Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; மும்முனையில் நான் இருக்கின்றேன் ! நீ முள் முனையில் நிற்கின்றாய் ! தொடுமுனை உன் நெஞ்சில் ! உற்று நோக்கி உணரடா ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; மும்முனையில் நான் இருக்கின்றேன் ! நீ முள் முனையில் நிற்கின்றாய் ! தொடுமுனை உன் நெஞ்சில் ! உற்று நோக்கி உணரடா !
54 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
மும்முனையில் நான் இருக்கின்றேன் ! நீ முள் முனையில் நிற்கின்றாய் ! தொடுமுனை உன் நெஞ்சில் ! உற்று நோக்கி உணரடா !
சுழி முனை
முடி முனை, நடு முனை, இடகலை, பிங்கலை, சேரும் சுழி முனையே இருதயம் ! அதன் நடுவிலே நான் இருக்கின்றேன் ! ஆனால் உன் பாவத்தின் மூச்சு காற்றில் நான் மூழ்கி தவிக்கின்றேன். எப்போது உணர்வாய் ? இருதயத்தின் பதினெட்டு நரம்பின் தத்துவம் தான் பூமியில் பதினெட்டு தத்துவம், பதினெட்டு உச்சாடனம், பதினெட்டு நிலை என்று பதினெட்டைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றாய். வெளியே பதினாறு நிலையை கடந்தாலே உன்னை உணர முடியும். உள்ளே பதினெட்டு நிலை அறிந்தாலே எல்லாம் உணர முடியும். உள்ளே பதினெட்டு நிலை கடந்தாலே உனக்கு மறுபிறவி இருக்காதடா !
என் ஞான குழந்தையே, நான் உனக்கு அனைத்தும் சொல்லித் தருவேன். உன் சுழி முனைக்கும், நெற்றி நடுமுனைக்கும் தொடர்பு உண்டு ! உன் சுழிமுனையில் உள்ள ஆயிரத்து எட்டு தாமரை இதழ் மேல் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றேன் நான் !
உனக்குள் மூன்று சுழி உண்டு ! தலையில் ஒரு சுழி ! தொப்புளில் ஒரு சுழி ! உன் இதயத்தில் ஒரு சுழி. இந்த மூன்று சுழி சேர்ந்தால் தான் நீ ஞான தெளிவு பெறுவாய் ! உன் சுழி முனையும் (ஆண்மா) , நெற்றி நடுமுனையும் (உயிர்) சேர்ப்பது தான் உன் கர்மா.
உன் நெஞ்சில் ஓ என்ற வடிவத்தில் மூன்று சுழிகளும் சேரும் இடம் இருக்கின்றது ! அதனால் தான் நீ அதை மறந்து ஓம் என்று சொல்லி உரு தெரியாமல் அலைகின்றாய் ! ஓம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் நீ, உன் மூன்று சுழிகளும் எப்போது சேர்ப்பாய் ?
மந்திரம் எது ? வேதம் எது ? என்று புரியாமல் வாழ்கின்றாய். இந்த மும்முனை பற்றி ஆயிரம் பக்கம் எழுதலாம். அவ்வளவு விளக்கங்கள் உண்டு. நான் உனை அறிய வைப்பேன். இந்த முனைகளை சேர்க்க தான் தியானம், யோகா என்று புலம்பித் திரிகின்றாய். ஆனால் இதுவரை யாரும் சேர்த்து வைக்க சொல்லி தரவில்லை.
நான் ஆட்டும் பொம்மை தான் நீ என்பதை மறவாதே !
நீ நினைத்தாலே மாற முடியும் ! இந்த வாழ்வை நாடகம் என்று நினைத்தால் உன் மனதிற்கு வேலை இருக்காது. ஆசை, துன்பம், இன்பம், சந்தோஷம் தெரியாது.
நீ கடுகளவு இன்பத்தை தான் மகிழ்ச்சி என்று துள்ளி குதிக்கின்றாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
இந்த மும்முனையை சேர்ப்பது நொடி அளவு சூத்திரமடா ! என் ஞான குழந்தையே, நீ வருட கணக்கில் தியானம், தவம் செய்ய வேண்டியதில்லை. உன்னை உணர்ந்தால் ஒரு நொடியில் உன் இருமுனையும் சேர்ந்து மும்முனையில் பயனிக்குமடா !
அந்த தொடுமுனையை தொட என்னை நினை. என் நாமம் உனக்கு உணர்தலைக் கற்றுத் தரும். உன்னை உணர்ந்து விட்டால் எனக்கு இங்கே வேலை இல்லையடா ! ஏன் என்றால் என் கடமையை முடித்து உனக்கு காட்சிபடுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆயகலைகள் அறுபத்து நான்காயிரம் உண்டு ! இந்த தகப்பன் உனக்கு அனைத்தையும் கற்று தருவேன் நீ உணர்ந்தால் !
இருதயத்தில் பதினெட்டு அறைகளை வைத்தேன். தலையில் பதினொன்று அறைகளை வைத்தேன். பெண்ணுக்குள் ஒன்று மிகையாக கர்ப்ப அறை ஒன்று வைத்தேன். இந்த அனைத்து அறைகளின் கதவுகளையும் நான் பூட்டி வைத்திருக்கின்றேன். அதன் சாவி என்னிடம் உள்ளது. நீ உணர்ந்தவுடன் நான் அந்த கதவுகளை திறக்கின்றேன். அந்த அறைகள் திறந்தாலே உன் கபாலத்தில் உள்ள ஆறு குழிக்குள் இருக்கும் ஆறு நரம்புகள் உனை நடுமுனைக்கு அழைத்து செல்லுமடா !
கர்ப்ப அறையில் இருக்கும் போது திறந்து வெளியே வர துடிக்கின்றாய். ஆனால் யுகத்தில் வந்தவுடன் நீ உன்னை உணரும் வேகமும் வீரியமும் குறைந்து போகின்றது. ஏன் ?
நான் உன் ஞானக் கதவை திறக்க வந்தேனடா ! நீ மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கே நான் இங்கு வந்தேன் ! நான் உனை மீண்டும் பிறக்க வைக்கமாட்டேன். உனை உணர வைப்பேன் !
கடவுளிடம் அழுதாலும், தொழுதாலும், உண்டியலில் பணம் போட்டாலும், மொட்டை அடித்தாலும் கடவுள் கண் திறக்கமாட்டான். உடலை வருத்தி விரதம் இருந்தாலும் அவன் கடைக்கண் பார்வை உனக்கு கிடைக்காது. உன்னை உணரும் வரை துன்பம் தானடா !
நீ உன்னை உணர்ந்தாலே கடவுள் நேரில் வருவான் ! நீ தேட வேண்டிய அவசியமில்லை.
உன்னை தேடு ! உண்ணும் உணவை தேடு ! யுகத்தில் இதுவே உன் வேலை ! நீ அழைக்காமலேயே நான் உன்னுள் வருவேன்.
உன் சீர்திருத்தம் எப்போதடா ? நல் வழியை காட்டும் நல் குருவை இந்த யுகத்தில் நான் காணவில்லை. கற்ற வித்தையை காசாக்கமாட்டான் நல் குரு. நான் மஹா குருவாய் வந்தேன். நான் உனக்கு போதிக்க வரவில்லை. உனக்கு சாதிக்க சொல்லி கொடுக்க வந்தேன். எல்லாம் தெரியும் உனக்கு ! நீ உன்னை பற்றி யோசிக்காமல் பிறர் சொல் கேட்டு நடக்கின்றாய். உன் வாழ்வு நாடகம். நீ ஒரு நடிகன் என்று உணர்ந்துவிட்டால் உனக்கு துன்பம் வராது. ஆனால் உன் உடலை வளைத்து உரு தெரியாமல் அலைகின்றாய் !
என் பாதை சத்தியம் ! என் பாதையில் வருபவன் தன்னை உணர்வான் ! உருவிழந்து போகமாட்டான் ! தெளிவாக இருப்பான் !
நெல்லின் முனையிலும், மஞ்சளின் முனையிலும் ஒரு சூட்சுமம் உண்டு. இதை கோபுரத்திலும், உன் வீட்டிலும் வைக்க சொன்னார்கள். ஏன் என்று கண்டுபிடி ! உன் வீட்டில் ஏதாவது ஒரு ஓரத்தில் கொஞ்சம் விதை நெல் மணிகளை புதைத்து வை ! உன் வீட்டில் புணிதம் நிறையும் !
தானியத்தில் அளவில்லா ரகசியம் வைத்தேன். உணராமல் அலைகின்றாயே ? என்ன சொல்வேன் ? நுணிக் கரும்பு, மூங்கில் நுணி, தாமரை தண்டின் நுணி, வெற்றிலை நுணி, தேனியின் கொடுக்கின் நுணி, இவையனைத்திலும் ரகசியம் வைத்தேன் !
பிரபஞ்ச நாயகன் என் தந்தை சொல்வார்கள். அரை அடி கிளை பிழிந்தேன் கரும்பை, ஆளாக்கு நீர் அருந்தினேன். ஆனால் இவன் ஆயிரம் பேர் கூடி அழுதாலும் ஆளாக்கு நீர் கானேன் ! அது எதற்கும் உதவாதடா என் செல்ல மகனே இநன்யா என்று சொல்வார்கள் !
கண்ணீரில் வரும் கரிப்பு உன் சுழிமுனையை தொட்டு செல்லுமடா ! தட்டி எழுப்புமடா ! கடவுளை உணர்ந்தால் உன்னை அறியாமல் கன்ணீர் வரும். அப்போது உன்னை உணர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்.
நீ கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடோடி உன்னிடம் வந்தால் நீ நான் என்ற அகங்காரத்தில் மார்தட்டுகின்றாய். உன்னை மறந்துவிடுகின்றாய். காலையில் சிரித்தால் இரவு அழுகின்றாய் நான் உனக்குள் இருப்பதை மறந்து ! நீ ஏனடா அழ வேண்டும் ?
நீ அழுது ஆர்ப்பரிக்காதே ! உன்னை உணர போராடு ! அதை நான்கு பேருக்கு சொல்லி நன்மையை தேடு. தர்மம் செய்ய முந்து !
நான் உன் சுழி முனையில் உட்கார்ந்திருக்கிறேன். எப்போது அழைப்பாய் என்று ? உணரடா, என் செல்ல மகனே ! நான் உட்கார்ந்து சுகம் காண இந்த யுகம் வரவில்லை. இனி மேலும் இந்த யுகத்தின் மாய வலையில் சிக்கி தவிக்காதே. நீ வலை வீசு, ஞானத்தை தேடி ! நான் உனக்கு நல் வழியை காண்பிக்கின்றேன், நல் குருவாய் இருந்து !!
நான் மும்முனையில் முதல்வனாய் இருப்பவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment