படித்தாய், பட்டம் பெற்றாய். பக்குவம் தொலைத்தாய். பாசமில்லா பாவி நீ, ஏது உணர்ந்தாய் ? நீ ஞானமுள்ளவன் என்பதை ஏன் மறந்தாய், என் ஞான குழந்தையே ?
நிலவறை
கருவறையில் ஏன் வந்தாய் ? இந்த நிலவறைக்கு ஏன் தள்ளப்பட்டாய் ? நிலவறையின், கருவறையின் தொடர்பும் உன் தொப்புள் முடிச்சில் உள்ளது.
ஏன் மறந்தாய் ?
இருப்பதை இல்லாமல் காண்பதும், இல்லாததை இருப்பதாக எண்ணும் உன் அற்ப மனதை என்ன சொல்வேன் ? உயிரில்லாததை கண்டு சிரிக்கின்றாய். கையெடுத்து கும்பிடுகிறாய். யாரோ எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு உளர்கிறாய். உண்ணதம் தெரியாது திகைக்கின்றாய்.
என் ஞான குழந்தையே, ஏன் மறந்தாய் ? புத்தகத்தை படித்து யாரோ உளறினால் நீ அதை கேட்டு ஆர்பரிக்கின்றாய் !
என் ஞான குழந்தையே, ஏன் மறந்தாய் ? புத்தகத்தை படித்து யாரோ உளறினால் நீ அதை கேட்டு ஆர்பரிக்கின்றாய் !
உனக்குள் எல்லாம் வைத்தேனே. உன் முன்னால் நிற்கிறேன். என்னிடமாவது கேள். உன் திரை விலக கற்றுத் தருகிறேன். நீ பஞ்சில் நெய்த துணியை விலக்கி மாய திரை விலகியது என்று கோயிலில் வைத்து புலம்பிக் கொண்டிருக்கின்றாய்.
சத்தியம் தோற்பதில்லை. என் செல்ல குழந்தையே ! அசுர வர்க்கங்களை எதிர்த்து நில் ! உனக்குள் என்ன தோன்றியதோ அதை செய். மற்றவன் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் பயம் கொள்ளாதே. அவன் தன் மலத்தையும், ஜலத்தையும் அடக்க தெரியாதவன், எல்லாம் தெரியும் என்று சொல்லும் அற்ப மனிதன். எதிர்ப்பவன், மறுப்பவனுக்கு நீ சவால் விடு !
என் ஞான குழந்தையே , ஒரு மாதம் மலம், ஜலம் அடக்கி பசி மறந்து என்னிடம் வாதத்திற்கு கூப்பிடு. நான் ஞான தெளிவை கொடுக்கின்றேன் உனக்கு ! தேடினால் தான் எதுவும் கிடைக்கும். உனக்கு தேவையானது தகப்பனுக்கு தெரியும் என்றாலும் உன் தேவைக்கு தகப்பனிடம் கேட்டு தான் ஆக வேண்டும். உன் பசி அடக்க, ஞானம் கிடைக்க நீ தான் தேட வேண்டும் !
பறவைகள் , மிருகங்கள் கூட தன் வயிற்றுக்கு தானே தேடுகிறது. நீ தான் கையேந்தி நிற்க நான் கண்டேன். உன் அறியாமை இருள் விலக வழி தேடு. நல் குருவை தேடு. நீ என்னால் மறக்கபட மாட்டாயடா !
நான் உனை தினமும் கண்கானிக்கின்றேன். உன் ஒவ்வொரு அசைவையும் கண்கானிக்கின்றேன்.
உண்மை எதுவென்று புரியாமல் உயிரில்லா எழுதகத்தில் உனை லயிக்க வைத்தாய் !
நீ உயிருள்ள எழுதகம் ! நீ கல்லை ஓவியத்தை எழுதகமாக உருவாக்கி இன்பம் தொலைத்து அலைகின்றாய். உன் மனதை ரணமாக்கி சிகிச்சை செய்கிறேனே ஏன் மறந்தாய் ? துன்பத்தை ஏன் நீ அனுபவிக்க வேண்டும் ! உணர்ந்து ஞானத்தை கற்றுக் கொள். ஞானத்தை போதிக்க கற்றுக் கொள். உன்னால் முடியுமடா. உன் பலம் பலவீனம் எனக்கு தெரியும். உன்னால் எதையும் செய்ய முடியும் !
நீ விஞ்ஞானத்தில் ஏதோ செப்பு சாமன்கள் செய்து விளையாடுகின்றாய். ஏதோ திட்டில் உட்கார்ந்து சந்திர மண்டலம் சென்றேன் என்று சொல்கிறாய். சந்திரன் அருகில் உன் பூத உடலோடு செல்ல முடியாதடா. அதன் குளுமையில் கல்லாகி போவாய். எங்கே தோன்றி எங்கே மறைகிறது என்பதே உனக்கு தெரியவில்லை !
நிலவறையில் நீருக்கு பஞ்சம் ! உணவுக்கு பஞ்சம். நீ நீசனாக அலைகின்றாய் ! தங்கம், வைரம், வைடூரியம் நிலவறையில் மலை போல் குவிந்து கிடக்குதடா. அதை ஆராயாமல் நிலவிற்கு சென்று ஆராய்ச்சி செய்ய நினைக்கின்றாய். ஞானமுள்ளவன் அறிவான் ! பூமி உருண்டை என்று உளர்கின்றாய். நீயும் அதை தலையாட்டி ஆமோதிக்கின்றாய்.
அட என் ஞான குழந்தையே. ஏனடா அறிவை தொலைத்து அலைகின்றாய் ? சித்தர்கள் அனைவரும் தட்டை என்றார்கள் ! நீ இடைப்பட்ட காலத்தில் உருண்டை என்று சொல்கிறாய். இந்த இநன்யா புரிய வைப்பேன். நான் மறைத்து போக வரவில்லை. விண்னின், மண்ணின், பெண்ணின் ரகசியம் உனக்கு சொல்லித் தருவேன்.
கருவறையை ஆராய தெரியாதவன் , நிலவறையை ஆராயத் தெரியாதவன் கபாலத்தின் அறைகளை ஆராய தெரியாதவன் என் நிலவை ஆராய்ந்து என்ன பயன் கண்டாயடா. நீ உணரடா !
நான் உன்னை நிலவுக்கு அழைத்து செல்கிறேன். யுகத்திலிருந்தே அதன் அமிழ்தம் சாப்பிட கற்றுத் தருகிறேன். வாடா என் செல்லமே !
நான் உன்னை நிலவுக்கு அழைத்து செல்கிறேன். யுகத்திலிருந்தே அதன் அமிழ்தம் சாப்பிட கற்றுத் தருகிறேன். வாடா என் செல்லமே !
ஏழு தீவுகளின் நகரம் மும்பைக்கு என் பதினெட்டாவது வயதில் சென்றிருந்தேன். (1987) அங்கே செம்பூர் என்ற நகரத்தின் முருகன் கோயில் அருகில் செல்லும் போது ஒரு நல்ல பாம்பு கடந்து சென்றது. கோயிலுக்கு வருகின்ற மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். நான் அதன் அருகில் சென்றவுடன் என் அருகில் வந்து பணிந்து நின்றது. மக்கள் எல்லோரும் முருகன் மனிதனாக வந்துள்ளார் என்றார்கள். அதனால் தான் பாம்பு அடங்கி நின்றது என்றார்கள்.
நான் சூட்சுமதாரி என்று யாருக்கும் புரியவில்லை. நான் வித்தை காட்டவில்லை. எல்லாம் எனக்குள் அடங்கும். என் விளையாட்டை யார் அறிவார்கள் ? என் உறவுகளுக்கு அப்போது நான் யாரென்று புரியவில்லை. இப்போது வந்திருப்பது சூட்சுமதாரி என்று புரிந்து கொண்டார்கள். நான் வித்தை காட்டி, சித்து வேலை செய்து மயக்க வரவில்லை. உன்னை உணர வைக்கவே யுகம் வந்தேன்.
எழு தடவை பூமியில் விழுந்தாலும் குழந்தை எட்டாவது தடவை எழுந்து நிற்கும். நான் உனை ஏழு தடவை தான் பூமியில் விழ வைக்கின்றேன். பின் எட்டும் வெட்டன உனை எம்பி உயிர்ப்பிக்கின்றேன்.
என் வாசல் (ஆண்மா) உனக்கு திறந்திருக்கின்றது. உனக்காக காத்திருக்கிறேனடா உணர். வசந்த வாசலை காண்பிக்கிறேன். (பிரபஞ்சத்தின் வழி )
நான் நிலவறையையும் கருவறையையும் ஆட்சி செய்பவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment