இநன்யா ;;;
INANYA NAMOO NAMA ;;;
நான் வீழ்ந்து போக வரவில்லை ! வாழ்ந்து போக வந்தேன் ! தர்மாக்களை வாரி அணைக்க வந்தேன். வான் மகன் நான் இநன்யா !
66 இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;;
நான் வீழ்ந்து போக வரவில்லை ! வாழ்ந்து போக வந்தேன் ! தர்மாக்களை வாரி அணைக்க வந்தேன். வான் மகன் நான் இநன்யா !
ஞானம் எப்படி, எப்போது கிடைக்கும் ?
இங்கே எதுவும் எளிதல்ல ! உன்னை முன்னூறு நாள் சுமந்து அல்லும் பகலும் உன்னையே நினைத்து உலகில் எதற்கும் ஈடு செய்ய முடியாத வலியை பொறுத்து கொண்டு உன்னை ஜணித்தாள். அந்த கருணைமிக்கவளுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ? நீ அருந்திய அமிர்த பாலுக்கு நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. நன்றியோடு இரு ! பெண் ஞான மலர் ! அதனால் தான் அவள் பிறக்கும் போதே பிரம்ம நிலை அடைந்து வருகிறாள். அதனாலே அவள் முகம் தெளிவாக்கப்பட்டது. உனக்கு தாடி மீசை ஏன் வைத்தேன் என்று யோசி !
தாய்க்கு நன்றியோடு இரு ! தாய் பூமிக்கும் நன்றியோடு இரு ! உன் தாரத்திற்கும் நன்றியோடு இரு !
உன் ஆண்மையை பறைசாற்றுவதற்காக உன் கருவை வளர்த்து உனக்காக ஈடு செய்ய முடியாத வலியை பொறுத்து வாரிசை தந்தாளே, என்றாவது அவளுக்கு நன்றி சொன்னாயா ?
நன்றி உணர்வோடு இரு ! ஞானத் தெளிவு வரும் !
உழவன் உனக்காக விதையை தூவி அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உனக்கு தானியம் தந்தானே அவனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
நாய்க்கு ஒரு வேளை உணவு கொடுத்தாலே அது வாழ் நாள் முழுவதும் நன்றியை பறைசாற்றுகிறது. நீ எதற்கும் நன்றி சொல்ல தெரியாதவன். பின் எப்படி ஞானம் கிடைக்கும் ? உன்னை உணரும் பக்குவம் வந்தால் உலகை அறியலாம் !
படைத்தவை எல்லாம் நன்றியோடு இருக்க கண்டேன். ஞானத்தோடு வாழக் கண்டேன் ! இந்த பாழ்பட்ட மனிதன் மட்டும் தான் நன்றி இல்லாது வாழக் கண்டேன்.
உன்னை உணரும் வரை ஞானம் கிடைக்காது. இந்த அழுகும் உடலை அலங்கரிக்கின்றாய். உனக்கு பஞ்சு மெத்தை, பசப்பு வாழ்க்கை தேவைபடுகிறது. பூமியில் வெறுந்தரையில் கையே தலையணையாக தினமும் துயில் கொள் ! ஞானத் தெளிவு வரும் !
எல்லாவற்றையும் துறந்து இருந்தும் இல்லாது நினைத்து வாழ்வை எதிர் நோக்கு ! ஞானத் தெளிவு வரும் !
இங்கு அன்பு பாசத்தை விட்டுவிட்டாய். ஞானம் தொலைத்தாய். நான் என்ற அகங்காரச் சொல்லை உன்னுள் வைத்தாய். ஞானம் தொலைத்தாய். உழைப்பை மறந்து சோம்பி திரிந்து யாருக்கும் பயன்படாமல் பூமியில் எதை தேடுகிறாய் ?
இங்கு ஞானம் எளிதல்ல !!
கோபம், மோகம், ஆசை, லோபம் விடு ! ஞானத் தெளிவு வரும் ! பிறகு உன்னை உணரும் பக்குவம் வரும்.
ஏன் ? எதற்கு ? என்று கேள்வி கேட்கின்றாய். இந்த துன்பம் ஏன் கொடுத்தாய் என்று புலம்புகிறாய். இங்கு நீ என்பது ஏதுமில்லை. நீ ஒரு பொம்மையடா. நான் ஆட்டும் உயிரில்லா பொம்மையடா. உன்னை எப்போது உணர்கின்றாயோ அப்போதே உன் உயிர் நிலை தெரியும் !
உயிர் வேறு ! உயிர் நிலை என்பது வேறு !
அந்த உயிர் நிலையை அறிந்தால் உன்னை உணர்வாய், ஒரு நிமிட பொழுதிலே !
அந்த ஆணந்த நிலையை அறிய முற்படு ! சித்தர்கள், ஞானிகள் யாவரும் உயிர் நிலை அறிந்தே வாழ்ந்தார்கள். கண்களை மூடி தியானம், யோகா, குண்டலனி சக்தி என்று நீ தான் எதையோ தேடுகின்றாய் ! இங்கே வழிபாடுகள் தேவையில்லை. வழிமுறைகளை மறந்தாய். உன் வழியை மறந்தாய். அடுத்தவர் பின்னால் செம்மறி ஆட்டுக் கூட்டமாய் செல்கின்றாய். எப்போது உணர்வாயடா ?
நான் ஞானத்தை தானம் செய்யவே இந்த யுகம் வந்தேன். நான் ஏமாற்றி போக வரவில்லை. உன்னை ஏமாற்றவும் வரவில்லை. கற்ற வித்தையை காசாக்கவும் வரவில்லை. உனக்கு ஞானத்தை போதிக்க வந்தேன். கஷ்டபடாமல் வாழ நினைக்கின்றாய் அல்லது பிறரை பார்த்து பொறாமைபடுகின்றாய். இந்த யுகத்தில் நீ எதுவாகவும் ஆக முடியும். உன்னால் அமெரிக்கா தேசத்திற்கு கூட அதிபராக முடியும். எல்லோருக்கும் இங்கே ஒரே மூளை தானடா ! அதை உபயோகிக்க தெரிந்தவன் உலகை உற்று நோக்க வைக்கின்றான். விதி என்பது பிறப்பு, இறப்பை நிர்ணயக்கின்றது. இடையில் நீ வாழும் வாழ்வு உன்னால் நிர்ணயிக்கபடுகின்றது. பின் உன் அடுத்த பிறப்பும் நீ தான் நிர்ணயிக்கின்றாய் !
நானே விதி ! நீ இப்போது விதியோடு (இநன்யா) வாழ்கின்றாய். வீழ்ந்து போகமாட்டாய் ! எழுந்திரு !
நீ அடுத்தவர்க்கு கொடி பிடித்தே உன் வாழ்வை கல்லறையாக்கினாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை ? நீ சாதிக்க பிறந்தவன், ஞானத்தை தொலைத்து அலைகிறாய். யாரும் தேற்றி விட மாட்டார்களா என்று உன் திறமையை மறந்து உழல்கின்றாய்.
இன்றே முயற்சி செய் ! நாளை என்று தள்ளி போடாதே !
ஒரு தடவை தோற்றால் மறு தடவை முயற்சி செய். தோல்வி என்று ஏதுமில்லை இங்கு !
இங்கே உன்னை உணர்வது தான் வெற்றியடா ! எழுந்திரு !
நாளையே ஜெயிக்க வேண்டும் என்று உறுதி எடு ! நான் உனக்கு ஆயிரம் புரவி வலிமை தருகிறேன். ஆயிரம் யானை பலம் உன் ஆண்மாவுக்கு தருகிறேன். உன் பக்கத்தில் நின்றே உனை பாதுகாக்கிறேன். விழித்திடடா !
உன் கால்கள் கடவுளை நோக்கி பயணமாகட்டும் ! காலின் அடியில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் பற்றி யோசிக்காதே. வீறு கொண்டு எழு ! எல்லாம் பசுபமாகும்.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக நினை ! துன்பம் தான் உனக்கு இன்பம் தரும் என்பதை புரிந்து கொள். ஒரு முன்னூறு நாள் உனை மறந்து அண்ண பிச்சை எடுத்து ஒரு வேளை உணவு உண்ண முடியுமா ? முடியும் என்றால் நீ ஞானத் தெளிவு அடைந்துவிடுவாய். செய்து பார் ! ஞானம் வரும் !
இருந்த இடத்தில் ஏதுமில்லை. நீ அடையும் இலக்கு எங்கோ ஒரு மூலையில் ! தேடிக் கண்டு பிடி ! நீ ஞானவனாகு ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருக்கின்றேன்.
என்னிடம் உன் அற்ப சரீரத்தை பற்றி கேட்கின்றாய். அல்லது வறுமையை பற்றி கேட்கின்றாய். நீ ஞானத்தை கேட்கவில்லை. மீண்டும் பிறவா நிலை கேட்கவில்லை. ஞானமிருந்தால் எல்லாம் உனக்கு கிடைக்குமடா ! நான் காற்று வழி ! என்னை எட்டிப் பிடிக்க எவராலும் முடியாது. உனக்கு வழியை காண்பித்து இந்த வழிபோக்கன் மேல் உலகம் நோக்குகிறேன்.
இங்கு வலியும் வேதனையும் இல்லாமல் எதுவும் கிடைப்பதில்லை. நீ உன் தாய்க்கு வலியும் வேதனையும் கொடுத்தே யுகத்திற்கு வந்தாய். மதியுடையோன் மிதியடி அணியமாட்டான். காலில் மிதியடி இல்லாமல் நடக்க பழகு, ஞானத் தெளிவு வரும். எதுவும் இங்கே வேண்டாம் என்று எப்போது உன் மன நிலை வருகிறதோ, அப்போது தான் ஞானத் தெளிவு வர ஆரம்பிக்கும் !
நல் விதையை தூவி, நான் உனக்காக காத்திருக்கின்றேன் ! எப்போது உணர்ந்து என்னிடம் வருவாய் என்று காத்திருக்கின்றேன் !
வா ! உனக்கு வசந்த காலத்தை (ஞானம்) தருகிறேன். ஞானத்தை தானம் தருபவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment