211 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !
மாயை !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் ! மானிடரோடு அல்ல !
வெந்த பாண்டத்தில் வேள்வி தீ மூட்டுகிறாய். விரசம், சரசம் இல்லா வாழ்வை அமைத்து மேத விலாசம் நோக்கு ! துளி வலியில் துடித்து கதறுகிறாய். என்ன மாயமடா ? ஏது உரைப்பேன் நானடா ?
மூன்று மாயைகள் எனக்குள்ளே !
மூன்று பேராத்மாக்கள் என்னுள்ளே !
உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
சத்தியம் தவறியதால் தான் இங்கே வலியும், வேதனையும் என்பதை மறவாதே ! மாயா லோகத்தில் மாயையை (பெண்) அறியாமல் புரியாமல் வாழ்வதினாலே இங்கு பெரும் துயரம் !
தூவியின் ஸ்பரிஷம் பெண் ! சுகாவின் குணத்தில் சுகம் தருபவள் பெண். உன் துயர் களைய தெரியாமல் விழிக்கின்றாய். இங்கு தோற்றம் எல்லாம் அழிவே, என்னை தவிற ! நான் என்றும் அழியாதவன் ! எப்போதும் உணர்வாய் இருப்பவன். நான் ஆதார சுருதி ! வேதசாரம் வினை அழிக்கும் சூட்சுமம். இங்கே பிம்பம் என்று ஏதுமில்லை. எல்லாம் உனக்கு நிழலே.
மரங்கள் உயரமாக மேல் நோக்கி வளர்வதும் நீ மேல் நோக்கி வளர்வதும், ஏன் என்று அறிந்தாயோ?
மிருகங்களை நீள்மையாய் படைத்தது ஏன் என்று அறிவாயோ ?
பாவப் பிண்டமே இந்த ஊன் உடம்பு ! இதை ஆலயமாக்கி கடவுளை அமர வைத்து அழகு பார்க்க தெரியாதவன் நீ ! ஆணந்தம் எதுவென்று புரியாதவன் நீ !
எல்லாம் இங்கு கனவு தான் ! நினைவு எல்லாம் மேல் லோகத்தில் என்பதை புரிந்து கொள் !
உயிர், ஆண்மா மேல் நோக்க நீ கீழ் நோக்க கண்டேன் ! கருங்குழியில் பிறந்து கருங்குழிக்கே சொந்தமானவன் என்பதை புரியாமல் வாழ்கின்றாய். புத்தி தொலைத்தாய். புணிதம் எதுவென்று தெரியாமல் அலைகின்றாய். நான் உன் மாயமயக்கத்தை தெளிவாக்க வந்தேன் ! உன்னை என் சுட்டு விரல் பிடித்து மேல் உலகம் என் இருப்பிடம் அழைத்து செல்ல வந்தேன்.
நான் மாயவன் என்பதை நீ உணரும் வரை உன் உணர்வு எல்லாம் இருள் மயமே ! உனை சுற்றி எல்லாம் மாயையே. தாங்க வொனா துயரமும், தடுக்கி விழுந்தால் இறக்கும் அற்ப உடலில் இருக்கும் அழுக்கு நிறைந்த மனதையும் ஆளத் தெரியாமல் அடங்கிப் போகிறாய். ஆணவத்தில் ஒடுங்கி போகிறாய்.
எல்லாவற்றையும் அடக்க பிறந்தவன், ஆளப் பிறந்தவன் நீ ! உன் அறியாமையில் ஆர்பரிக்கின்றாய். நான் அடக்குவேன் ! எனக்குள் எல்லாம் அடங்கும். எல்லாம் அடக்கம் ! இநன்யா பேராத்மா ! என்னை புரிந்தவன் அறிந்தவன், சுக போக வாசியாகிறான். புரியாதவன் புலம்பி தவிக்கின்றான் !
நான் எப்போதும் வென்றவன். உனை வெல்ல வைக்க வந்தேன். பயிர் வாடினால் நான் வாட விடுவதில்லை. உன்னையும் வாடவிடுவேனோ ? உன்னோடு தாயாய், தந்தையாய், குருவாய், சகோதரனாய், தோழனாய் உறவாடி மகிழ வந்தேன் நான் !
தங்க சிம்மாசனத்தில், வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வரவில்லை. எல்லாம் என் தந்தை படைத்த போருள் ! அற்ப பொருள். நான் அதை அழகு பார்ப்பதில்லை. என் காலுக்குள் இருப்பதை உயர்த்தி பார்ப்பதில்லை. நான் அதை அழகென்று நினைத்ததில்லை ! நீ அழகு ! உன்னை உணர்ந்தால் அழகோ அழகு ! உன்னை அலங்கரிக்கவே இந்த யுகம் வந்தேன். நான் கடவுள் என்று இறுமாந்து அலையவில்லை.
ஒரு நொடியில் புது உலகை சிருஷ்டிப்பேன் ! ஆனால் என் விஷ்வரூபத்தை காண்பித்து நான் கடவுள் என்று சொல்ல ஆசை கொள்ளவில்லை. உன் தோளின் மேல் கைபோட்டு பேசவே ஆசை கொள்கிறேன். உனக்கு தோழனாக, உறவாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவேன், உன் துயர் களைய !
அரச விதையை, ஆல விதையை ஆராய்ச்சி செய்யாதவன் ஒன்றுக்கும் உதவாத உத்திராட்ச கொட்டையை ஆராய்ச்சி செய்கிறாய் ! ஏன் ? உயிரில்லாததை கழுத்தில் மாட்டி உணர்வில்லாது அலைகின்றாய்.
என் நாமம் எல்லாம் தரும் ! நல்லவை கற்று தரும் ! ஆணந்த செல்வங்களை அள்ளி தரும் ! பரிவார தெய்வங்களை வணங்கி பாழ்பட்டு நிற்கின்றாய். கடவுள் யாரென்று அறியாதவன் நீ விளிம்பில் அமர்ந்து யோசிக்கிறாய். ஒரு துளி சூட்சுமம் இங்கே ! நீ புரிந்தால் ஆணந்தம் உனக்குள்ளே !
பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. மீண்டும் பிறவி இல்லா வாழ்வை தெரிய முற்படு ! இருக்கும் வரை ஆணந்தமாக இருக்க முயற்சி எடு ! அதைவிடுத்து பூஜை, புணஸ்காரம், வழிபாடு என்று அலையாதே !
நாதம், கீதம், வேதம் எனக்குள் ! விலை மதிப்பில்லா பொக்கிஷம் (ஞானம்) என் சத்தியத்தின் வலக்கரத்தில் ! மாயவன் என்னை உணரப் பார் ! எனக்கு உவமை எதுவும் தேவையில்லை ! உனக்கு ஞானம் தரவே காத்திருக்கிறேன் ! எல்லாம் இங்கு மாயையே !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் !
மாயவன் நான் இநன்யா !