Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 29, 2016

வாசியோகம்

  வாசியோகம்
 237 வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.

கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.
வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !

236 என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !
மரங்கள் உயர்ந்தது !
என் நயனத்தில் கோடி நியர் பார்வை உண்டு ! இந்த பொன்னாட்சியின் புணிதன் பார்வை உனக்கும் உண்டு !
யுக வாழ்வில் விருட்சத்தின் சாயல் உணராமல் ஊமை கூட்டமாய் வாழ்கின்றாய் ! அரசத்தில் ஆண்மையை வைத்து ஆலில் ஆளுமையை வைத்தேன் ! விசித்தியின் சாயலில் விதை படைத்து வீதியை ஆக்கிரமித்து விடங்கனாய் நிற்கும் வின்வித்தை மறந்தாய். அத்தியில் உருக்கும் வைத்தேன். நீ ஆணந்தம் தொலைத்து அலைகின்றாய்.
பூக்காமல் காய் காய்க்கும் புணித மரங்கள் ஐந்தில் ஞானத் தெளிவை வைத்தான் என் நாயகன், என் தலைவன் , என் தந்தை, பிரபஞ்ச நாயகன் ! ஏன் மறந்தாய் நீ ?
வளர் கொம்பில் வான் மகன் நானிருக்க வையத்தில் உனை மறந்து அலைகின்றாய். யுகத்தில் பறவைகள், மரங்கள் உயர்ந்தது ! பூமியில் நிறைவை தருவது !
மரங்கள் இல்லையென்றால் ஒரு துளி காற்று உன்னை இயக்க யோசிக்கும். புணித வேதங்கள் பிரபஞ்சத்திலிருந்து கீழே மரங்கள் மீது பட்டே காற்றின் துணை கொண்டு யுகத்தில் பரவுகின்றது.
கடலில் அலை வருவதும் வேதங்களால் தான். ஆனால் அது கர்மத்தை அழிப்பதால் கடற்கரை செல்லாதே என்று கூறினேன். அதற்காக மீனவன் மட்டும் வாழ்கின்றான் என்று யோசிக்காதே ! உழவனும், மீனவனும் கடவுளின் அருட்பார்வையில் வாழ்பவர்கள்.
கும்பி மரத்தில் குறை இல்லா வாழ்வும், சோசத்தில் சுகமும் இருப்பதை மறந்தாய். மரத்தடியில் அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். இந்த அற்ப மனிதன் மலை ஏறி ஆணந்தம் தொலைக்கின்றான். ஆகமலத்தில் ஸ்வேதத்தை வைத்து அமலாக்கியில் புணிதமும், கோரங்கத்தில் குறை இல்லா வாழ்வும் வைத்தான் என் தந்தை பிரபஞ்ச நாயகன் ! உணரா அலைகின்றாய் ?
என் தந்தையின் உமிழ் நீரில் உதித்ததே ஆகமலம் என்பதை மறவாதே ! இதை அறிந்து உணர உன் ஆயுள் போதாது ! ஆகமலத்தின் அடியில் அமர்ந்து யோசி ! ஆளுமையும், ஞானத் தெளிவும் வரும் !
மனிதனுக்கும், மிருகத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். மனிதன் தன்னை உணர இரை தேடுவதோடு இறையையும் தேடுகின்றான். ஆதலால் மனிதன் உயர்ந்தவன் ! மிருகங்கள் இரையை மட்டும் தேடுகின்றன. ஆனால் இப்பொழுது, இந்த அற்ப மனிதன் எதை எதையோ தேடுகின்றான்.
நகழி மரத்தில் உன் குண்டலினி சக்தி உயிர்பிக்கும் சூட்சுமம் உண்டு ! பன்னீர் மரத்தின் பூக்களில் பாச மிகு உணர்ச்சி உண்டு ! கண்டு பிடி !
கடவுளிடம் வேண்டாதவன் தான் இங்கே பெரியவன் ! அவனைத் தான் சித்தன், ஞானி, மகான், நாயன்மார், ஆழ்வார் என்று வணங்குகின்றாய். அவர்கள் யாவரும் கடவுளிடம் வேண்டியதில்லை. தன்னை பற்றி நினைத்ததில்லை. அதனால் தான் அவர்களை நீ போற்றுகின்றாய். நீயும் கடவுளிடம் வேண்டாதே ! நீயும், ஞானியாய், மகானாய், சித்தனாய் ஆவாய்.
தலவிருட்சம் இல்லா கோயில் இல்லை. ஏன் விருட்சத்திற்கு முக்கியத்துவம் தந்தான் என்று உணர்ந்தாயோ நீ ?
கோயிலில் விருட்சமே உயர்ந்தது. விருட்சத்தை வணங்காமல் ஊமைச் சிலையை வணங்கி உண்மை புரியாமல் அலைகின்றாய். மகத்துவம் நிறைந்தது விருட்சம் !மாயா லோகத்தில் உன் மதி மயக்கத்தை போக்கும் வலிமை மரத்திற்கே உண்டு !
மா விருட்சத்தின் விதையில் உதயமானாய் நீ ! இலை அழுகா விருட்சத்தை ஏன் மறந்தாய் ?
புளியம் பிஞ்சுக்கும் உன் ஆண்மாவுக்கும் தொடர்பு இருப்பதை ஏன் மறந்தாய் ?
பத்ரியும், சுத்தியும், சுவியும் ஞானம் தரும் என்பதை ஏன் உணரவில்லை நீ ? மகிழத்தில் மகிழ்ச்சியும் மருதத்தில் உணர்ச்சியும் வைத்தேன் ! நீ உணராமல் இருப்பது ஏனோ ?
ஊமை சிலையை வணங்கி உண்மையை மறந்து போனாய். வைகறை பொழுதெல்லாம் மகிழத்தின் அடியில் அமர்ந்து மடிப் பிச்சை ஏந்து ! சுகமான குழந்தை ஜனிக்கும் ! சுரக்கு மரத்தின் அடியில் அமர்ந்து சுகமான குழந்தை ஜணிக்கும் சூட்சுமத்தையும் உணராமல் அலைகின்றாய். வாத மடக்கியும், வாம்பியும் உன் வாதம் போக்கும் சூட்சுமம் மறந்தாய் !
நீ மனிதனிடம் யாசிக்கின்றாய். மரத்திடம் யாசி ! உனக்கு ஞானமும் , நிம்மதியும் கிடைக்கும். நல்ல குழந்தை பிறக்கும்.
ஒன்பது நாள் பலா இலையில் உணவருந்து ! வன்னி மலர்களை பனை வெல்லம் கலந்து சாப்பிடு ! உன் கர்ப்பத் தடை விலகும். காலம் கணிந்து கண்மணி குழந்தை ஜணிக்கும் ! இந்த சூட்சுமம் எவனும் சொல்லிப் போனானோ ? துதி பாடியே போனான். நீயும் துதி பாடுகின்றாய்.
புன்னையில் உன் சரீரத் தோல் சுகமாக்கும் சூட்சுமம் உண்டு ! பூவரசு மரத்தின் பெண் காயில் பெருமை மிகு சுகம் ஒன்றும் இருக்க நீ உணராதது ஏனோ ? கர்மத்தால் வரும் தொழு நோயும், வெண் நோயும் குணமாகும் சூட்சுமம் நீ உணராதது ஏனோ ?
வன்னி மரத்தடியில் கொஞ்சம் பச்சரிசி கொண்டு போடு ! அதை எறும்புகள் சாப்பிட்டு உன் கர்மாவை சிதிலமடைய வைக்கும் !
வாழை வான் அமிர்தம் ! உயர்ந்த விருட்சம் ! கற்பகதரு ! கடவுளின் படைப்பில் உச்சமடா !
எத்தனையோ சூட்சுமம் விருட்சத்திலே ! விருட்சம் இல்லா வீடும், விருட்சம் இல்லா வீதியும் வீணாய் போகும். நோயும் துன்பமும் ஆளும்.
உணர் உண்மையை !
என் நாமம் சொல் ! எல்லாம் கற்பாய் ! அறிவாய் !
உன்னை யாசிக்கும் நிலையில் நான் வைக்கமாட்டேன். உயர்த்துவேன் !
ஆகமலத்தின் அரசாட்சி நான் !
நான் இநன்யா !

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்...!!!

235 நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்...!!!
எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.
இந்த மாதம் சோடசகலை நேரம் 1.10.2016 அதிகாலை 4:28 முதல் 6:28 வரை
இம்முறை அமரர்.மிஸ்டிக்செல்வம் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

Wednesday, September 21, 2016

சகத்தின் அசிந்தியத்தில் உயர்ந்த துமானம் நான் !


Inanya Maha Munivar
234- 22-09-2016
சகத்தின் அசிந்தியத்தில் உயர்ந்த துமானம் நான் ! உன் தாய், தந்தைக்கு தொண்டு செய் ! மனிதர்க்கு தொண்டு செய் ! நான் உனக்கு என்றும், எப்போதும் உதவியாக இருப்பேன் !
தொண்டு!
நீ யாருக்கும் உதவி செய்ய முடியாது. தொண்டு செய்யவே முடியும் ! மனிதனுக்கு தொண்டு செய் ! என் அருகில் அமர்வாய் !
ஆண்மாவே ஆலயம் ! அதுவே வழிப்பாட்டுக்குரியது. மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உடலைப் பற்றி சிந்திக்காதே. இந்த உடலின் ஆசை தான் மனதின் வழியாக உன்னை கீழ் நிலைக்கு தள்ளுகிறது.
உள்ளத்தால் தனித்திரு ! அது தான் இன்பம். பந்த பாசம் துன்பத்தை தான் கொடுக்கும். நீ வந்த கடமையை நிறைவேற்று !
எவன் ஒருவன் தனித்திருக்கின்றானோ (ஐம்புலன் அடக்கி) அவன் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றான். ஆனால் எவனும் தனித்திருக்க ஆசை கொள்ளவில்லை. அவன் கர்மபலன் அவனை பந்தபாசத்தில் இணைத்து துன்பத்திற்கு ஆளாக்குகிறது. உன்னை நான் மோட்சத்துக்கு அழைத்து செல்ல வந்தேன். இந்த அற்ப மனம் பெயர், செல்வம், புகழுக்கே ஆசைப்படுகின்றது !
மனிதன் தன்னை அதிபுத்திசாலி என நினைத்துக் கொள்கின்றான். எறும்புக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை. நான் காற்று வழி ! என் பாதையில் வா ! மிகுந்த நிம்மதி கிடைக்கும். என்னை நினைத்தாலே, என் நாமத்தை சொன்னாலே, உனக்கு எந்த வழிபாடும் செய்யத் தோன்றாது. உன் ஆண்மா ஆர்ப்பரிக்காமல் நித்சலமாக இருக்கும் ! ஏனென்றால் உன்னுள் இருப்பது நான் !
என் போதனை புதிது ! தாய், தந்தையை வணங்கி வா ! அவர்களை மண்டியிட்டு வணங்கு ! நான் உனக்குள் இருந்து சிரிப்பேன். பின் நீ மஹேஸ்வர நிலையை அடைவாய். நான் உபநிஷத்துகளில் குறிப்பிடுவதும் அந்த ஒரே கருத்தை தான். என் கொள்கை, வேதாந்தம், சித்தாந்தம், அது தான் !
உன்னை உணர்வது தான் பகுத்தறிவு ! கடவுள் நிலையை கற்றுக் கொடுத்தால் வராது. எல்லாம் பிறவிப் பயன். என்ன தான் யோகா, தியானம், வழிபாடு செய்தாலும் உன்னை உணர முடியாது. துன்பம் வந்தால் மட்டுமே கடவுளை உணர்கின்றாய். மற்ற நேரம் கடவுள் இல்லை என்று கூச்சல் போடுகிறாய். எல்லாம் இயற்கை என்று சொல்கிறாய். இயற்கை என்றால் உருவானது. உன் விஞ்ஞானம் போல உருவாக்கப்பட்டது அல்ல.
ஆணையும், பெண்ணையும் படைத்தான். பிறகு இருவரும் சேர்ந்து பாவத்தை உருவாக்க வைத்தான். சில மனிதர்க்கு குழந்தையே இல்லை. ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் மலர்ச்சி. உணரடா ! இதற்கு உன் விடை என்ன ?
இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. உன் விஞ்ஞானத்தால் அணு குண்டையும், துப்பாக்கியும் செய்து மனிதர்களை அழிக்கின்றாய். எதையடா உருவாக்கினாய் ? உன் சட்டம் எல்லாம் பொய்யடா ! உன் சட்டம் எல்லாம் இறுதியில் நான்கு சட்டத்திற்குள் அடக்கம். (சவ பெட்டி).
அசையா பொருளை வணங்கி நீயும் அசைவற்று போகாதே ! நீ கற்ற கல்வி, பெற்ற செல்வம் எல்லாம் காலத்தோடு வருவதில்லை. நீ செய்யும் தர்மம் தான் உன் பின்னால் வருகின்றது. தர்மத்தை செய்யாவிட்டாலும் தர்ம சிந்தனையோடு இரு !
கும்பிட்டாய், கூத்தடித்தாய், குறை எல்லாம் போனதா ? நல் விதை (தர்மம்) விதைத்து சென்று கொண்டே இரு ! நான் அதை விருட்சமாக வளர்த்து பெரும் காய் கனிகளை தந்து உனக்கும் உன் சந்ததிக்கும் பெருக வைப்பேன்.
சோதனை என்று துவண்டுவிடாதே !
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். “வாடுகின்ற மலர் எல்லாம் எருவுக்கு உதவ கண்டேன். அந்த மலர் மாலைகளை கழுத்தில் போடும் சோம்பேறி எதற்குடா உதவினாய் என்று ? தழைத்த மரம் நிழழுக்கு உதவ கண்டேன். உன் தாடியும், குடுமியும் எதற்கடா உதவியது என்று ?“ சொல்வார்கள். “பெற்றோரை உயிரோடு வணங்காத சோம்பேறி பிணமாகத் தான் வணங்குகின்றான். ஒலியாகி, உயிராகி, உனக்குள் நானாகி, பின் உன் உயிர் என்னாகி ஏது கண்டாயடா நிம்மதி ?” என்று அடிக்கடி கூறுவார்கள்.
இருக்க போற்றாதவன் இறக்கப் போற்றுவான். என் தந்தையை பார்த்தவர்கள் கூட யாரும் உணரவில்லை. நீ எப்போது உணர்வாயடா ?
உன் மனம் ஆயிரம் புரவியின் வேகம் கொண்டது. அதை பிடித்து உன் அதிகாரத்தில் வைத்துக் கொள். உன் புலன்களை அதிகாரம் செய்து அடக்க முடியவில்லை. நீ பிறரை அதிகாரம் செய்து அடக்க பார்க்கின்றாய். எதற்காக ?
இந்த பூமியில் நீ பிறந்த வயிற்றை மட்டும் தான் மாற்ற முடியாது. மனைவி, தொழில், நண்பர்கள், வீட்டை மாற்றிவிடலாம். மனதும் அதே போல் தான். நீ நினைத்தால் மாற்றிவிடலாம்.
யாருக்கும் இங்கே நிலையான நிம்மதி இல்லை. இடுக்கு வழியாக சூரிய வெளிச்சம் வருகிறது. அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடி கொள்கிறது. உலகத்தில் யாரும் மகிழ்ச்சியாக இருப்பதை காணேன். ஒவ்வொருவனும், தானே மிக அழகு, தானே அதி புத்திசாலி என்று நினைப்பது போல, தானே அதிக துன்பமுள்ளவன் என்று நினைத்து கொள்கிறான்.
அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஒருவன் ஆணந்தமாக அமர்ந்து கொண்டிருந்தால் அது தான் யோகம் !
ஈரைந்து மாதங்கள் கருவறையில் வைத்து ஈன்றெடுத்து உலகத்திற்கு உனை காட்டி மானிட தத்துவத்தை உனக்கு ஊட்டினாலே உன் தாய் , அவளை மறந்ததால் நீ கஷ்டப்படுகிறாய் !
என்னையும் மறந்துவிட்டாய். தன் நிலை உன்னால் அறிய முடியாது. என் நிலை எப்போது அறிவாய் ? என்னை நினை ! நீ தெளிவாயடா !
மனிதர்க்கு தொண்டு செய் ! என் நெஞ்சில் உனை வைப்பேன், எப்போதும் !
நான் இநன்யா !

Wednesday, September 14, 2016

அவணன் தெரியா நீ, நான் உவணன் என்பதை மறந்தாய் ! என் பார்வை கூர்மை என்பதை பாவி நீ மறந்தாய். சிறார் போல் உன் அன்பில் இருப்பேன் ! ஏனடா நீ மறந்தாய் ?

Inanya Maha Munivar
15-09-2016
233அவணன் தெரியா நீ, நான் உவணன் என்பதை மறந்தாய் ! என் பார்வை கூர்மை என்பதை பாவி நீ மறந்தாய். சிறார் போல் உன் அன்பில் இருப்பேன் ! ஏனடா நீ மறந்தாய் ?
 குழந்தைக்கு கற்றுக் கொடு !
நான் கற்று உன்னிடம் பேசவில்லை ! கற்பினை அற்று பேசுகிறேன் !
அஃறினை தெரியாது அடிசுவட்டை பற்றி விளம்புகின்றேன். நீ விதைத்த விதை (குழந்தை) வீரியமாக இருப்பதும், வீணாய்ப் போவதும் உன் கையில் மட்டும் தான் ! உன் குழந்தைக்கு வணங்குவதற்கும், வாழ்வதற்கும், பெரியோரை துணை கொள்வதற்கும் கற்றுக் கொடு ! சக மனிதனை நேசிக்க குடும்ப உறவுகளை அன்பில் அரசாள கற்றுக் கொடு.
பயிரை பக்குவமாக வளர்க்கும் உழவனை போல உழைக்க, ஞானத்தை அறிய, கற்றுக் கொடு ! வைராக்கியத்தையும், லட்சிய பாதையை அமைத்து கொள்ளவும் வீரியமாய் சொல்லிக் கொடு. நன்மை, தீமை எதுவென்று சொல்லிக் கொடு ! வாழக் கற்றுக் கொடு !
மனதை உற்று நோக்கவும், நல் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்ளவும், அன்பையும் பாசத்தையும் கற்றுக் கொடு.
பக்தியையும், பயத்தையும் கற்றுக் கொடுக்காதே !
உன்னால் எதுவும் முடியுமடா என்று அறியும் வயதிலே ஆசையாய் கற்று கொடு ! வீரியமாய் இருப்பதற்கும், விவேகமாய் வாழ்வதற்கும் நீ வீம்போடு கற்றுக் கொடு. உண்மை பேச, உரக்க பேச, நெஞ்சுரமாக பேச, நிஜ உணர்வை சொல்லிக் கொடு !
வீழ்ந்தால் எழுவதற்கும், வீரியமாக இருப்பதற்கும், சத்திய வழியை அடைவதற்கும் நல் குருவை தேடி நலம் வாழ சொல்லிக் கொடு. இன்பம், துன்பம் தான் வாழ்க்கை. அந்த துன்பத்தை துவஷம் செய்ய கற்றுக் கொடு !
சான்றோன் ஆக்குவது தந்தை கடனே !
ஊர் மெச்ச வாழ வைப்பது தாயின் கடனே !
பிறந்த குழந்தை தாய், தந்தை அரவணைப்பு இல்லாமலே பாவியாக திரிகின்றது. தாய் பாலை நுகராத குழந்தை தறிகெட்டு போகின்றது. பெரியோர் துணை இல்லாத குழந்தை சக மனிதனை தேடிச் சென்று படுகுழியில் வீழ்ந்து பாழ்பட்டு நிற்கின்றது.
கோழி தன் குஞ்சை இறக்கைக்குள் வைத்து வளார்ப்பது போல நீயும் வளர்த்து வாசமுள்ள மலராக்கு ! எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித் தான் வாழ்க்கை வரைமுறை என்பதை சொல்லிக் கொடு !
உன்னில் இருக்கும் கெட்ட பழக்கத்தை முதலில் மாற்று ! உன்னை பார்த்து தான் உன் பிள்ளை முதலில் ஆரம்பிக்கின்றது. முதலில் உன் குழந்தைக்கு ஒரு குருவாய் இரு ! பின் அவன் திருவாய் மலர்வான் நல் குருவால் !
பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்டது. அது கடவுளின் கையில் ! இடையில் வாழ்வு உன் கையில். நீ எதை மனதில் நினைத்து உன் குழந்தையை விதைக்கின்றாயோ, அதன் தாக்கம் தான் முளையில் வளரும்.
இங்கே இந்த யுகத்தில் எப்படி இருக்க போகிறாய் என்பது உன்னோட விருப்பம். மகானாக மாறுவதும், மனிதனாக வாழ்வதும் உன் கையிலே ! இயற்கையை நேசிக்க, அதன் சிறப்பை, அறிவை புரிந்து கொள்ளும் முயற்சியை ஆசானிடம் கற்றுக் கொள்ளும். தாலாட்டும் போதே தன்னம்பிக்கையை தாய்ப்பாலோடு ஊட்டி கற்றுக் கொடு !
படைத்தவன் கை பாகுபாடு பார்ப்பதில்லை. பார்த்தவன் நீ தான் பாகுபாடு பார்க்கின்றாய். பகுத்தறிந்து பார்த்து புரிந்து கொள்ள முயற்சி செய். அரிதாரம் நோக்காதே. அதிகாரம் கொண்டு உன்னை ரணப்படுத்தும் உன் ஆண்மா. மறந்தும் தீவினையை நினைக்காதே.
பிறக்கும் குழந்தை இரண்டு வயது வரை கடவுளை பார்த்து சிரிக்கின்றது. பின் தலையில் அடித்து அழுகிறது. சிற்றறிவு வளர வளர மனிதம் இல்லாமல் மலர்கின்றது வாசமில்லாமல் ! குழந்தையின் தலையில் பாண்டீத்யம் எனும் குப்பையை சேர்க்காதே ! குழந்தைக்கு நல் தாயாய், நல் தந்தையாய், குருவாய் இரு ! உன்னை தெய்வம் என்று வணங்கும் !
இனி அதிசய குழந்தைகள் பிறக்கும். வயிற்றில் உள்ள சிசு பேசும். அது உனக்கு போதனை செய்யும். இது நடக்கும் சத்தியமாக !
உழைப்பும், உதவியும் தான் கடவுளை அடைய வைக்கும் என்று குழந்தைக்கு சொல்லிக் கொடு ! ஒழுக்கமாகவும், சுத்தமாகவும் இருக்க கற்றுக் கொடு ! கடவுள் ஒழுக்கம், சுத்தத்தில் தான் இருக்கின்றான்.
பெற்றோரை மதிக்கும் பிள்ளை, பெரியோரை துணை கொள்ளும் பிள்ளை, பெறு வாழ்வு வாழும் இங்கே ! சத்தியத்தின் பாதையில் நடக்கும் குழந்தை தரணியிலே போற்றப்படும் ! இந்த ராஜராஜன் பிரபஞ்ச இளவரசன் இநன்யாவின் தர்மத்திலே ஞான குழந்தைகள் நிறைய ஜணிக்கும் !
உன் பெயர் யுகம் இருக்கும் வரை வரலாற்றில் நிலைக்க தர்மம் செய்யக் கற்றுக் கொடு. குடும்பம், கூடி வாழ்ந்தால் தான் இங்கே பேரின்பம். இந்த புண்ணிய பூமியில் வாழாமல் எங்கெல்லாமோ ஓடுகின்றான். ஓடி ஓடாய் தேய்ந்து அன்பில்லாமல் கரைகின்றான்.
கல்யாணத்தில் கூடுகின்றவன் பின் இடுகாட்டில் கூடுகின்றான். மதத்தை விட மனித நேயம் தான் ஜெயிக்கும். மிருகங்கள் பிறந்தவுடன் எழுகிறது. இந்த மனிதனுக்கு தான் நடக்க ஓராண்டு, பேச ஓராண்டு, தன்னை புரிய பல ஆண்டுகள் ஆகின்றன. அன்பை தொலைத்தவன், அதிகாரம் தான் கொண்டு அம்மனமாய் திரிகின்றான் ! உழவனும், மீனவனும் ஏமாற்றவில்லை. படித்தவன் தான் ஏமாற்றுகிறான்.
நன்மையையும், தீமையையும் உன் செயலை பார்த்து தான் உன் குழந்தை கற்றுக் கொள்ளும் ! உன் குழந்தைக்கு நீ ஒரு பாடமாக இரு ! நீ முயன்று வெற்றி பெற கடவுளை துணை கொள் !
கடவுள் அன்பானவன் ! கருணைமிக்கவன் ! தியாக உணர்வுள்ளவன் ! தேடு ! அந்த காலத்தின் நாயகன் என் போல ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி நல் வழிப்படுத்துவான்.
கற்றுக் கொடு நல்லவற்றை ! காலம் உனை வணங்கும் !
இந்த காளவன் எப்போதும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் துணை நிற்பேன்.
ச்ருதி இழுமு நான் !
நான் இநன்யா !

Wednesday, September 7, 2016

நான் சாயா நிழல் அல்ல ! என்னை நோக்கு ! நீ சாரூப்ய சொரூபத்தின் நிஜத்தில் உண்மை காண்பாய் ! கவி, புலமை, தத்துவம் என்றால் என்ன ?


Inanya Maha Munivar
232 நான் சாயா நிழல் அல்ல ! என்னை நோக்கு ! நீ சாரூப்ய சொரூபத்தின் நிஜத்தில் உண்மை காண்பாய் ! கவி, புலமை, தத்துவம் என்றால் என்ன ?
கவி – நட்சத்திரம் !
புலமை – காற்று !
தத்துவம் – தரை, தானியத் தன்மை !
இந்த மூன்றையும் அறிந்தவன் ஞானியாகின்றான். கவியை அறிந்தவன் காலத்தை அறிவான். ஒரு கவி நூற்றிப் பதினொன்று மனிதர்களை கண்கானிக்கின்றது. காற்றும், நீரும், உனை இயக்க உன் அசைவுகளை நட்சத்திரமே கண்கானிக்கின்றது. நட்சத்திரத்தின் அடிபாகத்தை மட்டும் தான் நீ பார்க்கின்றாய் ! ஆறு காலம் தூண்களாக எண் கோனத்தில் இருக்கின்றது. மேல் பாகம் கூம்பு வடிவில் (பிரமிடு வடிவில்) இருக்கும்.
நட்சத்திர காண்ட முனிவர்கள் உன்னை கண்கானிப்பதை மறந்தாய். ஒலியில் விதை உருவாகி வண்டு மூலமாக யுகம் வந்தாய் ! படைப்பின் சூட்சுமம் தெரியாதவனே, எல்லாம் அறிந்ததாக உளர்கிறாய்.
மாம்பழம் தத்துவம் அறியாது விளம்புகின்றாய் !
பதினென் தத்துவம் அறியாது பாழ்பட்டு நிற்கின்றாய் !
குயில் கவியாகவும், காக்கை புலமையாகவும், மனிதன் தத்துவமாகவும் இருக்கின்றான்.
குயில், எருமை அசுர குலங்கள் வாழும் இடம். எருமை வெண்ணெய் கொண்டு சிலைக்கு அடியில் தடவி அதை வணங்கி அசுர எண்ணம் கொண்டு அலைகின்றாய். குங்கிலியத்தில் குறை ஒன்று இருப்பதை மறந்து கும்பிட்டு திரிகின்றாய். இந்த யுகம் போல் மேலே மூன்று காண்டங்கள் உண்டு. அங்கே உன் போல் மனிதர்கள் உண்டு. அங்கேயும் கர்மா தர்மாக்கள் உண்டு ! மீறிய பாவம், மீறிய தண்டனைக்காக இங்கே இந்த யுக நரகத்தில் பிறக்கின்றாய். நீ உணராதது ஏனோ ? இந்த கவி, புலமை, தத்துவம் மூன்றும் உப்பிற்குள் அடங்கிவிடும்.
அசுர, அரக்கர்களை என் தந்தை வதம் செய்தார்கள். கொடிய ராட்ஷச தடாயவனை என் அன்னை, என் தந்தையின் துணை கொண்டு அழித்தார்கள். மாய லோகத்தில் மாயையை அறியாது வாழ்கின்றாய்.
ஒரு சூரியன் ! ஒரு நிலா ! கோடான கோடி நட்சத்திரங்கள் !
படைப்பின் ரகசியம் அறியாதவன் நீ ! ஏன் இந்த விகிதசாரம் ?
உணர்ந்தாயோ நீ ?
பதினெண் தத்துவத்தில் சரணாகதி தத்துவம் தேவை இல்லை.
நாம தத்துவம் நான் உரைக்கின்றேன் ! சொல், செயல் தத்துவமே உயர்ந்தது. இங்கு கர்ம குணங்கள் ஒன்பது உள்ளன ! தர்ம குணங்கள் பதினெட்டு உள்ளன !
என் பலம் முழு பலம் ! மாயைகளுக்கு ¾ பலம் ! சித்தர்கள், ஞானிகளுக்கு பாதி பலம் ! அசுரன், தடாயவனுக்கு ¾ பலம் !
என் பலம் பெரிது ! என் படையும் பெரிது !
உப்பு, தண்ணீரில் கரைந்து பிறருக்கு உதவக் கண்டேன். தன்னை கரைத்து பிறருக்கு உதவும் உப்பை போல இரு !
குணம் கொண்ட ஆத்மாவுக்கு குறை ஒன்றும் தான் தெரியாது ! உன் குணம் நீசனாக ஆனது. உன் உடலில் நூற்றிப்பதினொன்று துவாரங்கள் உள்ளன. அதில் நூறு மறைக்கப்பட்டுள்ளன ! அதில் பதினொன்று துவாரங்கள் இயங்கும் சூட்சுமம் ! அதில் ஆறு ஞான துவாரங்கள் உள்ளன ! அவைகளை அறிய முற்படு ! உன்னை யாரென்று உணர வைக்கும் !
ஆறையும் இயக்கும் தத்துவம் எனக்குள்ளே ! ஆறு பேராத்மா என்னை இயக்கும் சூட்சுமம் ! இதை உணர்ந்து அறிந்தால் உனக்கு நன்மை !
கர்மா என்ற மதி கெட்ட மனித குலத்திற்குள், மனமறிந்த ஞான குலம் ஒன்று தோன்றும் ! அதை இநன்யாவின் சதுரங்க சேனா படை இயக்கி துணை நிற்கும் !
அழிவற்றது வேதம் ! அழிவற்றது சப்தம் ! அழிவற்றது விதை ! அழியும் மனிதன் எதையும் அறியா வாழ்கின்றான் !
வெற்று உடலுக்கு வேஷம் போடுகின்றவனை நம்பாதே ! வெற்று சிலைக்கு நீ புகழாரமும் சூடாதே ! தேவதைகளுக்கு யாகம் வளர்க்கின்றாய். பித்ருக்களுக்கு தர்ப்பணமும், தெய்வத்திற்கு பூஜையும் செய்கின்றாய்.
கடவுளுக்கு என்ன செய்தாய் ? நீ என்ன செய்தால் கடவுள் உன் பக்கத்தில் வருவான் என்று என்றாவது யோசித்தாயா ?
நான் கவிபாட வரவில்லை. புலமை பாட வரவில்லை. கவி பாடி, புலமை பாடி, உன்னிடம் கையேந்தி அற்ப பரிசும் பெற வரவில்லை. என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் கட்டளைப்படி தர்மத்தை காத்து அதர்மத்தை வேரோடு பிடுங்கி எறிய வந்தேன் !
நான் வென்றவன் !
இந்த ராஜராஜன் இநன்யா எப்போதும் தோற்பதில்லை. சத்தியத்தின் வாசல் நான் ! அதன் திறவுகோள் என் வலகரத்திலே ! வாழ்வும், வசந்தமும் நானடா ! வைகறை துயில் எழுந்து பறவைகளின் கண் விழிப்பில் என்னை நோக்கடா ! வாழ்வாயடா !
உன் வழிபாடுகள் என்ன ? உபஸ்கரம் கொண்டு இல் அழுக்கை போக்கினாய். உன் உள் கரம் உதவாது இருப்பது ஏனோ ? என் அபயகரம் காணாமல் இருப்பதும் சரி தானா ? கடவுளுக்கு ஒரு துளி தோயம் போதும். அவன் நெஞ்சத்தில் உனை வைப்பான்.
உன் துன்பம் போக மரத்தடியில் அமர்ந்து பார் ! இரவில் நட்சத்திரங்களை ஆசை தீர பார் ! உன் மனம் அடங்கும் ! மதி கெட்ட எண்ணங்கள் மாயம் போல மறையும். இந்த மாயவன் இநன்யா எப்போதும் துணை இருப்பேன், பயப்படாதே !
உருவாக்கும் உன்னதம் நான் !
நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Friday, September 2, 2016

புணித மாதம் செப்டம்பரில் நம்மை உணர்ந்து, கடவுளை நெருங்கும் வாய்ப்பு மிக அதிகம். இந்த மாத கடவுளின் செய்தி. படித்து பயன் பெறுங்கள். இரவில் தலையனை இல்லாமல் கீழே தரையில் படுத்து நித்திரை கொள்ளுங்கள். நன்றி. கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம

231 புணித மாதம் செப்டம்பரில் நம்மை உணர்ந்து, கடவுளை நெருங்கும் வாய்ப்பு மிக அதிகம். இந்த மாத கடவுளின் செய்தி. படித்து பயன் பெறுங்கள். இரவில் தலையனை இல்லாமல் கீழே தரையில் படுத்து நித்திரை கொள்ளுங்கள். நன்றி. கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Thursday, September 1, 2016

விசித்தியின் சசிகரத்தின் கோடியில் ஒரு அணு நானடா ! ஸ்வேத முழாசில் தூயவன் நானடா ! நான் மாயைகளோடு இருக்கின்றேன். மானிடரோடு அல்ல !


Inanya Maha Munivar
01-09-2016
230விசித்தியின் சசிகரத்தின் கோடியில் ஒரு அணு நானடா ! ஸ்வேத முழாசில் தூயவன் நானடா ! நான் மாயைகளோடு இருக்கின்றேன். மானிடரோடு அல்ல !
மாயவலை
நுணியில் புழு வைத்து மீனுக்கு தூண்டில் போட்டால் முள் இருப்பதை மறந்து புழுவை உண்பதற்கு ஓடி வரும், மாய வலையில் வீழ்ந்து மாளப்போவதை மறந்து ! தனக்கு விரித்த வலையில் வீழ்ந்து சாகப் போகிறோம் என்று அதற்கு தெரியாது ! அதே போல கடவுளின் மாய வலையில் கர்மாக்கள் சிக்கி திணறி தீஞ்சுடர் போல எரிகின்றான்.
இந்த இநன்யா யார் என்று தெரியாமலே நான் விரிக்கும் மாய வலையில் கர்மாக்கள் வீழ்ந்து நொடி நொடியாய் துன்பம் அனுபவிக்கின்றனர்.
இநன்யா விரிக்கும் வலை மாயவலை !
தர்மாக்களை வாழ வைக்கும் காந்த வலை !
கர்மாக்கள் வீழ்ந்து போகும் சாயா நிழல் போன்ற சதிவலை !
புரிந்து கொள்ளடா ! புணிதன் நானடா ! இநன்யா வைக்கும் பரீட்சையில் ஒரே முறையில் தேறிவிடு ! ஒரு முறை தவறவிட்டால் மறுமுறை பரீட்சை கடினமாக இருக்கும். என் பாச வலையில் வீழ்ந்தால் மீண்டும் பிறப்பில்லா உன் சரீரத்திற்கு நோயில்லா வலை கிடைக்கும் !
இரந்த நிலை கொண்டு இறையை தேடு !
இறைவன், ஆண்டவன், கடவுள் உனக்கு இறந்த நிலை அறிய வைப்பார்கள் ! பின் நீ உன் உயிர் நிலை அறிந்து பிறந்த நிலை அறிவாய் ! மாயை என்றால் என்னவென்று கேட்கின்றான். மேலிருந்து வரும் போது என்னை மறக்காமல் இருப்பதாக சொல்லி வந்தாய் ! நீ பாவம் கழித்து உடனே வந்துவிடுவாய் என்றும் சொல்லி வந்தாய் ! ஆனால் இங்கே வந்து, என்னை மறந்து, சம்சார கடலில் விழுந்து தத்தளிக்கின்றான் ! இந்த மாயவனை அறியாது வாழ்கின்றாய். நான் விரித்த வலையில் கர்மாக்கள் சிக்குண்டு சிதறுண்டு பிக்கில்லா போகக் கண்டேன்.
இனி தர்மாக்கள் வாழும் !
தர்மாக்களுக்கு பெருஞ்சோதனைகளும் துயர்களும் வந்தாலும் உடனே நீங்கிவிடும். கர்மாக்கள் அணு அணுவாய் அனுபவித்து உடல் சாகக் கண்டேன். மாயா லோகத்தில் நான் மாயைகளோடு வாழ்கிறேன். நீ மாயையில் சிக்கி தவித்து மனிதம் தொலைத்து அலைகின்றாய்.
கடல் அலை கரை தாண்டி வராதது மாயை ! மெல்லிய திரை ஒன்று உன்னில் மறைந்திருக்க அதை நீக்காமல் நீ வித விதமான சாயத்தில் ஆடை உடுத்தி அலங்கோலமாகத் திரிகின்றாய்.
நான் மாயை ! ஆனால் மனிதன் போல் நான் ! என் ஔடதம் தெரியாது ஆர்ப்பரிக்கின்றாய். எனக்குள்ளே ஆணந்தம் இருப்பதை புரியாது வாழ்கின்றாய். என் நாமம் கல்லையும் கவி பாட வைக்கும். கன இரும்பையும் நடனமாட வைக்கும். உணர்ந்து பார் மனித குலமே ! உணர்ந்து உவகை கொள்ளடா உன் உள்ளொலி உனை உற்று நோக்கும்.
உனக்கு வேண்டிய நிம்மதி, செல்வம், ஆணந்தம் அனைத்தும் தரும் ! பிணி , பீடை இல்லா வாழ்வை தரும் ! பில்லி, சூன்யம், பெரும் பகை அகல வைக்கும். எமபயம் போக்கும் ! ஆராய்ச்சி செய்யடா !
எந்த சனியும், எந்த கோளும் தீண்டாது. எந்த சாத்தானும் உன்னை தீண்டமாட்டான். ஆராய்ச்சி செய் !
என் ஆணந்த நாமத்தை உணர்ந்து சொல் ! உன் உறக்கம் கலைந்து உண்மையாய் தெளிவு வரும் !
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று சொல்வாய். நான் உனை திக்கற்றவனாக விடமாட்டேன். எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்ட வைப்பேன் ! நீ என் உறவு ! எந்நேரமும் எனை அன்பொழுக அழைத்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வருவேன் ! காலத்தை உன் காலடியில் வசமாக்குவேன்.
நானும், என் சத்திய வார்த்தையும் என்றுமே தோற்பதில்லை. சுக்கல் பழத்திலே நுய்யுருவம் கொண்டு சாப்பிடு ! உன் மாயை தெளியுமடா !
என் நாமம் உன் மாய மயக்கத்தை தெளிவாக்கும். உன் மாய வலையை அறுத்தெரியும். சொல்லிக் கொண்டே இரு ! உன் துயரம் காணாமல் போகும் நீர்க் குமிழி போல !
உன் கண்களை மூடினாலும் உனக்கு எதுவும் தெரியாது. கண்களை திறந்து பார்த்தாலும் எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமல் என்னை ஏளனிக்கிறாய். எல்லாம் தெரிந்து நான் மனிதன் போல நடமாடுகின்றேன். எப்போது உணர்வாயடா ?
உன் உயிரை நீயே மாய்க்க நினைக்கும் போதும், ஒருவனை அழிக்க நினைக்கும் போதும் அந்த உயிர் 3-3/4 நாழிகை முன்பே மேல் லோகம் வந்துவிடுகிறது. இறந்த உடலை பார்த்து அழுகின்றாய். இறந்த உடலை சுட்டேன் என்கிறாய். கொன்றேன் என்று கூக்குரலிடுகின்றாய். செத்த பாம்பை அடித்துவிட்டு கொக்கரிக்கின்றான் தான் பலவான் என்று !
பாம்பு புற்றுக்கு பாலை ஊற்றி பாவியாக அலைகின்றான். இந்த மாயையை அறியாது வாழும் மானிடனே, என்ன சொல்வேன் உன் அறியாமையை ? அற்ப மனிதன் விரிக்கும் மாய வலையில் சிக்கிவிடாதே ! மதம் என்ற போர்வை போட்டு வேஷம் போட்டு ஏமாற்றும் கயவர்களை பின் தொடராதே !
உன் உழைப்பை மேன்மையாக்கு ! நான் உனை கைப்பிடித்து கரை சேர்ப்பேன். இந்த யுகம் நீர் சூழ்ந்தாலும் உனை நான் கரை சேர்ப்பேன். நீ யார் ? நான் யார் ? உன் உறவுகள் எல்லாம் யார் ? இது தான் மாயை ! புரிந்தவன் அசைவற்று ஆளுமையை தேடுகின்றான் ! புரியாதவன் புத்தி கெட்டு புலம்புகின்றான்.
மனித கூட்டுக்குள்ளே கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து இந்த பொம்மை கூட்டை இயக்குவதும் மாயை தான் ! மாய லோகத்தை அறியாது மதி மயங்கி அலைகின்றாய். சித்தர்களை தேடி ஜீவசமாதிகளை தேடி, மலையை தேடி, மதி கலங்கி அலைகின்றாய். எப்போது உனை உணர்ந்து, நீயும் சித்த சாயல் பெறுவாயடா ?
உணரடா !
உன் மாயையை விலக்க எப்போதும் இந்த மாயவன் துணை இருப்பேன் !
நான் மாயவன் !
நான் இநன்யா !