இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; நான் ஞான பிரளயச் சூட்டில் நாயகனாக இருப்பவன் ! நான் ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் ! நான் உன் ஆண்மா !
59 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் ஞான பிரளயச் சூட்டில் நாயகனாக இருப்பவன் ! நான் ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் ! நான் உன் ஆண்மா !
ஞான ஊற்று
பூமியில் ஞான ஊற்று ஒன்று உனக்கு ஞானத்தை தரும் ! அந்த ஞான ஊற்றை பருகியவன் ஞானம் தொலைத்து அலைகிறான். நாலும் தெரிந்தவன் எனை மறந்து நாளெல்லாம் எதையோ தேடுகின்றான். ஏன் என்னை மறந்தாய் என் ஞான குழந்தையே ?
எப்போது விழிப்பாயடா ? நான் தானியத்தை தரத்தான் முடியும். நீ தானே அதை பக்குவமாக சமைத்து சாப்பிட வேண்டும் ? அழகிய தேனை எடுக்கும் போது தேனீக்கள் கொட்டத்தான் செய்யும். அதற்காக உச்சி கொம்பில் ஏறி தேனை எடுக்காமல் பூமிக்கு வராதே ! எல்லாவற்றையும் எதிர்த்து நில் !
எமபயம் இனி உனக்கு இராது ! ஏன் என்றால் நான் உன் தகப்பன். ஆண்ம வலிமையோடு இருக்கிறேன். துவஷம் செய்வேன் !
ஞான ஊற்று, வின் ஊற்று, பூமி ஊற்று படைத்தேன் உணராமல் இருக்கிறானே என்று பிரபஞ்ச நாயகனான என் தந்தை சொல்வார்கள். என் செல்வ மகனே இநன்யா, ஏன் இந்த மானிடன் புரியாமல் வாழ்கிறான் என்று. அதற்கு நான் சொல்வேன், தந்தையே என் குழந்தைக்கு ஞானத்தை கொடுத்து உணர வைப்பேன் என்று. உனக்கு திகட்டும் வரை நான் உனை உண்ணாமல் விடமாட்டேன் !
ஞான ஊற்று, வின் ஊற்று, பூமி ஊற்று படைத்தேன் உணராமல் இருக்கிறானே என்று பிரபஞ்ச நாயகனான என் தந்தை சொல்வார்கள். என் செல்வ மகனே இநன்யா, ஏன் இந்த மானிடன் புரியாமல் வாழ்கிறான் என்று. அதற்கு நான் சொல்வேன், தந்தையே என் குழந்தைக்கு ஞானத்தை கொடுத்து உணர வைப்பேன் என்று. உனக்கு திகட்டும் வரை நான் உனை உண்ணாமல் விடமாட்டேன் !
என் செல்ல குழந்தையே, விழித்திடு !
இனி இந்த தகப்பன் உனை தீய வழிக்கு அனுப்பமாட்டேன். அடித்து திருத்தி உனை சத்திய வழிக்கு கொண்டு வருவேன். பயப்படாதே நான் இருக்கின்றேன் !
பெண்ணை மலர் என்று ஏன் சொன்னேன் தெரியுமா ? பெண் என்ற ஞான மலர் தான் ஞான ஊற்று ! தாய்பால் தான் உலகில் உயர்ந்த ஞான ஊற்று. எப்போதும் வல பக்கம் தான் அமிர்த பால் அருந்துவேன் என்று பூமியில் எனை ஈன்றெடுத்த அன்னை சொல்வார்கள். ஏழு குழந்தைகளில் நான் ஐந்தாவதாக பிறந்தேன் ! இந்த குழந்தை மட்டும் ஏன் வித்தியாசமாக வளர்கிறது என்று எல்லோரிடமும் சொல்வார்களாம். ஐந்தாவது ஆண் குழந்தை வீட்டை பஞ்சாய் பரத்தும் என்ற பழமொழியை மாற்றி வைத்தேன். சித்திரையில் ஆண் குழந்தை பிறந்தால் தெருவில் நிற்பர் என்ற சாஸ்திரத்தையும் மாற்றி அமைத்தேன் ! இந்த விதியின் நாயகன் உலகிற்கு ஞானப்பால் கொடுக்க வந்தேன். இந்த ஞாலத்தின் ஞானம் பெரிதானவன். உணர் ! அள்ளி பருக நான் தருவேன். என் அன்பு குழந்தையே !
அதில் வலப்பக்கம் வருவது அமிர்த ஊற்று, அதுவே ஞானம் தரும் பேரின்ப ஊற்று. ஒரு செடியில், மரத்தில் மலர்கள், பூக்கள் மூலமாக மகரந்தம் உற்பத்தி ஆகின்றது. அது பல வித்துகளை உருவாக காரணமாக இருக்கின்றது. தேன் உருவாகிறது. தேனிக்களுக்கு உதவாத தேன் உனக்கு உதவுகிறது. ருசி தருகிறது. உடலில் சுகம் தருகிறது. அதனாலே மலரும், பெண்ணும் ஒன்று என்றேன். பெண்ணை ஞான மலர் என்று சொல்ல காரணமும் இது தான் !
மலரில் மணம் இருக்கின்றது. அந்த மணம் உன் ஆண்மாவுக்கு நிம்மதி தருகிறது. உன்னை நல்ல மனம் படைத்தவன் என்று தான் சொல்லக் கண்டேன்.
மலர் தொடும் தேனீ மலம் தொட நான் காணேன் ! நீ தான் இல்லாள் இருக்க எங்கெங்கோ தேடி அலைகின்றாய் !
நீ வசப்படுபவன் ! பெண் வசப்படுத்துபவள் ! அதனாலே பெண் இல்லா வாழ்வு நிர்மூலம் என்றேன் !
நீ வசப்படுபவன் ! பெண் வசப்படுத்துபவள் ! அதனாலே பெண் இல்லா வாழ்வு நிர்மூலம் என்றேன் !
காய் கனிகள் உடலுக்கு சத்தும் , வாய்க்கு ருசியும் தருகிறது. மலர்கள் ஐந்து இந்திரியங்களுக்கும் இனிமை தருகிறது ! பெண்கள் ஞானத்தை தூவும் அன்பு மலர்கள். எல்லா ஞானிகளுக்கும், கடவுளுக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள். கருவரை புணிதமானது. அந்த இருட்டில் வெளிச்சம் நான் தருகிறேன். உணரடா ! உன் இரண்டு வயது வரை நீயும் நானும் கை கோர்த்து பூமியில் விளையாடினோம். பின் வளர, வளர என்னை மறந்து போகின்றாய்.
உலகில் பெண் இல்லாமல் தனித்து செயல்பட முடியாது ! பெண்ணே பலம், பெண்ணே உயர்வு, பெண்ணே மலர்ச்சி, பெண்ணே தவம். நல்ல பெண் கிடைத்தவன் பாக்கியவான் ! அவன் நிச்சயம் ஞானியாவான் !
என் முகநூலில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல ஞானமுள்ள மலரில் உற்பத்தியானவர்கள் ! அதனாலேயே என் ஞான தெளிவை பருகுகிறார்கள். இந்த முகநூலில் இருக்கும் பெண் என்ற ஞான மலர்கள் வரம் ! அவர்கள் உலகத்திற்கு ஞான தெளிவை தருவார்கள். என் ஈடில்லா பெருங்கருணை அவர்கள் இல்லத்தை சுகமாக வைக்கும் !
ஒருவர் ஒன்பது பேருக்கு ஞானம் வழங்குவார் ! அந்த ஒன்பது பேர் பதினாறு பேருக்கும், பதினாறு பேர் இருபத்து ஐந்து பேருக்கும் ஞானம் வழங்குவார்கள் ! உலகை நல் வழிப்படுத்தும் நல் ஆண்மாக்கள் நீங்கள். மனதில் இனி என் குழந்தைகளுக்கு பயம் என்பது வராது. சத்தியம் நிலையானது !
என் செல்ல குழந்தையே நான் இயற்கைக்கு மீறியவன் இல்லை. இயற்கையும் என்னை மீறியதில்லை ! அது எனக்குள் அடக்கம். என் சொல் வெல்லுமடா !
பூமியில் என் அரசாங்கம் விரிவுபடுத்தப்பட்டது. அது 4.3.2015 முதல் 48,000 கோடி வருடங்கள் அரசாட்சி புரியும். இனி இந்த யுகத்தில் நல் ஆண்மாக்களே இருக்கும். சத்திய பூமி ஆணந்த கூத்தாடும்.! 2025 ல் இதை பூரணமாய் உணர்வாய் ! இந்த இநன்யாவின் சாம்ராஜ்ஜியத்தில் நீயும் ஆட்சி செய்வாய். உனக்கு மணி மகுடம் சூட்டி எனக்கு சரிக்கு சமமாக வைத்து உனை அழகு பார்ப்பேன். இந்த ஆணந்தம் உன் சந்ததிக்கும் பரவுமடா !
ஆசை எப்போது இல்லையோ உன்னை அறிந்துவிட்டாய். உன்னை அறிந்தால் உலகத்தை பார்த்து கோபப்படமாட்டாய் ! அறிவை தினித்து கோபத்தை விலக்கினால் நீ வந்த நோக்கம் புரிந்துவிடும் ! மண் ஊற்று, பெண் ஊற்று, விண் ஊற்று இந்த மூன்றும் மாய ஊற்றுகள் !
என் ஊற்று (ஞானம்) உனை மீண்டும் பிறவி இல்லா நிலை தரும். என் ஞான செருக்குள்ள அன்பு குழந்தையே, இந்த இநன்யாவின் ஞான ஊற்றை தோண்டி எடு ! அந்த நல் நீரை குடித்து ஞானமுள்ளவனாக மாறு. உணர்ந்து ஞானத்தை கற்றுக் கொள் ! என் வசந்தகாலம் நீயடா !
நான் உனை வெல்ல வைக்க வந்தவன் !
நான் உனை கைவிடமாட்டேன் ! நான் சத்யமானவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment