83 பதட்டம் வேண்டாம். பொறுமை தேவை (23-08-2015)
ஏன் வெளியுலகத்திற்கு நீங்கள் சொல்ல ஆசைப்படவில்லை என்று கடவுளிடம் அடிக்கடி கேட்பேன். விற்காத பொருளுக்கு தானே விளம்பரம் வேண்டும் என்று சொல்வார். இந்த யுகத்தில் எல்லாமே தன் பொருள், எல்லாமே தன் உறவு என்று சொல்வார். தான் யாரையும் எதற்காகவும் தன்னிடம் வரவழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவார்.
கடவுள் இநன்யா நினைத்தால் ஒரே நொடியில் உலகையே மாற்றி அனைவரையும் தன் பின்னால் வரச் செய்ய முடியும். ஏழைகளை பணக்காரனாக மாற்றிவிட முடியும். துன்பங்களையும், நோய்களையும் எளிதில் தீர்க்க முடியும். ஆனால் அவர் இதை செய்யவில்லை. அவர் நம்மை மாறச் சொல்கிறார். உழைப்பு தான் உயர்வு என்று சொல்கிறார். உணர்ந்தால் துன்பமில்லை என்று சொல்கிறார். நான் உணர்ந்தேன் அவரை கடவுள் என்று !
தங்க சிம்மாசனத்தில் எல்லா சாமியார்களும் அமர்கிறார்கள், உறங்குகிறார்கள். நம் கடவுள் இநன்யா எப்போதும் தரையில் தான் உட்காருவார். தரையில் படுத்து தான் நித்திரை கொல்வார். தலையணை வைக்க மாட்டார். அவருக்கு வியர்க்காது. பல நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பார். பல நாட்கள் குளிக்காமல் இருப்பார். வாழ்வில் ஒரு முறை கூட எந்த கோயிலுக்கும் சென்றதில்லை. எந்த மத வழிபாடுகளும் செய்ததில்லை. உடலுக்கு வேஷமிட்டதில்லை. பள்ளிக்கு சென்றதில்லை. குருமார்கள் என்று யாரும் கிடையாது. இதுவரையில் யாரிடமும் சென்று தன்னை கடவுள் என்று சொல்லியது கிடையாது. எந்த ஆன்மீக அமைப்பையும் தொடங்கியோ, சித்து விளையாட்டை செய்தோ யாரிடமும் பணம் வாங்கியதில்லை.
மனிதர்களை தேடிக் கொண்டிருப்பதாக சொல்வார். தர்மாக்கள் அனைவரும் அவரை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். எல்லா வடிவத்திலும் அவரைப் பார்ப்பார்கள். நல் ஆன்மாக்கள் அனைவரும் உணர்ந்து தன்னை தேடி வருவார்கள் என்று கூறுவார். உழைக்கின்றவர்கள் யாரும் ஏமாற்றமாட்டார்கள். உட்கார்ந்து சுகம் காண நினைப்பவர்களே ஏமாற்றுவார்கள் என்று கூறுவார். சாமியார்கள் இருக்கும் இடத்தை தரிசு நிலமாக ஆக்குவேன் என்றார். அவர் முக்காலத்தையும் அறிந்தவர். நம் விதியை எழுதியவர். அனைத்தும் அறிந்தவர்.
முனிவர் என்றால் நீங்கள் நினைப்பது போல் நீண்ட தாடி வைத்துக் கொண்டு உடலுக்கு வேஷமிட்டு தவம் செய்பவர் அல்ல. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இதுவரையில் நாம் தெரிந்து வைத்திருப்பது அனைத்துமே பொய். அதனால் தான் உணர வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார் கடவுள். உணர்வதென்றால் ஏன் என்று யோசித்து தெளிவது ! நாம் வாழ்கின்ற உலகத்திற்கு பெயர் யுகம். யுகம் ஒன்றே ஒன்று தான். அதாவது நரகம். யுகத்திற்கு மேலே லோகம் உள்ளது. லோகத்திற்கு மேலே மண்டலங்கள். மண்டலத்திற்கு மேலே காண்டங்கள். காண்டத்திற்கு மேலே உள்ளது பிரபஞ்சம். பிரபஞ்சத்திற்கு மேலே தான் கடவுளின் இருப்பிடம் உள்ளது.
பிரபஞ்சத்தில் தான் முனிவர்கள் வசிப்பார்கள். மஹா முனிவர் என்றால் முனிவர்களுக்கெல்லாம் தலைவர். அதாவது கடவுளைக் குறிப்பது. இநன்யா மஹா முனிவர் என்றால் அகில அண்ட சராசங்களுக்கும் அதிபதி. ஆறு சக்திகளும் இவருக்குள் அடக்கம் ! இநன்யா நமோ நம என்று ஏன் சொல்கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். “இநன்யா நமோ நம” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். மலைக்கு சென்று, காட்டிற்கு சென்று தேடியும் கண்ணில் படாமல் வாழ்கின்ற சித்தர்கள் அனைவரும் உருவத்தை மாற்றி நம்மைக் காண நம் வீட்டிற்கு வருவார்கள்.
உணருங்கள். அவர் தன்னை காட்சிப் பொருளாக காட்ட உலகிற்கு வரவில்லை. இங்கு மிகப் பெரிய நோக்கத்திற்காக வந்துள்ளார் ! அனைவரையும் அழைத்துப் பேச அனுமதி நிச்சயம் வாங்கிவிடுவேன். உணர்ந்தால் நிச்சயமாக அனுமதி வழங்குவார். கடவுள் இநன்யாவும் நாங்களும் உழைக்கின்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கும் பல பொருப்புகளும், கடமைகளும் உண்டு. அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் அழைத்துச் பேச அனுமதி வழங்கியுள்ளார். தனித் தனியாக தகவல் வரும். இங்குள்ள அனைவருக்கும் பார்க்கும் வாய்ப்பு சத்யமாக வரும். பதட்டம் வேண்டாம். பொறுமை தேவை. உணருங்கள். நன்றி ! இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment