Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, May 25, 2019

வாசி யோகம்... இன்றைய நிலையில் இந்த பெயரை கேள்விப்படாத நபரே இல்லை எனலாம்.

வாசி யோகம்:

வாசி யோகம்... இன்றைய நிலையில் இந்த பெயரை கேள்விப்படாத நபரே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த பெயர் வியாபார பொருளாகி விட்டது. வாசியை விற்கும் வியாபாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பயிற்சி முறைகளை கற்றுத் தருகிறார்கள். இந்த பல்வேறு முறைகளை பார்க்கும் போது நமக்கு எது உண்மை.. எது பொய்.. என்று உண்மையான தேடுதலில் உள்ளவர்களுக்கு குழப்பமும், ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.

இந்த குழப்பங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த வாசிக்கு தரப்படும் விளக்கம் மேலும் நம்மை குழப்பும். அதாவது வாசி என்பது எப்படி வந்தது என்று கேட்டால்.. வாசி என்பதை மாற்றிப் போட்டால் சிவா என்று வரும். எனவே இதுவே சிவயோகம் என்றும்.. மேலும் இதில் வா என்பது காற்று, சி என்பது நெருப்பு என்றும்.. இந்த சி என்ற எழுத்தே நாயோட்டும் மந்திரம், நமனை (எமன்) ஓட்டும் மந்திரம்.. என்றெல்லாம் விதவிதமான விளக்கங்கள் இந்த வாசி யோகத்திற்கு தரப்படுகிறது.

இந்த விளக்கங்களும், இப்படியான விளக்கம் தருபவரையும், இவர்களின் பின்னால் செல்பவரையும் பார்க்கும் போது ஒரு புறம் சிரிப்பாகவும், மறுபுறம் பாவமாகவும் தான் இருக்கும். மேலும் திருமந்திரத்தில் வரும் ஒரு பாடலும் சேர்ந்தே ஞாபகம் வருகிறது. இதோ அந்த பாடல் உங்களுக்காக...

குருட்டினை நீக்கும் குருவினை கைக்கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கைக்கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே

இது போன்ற குருட்டு குருக்களை பற்றி நமக்கு எவ்வித கவலையும் தேவையில்லை. சரி இப்போது நாம் பதிவிற்குள் செல்வோம்.

இதுவரையில் எது எது வாசி இல்லை என்று பார்த்தோம். ஆனால் உண்மையில் எதுதான் வாசி என்று கேட்டால்.. அதை மிக எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் கூற வேண்டும் என்றால் எவன் ஒருவன் தன் மூக்கால் சுவாசிக்காமல் இருக்கிறானோ.. அவனே வாசி யோகி. அத்தகைய யோகி செய்வதே வாசி யோகம். அவனுக்கு மட்டுமே மரணம் என்பது இல்லை. மற்ற எல்லாரும், எல்லாமும் மாண்டு போகும்.

வெட்டாந் தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசம் உள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின (ஆதியாகமம் 
7:22)

நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுதற்கு அவன் எம்மாத்திரம் (ஏசாயா 2:22)

அதாவது எப்போது  நாம் ஒரு புத்தகத்தை கண்ணால் பார்த்து வாயால் அல்லது மனதால் வாசிக்காமல்.. நாம் பார்ப்பவை, கேட்பவை, உணர்பவை போன்ற எல்லாவற்றையும் மூக்கால் வாசிக்கக் கற்பது வாசியோகம் ஆகும்.

அது எவ்வாறு சாத்தியமாகும் என்று கேட்டால்.., நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணனை தவிர்த்து, உலகில் நல்லவர், கெட்டவர், ஞானி, சித்தர், கொலை-கொள்ளைகாரன் போன்ற பலரும் கலந்துள்ளனர். அவர்கள் எண்ணங்களும் பேச்சு ஒலிகளும் காற்றில் கலந்துள்ளது. இந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நம்மையும் அறியாமலே நமக்குள் நாத-ஒலி அலைகளாக மூச்சு மூலம் உட்சென்று நம்மை நாமே சுயசிந்தனை செய்யவிடாது மற்றவர்கள் எண்ண அலைகளிலே சுழல வைத்து பாவ புண்ணியங்களில் சிக்க வைக்கும். எனவே நம்மை நாமே இயக்கவும், நம் எண்ணங்களும் சிந்தனைகளும் நம்முடையதாக மட்டும் இருக்கவும் அட்சர சுத்தமான வாசியோகம் பயன்படுகின்றது.

இதில் வாசிக்கக்கூடிய எழுத்துக்களாக அங், சிங், வங், ஓம், மோ, மூ, கூ, கீ, மௌ, வாசிவாகூஹா போன்றவை சித்தர்களால் பயன்படுத்தப்பட்டது. (இந்த அட்சரங்களை உபயோகிக்கும் முறையை முன்பே கூறியதால், இங்கு அதை கூறவில்லை). இதனால் மற்றவர்களின் எண்ண அலைகள் அறிந்தோ அறியாமலோ எந்தவகையிலும் குறுக்கிடமுடியாது. ஆக எதையுமே மூக்கால் (சு-வாசத்தால் அதாவது சுத்த சுவாசத்தால்) வாசிக்கக் கற்றுவிட்டால் என்ன செய்தாலும் எது செய்தாலும் அது தியானம்தான்.

இவ்வாறு வாசிப்பவனால் மட்டுமே காற்றிலுள்ள நல்வாசத்தை மட்டும் உள்வாங்க முடியும். அவன் காற்றில் கலந்துள்ள பாவபுண்ணிய வாசங்களை உள்ளிழுக்க மாட்டான். அவனால் மட்டுமே உண்ணும் போதும், உறங்கும் போதும், கொட்டாவி விடும் போதும், வாய்வழி காற்றை ஆழமாக இழுக்கும் போதும் மின்னோசையை மட்டுமே இழுக்கவும் வெளிவிடவும் முடியும். அவனால் மீயொலியை கேட்கவும் முடியும். ஒவ்வொரு கிரகத்திலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் வெளிவரும் நாத அலைகளை உட்கிரகித்து வெளியில் யாவருக்கும் உபதேசிக்கவும் முடியும். இப்படிப் பட்டவரின் அருகில் நாம் இருந்தாலே அவர் அதிர்வின் தாக்கம் நமக்கும் மெய்ப்பொருளை விளங்க வைக்கும்.

பின்கலையும் இடகலையும் மாறும் போது
அறிவான சுழிமுனையில் மனதை வைத்து
அசையாமல் ஒருமனதாய் பார்க்கும் போது
குறியான சிவயோகம் சித்தியாச்சு
கோடி சென்மம் சித்தரை போல் வாழலாமே

இதன் விளக்கம் என்ன என்றால் சுடர் என்று கூறப்படும் சுழுமுனையில் சூரியகலை சேர்ந்தால் ஐம்புலனும் அறிவும் பெருகும், இதுவே சந்திரகலை இணைந்தால் பஞ்சபூதமும் அறிவும் ஒடுங்கும். இவ்வாறு சூரியசந்திர சேர்ந்திணைந்தால் அறிவும் தசவாய்வும் ஒடுங்கும்.

மேலும் நமது மூளையானது 360 பாகைகள் கொண்டது. அதில் சூரிய கலையானது நடக்கும்பொழுது சுவாசமானது பிடரிவழி சென்று வரும். சந்திரகலை நடக்கும் போது 312 பாகமாகிய மூளையில் சென்றுவரும். மொத்தம் 360 பாகங்களில் 312 பாகமாகிய மூளையில் சந்திர கலையானது சென்று வருவதால் இதை மந்திரங் கால் மதி முக்கால் என்று கூறுகின்றனர். மந்திரங்கால் என்பது சூரியனையும் மதி முக்கால் என்பது சந்திரனையும் குறிக்கும்.

தானென்ற சித்தர் முதல் முனிரிஷிகள்
தன்மயமே தானாக தவமே செய்து
ஊனென்ற உடல் வெறுத்து பசியாக்கி
உற்ற கலை வாசியென்ற தாரகத்தைக் கொண்டு
வானென்ற ஆகாய வெளியிலே சென்று
மகத்தான சோதியுடன் சோதியானார்
ஏனென்று வந்ததுவும் சோதி சோதி
சோதியெங்கும் சிவமயமான சோதிதான்

ஆக யாவரும் உச்சியடைந்து மேல்நிலை காண வாசிகலையைத்தான் முக்கியமாகக் கையாண்டுள்ளனர்.

எழுத்தறிவித்தவன் துணையைக் கொண்டும் அனுமதியைக் கொண்டும் இரகசியம் வெளிப்படும்...

தீட்டு தீட்டு தீட்டு ****** *** ****** தீட்டை அறியாப் பாவிகளுக்கு எல்லாமே தீட்டு...

பிரம்மரிஷி சிவவாக்கியம்:-
++++++++++ ++++++++++++
சித்த மார்க்கம் = சாகா கல்விச்சாலை,

எங்கும் நிறைந்தவா
**********:************

தீட்டு தீட்டு தீட்டு
****** *** ******

தீட்டை அறியாப் பாவிகளுக்கு எல்லாமே தீட்டு...
" பிணத்தைப் பார்த்து விட்டு வந்ததே தீட்டு என சொல்பவர்களே"
கொன்ற பிண மாமிசத்தை கசாப்புக் கடையினிலே சென்று காசு கொடுத்து வாங்கி
வீட்டின் கருவறையாம் 
(சமயம்;பக்குவம்,
சமயல்; பக்குவப் படுத்துததல்)
சமயலறையில் குழம்பாக்கி
இறைவன் இருக்கும் கோவிலான உடலுக்குள்ளே உண்டு உயிர் வளர்க்கிறீர்களே

இது மஹா தீட்டு ஆகாதா
பெண்களுக்கான இயற்கை சுழற்சி (இயற்கை ; இறைவன்) இதுவும் தீட்டா... ?
அவர்களை அந்த நாள்கள் ஏன் தனிமைப் படுத்தினார்கள்.
வெளியேறும் தூமையானது
வெளிப்பட்ட பிறகு காற்றின் மூலம் கிருமிகள் உருவாகும்.
ஆகையால் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
இதற்கு எந்த தயக்கமும் இருக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே...

அன்று நோய் தொற்று இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்று பஞ்சிதனை வைத்து அடைத்து செல்கின்றனர்
இதனால் இன்று கருப்பை நோய்க்கு சிக்காத பெண்கள் எவரேனும் உண்டா.?

சிந்தியுங்கள்
தனிமை என்பது தனிமைப் படுத்துவதல்ல ஓய்வு மற்றும் தன்னை சுத்தம் செய்து நோயிலிருந்து காக்கவுமே.
இதையும் தீட்டென்று சொல்பவர்களே சித்தர்கள் யாவரும் இதையும் தீட்டு என சொல்ல வில்லை மாறாக தீட்டென சொல்வோரை இயற்கை அறியாப் பாவிகள் என்றே கூறுகிறார்கள்.
தூமை,தூமை என்றே ஒதுக்கித்
திரியும் இறைநிலை அறியாப் பாவிகளே 
இந்த இயற்கை சுழற்சியானது பெண்ணுக்கு உள்ளே இருந்துதானே தோன்றுகிறது
. அப்படி 3முதல் 5 நாளும் தீட்டென்றால் 
மற்ற நாள்களும் அந்த தூமை எங்கே போனது அந்தப் பெண்ணுக்கு உள்ளேதானே இருக்கிறது. அப்படியானால் பெண்களே தீட்டா?

ஆமையானது கடல் மணலிலே
முட்டையை விட்டு கடலில் மூழ்கி சிந்தனையால் நினைத்தே பொறிக்கும். அதுபோல எத்தனையோ வேத மந்திரங்களை சிந்தனையால் ஓதுகிறீர்களே

அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது
நீங்கள் கருவாகும் முன்னே சுக்கிலத்தில் விதையாகி சுரோனிதம் எனும் தூமையினுள்ளே நுழைந்து பத்து மாதம் அதிலேயே வளர்ந்து உருவானோம் 
ஆன்மா உடலெடுத்து இருப்பதே அந்த சுக்கில சுரோனித வித்தில்தானே...
அப்படித் தூமையிலே நமசிவாய எனும் பஞ்சபூதமான இவ்வுடல் கிடைத்தது.
இவ்வுடலாலே நாம் மந்திரங்களை ஓதுகிறோம்.

தூமை தீட்டெனில் அதில் வளர்ந்த உடலும் தீட்டே. இவ்வுடலால் எப்படி இறைவனை வணங்குவது.?
நமசிவய என்னும் பஞ்சபூதமும் ஒன்றிணைந்த உடலில் இருந்து வரும் அனைத்து வேத மந்திரமும் ஜோதியாய் உள்ளே திகழ்வதும்,
முப்பிரி சடையானை பூசை செய்வதும், சற்குருவான இறைவன் நிறைந்து இருப்பதாகச் சொல்லக் கூடிய இவ்வுயிரானதும்
இந்த தூமையினால் ஈரைந்து மாதம் வளர்ந்து திரண்டு உருண்ட 
" இவ்வுடலுக்கு உள்ளேதான் "

தூமை தீட்டென்றால் இவ்வுடலும் தீட்டே. அப்படியெனில்
இவ்வுடலையும் உள்ளிருக்கும் உயிரையும் இயக்க 
"இறைவனைத் தவிர வேறொரு மிகப்பெரும் சக்தி உள்ளதா",?

சிந்தியுங்கள்
ஒன்றென்றிரு தெய்வம்
உண்டென்றிரு...
ஒன்றென்றிரு தெய்வம் 
ஒன்றென்றிரு...

பெண் எனும் உடலிலிருந்து சுரோனிதம் உடைந்து தரையில் விழுந்தால் தீட்டு என்கிரீர்
உயிரானது உடலெடுக்க தாயும் தந்தையும் இணைந்தால் தீட்டு என்கிறீர்
பனிக்குடம் உடைந்து உயிர் உடலாகப் பிறந்த அன்றும் தீட்டு என்கிறீர்
தீட்டினால் உருவாகி வளர்ந்து பிறந்த உடலால் செய்யும் அனைத்துமே தீட்டுதானே ?
தீட்டான இவ்வுடல் கொண்டு என்ன செய்ய முடியும்.?
எவ்வாறு இறைவனை வணங்க முடியும்.?
ஒவ்வொரு அணுவின் உள்ளேயும் அணுவின் அணுவாக இருக்கும் ஈசன் இல்லாத இடம்தான் உண்டோ.
இறைவனுக்கு ஏது தீட்டு
அப்படி என்றால் தீட்டு ஏது?
பஞ்ச மஹா பாதகம்
வஞ்சம், கொலை, களவு, கற்பழிப்பு, பொறாமை, காமம், பேராசை
போன்ற ஆணவத் திமிரினால் வரக்கூடிய

" தீய செயலே தீட்டு"
இந்த தீய செயலான தீட்டை செய்வோருக்கும் இறைவனே உள்ளிருந்து அருள்கிறான்.
அதற்குத் தகுந்த பலனை வாரி வழங்குகிறான்.

தீது செய்ங்கின்ற பாவிகளுக்கும் செய்தாய் கருணை...
ஓராதார் உள்ளத்தும் ஒளிர்க்கும் ஒளியானே...
சிவசிவ சிவமே சிவசிவ
சிவ செம்பொன் ...

தூமை தூமை என்று
துவண்டலையும் பேதைகாள்
தூமையான பெண்ணிருக்க
தூமை போனதெவ் விடம்
ஆமைபோல மூழ்கி வந்து
அனேக வேதம் ஓதுரீர்
தூமையும் திரண்டுருண்டு
சொற் குருக்கள்ஆனதே

சொற் குருக்கள் ஆனதும்
சோதி மணி ஆனதும்
மெய் குருக்கள் ஆனதும்
வேண பூசை செய்வதும்
சத் குருக்கள் ஆனதும்
சாத்திரங்கள் சொல்வதும்
செய் குருக்கள் ஆனதும்
திரண்டுருண்ட தூமையே

அரையறை இடைக் கிடந்த
அன்று தூமை என்கிறீர்
பிறையறித்து நீர் குளித்த
அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்துநீர் பிறந்த
அன்று தூமை என்கிறீர்
புரையில்லாத ஈசரோடு
பொருந்துமாறு எங்கனே

சிவவாக்கியர்...
நன்றி. ஆத்ம வணக்கம்

ஓம்_என்னும்_பிரணவ மந்திரத்தின்_மகிமைகள்

ஓம்_என்னும்_பிரணவ மந்திரத்தின்_மகிமைகள்
யார் #ஓம்_ஓம்_ஓம் என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;
நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்..
ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.
ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும். மன சாந்தி ஏற்படும். உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.
மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும். எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.
வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.
பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்திதான், நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது. பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.
பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.
அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.
கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.
மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம். மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.
அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.
ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது. அதாவது கும்பகம் செய்யக்கூடாது.
மந்திரங்களுக்கேற்றது சைவ உணவுதான். சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதால் விரைவில் பலன் கிடைக்கும்.

சைவம்... அசைவம்... சைவ சித்தம்...! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது;;;;;;;;

சைவம்... அசைவம்... சைவ சித்தம்...! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை...!”
ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.
1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும் 
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும் 
1.அமிலம் ஆண் சக்தியாகவும் 
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும் 
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே - தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.
ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்... ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி... தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்...!”
மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை... அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக... அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும். 
1.சைவம் என்றால் வளர்ப்பு 
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் என்ற கோளத்தில் 
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால் 
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை 
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக 
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

மூளை பற்றிய நீண்ட சுருக்கமான பதிவு.

மூளை பற்றிய நீண்ட சுருக்கமான பதிவு. 

விருப்பமுள்ளவர்கள் படிக்கவும். 

சிந்தித்துப் பார்த்தால் ஒரு பறவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி கூடு கட்டி முடையிட்டதோ அப்படித்தான் இன்னும் கூடுகட்டுகிறது. காகம் கூடு கட்டுகிறது, குயில் வந்து அதில் முட்டை இட்டு விட்டு ஓடி விடுகிறது. இது மாறுவதே இல்லை. இரை தேடுவது, தன் இனத்தினை உணவு உண்ண அழைப்பது போன்ற மற்ற எல்லா விஷயங்களும் கூட அப்படியே மாறாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. மிருகங்களும் அப்படித்தான் இரை தேடுகின்றன, இன விருத்தி செய்கின்றன மடிந்து போகின்றன. விஞ்ஞானம் இதை இயல்புணர்வு என்கிறது. இவையெல்லாம் இப்படி இயற்கையின் நியதியின் படி வாழ்ந்து மடிந்து போகின்றன. அவற்றால் வேறு விதமாகச் செயல்பட முடியாது. ஆனால் மனிதன் அப்படியல்ல. அன்று வனங்களில், குகைகளில் உடையின்றி நிர்வாணமாக, விலங்குகளை வேட்டையாடி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தவன், இன்று அடுக்குமாடி வீடு கட்டிக் கொண்டு, உழைத்து, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து, சமைத்து உண்கிறான். நாளைய தேவைக்காக சேமித்தும் வைத்துக் கொள்கிறான். பூமியைத் தாண்டி வான்வெளிக்கும் கூடப் போகிறான். இப்படி பல வகைகளில் தன்னையும், தன் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறான். இது எப்படி சாத்திமானது ? இதற்கெல்லாம் காரணம் என்ன ? 

இதற்கெல்லாம் காரணம் மூளைதான். எதனிடமும், எதற்காகவும் பாகுபாடு காட்டமல் நேர்மையாகச் செயல்படும் இயற்கை மனிதனுக்கு மட்டுமே அளவு கடந்த சக்தி வாய்ந்த தன் முழு செயல் திறனையும் உள்ளடக்கிய மூளையை வழங்கியிருக்கிறது. எனவே இயற்கை தன் முழு ஆற்றலையும் உள்ளடக்கிய மனிதனாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகப் புரிய வருகிறது. மனிதனின் மூளைக்கு இருக்கிற சிந்திக்கும் திறன் விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ இல்லை. மேலும் அவைகளின் வினைகளைப் பதிவு செய்து மீண்டும் தேவைப்படும் பொழுது அதை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ள மனம் என்கிற ஒன்று அவைகளுக்கு இல்லை. மனிதர்களில் கூட பெரும்பாலானோர் மூளையை உபயோகப்படுத்துவதே இல்லை. என் தாயார் என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தை ''அவனுக்கு மூளை இல்லை'' என்பதுதான். இதனால்தான் மனிதர்களுக்குள் மிருகத்தைப் போல வாழ்பவர்கள், மனிதனாக வாழ்கிறவர்கள், உயர்ந்த தெய்வ நிலையில் வாழ்கிறவர்கள் என்றெல்லாம் பல மாறுபாடுகள் காணப்படுகின்றன. மனித மூளையை விட திறமையான கம்ப்யூட்டர் உலகில் வேறு கிடையாது. ஆனாலும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் இது வரை யாரும் இல்லை. உலகிலேயே தலை சிறந்த அறிவாளிகள் கூட தங்களின் மூளைத் திறனை 10% சதவிகிதம் கூட உபயோகப் படுத்தவில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இயங்காத மூளையின் பகுதிகளில்தான் இந்த பிரபஞ்சம் குறித்த எண்ணற்ற கேள்விகளுக்கான விடை ஒளிந்து கிடக்கிறது. அற்புத சித்திகளும், சக்திகளும், அமானுஷ்ய இரகசியங்களும் அவற்றில்தான் புதைந்து கிடக்கின்றன. நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான மூளையின் செயல் திறன் மட்டுமே மரபு வழியாக பயன்பட்டுக் கொண்டே வருகிறது. 

எனவேதான் இன்றைய விஞ்ஞானிகள் சில மனிதர்களின் அமானுஷ்ய செயல்பாடுகள் மற்றும் செயற்கரிய செயல்பாடுகளுக்குக் காரணமாக மனித மூளையின் இயங்காமல் இருக்கும் பகுதிகளின் இயக்கத்தை காரணமாக முன் வைக்கின்றனர். இது அவர்களின் அனுமானம்தான். ஆனால், இது உண்மை என்று நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருக்கிறார்கள். மூளையைப் பொருத்த வரை நமது ஒவ்வொரு செயல்களுக்கும், அவற்றால் பெறும் அறிவுகளுக்கும் தனித்தனி மையங்கள் உள்ளன. பெரும்பாலும் நமது ஐந்து புலன்கள், அவற்றால் செய்யப்படும் செயல்கள், அந்த நுகர்ச்சியின் விளைவால் பெறும் அறிவு இவற்றிற்கான மையங்கள் மட்டுமே நம் மூளையில் இயங்குகின்றன. மற்ற அனைத்து மையங்களும் உபயோகப்படாமல் வீணாகிப் போய் விடுகின்றது. எனவேதான் புலன்களில் இருந்து மனதை பிரித்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள். சில பேருக்கு பிறக்கும் பொழுதே சில புலன் கடந்த ஓரிரு மையங்கள் செயல்பட்டு விடுவதால்தான் அவர்கள் மற்றவர்களை விட வேறு பல மாறுபட்ட செயல்பாடு உள்ளவர்களாகவும், அபார ஞானம் உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். நம் முன்னோர்கள் இதற்குக் காரணம் முற்பிறவி என்று சொல்கிறார்கள். விஞ்ஞானம் கரு உருவாகும் பொழுது தாயின் உள்ளுறுப்புகளின் செயல் திறன் மற்றும் சுரக்கும் இரசாயன திரவங்களின் செயல்திறனால் இது நடக்கின்றது என்று சொல்கிறது. 

இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உபயோகப்படாமல் இருக்கும் மூளையின் பிற பகுதிகளை, மையங்களை அதிகபட்சமாக உபயோகப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதுதான். விஞ்ஞானத்தின் படி மூளையின் இயக்கங்களெல்லாம் ஒரு உயிர்புள்ள மின் சக்தியால்தான் நடைபெறுகின்றது. அந்த உயிர்ப்புள்ள மின் சக்தி என்பது பரம்பொருளின் சக்தியாகிய ப்ராண சக்தியே ஆகும். உடலிலே உற்பத்தியாகும் உயிர்மின் சக்தியின் அளவை அதிகப்படுத்துவதன் மூலம் மூளையின் இயங்காத பகுதிகளை இயக்கச் செய்து விடலாம். மின் சக்தியின் வலிமைக்கேற்ப மூளையின் செயல் திறன் மேம்படும். இதற்கு மனதின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை மறந்து விடக் கூடாது. மூளையின் ஆற்றலைத் சரியாகவோ, தவறாகவோ பயன்படுத்தி வினைகளையும், விளைவுகளையும் உருவாக்குவது மனமேயாகும். இதனடிப்படையிலேயே நம் முன்னோர்கள் ப்ராணாயாமம், தியானம், ஆசனம் போன்ற யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஒழுகி ஜீவ மின் சக்தியை அதிகப்படுத்திக் கொண்டனர். இதனால் மூளையை மட்டுமல்ல, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும், இந்திரியங்களையும், முள்ளந்தண்டு போன்ற உறுப்புகளையும் திறம்பட இயங்க வைத்து தெய்வீக ஆற்றல்களையும், அஷ்டமகா சித்திகளையும் பெற்றனர். 

மூளை பார்ப்பதற்கு ஒரே விதமாகத் தோன்றினாலும், நமக்கு கை, கால், கண், காது போன்ற உறுப்புகளைப் போல அதுவும் இரண்டாகவே இருக்கிறது. இடப்பகுதி வலப்புறத்தையும், வலப்பகுதி இடப் புறத்தையும் நிர்வகிக்கிறது. இடது மூளையே தன்னுடைய பணிகளைச் செய்வதோடு வலது மூளையின் கட்டளைகளையும் செயல்படுத்துகிறது. சிலர் சிந்தனையும், சொல்லும் நன்றாக இருக்கும். ஆனால், செயல் என்று வரும் பொழுது கோட்டை விட்டு விடுவார்கள். இதற்குக் காரணம் வலது மூளையின் முடிவை அல்லது கட்டளையை இடது மூளை திறம்பட செயல்படுத்தாமல் போவதுதான். பசி, தாகம், தூக்கம், துக்கம், வலி, ஆனந்தம் போன்ற பல தரப்பட்ட உணர்வுகளை மூளையின் மூலமாகத்தான் நாம் உணர்கிறோம். நமது மூன்றாவது கண் என்கிற நெற்றிக் கண் மூளையின் அடியில் இரு அரைக் கோளங்களுக்கு நடுவே வெளியில் தெரியாதபடி கார்பஸ் கலோசம் அருகே சிகப்பு நிறத்தில் பைன் மரத்தைப் போன்ற கூம்பு வடிவத்தில் புதைந்து கிடக்கிறது. இதன் நரம்பு நுணிகள் புருவ மத்தியில் இருப்பதால் அதையே நெற்றிக் கண் என்பார்கள். பைன் மரத்தையொத்த கூம்பு வடிவத்தைக் கொண்டிருப்பதால் இதை Pineal Gland என்பார்கள். இதையே தமிழில் பீனியல் சுரப்பி என்கிறோம். பரிணாம வளர்ச்சியில் முந்தைய கண்ணான இது சுரப்பியாக மாறி விட்டது என்று சொல்வதுவுமுண்டு. ஆரம்பத்தில் பிட்யூட்டரி என்ற சுரப்பியையே தலைமை சுரப்பி என்று சொல்லி வந்தார்கள். தற்பொழுது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டு பீனியல் சுரப்பியின் சிறப்பு உணரப்பட்டுள்ளது. 

பொதுவாக இது ஒரு நாளமில்லா சுரப்பி  என்று சொல்லப்பட்டாலும் மற்ற சுரப்பிகளுக்கெல்லாம் இல்லாத பல தனிச் சிறப்பு இதற்கு உண்டு. இதன் அமைப்பு கண்களைப் போவே உள்ளது. வெளிப்புறத்தில் பளிங்கு போன்ற லென்ஸ் உண்டு. அதற்குள்ளே விட்ரியஸ் அங்கம் எனப்படும் ஒளி புகும் தன்மையுள்ள ஒரு வகையான ஜெல்லி நிறைந்துள்ளது. ஒளிக் கூருணர்வு கொண்ட செல்கள் நிறைந்த விழித்திரையும், இரத்தநாளப் படலங்களும், தனி நரம்பும் இருக்கிறது. மேலும், பெரு மூளையில் மட்டுமே காணப்படும் அஸ்ட்ரோசைஸ்டுகள் இதிலும் உள்ளன. இது ஒரு வித ஹார்மோன்களை உற்பத்தி செய்து மூளையின் பகுதிகளான ஹைப்போதாலமஸ், ஹைப்போபிசிஸ் கூட்டு அமைப்பின் மீது வினை புரிகின்றது. உடல் வளர்ச்சியின் தரத்தை நிர்ணயம் செய்கின்றது. பிட்யூட்டரி சுரப்பியுடன் கூட்டாகச் செயல் புரிகின்றது. அட்ரினல், தைராயிடு சுரப்பிகளின் பணிகளைப் பாதுகாக்கிறது. நீர், உப்பின் சம நிலை, சர்க்கரை அளவு, குருதியின் அமைப்பு, உணவு செரிமாணம், பாலின உறுப்புகளின் வளர்ச்சி, பாலின நடவடிக்கைகள் அனைத்தும் நடவடிக்கைகளும் இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. மன நடவடிக்கைகளின் முழுமையான தன்மையை இதுதான் நிர்ணயிப்பதாகச் சொல்கிறார்கள். உடலின் தட்ப வெப்ப நிலைகளைச் சீராக வைக்கிறது. மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து சருமத்தின் நிற மாற்றங்களுக்குக் காரணமாகவும் அமைகிறது. வெளிப் புறத்தில் நடைபெறும் அனைத்தும் இதற்கு முன் கூட்டியே தெரிந்து விடும் என்று சொல்கிறார்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக இதுதான் ஆன்மா இருக்கும் இடம் என்றும், உடலையும் உள்ளத்தையும் இணைக்கும் இணைப்பு என்றும் சொல்கிறார்கள். முன் ஜென்ம வினைகளின் கருவூலம் என்றும், பின் வரும் பிறவிகளுக்கான வித்து இங்குதான் உள்ளது என்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இதையே மனோன்மணி என்றார்கள். அவர்கள் இதை அருட் சுரப்பி என்கிறார்கள். இது சிறப்பாக இயங்கினால் ஞானம் விளையும் என்கிறார்கள். ஆழ்நிலை தியானம், குண்டலினி யோகம் போன்ற யோகங்களின் மூலம்தான் இதைத் தூண்டுதல் செய்ய முடியும். பரிணாம வளர்ச்சியில் மனிதனின் மேல் மட்ட மூளை வளர்ச்சியடைந்த அளவு உணர்ச்சிகளின் பிறப்பிடமான அடி மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் என்கிற உறுப்பு  வளர்ச்சியடைய வில்லை என்றாலோ, அதன் செயல் திறன் குறைந்திருந்தாலோதான் அவனுடைய தெய்வீகப் பண்புகள், அன்பு, தியாகம் போன்ற மேன்மையான குணங்கள் மறைந்து சுயநலம், ஆணவம், சூது, பொறாமை, வஞ்சகம், கொலை செய்யும் எண்ணம், காம வெறி, கோபம் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவுகளான தீய குணங்களுக்கு ஆளாகி விடுகிறான். 

இந்த ஹைப்போதாலமஸ் என்கிற உறுப்புக்குத்தான் உடலில் அதிக இரத்தம் வழங்கப்படுகிறது. இது நம் உடலில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கின்றது. நாம் தூங்கும் பொழுது மூளையும் ஓய்வு எடுத்துக் கொள்ளும். ஆனால், இந்த ஹைப்போதாலமஸ் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து செயல்படுகின்றது. உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. அவசியம் ஏற்படும் பொழுது அந்தந்த மையங்களுக்கு தகவல் தந்து, செயல்படத் தூண்டியும் விடுகின்றது. தூங்குபவரை தட்டி எழுப்பும் பொழுது மூளைக்குத் தகவல் கொடுப்பது இதுதான். ஆனால் சுயமாக சிந்திக்கும் திறன் இதற்கு இல்லை. இதன் மேல் புற நுணியில் பீனியல் சுரப்பியும், கீழ் புற நுணியில் பிட்யூட்டரி சுரப்பியும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். யோகிகள் குண்டலினியை மேல் நோக்கி எழுப்பி சொண்டு செல்வது ஹைப்போ தாலமஸையும், மற்ற இரு சுரப்பிகளையும் ஊக்குவிக்கத்தான். இதன் மூலம் உயிர் மின்சக்தி பற்றாக் குறையால் உபயோகப்படுத்தப்படாமல் செயல்படாமல் இருக்கும் நமது மூளையின் 90% கும் அதிகமான பகுதிகளில் ஓரளவையேனும் உபயோகத்துக்குக் கொண்டு வந்து ஞானத்தையும், அற்புத ஆற்றல்களையும், அஷ்ட மகா சித்திகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

நீரிழிவு ஒரு நோயே கிடையாது.

நீரிழிவு ஒரு நோயே கிடையாது.

செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..

படியுங்கள் புரியும்..

கீழ்க்கண்டஅறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாக மாற்றப்படுகிறது !

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உலகளாவிய சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!

நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து  "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!

ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால்,

அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!

நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

ஏன்_ஏற்படுகிறது?

நாம் தெரிந்துக் கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!சர்க்கரை நோய் வராமல் தடுப்போம்!

செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ் (digested)

2. தரமற்ற குளுக்கோஸ் (indigested)

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!

இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!

"Malfunction" செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!

தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

ஏன்?

தரமற்ற சர்க்கரை "உடல் செல்களுக்கு" சென்றடைந்தால்,அவைகள் நோய் வாய்படும்!

அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக, தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,

செல்களால் நிராகரிக்கப்பட்டு,

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,

சிறுநீரகத்தால், சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,

இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!

"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!

மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், 

"விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு,

உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 

உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து, செரிமானக் கோளாறு காரணமாக, 

தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,உணவு சாப்பிட,

சாப்பிட,இடைவிடாது உற்பத்தியாகிகொண்டிருக்கும் "குப்பை_சர்க்கரை" 

சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

இப்போதுதெளிவாகியிறுக்கும்,ஏன்"Polyurea"(excessive and frequent urination)"அடிக்கடி_சிறுநீர் கழித்தல்"ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!

அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,

நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!

இதுவே நாக்கு வறட்சி மற்றும் அதிக தாகம்!

இந்நிலையை சமாளிக்க உடல்  அதிகப்படியான நீர் கேட்கிறது!

இப்போது விளங்கியிருக்கும் ஏன் என்று.

2. Polydipsia(dryness of mouth-excessive thirst) #அதிக_தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவு உணவு உட்கொண்டாலும், 

எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,

தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,

தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,

தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,

உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,

நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

இப்போது புரிந்திருக்கும் ஏன் என்று.

3.Polyphagia(excessive hunger-feeling tired) அதிகபசி,மற்றும்,அதிக சோர்வு ஏற்படுகிறது என்று?

அப்படியென்றால் ஆங்கில மருத்துவரிடம் சென்றால் மாத்திரை கொடுக்கிறாரே. 

அந்த மாத்திரை செய்யும் வேலை என்ன ?

பெருசா ஒன்னும் இல்லை.

நமது உடல் செறிமானமாகாத சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

இதை விளக்கமாக மேலே பார்த்தோம்.

ஆனால் அலோபதி மருத்துவத்தில் நாம் எடுக்கும் மாத்திரையானது, 

நமது உடலில் உள்ள செறிமானமாகாத (undigested) சர்க்கரைக்கு இன்சுலினை தரும்படி, 

நமது கனையத்தை தூண்டும்.

எனவே கனையம் செறிமானமாகாத கெட்ட சர்க்கரைக்கு இன்சுலினை கொடுப்பதால் ,

அது ரத்தத்தில் கலக்கும்.

செறிமானமாகாத(தீங்கான) சர்க்கரை இவ்வாறு தினமும் நமது ரத்த ஓட்டம் மூலமாக உடலுறுப்புகளை நாளடைவில் பாதிக்கும்.

இதனால் தான் கண் பார்வை கெடுவது.

சிறுநீரகம் கெடுவது..

எனவே நீரிழிவால் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. 
அதற்காக நீங்கள் எடுக்கும் ஆங்கில மாத்திரை தான் செறிமானமாகாத சர்க்கரைக்கு, 

இன்சுலின் கொடுத்து நமது உறுப்புகளை பாதிக்கிறது. இதுதான் சூட்சமம்......

சரி , இதற்கு தீர்வுதான் என்ன ??????.

உறுதியாக ஆங்கில மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால் (digestive disorder), உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,

தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!.

இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

(ஓர்_அறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு,விளங்குகளுக்கு நன்றாக தெரிந்த வித்தைகள்) மனிதனுக்கு தெரியாமல் இருப்பது ஏனோ ?????

1. எதை சாப்பிடுவது(proper diet) ?????

2.எப்படி சாப்பிடுவது (proper eating techniques) ?????

3.எப்போது சாப்பிடுவது (need based diet) ?????

அவசியம்_கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள்.

 தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். 

குளிர் பானங்களை தவிர்க்கவும்.

பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.

பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.

உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி/செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

உண்ணும் போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். 

அப்போதுதான் செரிமானம் முறையாக ஆகும்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். 

உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். 

கை விரல் இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. 

உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள்.

 விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். 

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இவைகளை கடைபிடித்தாலே உடலில் நீரிழிவு காணாமல் போகும்.

Thursday, May 23, 2019

ஆழ்மன சக்தியும் - அனுபவமும்.

ஆழ்மன சக்தியும் -. என் அனுபவமும்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து என் கண்களை மூடி, மானசீகமாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு அவரை தரிசித்து விட்டு வந்தேன்...

இந்த மானசீகமான ஒரு தரிசனம் ஒரு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது, என் மனம் என்னை அறியாமலேயே அந்த ஆழ்மன தளத்துக்கு சென்றிருந்தது...

அந்த சமயத்தில் என் எதிர் வீட்டு வாசலில் ஒரு நாய் ஒன்று ஓயாமல் குறைச்சிட்டு இருந்தது...

சத்தம் கேட்டு என் வீட்டு வாசலில் நான் வந்து நிற்கிறேன் எனக்கும் அந்த ஐந்தறிவு ஜீவனுக்கும் ஒரு முப்பது அடிக்கு மேல இடைவெளி இருக்கும்...

நான் அந்த ஜீவனை பார்த்து என் கண்களால் உற்று நோக்கி என் ஆழ்மனதுக்குள் சில கட்டளைகளை பிறப்பித்தேன்,
குறைத்துக் கொண்டிருந்த அந்த ஜீவனை‌ நிறுத்தச் சொன்னேன் உடனே நிறுத்தியது, கீழே படுக்கச் சொன்னேன் உடனே படுத்தது,
எழுந்து ஓட சொன்னேன் உடனே ஓடியது...

நான் ஆச்சரியம் தாங்காமல் என் வீட்டில் இருந்த என் உறவினர்கள் மீதும், அவர்களுக்குத் தெரியாமல் சில உத்தரவுகளை பிறப்பித்தேன் அவர்களும் அதை செய்து முடித்தனர்...

அந்த தருணம் நான் ஆழ்மனதின் அற்புத சக்தியை பரிபூரணமாக உணர்ந்தேன்...

இந்த சம்பவம் நடந்து ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு அவருடைய கடன் பிரச்சனையை பற்றி சொல்லிட்டு இருந்தார்...
அவர் கடன் வாங்கிய இடத்தில் இருந்து அவருக்கு நிறைய பிரஷர் கடன் கொடுத்தவர் என் நண்பரின் வீட்டுக்கு வந்து ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருந்தார், இதனால் என் நண்பர் தற்கொலை எண்ணத்துக்கு
சென்றுவிட்டார்...

பிறகு நான் அவருக்கு சில சமாதானங்கள் கூறி அந்த கடன் கொடுத்த நபர் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணாம இருக்க நான் என்னால் ஆன காரியங்களை செய்கிறேன் என்று அவருக்கு வாக்குறுதி அளித்தேன்...

என் நண்பரையும் அவருக்கு கடன் கொடுத்த நபரையும் எனக்கு நன்றாக தெரியும் என்ற காரணத்தால் நான் ஆழ்மன சக்தியை உபயோகித்து அந்த கடன் கொடுத்த நபரை என் மனதுக்குள் நினைத்து அவருக்கு சில கட்டளைகள் இட்டேன்...

இந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், என் நண்பர் எனக்கு போன் பண்ணி அந்த கடன் கொடுத்த நபர் கடனை திருப்பி கேட்க வரவே இல்லை என்று சொன்னார்... மேலும் அவருடைய பொருளாதாரம் உயர்வடைந்து அந்தக் கடனைத் நல்லபடியா திருப்பிக் கொடுக்கணும் என்று கேட்டு கொண்டார்.... ஆறு மாதம் கழித்து அதுவும் நடந்தது.

ஆழ்மனசக்தி‌யை உபயோகித்து எண்ணிலடங்கா அற்புதங்கள் செய்யலாம்..


ஆழ் மன சகதி தொடரான ஒரு தேவதையின் ஆத்மார்த்தமான உபாசனையால் வாக்கு பலிதம் அடுத்தவர்களின் மனநிலை இவர்களை உணரலாம்.
அவர்களின் சில செயல்களால் நமக்கு தொல்லை தராமல் செய்யலாம்.அவர்களை கட்டுப்படுத்து என்பதை நம்ப முடியவில்லை.
அரைமணியில் ஆழ்மன சக்தி வெளிப்படுவதை நம்பமுடியவில்லை. நாம்
நினைப்பதை அடுத்துவர்கள் செய்யவைப்பது குறிப்பாக ஆழ் மன சக்தியை மனிதர்கள் மீது பிரயோகிப்பது மிக தவறு.

நன்றி.

பிரார்த்தனை செய்வது எவ்வாறு?

பிரார்த்தனை செய்வது எவ்வாறு?

வாழ்க்கையில் நாம் எதை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்வதில்லை. இந்த சமுதாயமும் மற்றவரும் நமக்கு தேவை இல்லாதவற்றையே கற்றுத் தருகிறார்கள்.நமக்கு ஏதேனும் தேவைப்படும்போது நமக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக கடவுளிடம் போய் வேண்டிக்கொள் கண்டிப்பாக கிடைக்கும் என்று வழிகாட்டுகிறார்கள். நாமும் கடவுளிடம் சென்று முறையிடுகிறோம்.உதாரணமாக எனக்கு பணப் பிரச்சனை உள்ளது எனவே என்னை பணக்காரனாக மாற்று என்று கூறுவதோ அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை ஆரோக்கியமாக மாற்று என்று கூறுவதோ அல்லது எனது பிசினஸ் சரியாக போகவில்லை எனவே எனக்கு மேலும் நல்ல பிசினஸ் ஐ கொடு என்று கூறுவதினாலோ எந்த பயனும் கிடையாது. ஏனெனில் நாம் கூறும் அனைத்து வேண்டுதல்களும் எதிர்மறையான வேண்டுதல்களே. அப்படியானால் நேர்மறையாக எப்படி வேண்டுவது என்றுதானே கேட்டகிறீர்கள்.
இதோ மேற்கூறிய அனைத்தையும் எவ்வாறு நேர்மறையாக கூறுவது என்று பார்ப்போம்.

பணத்தேவைக்கு :
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்னை மிகவும் செல்வவளத்துடன் நல்ல பணவசதியுடனும் மகிழ்ச்சியுடனும் என்ன வைத்திருக்கும் உனக்கு கோடான கோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.

ஆரோக்கியத்திற்கு :
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்ன மிகவும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த சந்தோஷத்துடனும் வைத்திருக்கும் உனக்கு கோடானகோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.
இது போன்று நமக்கு வேண்டிய அனைத்தையும் ஆண்டவன் நமக்கு அளித்துவிட்ட உணர்வோடு சொல்ல வேண்டும்.முக்கியமாக நாம் சொல்லும் சொற்றொடர் PRESENT CONTINUOUS TENSE ல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனுடைய கான்செப்ட் என்னவென்றால் THOUGHTS ,FEELING ,BELIEVES ,
THANKS NOTE AND ACTION . அதாவது உங்களுக்கு ஒரு எண்ணம் வருகிறது அதனை அடைந்துவிட்ட உணர்வுடன் கடவுள் அல்லது இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை தெரிவிக்கும் போது நாம் விரும்பியவை நமக்கு கிடைப்பதற்க்கான வழிமுறைகள் தோன்றிவிடும்.இதுதான் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கான ஒரே வழிமுறை. ஆனால் அதை விட்டுவிட்டு நான் கடனில் உள்ளேன் காப்பாற்று அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் எனக்கு ஆரோக்கியத்தை கொடு என்று கூறும்போது நமது கூற்றில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் தான் நமக்கு திரும்பவும் நடக்கும் .

எனவே நமக்கு எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைத்து விட்டதைப்போல் உணர்வுடன் கடவுளுக்கு நன்றி கூறும்போது அது கிடைப்பதற்க்கான வழிமுறைகள் நம் கண்முன்னே தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதுதான் பிரபஞ்ச விதியாகும்!!!

சரியான முறையில் பிரார்த்தனை செய்து வேண்டியதை பெற்று மகிழ்வோடு இருங்கள் !!!

108 . இந்த நாளும் உங்கள் அனைவருக்கும் மிக இனிய நாளாகட்டும் .

வாழ்க வளமுடன்.