Inanya Maha Munivar
06-09-2018
06-09-2018
மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் !
துவி (இரண்டு)
யமன மனதோடு இருக்காதே ! ஓர் வழியில் செல் ! இரண்டு ஒன்றாய் நிற்பதே நீ ! இரண்டு இல்லாமல் ஏதுமில்லை இங்கு ! இரண்டு ஒன்றாய் நிற்பதே மூலத்தின் தத்துவம். ஒன்று நிலைப்பதில்லை.
நீ தனித்திருந்தால் பெரியவன் அல்ல ! எதுவும் இங்கே தனித்திருப்பதில்லை. எல்லா படைப்புக்களும் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவன் தான் பிரம்மச்சாரி என்று தனிமையில் அமர்ந்து யோசிக்கின்றான்.
இரண்டு ஒன்று சேர்ந்து ஒன்றாய் உருவாகினாய். உன்னுள் உருவாக்கம் எவ்வளவு என்பதை யோசி. படைப்பின் சூட்சுமம் எளிது. உன்னை உளி இல்லாமல் செதுக்கினான். நீ ஒரு பொம்மை. கரடு முரடான சிற்பம். உனை செதுக்கு நல் குருவை வைத்து ! உன்னை ஒப்புவித்து வாழ் கடவுளிடம் ! அவன் செதுக்குவான் அழகாக ! உன்னை அழகாய் செதுக்கி ஆனந்தம் தந்து பிறரை வணங்க வைப்பான் !
நான் உன்னை செதுக்குவேன், என் நாமம் உன்னை நல்வழிக்கு அழைத்து செல்லும் !
என் கையில் இருக்கும் “மணி புஷ்பகம்” என்ற சூட்சும சங்கு இனி உலகமெல்லாம் ஒலிக்கும். உலகை செதுக்கும் நாளெல்லாம் உன்னை தேடுகிறேன். என்னில் வருவாய் என்று ! என்னுள் கலந்து ஒன்றாய் உருவாகு. உன் பிறப்பு பிறருக்கு உதவும் படி இருக்கட்டும். உன் மனைவியை நேசி ! மறந்தும் பிள்ளைகளை மறவாதே. கடமையை செய் ! பிறர் உனக்கு என்ன செய்தார்கள் என்று யோசித்து நிற்காதே. நீ உதவி செய்து கொண்டே இரு ! மற்றவர் ஏச்சு, பேச்சு காதில் வாங்காதே !
நீ நினைத்த இலக்கை அடைய உன்னை வருத்து ! வாசல் தேடி வருவேன் நாயகன் நான் !
ஆறும் சேர்ந்து நான் ஒன்றாய் உருவாகினேன். நீ இரண்டும் சேர்ந்து , இணைந்து , ஒன்றாய் உருவாகினாய். நீ ஒரு ஆன்மவையே தூக்கி சுமக்க முடியவில்லை. நான் ஆறு பேராத்மாக்களை தூக்கி சுமக்கின்றேன் !
என்னுள் பலம் உண்டு ! பலனும் உண்டு ! வேடிக்கை பேச்சல்ல ! நான் உன்னை எப்போதும் காப்பேன் !
நான் ஒன்றாய் உருவகப்படுத்தியவன் !
நான் இநன்யா !