29-03-2018
நமசம் இல்லா வாழ்க்கை வாழ்ந்து இகத்தை மறந்தாய் !! அகத்தில் நிலை இல்லாது வாழ்கின்றாய் !
வாழ்க்கை !
உன் மூச்சுக்கும், உனக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது. இது தான் வாழ்க்கை ! அதை எதை கொண்டு நிரப்ப போகின்றாய் ? மூச்சுக் காற்றில் இடைவெளி தான் நீ வாழும் நிலையில்லா வாழ்க்கை ! அதில் என்னவாகப் போகிறாய் என்பதில் தான் குழம்பி போகிறாய். அந்த சின்ன இடைவெளியில் மனைவி, குழந்தை, இன்பம், துன்பம் எல்லாம் கடக்க முடியாமல் உன்னை அறிய முடியாமல் தவிக்கின்றாய். அதில் உன்னை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறாய் !
நீ என்னவாகப் போகிறாய் என்பது உன் எண்ணம் ! உன் எண்ணம் வலிமையாக இருந்தால் விதி கூட மாறும் ! அந்த விதியை எழுதியவனே மாற்றுவான். பெண்ணை காதலிக்கும் வலிமையை ஏன் கடவுளிடம் காணபிப்பதில்லை ? வைராக்கியத்தையும், அன்பையும் ஏன் கடவுளிடம் செலுத்தவில்லை ? அதை ஒருகனம் கடவுளிடம் செலுத்திப் பார் ! உலகில் இன்பமானவன் நீ தான் !
உன் வைராக்கியத்தை எப்போது உன் உயிரை விட மேலாக கடவுளிடம் வைக்கின்றாயோ, நீ உன்னில் முத்தெடுக்க முயல்கின்றாய் ! கடவுள் அனைவருக்கும் ஒரு கடமை கொடுத்தான். ஒரு செயல் படைத்தான் ! இந்த மூச்சுக் காற்றின் இடைவெளியில் செய்துவிட்டு வர. ஆனால் மனிதன் மூர்ச்சையானான்.
உன் வாழ்க்கை ஒரு நாழிகை கூட இருக்கலாம் ! ஒரு விநாடி கூட இருக்கலாம் ! இந்த இடைவெளியில் என்ன செய்தாய் என்பது தான் தர்மம் ! வாழ்க்கை ! ஆனால் நீ ஒன்றும் செய்யவில்லை. நல்லதை ஒன்றை கூட நினைத்ததில்லை !
சுயநலம் விடு ! தூய்மை பொருந்திய உள்ளம் எடு ! வானில் நட்சத்திரங்களை பிடித்து விளையாடலாம். நீ யாரென்று உணர்ந்தால் பேரின்பமடா ! இங்கே வாழும் வாழ்க்கை நரகமடா ! இங்கே படும் துன்பம் பெரிதல்ல ! மேலே கிடைக்கும் தண்டனை சொல்லிமாளாது !
வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது !
இந்த இடைவெளி மூச்சுக்காற்றில் உள்ளே கடப்பவன் வெற்றி பெறுகிறான் ! உண்மை தெரிந்தவன் இன்பமாய் இருக்கின்றான். இங்கே வலியும், வேதனையும் இல்லாமல் ஜெயிப்பது கடினம் தான் ! அதை தாங்கி முன்னேறுபவன் தரணியில் வரலாறு படைக்கின்றான் !
சித்தம் தடுமாறுகிறவன் சீர்தூக்கி பார்க்க திராணி இல்லாமல் அலைகின்றான் ! என்னுள் வாழ்வாயடா ! எப்போதும் இன்பமடா !
வாழ்வின் உயிர்ப்பு நான் !
நான் இநன்யா !