என் நிலை நானறிவேன் ! உன் நிலை எப்போது அறிவாயடா ? என்னுள் ஆரிடை உண்டு உனை கரை சேர்க்க !
நிலை எட்டு !
ஒரு துளி நீர் எட்டை போல வளைந்து வட்டத்திற்குள் நுழைகிறது. எழுபது துளி ரத்தம் ஒரு துளியாகி உயிராகி காற்றின் தூய்மை கலந்து சிசு உருவாகிறது ! எட்டாய் திருகி வளைந்து ஓடி உரு பெருகிறது !
எட்டின் நிலை ஏட்டை படித்தால் வராது. உன் உணர உண்மை அறியும் போது வியப்பாய் !
என்ன தான் சாஸ்திர படி இணைந்தாலும் நேரம் காலம் பார்த்து கலந்தாலும் சூழ் உருவாக்கத்தை உன்னால் நிர்ணயிக்க முடியாது ! ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க சாஸ்திரம் கற்றாலும் உன் கர்ம வினைப்படி ஆணா, பெண்ணா என நிர்ணயிப்பது உன் பாவ, கர்மா தான் !
கருவில் சிசு இருக்கும் போது உச்சியின் நடுபாகத்தில் இருந்து சென்று புனித காற்று உன்னை இயக்குகிறது. ஆனால் சிசு வெளியே வந்து அழும் போது தான் உன் மூச்சு குழாய் வழியாக நுரையீரல் சென்று நுரையீரல் இயங்குகிறது.
அறிய படைப்படா மானிடா !
ஆளுமையை மறந்தாயடா !
ஆளுமையை மறந்தாயடா !
மணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிரப்தி, பிரஹாமியம், வசித்துவம், ஈசத்துவம் முதலிய இந்த எட்டு நிலைகளை அடைய எளிய வழி, நீ ஒழுக்கமாக இருப்பது தான் ! ஆசையை உள்ளடக்கி ஆளுமையை உணர்ந்தால் தான் அனைத்தும் அறிவாய் !
நீ என்ன தான் யோகா, தியானம் செய்தாலும் எதையும் அடைய முடியாது. ஒரு தலை வலியை உன்னால் குணப்படுத்த முடியவில்லை. பின் எப்படி உன் துன்பத்தை தீர்ப்பாய் ?
காலம் யாவும் குறை சொல்லி கோமாளியாக திரிகின்றாய். ஊமை உயிர் உன்னுள் அழுது ஆர்பரிப்பதை உணர்ந்து பார் மனித குலமே !
வன்னி, நெல்லி, ஆல், அத்தி, அரசு, பனை, தென்னை உனக்கு ஞானம் உணர்த்த படைத்த மரங்கள் ! எட்டின் தத்துவம் மரத்திற்கும் உண்டு !
மணிமா என்பது உடலை அணுவுக்குள் அடைப்பது !
மகிமா உடலை பெரிதாக்குவது !
கிரிமா உடலை திடனாக்குவது.
இலகிமா உடலை லேசாக்குவது !
பிரப்தி நினைத்ததை அடைய வைப்பது !
பிரஹாமியம் கூடுவிட்டு கூடு பாய்வது !
வசித்துவம் வசியப்படுத்துவது !
ஈசத்துவம் ஒன்றை உருவாக்குவது, முடிப்பது !(ஆக்கல், அழித்தல்).
மகிமா உடலை பெரிதாக்குவது !
கிரிமா உடலை திடனாக்குவது.
இலகிமா உடலை லேசாக்குவது !
பிரப்தி நினைத்ததை அடைய வைப்பது !
பிரஹாமியம் கூடுவிட்டு கூடு பாய்வது !
வசித்துவம் வசியப்படுத்துவது !
ஈசத்துவம் ஒன்றை உருவாக்குவது, முடிப்பது !(ஆக்கல், அழித்தல்).
இந்த எட்டு நிலைகளையும் யாரும் அடைந்ததில்லை ! சித்தர்கள் ஆறு நிலைகள் தான் அடைய முடியும். பிரப்தியும், ஈசத்துவமும் யாரும் அடைந்ததில்லை.
இந்த எட்டு நிலையும் என்னுள் ஒடுக்கம் ! நான் ஈசத்துவம் அறிந்தவன் ! என் நாமம் சொல் ! நீ எட்டு நிலைகளையும் அடைவாய் !
உன் கடமையை செய்து காலத்தில் ஒரு நிலையாவது அடைய முற்படு ! உன்னால் முடியும். ஏனென்றால் நான் குருவாய் இருந்து உனக்கு கற்றுத் தருகிறேன். நான் கற்று கவி பாடவில்லை.
என்னுள் மலர்ந்தேன் !
என்னுள் நிறைவானேன் !
என்னுள் உருவாக்கினேன் !
என்னுள் நிறைவானேன் !
என்னுள் உருவாக்கினேன் !
நான் உன் விதியை எழுதிய விதிநாயகனின் தவப்புதல்வன் ! பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
மனிதர்களின் கோபத்தை பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால் கோபம் என்பது இயலாமை உள்ளவனிடம் தான் வரும். யார் ஏச்சையும், பேச்சையும் கண்டு கொள்வதில்லை ! செவி மடுத்து கேட்பதில்லை. மனிதன் தன்னை அறியாமல் பிறரை பற்றி நினைத்து புலம்பி குறை சொல்லி திரிகின்றான்.
எட்டின் நிலை தெரிந்தவன் நான் ! என் நிலை நானறிவேன். உன் நிலை நீ அறிவாயோ ? உணர் !
நிலையானவன் நான் !
நான் இநன்யா !