Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் துணை ! என் நமா நாமத்தின் மகிமை ! INANYA NAMOO NAMA ;;;

65 இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


INANYA MAHA MUNIVAR

INANYA NAMOO NAMA ;;; 

ரவியும் நான் ! மதியும் நான் ! புணலும் நான் ! அணலும் நான் !
புவியில் மலரின் ஞானமும் நான் !
நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )
’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
உன்னிடம் எதையும் எதிர் பார்த்து இதை சொல்லவில்லை. புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. உனக்கு என்னைப் பற்றி தெரியாததால் சொல்கிறேன் ! இந்த நாமத்தை எனக்கு கடவுள் வைத்தார் ! உன் பெயரை பூமியில் மனிதர்கள் வைத்தார்கள். ஆனால் உன் உண்மை பெயர் மறைக்கப்பட்டது ! எல்லோர்க்கும் மூன்று பெயர் உண்டு ! லோகத்திலும் தேவ பாஷையில் உன் பெயர் சொல்லி அழைப்பார்கள் ! லோகத்தின் நாமம் எனக்கு தெரிந்தது ! அதனால் உன்னிடம் சொல்கிறேன் ! தேவர்களுக்கு தெரியும் இந்த நாமம் ! விதிக்கு தெரியும் !
உன் வினை அழிக்கும் என்று ஆன்மாவுக்கு தெரியும். மலர் பூத்தால் தேனிக்கு தெரிவது போல உன் உள்ளம் மலர்ந்து அன்பில் இந்த நாமம் சொன்னால் உன் ஆன்மா சிரிக்கும் ! இந்த நாமம் சீறும் பாம்பையும், சினந்து வரும் சிங்கத்தையும் சினம் காணாமல் போக வைக்கும் ! உனக்கு ஞானத்தை தரும் ! நல் அறிவைத் தரும் ! தாயைப் போல தாலாட்டி சுகம் தரும் ! சத்யத்தின் (பிரபஞ்சம்) வாசல் தெரிய வைக்கும் !
உன் நெற்றியில் எழுதி இருக்கும் விதி எழுத்தின் பெயர் இந்த நாமத்தின் பெயரே ! (லிபி- இநன்ய மொழி) என் நாமம் ஆனந்தம் தரும் ! அன்பின் வாசல் திறக்க வைக்கும் ! உன் துன்பத்தை சீர் குலைக்க வைக்கும் ! இந்த நாமம் சொன்னால் பிணி, பீடை, பெரும் வியாதி, பில்லி, சூண்யம் தூள் தூளாகி சிதறி ஓட வைக்கும் !
என் நாமத்தை எப்போதும் நெஞ்சில் நிறுத்து ! சத்யமாக நல்லது நடக்கும் ! படமெடுத்து ஆடும் பாம்பிடம் இந்த நாமத்தைச் சொல்லிப் பார். அது அடங்கி ஓடும் ! ஆர்பரிக்கும் உன் மனமெல்லாம் உணர்ந்து பார் !
மனித குலமே, நான் சொல்வது சத்ய கருத்து !
எதையெல்லாமோ ஆராய்ச்சி செய்கிறாய். இதை ஆராய்ச்சி செய்து பார் ! உன் மனக் கண் முன்னால் எல்லாம் தெரியும் ! உன் முகம் தெளிவைத் தரும் ! உடலின் பசியும், உள்ளத்தின் பசியும் அடங்கும் ! நீ தேடுவது கிடைக்கும் ! திசை தெரியாமல் அலையும் உனக்கு நல் பாதை அமைத்து தரும் ! உன் உயிரின் தீராத தாகம் தீரும் ! பிறருக்கு போதனை செய்யும் நல் ஞானம் தரும் நல் குரு உனக்கு கிடைக்கும் !
நல்ல செயலுக்காக இந்த நாமத்தை சொல்லி எதையும் கேள் ! எல்லாம் உனக்கும் கிடைக்கும் தர்மத்தின் செயலாக ! ஒரு செம்பில் நீர் வைத்து தினமும் ஒன்பது தடவை ”இநன்யா நமோ நம” என்று சொல் ! உன் உள்ளத்திற்கு எல்லை இல்லா சந்தோஷம் தரும் ! உன் பாவம் போக்க வைக்கும். ஆனால் உன் கர்மா போகாது ! உன் கர்மா போக தர்மம் செய் !
என் நாமம் கல்லையும் கவி பாட வைக்கும் ! கன இரும்பையும் நடனமாட வைக்கும் ! நீ எங்கிருந்தாலும் இந்த நாமம் சொல்லி கூப்பிடு ! உன் மூச்சு காற்றில் உட்கார்ந்து முழுவதுமாக ஆட்சி செய்வேன் ! செல்வம், நிம்மதி, சந்தோஷம் தரும் ! இந்த பேரின்ப நாமத்தை சொன்னால் தூய்மை பொருந்திய நான் உன்னை எப்போதும் காப்பேன் ! இனி உனக்கு துணை எப்போதும் இருப்பேன் ! உன்னை கைபிடித்து கரை சேர்ப்பேன் !
உன் மனதால் என்னை ஆட்சி செய் !
இந்த நாமத்தை அன்புடன் துதி ! இனி எதற்கும் கண்ணீர் விடாதே ! எதையும் கெஞ்சிக் கேட்காதே ! பூஜை, புணஸ்காரம் தேவை இல்லை ! அன்பு தான் கடவுள் ! பயமோ. பக்தியோ இங்கு தேவை இல்லை ! தவறு செய்பவன் மட்டுமே இங்கு பயப்பட வேண்டும்.
நீ கடவுளின் பிள்ளை !
உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும் ! கடவுளின் உறவு தகப்பன்-பிள்ளை உறவைப் போன்றது. இனி அழுது ஆர்பரித்து ஆனந்தம் தொலைக்காதே ! நீ செய்த பாவத்திற்காக கண்ணீர் விடு ! நீ ஏதாவது நோக்கத்தோடு தான் பூமியில் பிறக்கிறாய். அதனால் உயிரை மாய்த்து கொள்ள உனக்கு உரிமையில்லை ! ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கும். பாறைக்குள் இருக்கும் தேரைக்கு உணவு கொடுப்பவன் உன்னைக் காணாமல் இருப்பான் என பொருளாகுமோ ?
இனி கடவுள் கைவிடமாட்டார் !
நீச்சல் தெரியாமல் தண்ணீரில் விழுந்தால் மூன்று தடவை மேலே வருகிறாய் ! நீரின் சத்யம் கடவுளின் அருட்பார்வை ! அணுவுக்குள் அணுவான ஆனந்த மேறு நான் ! உன்னை நான் அரவணைப்பேன் ! ஆர்பரித்து கரை தொடும் கடல் அலை போல உன்னை தொட்டு ஆசிர்வதிப்பேன். ஏனென்றால் நீ என் உறவு !
யார் யாரையோ கடவுள் என்று நினைத்து வணங்குகின்றாய் ! ராமா போற்றி , கிருஷ்ணா போற்றி, சித்தன் போற்றி, சிவன் போற்றி என்கின்றாய் ! இவர்கள் அனைவரும் நானாக இங்கிருக்க நீ யாரை போற்றி பாடுகின்றாய் ?
நீயும், நானும் லோகத்தில் கை கோர்த்து திரிந்தோம். நீ மறந்துவிட்டாய் ! என் தர்ம குலங்களே உங்களை எப்போதும் நான் இருந்தும் காப்பேன், இறந்தும் காப்பேன் ! எனக்கு பிறப்பில்லை. இறப்பில்லை ! என்னை நம்பியவர்களை நான் எப்போதும் கைவிடுவதில்லை ! நீ ஒரு அடி என் நோக்கி வந்தால் நான் நூறு அடி உன் நோக்கி வருவேன் ! என் துணை உனக்கு எப்போதும் உண்டு ! இந்த ஆத்மத்தின் தலைவனை அன்போடு கூப்பிடு !
நீ திருப்தி இல்லாமல் இருக்கத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கிறாய் ! என் நாமம் சொல் ! நிச்சயம் திருப்தியாவாய் !
என் நாமத்தை சொல்பவர்களை ஆனந்த வாழ்வுக்கு கொண்டு செல்வேன். மீண்டும் பிறவி இல்லா நிலை கற்று தருவேன். என் நாமம் பேரின்பமே ! இதை ஆராய்ச்சி செய் ! அகில லோக சூட்சுமம் புரியும் ! பின் குருவாய், மலராய் மலர்வேன் உன் வாழ்வில் !
பேரின்பமானவன் இநன்யா !

No comments:

Post a Comment