98 யாகவா முனிவர் சொன்னதும் நடந்ததும்
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
யாகவா முனிவர் சொன்னதும் நடந்ததும்
பக்தி, கடவுள்
பக்தி வெறி கொண்டவனும்
பத்வி வெறி கொண்டவனும்
இடுகாட்டில்தான் நிம்மதி காண்பான்!
புத்தியுள்ளவனுக்கு
பக்தியதுதான் வேண்டாம்.
1941-லிருந்து கோவில்களுக்கு அழிவு
ஆரம்பமானது
முனிவர்கள் கொன்று புதைத்து அதற்குமேல்
கோயில், மண்டபங்களைக் கட்டினார்கள்
அசுரர்கள் / அரக்கர்கள், தடாயர்கள்.
உயிரில்லாப் பொருளிடம்
வாதாடிக் கண்டபலன் எதுவோ?
எதிர்காலம்
பகலில் மூடி இரவில் கடை திறப்பான்
நரி நாயைத் துரத்தும்
திருடன் போலீசைத் துரத்துவான்
பூமி அதிர்ச்சி உலகமெங்கும்
மதக்கலவரம் உலகமெங்கும்
பஞ்சம் தலைவிரித்தாடும்
பயிர்வாடும் உழவன் வாடுவான்
பச்சிளங்குழந்தை வாடும்
தாயும்தான் வாடுவாள்.
1992-லிருந்து 11 ஆண்டுகள் பஞ்சம்
பஞ்சத்தைக் கொடுத்து
உடல் திமிரை அடக்கி
உலகைத் திருத்துவேன்!
துன்பம் வந்தால்தான்
திருந்துவார் மனிதன்.
கோவில் குளங்கள்
இடி மின்னல் தாக்கி அழியும்
ஒரே மதம் வரும்.
பால் அபிஷேகம் செய்தாலும்
பன்னீர் அபிஷேகம் செய்தாலும்
கேடு வந்தது வந்ததுதான்.
தங்கம் கிடைக்கும்
தான்யம் கிடைக்காது
1995-க்குள் இது நடக்கும்.
துஷ்டனுக்கு கெட்டதுதான்
செய்யத் தெரியும்
துஷ்ட சாம்ராஜ்யம்
அழிந்து விட்டது
இனிவரும்
சாம்ராஜ்யம்!
1993-ல் பெண்கள் தெருவில் செல்ல முடியாது.
1995-ல் ஆண்கள் தெருவில் செல்ல முடியாது.
உலகம் பூராவும் எந்த அரசும் நிலையாக இருக்காது.
இனி வருங்காலம் -
பந்தடித்து நீ ஓட இயலா காலம்
பந்து உருண்டு ஓடினாலும்
நீ ஓட இயலா காலம்
உண்ண உணவின்றி
தத்தளிக்கும் காலம்.
பந்துக்கு உயிர் இருக்கும்
அடிப்பவனுக்கு உயிர் இருக்குமா?
உடல் கெட்டுப் போகும் காலம் இனி.
மலை ஜாதி வாழ்வும்
மனித ஜாதி வாழ்வும்
இனி ஒன்றுதான்
ஆணும், பெண்ணும்
பார்த்து உடனுக்குடன்
நாள் நட்சத்திரம் பார்க்காமல்
மரத்தடியில் திருமணம் செய்வார்கள்
இனி வருங்காலம் இது நடக்கும் பார்!
இனி வருங்காலம்
உழவனுக்குப் பெரும் இன்பம்
கற்றவனுக்குப் பெருந்துன்பம்!
கடலுக்குள் முனிவர்கள் வாழ்ந்த
குகைகள் மறைந்துள்ளன
அதனால் கடலில்
பூகம்பம் வரும்
அந்த குகைகள் எல்லாம்
வெளிவரும்!
பிணம் தின்னும் ஜாதி
2000 ஆண்டுகளுகு
முன்னர் இருந்தது!
இப்போது மீண்டும்
பிணம் தின்னும்
காலம் வந்துவிட்டது!
இந்தியா, சீனா, ஜப்பான்
மூன்று நாடுகளும் தான்
உலகத்திற்கு பிச்சை
போடும் காலம் இனி மேல்.
இனிமேல் மின்னல் இடி
எல்லாம் வித்தியாசமாக
இருக்கும். ஆகாய அற்புதங்கள்
தெரியும். ஆகாயத்தில்
நடந்து செல்வேன்
நிலாவில் கால்மேல்
கால் போட்டு அமர்ந்திருப்பேன்.
மின்னல் வெட்டி பலர்
கண் கெடும்.
11.6.92 லிருந்து நானும்
என் தவபுத்திரனும் (இனான்ய முனிவர்)
சேர்ந்து செய்யும் துஷ்டவ்ங்களைச்
சகிக்க முடியாது.
கர்மாவைத்தான் அழிப்போம்
தர்மாவை ஏதும் செய்ய மாட்டோம்.
நாத நத பிரண பிரணை
பிரணவ பிரணனா
இந்நாள் ( நாள் 16.8.92)
18.8.92 இந்நாள் முதல்
யுகத்தில் இவ்வுலகில்
இவையெல்லாம் தாழிவாம்.
இந்நாளிலிருந்து (18.8.92)
இடி மின்னல் தாக்கி பல கோடி
மடிவர். சூறாவளி காற்றில்
பல கோடி பேர் மடிவர்.
நெருப்புப் பிழம்பால் பல
கோடி பேர் மடிவர். யாகப்
பொழிவு நீரால் பலகோடி பேர்
மடிவர். பஞ்சங்கள் தலைவிரித்தாடுமாம்
தங்கமும் தெருவில் விலை கறி
விற்பானாம். தானியமும்
கிடைக்காப் பொருளாகும்.
தானியப் பஞ்சங்கள், உலகமெங்கும்
அழுகுரலும் கூச்சலாம்.பறவையும் அழும்
மானிடரும் பஞ்சத்தால் அழுவர்.
நீ நடந்து செல்லும் தெருவில்
நடை பிணங்களைத் தாண்டிச்
செல்வீர். சற்றும் கலக்கம் வேண்டாம்.
தயக்கம் வேண்டாம்.
அரச சிம்மாசனங்கள் எல்லாம்
அலங்கோல ஒப்பாரிகளாகும்
இக்காலம் 11.11.92 முதல் உலகமெங்கும் 2003 வரை
பேரழிவாம். அசுரபலம்
கொண்ட மானிடரார் அன்றே அழிவர்.
தர்மம் செய்த்வர் தலைநிமிர்ந்துதான்
நடப்பர். தர்மம் செய்யாதார்
தலைகவிழ்ந்துதான் நடப்பர்.
தர்மத்தைச் செய்தார் இன்புறுவர்.
தர்மத்தைச் செய்யாதார்
பிணிபட்டு துன்புறுவர்.
கடலிலே பூகம்பம் வெடித்துச்
சிதறும். அக்கினிக் குழம்பு சிதறும்.
ஆகாயத்தில் பறக்கும் தட்டில்
பல கோடி முனிவர்கள் உலவி வருவர்
அன்றே யாகவா முனிவரைத்
தெளிவாகக் கூறுவர்.
இனி வரப்போகும் காலங்கள்
முனிவர்களின் காலங்கள்.
பறவைகள் அழும். நீ வளர்க்கின்ற
பசுவும் அழும். நீ பெற்றெடுத்த
குழந்தைகள் பிரிந்தோடி அலையும்.
விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம்
கெடும். ஓலைச் சுவடியின் நாதங்கள்
ஒலிக்கும்.
யா என்றால் பினி ஓடும்.
க என்ரால் பஞ்சங்கள் தலைதெறிக்க ஓடும்
வா என்றால் வசந்த மழை பொழியும்
முக்கால் பாகம் மறைக்கப்பட்டு
கால்பாகம் தான் எழுதப்பட்டுள்ளன
ஏக வினா விட உண்டு!
11.6.92 – 11.11.92 க்குப் பின்னர்
பஞ்சதாண்டவம் உண்டாகும்
பள்ளிகள் மூடப்படும்
நீதிமன்றங்கள் மூடப்படும்.
பறக்கும் தட்டினால் வரும்
வினையை எவராலும்
தடுக்க இயலாது.
பொற்காலம் தானில்லா
பொல்லா நயவஞ்சகக் காலம்
உடல் அழியும் காலமடா
இனிவரும் காலம்!
No comments:
Post a Comment