என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !
பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்றால் ஆணும், பெண்ணும் சேராமல் தனிமையில் இருப்பது என்று நினைக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிரம்மச்சரியம் கொள்வதில்லை. இங்கு பிரம்மச்சரியம் என்பது ஒழுக்கமாக இருப்பது தான் !
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டோடு வாழ்ந்து ஒழுக்கமாக இருப்பது தான் பிரம்மச்சரியம் !
இங்கே கூடி வாழ்ந்து கடமையை செய்து நல் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது தான் பிரம்மச்சரியம் !
இங்கே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் தத்துவம் படைப்பின் சூட்சுமம் ! இதில் ரகசியம் ஏதுமில்லை. ரகசியம் என்பது உன் படைப்பு தான் அதை விளக்கி பாடம் சொல்ல அவசியம் இல்லை.
தன்னை உணர்ந்தால் எல்லாம் உணர்வான் !
பெண்ணை அறிந்தால் எல்லாம் அறிவான் !
தன்னை உணர்ந்தால் எல்லாம் உணர்வான் !
பெண்ணை அறிந்தால் எல்லாம் அறிவான் !
நான் உன்னை உணர வைக்க வந்தேன் ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவி நான் அல்ல ! நான் உழைத்து கடமையை செய்து கொண்டிருக்கும் இல்லறத்தான். ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள் ! நல்லறம் கொண்டு பிறருக்கு நல் அறிவு தந்தார்கள். வித்தை எல்லாம் கற்று கொடுத்து வீரனாக மாற்றினார்கள் !
இப்போது தியானம் யோகா என்று சொல்லி ஏமாற்றும் கள்ளத் துறவிகளையும், கபட நாடகமாடும் அற்ப மனிதர்களையும் தான் நான் கண்டேன்.
தனித்திரு என்ற சொல். உன் புலன்களையும், பொறிகளையும் விட்டு தனித்திரு என்று தான் அர்த்தம் ! கட்டிய மனைவியை பெற்ற பிள்ளையை தவிக்கவிட்டு தனிமையில் இருப்பது பிரம்மசரியம் அல்ல !
பெண் இல்லா வாழ்வு பெரு நரகம். பெண்ணே இன்பம் ! பெண்ணே ஞானம் ! மனிதனை ஆணந்தமாக இருக்க வைக்கும் சூட்சுமம் பெண் தான். உனக்கு மீண்டும் பிறப்பில்லா வாழ்வு தர பெண்ணால் மட்டுமே முடியும் ! இங்கே பெண்ணை ஆணந்தமாக வைப்பது தான் ஆணந்தம் ! அவளை புரிந்தால் உன் பிறப்பை தவிர்க்கலாம் !
இப்போது மதம் என்ற போர்வை போர்த்தி அதில் பிரம்மச்சரியம் என்ற இருண்ட சால்வை போர்த்தி ஆட்டம் போடும் மதபிசாசுகளின் கொட்டம் அடக்க கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
உனது பாதை ஞானவழியில், ஒழுக்க வழியில் சென்றால் உலகில் நீ பார்க்கும் இடமெல்லாம் கடவுளின் பூமுகம் தெரியும் ! உன் ஆணவம், அதிகாரம் விலக்கப்பட்டாலே ஆத்மாவின் நித்ய யோகம் புரியும்.
எல்லாம் உன்னுள் இருக்கும் வரை (கர்மா, பாவம்) நீ பூஜ்யம் தான் ! உன்னால் ஆண்மாவை அறிய முடியாது. ஆண்மா தனித்திருப்பது உனக்கு தெரிந்துவிட்டால் யுகம் இருக்கும் வரை உனக்கு ஆணந்தம் தான் !
படைக்கப்பட்டதில் ஆதியிலிருந்து எதுவும் மாறவில்லை ! கூடவில்லை, குறையவில்லை, அதன் இயல்பிலிருந்தும் மாறவில்லை. (நீர், நிலம், வித்துக்கள், பறவைகள், மிருகங்கள்). இந்த நீச மனிதன் தான் மாறிவிட்டான்.
இனி எல்லாம் மாறும் ! மாற்றுவேன் !
இங்கே திருமணம் செய்யாமல் தன் சொந்த நலன் கருதி இருப்பவர்கள் பிரம்மசாரிகள் அல்ல. பிரம்மசாரியத்தை வலுக்கட்டாயமாக செய்வது தான் துக்க மரணம் ! துக்க நிவாரணி கடவுளின் பாதம் மட்டும் தான். மற்றவை எல்லாம் இங்கு பொய் தான் !
போதிப்பவன், உபதேசம் செய்கின்றவன், மதபிரச்சாரம் செய்பவன், உயர்ந்தவன் அல்ல ! அவன் ஞானியும் அல்ல ! கடவுளின் பிள்ளையும் அல்ல ! உழைப்பிற்கான வழியை சொல்லி கொடுப்பவனே ஞானி என்பதை புரிந்து கொள் !
நான் கதை படித்தும், காணொலி பார்த்தும், செவி வழி கேட்டும் யுக தர்மத்தை சொல்லவரவில்லை !
என்னை உணர்ந்தேன் ! உன்னை உணர வைக்க வந்தேன் !
வந்தவர்கள் யாவரும் உழைப்பையும், கடமையையும் சொல்லித் தரவில்லை. உருவாக்கம் எதற்கென்று உன்னை எவரும் உணர வைக்கவில்லை. சித்தாந்தம் பேசி சிதிலமடைந்து மாண்டது தான் மிச்சம்.
அளவம் வைத்து வாழ்கின்றான், ஆளுமை தெரியாமல் !
உன் நித்ய யோகம் நான் !
நான் இநன்யா !