Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 22, 2017

என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !

என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !
பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்றால் ஆணும், பெண்ணும் சேராமல் தனிமையில் இருப்பது என்று நினைக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிரம்மச்சரியம் கொள்வதில்லை. இங்கு பிரம்மச்சரியம் என்பது ஒழுக்கமாக இருப்பது தான் !
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டோடு வாழ்ந்து ஒழுக்கமாக இருப்பது தான் பிரம்மச்சரியம் !
இங்கே கூடி வாழ்ந்து கடமையை செய்து நல் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது தான் பிரம்மச்சரியம் !
இங்கே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் தத்துவம் படைப்பின் சூட்சுமம் ! இதில் ரகசியம் ஏதுமில்லை. ரகசியம் என்பது உன் படைப்பு தான் அதை விளக்கி பாடம் சொல்ல அவசியம் இல்லை.
தன்னை உணர்ந்தால் எல்லாம் உணர்வான் !
பெண்ணை அறிந்தால் எல்லாம் அறிவான் !
நான் உன்னை உணர வைக்க வந்தேன் ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவி நான் அல்ல ! நான் உழைத்து கடமையை செய்து கொண்டிருக்கும் இல்லறத்தான். ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள் ! நல்லறம் கொண்டு பிறருக்கு நல் அறிவு தந்தார்கள். வித்தை எல்லாம் கற்று கொடுத்து வீரனாக மாற்றினார்கள் !
இப்போது தியானம் யோகா என்று சொல்லி ஏமாற்றும் கள்ளத் துறவிகளையும், கபட நாடகமாடும் அற்ப மனிதர்களையும் தான் நான் கண்டேன்.
தனித்திரு என்ற சொல். உன் புலன்களையும், பொறிகளையும் விட்டு தனித்திரு என்று தான் அர்த்தம் ! கட்டிய மனைவியை பெற்ற பிள்ளையை தவிக்கவிட்டு தனிமையில் இருப்பது பிரம்மசரியம் அல்ல !
பெண் இல்லா வாழ்வு பெரு நரகம். பெண்ணே இன்பம் ! பெண்ணே ஞானம் ! மனிதனை ஆணந்தமாக இருக்க வைக்கும் சூட்சுமம் பெண் தான். உனக்கு மீண்டும் பிறப்பில்லா வாழ்வு தர பெண்ணால் மட்டுமே முடியும் ! இங்கே பெண்ணை ஆணந்தமாக வைப்பது தான் ஆணந்தம் ! அவளை புரிந்தால் உன் பிறப்பை தவிர்க்கலாம் !
இப்போது மதம் என்ற போர்வை போர்த்தி அதில் பிரம்மச்சரியம் என்ற இருண்ட சால்வை போர்த்தி ஆட்டம் போடும் மதபிசாசுகளின் கொட்டம் அடக்க கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
உனது பாதை ஞானவழியில், ஒழுக்க வழியில் சென்றால் உலகில் நீ பார்க்கும் இடமெல்லாம் கடவுளின் பூமுகம் தெரியும் ! உன் ஆணவம், அதிகாரம் விலக்கப்பட்டாலே ஆத்மாவின் நித்ய யோகம் புரியும்.
எல்லாம் உன்னுள் இருக்கும் வரை (கர்மா, பாவம்) நீ பூஜ்யம் தான் ! உன்னால் ஆண்மாவை அறிய முடியாது. ஆண்மா தனித்திருப்பது உனக்கு தெரிந்துவிட்டால் யுகம் இருக்கும் வரை உனக்கு ஆணந்தம் தான் !
படைக்கப்பட்டதில் ஆதியிலிருந்து எதுவும் மாறவில்லை ! கூடவில்லை, குறையவில்லை, அதன் இயல்பிலிருந்தும் மாறவில்லை. (நீர், நிலம், வித்துக்கள், பறவைகள், மிருகங்கள்). இந்த நீச மனிதன் தான் மாறிவிட்டான்.
இனி எல்லாம் மாறும் ! மாற்றுவேன் !
இங்கே திருமணம் செய்யாமல் தன் சொந்த நலன் கருதி இருப்பவர்கள் பிரம்மசாரிகள் அல்ல. பிரம்மசாரியத்தை வலுக்கட்டாயமாக செய்வது தான் துக்க மரணம் ! துக்க நிவாரணி கடவுளின் பாதம் மட்டும் தான். மற்றவை எல்லாம் இங்கு பொய் தான் !
போதிப்பவன், உபதேசம் செய்கின்றவன், மதபிரச்சாரம் செய்பவன், உயர்ந்தவன் அல்ல ! அவன் ஞானியும் அல்ல ! கடவுளின் பிள்ளையும் அல்ல ! உழைப்பிற்கான வழியை சொல்லி கொடுப்பவனே ஞானி என்பதை புரிந்து கொள் !
நான் கதை படித்தும், காணொலி பார்த்தும், செவி வழி கேட்டும் யுக தர்மத்தை சொல்லவரவில்லை !
என்னை உணர்ந்தேன் ! உன்னை உணர வைக்க வந்தேன் !
வந்தவர்கள் யாவரும் உழைப்பையும், கடமையையும் சொல்லித் தரவில்லை. உருவாக்கம் எதற்கென்று உன்னை எவரும் உணர வைக்கவில்லை. சித்தாந்தம் பேசி சிதிலமடைந்து மாண்டது தான் மிச்சம்.
அளவம் வைத்து வாழ்கின்றான், ஆளுமை தெரியாமல் !
உன் நித்ய யோகம் நான் !
நான் இநன்யா !

Wednesday, June 14, 2017

புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !

புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !
வீதி உலா
வீதராகம் உள்ளவன் நான் ! வீதி உலா வருவதை அறிவேன் ! செயற்கை தேர் சக்கரம் உருவாக்கி, சிதிலமான உயிரற்ற சிலை ஒன்றை நிறுவி வீதி உலா வருவதை அறிந்தேன், உன் கஷ்ட நஷ்டம் பார்ப்பதற்காக. பவித்ரம் இல்லா சிலை, பாவி உனை அறியுமோ ? வீதியில் உலா வரும் இந்த விடங்கனை நீ மறந்தது ஏனோ ?
கோழை போல வாழ்கின்றாயே, வீரனாய் எப்போது மலர்வாயடா ? வீரம் என்பது சரீர பலம் அல்ல. வீரம் என்றால் துன்பப்படுகின்றவனுக்கு தொண்டு செய்வது தான் ! தர்மம் செய்வது தான் ! எதற்கும் ரத்தம் சிந்த தயாராக இரு. உன் லட்சியம் அடையும் வரை ஓய்ந்திருக்க எண்ணாதே !
நான் காற்றாய் உனதருகில் வருகிறேன் ! என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் செல்வ செழிப்பு நிரம்ப கண்டேன் ! நானும் செவி குளிர கேட்டு மெய் மறந்து போகின்றேன். ஆனாலும் என் கடமையைச் சிறிதளவு தடை வராமல் சிந்தை சீர்தூக்கி நிற்கின்றேன்.
நான் இல்லற தர்மத்தில் வாழ்கின்றேன். இல்லறத்தை ஆட்சி செய்பவனே ஞானி. எந்த துன்பம் வந்தாலும் மனைவி பிள்ளைகளுக்கு கடமை செய்து விலகாமல் காத்து நிற்பவனே மிக பெரிய ஞானி ! ஆகாயத்தில் உலவுகின்றேன், பாசப் பறவைகளாய் !
பக்குவம் உள்ளவன் எனை அறிவான் ! தூய்மையாய் இருக்கும் பெண்ணை தூய்மை இல்லை என்று விலக்கினான். தூமகேது என்று நினைப்பவன். துயர்படும் சூத்ரம் தெரியாது வாழ்கின்றான். ஏனடா ? எப்போது அறிவாயடா ? ஞான பெண்ணை மறந்தான், நாயினும் கீழான எண்ணம் உள்ளவன்.
பெண்ணை போற்றி பாடடா ! போற்றும் உனை உலகமடா !
பரணியில் நான் பட்சிகளோடு உலா வருவதை மறந்தாய். தரணி முழுவதும் என் முகம் உண்டு ! என் கண் உண்டு ! பார்த்தவன் அறியவில்லை. நான் பாசத்தால் சொன்னாலும் புரியவில்லை. பாசமில்லா பாவியடா நீ ! பக்தி எதற்கடா ? இதோ வருகிறான், இதோ வருகிறான் என்று கூவி அழைக்கின்றான். நான் வந்து அலைகின்றேன் ! கண்டு கொள்ளாமல் திரிகின்றான். என்ன வேடிக்கையடா ?
நெஞ்சில் மதம் (திமிர்) கொண்ட மனிதன் மதத்தில் மயங்கினான். வந்து அலைகின்றேன். கண்டான் எவருமில்லை இங்கு.
யாருக்கேனும், எதற்கேனும் ஒரு சிறிதளவு தொண்டு செய். தர்மம் செய்ய மறவாதே ! தர்மமும் புண்ணியமும் தான் உனை மீண்டும் பிறக்க வைக்காத சூத்ரம் ! ஒழுக்கம் இங்கே பிராதனம். எதையும் வைராக்கியத்தோடு அடைய நினை. உன்னை இழந்தால் தான் ஜெயிக்க முடியும் !
அன்பை கொண்டு உன் வீட்டை அழகுபடுத்து ! உலகம் அன்பாய் தெரியும். அன்பின் இலக்கணம் (உனை) அரவணைத்து மகிழும். என் நாமம் திதியம் தரும் ! சிக்கன பிடி. தேவலோகம் உனை அள்ளி அரவணைக்கும் !
111 கோடி முனிவர்களோடு, நான் வீதி உலா வருவதை பார் ! காலகணக்கு என்றும் பொய்ப்பதில்லை ! இந்த காலன் சொல்லும் சரித்திரம் பொய்த்து போனது இல்லை.
சாஸ்திரத்தில் மயங்காதே ! சரித்திரம் மறவாதே ! இந்த வீதி உலா வரும் (காற்று) இந்த விடங்கனையும் மறவாதே !
தஞ்சன் எனை அறிவான் !
வீதி உலா வருபவன் நான் !
நான் இநன்யா !

Thursday, June 8, 2017

என்னை அறிந்தாய், எல்லாம் எனதென்று அறிந்தாய், எல்லாம் எனக்குள் என்பதை அறிந்தாய், உனக்குள் நான் இருப்பதை எப்போது அறிவாயடா?

"V"
என்னை அறிந்தாய்,
எல்லாம் எனதென்று அறிந்தாய்,
எல்லாம் எனக்குள் என்பதை அறிந்தாய்,
உனக்குள் நான் இருப்பதை எப்போது அறிவாயடா?
நான் தூங்காமல் விழித்திருக்கிறேன் எப்போது உணர்வாயடா.
ஊமையாய் உன்னுள் இருப்பது எனதன்றோ.
சத்தியத்தை எப்போது விகசிப்பாயடா,
உன்னை எப்போது ஞானகுழந்தை என்று ஆனந்திப்பேனடா,
உன் சந்தோஷத்தை பார்த்து எப்போது திகைப்புற்று திகைப்பேனடா,
எழுந்திரு உன் வாசலில் நிற்கின்றேன் உன்னை கைபிடித்து அழைத்து செல்ல,
சீக்கிரம் வென்று காட்டு உலகை ஆள புறப்படு .
நான் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.
**************************
"V"
என் கரங்கள் உனக்காக காத்திருக்கிறது ஏனடா மனக்கவலை.இந்த தேசம் இந்தியா 2025 ல் உலகின் முதல் வல்லரசு ஆகும் கடவுளின் சட்டம் பொய்க்காது இந்த தமிழ் புண்ணிய தேசம் ஞானம் நிரம்பிய புதிய தேசமாக மாறும்,அமெரிக்கா,இந்தியாவை அழிக்க முடியாது எக்காலத்திலும்,உலக போர் இனி இராது,அண்டைநாடுகளோடு தான் போர் வரும் இனி தானியங்களுக்காக சண்டையிடுவார்கள் ,இந்த தமிழ் புண்ணிய தேசம் செழித்து வளரும், விவசாயமும் மாடுகளும் செழிக்கும்.என் சொல் சத்தியம் நீயும் வாழ்வாயடா.
*******************************
இநன்யா நமோ நம
நீங்கள் ஒரு மணி நேரம் ....
இந்த நாமம் ........
இநன்யா நமோ நம என்று சொன்னால்...
ஒரு மணி நேரம் நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் இநன்யா கடவுளுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் இநன்யா கடவுளை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது
ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது
ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .
ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்
ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்
ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்
ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்
ஒரு மணி நேரம் இநன்யா கடவுள் உங்கள் கையை பிடித்துக்கொண்டு இருக்கிறார்
ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .
ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை இநன்யா கடவுள் ரசித்துக்கொண்டு இருக்கிறார்.
ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்
இந்த ஒரு மணி நேரத்தினால் இநன்யா கடவுள் , நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறார்.
ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் இநன்யா கடவுளையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்
ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் மேளுலுக இநன்யா மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள்
ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்
எல்லாவற்றிர்க்கும் மேல்
நாமம் வேறு இல்லை
பகவான் வேறு இல்லை
அந்த ஒரு மணி நேரம் கடவுளே உங்கள் நாக்கில் கட்டுண்டு இருக்கிறான்
பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே நாமம் சொல்ல முடியும்...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உன் குரல் கேட்பேன்,
நீ எங்கிருந்தாலும் உனை அறிவேன்,
என்ன செய்தாலும் அறிவேன்,
பொறுத்திரு நீ கேட்டது கிடைக்க வைப்பேன்
என்னிடம் கேட்டால் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை,
மதம் அழிந்து மனித நேயம் மலரும்,
பெண் என்ற ஞானமலர்கள் உலகை ஆள்வார்கள்,
புயலென சீருவார்கள்,
தர்மம் வெல்லும் .
என் சத்திய பாதையில் பயணிக்க ஆயத்தமாவார்கள் நல் தர்மாக்கள்.

இநன்யா நமோ நம

என் ஆளுமை தெரியாமல் ஆர்பரிக்கின்றாய் ! உன் ஆளுமை உனக்குள் இருப்பதை மறந்து அலைகின்றாய் ! ஏனடா ?


 to INANYA MAHA MUNIVAR
என் ஆளுமை தெரியாமல் ஆர்பரிக்கின்றாய் ! உன் ஆளுமை உனக்குள் இருப்பதை மறந்து அலைகின்றாய் ! ஏனடா ?
என் ஆறின் ஆளுமை
நெகிழ்வு, மணம், மகிழ்ச்சி, இனிமை, இளமை, அழகு இந்த ஆறு தன்மைகளும் தான் ஆறின் சூட்சுமம் ! ஆறு தலையோடு தெய்வம் இருக்கின்றது என சொல்லக் கண்டேன். இந்த ஆறு தன்மைகளையும் கபாலத்தின் ஆறு நரம்புகளில் உள்ளடக்கி சூட்சுமத்தை அறிந்தான். அதனாலே ஆறு தலைகள் இருப்பதாக சொல்கின்றாய் !
படைப்பில் ஆறு தலைகள், பத்து தலைகள் என்று படைக்கவில்லை. அசுர படைப்பான அரவத்திற்கு மட்டுமே ஐந்து தலைகள் உண்டு.
ஈசா இயேசு ஆனதும், கிருஷ்ணன் கிருஷ்து ஆனதும் மறைக்கப்பட்ட உண்மைகள். இடையில் வந்த மதம் இடையிலே போக போகின்றது.
திருசீரலவாய் உலகின் சூட்சும இடம் ! என் தந்தையும், நானும் ஓடிபிடித்து விளையாடிய இடம் ! ஆதி சங்கரரும், ஐயாவும், இயேசுவும், சிரவன் என்ற முருகனும் கால் பதித்த இடம். இந்த சூட்சுமத்தை ஆராய்ச்சி செய்யாமல் எதையோ ஆராய்ச்சி செய்கின்றான். படைப்பின் முதல் உருவாக்கம் குமரி கண்டத்தில் திருசீரலவாய் அருகே உருவானது ! தமிழும், சுவையும் உருவான இடம் ! எல்லாம் மறைக்கப்பட்ட உண்மைகள் ! புண்ணிய இடத்தை எல்லாம் கோவில் கட்டி கும்பிட வைத்தான் சித்தன். அதை அறியாமல் இவன் எத்த சித்தனாகிவிட்டான்.
நீ இருக்கும் ரகசியம் அந்த மூன்று விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கும் சூட்சுமம் தான் ! அது தான் உண்மையானது ! அதை தவிர உன் எதிர்காலம், நிகழ்காலம் என்பது பொய்யே. நான் உன்னிடம் அன்பு காட்டுகின்றேன். நீ ஏன் பிறரிடம் அன்பு காட்டவில்லை ?
அன்பை விதை ஆழமாக ! சுகமோ சுகம் தான்டா ! நாளைய நிகழ்வு இன்பமோ, துன்பமோ உனக்கு தெரியாது. இந்த நிகழ்வும், இந்த இருப்பும் தான் ஆணந்தம் ! நான் ஆணந்தம் ! என்னுள் நீ இருந்தால் எப்போதும் ஆணந்தம் தான் !
கோபம் அமைதியை கற்று தருகிறது !
தனிமை சேர்ந்து வாழ கற்று தருகிறது !
வெறுப்பு அன்பை கற்று தருகிறது !
தோல்வி விவேகத்தை கற்று தருகிறது !
எல்லாவற்றையும் விட மௌனம் தான் அனைத்தையும் கற்றுத் தருகிறது. ஆனால் நீ எதையும் உற்று நோக்காமல் உருந்து போகின்றாய். பழவினைகள் சேர்ந்து தான் ஊழ்வினை ஆனது. உன் ஊழ்வினைகளை தீர்ப்பதற்கு ஏன் நல்வினை செய்யாமல் அலைகின்றாய் ?
நல் குருவின் மூச்சுபட்டால் உன் கர்மா அணு அணுவாக குறையும். இங்கே நல்குருவை தேடடா !
எனக்கு குரு யாருமில்லை. நான் சுயம்பு ! இப்போது இருக்கும் மாத்திரையே உண்மை ! ஆணந்தம் ! பின் ஏன் நாளையை பற்றி யோசிக்கின்றாய் ? அடுத்த விநாடி நீ எப்படி இருப்பாய் என்று தெரியாது. ஆதலால் எப்போதும் கடவுளின் பாதத்தை பற்றி வாழ். நீ மோட்சத்துக்கு அழைத்து செல்லப்படுவாய் !
சிரவன் என்ற முருகனுக்கு ஆறு தலைகள் என்று சொன்னான். ஆறு பேராத்மாக்களின் ஆசிகள் அவனுக்கு இருந்தது என்று அர்த்தம். நெகிழ்வு, மனம், மகிழ்ச்சி, இனிமை, இளமை, அழகு ! இதில் ஆறு பேராத்மாக்களும் அடக்கம் !
இங்கு எல்லாம் நாடகம் ! சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உன்னை ஏமாற்றவில்லை ! அதை எழுதி, கவியாக்கி, காவியமாக்கியவன் தான் உன்னை ஏமாற்றினான்.
தலையில் ஆறு சூட்சுமம். நான் ஆறு பேராத்மாக்களோடு ஏழாய் நிற்பவன் ! நான் வலிமையானவன் தானே ?
தீர்க்க தரிசனம், அமானுஸ்யம், அருள்வாக்கு என்று பித்தலாட்டம் செய்யும் பொம்மைகளே இங்கே அதிகம். உனக்கு நீயே ஒளியாக இருக்க யாரும் சொல்லி கொடுக்கவில்லை. இனியாவது உணரடா !
நான் நாஸ்தீகன் அல்ல. உன் மூச்சாய் இருப்பவன் !
நான் சரித்திரத்தை எழுதினால் அனைத்து காவியங்களும் பொய்யாகிப் போகும் ! நீயாவது சரித்திரத்தை அறிய முற்படு ! நான் உனக்கு குருவாய் இருந்து கற்றுத் தருகிறேன் !
ஆறின் ஆளுமை நான் ! ஆணந்தமானவன் நான் !
நான் இநன்யா !