88 இநன்யா நமோ நம.. !!
பரப்பிரம்மம் எனக்குள் ! நீ விப்பிரமமாக இருக்கின்றாய் ! உணர் ! இந்த ஏடு பெற்ற இநன்யா உனக்கு ஆதபயோகம் கற்றுத் தருவேன் !
ஏடு
ஏடு என்றால் பனை ஓலையில் எழுத்தானி கொண்டு எழுதியது என்று நினைக்கின்றான் மனிதன்.
ஏடு என்றால் ஆதியிலே பத்ரி என்ற மரத்தின் இலையில் சாறு எடுத்து குணசித்ரம் என்னும் மூலிகையின் சாறும் சேர்த்து எழுதினான். அது பத்ரம் என்றானது. பத்ரம் என்றால் ஏடு என்றானது. அதன் பின்னே தான் பனை ஓலையை பக்குவப்படுத்தி எழுத்தானி கொண்டு வடிவமைத்து எழுதினான். ஏடு என்றால் இலை என்று அர்த்தம். இந்த ஏடு பெற்ற இநன்யா உலகின் விதியின் ஏட்டை வைத்திருக்கிறேன் !
என் தந்தை பிரபஞ்ச நாயகன், தன் புணித திருக்கரங்களால் எனக்கு ஏட்டை தந்தார்கள் !
எல்லாம் எனக்குள் வைத்தேன் ! நீ எங்கெங்கோ தேடுகிறாய் !
சருகாய் போகாதே ! சிறுகாய் ஆகாதே !
கருகாய் நினை ! கருகிப் போக நினைக்காதே !
கடவுளை நினைக்கும் போது உன் கண்ணில் ஆந்தவருவியாய் நீர் வருகிறதோ அப்போதே உன்னை உணர்ந்துவிட்டாய் என்று அர்த்தம் ! உன் கூர்ப்பத்தில் இருக்கிறேன், குறை ஒன்றும் இல்லாமல் ! நீ என்னை வெளியே தேடுகிறாய்.
கூணலில் கோடி ரகசியம் வைத்தான். வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் கூணலுக்கும் சம்பந்தம் உண்டு. கண்ண பரமாத்மா அதை ரசித்து உண்டான். உண்டவன் நீ உணராதிருப்பது ஏனோ ?
நிவி மரத்தில் நிவி பறவை ஒன்று அமர்ந்திருக்கும். அதை என்றாவது ஆராய்ச்சி செய்தாயா ? உன் பிறப்பிற்கும் நிவி மரத்திற்கும் தொடர்பிருக்கின்றது.
இந்த ஏடு பெற்ற இநன்யா உன்னை எப்போதும் கண்காணிக்கின்றேன் ! பிரபஞ்ச நாயகன் என் தந்தையின் சொல் வேதம் என்பதால் அவரின் சொல் எப்போதும் கேட்டு நடக்கின்றேன். அதனாலே எப்போதும் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டு உன்னையும் அழைக்கின்றேன் !
உன் எண்ணத்தை எப்போதும் கடவுளிடம் வை. உன் உயிர் உனை சத்திய வழிக்கு அழைத்து செல்லும். அதை விடுத்து புலன்களை அதன் போக்குக்குவிட்டால் உன்னை துவஷம் செய்யும். அச்சத்தை தூர எறி. ஆணவம் தவிர் ! நான் என்ற அதிகார வார்த்தையை தவிர். உண்மையை அறியாமல் தான் உனக்கு அச்சம் வருகிறது !
அச்சம் உனக்கு கேடு தரும். மரணத்தை தருகிறது. உன்னை உருவாக்க முடியாமல் போகிறது. உன் இலக்கை அடைய விடாமல் தடுக்கிறது. நாளையே மரணம் வரும் என்று நினை. அச்சத்தோடு வாழாதே !
வாழ்க்கை குறுகியது ! நீண்ட நாள் இங்கு யாரும் வாழப் போவதில்லை. அதனால் உன் இலக்கை அடைவதற்கு தினமும் போராடு ! கடவுள் உனக்குள் தான் ! எதையும் எதிர்த்து நிற்கும் துணிவும், உன் தன்னம்பிக்கையும் தான் உன்னை அறிய வைக்கும் ! நீ சோர்ந்து போகும் நேரமெல்லாம் என்னை கூப்பிடு. உனக்கு தோழனாய் வந்து தோள் கொடுப்பேன் ! எண்ணத்தை சிதறவிடாதே. ஒன்றே நினை. அதை அடைய போராடு !
பயத்தை தூர எறி. ஏன் பயம் ? ஒரு நாள் இறக்கப் போகின்றவன் தானே ? ஏறு வை போல கர்ஜித்து எழு ! எப்போதும் உன்னை வெல்ல உலகில் எவருமில்லை என்று நினை.
நீ கடவுளின் பிள்ளை ! நீ கடவுளால் உருவாக்கப்பட்டவன் ! அதனால் எப்போதும் உன்னை உயர்த்திக் கொண்டே இரு !
உன் தாய் அச்சப்பட்டிருந்தால் நீ பூமியில் ஜணித்திருக்கமாட்டாய் ! இங்கே வலியும், வேதனையும் கடந்தால் தான் உன்னை அறிய முடியும். உன் தலை ஏடு என் தந்தை பிரபஞ்ச நாயகனின் திருக்கரத்திலே. இந்த ஏடு பெற்ற இநன்யா மஹா முனிவன் உன் ஏட்டை (விதியை) சரி செய்வேன். என் தந்தை என் சொல் கேட்பார். உன் விதியை சதிராடும் வித்தையை எனக்கு சொல்லி தந்திருக்கிறார்.
நான் உன் விதியை சதிராடுவேன் ! உன்னை காப்பேன் என்றென்றும் !
என் நாமம் உன் ஏட்டை சரிபடுத்தி , சீர்படுத்தி ஆதப யோகத்தை கற்றுத் தரும் !
நான் உன்னை காப்பேன் !
நான் ஏடு பெற்றவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment