99 பெண்களின் நெறிமுறைகள்
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
யாகவா முனிவரின் அறிவுரைகளும்
பெண்
பிச்சைக்காரனுக்கு
அரிசி, உணவளித்து
பெண் அரிசிக்கு ஒரு
தர்மத்தை தேடிக் கொள்கிறாள்
இவனே காசைக் கொடுத்து
காசுக்கு ஒரு
தர்மத்தை தேடிக் கொள்கிறான்.
யார் சேர்த்த தர்மம் பெரியது?
பெண்ணே பெரியவள்!
ஆண்கள் நெற்றியில் எதுவும்
இட்டுக் கொள்ளக்கூடாது
பெண்கள் இட்டுக் கொள்ளலாம்.
அமாவாசை பெண்ணைக் குறிக்கும்
பௌர்ணமி ஆணைக் குறிக்கும்
கருகூடுவதும் இந்தக் காலத்தில் தான்.
மண்பாவம் செய்யா
பெண் பாவம் செய்யா
உழவனும் பாவம் செய்யா!
பெண்கள் கண்ணுக்கு மை இட்டுக் கொள்ளக் கூடாது பொட்டு வைத்துக்
கொள்ளலாம்.
ஆண்கள் நெற்றியில் ஏதும் வைத்துக்
கொள்ளக்கூடாது.
எல்லாப் பிறவியிலும் மனிதன்
மனிதன் தான்
அதிலும் ஆண் ஆண் தான்
பெண் பெண்தான்
பெண்ணைக் கதறக் கதறக்
கற்பழித்தவனை 21 பிறவிகள்
அலியாகப் பிறக்க வைப்பேன்.
பெண்கள் வீட்டிலேயே இருந்தால்
உலகத்துக்கே சுபிட்சம்
பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது.
பசுவையும் பெண்ணையும்
பழிவாங்கினால் உலகிற்கே பஞ்சமடா!
மண்ணிற்குள் பொன் கண்டாய்
பெண்ணிற்குள்
பொண்ணைக் காணா பாவியடா நீ!
ஒரு மலருக்குள்
யாவும் அடங்கிவிட்டதடா!
ஒரு பெண்ணுக்குள்
யாவும் அடங்கிவிட்டதடா!
பெண்ணுக்கு மீறியது
பொன்னும் உதவாது
பொன்னும் பெண்ணுக்கா
பெண்ணே பொன்தான்!
அவள் உயிரிருக்க வளைவது
ஓர் நாள் நிச்சயம் – நீ
இடுகாட்டில்தான்
வளைகின்றாய் மனிதா!
மண்ணும் வேகாப் பொருளாகும்
பொன்னும் வேகாப் பொருளாகும்.
பெண்ணும் வேகாப் பொருளாகும்
No comments:
Post a Comment