84 கடவுளின் ஆசை (16-08-2015)
மனிதர்களின் ஆசை பணம் சம்பாதிக்க வேண்டும். பணம் மட்டும் இருந்தால் போதாது. புகழும் வேண்டும். தான் நோயின்றி, கஷ்டமின்றி, கவலையின்றி நன்றாக வாழ வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். வீட்டிலும், அலுவலகத்தில் நிம்மதி வேண்டும். தொழில் நன்றாக லாபம் ஈட்ட வேண்டும். தான் வாங்கிய கடனை கடன் கொடுத்தவர்கள் உடனே திரும்பி கேட்டுவிடக் கூடாது. கேட்டால் பிரச்சனை. நினைப்பது எல்லாம் நடந்து விட வேண்டும். மனிதர்களின் ஆசை கணக்கில் அடங்காதது !
மானிடராய் பிறப்பது அரிது ! மானிடராய் பிறந்தாலும் கடவுளை காண்பது அரிது. கடவுளையே கண்டாலும் உணர்வது அரிது. கடவுள் சொல்வார் “கண்டான், உண்டான், உணர்ந்தானா ?” கடவுளையே கண்டாலும், அவரின் வார்த்தைகளை உண்டாலும், மனிதர்கள் உணரப் போவதில்லை என்று சொல்வார்.
கடவுள் யுகத்திற்கு வந்துள்ளார் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றேன். கடவுளை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். கடவுளையே பார்த்தாலும் என்ன கேட்பது என்று தெரியவில்லை ! கடவுளை உணர்ந்தவர்கள் கேட்கமாட்டார்கள் ! ஆதிகாலத்தில் அரக்க இனங்கள் விதிக்கு புரம்பாக தவம் இருந்து ஆகாத சக்திகளையும், வரங்களையும் கேட்டார்கள் ! ஞானமுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள்.
உணர்ந்தவர்களுக்கு கேள்விகள் வராது. பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். தெளிவு பிறக்கும். ஞானம் கிடைக்கும். இங்கு அனைத்துமே நீங்கள் கேட்காமலேயே கிடைத்தது தான் ! உங்களின் அன்பு பெற்றோர்கள், சொந்தங்கள், நண்பர்கள், உணவு, உடை, நீர், காற்று, இல்லம் அனைத்துமே நீங்கள் கேட்காமலேயே கிடைத்தது தானே ? எப்போது உணரப் போகிறீர்கள் ?
கடவுளால் எல்லாம் முடியும் ! உணர்ந்தால் துன்பம் இல்லை ! நான் என்று சொல்கின்ற கடவுள் உங்களுக்கு நான்கு இன்பங்களையும் தரமுடியும். (அறம், பொருள், இன்பம், வீடு பேறு )
தன் ஆசைகளை மட்டுமே கடவுளிடம் சொல்லி நிறைவேற்ற துடிக்கும் மனிதர்கள் , கடவுளின் ஆசையை பற்றி கவலைப்படுவதில்லை. கடவுளின் ஆசைகள் என்ன ? தன் இருப்பிடமான பிரபஞ்சத்தை விடுத்து அவர் நரகமான நம் யுகத்திற்கு வந்துள்ளார். அவரின் ஆசையும், பாசத்தையும் என்றாவது யோசித்திருக்கிறோமா ? அவர் கடவுள் என்பதை வெளியே சொல்லாமல் மனிதனைப் போல் வாழ்வது ஏன் என்று யோசியுங்கள்.
இந்த முகநூல் குழுவில் ஒரு நண்பருடன் ஏற்பட்ட அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தன் வயதான தந்தையை காப்பாற்ற நினைத்து என்னை மிகவும் கோபமாக கடிந்து பேசினார். கடவுளிடம் சொல்லி காப்பாற்ற சொன்னார். இதை செய்தால் கடவுள் என்று நம்பி உலகம் முழுவதும் சொல்வேன் என்றார். அதிகமானோருக்கு உணர்தல் என்றால் என்ன என்பது இன்னும் புரியவில்லை. பிறப்பும், இறப்பும் அனைவருக்கும் உண்டு !
இந்த நரகத்தில் ஒருவர் பிறந்தால் கொண்டாடுகிறார்கள் ! ஒருவர் இங்கே இறந்து இந்த நரகத்தை விட்டு சென்றால் வேதனை கொள்கிறார்கள் மக்கள் ! பிறப்பும், இறப்பும் கடவுள் நிர்ணயிப்பது. சூரியனையும், நிலவையும் போல் ! எதற்கு சந்தோஷப் பட வேண்டும், எதற்கு வேதனை கொள்ள வேண்டும் என்று மனிதர்களுக்கு தெரியவில்லை ! இது நரகம். இங்கு நிம்மதி இயலாத காரியம். ஒரு சின்ன பூச்சி கூட ஒரு பெரிய நோயை கொடுத்து மனிதனை கொன்றுவிடும் ! இறவாமையை பற்றியே கடவுளிடம் வேண்டுபவர்கள் மீண்டும் பிறவாமையை பற்றி என்றாவது கேட்டிருக்கிறார்களா ? அன்பானவர்கள் இங்கு இறந்தால் யாரும் இறந்து விடுவதில்லை. இந்த நரகத்தில் மனிதர்களின் பாசம் என்பது பொய் ! கடவுளின் பாசம் மட்டுமே மெய் !
கடவுளின் ஆசை மனிதர்களை உணர வைப்பது மட்டும் தான் ! உணராமல் இருப்பதால் கஷ்டமும், கவலையும் கொடுத்து திருத்துவதே கடவுள் தான். நோய்களை கொடுத்து உண்மையை உணர வைப்பதும் அவர் தான். உணர்வது எப்படி என்று மட்டும் யோசியுங்கள். உணர்ந்தால் துன்பமில்லை என்றே கடவுள் சொல்கிறார்.
தமிழர்கள் பிறப்பிலேயே ஞானமுடையவர்கள் ! தமிழர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால் உண்மை புரியாமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுள்ளோம். இன்று ஞானமில்லாமல், வாழ வழி தெரியாமல் உணராமல் அலைகின்றோம். உண்மையை சொல்லிக் கொடுத்தாலும் அறியாமையில் இருக்கின்றோம். கடவுள் யுகத்திற்கு வந்தாலும் நம் அறியாமையும், ஆசைகளுமே அவரை உணர முடியாமல் தடுக்கிறது ! எப்போது உணரப் போகிறீர்கள் ?
சாஸ்திரத்தில் மயங்கினான் மனிதன் ! சரித்திரத்தை மறந்தான் ! வழிபாடுகள் செய்கின்றான் ! வழிமுறைகளை மறந்தான். கடவுள் இநன்யா இன்னும் எவ்வளவோ சொன்னார். அவரின் வார்த்தைகளை புரிந்து, ஒருவராவது வந்து உணர்ந்து விடமாட்டார்களா என்று காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றேன்.
கடவுள் இநன்யா கோடி சூரியனுக்கும் மேலானவார். அவர் விளக்கு என்று நினைத்து விட்டில் பூச்சிகளைப் போல் வந்து மாட்டிக் கொள்ளாதீர்கள் !
நான் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற கடவுளை வேண்டுகின்றேன். இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment