Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, July 27, 2017

உன் தொல்பதி மறந்தாய். மஞ்சிபலை தத்துவம் புரியாமல் மாமாங்கமாய் வாழ நினைக்கின்றாய் ! சந்தம் அறியாமல் சாஸ்திரம் பார்த்து ஏது பலன் கண்டாயடா ?





27-07-2017
உன் தொல்பதி மறந்தாய். மஞ்சிபலை தத்துவம் புரியாமல் மாமாங்கமாய் வாழ நினைக்கின்றாய் ! சந்தம் அறியாமல் சாஸ்திரம் பார்த்து ஏது பலன் கண்டாயடா ?

நிந்திக்காதே !
நீ நினைத்தது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல் ! நடக்காவிட்டாலும் நன்றி சொல் ! துன்பங்கள் உன் பாவத்தை கரைக்கும் கருவி. குழந்தை கேட்டவுடன் தகப்பன் எதையும் வாங்கி கொடுப்பதில்லை. எப்போது எது தேவை என்று தகப்பனுக்கு தெரியும்.

நான் யாரையும் புகழ்பாட வரவில்லை. ஏட்டில் எழுதி வைத்ததை படித்து உன்னிடம் கவிபாட வரவில்லை. உன் உயிர் புகழ் சூடும் எனக்கு ! நான் கல்லாதவன். ஆனால் எல்லாம் கற்றவன். அறிந்து உணர்ந்து ஆணந்தமாய் இருப்பவன் !
குழந்தை திட்டினாலும், வசைபாடினாலும் சிரித்து கொண்டே இருப்பான் தகப்பன். அதே போல கடவுள் உன் செயலை பார்த்து சிரித்து கொண்டிருக்கின்றான். நீ நிந்தித்தாலும், வசை பாடினாலும் அவன் கண்டு கொள்வதில்லை. கடவுளை நிந்திக்காதே ! நீ நினைத்த காரியம் மற்றொரு காலத்தில் நிச்சயமாக நிறைவேறும்.
பொறுமையாய் இரு ! பூமித்தாயைப் போல !
எதற்கும் அவசரப்படாதே ! நீ தான் பெரிதென்று பிதற்றாதே ! ஒரு சின்ன வலியை உன்னால் தாங்க முடியாது. ஆதலால் படைத்தவனை நிந்திக்காதே ! கடவுள் கருணைமிக்கவன் ! தூயவன் உன் துயர் துடைப்பவன் ! நீ உனக்காக பூமிக்கு வந்தாய் ! நான் உன்னோடு பயணிக்கின்றேன். ஏனடா மனக் கவலை ?
தைரியம் கொண்டு வாழ்வை எதிர் நோக்கு ! விதையின் வீரியம் தெரியாதவன் தான் வீனே பிதற்றுவான். கடவுள் என்னோடு பேசுகிறார் என்றும் கடவுளை பார்த்தேன் என்று புலம்பும் மதபிசாசுகளை நம்பாதே !
கடவுள் ஒளி வடிவம் ! ஆண்டவர் என்னோடு பேசுகிறார் என்று வீனே புலம்பும் மானிடனை அறிவாய் நீ !
கடவுள் யார் ? ஆண்டவன் யார் ? இறைவன் யார் ? என்று அறியாமல் வாழும் மானிடனை நம்பாதே ! தித்திக்கும் தீன்சுவை அவன் பதம் ! அறிந்தவன் பேசமாட்டான். அதிர்ந்து நடக்கமாட்டான் ! ஒரு செடியை பற்றி அறியாதவன் கடவுளை எப்படி அறிவான் ?
கடவுளின் பெயரால் ஏமாற்றி உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறிகளே இங்கு அதிகம் ! எல்லாம் இங்கே பித்தலாட்டம் ! மந்தை ஆடுகள் போல மயங்கி நிற்கின்றான் மனிதன் ! உன் மாய மயக்கத்தை தெளிவாக்க வந்த இந்த மாயவனை அறியாது வாழ்கின்றாய். என்னை எப்போது அறிவாய் ?
பசியோடு வாழ் ! பாவம் செய்யத் தோன்றாது ! பூக்கள் மலர்ந்து பூஜைக்கு உதவுகிறது. நீயும் உதவியாய் இரு ! கடவுள் உன் அருகிலே !
வரும் போது கை மூடிக்கொண்டு வந்தாய் ஏன் என்று தெரியுமா ?
இங்கே பாதி பேர் கடவுளை குறை சொல்லித் திரிகின்றான். பாதி பேர் அதை கேட்டு குறையோடு வாழ்கின்றான். கடவுளை நிந்திக்காதே ! கருணைமிக்கவன் காலத்தில் உனக்கு எல்லாம் தருவான் !
வேதம் எனக்குள்ளே !
நான் இநன்யா !
https://www.youtube.com/playlist?list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

Thursday, July 20, 2017

ஆதி காலத்தை தோன்ற செய்ய காலசக்கரத்தின் மீது ஏறி நிற்க்கின்றேன்...

ஆதி காலத்தை தோன்ற செய்ய காலசக்கரத்தின் மீது ஏறி நிற்க்கின்றேன்... 111 கோடிமுனிவர்கள் துணையோடு தர்மாக்களை காத்து கர்மாக்களை அழித்து யுகத்தை ஆதி காலம் போல்தோன்றசெய்வேன் இந்த ஆத்மத்தின்தலைவன் இநன்யா சதிராடுவதை பொறுத்திருந்து பார் என் நாமம் சத்தியம் என்சொல் சத்தியம் ;;;
......................................
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மீது உண்மையான அன்பு செலுத்துபவர் கடவுள் இநன்யா ;;; அவ்விதம் வாழ்க்கையில் வரம் பெற்றவர்கள் உண்மையில் பேறு பெற்றவர்கள் . ஆனால் அப்படிப்பட்ட வரம் பெற்றவர்கள் உலகில் மிகவும் குறைவுதான்.அவ் அன்பு தொடர ,அவ் ஆசி பெற இநன்யா கடவுளை பின் தொடர்வோம்
இநன்யா நமோ நம
......................................
இநன்யா நமோ நம
ஒர்போதும் தளறாதே,
சோதனை என்று துவளாதே,
நான்கொடுக்கும் செல்வம் , நிம்மதி யாராலும் உன்னிடமிருந்து பறிக்கமுடியாது.
பொறுத்திரு இநன்யா காலம் விதி .
உன் விதியை மாற்றும் வலிமை எனக்குண்டு.
நீ தனித்திருக்கும்போது எதை சிந்திக்கிறாயோ அதுதான் உன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கிறது ,
ஆதலால் எப்போதும் நல்லதையே நினை.
உனக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று நினை,
உன் வறுமை,துண்பத்தை ஒரு நொடியில் தீர்ப்பேன்.
என்னை நம்பியவர் எக்காலமும் தோற்ப்பதில்லை நான் சத்தியம்.
**************
Inanya Maha Munivar
என் நாமத்தை எந்த கர்மாக்கள் துஷ்பிரயோகம் செய்தாலும், மக்களை ஏமாற்றினாலும் நான் காற்றாய் வந்து உருத்தெரியாமல் அழிப்பேன். என் கண் படாத இடமில்லை. கர்மங்களை வேரோடு பிடுங்கி எறிவேன். என் சத்திய பாதையில் வரும் நல் ஆத்மாக்களை என்றும் கைவிடமாட்டேன்.

அள்ளூறும் நீர் உனக்குள் ! அறிந்து உணராமல் அலைகின்றாய் ! வல்லூறு போல் வாழ்வில்லா வசந்த காலம் தொலைத்தாய். சொல்லூறும் தூய செயல் எங்கே உன் நிறுத்தை மறந்தாயடா ?


20-07-2017 
அள்ளூறும் நீர் உனக்குள் ! அறிந்து உணராமல் அலைகின்றாய் !
வல்லூறு போல் வாழ்வில்லா வசந்த காலம் தொலைத்தாய்.
சொல்லூறும் தூய செயல் எங்கே உன் நிறுத்தை மறந்தாயடா ?
கருவறை சாவி கடவுளின் கைகளில் !
முரண்பாடான எண்ணங்கள் எத்துணை வந்து சென்றாலும் இவ்வுலகில் உன்னால் கடவுளை கண்டு கொள்ள இயலும் ! அதற்கு நீ முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் ! நான்கு சுவருக்குள் இருந்து தவறு செய்தால் நாயகன் அறியாதான் என பொருளாகுமோ ? பார்க்க கண்களும், செயல்புரிய கை கால்களும் உணர்வதற்கு அறிவையும் தந்தானே ? அந்த ஆளவந்தான் ஆநிரையோனை ஏன் அறியா உணரா அலைகின்றாய் ?
தித்திக்கும் அவன் பதம் !
அன் சொல்லாய், வின் சொல்லாய், பன் சொல்லாய் பாடிடு பரமபதன் பதங்களை ! அமிழ்தினிலும் இனிதான நாமத்தை உன் பற்றும் சிரிக்குமடா ! ப்ரம்ம லோகத்தில் இருக்கும் என் தந்தையின் பேராத்மா சிலிர்க்குமடா !
படைப்பில் காற்றே மிக வலிமைமிக்கது ! நீர் இல்லாமலும், உணவில்லாமலும் உன்னால் சில நாட்கள் வாழ முடியும். ஆனால் காற்றில்லாமல் உன்னால் வாழ முடியுமா ? கருணை கடவுளை மறந்தாயே. வெட்டி பேச்சு பேசி கடவுள் இல்லை என்று பிதற்றுகின்றாய். ஏன் ?
காற்று, நீர், நட்சத்திரம் கணிந்த முகம் என் விந்தை யாகவா ! என் அன்பிற்கினிய தந்தை ! எந்தை நிகர் எவரடா ? என் சொல் நிகர் எதுவுமில்லையடா !
மேலிருந்து நேரடியாக வந்த மலர் தாமரை பாரிஜாதம் !
புணிதம் ஐந்தும் , என் அன்னை அமரும் ஆமலகமும் அறிவாயோ நீ ? அருகும் , தர்ப்பையும் அப்படியே கீழே இறக்கப்பட்டது. சுவியும் சுகமாய் கொண்டுவரப்பட்டது. நான் சுமந்து வந்தேன். சுகமான சுகத்தை (ஆறு பேராத்மா). ஆனால் நீ சுமந்து வந்தாய் பாவ மூட்டைகளை !
உன்னில் உள்ள எல்லா பாவமூட்டைகளையும் கடலில் தூக்கி எறி ! கடவுளின் பாதத்தை பற்று ! கடவுளிடம் அழுது ஆர்பரிக்காதே ! நீ செய்த பாவத்திற்காக அழு ! மீண்டும் செய்ய மாட்டேன் என்று சத்திய முழக்கமிடு ! குளிரிலும், நீரிலும், கொளுத்தும் நெருப்பிலும் அவன் குளிர் பார்வை உன் மேல் விழும் ! குதூகலம் வாழ்வில் நிறைவாயடா !
உஷிதமான நேரம் கடவுளை நினைக்கும் நேரமே ! நீ நினைத்து ஏதும் நடவாது ! நான் நினைத்து யாவும் நடக்குமடா !
புணிதமான கருவறையின் சாவி, படைத்தவனின் கைகளில் ! அவன் நினைத்தால் மட்டுமே கருவறையை திறக்க முடியும். நீ உருவாக்கும் எந்த உபகரணங்களாலும் கருவறையை திறக்க முடியாது. எழுதிய விதி கருவறை செல்லும் ஒரு துளி நீரிலே எழுதப்பட்டது !
எழுதிய விதி அழுதால் தீராது. விரதம், உபவாசம் இருந்தாலும் தீராது. உன் தர்மம், ஒழுக்கமே அனைத்தையும் மாற்றும். அதற்கு நல் குருவின் ஸ்பரிஷம் இருக்க வேண்டும். கருவறை பூட்டி சாவி வைத்தவன் என் நெஞ்சினிலே ! நிறைவாய் நான் இருக்கின்றேன். உன் தலைவிதி சாவியும் என் கையிலே ! விதி மாறுமடா !
என் நாமம் சொன்னால் உன் வினை அழியுமடா ! உணர்வாய் ! உனக்குள் இருந்து உஷிதமான நேரம் தருவேன்.
ஒழுக்கமாய் இரு ! சத்திய தர்மமாய் இரு ! நீ நினைத்தபடி வாழலாம் ! நினைத்த நேரம் யாகபிரஷ்தம் அடையலாம் !
கருவறையை காப்பவன் நான் ! உனை கவலை இல்லாது வைப்பேனடா ! என்னில் வந்து நிறைமதியானாய் !
உன் மதி என்னில், உன் விதி சொன்னில் ! வல்வில் மண்ணில், வாழ்வாய் விண்மின்னில் ! மண்ணில் உன் கண்ணில் எல்லாம் என்னில் !
கவலை உனக்கேதடா ? வாழ்வாயடா !
தூயவன் நான் !
நான் இநன்யா !

Thursday, July 13, 2017

யாகவா முனிவர் படம் 5



















யாகவா முனிவர் படம் 4











யாகவா முனிவர் படம் 3











யாகவா முனிவர் படம் 2