Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; என் சொல் அமிர்தம் ! என் செயல் அமிர்தம் ! என் நாமம் பேரின்பமான அமிர்தம் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; என் சொல் அமிர்தம் ! என் செயல் அமிர்தம் ! என் நாமம் பேரின்பமான அமிர்தம் ! 
35 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
என் சொல் அமிர்தம் ! என் செயல் அமிர்தம் ! என் நாமம் பேரின்பமான அமிர்தம் ! இந்த புணித மாதத்தின் ஆசிகள் உன்னில் நிலைத்து நிற்கும் !
உன்னை காப்பேன் என்றென்றும் !
பயிர் வாடினால் உழவன் வாடுவான் ! ஆனால் நீ வாடினால் நான் உனை வாட விடமாட்டேன் ! ஏனென்றால் நீ என் உறவு !
என் செல்லக் குழந்தையே உன் துன்பம் எனும் நெருப்பை அணைக்க உன்னை அரவணைக்க நான் இருக்கும் போது எதற்கடா மனக்கவலை ? உன் அனைத்து துன்பங்களையும், துவஷம் செய்வேன் ! என் சத்திய கரங்கள் உன்னை காக்கும் சத்தியமாக !
உன்னை காக்க நான் இருக்கிறேன் ! என்னை நினை ! உன் வாழ்வு மலரும் ! வசந்த காலத்தை நிலைக்க வைக்கும். என்னை ஏளனமாக நினைக்காதே ! என்னை ஏழையாக நினை ! கோழையாக நினைக்காதே ! விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சி நான் ! இந்த வழிப்போக்கன் உனை இடையில் விட்டு செல்லும் மனித ஜாதி அல்ல !
நான் வான் கொடை வசந்தத்தை வாறி கொடுக்க வந்த வள்ளல். கடவுளின் அருள் தவப்புதல்வன். உனக்கு பூமியிலே சொர்க்கத்தை தருவேன் !
உன் விதியை மாற்றி எழுதி உன்னை பக்குவப்படுத்துவேன் ! உன் சர்வ ரோகத்தையும் அழிப்பேன். உன் பாவத்தை என் காலடியில் வைத்து கரைப்பேன். பின் எதற்கு உனக்கு மனக்கவலை ? இதற்கு முன்னால் நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனிமேல் பாவம் செய்யாதே ! தவறு செய்யாதே ! என் சொல் கேள் ! இனிய வாழ்வை அமைத்து தருவேன். நீ தெரிந்தே தான் பாவம் செய்கிறாய். செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. நான் பாவம் செய்தாலும் யுகத்தில் தண்டனை உண்டு.
பாவம் செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது ! என் அரசாங்கத்தில் பாவத்திற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. யுகத்தில் பாவத்திற்கு தண்டனை கொடுப்பது காற்றும் நீரும் தான். அந்த காற்றும் நீரும் நானே ! நான் அடிக்கவும் செய்வேன். அரவணைக்கவும் செய்வேன்.
பெற்றோர் சொல் வேதம் ! பெரியோர் சொல் அமிர்தம் ! அவர்களின் பாதம் தொட்டு வணங்கு. அவர்களின் வார்த்தையை கேட்டு வாழ கற்றுக் கொள். இந்த வழிப்போக்கன் என்றும் உனக்கு துணையாக இருப்பேன். நான் உனக்கு பேரின்பமான வாழ்வை தருவேன். இந்த பூமி என் உள்ளங்கையில் ! உன் விதி என் பார்வையில் ! பூமி தாய் என் சொல் கேட்பாள் ! இந்த சத்தியத்தின் தலைமகன் எதைச் சொன்னாலும் பூமித்தாய் கேட்பாள் !
உனக்கு வேண்டியதை தர சொல்வேன். என் கண் படாத இடமில்லை. உன் விதியை மாற்றுவேன். வாழ்வில் எல்லா செல்வங்களும் தருவேன். பாவம் செய்யாதே. உதவி செய் ! நல் எண்ணம், நல் செயல், நல் சொல் பேசு ! உனை பூமியின் நாயகனாக்குவேன். பிறருக்கு நலமான வார்த்தை சொல் ! உன் நாவில் உட்கார்ந்து நலம் புரிவேன்.
நீ எதுவும் கொண்டு வரவில்லை ! போகும் போது எதையும் எடுத்து செல்வதும் இல்லை. இடையில் எதற்கு நான் என்ற அகம்பாவம், கோபம், பொறாமை, சூது ? அனைத்தையும் விட்டுவிடு ! நற்குணங்களை கடைபிடி ! உனக்கு விதிக்கப்பட்டது பூமியில் விதைக்கப்பட்டது !
மாற்றம் என்பது குருவால் மட்டுமே முடியும் ! இந்த ஆத்மத்தின் தலைவனால் மட்டுமே முடியும் !
முடியாது, கிடையாது என்ற வார்த்தைகள் என் அகராதியில் இல்லை ! நான் உனக்கு கொடுக்கத்தான் வந்தேன். நான் இருந்தும் உனைக் காப்பேன் ! இறந்தும் உனை காப்பேன் !
எல்லாம் இங்கு மாயத் தோற்றம் ! என் நாமம் சொல் ! உன் மாய திரை விலகும் ! சத்தியத்தின் பாதை தெரியும் ! நாளும் கோளும் ஒன்றும் செய்யாது ! என் சொல் சத்தியம். எனை உன் நெஞ்சில் வை. உன் சொல்லும், செயலும் வெல்லும் !
உனை எப்போதும் காப்பேன் நான். ஏனடா உனக்கு மனக்கவலை ?
எனை புரிந்தவர்க்கு கடவுளாய் சுகம் தருவேன் !
எதிர்ப்பவனையும், மறுப்பவனையும் அடித்து திருத்தி கரை சேர்ப்பேன். நான் பிறப்பும் , இறப்பும் அற்றவன். முடிவும், முதலும் இல்லாதவன். நான் அணுவுக்குள் அணுவானவன். நானே உன் ஆண்மா !
போக வழி தெரியாமல் புலம்புகின்றாயே, உன்னை கைப்பிடித்து கரை சேர்க்க தான் இந்த ஆத்மத்தின் தலைவன் வந்துள்ளேன் !
இனி ஏன் பயம் ? எதற்கு கவலை ? நான் உனக்கு எப்போதும் இன்பமான பாதையை காட்டுவேன். முட்டாள்கள் பூமியில் நிறைய உண்டு ! கடவுள் இல்லை என்று கூறுவோரும் உண்டு ! பூமியில் என் பேச்சை விதன்டவாதம் செய்யும் மனித அரக்கர்கள் நூற்றில் தொண்ணூறு பேர் உள்ளனர்.
உன்னை சீர்குலைப்பவன் சொல் கேளாதே. வழிபாடுகளை விட்டுவிட்டு பூமியில் வழிகாட்டியை தேடு !
குரு இல்லாமல் ஞான தெளிவு கிடைக்காது ! குரு தான் உனை நல் வழிபடுத்த முடியும் ! நல் குருவை தேடு ! மனிதனுக்கு கொடி பிடிக்காதே ! உன்னை உணர் ! தேடு !
எதையும் ஆராய்ச்சி செய்யாமல் உளரும் பைத்தியங்கள் சொல் கேளாதே. அவன் உன் தன்னம்பிக்கையை அழிப்பான். அவனுக்கு மனிதன் யார், அசுரன் யார், கடவுள் யாரென்று தெரியாது. தன்னை யாரென்றே அவனுக்கு தெரியாது. ஞானமாக உணர். என் அன்பின் ஆசிகள் உனை பூமியில் புணிதனாக்கும் ! பூவைப் போல புன்னகையான வாழ்வை தரும் !
என்னை எப்போது கூப்பிடாலும் உன் பக்கத்தில் வந்து நிற்பேன்.
பாலுக்குள் நெய் மறைந்திருப்பதால் நெய் இல்லை என்று பொருளாகுமா ? நான் மாயவன் ! எனை கண்டு பிடிக்க யுகம் கடந்து பொகும். என் கரங்கள் உனக்காக காத்திருக்கிறது !
பயப்படாதே ! உனக்கு நான் துணை இருக்கிறேன் !
நீ எங்கிருந்தாலும் நான் அறிவேன். நான் ஆகாயத்தில் உலாவுகின்றேன். பட்சிகளோடு காற்றாய் நீராய் எங்கும் வியாபித்திருக்கிறேன் ! என் சொல் அமிர்தம் ! இந்த வழிப்போக்கன் சொல்வதை ஞானமாக யோசி !
என் அன்பின் ஆசிகள்.
ஞானத்தின் திறவு கோள் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment