Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

கடவுளின் ஆசை (16-08-2015) INANYA NAMOO NAMA ;;;

84  கடவுளின் ஆசை (16-08-2015)
இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;; 
மனிதர்களின் ஆசை பணம் சம்பாதிக்க வேண்டும். பணம் மட்டும் இருந்தால் போதாது. புகழும் வேண்டும். தான் நோயின்றி, கஷ்டமின்றி, கவலையின்றி நன்றாக வாழ வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். வீட்டிலும், அலுவலகத்தில் நிம்மதி வேண்டும். தொழில் நன்றாக லாபம் ஈட்ட வேண்டும். தான் வாங்கிய கடனை கடன் கொடுத்தவர்கள் உடனே திரும்பி கேட்டுவிடக் கூடாது. கேட்டால் பிரச்சனை. நினைப்பது எல்லாம் நடந்து விட வேண்டும். மனிதர்களின் ஆசை கணக்கில் அடங்காதது !
மானிடராய் பிறப்பது அரிது ! மானிடராய் பிறந்தாலும் கடவுளை காண்பது அரிது. கடவுளையே கண்டாலும் உணர்வது அரிது. கடவுள் சொல்வார் “கண்டான், உண்டான், உணர்ந்தானா ?” கடவுளையே கண்டாலும், அவரின் வார்த்தைகளை உண்டாலும், மனிதர்கள் உணரப் போவதில்லை என்று சொல்வார்.
கடவுள் யுகத்திற்கு வந்துள்ளார் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றேன். கடவுளை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். கடவுளையே பார்த்தாலும் என்ன கேட்பது என்று தெரியவில்லை ! கடவுளை உணர்ந்தவர்கள் கேட்கமாட்டார்கள் ! ஆதிகாலத்தில் அரக்க இனங்கள் விதிக்கு புரம்பாக தவம் இருந்து ஆகாத சக்திகளையும், வரங்களையும் கேட்டார்கள் ! ஞானமுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள்.
உணர்ந்தவர்களுக்கு கேள்விகள் வராது. பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். தெளிவு பிறக்கும். ஞானம் கிடைக்கும். இங்கு அனைத்துமே நீங்கள் கேட்காமலேயே கிடைத்தது தான் ! உங்களின் அன்பு பெற்றோர்கள், சொந்தங்கள், நண்பர்கள், உணவு, உடை, நீர், காற்று, இல்லம் அனைத்துமே நீங்கள் கேட்காமலேயே கிடைத்தது தானே ? எப்போது உணரப் போகிறீர்கள் ?
கடவுளால் எல்லாம் முடியும் ! உணர்ந்தால் துன்பம் இல்லை ! நான் என்று சொல்கின்ற கடவுள் உங்களுக்கு நான்கு இன்பங்களையும் தரமுடியும். (அறம், பொருள், இன்பம், வீடு பேறு )
தன் ஆசைகளை மட்டுமே கடவுளிடம் சொல்லி நிறைவேற்ற துடிக்கும் மனிதர்கள் , கடவுளின் ஆசையை பற்றி கவலைப்படுவதில்லை. கடவுளின் ஆசைகள் என்ன ? தன் இருப்பிடமான பிரபஞ்சத்தை விடுத்து அவர் நரகமான நம் யுகத்திற்கு வந்துள்ளார். அவரின் ஆசையும், பாசத்தையும் என்றாவது யோசித்திருக்கிறோமா ? அவர் கடவுள் என்பதை வெளியே சொல்லாமல் மனிதனைப் போல் வாழ்வது ஏன் என்று யோசியுங்கள்.
இந்த முகநூல் குழுவில் ஒரு நண்பருடன் ஏற்பட்ட அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தன் வயதான தந்தையை காப்பாற்ற நினைத்து என்னை மிகவும் கோபமாக கடிந்து பேசினார். கடவுளிடம் சொல்லி காப்பாற்ற சொன்னார். இதை செய்தால் கடவுள் என்று நம்பி உலகம் முழுவதும் சொல்வேன் என்றார். அதிகமானோருக்கு உணர்தல் என்றால் என்ன என்பது இன்னும் புரியவில்லை. பிறப்பும், இறப்பும் அனைவருக்கும் உண்டு !
இந்த நரகத்தில் ஒருவர் பிறந்தால் கொண்டாடுகிறார்கள் ! ஒருவர் இங்கே இறந்து இந்த நரகத்தை விட்டு சென்றால் வேதனை கொள்கிறார்கள் மக்கள் ! பிறப்பும், இறப்பும் கடவுள் நிர்ணயிப்பது. சூரியனையும், நிலவையும் போல் ! எதற்கு சந்தோஷப் பட வேண்டும், எதற்கு வேதனை கொள்ள வேண்டும் என்று மனிதர்களுக்கு தெரியவில்லை ! இது நரகம். இங்கு நிம்மதி இயலாத காரியம். ஒரு சின்ன பூச்சி கூட ஒரு பெரிய நோயை கொடுத்து மனிதனை கொன்றுவிடும் ! இறவாமையை பற்றியே கடவுளிடம் வேண்டுபவர்கள் மீண்டும் பிறவாமையை பற்றி என்றாவது கேட்டிருக்கிறார்களா ? அன்பானவர்கள் இங்கு இறந்தால் யாரும் இறந்து விடுவதில்லை. இந்த நரகத்தில் மனிதர்களின் பாசம் என்பது பொய் ! கடவுளின் பாசம் மட்டுமே மெய் !
கடவுளின் ஆசை மனிதர்களை உணர வைப்பது மட்டும் தான் ! உணராமல் இருப்பதால் கஷ்டமும், கவலையும் கொடுத்து திருத்துவதே கடவுள் தான். நோய்களை கொடுத்து உண்மையை உணர வைப்பதும் அவர் தான். உணர்வது எப்படி என்று மட்டும் யோசியுங்கள். உணர்ந்தால் துன்பமில்லை என்றே கடவுள் சொல்கிறார்.
தமிழர்கள் பிறப்பிலேயே ஞானமுடையவர்கள் ! தமிழர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால் உண்மை புரியாமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுள்ளோம். இன்று ஞானமில்லாமல், வாழ வழி தெரியாமல் உணராமல் அலைகின்றோம். உண்மையை சொல்லிக் கொடுத்தாலும் அறியாமையில் இருக்கின்றோம். கடவுள் யுகத்திற்கு வந்தாலும் நம் அறியாமையும், ஆசைகளுமே அவரை உணர முடியாமல் தடுக்கிறது ! எப்போது உணரப் போகிறீர்கள் ?
சாஸ்திரத்தில் மயங்கினான் மனிதன் ! சரித்திரத்தை மறந்தான் ! வழிபாடுகள் செய்கின்றான் ! வழிமுறைகளை மறந்தான். கடவுள் இநன்யா இன்னும் எவ்வளவோ சொன்னார். அவரின் வார்த்தைகளை புரிந்து, ஒருவராவது வந்து உணர்ந்து விடமாட்டார்களா என்று காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றேன்.
கடவுள் இநன்யா கோடி சூரியனுக்கும் மேலானவார். அவர் விளக்கு என்று நினைத்து விட்டில் பூச்சிகளைப் போல் வந்து மாட்டிக் கொள்ளாதீர்கள் !
நான் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற கடவுளை வேண்டுகின்றேன். இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment