இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் நானல்ல ! நாளெல்லாம் உன்னில் இருக்கும் நாலும் தெரிந்தவன் ! நானே உன் ஆண்மா !
நான்கின் சூட்சுமம் ;;;
39 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் நானல்ல ! நாளெல்லாம் உன்னில் இருக்கும் நாலும் தெரிந்தவன் ! நானே உன் ஆண்மா !
நான்கின் சூட்சுமம்
நான் என்றால் நான்கு வகை அர்த்தம் உண்டு ! உணர்ந்தாயா ?
உன்னை நாலும் தெரிந்தவன் என்று ஏன் சொல்கிறாய் ? பிரம்மாவை மட்டும் ஏன் நான்முகன் என்று சொல்கிறாய் ? உனக்கு ஞானமிருந்தால் உணர்ந்து பார் ! நான்கு திசையில் ஒன்றை அழிக்க வைத்தேன். அழிக்கும் சூட்சுமத்தை அத்திசையில் வைத்தேன் ! நீ அதை நோக்கி வணங்குகின்றாய் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ? நான்கை பற்றி தெரியாதவன் நாலும் தெரிந்தவன் என்று உளர்கின்றாய் !
நான் நான் என்று திரும்ப திரும்ப சொல்கிறேன். என்னை உணர்ந்தாயா நீ ? நான்கு என்பது உருவாக்குவதையும், காப்பதையும், அழிப்பதையும். அணைப்பதையும் குறிக்கும் சொல் ! இது தான் நான் என்ற சொல்லுக்கு அர்த்தம் ! இது தெரியாமல் நீ நான் என்று சொல்கிறாய் ! எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கின்றாய். உன்னால் ஏதும் செய்ய முடியும் என்று புலம்புகின்றாய் ! உன்னால் இரண்டு, மூன்று குழந்தைகளை தான் பெற முடியும். உன்னால் வேறு என்ன செய்ய முடியும் ? காற்றை உன்னால் பிடிக்க முடியுமா ? நீரை உன்னால் பிரிக்க முடியுமா ?
“நான்” என்ற அகங்காரச் சொல்லால் மனிதன் அல்லல்படுகிறான். விதையின் வீரியம் அறியாதவன் வீராப்பாய் பேசுகின்றான் ! நான் என்று இந்த இநன்யா சொல்கின்றேன் ! உனக்கு நான்கையும் என்னால் தர முடியும் (அறம், பொருள், இன்பம், வீடு பேறு.) ! ஏன் உணரவில்லை நீ ? உணர். என் மனித குலமே, எல்லாம் மறந்தாய் ! ஞானத்தை தொலைத்தாய் ! நான்கை புரியாமல் அலைகின்றாய் ! விரல்களில் நான்காம் விரலில் சூட்சுமம் வைத்தேன் ! உன் சந்தோஷம், நிம்மதியை அதில் வைத்தேன். உணர் !
நான்முகன் தலையை சிவன் கொய்தான் என்று கட்டுக்கதை எழுதி படிக்கின்றாய். நாலும் தெரிந்தவன் நான்முகன் ! நான்கு திசைகளையும் ஆள்பவன் நான்முகன் ! நான்முகனிடம் இருந்து அழிக்கும் தொழிலை மட்டுமே வாங்கினான் அவன். இது புரியாமல் நான்முகனின் ஒரு தலையை வெட்டினான் என்று உளர்கிறாய் ! உணர்ந்து பார் ! நான்கை கையில் வைத்தவன் உயர்ந்தவன் தானே ? வளர்பிறை, தேய்பிறையில் வரும் நான்காம் நாளை மேல் நோக்கி பார்க்கக் கூடாது என்று சொல்கிறாய் ? ஏன் ? சந்திரனில் இருந்து வரும் அமிர்த அலைகளில் விஷத்தின் சாயல் இருக்கும். அதானாலேயே நான்காம் நாளை சதுர்த்தி என்று கூறி பிள்ளையாரை வணங்கினாய். அதனால் உனக்கு கெடுதல் வராது என்று முன்னோர்கள் கருதினர்.
நான்காம் நாளில் பெண்ணோடு சேர வேண்டும் என்று சொல்லி வைத்தான். நீ ஏதும் புரியாமல், அறியாமல் வாழக் கண்டேன். உனக்கு கூடலும் தெரியவில்லை ! ஊடலும் தெரியவில்லை ! வாழவும் தெரியவில்லை ! இன்பம் பூமியிலே பெண்ணில் வைத்தேனடா ! ஒருத்தனக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறி நீ இன்பத்தை வெளியில் தேடுகிறாய். நீ புரியாமல் வாழ்கிறாய் !
ஒன்றில் நிலை பெற செய்தேன் உண்மையை ! நீ நான்கு வகை இன்பம் கேட்கிறாய் ! அதனால் துன்பம் அடைகின்றாய். நான் படைத்த பொருளை அனுபவிக்க தெரியாதவன் நீ !
ஒன்றில் நிலை பெற செய்தேன் உண்மையை ! நீ நான்கு வகை இன்பம் கேட்கிறாய் ! அதனால் துன்பம் அடைகின்றாய். நான் படைத்த பொருளை அனுபவிக்க தெரியாதவன் நீ !
ஆதிகாலத்தில் அரச இலையை பரப்பி ஆணும், பெண்ணும் இணைந்தார்கள். ஞானத்தோடு வாழ்ந்தார்கள் ! அரச இலை, பூவரசு இலையில் புணிதம் நிறைய உண்டு ! உன் அன்றாட வாழ்வுக்கு தேவையான வஸ்து இது ! பூவரசு இலைக்கும் உன் வயிற்றுக்கும் சம்பந்தம் உள்ளது. பூவரசு காயில் ஆண், பெண், அலி என்று பிரிவு உண்டு ! அதில் பெண் காயில் வரும் அமிர்தம் உன் சரீரத்தின் நோய் தீர்க்கும் ! கண்டுபிடி ! வாத மடக்கியில் கோடி ரகசியம் வைத்தேன். ஆடுகளுக்கு தெரியும் அதன் சூட்சுமம். அதனால் தான் ஆட்டுப்பாலில் மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன். அழிஞ்சில் உண்டு ஆயிரம் சூட்சுமம் !
நாலும் தெரிந்தவன் நானடா ! உனக்கு நாளெல்லாம் சொல்லித் தருவேன். கறிவேப்பிலை செடியை வீட்டில் வைக்காதே. ஆண்களுக்கு நல்லதல்ல ! பப்பாளி மரத்தை வீட்டில் வைக்காதே. பெண்களுக்கு நல்லதல்ல ! பறவைகளை வீட்டில் கூண்டில் வைத்து அடைத்து வளர்க்காதே ! உன்னைப் போல் பறவைகளுக்கும் இரண்டு கால் கொடுத்துள்ளேன். வாழ்வில் ஒரு முறையாவது எதற்கென்று யோசித்துள்ளாயா ?
ஜீவராசிகளுக்கு நான்கு கால்கள் கொடுத்தேன். யோசி ! நான்கு கால்கள் எழுப்பிய பின் தான் கட்டிடத்தை கட்டுகின்றாய். நான்கில் இன்னும் எண்ணற்ற ரகசியம் வைத்தேன் ! நீ ஏதும் தெரியாமல் “நான்” என்று உளரக் கண்டேன்.
வம்பன சொல்லும், அம்பென பேச்சும் பேசி திரியும் மானிடனே எப்போது உணர்வாயடா ?
உன் உடலில் நூற்றி பதினொன்று துவாரங்கள் வைத்தேன் ! அதில் ஒன்பதை வெளியேயும். இரண்டை சூட்சுமமாகவும் வைத்தேன் ! அதில் ஆறு துவாரம் தலையில் வைத்தேன் ! அதில் நான்கை அறிவை அறிய வைத்தேன் ! ஆனால் நீ அந்த நான்கையும் அடைத்து ஞானமில்லாமல் திரிகின்றாய் ! உணர் !
நான்கு வேதம் என்று சொல்கின்றாய், உணர்ந்தாயோ நீ ? அது வேதமா , மந்திரமா இல்லையேல் வேறு என்னவென்று என்றைக்காவது ஆராய்ச்சி செய்துள்ளாயா ?
நான்கு வேதம் என்று சொல்கின்றாய், உணர்ந்தாயோ நீ ? அது வேதமா , மந்திரமா இல்லையேல் வேறு என்னவென்று என்றைக்காவது ஆராய்ச்சி செய்துள்ளாயா ?
நான்கு வகை இன்பம் வைத்தேன். (அறம், உதவி, கடமை, ஞானம்). இதை மறந்துவிட்டு எந்த இன்பத்தை தேடுகின்றாயடா ?
நான்கு வகை குணம் வைத்தேன் ! (நாய் குணம், நரி குணம், பேய் குணம், கழுதை குணம்). இதில் எந்த குணத்தோடு இருந்தால் உன்னை அறியலாம் என்று உணராமல் அலைகின்றாய் !
நான்கு வகை பால் வைத்தேன். பாசப்பால், பற்று பால், அறிவுப் பால், ஆகாய பால். இதில் எதை உணர்ந்தாயடா ?
நானின்றி நீ இல்லை ! காற்றின்றி நீரின்றி நீ இல்லை !
பசுவுக்கு முன்னூறு நாள் வைத்தேன். உனக்கும் முன்னூறு நாள் வைத்தேன். பசுவுக்கு புணிதமாக நான்கு காம்புகளை வைத்தேன் ! அதில் நான்கு குணங்களை வைத்தேன். அதில் ஒன்று ஞானக்காம்பு ! அதில் வரும் அமிர்த பால் உனக்கு ஞானத்தை தரும் ! உணந்தாயோ நீ ? ஞானமிருந்தால் கண்டுபிடி !
நான்கை தெரியாதவன் நான் என்று பேசாதே ! தியானம், யோகா என்று கண்களை மூடி கோமாளி போல் ஏதோ செய்கின்றாய். நீ “நாம்” என்ற நல்லறம் கொள் ! என்னைத் தவிர நான் என்று இங்கு எவருமில்லை ! எப்போது அறிவாய் ? எப்போது தெளிவாயடா ?
நானே சகலமும் ! நானே சர்வமும் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment