Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; கருவறையில் இருக்கும் சிசு போல உனை காப்பேன் ! தாயின் பேரன்பாய் உனை அரவணைத்து மகிழ்வேன் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; 

INANYA NAMOO NAMA ;;; 

கருவறையில் இருக்கும் சிசு போல உனை காப்பேன் ! தாயின் பேரன்பாய் உனை அரவணைத்து மகிழ்வேன் !

உனை கைவிடமாட்டேன் !

67 இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 
கருவறையில் இருக்கும் சிசு போல உனை காப்பேன் ! தாயின் பேரன்பாய் உனை அரவணைத்து மகிழ்வேன் !
உனை கைவிடமாட்டேன் !
புற்புதத்தில் கூட புனிதன் என் கண் உண்டு ! புரியாமல் வாழ்கின்றாயே ? என் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா இது நாள் வரை எனை கைவிட்டதில்லை. எனை பாதுகாத்து தினமும் வலிமையும், வல்லமையும் தந்து தன் சத்திய கரங்களில் வைத்து பாதுகாக்கின்றார்கள். அதே போல் நானும் உனை கைவிடமாட்டேன். தாயின் அன்பை போல உனை தாலாட்டி சுகம் தருவேன். என்னை தினமும் ஒவ்வொரு நொடியும் என்னை பிரபஞ்சத்தின் பேராத்மாக்கள் கண்கானிக்கின்றார்கள். நான் உன்னை கண்கானிக்கின்றேன். என் வலது பரிஷத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன்.
என் தந்தையின் குணம் தானே எனக்கும் வரும் ? என்னை பின் தொடர்பவன், என் நாமம் சொல்பவன் இனி தோற்கமாட்டான். என்னை அறிந்தவர் வாழ்வு மலர்ச்சியாக இருக்க கண்டேன். பெரும் சோதனைகள் யாவும் தூள் தூளாக நான் கண்டேன். யுகத்தில் என்னை உணர்ந்தவர்கள் யாரும் இது நாள் வரை என்னை ஏன் கைவிட்டாய் என்று கூறியதில்லை.
நான் முப்பொழுதையும் வென்றவன் !
பிரபஞ்சத்தின் இளவரசன் ! என் கண் படாத இடமில்லை !
என் சத்திய கரங்கள் வலிமையானது !
நான் கைவிடமாட்டேன் !
நம்பிக்கை மேல் சந்தேகம் வரும் போது தான் நம்பிக்கையை இழக்கின்றான் மனிதன்.
ஏன் சாப்பிடுகிறாய் ? ஏன் தூங்குகிறாய் ? ஏன் பாசம் ? எதற்கு அன்பு ? எதற்கு சிரிக்கின்றாய் ? ஏன் அழுகின்றாய் ? ஏன் என்பதே உனக்கு தெரியாது ! நதி ஏன் ஓடுகிறது ? கடலில் ஏன் அலை வீசுகிறது ? எதுவும் புரியவில்லை உனக்கு ! எல்லாம் காரண காரியம் ! எல்லாம் சூட்சுமம் !
இங்கு வரும் பொழுது ஒன்றுமில்லாமல் நிர்வாணமாக வருகிறாய் ! போகும் போது ஒன்றுமில்லாமல் நிர்வாணமாக லோகம் செல்கிறாய் இங்கே நீ யார் என்று எப்போதாவது உணர்ந்தாயா ? உன் நம்பிக்கையை கடவுள் மேல் வை ! கடவுள் எப்போதும் கைவிடமாட்டார் ! அந்த கரங்கள் எப்போதும் உனை அரவணைக்கவே காத்திருக்கின்றது !
இந்த சத்திய தலைமகன் இநன்யா சொல்கிறேன், நானும் உனை கைவிடமாட்டேன் ! நீ என்னால் மறக்கப்படமாட்டாய் ! என் செயல் உன்னில் என்று இறுமாந்திரு ! நான் உனக்குள் இருக்கிறேன். என்னை நோக்கி வரும் கால்கள் தடுமாறுவதில்லை. தடம் புரள்வதில்லை. நீ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நானறிவேன்.
என் தந்தை யாகவா எப்போதும் ஒன்றை சொல்வதுண்டு. “என் வணங்கி பலன் கானா” என்று சொல்வார்கள் ! உன் உயிர் என்னை வணங்கி கொண்டு தான் இருக்கின்றது. நீ உணராமல் வணங்கி ஏதும் பலன் காணமாட்டாய் என்பார்கள்.
அவர் சொன்னது போல என்னை வணங்கியும் பலன் காணமாட்டாய். நீ உணர்ந்தால் துன்பமில்லை ! உணரடா !
உனக்குள் இருப்பது நான். உன் குரல் கேட்கும் கடவுளிடம் அழுது ஆர்ப்பரிக்காதே ! கடவுள் கொடுப்பவர் ! இருப்பவன், இல்லாதவன், நல்லவன், கெட்டவன். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பார்ப்பதில்லை. நீ அழைத்தால் சுகம் தருவான். உன் ஆண்மாவை தட்டும் ஒவ்வொரு நிமிடமும் கடவுளை நெருங்குகின்றாய் !
வழிநிலையே ஆண்மா !
உன் ஆண்மாவும், உயிரும் தூங்குவதில்லை ! உன்னை ஒவ்வொரு நொடியும் கண்கானிக்கின்றது.
உன் ஆண்மாவை வைத்து, நீ என்ன நினைத்தாலும், செய்தாலும் மேல் உலகத்திற்கு தெரியும் ! ஆதலால் நல்லதே நினை ! நல்லதே பேசு ! நன்மை, தீமை, வறுமை , துன்பம், இன்பம் உனக்குள்ளே உருவாகிறது. எல்லாவற்றுக்கும் விதியின் மேல் பழியை போடாதே ! கடவுளை குற்றம் சொல்லித் திரியாதே. கடவுள் அன்பானவன் ! எல்லையில்லா கருணைமிக்கவன் !
மரத்தின் வேரை இந்த மண் எவ்வாறு பிடித்து வைத்துள்ளதோ, அதே போல் உன் நம்பிக்கையும் இருக்கட்டும் ! மரம் மண்ணை நம்பி வளர்கிறது, எப்படியும் வளர்ந்துவிடுவேன் என்று ! எப்போதும் நம்பிக்கையாய் வளர்கிறது ! வாழ்கிறது ! இந்த பாவ மனிதன் அதன் நம்பிக்கையை சீர் குலைக்கின்றான். மரத்தை வெட்டி மண்ணில் சுகமில்லாது அலைகின்றான்.
புணித மரமான பனை மரம் உன் சரீர புற்றை வரவிடாமல் தடுக்கும் ! அதனை வெட்டி வீழ்த்தினாய். சரீரத்தை பாழாக்கினாய் ! ஆதியிலே அதன் ஓலையை (குறுத்து) எடுத்து பிண்ணி கழுத்தில் மாட்டினான். அதுவே பெண்ணுக்கு அடையாளமாக தாலி என்றான். ஆணும், பெண்ணும் சேரும் பொழுது அது சுவாசக் காற்றின் வழியாக உள்ளே சென்று சரீரத்தை சுகமாக்கும் என்று. இப்போது ஏதோ விதவிதமாக கழுத்தில் காட்டி சுகமிழந்து நிற்கின்றான். தாலி என்றால் பனை என்று அர்த்தம். அதன் குணங்களோடு ஆணும், பெண்ணும் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர். படித்து பட்டம் பெற்றவன் அதை மறந்தான். பாழ்பட்டு நிற்கின்றான் !
என் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா சொல்வார்கள், “சுட்டும் உருவாகும் விதை ஒன்று பூமியில் படைத்தேன், மனிதன் பூமியில் அதை புரியாது வாழ்கின்றானே ? ” என்று கேட்பார்கள் ! மரத்தின் வேர் ஆழம் சென்று நீரை தேடுவது போல கடவுளைத் தேடு ! உன் தேடுதல் உன்னை உணர வைக்கும் ! பின் யுகத்தில் ஆல் போல தளைத்து பிறருக்கு உதவுவாய்.
நான் கருணைமிக்கவன் ! நான் உனை கைவிடமாட்டேன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment