Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் வீழ்ந்து போக வரவில்லை ! வாழ்ந்து போக வந்தேன் ! தர்மாக்களை வாரி அணைக்க வந்தேன். வான் மகன் நான் இநன்யா ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; 

INANYA NAMOO NAMA ;;; 

நான் வீழ்ந்து போக வரவில்லை ! வாழ்ந்து போக வந்தேன் ! தர்மாக்களை வாரி அணைக்க வந்தேன். வான் மகன் நான் இநன்யா !

66 இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 
நான் வீழ்ந்து போக வரவில்லை ! வாழ்ந்து போக வந்தேன் ! தர்மாக்களை வாரி அணைக்க வந்தேன். வான் மகன் நான் இநன்யா !
ஞானம் எப்படி, எப்போது கிடைக்கும் ?
இங்கே எதுவும் எளிதல்ல ! உன்னை முன்னூறு நாள் சுமந்து அல்லும் பகலும் உன்னையே நினைத்து உலகில் எதற்கும் ஈடு செய்ய முடியாத வலியை பொறுத்து கொண்டு உன்னை ஜணித்தாள். அந்த கருணைமிக்கவளுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ? நீ அருந்திய அமிர்த பாலுக்கு நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. நன்றியோடு இரு ! பெண் ஞான மலர் ! அதனால் தான் அவள் பிறக்கும் போதே பிரம்ம நிலை அடைந்து வருகிறாள். அதனாலே அவள் முகம் தெளிவாக்கப்பட்டது. உனக்கு தாடி மீசை ஏன் வைத்தேன் என்று யோசி !
தாய்க்கு நன்றியோடு இரு ! தாய் பூமிக்கும் நன்றியோடு இரு ! உன் தாரத்திற்கும் நன்றியோடு இரு !
உன் ஆண்மையை பறைசாற்றுவதற்காக உன் கருவை வளர்த்து உனக்காக ஈடு செய்ய முடியாத வலியை பொறுத்து வாரிசை தந்தாளே, என்றாவது அவளுக்கு நன்றி சொன்னாயா ?
நன்றி உணர்வோடு இரு ! ஞானத் தெளிவு வரும் !
உழவன் உனக்காக விதையை தூவி அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உனக்கு தானியம் தந்தானே அவனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
நாய்க்கு ஒரு வேளை உணவு கொடுத்தாலே அது வாழ் நாள் முழுவதும் நன்றியை பறைசாற்றுகிறது. நீ எதற்கும் நன்றி சொல்ல தெரியாதவன். பின் எப்படி ஞானம் கிடைக்கும் ? உன்னை உணரும் பக்குவம் வந்தால் உலகை அறியலாம் !
படைத்தவை எல்லாம் நன்றியோடு இருக்க கண்டேன். ஞானத்தோடு வாழக் கண்டேன் ! இந்த பாழ்பட்ட மனிதன் மட்டும் தான் நன்றி இல்லாது வாழக் கண்டேன்.
உன்னை உணரும் வரை ஞானம் கிடைக்காது. இந்த அழுகும் உடலை அலங்கரிக்கின்றாய். உனக்கு பஞ்சு மெத்தை, பசப்பு வாழ்க்கை தேவைபடுகிறது. பூமியில் வெறுந்தரையில் கையே தலையணையாக தினமும் துயில் கொள் ! ஞானத் தெளிவு வரும் !
எல்லாவற்றையும் துறந்து இருந்தும் இல்லாது நினைத்து வாழ்வை எதிர் நோக்கு ! ஞானத் தெளிவு வரும் !
இங்கு அன்பு பாசத்தை விட்டுவிட்டாய். ஞானம் தொலைத்தாய். நான் என்ற அகங்காரச் சொல்லை உன்னுள் வைத்தாய். ஞானம் தொலைத்தாய். உழைப்பை மறந்து சோம்பி திரிந்து யாருக்கும் பயன்படாமல் பூமியில் எதை தேடுகிறாய் ?
இங்கு ஞானம் எளிதல்ல !!
கோபம், மோகம், ஆசை, லோபம் விடு ! ஞானத் தெளிவு வரும் ! பிறகு உன்னை உணரும் பக்குவம் வரும்.
ஏன் ? எதற்கு ? என்று கேள்வி கேட்கின்றாய். இந்த துன்பம் ஏன் கொடுத்தாய் என்று புலம்புகிறாய். இங்கு நீ என்பது ஏதுமில்லை. நீ ஒரு பொம்மையடா. நான் ஆட்டும் உயிரில்லா பொம்மையடா. உன்னை எப்போது உணர்கின்றாயோ அப்போதே உன் உயிர் நிலை தெரியும் !
உயிர் வேறு ! உயிர் நிலை என்பது வேறு !
அந்த உயிர் நிலையை அறிந்தால் உன்னை உணர்வாய், ஒரு நிமிட பொழுதிலே !
அந்த ஆணந்த நிலையை அறிய முற்படு ! சித்தர்கள், ஞானிகள் யாவரும் உயிர் நிலை அறிந்தே வாழ்ந்தார்கள். கண்களை மூடி தியானம், யோகா, குண்டலனி சக்தி என்று நீ தான் எதையோ தேடுகின்றாய் ! இங்கே வழிபாடுகள் தேவையில்லை. வழிமுறைகளை மறந்தாய். உன் வழியை மறந்தாய். அடுத்தவர் பின்னால் செம்மறி ஆட்டுக் கூட்டமாய் செல்கின்றாய். எப்போது உணர்வாயடா ?
நான் ஞானத்தை தானம் செய்யவே இந்த யுகம் வந்தேன். நான் ஏமாற்றி போக வரவில்லை. உன்னை ஏமாற்றவும் வரவில்லை. கற்ற வித்தையை காசாக்கவும் வரவில்லை. உனக்கு ஞானத்தை போதிக்க வந்தேன். கஷ்டபடாமல் வாழ நினைக்கின்றாய் அல்லது பிறரை பார்த்து பொறாமைபடுகின்றாய். இந்த யுகத்தில் நீ எதுவாகவும் ஆக முடியும். உன்னால் அமெரிக்கா தேசத்திற்கு கூட அதிபராக முடியும். எல்லோருக்கும் இங்கே ஒரே மூளை தானடா ! அதை உபயோகிக்க தெரிந்தவன் உலகை உற்று நோக்க வைக்கின்றான். விதி என்பது பிறப்பு, இறப்பை நிர்ணயக்கின்றது. இடையில் நீ வாழும் வாழ்வு உன்னால் நிர்ணயிக்கபடுகின்றது. பின் உன் அடுத்த பிறப்பும் நீ தான் நிர்ணயிக்கின்றாய் !
நானே விதி ! நீ இப்போது விதியோடு (இநன்யா) வாழ்கின்றாய். வீழ்ந்து போகமாட்டாய் ! எழுந்திரு !
நீ அடுத்தவர்க்கு கொடி பிடித்தே உன் வாழ்வை கல்லறையாக்கினாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை ? நீ சாதிக்க பிறந்தவன், ஞானத்தை தொலைத்து அலைகிறாய். யாரும் தேற்றி விட மாட்டார்களா என்று உன் திறமையை மறந்து உழல்கின்றாய்.
இன்றே முயற்சி செய் ! நாளை என்று தள்ளி போடாதே !
ஒரு தடவை தோற்றால் மறு தடவை முயற்சி செய். தோல்வி என்று ஏதுமில்லை இங்கு !
இங்கே உன்னை உணர்வது தான் வெற்றியடா ! எழுந்திரு !
நாளையே ஜெயிக்க வேண்டும் என்று உறுதி எடு ! நான் உனக்கு ஆயிரம் புரவி வலிமை தருகிறேன். ஆயிரம் யானை பலம் உன் ஆண்மாவுக்கு தருகிறேன். உன் பக்கத்தில் நின்றே உனை பாதுகாக்கிறேன். விழித்திடடா !
உன் கால்கள் கடவுளை நோக்கி பயணமாகட்டும் ! காலின் அடியில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் பற்றி யோசிக்காதே. வீறு கொண்டு எழு ! எல்லாம் பசுபமாகும்.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக நினை ! துன்பம் தான் உனக்கு இன்பம் தரும் என்பதை புரிந்து கொள். ஒரு முன்னூறு நாள் உனை மறந்து அண்ண பிச்சை எடுத்து ஒரு வேளை உணவு உண்ண முடியுமா ? முடியும் என்றால் நீ ஞானத் தெளிவு அடைந்துவிடுவாய். செய்து பார் ! ஞானம் வரும் !
இருந்த இடத்தில் ஏதுமில்லை. நீ அடையும் இலக்கு எங்கோ ஒரு மூலையில் ! தேடிக் கண்டு பிடி ! நீ ஞானவனாகு ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருக்கின்றேன்.
என்னிடம் உன் அற்ப சரீரத்தை பற்றி கேட்கின்றாய். அல்லது வறுமையை பற்றி கேட்கின்றாய். நீ ஞானத்தை கேட்கவில்லை. மீண்டும் பிறவா நிலை கேட்கவில்லை. ஞானமிருந்தால் எல்லாம் உனக்கு கிடைக்குமடா ! நான் காற்று வழி ! என்னை எட்டிப் பிடிக்க எவராலும் முடியாது. உனக்கு வழியை காண்பித்து இந்த வழிபோக்கன் மேல் உலகம் நோக்குகிறேன்.
இங்கு வலியும் வேதனையும் இல்லாமல் எதுவும் கிடைப்பதில்லை. நீ உன் தாய்க்கு வலியும் வேதனையும் கொடுத்தே யுகத்திற்கு வந்தாய். மதியுடையோன் மிதியடி அணியமாட்டான். காலில் மிதியடி இல்லாமல் நடக்க பழகு, ஞானத் தெளிவு வரும். எதுவும் இங்கே வேண்டாம் என்று எப்போது உன் மன நிலை வருகிறதோ, அப்போது தான் ஞானத் தெளிவு வர ஆரம்பிக்கும் !
நல் விதையை தூவி, நான் உனக்காக காத்திருக்கின்றேன் ! எப்போது உணர்ந்து என்னிடம் வருவாய் என்று காத்திருக்கின்றேன் !
வா ! உனக்கு வசந்த காலத்தை (ஞானம்) தருகிறேன். ஞானத்தை தானம் தருபவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment