இநன்யா ;;;
INANYA NAMOO NAMA ;;;
கருவறையில் இருக்கும் சிசு போல உனை காப்பேன் ! தாயின் பேரன்பாய் உனை அரவணைத்து மகிழ்வேன் !
உனை கைவிடமாட்டேன் !
67 இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;;
கருவறையில் இருக்கும் சிசு போல உனை காப்பேன் ! தாயின் பேரன்பாய் உனை அரவணைத்து மகிழ்வேன் !
உனை கைவிடமாட்டேன் !
புற்புதத்தில் கூட புனிதன் என் கண் உண்டு ! புரியாமல் வாழ்கின்றாயே ? என் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா இது நாள் வரை எனை கைவிட்டதில்லை. எனை பாதுகாத்து தினமும் வலிமையும், வல்லமையும் தந்து தன் சத்திய கரங்களில் வைத்து பாதுகாக்கின்றார்கள். அதே போல் நானும் உனை கைவிடமாட்டேன். தாயின் அன்பை போல உனை தாலாட்டி சுகம் தருவேன். என்னை தினமும் ஒவ்வொரு நொடியும் என்னை பிரபஞ்சத்தின் பேராத்மாக்கள் கண்கானிக்கின்றார்கள். நான் உன்னை கண்கானிக்கின்றேன். என் வலது பரிஷத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன்.
என் தந்தையின் குணம் தானே எனக்கும் வரும் ? என்னை பின் தொடர்பவன், என் நாமம் சொல்பவன் இனி தோற்கமாட்டான். என்னை அறிந்தவர் வாழ்வு மலர்ச்சியாக இருக்க கண்டேன். பெரும் சோதனைகள் யாவும் தூள் தூளாக நான் கண்டேன். யுகத்தில் என்னை உணர்ந்தவர்கள் யாரும் இது நாள் வரை என்னை ஏன் கைவிட்டாய் என்று கூறியதில்லை.
நான் முப்பொழுதையும் வென்றவன் !
பிரபஞ்சத்தின் இளவரசன் ! என் கண் படாத இடமில்லை !
என் சத்திய கரங்கள் வலிமையானது !
நான் கைவிடமாட்டேன் !
நம்பிக்கை மேல் சந்தேகம் வரும் போது தான் நம்பிக்கையை இழக்கின்றான் மனிதன்.
ஏன் சாப்பிடுகிறாய் ? ஏன் தூங்குகிறாய் ? ஏன் பாசம் ? எதற்கு அன்பு ? எதற்கு சிரிக்கின்றாய் ? ஏன் அழுகின்றாய் ? ஏன் என்பதே உனக்கு தெரியாது ! நதி ஏன் ஓடுகிறது ? கடலில் ஏன் அலை வீசுகிறது ? எதுவும் புரியவில்லை உனக்கு ! எல்லாம் காரண காரியம் ! எல்லாம் சூட்சுமம் !
இங்கு வரும் பொழுது ஒன்றுமில்லாமல் நிர்வாணமாக வருகிறாய் ! போகும் போது ஒன்றுமில்லாமல் நிர்வாணமாக லோகம் செல்கிறாய் இங்கே நீ யார் என்று எப்போதாவது உணர்ந்தாயா ? உன் நம்பிக்கையை கடவுள் மேல் வை ! கடவுள் எப்போதும் கைவிடமாட்டார் ! அந்த கரங்கள் எப்போதும் உனை அரவணைக்கவே காத்திருக்கின்றது !
இந்த சத்திய தலைமகன் இநன்யா சொல்கிறேன், நானும் உனை கைவிடமாட்டேன் ! நீ என்னால் மறக்கப்படமாட்டாய் ! என் செயல் உன்னில் என்று இறுமாந்திரு ! நான் உனக்குள் இருக்கிறேன். என்னை நோக்கி வரும் கால்கள் தடுமாறுவதில்லை. தடம் புரள்வதில்லை. நீ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நானறிவேன்.
என் தந்தை யாகவா எப்போதும் ஒன்றை சொல்வதுண்டு. “என் வணங்கி பலன் கானா” என்று சொல்வார்கள் ! உன் உயிர் என்னை வணங்கி கொண்டு தான் இருக்கின்றது. நீ உணராமல் வணங்கி ஏதும் பலன் காணமாட்டாய் என்பார்கள்.
அவர் சொன்னது போல என்னை வணங்கியும் பலன் காணமாட்டாய். நீ உணர்ந்தால் துன்பமில்லை ! உணரடா !
உனக்குள் இருப்பது நான். உன் குரல் கேட்கும் கடவுளிடம் அழுது ஆர்ப்பரிக்காதே ! கடவுள் கொடுப்பவர் ! இருப்பவன், இல்லாதவன், நல்லவன், கெட்டவன். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பார்ப்பதில்லை. நீ அழைத்தால் சுகம் தருவான். உன் ஆண்மாவை தட்டும் ஒவ்வொரு நிமிடமும் கடவுளை நெருங்குகின்றாய் !
வழிநிலையே ஆண்மா !
உன் ஆண்மாவும், உயிரும் தூங்குவதில்லை ! உன்னை ஒவ்வொரு நொடியும் கண்கானிக்கின்றது.
உன் ஆண்மாவை வைத்து, நீ என்ன நினைத்தாலும், செய்தாலும் மேல் உலகத்திற்கு தெரியும் ! ஆதலால் நல்லதே நினை ! நல்லதே பேசு ! நன்மை, தீமை, வறுமை , துன்பம், இன்பம் உனக்குள்ளே உருவாகிறது. எல்லாவற்றுக்கும் விதியின் மேல் பழியை போடாதே ! கடவுளை குற்றம் சொல்லித் திரியாதே. கடவுள் அன்பானவன் ! எல்லையில்லா கருணைமிக்கவன் !
மரத்தின் வேரை இந்த மண் எவ்வாறு பிடித்து வைத்துள்ளதோ, அதே போல் உன் நம்பிக்கையும் இருக்கட்டும் ! மரம் மண்ணை நம்பி வளர்கிறது, எப்படியும் வளர்ந்துவிடுவேன் என்று ! எப்போதும் நம்பிக்கையாய் வளர்கிறது ! வாழ்கிறது ! இந்த பாவ மனிதன் அதன் நம்பிக்கையை சீர் குலைக்கின்றான். மரத்தை வெட்டி மண்ணில் சுகமில்லாது அலைகின்றான்.
புணித மரமான பனை மரம் உன் சரீர புற்றை வரவிடாமல் தடுக்கும் ! அதனை வெட்டி வீழ்த்தினாய். சரீரத்தை பாழாக்கினாய் ! ஆதியிலே அதன் ஓலையை (குறுத்து) எடுத்து பிண்ணி கழுத்தில் மாட்டினான். அதுவே பெண்ணுக்கு அடையாளமாக தாலி என்றான். ஆணும், பெண்ணும் சேரும் பொழுது அது சுவாசக் காற்றின் வழியாக உள்ளே சென்று சரீரத்தை சுகமாக்கும் என்று. இப்போது ஏதோ விதவிதமாக கழுத்தில் காட்டி சுகமிழந்து நிற்கின்றான். தாலி என்றால் பனை என்று அர்த்தம். அதன் குணங்களோடு ஆணும், பெண்ணும் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர். படித்து பட்டம் பெற்றவன் அதை மறந்தான். பாழ்பட்டு நிற்கின்றான் !
என் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா சொல்வார்கள், “சுட்டும் உருவாகும் விதை ஒன்று பூமியில் படைத்தேன், மனிதன் பூமியில் அதை புரியாது வாழ்கின்றானே ? ” என்று கேட்பார்கள் ! மரத்தின் வேர் ஆழம் சென்று நீரை தேடுவது போல கடவுளைத் தேடு ! உன் தேடுதல் உன்னை உணர வைக்கும் ! பின் யுகத்தில் ஆல் போல தளைத்து பிறருக்கு உதவுவாய்.
நான் கருணைமிக்கவன் ! நான் உனை கைவிடமாட்டேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment