27-07-2017
உன் தொல்பதி மறந்தாய். மஞ்சிபலை தத்துவம் புரியாமல் மாமாங்கமாய் வாழ நினைக்கின்றாய் ! சந்தம் அறியாமல் சாஸ்திரம் பார்த்து ஏது பலன் கண்டாயடா ?
நிந்திக்காதே !
நீ நினைத்தது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல் ! நடக்காவிட்டாலும் நன்றி சொல் ! துன்பங்கள் உன் பாவத்தை கரைக்கும் கருவி. குழந்தை கேட்டவுடன் தகப்பன் எதையும் வாங்கி கொடுப்பதில்லை. எப்போது எது தேவை என்று தகப்பனுக்கு தெரியும்.
நான் யாரையும் புகழ்பாட வரவில்லை. ஏட்டில் எழுதி வைத்ததை படித்து உன்னிடம் கவிபாட வரவில்லை. உன் உயிர் புகழ் சூடும் எனக்கு ! நான் கல்லாதவன். ஆனால் எல்லாம் கற்றவன். அறிந்து உணர்ந்து ஆணந்தமாய் இருப்பவன் !
குழந்தை திட்டினாலும், வசைபாடினாலும் சிரித்து கொண்டே இருப்பான் தகப்பன். அதே போல கடவுள் உன் செயலை பார்த்து சிரித்து கொண்டிருக்கின்றான். நீ நிந்தித்தாலும், வசை பாடினாலும் அவன் கண்டு கொள்வதில்லை. கடவுளை நிந்திக்காதே ! நீ நினைத்த காரியம் மற்றொரு காலத்தில் நிச்சயமாக நிறைவேறும்.
பொறுமையாய் இரு ! பூமித்தாயைப் போல !
எதற்கும் அவசரப்படாதே ! நீ தான் பெரிதென்று பிதற்றாதே ! ஒரு சின்ன வலியை உன்னால் தாங்க முடியாது. ஆதலால் படைத்தவனை நிந்திக்காதே ! கடவுள் கருணைமிக்கவன் ! தூயவன் உன் துயர் துடைப்பவன் ! நீ உனக்காக பூமிக்கு வந்தாய் ! நான் உன்னோடு பயணிக்கின்றேன். ஏனடா மனக் கவலை ?
தைரியம் கொண்டு வாழ்வை எதிர் நோக்கு ! விதையின் வீரியம் தெரியாதவன் தான் வீனே பிதற்றுவான். கடவுள் என்னோடு பேசுகிறார் என்றும் கடவுளை பார்த்தேன் என்று புலம்பும் மதபிசாசுகளை நம்பாதே !
கடவுள் ஒளி வடிவம் ! ஆண்டவர் என்னோடு பேசுகிறார் என்று வீனே புலம்பும் மானிடனை அறிவாய் நீ !
கடவுள் யார் ? ஆண்டவன் யார் ? இறைவன் யார் ? என்று அறியாமல் வாழும் மானிடனை நம்பாதே ! தித்திக்கும் தீன்சுவை அவன் பதம் ! அறிந்தவன் பேசமாட்டான். அதிர்ந்து நடக்கமாட்டான் ! ஒரு செடியை பற்றி அறியாதவன் கடவுளை எப்படி அறிவான் ?
கடவுளின் பெயரால் ஏமாற்றி உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறிகளே இங்கு அதிகம் ! எல்லாம் இங்கே பித்தலாட்டம் ! மந்தை ஆடுகள் போல மயங்கி நிற்கின்றான் மனிதன் ! உன் மாய மயக்கத்தை தெளிவாக்க வந்த இந்த மாயவனை அறியாது வாழ்கின்றாய். என்னை எப்போது அறிவாய் ?
பசியோடு வாழ் ! பாவம் செய்யத் தோன்றாது ! பூக்கள் மலர்ந்து பூஜைக்கு உதவுகிறது. நீயும் உதவியாய் இரு ! கடவுள் உன் அருகிலே !
வரும் போது கை மூடிக்கொண்டு வந்தாய் ஏன் என்று தெரியுமா ?
இங்கே பாதி பேர் கடவுளை குறை சொல்லித் திரிகின்றான். பாதி பேர் அதை கேட்டு குறையோடு வாழ்கின்றான். கடவுளை நிந்திக்காதே ! கருணைமிக்கவன் காலத்தில் உனக்கு எல்லாம் தருவான் !
வேதம் எனக்குள்ளே !
நான் இநன்யா !