோன்றது. இது போன்று ஆழம் தெரியாத உன் தொப்புளின் அழகு ,வருணனைக்கு அப்பாற்ப்பட்டதன்றோ ?
79. "மெல்லிய இடையின் அழகு" {ஸர்வஜன மோஹம்; இந்திரஜால வித்தை]
நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ ii
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே ii 79
நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ ii
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே ii 79
அம்மா ! இயற்கையில் மெல்லியதான உன் இடுப்பு , உன் இரு பருத்தஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் , கொஞ்சம் முன்புறம்சாய்ந்து இருப்பதைப் பார்த்தால் , ஒடிந்து விழுந்து விடுமோ , என்றுதோன்றுகிறது . தண்ணீருள்ள ஆற்றின் கரையிலுள்ள மரமானது , கீழேவிழுந்துவிடும் போல் சாய்வாக இருந்தாலும் , எவ்வளவு உறுதியாகஇருக்குமோ , அதுபோல் உன் இடுப்பிற்கு எந்த ஆபத்தும் வராமல் (ஓடிந்துவிடாமல் ), நீண்டகாலம் நன்றாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் .
80. "இடையில் கட்டிய கொடியைப் போன்ற 3 ரேகைகளின் அழகு"
குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா i
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ ii 80
குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா i
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ ii 80
தேவீ ! உன் பதியான பரமேஸ்வரனின் பெருமைகளை , நீ, நினைத்து ,நினைத்து மகிழ்வதால் , உன் தங்கக்கலசம் போன்ற ஸ்தனங்கள் ,அடிக்கடி வியர்த்து , பூரிப்பதால் , மன்மதன் , இந்த ஸ்தன சுமையினால்உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே என்று , உன் இடுப்பைவள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றாக சுற்றி இருப்பது போல்தோன்றுகிறது (இடுப்பிலுள்ள மூன்று சதை மடிப்புகளின் அழகு ).
81. "மலை போன்ற நிதம்பம்" {அக்னி ஸ்தம்பம்]
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே i
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச ii 81
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே i
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச ii 81
தேவீ ! பார்வதி ! உன்னுடைய பின்பாகமானது ( நிதம்பம் ) பருத்து ,அகலமாக இருப்பதால், இந்த பூமியையே மறைத்து , அதை லேசாகஇருப்பது போல் செய்கிறது . இதைப் பார்த்தால் இந்த பருமனும் ,அகலமும் உன் தந்தையான பர்வதராஜன் தன்னுடையஅடிவாரத்திலிருந்து உனக்கு அளித்த ஸ்ரீதன சீர்வரிசை போல்தோன்றுகிறது .
82. "யானையின் துதிக்கை போன்ற தொடை"
கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம்
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி i
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி ii 82
கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம்
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி i
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி ii 82
அம்மா ! வேதநாயகியே ! உன்தொடைகள் இரண்டும் , யானைகளின் துதிக்கைகளையும் , தங்கமயமான வாழைமரத் தண்டுகளையும் விட ,மிக அழகாக இருக்கின்றன . உன் முழங்கால்கள் உருண்டையாகவும் ,உன் கணவனாகிய பரமசிவனை , அடிக்கடி வணங்குவதால் சற்று கடினமாகவும் உள்ள அந்த முழங்கால்களால் , ஐராவதத்தின்தலையில் உள்ள கும்பங்களை நீ வெற்றி கொண்டாயே !
83. "மன்மதனுடைய அம்புறாத்தூணிகள் போன்ற முழங்கால்கள்" [சதுரங்க சனிய ஸ்தம்பனம்]
பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத i
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா ii 83
பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத i
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா ii 83
தாயே!உன்னுடைய கனுக்கால்கள், பரமசிவனை வெற்றிகொள்வதற்காக , மன்மதனால் தயாரிக்கப்பட்ட அம்பராத்துணிபோல்தோன்றுகிறது . தன்னுடைய ஐந்து பாணங்கள் போதாமல் , உன் கால்பத்து விரல்களையும் , பத்து பாணங்களாகப் படைத்தான் . அந்தஅம்பராத்துணிகளின் முன்பாகத்தில் தெரிகின்ற உன் கால் விரல்களின்நகங்கள் , உன்னை வணங்க வருகின்ற வானவர்களின்மணிமுடிகளிலுள்ள (மாணிக்கம் , ரத்தினம் போன்றவை ) சாணைக்கற்களால் தீட்டப்பட்டு இரும்பு கூர் போல் இருக்கிறது .
84. "உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்" [பரகாயப் பிரவேசம்; ஜீவன்முக்தி]
ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ i
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: Ii 84
ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ i
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: Ii 84
தாயே ! எந்த சரணங்களை வேதங்களின் சிகரமான உபநிடதங்கள் ,தன் தலையில் மலராக சூடிக்கொள்கின்றனவோ , எந்த சரணங்கள் பரமசிவனது சடைமுடியிலுள்ள புனித கங்கை நீரால்நீராட்டப்படுகிறதோ , எந்த சரணங்களில் பூசியிருக்கும் மருதாணியின்பொலிவானது , வணங்க வரும் விஷ்ணுவின் சூடாமணியின்பொலிவினால் ஏற்படுகிறதோ , அந்தப் புனித மலரடியை என் தலைமீதும் வைப்பாயாக !
85. "பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்"
நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே i
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே ii 85
நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே i
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே ii 85
தாயே ! மருதாணியுடன் கூடிய உன் பாதங்கள் எங்களுக்குஇனிமையானவை , மேன்மைகளைத் தருபவை . இந்த பாதங்களினால் உதைபட வேண்டும் என்று ஆசைப்படும் நந்தவனத்து அசோகமரத்தைக் கண்டு , சிவனும் பொறாமை அடைகிறார் . அந்த புனித பாதகமலங்களை நான் வணங்குகிறேன் .
86. " ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி" [பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்]
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே i
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா
துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா ii 86
தாயே ! உன் தங்கத் திருவடிகள் தன்மீது படவேண்டும் என்று , உன்கணவனாகிய சிவன் , உன்னை வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைக்க , அதனால் உனக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க ,என்னசெய்வது என்று தெரியாமல் , அவர் உன்னை வணங்கும் போது ,உன் பாதகமலமானது அவர் தலைமீது பட , அப்பொழுது எழுந்த உன்கால் தண்டை ஒலி ஒசைதனைக் கேட்ட மன்மதன் , தன்னை எரித்தசிவனிடம் உண்டான பகைதனையும் மறந்து தானே வெற்றி பெற்றதாகமுரசு கொட்டுவது போல் தோன்றுகிறது .
87. " இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்" [ஸர்ப்ப வச்யம்]
ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ i
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் ii 87
ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ i
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் ii 87
அம்மா ! பனிமலையில் இருக்கும் உன் பாத கமலம் , இரவு , பகல் ,சந்தியா காலம் ஆகிய எந்நேரமும் மலர்ந்து இருக்கக் கூடியவை .உன்னையே நினைத்து தியானிக்கும் அடியவர்க்கு அழியாத செல்வம்தரக்கூடியது . திருமகளான லக்ஷ்மி வாழ்கின்ற தாமரையானது ,பனியால் உதிர்கின்றது , இரவில் மூடிக்கொள்கிறது . இந்தத்தாமரையை விட உன் பாத தாமரை மிகவும் உயர்வுடையது என்பதைச்சொல்லவும் வேண்டுமோ ?
88. "மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்" [துஷ்ட மிருகங்களின் வச்யம்]
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் i
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ii 88
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் i
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ii 88
தாயே ! பக்தர்களுக்கு உயர்வை கொடுக்கக் கூடியதும் , அவர்களதுதுன்பங்களைப் போக்கக்கூடியதுமான , பெருமையுடைய உன்மென்மையான பாத நுனியைப் பிடித்து , சிவனும் அளவற்றஆசையுடன் திருமணநாளன்று , எப்படித்தான் கடினமான கருங்கல்அம்மி மீது வைத்தாரோ ? கவிகளும் இந்த மென்மையான பாதங்களின்மேல்பாகத்தை , ஆமை முதுகு ஓட்டிற்கு உவமையாகக் எப்படித்தான் கூறினாரோ ?
89. "சந்திரகிரணம் போன்ர கால்நகங்களின் ஒளி" [ஸகலரோக நிவ்ருத்தி]
நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ i
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ ii 89
நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ i
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ ii 89
தாயே ! தேவலோகத்தில் உள்ள கற்பகமரங்கள் இலைகளாகிய தனகரங்களால் , வானவர்களுக்கு அவர்கள் விரும்பியதைத் தருகின்றன . ஆனால் நீயோ உன்பாதங்களால் வானவர்களுக்கும் , ஏழை தரித்திரர்களுக்கும் எப்பொழுதும் சீக்கிரத்தில் செல்வத்தை வாரி , வாரிவழங்குகின்றாய் . வானுலக கற்பகமரங்கள் கைகளால் தருவதை, நீயோகால்களால் தந்து, அவைகளை ஏளனம் செய்கிறாய் . தேலோகத்துப்பெண்களின் தாமரை போன்ற கைகளை மூடி வணங்கச் செய்கின்ற ,சந்திரனைப்போல் ஒளி உடைய உன் பாத அழகினைச் சொல்லவார்த்தைகள் ஏது ?
90. 'இந்திரியங்களையும், மனத்தையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப்பூங்கொத்தாகிய பாதம்" [துர்மந்திரச் சேதனம்]
ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம்
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி i
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் ii 90
ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம்
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி i
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் ii 90
தேவீ ! உன் பாதங்கள் ஏழைகளுக்கு அவர்கள் விரும்பும் அளவிற்குசெல்வத்தைக் கொடுக்கிறது .வெள்ளம் போன்று தேனைப் பெருகச்செய்கின்றது . கற்பகமரப் பூங்கொத்து போல் அழகானவை . இந்தஅழகிய உன் பாத கமலத்தில் ஆறு கால்களைக் கொண்ட , தேனைப்பருகும் வண்டாக இருக்கும் பாக்யத்தை என் ஆன்மாவானதுஅடையட்டும் .
91. " தேவியின் நடையழகு" [பூமி லாபம்; தன லாபம்]
பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மனஸ:
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன-கல-ஹம்ஸ ந ஜஹதி i
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருரிதே ii 91
தாயே ! உன்னுடைய அழகான நடையினைப் பார்த்து , தானும் அதைக் கற்றுக்கொள்ள நினைத்து , உன் வீட்டிலுள்ள அன்னப்பட்சிகள் ,துள்ளித் துள்ளி நடந்து , உன் அழகு நடையைப் பின்பற்றி ,உன்னைப்போல் தானும் நடக்க பழக்கப்படுத்திக் கொள்கின்றன . நீநடக்கும்பொழுது உன் தண்டையிலுள்ள பத்மராகக் கற்கள் எழுப்பும் ஓசையானது , அந்த அன்னப்பட்சிகளுக்கு மறைமுகமாக நடப்பதற்குப்பாடம் சொல்லித்தருவது போல் உள்ளது .
92. "தேவியின் இருக்கை" [ஆளும் திறமை]
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத:
சிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட: I
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் ii 92
அம்மா ! உலகாளும் பிரம்மா ,விஷ்ணு , ருத்ரன் , ஈசன் இந்நால்வரும்உனக்கு எப்போதும் பணிபுரிவதற்காக , உன் கட்டிலின் நான்குகால்களாக ஆகி , உன்னை எப்போதும் வணங்குகின்றனர் . உன்கட்டிலின் மேல் விரிப்பாக இருக்கும் சதாசிவன் வெண்மையானஆடைதனைக் கூடியவராக இருந்தாலும் , உன்னுடைய சிவந்தஒளியின் பிரதிபலிப்பால் அவரும் சிவப்பாகமாரி ஸ்ருங்காரரசம் உருவெடுத்தாற்போல் ஆகி , உன் கண்களுக்கு மகிழ்ச்சியைத்தருகின்றார்.
93. "சிவனுடைய கருணையின் உருவே தேவி' [மனோரத சித்தி]
அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே i
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா ii 93
அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே i
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா ii 93
தாயே ! மனம் , வாக்குக்கு எட்டாதவளே ! இயற்கையில்சுருண்டமுடியும் , இனிமையான புன்னகையும் , வாகைமலரைப் போல் மிருதுவான மனமும் , ரத்தினக்கற்கள் போல் கடினமான ஸ்தனமும் , மெலிந்த இடையும் , பருத்த பின்பாகமும் , மயக்கம் தரும் அழகிய உதடும் , உடல் முழுவதும் சிவந்த அழகுடனும் கூடிய நீயே , சிவனின்கனிவு சக்தியான அருணாதேவியாக இந்த உலகம் முழுவதையும்காக்கின்றாய் .
94. "தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப்பெற்ற ஜலபாண்டம் போன்றது சந்திர பிம்பம்" [இஷ்ட ப்ராப்தி]
கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர்-மரகத-கரண்டம் நிபிடிதம் i
அதஸ்-த்வத்-போகேன ப்ரதிதின-மிதம் ரிக்த-குஹரம்
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே ii 94
அம்மா ! மரகதத்தினால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமான சந்திரமண்டலத்தில் நீராடுபவளே ! சந்திரனின் நடுவில் உள்ளகளங்கமே கஸ்தூரி பொடியாகவும் , சந்திரனே பன்னீராகவும் , சந்திரகிரணங்களே பச்சைக் கற்பூரப்பொடியாகவும் , உனக்குநீராடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது . தினமும் நீ நீராடியபின்காலியான இவைகளை , பிரம்மாவானவர் மீண்டும், மீண்டும்இவைகளை வாசனைப் பொருள்களால் நிரப்பி வைக்கிறார் .
95. "இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபட இயலாது" [இஷ்ட ப்ராப்தி]
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா i
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா: Ii 95
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா i
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா: Ii 95
அம்மா ! மூ உலகமும் எரித்த பரமசிவனின் பட்டத்துராணியே !புலன்களை அடக்கமுடியாத சபலபுத்தி உடையவர்களுக்கு , உன் பாதம்அருகில் வரவோ , பூஜை செய்யவோ தகுதி கிடையாது . அதனால்தான்இந்திரன் போன்ற தேவர்களுக்கு , அந்த பாக்கியம் கிடைக்காமல் , உன்வாசலில் காவல் புரியும் அணிமாதி சித்திகளுக்குச் சமமான நிலையைஉடையவர்களாய் உன் வாசலிலேயே இருக்கும்படி நேரிடுகிறது .
96. "தேவியினுடைய பாதிவ்ரத்ய மஹிமை" [ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ ந பவதி பதி: கைரபி தனை: I
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: Ii 96
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ ந பவதி பதி: கைரபி தனை: I
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: Ii 96
தாயே ! கற்புக்கரிசியே ! பிரும்மாவின் மனைவியான சரஸ்வதியைஎத்தனை கவிகள்தான் அடையவில்லை ? அதுபோல் கொஞ்சம்செல்வம் பெற்றவன் கூட லக்ஷ்மிபதியாக ஆகவில்லையோ ? ஆனால்உன்னை அப்படிச் சொல்லமுடியுமோ ? உன் ஆலிங்கனமானது , உன்கணவனான சிவனைத் தவிர குரவக மரத்திற்கும் கிடையாதே ,அப்படியானால் நீதானே பதிவ்ருதா மங்கையர் திலகம் ?
97. "பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும்" [ஜீவன் முக்தி]
"கிராமாஹுர்-தேவீம் த்ருஹிண-க்ருஹிணீ-மாகமவிதோ
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரி-தநயாம் i
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி ii 97
தாயே ! வேத இரகசியங்கள் அறிந்தவர்கள் , நீயே பிரம்மாவின்மனைவி சரஸ்வதி என்றும் ,விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மிஎன்றும் , சிவனின் துணைவி பார்வதி என்றும் கூறுகின்றனர் . அனால்நீயோ இன்னதென்று வருணிக்க முடியாததும் , அடைய முடியாததும், எல்லையற்ற மகிமையுடன் கூடிய மஹாமாயா உருவினளாகி இந்தஉலகம் முழுவதையும் திகைக்கவைக்கின்றாய் !
98. "பாத தீர்த்தம் ஊமையையும் பேச வைக்கும்" [வாக் ஸித்தி]
கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் i
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா-காரணதயா
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் ii 98
கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் i
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா-காரணதயா
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் ii 98
அம்மா ! பிறவியிலேயே ஊமையாய் இருப்பவனுக்கும் கூட ,கவிதைகள் பாடும் திறமையைக் கொடுக்கக் கூடிய சரஸ்வதியின்சக்தியுடைய தாம்பூலரசத்திற்குச் சமமானதான , மருதாணி பூசிய உன்பாதங்களை அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது ,ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது கிடைக்குமோ ?
99. "தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வ, அழகு, ஆயுள் இவையனைத்தும் நிரம்பியவன் ஆவான்" [பேரின்பம்]
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா i
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாச-வ்யதிகர:
பாராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவான் ii 99
தாயே ! உன்னை வணங்கி துதிப்பவனிடத்தில் சரஸ்வதி இருப்பதால்அவன் பிரம்மாவிற்கு எதிரியாகவும் , லக்ஷ்மிகடாக்ஷம் இருப்பதால்அவன் விஷ்ணுவிற்கு எதிரியாகவும் , மன்மதனின் மனைவி ரதிதேவியின் கற்ப்பிற்கு தளர்ச்சி ஏற்ப்படுத்துவனாகவும் , அறிவு ,அழகு ,செல்வம் ஆகிய இவைகள் உடையவனாய்,உயிர் , உடல் , மாயை என்றபந்தங்களிலிருந்து விடுபட்டு , என்றும் நிலையான பரமானந்த சுகத்தைஅடைகிறான் .
100. "தேவியளைத்த சக்தியால் தேவியைப் பாடியது, சூரியனுக்கு அவன் கிரணத்து அக்கினியால் தீபாராதனை செய்தது போலாம்" [ஸகல ஸித்தி]
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி;
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா i
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் ii 100
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி;
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா i
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் ii 100
தேவீ ! லோகநாயகி ! கைத்தீவட்டி ஒளியினால் கதிரவனுக்கு ஆரத்திசெய்வது போலவும் , சந்திரகாந்தக் கல்லிலிருந்து பெருகுகின்றநீராலேயே , அமிர்தத்தை வாரி , வாரிப் பொழியும் சந்திரனுக்குஅர்க்கியம் தருவது போலவும் , கடல்நீராலேயே கடல் அரசனுக்குதர்ப்பணம் முதலியன செய்வது போலவும் , உன்னுடையவாய்மொழியால் இயற்றப்பட்ட இந்த துதி மொழியினாலேயே உன்னைநான் துதிக்கிறேன் .
இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை முழு மனதுடன் படிப்பவர்களுக்கும் , கேட்பவர்களுக்கும் எல்லா வித நன்மைகளும்உண்டாக வேண்டும் என்று அன்னையை வேண்டுகிறேன் .
முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்றும் ..........................