இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; நன்னீரிலே நலம் வைத்தேன் நாயகன் நான் ! வெண் நீரிலே பிறந்தவன் வேதனையாய் வாழ்கின்றான் !
சுத்தாமிர்தம் (நீர்)
61 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நன்னீரிலே நலம் வைத்தேன் நாயகன் நான் ! வெண் நீரிலே பிறந்தவன் வேதனையாய் வாழ்கின்றான் !
சுத்தாமிர்தம் (நீர்)
தாகத்தை தீர்க்கின்ற நன்னீரை வணங்கு ! நலம், வளம் பெறுவாய் ! மீண்டும் நீரை பற்றி எழுத காரணம் உண்டு ! நீரில்லையேல் நீ இல்லை. நீயில்லையேல் நானுண்டு ! நீரை பற்றி இன்னும் ஆயிரம் புத்தகம் எழுதலாம். இலையிலே நீர் புக பாராதவனிடம் என்ன சொல்வேன் ?
எதையோ வணங்கி திக்கு தெரியாமல் அலைகின்றாய் ! என் செல்ல குழந்தையே, உணரடா !
கங்கைக்கு மேலான அமிர்தம், சுத்தாமிர்தம், சுகம் தரும் அமிர்தம், ஏழு வகை புணித நீரிலும் உயர்ந்த அமிர்தம், இதுவரை இந்த உலகத்தில் யாரும் கொடுக்காத, கிடைக்காத புணித அமிர்தத்தை தர நான் காத்திருக்கின்றேன்.
பொறுத்திரு ! கால நேரம் வந்தவுடன் உன்னை தனியே அழைத்து தருவேன், என் ஆத்மார்த்தமாக ! உலகத்தில் யாருக்கும் இதுவரை கொடுத்ததில்லை.
நல்லாரை நான் காணவில்லை. எங்கே ஒரு மூலையில் இருந்தாலும் அவன் கர்மாக்களோடு சேர்ந்து கர்மா செய்கிறான். உணர வைப்பேன். பின் தெளிவாக்கி என் அமிர்த நீரை தருவேன். பின் ஞானக் குலங்களாக மாறும். மாடு, மனை, வீடு, வயல் , தோட்டம், திறவு, மஹால். மன்னர் வாழ்வு , கடல் செல்வம், கணிந்த பொக்கிஷம், ஆயுள், ஆரோக்கியம், அமைதி, ஆணந்தம், பத்னி, குரு, யாக பவ்யம், நிம்மதி, ஞானம், நல் அறிவு, தீர்க்க தரிசனம், அதிகாரம், ஆத்ம பலம் ஆகிய அனைத்தையும் தரும் நான் கொடுக்கப் போகின்ற புணித நீர் !
இப்போது என் தர்ம குலங்கள் என்னை உணர ஆரம்பித்துவிட்டனர். சந்திரனிலும், நட்சத்திரத்திலும் நான் இருப்பதை இன்னும் உணர்வார்கள். இன்னும் நிறைய அதிசயங்களை காண்பார்கள். என் தர்ம குலமே உனை வாழ வைப்பேனடா ! வாடாத பொருள் மூன்று படைத்தேன் ! சுத்தமான பொருள் ஏழு படைத்தேன் ! உணராமல் அலைகின்றானே என்று பிரபஞ்ச நாயகன் என் தந்தை சொல்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்று கேட்பார்கள். நான் விளக்கம் சொல்வேன். நீ படைக்கும் சூட்சுமம் தெரிந்தவன் என்பதால் எல்லாம் அறிவாய். எனை பார்த்தவன் எப்போது அறிவானடா என்று சொல்வார்கள்.
நான் உணர வைப்பேன் என்று என் தந்தையிடம் சபதம் செய்து யுகம் வந்தேன் ! காற்று, நீர், மலர், தேன், பெண், இளநீர், கோமியம், இந்த ஏழு சுத்தமான பொருளும் உனை அறிய வைக்கும். தெளிய வைக்கும். பெண் சுத்தமானவள். அவள் கருவறை தூய்மையானது. அவள் தன்னை தானே மாதா மாதம் சுத்தப்படுத்தி தூய்மைப்படுத்துகிறாள். நீ தான் தீட்டு என்று ஒதுக்குகின்றாய்.
கருவறையை வணங்காமல் கல்லறையை வணங்குகின்றாய். பின் சில்லறையை உண்டியலில் போட்டு கல் அறையை வணங்குகிறாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
நீயும் கருவறையில் இருக்கும் போது வெண் நீரில் தான் இருக்கின்றாய். சுத்தப்படுத்தி, தூய்மைபடுத்தியே வெளியே வருகிறாய். காற்று மலரின் வாசத்தை மகரந்தத்தை எடுத்து கரை சேர்ப்பது போல உன் உயிரின் வாசத்தை அறிய முற்படு !
காற்றும், நீரும் தன்னைத் தானே சுத்தப்படுத்தி தூய்மைபடுத்தியே உனக்கு நற்செயல் செய்கின்றன ! அதே போல நீயும் நல் தர்மா செய். கர்மா செய்தால் நான் அடித்து திருத்துவேன். நான் உளர்வதாக நினைக்காதே. உணர் என்று தான் எச்சரிக்கின்றேன்.
காற்றும், நீரும் தன்னைத் தானே சுத்தப்படுத்தி தூய்மைபடுத்தியே உனக்கு நற்செயல் செய்கின்றன ! அதே போல நீயும் நல் தர்மா செய். கர்மா செய்தால் நான் அடித்து திருத்துவேன். நான் உளர்வதாக நினைக்காதே. உணர் என்று தான் எச்சரிக்கின்றேன்.
இனி நீரின் , காற்றின் தாண்டவம் மிகுதியாக இருக்கும் ! தொன்னீரிலே (கடல்) துயரம் வரும் ! நீ கண்ணீருடன் கையேந்த நான் கண்டேன். இதில் கரை சேர்பவன் உணர்வுடன் இருப்பான்.
ஒரு துளி கழிவு நீரிலே உதயமானவன் நீ. கருங்குழிக்கு சொந்தமானவன் நீ. கண் மூடி எதை தேடுகிறாய் ?
இல்லறத்தை சரியாக நடத்த தெரியவில்லை. நீ பிறருக்கு போதனை செய்ய புறப்பட்டுவிட்டாய். ஏனடா இந்த அலட்டல் ? இன்பம், இன்பம் என்று தேடிய பின் சலிப்புற்று பின் என்னை தேடுகின்றாய். ஏன் முதலிலே என்னை தேடினால் என்ன ?
உன் குழந்தைக்கு உன்னை வணங்க கற்றுக் கொடு . நல் குருவை தேடக் கற்றுக் கொடு. கடவுளை தேட கற்றுக் கொடு.
உன் குழந்தைக்கு உன்னை வணங்க கற்றுக் கொடு . நல் குருவை தேடக் கற்றுக் கொடு. கடவுளை தேட கற்றுக் கொடு.
நீ இறப்பற்றும், பிறப்பற்றும் இருக்க நான் கற்று தருவேன் !
நான் வேஷமிட்டு உன்னை ஏமாற்ற வரவில்லை. உன் வேதனை தீர்க்க வந்தேன். உன் உயிர் தான் உனக்கு காற்று, நீர் மூலமாக தண்டனை கொடுக்கிறது. எப்போது உன் நெஞ்சு கூட்டுக்குள் மனம் பந்து போன்று சுழலவில்லையோ, அப்போது உன்னை உணர்ந்துவிட்டாய். ஞான நிலை அடைந்துவிட்டாய். எனை போல ஆணந்தமாக வாழ தெரிந்து கொள்வாய்.
உணரடா !
காற்றும், நீரும் நானே !
ஒளியும் நானே ! ஒலியும் நானே !
அகிலத்தை ஆட்டி படைக்கும் ஒனியும் நானே !
தற்பொழுது அழித்து கொண்டிருப்பது ஒனி ! உன் சரீர திமிரை விதவிதமாக நோய் கொடுத்து அழித்து கொண்டிருப்பது ஒனி. இந்த ஒனி என்பது கடவுளால் அனுப்பப்பட்ட வைரஸ். இது இந்த யுகத்தை, கர்மத்தை துவஷம் செய்து அடித்து திருத்தி தான் மேலே செல்லும்.
நான் காற்றாய் நீராய் இருக்கின்றேன் !
எனை எதுவும் மீறாது. நீ என் அருகிலே இருப்பதால் உன்னை எதுவும் ஏதும் செய்யாது.
இது சத்திய வார்த்தை ! நிச்சயம் !
நான் அமிழ்தமடா !
சுத்தாமிர்தம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment