104 யாகவா முனிவரின் ஆஸ்ரமம்
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
பரந்த மணல் திடல் — பெரிய பெரிய விருக்ஷங்கள் — அமைதி பொங்கும் சூழ்நிலை — இனிமையான தெய்வமணம் கமழும் மென் காற்று — ஆஸ்ரமத்திற்குள் நுழைகிறேன் நான். வா, சௌந்தரம் என்ற கனத்த குரல் ஒலிக்கிறது. நான் யாகவா முனிவர் முன் நிற்கிறேன். அப்படி உட்கார் என்று அவர் சொன்னவுடன் நான் மெதுவாக அடக்கமாக அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்கிறேன். தர்மம் செய்தவந்தான் உயர்ந்தவன். கூன்,குருடு, செவிடு, ஏழை மக்களுக்கு உதவுபவந்தான் உயர்ந்தவன். நீ உயர்ந்த பிறவி. உதவப் பிறந்தவன் நீ. இங்கே வந்து உட்கார் என்று சொல்லி மெத்தை – திண்டு இருக்கும் பக்கம் கை காட்டுகிறார். பேச்சோடு பேச்சாக, வெகு சாதாரணமாக, நீ முற்றின விதை, இந்த விதை முளைக்காது என்றும் என்னிடம் அவர் சொல்கிறார். அதன் உள்ளார்ந்த அர்த்தம் எனக்கு சட்டென்று புரியவில்லை. இனிப் பிறவா வரம் வேண்டும் முருகா என்ற என் வாழ் நாள் முழுதுமான முறையீட்டினையே யாகவா முனிவர் இப்படிச் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன்..
சௌந்தரம், நேற்று ஸ்டுடியோவில் உன்னால் பாட முடியவில்லையாமே? குரலில் நடுக்கம் இருந்த தாமே? கவலைப் படாதே. பத்தே நிமிடத்தில் சரி செய்து விடுகிறேன் என் சொல்லி என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார். ஆல், அரசு, வேம்பு என்று பல்வேறுபட்ட மரங்கள் கொத்துக் கொத்தாக செறிந்து இருந்த அந்த வனத்திலே ஆயிரக்கணக்கான பக்ஷி ஜாலங்கள் மேலே பறந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் உனக்குக் கை கொடுக்கும் என்றயாகவா முனிவர் ஏ பக்ஷிகளா கலைஞன் ஒருவன் வந்திருக்கிறான். அவனைப் பாராட்டுங்களேன், என்கிறார். என்ன ஆச்சரியம். கொத்துக் கொத்தாக அவ்வளவு பறவைகளும் ஒரே கூட்டமாக மேலே எழும்பிப் பறந்து என்னையும், யாகவா முனிவரையும் மூன்று முறைவலம் வந்து பிறகு மரங்களில் அமர்கின்றன.
உள்ளே சென்ற யாகவா முனிவர் ஒரு செம்பு ஜலம் கொண்டு வருகிறார். ஒரு பெரிய பொட்டலம் ஒன்றையும் பிரிக்கிறார். உள்ளே விபூதி இருக்கிறது. அந்த விபூதி மொத்தத்தையும் அந்த செம்பு ஜலத்தில் கரைக்கிறார்.
கண்ணாடியைக் கழற்றிக்கொள் என்று என்னிடம் சொல்லி யாகவா முனிவர் அந்த செம்பு ஜலத்தை மூன்று முறைதன் கைகளில் எடுத்து என் முகத்தில் வேகமாக விசிறி அடிக்கிறார். என் கைகளை நீட்டச் சொல்லி எனது உள்ளங்கையில் கொஞ்சம் கொஞ்சமாக அதே நீரை வார்த்து எனனி உட்கொள்ளவும் சொல்கிறார். மிகவும் இனிமையான மலைத் தீர்த்தம் போன்று அது இனிக்கிறது. மூன்று முறையும் அந்த நீரை உட்கொள்கிறேன். செம்பிலிருந்து மீதி ஜலத்தை என் கால்களில் கொட்டுகிறார். காலைத் துடைத்துவிடாதே என்று சொல்லி என்னை அருகில் இருந்த மெத்தையில் அமரச் சொல்கிறார்.
பத்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. மீண்டும் யாகவா முனிவர் என் அருகே வருகிறார். நான் வீருட்டென எழுகிறேன். அவரைக் கைகூப்புகிறேன். கைகளிலோ, கால்களிலோ நடுக்கம் சிறிதும் கிடையாது. நெடுஞ்சாண் கிடையாக அவர் கால்களில் விழுகிறேன். குரலிலிருந்த நடுக்கம் முற்றிலுமாக விலகிவிட்டதை உணர்கிறேன். முருகப் பெருமானைப் போற்றி நானே எழுதி இசை அமைத்திருந்த எத்தனை முறைகள் பார்த்தாலும் இனிக்குதையா உன் உருவம் என்ற பாடலை மனமுருக யாகவா முனிவர் முன் கணீரென்றகுரலில் பாடுகிறேன்.
நாளை ஸ்டுடியோவில் நீ பாடுகிறாய் சௌந்திரம் என்கிறார். ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே என்ர அந்தப் பாட்டை மறு நாளே நான் ஐந்தரைக் கட்டை சுருதியிலும் ஆறு கட்டை சுருதியிலுமாக இரண்டு முறை பாடுகிறேன். மிகமிக நேர்த்தியாக — நான் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களிலேயே எனக்கு மிகவும் மனச்சாந்தி அளித்த பாடல்களில் ஒன்றாக — அந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது.
இது நடந்தது 1991-ல் அன்றிலிருந்து இன்று வரை யாகவா முனிவரை நான் வழிபட்டு வரும் முருகப் பெருமானாகவே நான் காண்கிறேன். என்னுடைய பிறந்த தினமான மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நான் யாகவா முனிவரை அவரது ஆஸ்ரமத்திற்குச் சென்று வழிபட்டு வணங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
யாகவா முனிவர் முக்காலத்தையும் கடந்த — முக்காலத்தையும் நிர்ணயிக்கும் — மாபெரும் தீர்க்கதரிசி ஆவார். உயர்திரு யாகவா வசியா அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு வணக்கம்.
No comments:
Post a Comment