Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 6, 2018

மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் ! துவி (இரண்டு)


Inanya Maha Munivar 
06-09-2018
மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் !
துவி (இரண்டு)
யமன மனதோடு இருக்காதே ! ஓர் வழியில் செல் ! இரண்டு ஒன்றாய் நிற்பதே நீ ! இரண்டு இல்லாமல் ஏதுமில்லை இங்கு ! இரண்டு ஒன்றாய் நிற்பதே மூலத்தின் தத்துவம். ஒன்று நிலைப்பதில்லை.
நீ தனித்திருந்தால் பெரியவன் அல்ல ! எதுவும் இங்கே தனித்திருப்பதில்லை. எல்லா படைப்புக்களும் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவன் தான் பிரம்மச்சாரி என்று தனிமையில் அமர்ந்து யோசிக்கின்றான்.
இரண்டு ஒன்று சேர்ந்து ஒன்றாய் உருவாகினாய். உன்னுள் உருவாக்கம் எவ்வளவு என்பதை யோசி. படைப்பின் சூட்சுமம் எளிது. உன்னை உளி இல்லாமல் செதுக்கினான். நீ ஒரு பொம்மை. கரடு முரடான சிற்பம். உனை செதுக்கு நல் குருவை வைத்து ! உன்னை ஒப்புவித்து வாழ் கடவுளிடம் ! அவன் செதுக்குவான் அழகாக ! உன்னை அழகாய் செதுக்கி ஆனந்தம் தந்து பிறரை வணங்க வைப்பான் !
நான் உன்னை செதுக்குவேன், என் நாமம் உன்னை நல்வழிக்கு அழைத்து செல்லும் !
என் கையில் இருக்கும் “மணி புஷ்பகம்” என்ற சூட்சும சங்கு இனி உலகமெல்லாம் ஒலிக்கும். உலகை செதுக்கும் நாளெல்லாம் உன்னை தேடுகிறேன். என்னில் வருவாய் என்று ! என்னுள் கலந்து ஒன்றாய் உருவாகு. உன் பிறப்பு பிறருக்கு உதவும் படி இருக்கட்டும். உன் மனைவியை நேசி ! மறந்தும் பிள்ளைகளை மறவாதே. கடமையை செய் ! பிறர் உனக்கு என்ன செய்தார்கள் என்று யோசித்து நிற்காதே. நீ உதவி செய்து கொண்டே இரு ! மற்றவர் ஏச்சு, பேச்சு காதில் வாங்காதே !
நீ நினைத்த இலக்கை அடைய உன்னை வருத்து ! வாசல் தேடி வருவேன் நாயகன் நான் !
ஆறும் சேர்ந்து நான் ஒன்றாய் உருவாகினேன். நீ இரண்டும் சேர்ந்து , இணைந்து , ஒன்றாய் உருவாகினாய். நீ ஒரு ஆன்மவையே தூக்கி சுமக்க முடியவில்லை. நான் ஆறு பேராத்மாக்களை தூக்கி சுமக்கின்றேன் !
என்னுள் பலம் உண்டு ! பலனும் உண்டு ! வேடிக்கை பேச்சல்ல ! நான் உன்னை எப்போதும் காப்பேன் !
நான் ஒன்றாய் உருவகப்படுத்தியவன் !
நான் இநன்யா !

கடவுள் மெய்யாகவா ? மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !


to INANYA MAHA MUNIVAR
கடவுள் மெய்யாகவா ?
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
ஆன்மாவின் துடிப்பு, ஒலி தான் கடவுள் ! அறிவதில் பெரிய அறிவு தன்னை யார் என்று அறிவது தான் ! பாவங்களைத் தொலைத்து விடு ! பரம்பொருள் புரியும் ! நாத்தீகம் என்பது புரியாதவனுக்கு வருகின்ற அறிவு. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது !
கோடி மனித முகத்தை படைத்து, அதில் முகத்தை மட்டும் மாறுபடச் செய்து ஆட்டுவிப்பவனை உணர யுகம் கடந்து போகும் ! நூறு பறவைகளை கூட்டை கட்டவைத்து அதில் தனக்குள்ள கூடு எது என்று புரிய வைத்தவனை நீ புரிந்து கொள்ள கோடி ஜென்மம் ஆகும் !
அவனால் ஒலியால் மலையை வளர வைக்க முடியும். பூகம்பமாய் பூமியை பிளக்க வைக்க முடியும். ஆவேசக் காற்றால் அகங்காரத்தை அழிக்க வைக்க முடியும் ! புனித நீரை புரளச் செய்து பூமியில் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும் ! ஓர் விதையில் ஓராயிரம் கனிகளை தர அவனால் முடியும் ! மனிதனாக பூமியில் பூடகமாக உலாவ முடியும் ! அந்த பேரறிவாளனை புரிய யுகம் கடந்து போகும் ! அவன் இனியவன் ! அன்பில் உயர்ந்தவன் ! அவனை குழந்தையின் சிரிப்பிலே, மலரிலே புரிந்து கொள்ள முயற்சி செய் ! நான் அவனின் பாத மலரைப் பார்ப்பதற்கு எத்தனையோ யுக ஆண்டாக காத்துக் கிடந்தேன் (ஆன்மா) ! என் ஆன்மா எத்தனை முறை சுத்தப்படுத்தப்பட்டது என்பதை காலக் கணக்கு நிர்ணயிக்க முடியாது.
நீ ஒரு சூரியனையும், சந்திரனையுமே கணக்கெடுக்க முடியாதவன் ! நீ கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்னா? எனக் கணக்கெடுக்க முடியாதவன் ! மழையும், சூலும் எப்போது உருவாகும் என உருவாக்கம் தெரியாதவன் நீ ! அவனை அறிய எந்த கருவியில் அளவிட்டு பார்க்கப் போகிறாய் ? அவன் நிகரற்றவன் ! தன்னிகரில்லா கருணைமிக்கவன் ! பழத்தை அழுகவிடுகின்ற என் பிதா (கடவுள்) விதையை அழுக விடுகின்றானா? அவனின் அன்பை உணர்ந்தாயா ? அந்த சூட்சுமதாரியை உணர யுகத்தின் வாழ்வு போதாது ! கருவை வளர்த்து அதற்கொரு கால நிர்ணயம் செய்து பிறக்க வைத்த அந்த பெம்மானை, என்னை பெற்றவனை, அறிய எத்தனை முறை ஆன்மா சுத்தப்படுத்த வேண்டுமென தெரியுமா? உணர்ந்து பார் !
அவன் ஒரு விதையில் கோடி விதையை உருவாக்கியவன் ! இவை அனைத்தையும் உருவாக்கி உனக்கு உண்ண தந்தவனை உணரக் கூட இயலாதவன் நீ ! நீ எங்கே கடவுளை உணரப் போகிறாய் ? நன்றி சொல்லத் தெரியாதவன் நீ ! அவனை நினைக்காமல் தேவையற்றதைப் பேசி விதண்டவாதம் செய்து உன் காலத்தை வீணாக்காதே ! பயன் ஒன்றுமில்லை.
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
உன் ஆன்மாவை எப்போதாவது சிரிக்க வைத்தாயா ? ஜாடையாக சிரிக்கிறாய். சக மனிதன் கஷ்டப்பட்டால் சிரிக்கிறாய் ! ஜாடைச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எக்காள சிரிப்பு, நமட்டு சிரிப்பு, இவற்றைத் தான் கற்றுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாய் ! நீயும் சிரிக்க மாட்டாய் ! அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கமாட்டாய் !
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே ? முதலில் அவனை உணரப் பார் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
நான் இநன்யா !

Saturday, September 1, 2018

இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !

இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
நான் உன்னை எங்கிருந்தாலும் மனசார ஆசிர்வதிப்பேன் !
நீ என்ன செய்தாலும் நானறிவேன் !
என் நெஞ்சம் நிறைந்து ஆசி தந்தேனடா ! எப்போதும் நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
என் நாடகமும், சோதனையும் யாரறிவார் ?
என்னை இயக்குபவர் என் அன்பிற்கினிய தந்தை !
என் கடமையை செய்ய காலம் கணிந்ததால் நான் இந்த மனித உடலைவிட்டு தள்ளி நின்று என் தந்தை சொன்ன கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானேன் !
உன் உயிர் எப்போதும் எனை வணங்கும் ! என்னை பற்றி ஆராயாதே,யுகம் கடந்து போகும் !
நதிமூலம்,ரிஷிமூலம் பார்த்து உனை தொலைத்துவிடாதே ! ஒரு சிறு துறும்பை கடவுளாய், குருவாய் ஏற்றுக் கொண்டாலும் இறுக பற்றி கொள் ! துறும்பை பற்றி ஆராயாதே.
நீரை பற்றி ஆராய்வதற்குள் நீரில் மூழ்கி பாவம் கரைத்து விடு ! மீண்டும் பிறக்க நினைக்காதே !
என் பணி முடிந்து மீண்டும் வருவேன் !
என் நாமத்தை நம்பிக்கையோடு சொல், நிச்சய சத்தியம் உனக்கு எல்லாம் கிடைக்கும் !
நான் உன் அருகிலே இருக்கிறேன், நான் உனை எப்போதும் காப்பேன், கைவிடமாட்டேன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
நான்  இநன்யா !