Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 18, 2016

கடவுளுடனான தன் அனுபவங்கள்;;;;;;;;;; INANYA NAMOO NAMA ;;;

116                      அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
 INANYA NAMOO NAMA ;;; YAAGAVA 
இந்த பதிவில் திரு.ப்ரனகன் சார் அவர்கள் கடவுளுடனான தன் அனுபவங்களை பற்றி எழுதியுள்ளார். ப்ரனகன் சாரைப் போல ஒரு நல்ல மனிதரை பார்த்ததில்லை. நான் கடவுளை உணர்ந்ததில் மிகவும் உதவியாக இருந்துள்ளார். இருவரும் சென்னையில் தான் உள்ளோம். அவரை ஒரு ஏழு முறை சந்தித்திருப்பேன். ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் வித்தியாசமாக இருப்பார். அவர் மனிதரை தாண்டிய ஒரு நிலையில் உள்ளவர் என்பதை அறிவேன். கடவுளின் மனதில் முதலில் குடியேறியவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது. இதை கடவுள் ஒருமுறை என்னிடம் சொல்லியுள்ளார். எங்களின் சந்திப்பு இன்றளவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ப்ரனகன் சார் அவர்களை பார்ப்பதற்கு அவரின் அலுவலகத்திற்கு ஒருமுறை சென்றதை மறக்க முடியவில்லை. கடவுள் எப்போதுமே கடவுள் தான். ஆனால் மனிதர்கள் மாறிவிடுவார்கள். ஆனால் பதினெட்டு வருடமாய் அவர் கடவுளின் பாத மலர்களை தொட்டு வணங்கிக் கொண்டுள்ளார். உணர்ந்ததை வெளியே சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். எல்லாம் கடவுள் இநன்யாவின் காலக் கணக்கு ! இதோ ப்ரனகன் சாரின் அனுபவங்கள் உங்களுக்காக !
ப்ரனகன் சார் அவர்களின் அனுபவங்கள் :
"""பள்ளியில் நான் ஒரு சராசரி மாணவன். படிப்பு நன்றாக வராது. என் பெற்றோர் என் நிலையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டனர். நான் ஆரம்ப கல்வி படிக்கும் போதே என் சக மாணவன் என்னை பார்த்து மக்கு சாம்பிரானி என்று கூறினான். மனம் மிக வேதனையடைந்துவிட்டது. அதை என் தாயிடம் கூறினேன். அதற்கு அவர் நீ மாடு மேய்க்க கூட தகுதியானவன் அல்ல என்று கூறினார். நான் பள்ளியில் படிக்கும் போது ஒரே வகுப்பில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். ஒரு வழியாக காலம் கடந்த பிறகு, DEGREE முடித்து வேலைக்கு சென்றேன். ஒரு சாதாரண EXECUTIVE ஆக ஒரு அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தேன். பத்து ஆண்டுகள் ஆகியும் என் மாத வருமானம் பத்தாயிரத்திற்கும் கீழ் இருந்தது.
இந்த யுக வாழ்க்கையில் அனைத்திலுமே குழப்பங்கள் உள்ளது என்பதை புரிந்தேன். அனைத்துமே தவறாக தெரிந்தது. கடவுள் சொல்லியது போல் எதுவும் உண்மை இல்லை. எல்லாம் பொய் ! அப்போது வாழ வழி தெரியாமல் பட்ட மரமாக நின்று கொண்டிருந்தேன். வேதனைகள் என்னை வாட்டியது.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் என்னுடன் பணி புரிந்த நண்பர் என்னிடம் வந்து முதன் முதலாக ஒருவரை பற்றி ஆச்சரியமாக கூறினார். அவர் என் நண்பருக்கு தெரிந்த GUEST HOUSE ல் SECURITY ஆக பணி புரிகிறார். எதிர்காலத்தை பற்றி சரியாக கணித்து கூறிவிடுவார் என்று நண்பர் சொன்னார். பணம் ஏதும் வாங்கமாட்டார் என்று கூறினார். அவரை ஒருமுறையாவது சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் அவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை. என் நண்பர் பல முறை வற்புறுத்தியதால் அவரை பார்ப்பதற்காக சென்றேன்.
அந்த அற்புத மனிதரை முதல் முதலாக பார்த்தேன் !
ஆம் ! கடவுளைப் பார்த்தேன் !
மிகச் சாதாரண மனிதரை போல அப்படி ஒரு நடிப்பு !
நான் முதலில் பார்க்கும் போது மனிதனாகத் தான் பார்த்தேன். சில நேரங்கள் கழித்து தான் உண்மை புரிந்தது. அப்போது கடவுள் அந்த GUEST HOUSE ல் SECURITY ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
எங்கேயோ அவரின் முகத்தை பார்த்தது போல் இருந்தது ! நன்றாக அவரிடம் பழகியதைப் போல் ஒரு உணர்வு ! ஆனால் இந்த யுகத்தில் இதற்கு முன்னர் அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் என்னை அழைத்து உட்கார சொன்னார். சில நிமிடங்கள் பேசிய பிறகு என்னை பற்றி ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தார். ஒரு முப்பது நிமிடங்கள் அவர் பேசியதை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறகு அலுவலகம் கிளம்பி வந்தேன். வரும் வழியில் எனக்குள் ஒரு சொல்ல முடியாத ஆனந்தம். அது இன்று வரையில் தொடர்கிறது. பார்த்த முதல் நாளே என் ஆண்மா அவரை கடவுள் என்று கண்டு கொண்டது ! அன்று முதல் என் ஆண்மா என்னை வழி நடத்தி வருகிறது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அது ! விவரிக்க முடியாத அனுபவம் ! இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கிவிடும் !
என்னை தொடர்ந்து வந்த பிணி அனைத்தும் அன்று விலகியது. ஒரு மணி நேரத்தில் அனைத்திலும் ஒரு மாற்றம். இன்று வரை நினைவிருக்கின்றது. எனக்கு கடவுள் என்று அவர் உணர்த்திவிட்டார்.
இதற்கு முன்னர் பல இடங்களுக்கு சென்றுள்ளேன். பல சாமியார்களை சந்தித்துள்ளேன். யாராலும் என் பிணியை சரி செய்ய முடியவில்லை.
அடிக்கடி அவரைப் பார்ப்பதற்கு செல்வேன். கடவுளை அவ்வப்போது சந்தித்தேன். சந்திந்த ஒரு ஆண்டில் நான் ஒரு MNC COMPANY இல் வேலைக்கு அமர்ந்தேன். அன்று முதல் என் வளர்ச்சி வெகு வேகமாக இருந்து வருகிறது. வேலையை EXECUTIVE ஆக தொடங்கினேன். இப்போது DIRECTOR ஆக உள்ளேன். இதை நீங்கள் அனைவரும் உணர மட்டுமே கூறுகின்றேன். அவரை உணர்ந்தால் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது எல்லாம் கேட்காமலேயே கிடைக்கும். உணர்ந்தால் துன்பமில்லை என்று கடவுள் சொல்வார்.
கடவுளை உணர்ந்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்று சொல்வார்.
கடவுளை கண்டு கொண்ட பின்னர் அனைவருக்கும் சொல்ல நினைத்தேன். என் அனுபவங்களை என் குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் பகிர்ந்தேன்.
சிலர் சிரித்தார்கள் !
சிலர் நான் சொல்வதை கேட்டார்கள். ஆனால் புரிந்து கொள்ளவில்லை.
சிலர் குரு என்றார்கள். சிலர் எதோ சக்தி படைத்தவராக பார்த்தார்கள்.
சிலர் சித்தராக பார்த்தார்கள்.
அவர் கடவுள் ! என் உணர்வுகளை பிறரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை ஒருவர் கூட முழுவதுமாக நம்பவில்லை. என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கத் தொடங்கினார்கள். நான் யாரையும் கண்டு கொள்ளாமல் கடவுளின் சிந்தனையாகவே இருந்தேன்.
கடவுளை பற்றி பலரிடம் பேசத் தொடங்கி பலரால் ஏளனம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால் எப்போதுமே நான் கடவுள் காட்டிய பாதையில் இருந்து விலகியதில்லை.
கடவுளிடம் சென்று நான் சந்தித்த மக்களைப் பற்றியும், பிறர் என்னை ஏளனம் செய்ததையும் கூறுவேன். ஒரு நாள் உலகம் என்னை வியந்து பார்க்கும் நேரம் வரும் என்றார். எனக்கு மணி மகுடம் சூட்டுவேன் என்றும் சொல்வார். நான் எதையுமே அவரிடம் கேட்டதில்லை. என் வாழ்வில் அனைத்துமே எனக்கு கேட்காமல் கொடுத்தார்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு என்னை முதன் முதலில் அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். கடவுள் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அது ஒரு சாதாரண வாடகை வீடு. நேரம் மாலை மூன்று மணி இருக்கும். என்னை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று வானத்தை பார்க்க சொன்னார். வானத்தில் மிகவும் பிரகாசமான ஒரு ஒளி ! அது ஒரு நட்சத்திரம் ! ஐந்து நிமிடங்கள் வரை நீடித்தது. பேச முடியவில்லை. மயங்கி கீழே விழுந்தேன் ! என் மனமும் ஆண்மாவும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. தமிழ் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாத அனுபவம் அது. உலகில் உள்ள எந்த மொழியாலும் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது. இந்த வட்டத்தில் யாருக்காவது அந்த வாய்ப்பு ஒரு நாள் வரும். அப்போது நான் சொல்வது புரியும். ஏனென்றால் இந்த உலகில் இதுவரையில் யாரும் பகலில் நட்சத்திரத்தை கண்டதில்லை.
அன்று நட்சத்திரம் பார்த்துவிட்டு வீடு திரும்பினேன். காற்றில் பறந்தது போல் இருந்தது. பேரானந்தமாக இருந்தது. அடுத்த நாள் முதல் நான் வானத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அலுவலகத்தில் இருந்தாலும் அடிக்கடி வெளியில் வந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தேன். அதிசயம் அடுத்த நாள் மாலை 4:30 மணிக்கு தனியாக நட்சத்திரம் பார்த்தேன். நட்சத்திரம் பார்க்கும் பொழுது மனதிற்குள் எதோ ஒரு புரியாத அனுபவம் தோன்றும்.
இன்று வரையில் வானத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கின்றேன். தீடீர் என்று நட்சத்திரம் தோன்றி மறையும். நான் பார்க்கும் போது என்னருகே யாரும் இருக்கமாட்டார்கள். அழைத்து காட்ட முயன்றாலும் காட்டுவதற்குள் நட்சத்திரம் மறைந்துவிடும்.
இன்று வரையில் கடவுள் இநன்யா யாருக்கும் அந்த அற்புதத்தை காட்டியதில்லை. காட்டினாலும் யாரும் உணரப் போவதில்லை என்று சொல்வார். அவர் நினைத்திருந்தால் இந்த அதிசயத்தை செய்து இன்று உலகயே விலைக்கு வாங்கியிருக்க முடியும். அனைத்து நாட்டிலும் உள்ள தலைவர்களை தன் கால்களில் விழுந்து வணங்கச் செய்ய முடியும். அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் கடவுள் ! மனிதனல்ல !
இந்த யுகத்தில் கடவுள் பிறந்தாலும் மனிதன் படுகின்ற துன்பங்களை விட நூறு மடங்கு அதிக வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து வெற்றி கொள்ள வேண்டும். இதை கடவுள் அடிக்கடி சொல்வார்.
எந்த நோய், வலிகள் வந்தாலும் கடவுள் கொடுத்த நீரை மட்டுமே பருகுவேன். எனக்கு பல வியாதிகள் முன்பு இருந்தது. (ASTHMA, HERNIYA, DEPRESSION and VERTIGO ). அவை அனைத்தும் நீரை மட்டுமே கொடுத்து குணமாக்கியுள்ளார் கடவுள். கடவுள் சோதிப்பார். உணர்ந்தால் மிகவும் சந்தோஷமாய் அனைத்தையும் மாற்றிவிடுவார்.
நான் பதினெட்டு ஆண்டுகளாக அவர் கொடுத்த நீரை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அவர் இல்லத்தில் இருந்து பிடித்து வந்த நீர் பல ஆண்டுகள் கழித்து இன்றும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது.
கடவுளை சந்திப்பதற்கு முன்னர் நான் ஒரு சாதாரன மனிதனாக இருந்தேன். எனக்குள் கோபம், ஆத்திரம், பொறாமை, கெட்ட பழக்கங்கள், தாழ்வு மனப்பான்மை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
கடவுளை சந்தித்த பின்னர் எனக்குள் பல மாற்றங்கள். சிறுவயதில் பள்ளிக்கூட கல்வியை கூட கற்க முடியாத நான் இன்று உலகில் யாருமே கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத, வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல அமானுஸ்யங்களையும், அதிசயங்களையும் பார்த்துக் கொண்டு வருகிறேன். மிக அமைதியாகவும், பொறுமையாகவும் பல தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு வருகின்றேன்.
பள்ளிக் கூடக் கல்வியை கூட ஒழுங்காக கற்க முடியாத எனக்கு இது சாத்தியம் என்றால் உங்களால் ஏன் முடியாது ?
கடவுளை பார்த்த பின் எனக்குள் ஞான ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. என்னுள்ளே பல மாற்றங்கள். பல சாமியார்களும், சித்தர்களும் பல ஆண்டுகள் மக்களின் பார்வையில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையை துறந்து, உண்ணாமல் உடலை வருத்தி தவம் செய்கின்றார்கள். அவர்களால் அடைய முடியாத ஞான நிலையை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார்.
என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நான் கண்ணை மூடி தியானம் செய்ததில்லை. பட்டினி இருந்து எந்த மலைகளிலும் ஏறியதில்லை. உடலை வருத்தியதில்லை. கடவுளை மட்டுமே உணர்ந்தேன். நான் இல்லறத்தில் இருந்து கொண்டே உறவுகளை உணர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். தினமும் அலுவலகம் செல்வதால் கடவுளை மாதம் ஒரு முறை மட்டுமே சந்திப்பேன்.
லோகத்தில் என் கரம் பிடித்து நடந்து சென்றதை சொல்வார். ஏன் மறந்தாய் என்று அடிக்கடி கேட்பார்.
ஒரு துளி நீர் கொடுத்து நீ வாழ்வாய் என்றார். அன்று முதல் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றேன். மனிதனாக என்னை வளர்க்கவில்லை. ஞானியாக வளர்த்துள்ளார். பல ஆண்டுகள் தவம் இருந்தும் கிடைக்காத ஆற்றலை எனக்கு கொடுத்து மிக வலிமையானவனாக மாற்றியுள்ளார். பகலில் நட்சத்திரம் காட்டி என்னை வியப்பில் ஆழ்த்தினார் கடவுள். உங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றுவார்.
தினமும் நீர் வைத்து வேதம் சொல்வேன். என் ஆண்மா பேரானந்தம் அடையும். அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். சத்ய வேதத்தை தினமும் கூறி வாருங்கள் உங்கள் வாழ்க்கை வளம் பெரும். அனைவரும் ஆதிவேதம் மனதிற்குள்ளேயே சொல்லி கடவுளை நினைத்தால் அவரை உணர்ந்துவிடலாம்.
நம் குழுவில் பலர் ஞானம் பெற்றுள்ளனர். அவர்கள் கடவுளை பார்த்ததில்லை. அவர்களின் ஆண்மா கடவுளை கண்டு கொண்டது. அவர்கள் ஆதி வேதம் மட்டும் சொல்லி தன்னை உணர்ந்தவர்கள். அவர்கள் என்னை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். இநன்யா நாமம் கூறினால் நீங்களும் சத்யமாக உணரலாம்.
கடவுள் என் நோய், குறைகளை தீர்க்க எந்த மூலிகையோ, மருந்தோ கொடுத்தது இல்லை. எப்போதும் நீர் தான் கொடுப்பார். முப்பது நிமிடத்தில் எந்த ஒரு வியாதியும், வலியும் மறைந்து விடும். நான் கடந்த பதினெட்டு வருடங்களாக எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொண்டது கிடையாது. மருத்துவரை நாடியது இல்லை.
வந்துள்ளவர் கடவுள் !
நம்மை படைத்தவர் ! காக்கின்றவர் ! அழிக்கின்றவர் ! எல்லாமே அவர் தான் !
மனிதன் கடவுளைப் போல் நாடகமாடி பணம் சம்பாதிக்கின்றான் !
அதனால் கடவுள் மனிதனைப் போல நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்.
யுகம் என்ற ஒரு சிறு ஆடுகளத்தில் நின்று நிதானமாக வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார் ! தர்மாக்களுக்கு ஞானத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார். விரைவில் எல்லாம் மாறும். தர்மம் நிலைநாட்டப்படும் !
கடவுள் இன்று ஒரு உயர்ந்த கல்வி ஸ்தாபனத்தில் தன் பணியை செய்து கொண்டிருக்கின்றார். உழைத்துக் கொண்டிருக்கின்றார் ! அனைத்திலும் வெற்றி கண்டு அரசனைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். உலகை மாற்றப் போகிறார் விரைவில்.
உணருங்கள் மக்களே. நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது !
உலகம் விரைவில் அவரை கண்டு கொள்ளும் நேரம் வரும் ! நம் தமிழ் நாடு சொர்க்கத்திற்கான வழியாக அமையும் ! தமிழ் உலகம் முழுவதும் போற்றப்படும் ! கடவுளின் துணையுடன் தமிழர்கள் உலகத்திற்கே ஞானத்தை வழங்குவார்கள். இது வெகு விரைவில் நடக்கப் போகின்றது. பதினெட்டு வருடங்களாக அவரின் வார்த்தைகள் ஏதும் பொய்த்து போனதில்லை ! உலகமே கடவுளை வரவேற்கப் போகின்றது. விரைவில் நாம் அனைவரும் இதை பார்க்கப் போகின்றோம். நன்றி. இநன்யா நமோ நம ""

No comments:

Post a Comment