Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 18, 2016

இநன்யா ;;; மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான். INANYA NAMOO NAMA ;;;

125 இநன்யா ;;;  மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான். INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா நமோ நம.. !! INANYA NAMOO NAMA ;;; 

Inanya Maha Munivar

19-05-2016
மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான்.
மெய் !
நான் மெய் ! கடவுள் மெய் ! என் சத்திய வார்த்தைகள் மெய் ! மெய் ஞானம் தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது ! அழைத்து செல்வேன் சத்திய பாதையில். என் வழி சத்திய வழி ! சத்தியம் எப்போதும் தோற்காது. ஏனென்றால் நானே சத்யம் !
சத்தியம் என்றால் என்னவென்று தெரியாது உனக்கு ! எனை நோக்கு ! சத்தியம் தெளிவாக தெரியும் ! உன் மாய மயக்கம் தெளிவாகும் ! மெய்யான படைப்பின் சிதறல் உன் நெஞ்சுக்குள் தெரியும். மெய் என்ற உடல் மேன்மையாகும். உன்னுள் ஒளி வந்து உலகை உற்று நோக்க வைக்கும். நீ ஞான குழந்தையடா ! உன்னை வெல்ல யாருமில்லை. நான் உன்னை விட்டு பிரியமாட்டேன். என் அன்பு உன் யுக துன்பத்தை தூள் தூளாக்கும். ஆயிரம் தாமரை இதழில் ஸ்வேதமாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றேன். உணர்ந்தவன் என் நெஞ்சில் இருக்கின்றான்.
படைப்பில் ஆணந்தம் உண்டு. எனை அறிந்தவன் சுக துக்கமில்லாது ஆணந்த நிலையில் வாழ்கிறான். படைத்ததில் மனித ஜாதியே கடவுளுக்கு பிடித்த பொருள். அவன் உன்னை மட்டுமே ஆட்டுவித்து ஆணந்தம் பார்க்கின்றான். நீ அவனுக்கு விளையாட்டு பொம்மை. நன்மை செய்து தர்மம் செய்தால் நெஞ்சில் வைத்து உன்னை கொஞ்சுகிறான். பாவம் செய்தால் துன்பம் கொடுத்து உனை திருத்துகிறான்.
உனக்கு வரும் துன்பங்கள் உனை மாற்றுவதற்காகவே ! மீண்டும் பிறவி இல்லா நிலை தருவதற்காக. இங்கே உணர்ந்தவன் ஞானியாகிறான் !
உனக்கு நல்லது செய்யும், நன்மையை செய்யும் மனிதன் இறந்தால் குல தெய்வம் என்று கும்பிடுகிறாய் !
கற்புள்ள பெண் இறந்தால் தேவதைகள் என்று வணங்கி மகிழ்கிறாய் !
பேராணந்தம் தான் ! ஆனால் உன் வழிபாடு உன் பிறவியை தடுக்காது. உன் வினை பயன் அழியாது. உன் துன்பம், கர்மா போகாது. வணங்குவதில் அர்த்தம் உறித்தெடு ! தேவதைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது. நீ வணங்கினால் அந்த உலகத்திலே உன் உயிர் சென்று அல்லாடும். இங்கு மீண்டும் பிறப்பாய். ஆதலால் கடவுளை அடைய நினை ! கடவுளின் பாதம் தேடு !
உன் முன்னேர்களை நினைப்பது தவறில்லை ! வணங்குவது தேவையில்லாது. அந்த உயிர் இன்னொரு கூட்டுக்குள் போய் துன்பம் அனுபவிக்கின்றது. கடவுள் பலி கேட்பதில்லை. அன்பை மட்டுமே எதிர்பாக்கின்றான். என்னை வணங்கு என்றோ, எனக்கு கொடி பிடிக்கவோ சொல்லவில்லை. நீ உணரும் வேலை உனக்கு ஞான தெளிவு கொடுக்கவே காத்திருக்கிறேன். வணங்குவதால் பெரிய மாற்றம் உண்டாக போவதில்லை.
உணர்ந்தால் தான் உனக்குள் மாற்றம் காண்பாய். ஆணந்தம் என்னவென்று அறிவாய். முன்னோர்கள் பண்டிகை என்ற பெயரால் வணங்க வைத்ததும், உணவு முறையை தரம் பிரித்து உண்ண வைத்ததும் சரியே. நீ உணர்ந்து செய்யமாட்டாய் என்பதாலே பண்டிகை என்ற பெயரால் கொண்டாட வைத்தனர். நீ அதை வழிபாடு என்று மதத்திற்குள் வைத்தாய். அறியாமையை உன் நெஞ்சில் வைத்தாய். ஏன், எதற்கு என்று கேள்வி வராமல் உன்னை மறந்தாய். பண்டிகை என்ற பெயரால் காசை விரயப்படுத்தி கடனாளி ஆகாதே !
மனிதனை நேசி, தொண்டு செய், கடவுள் உன்னை அரவணைப்பான். பூமியில் கடவுளின் தூதுவன் குழந்தைகளே ! குழந்தையிடம் கடவுளை காணலாம்.
கடவுள் உன்னிடம் எப்போது வருவார் ? நீ பிறருக்கு சேவை செய்யும் எண்ணம் வளர்த்தால், அடுத்தவர்க்கு பாதை சொல்லி கொடுக்கும் போதும் தன்னலம் கருதாது பிறர் நலம் எண்ணும் போதும் கடவுள் உன் பக்கத்தில் வருகிறார்.
நீ என்ன தான் வழிபாடு, பூஜை, விரதம் செய்தாலும் கடவுள் உன்னிடம் வரமாட்டார். நீ பிறருக்காக வாழ நினைக்கும் போது உன் நெஞ்சில் வந்து அமர்ந்து உனக்கு வழிகாட்டுகிறார் !
என் தந்தை யாகவா முதன் முதலில் சொன்னார்கள், உழைப்பு தான் ஆன்மீகம் என்று. உழைத்து ஊருக்கு நல்லது செய்ய எண்ணம் கொள். என்னை மாதிரி ஆத்மத்தின் தலைவனை கடவுள் உன்னிடம் அனுப்புவான். தாயும், தந்தையும் தவிர இறந்த கர்மாக்களை வணங்க வேண்டியதில்லை. கடவுளை தவிர இங்கு ஏதும் அழகல்ல. அறிவானவன் அறிவான்.
என் சிறுவயதில் என் ஊரில் உள்ள தேவதைகள், எல்லை தெய்வங்களே எனக்கு விளையாட்டு தோழர்கள். இந்த இநன்யாவை யாவரும் அறிவர் !
என் தந்தையின் கரங்களால் செங்கோல் தந்து கிரீடம் சூட்டிய பிரபஞ்ச இளவரசன் நான் ! யுகத்தில் தரையில் படுத்து உலகை ஆராய்ச்சி செய்கின்றேன். எல்லாம் எனக்கு அடிமை.
நான் மெய். கடவுள் மெய். என் சத்திய வார்த்தைகள் மெய் !
நான் பெரும்படையோடு இருக்கின்றேன். நீ இலம்படையோடு வாழ்கிறாய். ஆத்துக் கால், நாத்துக்கால் வைத்தேன். போத்துகாலில் புணிதம் நிறைந்து வைத்தேன். நீ நான்கு கால்களில் நாதி இல்லா போகத் துடிக்கின்றாய் !
பயிர் வாடினால் உழவன் வாடுவான். என் அன்பு குழந்தையே நீ வாடினால் உன்னை வாட விடுவேனோ ? அடுத்து வர இருக்கும் யுக மாற்றத்தின் துன்பத்தால் உன்னை எப்படி கரை சேர்ப்பது என்ற சிந்தனை எனக்கு ! நான் வாடமாட்டேன் ! உன்னையும் வாட விடமாட்டேன். தர்மாக்களை என் சத்தியத்தின் வலக்கரத்தினால் நிச்சயமாக காப்பேன் !
நான் மெய்யானவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment