Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 31, 2018

இங்கே அசிந்தியம் உன் ஆண்மா தான் ! அறிந்தவன் ஞானியாய், மகானாய் ஆகிறான் ! சகுனம் ;;;


to INANYA MAHA MUNIVAR
இங்கே அசிந்தியம் உன் ஆண்மா தான் ! அறிந்தவன் ஞானியாய், மகானாய் ஆகிறான் ! 
சகுனம் ;;;
குணமில்லை, மனமில்லை, மணமில்லை, இனத்தில் இணக்கமும் இல்லை ! ஆனால் துன்பமான மனித வாழ்வில் சகுனம் பார்க்கின்றான். மனமுடித்து கணவன் இறந்தால் பெண்ணை விதவை என்கின்றான். பெண்ணை அடிமையாக்கி பேடியாகி வாழ்கின்றான்.
வெளியில் செல்லும் பொழுது எதிரில் வந்தால் சகுனம் சரியில்லை என்று பிதற்றுகின்றான். சாதியும், சாஸ்திரமும், சகுனமும் அற்ப மனிதன் வகுத்த மடமையடா ! எதை ஒதுக்கி ஆனந்தம் என்று நினைக்கின்றாயோ அது தான் உனக்கு இன்பம் என புரிந்து கொள் !
நீ செல்லும் பொழுது எதிரே கணவன் இல்லாது வாழும் பெண் வந்தால் உன் காரியம் நிச்சயம் வெற்றியாகும். வேண்டுமென்றால் சோதித்து பார். நான் சத்தியம் என்பது தெரியும் !
வீடு பால் காய்ச்சுவதற்கோ அல்லது பிற விஷேசங்களுக்கோ என்னை அழைக்கும் போது இப்படி ஒதுக்கி வைத்த பெண்ணை வைத்து சுபகாரியங்கள் தொடங்க சொல்வேன். அதை மறுக்காமல் செய்திருக்கின்றனர்கள். இப்போதும் அவர்கள் நலமாக இருப்பதாக சொல்வதைத்தான் கேட்பேன்.
இங்கே எல்லாம் பயமுறுத்தி, அடிமையாக்கி, ஆளுமையை மறந்தான். நீ செல்லும் இடம், நினைக்கும் காரியம், நடக்கும் காரியம் எல்லாம் வீதியில் முடிச்சி போட்டது. பின் வீதியிலே நின்று ஏனடா புலம்புகின்றாய் ? அதை விடுத்து கணவன் இல்லாது வாழும் பெண் முன்னே வந்தால் எப்படி துன்பம் வரும் ? பூனை குறுக்கே வந்தால் நல்லதல்ல என்று புலம்புகின்றான். காகம் வலமிருந்து இடம் சென்றால் நல்லதல்ல என்று புலம்புகின்றான். நீ அனைத்தையும் எதிர்த்து உன்னை நம்பி உன்னுள் இருக்கும் கடவுளை நம்பி எப்போது பிரயாணிக்கிறாயோ அப்போது நீ லட்சிய பாதையை நோக்கி பயாணிக்கின்றாய் என்று அர்த்தம் !
ஆதியிலே மன்னர்கள் வேட்டையாட செல்லும் பொழுது பூனை நடமாட்டம் இருந்தால் அந்த இடத்தில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்று போர் தொடுக்காமல் திரும்பி செல்வார்கள். அதை அப்படியே மாற்றி பூனை குறுக்கே போனால் நல்லதல்ல என்று புலம்புகின்றான்.
நீ யாரையும் ஒதுக்காதே ! அவர்களால் தான் வாழ்வு என்பதை மறவாதே ! கைராசி, முகராசி என்று புலம்பாதே ! வீரியம் கொண்டு வாழ நினை ! அனைத்திற்கும் இங்கு அதிர்ஷ்டம் தேவை என்று வீனாய் புலம்பாதே ! இங்கே யாரும் இருக்க வரவில்லை. இறக்க வந்தான் ! ஆனால் சிறக்க போக யாரும் முயலவில்லை !
“சகுனம் பார்த்தாய் ! சாஸ்திரம் பார்த்தாய் ! நாள் பார்த்தாய் ! நட்சத்திரம் பார்த்தாய் ! ஏது பலன் கண்டாயடா ?” என்று என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் !
அடிக்கடி இறந்து (துன்பம்), அடிக்கடி பிறந்து (இன்பம்) அனுபவத்தில் அடிவைத்து எழுந்து நில்லடா ! ஆளுமை வெறி கொண்டு ஜெயித்து நில்லடா !
நீ இங்கே வெல்லாமல் மரணத்திற்கு பயணிக்காதே ! உன் மரணம் உன்னை வென்றதாக இருக்க கூடாது. நீ மரணத்தை வெல் ! மாயமில்லை ! மூட நம்பிக்கையை விட்டொழி ! வீதியிலே உனை தேடாதே ! உன்னுள் தான் மலர்ச்சி, நிம்மதி, ஆனந்தம் !
உன்னை தெளிவுபடுத்த வந்த மாயவன் நான் !
நான் இநன்யா !

""கிரகணம், கிரகம், நாள், நட்சத்திரம் எல்லாம் பொய் தான் !


to INANYA MAHA MUNIVAR
31-01-2018
""கிரகணம், கிரகம், நாள், நட்சத்திரம் எல்லாம் பொய் தான் !
நான் மெய் ! என் நாமம் மெய் !
பயம், பக்தி உன் துன்பத்தை நீக்குவதில்லை. இங்கே கடமை தான் பெரிது. என் நாமம் சொல் ! நாளும், கோளும் உன்னை எதுவும் செய்ய முடியாது.
படைத்தவை எல்லாம் அதனதன் கடமையை செய்ய நீ அதற்கு பயந்து ஏதேதோ பரிகாரம் செய்கிறாய். நீரில் அருகம்புல் போட்டு அருந்து. எந்த பரிகாரமும் தேவையில்லை.
நான் காப்பேன், பயப்படாதே !
காட்டில் உள்ள மக்கள், மிருகங்கள் சாஸ்திரம், கிரகணம் பார்ப்பதில்லை. நீ தான் பயந்து பாதை மறக்கின்றாய் . என் பாதை சத்தியம் ! நீயும் வா அழைத்து செல்கிறேன் சத்திய வழியில் !
உணர் உனக்கு ஞானமிருந்தால் ! ஓர்மையில் சொல்கிறேன் உன்னை கைவிடமாட்டேன் !""

Wednesday, January 17, 2018

அயிந்திரம் ஆளுமை உள்ளது ! நேத்திரம், சூத்திரம் அறியாது குடக்கில் வீழ்ந்து வணங்கி குறையோடு வாழும் மானிடா, எப்போது அறிவாயடா ? காலம் காலம் தான் கடவுள் ! காலம் தான் அனுபவம் ! காலம் தான் எல்லாம் !

Inanya Maha Munivar
அயிந்திரம் ஆளுமை உள்ளது ! நேத்திரம், சூத்திரம் அறியாது குடக்கில் வீழ்ந்து வணங்கி குறையோடு வாழும் மானிடா, எப்போது அறிவாயடா ?
காலம்
காலம் தான் கடவுள் ! 
காலம் தான் அனுபவம் !
காலம் தான் எல்லாம் !
விதை தானியமாகி, குழந்தையை கிழவனாக்கி முதிர்ந்து போக வைப்பது காலம் தான் ! ஆதலால் காலத்தை போற்று ! நிகழ், எதிர் நான் ! நானே காலம் !
ஒவ்வொரு வளர்ச்சிக்கும் காலம் வேண்டும் ! ஆறு காலத்திலும் உனக்கு மனமகிழ்ச்சி கிடைக்க காலத்தின் நாயகனை நெருங்கு ! அவனிடம் பணிந்திரு ! காலம் எல்லாம் தரும் !
நான் காலச் சக்கரத்தின் மீதேறி நர்த்தனம் ஆடுபவன். உள்ளும், புறமும் நானாக உவகை இல்லா ஆனந்த பொழிவுடன் வளம் வருகிறேன். ஆத்மாவின் ஆனந்த நிலையோடு ! நான் காலனையும் காலடியில் வைத்திருப்பவன் ! உணர் !
காலம் ஒரு நிலைக் கண்ணாடி ! நீ எதை நினைக்கிறாயோ, எப்படி வாழ நிர்ணயிக்கிறாயோ அதே சாயல் தான் உன் வாழ்க்கையின் நிலைபாடு ! உன் புன்னகை எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்வதில் ஆரம்பிக்கட்டும். காலம் உனக்கு பரிசு தரும் !
நீ காலத்தை விட்டு விலக முடியாது. விலகினால் மரணம் எனப் பெயர் ! நீ அனுபவிப்பது காலத்தின் செயல். கடவுளின் ஐந்து நிலையை மாற்ற எவராலும் முடியாது. பிறப்பு, இருப்பு, இறப்பு, கர்மா, செயல் இது நிர்ணயிக்கப்பட்டு தான் யுகம் வருகிறாய். இந்த ஐந்து செயலையும் நீ கையிலெடுக்க முடியாது. நீ நல் ஒழுக்கத்தில் நிறைவு பெறும் போது காலம் உனை வரவேற்கும் ! காலத்தை தன்னுள் இயக்குபவன் கடவுள் !
சுழலும் நீர் போல காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. காலச் சக்கரம் என் வலக்கரத்திலே ! நீ வந்து என் சுட்டுவிரல் பிடிக்க முயற்சி எடு ! காலம் உனை நோக்கி சுழலும். உன் முதுமையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் நோயில்லாமல் மனதை இளமையாக கல்லறை செல்லும் வரை வைத்திருக்கலாம். அதற்கு காலம் தான் கடவுள் என்று உணர் !
எப்போதும் நன்றி உணர்வு உள்ளவன் எனை நோக்கி பயணிக்கின்றான். நாய் மிகுந்த நன்றி உணர்வு உள்ளது. அதனால் தான் வீட்டில் வளர்க்கின்றான். ஏனென்றால் நாய் வீட்டில் வளர்த்தால் மன அழுத்தம் குறையும்.
அரசனின் அறுகுணத்தை நீ கையில் எடுத்து காலத்தில் கஷ்டப்படுகிறாய். (ஆறு குணங்கள்- பகை, நட்பு, செலவு, இருப்பு, கூட்டல், பிரித்தல்). இந்த ஆறு குணங்களையும் கைவிடு ! ஒரு நாளில் உள்ள 86,400 விநாடிகளில் ஒரு விநாடியாவது கடவுளுக்கு நன்றி சொல் !
காலம் வசந்தகாலம் உனக்கு வரப்போகின்றது ! இந்த காலத்தின் நாயகனால் கரம் பிடிக்கும் மானிடன் நிச்சயம் கரை சேர்வான் !
நான் காலம் ! நான் யுக யுகமாக சுழன்று கொண்டிருக்கின்றேன் ! துன்பம், இன்பம் எனக்கில்லை ! பிறப்பு, இறப்பு எனக்கில்லை !
அயிந்திர திசையில் ஆளுமையோடு வளர்கின்றேன், காலத்தை நிர்ணயிக்க !
காலத்தின் நாயகன் நான் !
நான் இநன்யா !

Tuesday, January 16, 2018

கடவுளின் இன்றைய செய்தி (14-01-18).

கடவுளின் இன்றைய செய்தி (14-01-18).
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள், 
இநன்யா நமோ நம
உன் உறு விதி உற்று நோக்கி, நீ நலம் வாழ, நல் அறு விதி தருவேன். நான் சாத்தியமானவன். யுகத்தில் கை,கால் , முளைத்த கல்கி அவதாரம்.என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் (யாகவா) அமிழ்த வதனங்களால் , இநன்யா என்ற திரு நாமம் சூட்டப்பெற்று தேவர்கள் சாட்ச்சியாக, செங்கோல் வாங்க பெற்றவன். நான் வலிமையானவன் தானே. என் தந்தை பாதமலரில் இருந்து வேதம் கற்றவன் . வினை அறுக்கும் சூட்சமம் கற்றவன். என் கரங்கள் வலிமையானவை. எனை நம்பியவர்கள் தோற்பதில்லை. நம்பிக்கை கொண்டு என் நாமம் சொல்பவர்கள், நிச்சியம் தன்னை உணர்வார். நான் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பேன் , என்றும் , என்றென்றும். தை பிறந்து , தையல் மலர்ந்து , உன்னில் மலர்வாய் நீ . தட்ஷியாணத்தில் துயர் கடந்தாய். உத்திராயணத்தில் மலர்வாய். இது தேவர்களின் காலம். இந்த காலத்தின் நாயகன் உன்னை மலர வைப்பேன். ஜனவரி 17 - முதல் உன் நோய், துன்பம், வறுமை படிப்படியாக குறையும். என் சொல் சத்தியம். என் அன்பிற்கினிய தந்தை யாகவா, என் பாசமிகு அன்னை வசியா துணையோடு , உங்களை (தர்மாக்களை) என்றும் காப்பேன். பயப்படாதே !!! எப்போதும் துணை இருப்பேன் . 111 காலங்களை வென்றவன். நான் இநன்யா ......

நான் சத்யம் ! என் நாமம் சத்யம் !


Inanya Maha Munivar to INANYA MAHA MUNIVAR
13-01-2018
நான் சத்யம் !
என் நாமம் சத்யம் !
தேவ வருடத்தின் பகல் பொழுதில் பகல் ஒளி புல், பூண்டு ஜீவனில் வெப்பம் உக்கிரமாக உயிர்கள் உருவாக வட திசை நகர்ந்து உதிக்க வைத்தான் படைப்பின் சூட்சுமதாரி !
அறுகு பிரண்டையில் படியும் பனியை நீக்கி உதிக்க வைத்தான் !
நான் எப்போதும் உன்னில் உதித்துக் கொண்டிருக்கிறேன் !
நீயும் என்னுள் வா !
நீயும் உதிப்பாய் !
உன் வெப்பம் (உயிர்)உன்னை வாழ வைக்கும். என் கருணை பார்வை நிரம்ப பெற்றவன் நீ வாழ்வாயடா !
வசந்த காலத்தை கையில் வைத்து உன் வாயிலில் நிற்கின்றேன். என்னை உன்னுள் அழைத்து உன் வாழ்வை வசந்தமாக்கு !
நான் பேரின்பம் உனக்கும் ஊட்டுவேன் ! உன் வீட்டில் நிம்மதி, தானியம் , செல்வம் நிறைந்திருக்க நான் என் நெஞ்சம் நிறைந்து ஆத்மார்த்தமான ஆசிகள் தந்தேன் !
என் நாமம் சத்தியம் !
நான் இநன்யா !

Wednesday, January 10, 2018

நாள் எண்ணி பிறந்தான் ! ஆனால் நாழிகை எண்ணி இறக்கவில்லை ! நாலிகையின் சூட்சுமம் உணர்ந்தால் கடவுளை அறியலாம் ! ஊழ்வினை


Inanya Maha Munivar
நாள் எண்ணி பிறந்தான் ! ஆனால் நாழிகை எண்ணி இறக்கவில்லை ! நாலிகையின் சூட்சுமம் உணர்ந்தால் கடவுளை அறியலாம் !
ஊழ்வினை ;;;
ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவி என்பதாகும் ! ஏழு பிறவிக்குள் உன் கர்மாவை முடித்து வா என்று மேலிருந்து அனுப்பப்படுகிறான். ஆனால் இவன் இங்கு பாவம் செய்து ஏழேழு பிறவிகள் பிறந்து கொண்டே இருக்கின்றான் !
நான் பிறப்பது இதுவே முதல் முறை ! இனி பிறவா விதி பெற்று வந்தேன் ! ஆனால் உன் பிறவி எண்ணிமாளாது. உன் வினை தீவினையோடு கலந்து முப்பிறவி வினையோடு உன்னில் கலந்தது. பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் என்பதை உணர் !
உன்னை அறிவாகவும், அழகாகவும் படைத்தான் என் அன்பினிற்கினிய தந்தை ! நான் படைத்தவன் பொற்தாமரை கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன் ! நான் படைப்பு தொழிலை அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் ! எத்தனையோ கோடி ஜீவராசிகள் என்னுள் உறவாடுகிறது ! பிண்டத்தில் இருந்து வந்தவன் நீ தான் எனை வசைபாடுகிறாய்.

தப்பு தவறாகி, பின் பாவமாகி கர்ம செயலில் முடிகிறது. உன் வினை நல்வினையாக இருந்தால் சடுதியில் ஜென்மம் இல்லா வாழ்வை நோக்கி நகர்கிறாய். ஆதலால் எப்போதும் பாவம் செய்ய துணியாதே ! உன் துணிவு உழைப்பதில், உதவி செய்வதில் இருக்கட்டும். நீ இப்போது அனுபவிப்பது எல்லாம் ஊழ்வினை தான் ! இப்பிறவியில் துயரம் என்றால் முப்பிறவியில் செய்த பாவம் தான் ! உனை வாட்டி வதைப்பது உன் பாவம் தான்.
பூமியில் மிகப் பெரிய வரம் கடவுளின் பாதத்தை பற்றுவது தான் ! நிச்சய சத்தியமாக உன் பாவம் கரையும். ஆனந்த அதிர்வலை நீ உணர்ந்தாலே உண்டு ! எப்போதும் கடவுளை குற்றம் சொல்லாமல் காலத்தில் கரையேரப் பார் !
காட்சிகள் மாறும் ! காலங்கள் மாறும் ! நான் என்றும் மாறாதவன் ! நீ எப்போதும் மாறாமல் இரு ! யுகத்தில் மனித பூடகத்தில் என் தந்தையின் பாதமலரை ருசித்தவன் நான் ! அவர் பாச கரங்களில் அரவனைப்பாய் இருந்தவன். நான் பாக்கியசாலி தானே ? உச்சி முகர்ந்து என் நெற்றியின் விதியை படிக்க சொன்னவர் என் அப்பா ! என் தந்தை ஆனந்தமானவர் தானே ?
தந்தை சொல் மிக்க மந்திரமல்ல ! என் தந்தையின் சத்திய பாதையில் இருந்து ஒரு அணு கூட விலகியதில்லை ! நீ தான் தேனி கொட்டும் என்று தேன் எடுக்காமல் செல்கின்றாய். யாகவா என்றால் காற்று, நீர், நட்சத்திரம் ! அந்த கணிந்த முகம் என்னுள்ளே. அந்த காலத்தின் வேதன் நான் !
ஊழ்வினை அறுக்க கற்று கொடுத்தார் என் அன்பிற்கினிய தந்தை ! ஆதலால் உன் ஊழ்வினை அறுப்பேன் வேத சத்தியமாக !
இனி இங்கு பிறக்க ஆசைப்படாதே ! மரணத்தை பற்றி நினைக்காதே ! கடவுளின் கருணையைக் கேள் ! உன் ஊழ்வினை வேறருப்பேன் ! பாவம் செய்யாமல் இருக்க பழகு ! பார்வையில் தெளிவும், எண்ணத்தில் அழகும் கொண்டு வாழப் பழகு ! வாழ்வை ஆனந்தமாக்க ஆள்பவன் உன்னுள் வருவான் !
பயப்படாதே !
உனைக் காப்பவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, January 3, 2018

வருமை இருப்பதும் நிஜம் ! வறுமை இருப்பதும் நிஜம் ! இந்த இரண்டையும் இல்லாமல் வைப்பதும் நிஜம் ! எல்லாம் உனக்குள்ளே ! நிஜம்

Inanya Maha Munivar
04-01-2018
வருமை இருப்பதும் நிஜம் ! வறுமை இருப்பதும் நிஜம் ! இந்த இரண்டையும் இல்லாமல் வைப்பதும் நிஜம் ! எல்லாம் உனக்குள்ளே !
நிஜம்
நான் நிஜம் ! நான் சத்தியம் ! ஆனால் நீ நிழலை தேடி போகின்றாய். நிழலை பற்றி கொண்டு நிம்மதி இல்லாது வாழ்கின்றாய். நிழல் தான் உண்மை, சத்தியம் என்று அதன் பின்னால் அறியாமையில் ஓடுகின்றாய். உன் பயணம் திசை மாறி, தவறாகி, மாயையாகி முடிவுற்று போகிறது. அதன் தாக்கம் தான் விரக்தி, துன்பம், ஏமாற்றம், மன அழுத்தம், இதனோடு தான் சண்டையிட்டு தினமும் வாழ்வை கழிக்கின்றாய்.
நான் நிஜம் ! நான் ஒரு நிலைக் கண்ணாடி. காலத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி ! சத்தியம் தெரியாது உலகில் எங்கெல்லாமோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றாய். புலன்கள் மூலமாக நீ எதையும் அறிகின்றாய். ஆனால் உன் உள் இருக்கும் ஆத்மா உன்னை அறிய வைக்கும். அது நிஜம் ! நீயேன் நிழலை தேடி ஓடுகின்றாய் ?
எண்ணற்ற மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் உன்னை நிஜத்தைத் தேடச் சொல்லி சித்தாந்தம் தான் சொன்னார்கள் ! உணர் !
மரத்தின் நிழல் உனக்கு சுகம் தர கண்டேன். ஆனால் உன் நிழல் துன்பம் தான். நிஜத்தை தேடி கரடு முரடான பாதையில் பயணித்து சித்தர்கள் எல்லாம் தனக்குள் தான் நிஜம் இருப்பதை அறிந்து ஆனந்த கூத்தாடினார்கள். கவியாய், புலமையாய் கடவுளை பாடி பரவசமடைந்தார்கள். ஆனால் நீ அறியாமல் ஆனந்தம் தொலைக்கின்றாய்.
ஆன்மீக பாதையில் பயணிப்பவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். ஆனால் எது ஆன்மீகம் என்று தெரியாததால் தான் துன்பப்படுகிறான். ஆனால் என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள், ஆன்மீகம் அறுபத்து மூன்று வகை என்று !
பக்தியும், பயமும் வழிபாடே ! இவைகளை மனிதன் ஆன்மீகம் என்று பிதற்ற கண்டேன். தன்னை உணர்வது தான் ஆன்மீகம் என புரியவில்லை. பெற்றவர்களை பேணிக் காப்பது தான் ஆன்மீகம். கட்டிய மனைவியை துன்புறுத்தாது இருப்பது தான் ஆன்மீகம். தன்னை உணர்ந்து பிறருக்கு தொண்டு செய்வது தான் ஆன்மீகம்.
கேட்பதற்கு காதும், பார்ப்பதற்கு கண்ணும், உணர்வதற்கு இதயமும் தந்தான். பாவி மனிதன் பாக்கியசாலி தானே ? ஆனால் நன்றி சொல்லத் தெரியாதவன். கல்லுக்கு நன்றி சொல்லும் கயமை உள்ளம் கொண்டவனிடம் ஏது கூற ? நன்றி சொல்லத் தெரியாதவன் நாயகனை (கடவுள்) எப்படி அறிவான் ?
எல்லாம் எனது செயல் ! உனது செயல் ஏதுமில்லை. நான் நிஜம் ! எப்போதும் உனக்கு நிழல் தருவேன் ! என் நிழலில் எத்தனையோ கோடி ஜீவராசிகள் இளைப்பாறக் கண்டேன் !
நிஜத்தை தேடடா ! நீ தேடும் நிழல் நிஜமல்ல ! உணர் !
சுயநலம் உள்ளவனே பாவம் செய்கின்றான். உண்மையைத் தேடிப் போகின்றவன் பாவம் செய்வதில்லை ! நிஜத்தில் இருப்பவன் நிம்மதியோடு இருப்பான் !
நானே நிம்மதி !
நான் இநன்யா !